Monday, November 8, 2021

சிவன் சொத்து குலநாசம் என்று ஊளையிடும் கோமாளிகள் இதற்கு பதில் சொல்வார்களா?

Puthurmedu Swamy அவர்களின் முகநூல் பதிவு...(8.11.2021)

சிவன் சொத்து குலநாசம் என்று ஊளையிடும் கோமாளிகள்  இதற்கு என்ன பதில் சொல்வார்கள்.... 

பாவம் கபாலீஸ்வரர் மூலப்பத்திரம் தேடுகிறார். 

மயிலை (சென்னை) கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ,குத்தகையோ கொடுக்காமல்  அனுபவித்துக்  கொண்டிருக்கும்

 "இந்து விரோதிகள்" பட்டியலை அக்கோவிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். இந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள் நாடார்கள்  தவிர பெரும்பான்மையோர் அய்யர்,

அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கபாலி கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பார்ப்பனர்களின் பட்டியல் பெரியது. 

வாடகை கொடுக்காத  இந்து விரோத பிராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன்.  கதர் அணிந்த காக்கி டவுசர்  பேர்வழியும், காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் மீதான தடையை அகற்றுவதில் முக்கிய பங்காற்றியவருமான கே.எம். முன்ஷியால்  தொடங்கப்பட்ட நிறுவனம் தான் பாரதிய வித்யாபவன். இதன் முக்கிய தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியை பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும்  சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்எஸ் ஆர்எஸ்எஸ் பினாமி நிறுவனம் கபாலீஸ்வரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 லட்சம்.  

அடுத்து மயிலாப்பூர் கிளப். ஜனவரி 1, 1903 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரும் பணக்காரர்களின் தனி உடமை கிளப்பான இது, 3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளராக கொண்டது. பின்னர் இதன் தலைவரானர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டு மேட்டுக்குடி குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித்திடல், உறுப்பினர்களுக்கு சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்திய, தென்னிந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணிநேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என, பல கிரவுண்ட் கோவில் நிலத்தை குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும்  குத்தகை பாக்கி 3.5 7 கோடி ரூபாய்.

 "தேசிய தலைவர்" என "பெத்த பேரு" வாங்கிய தெலுங்கு  பார்ப்பனரான நாகேஸ்வரராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிர்தாஞ்சன் நிறுவனம் கபாலீஸ்வரர் வைத்திருக்கும் குத்தகை பாக்கி 6 கோடியே 45 லட்சம். 

 கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் போனதாக பெருமையாக கொள்ளப்படும் பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் மேல்நிலைப்பள்ளி, கோவிலுக்கு சொந்தமாக 76 கிரவுண்ட்  நிலத்தை 1928-ல் குத்தகை எடுத்து, பின்னர் குத்தகை ஒப்பந்தம்  1979-இல் புதுப்பிக்க பட்டிருக்கிறது. ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ 5 கோடிக்கு மேலாகும்.பல பிரபல உயர் அதிகாரிகளை உருவாக்கியதாக பீற்றிக்கொள்ளும் இந்த பள்ளி,  76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாகரூ .1250 ஐ  மட்டும் ஒரே ஒரு முறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு விட்டுக் கொண்டிருக்கிறது.

காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீஸ்வரருக்கு சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். 

இன்று அந்த நிலத்தின் மதிப்பு 100 கோடிக்கு மேல். 1901-இல் 99 வருட குத்தகை எடுத்து ஐயங்கார் , இதனை உள் குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உட்பட கட்டிடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படி போகிற பட்டியல்

முதலை வாயில் சிக்கிய இந்த சொத்துக்களை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். 

பராமரிப்பு மிக்க மிக பெரிய மனிதர்களின் கிளப்பு என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், "இது கபாலீஸ்வரர் கோயில் சொத்து" என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு கபாலீஸ்வரர் சொத்தை திருப்பி கொடுத்து விடுவார்களா என்ன? 


 அற்ப வாடகை பாக்கிய கூட கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள்  கோர்ட்டுக்கு இருப்பதன்  நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவது தான். 

     

இப்போது புரிகிறதா?

 "இந்து கோயில்களை  இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்" என்று  சங்பரிவார் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது என்று எதற்காக*!!!

Thursday, November 4, 2021

ஆந்திராவில் இராவண விழா - கொளத்தூர் மணி உரை

 ஆந்திராவில் ‘இராவண விழா’


கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் 


ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அகில இந்திய தலித் உரிமைகள் அமைப்பு ஆண்டுதோறும் இராவணன் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘இராவண விழா’ அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்திலுள்ள ‘அம்பேத்கர் பவனில்’ எழுச்சி யுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, தமிழ் நாட்டில் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பு இயக்கங்களின் வரலாறுகளையும் ‘இராமன்’ எரிப்புப் போராட்டம் மற்றும் ‘இராமலீலா’வுக்கு எதிராக நடத்திய ‘இராவண லீலா’ நிகழ்வுகளையும் விவரித்து விரிவாக ஆங்கிலத்தில் பேசினார். கழகத் தலைவர் உரையை தெலுங்கு மொழியில் பேராசிரியர் பிரக்ஞா மொழி பெயர்த்துக் கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம்.


“இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவணனின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை புரிந்து ஏற்றுக்கொள்ளும் நாம் அதற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை என்ன? இரண்டாவதாக, இந்து மதத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கடவுள்களில் இராமனும் ஒரு கடவுள். அவ்வளவுதான். அப்படியிருக்க இராமனை மட்டும் நாம் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கவும் விமர்ச்சிக்கவும் தேவை என்ன?


இறுதியாக, இராமாயணம் ஒரு கதை என்ற அளவில், அக்கதையின் ஒரு பாத்திரமாக உள்ள இராவணனை நாம் கொண்டாட வேண்டிய தேவை என்ன? இது குறித்து பெரியாரின் சிந்தனைகளை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் தமிழகத்தில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இராவணனைத் தங்கள் இனத்தைச் சேர்ந்தவனாக கொண்டாடும் மரபு உள்ளது. இவற்றிற்கு காரணமாக இருந்தது பெரியாரும், பெரியார் இயக்கமுமே. திராவிட மக்களின் மாண்பையும் பகுத்தறிவையும் முடமாக்கி அவர்களை மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்க ஆரியர்கள் பயன்படுத்திய கருவிகளில் முதன்மையான பிரச்சாரக் கதைகளாக இராமாயணமும் மகாபாரதமும் இருப்பதாக பெரியார் கருதினார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை அவர் குறிப்பாக விளக்குகிறார். இராமாயணம் மனு தர்மத்தை வலியுறுத்துகிறது. நம் மக்கள் அதனை பின்பற்றத்தகுந்த அளவில் அதில் எவ்வித தெய்வீகத் தன்மையோ, நீதியோ, கற்க வேண்டிய பாடமோ இல்லை. உண்மையில் இராமாயணம் என்பது ஆரிய பார்ப்பனர்கள் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க மட்டுமே உருவாக்கப்பட்டக் கதையாகும். அக்கதை நெடுகிலும் திராவிடர்களுக்கு எதிரான ஆத்திரமும் பழி உணர்ச்சியும் அழுத்தமாக உள்ளது. பல முக்கிய வரலாற்று உண்மைகளை இழிவுப்படுத்தி, ஆரிய – திராவிடப் போரை தங்களது சொந்த கற்பனைகளுடன் அது விளக்குகிறது. திராவிடர்கள் இராட்சதர்கள், அரக்கர்கள், அசுரர்கள், குரங்குகள் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். திராவிட மக்கள், தாங்கள் எவ்வாறு இழிவுப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் உணருமாறு செய்ய வேண்டியது மிக முக்கியமானது என்று பெரியார் கருதினார். மேலும் இராமன் ஒரு சூழ்ச்சி மிகுந்த நேர்மையற்ற ஒருவனாக, நம் சொந்த மக்களை அழிக்க நம்மவர்களான குகன், சுக்ரீவன், அனுமான், விபீடணன் போன்றவர்களை பயன்படுத்தியவனாக, அதாவது நம்  கையைக் கொண்டு நம் கண்ணைக் குத்துவதில் தேர்ந்தவனாகவே பெரியார் பார்க்கிறார். இந்தக் காரணங்களுக்காகவே இவற்றிற்கு எதிரான ஒரு கலகமாக பெரியார் இராவணனை முன்னிறுத்தத் தொடங்கினார்.


பெரியார் இராமனின் சூழ்ச்சி பாங்கையும் இராவணனின் உண்மையான வீரத்தையும் விளக்குகிறார். திராவிடர்களின் ஆயுதம் வேல். ஆரியர்களின் ஆயுதம் வில்லும் அம்பும். அதனால்தான் ஆரியர்கள் வேல், வேலாயுதம் எனும் பெயர்களை வைப்பதில்லை. தண்டபாணி, கோதண்டராமன் போன்ற பெயர்களை தான் வைப்பார்கள். வில் அம்பு என்பது எதிரியை மறைந்து இருந்து கொல்லும் வல்லமைக் கொண்டது. அந்த வகையில்தான் இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான். இராமனுக்கும் வாலிக்கும் எந்த பகையும் இல்லை. ஆனால் நமது ஆயுதமான வேல் நேருக்கு நேர் நின்று எதிரிக்கு அருகில் சென்று அவனைக் கொல்லக் கூடியது. இதுதான் திராவிட போர் முறைக்கும் ஆரிய போர் முறைக்கும் உள்ள வேறுபாடு. அதே போல, தமிழர் போர் மரபில் ஒரு வழக்கம் உண்டு. எடுத்த உடனேயே நேரடியாக போரை தொடுத்துவிட மாட்டார்கள். முதலில் சென்று எதிரி நாட்டில் உள்ள ஆடு மாடுகளை கவர்ந்து வருவார்கள். அது ஒரு எச்சரிக்கை. இதற்கு ஆநிரை கவர்தல் என்று பெயர். இந்த வகையில்தான் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். தனது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாடகையைக் கொன்று, தனது காதலை தெரிவித்த சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து அவமானப் படுத்திய இராமனுக்குப் பாடம் புகட்ட இராவணன் விரும்பினான். இராமன் ஒரு மன்னனின் மகனாக இருந்த போதும் அச்சமயத்தில் அவன் ஏதுவுமற்றவனாகவே இருந்தான். அதனால் அவனது மனைவியான சீதையை இராவணன் தூக்கிச் சென்றான்.


சென்றாலும், அவளை அசோக வனத்தில் மிகுந்த பாதுகாப்பாக, பெண் காவலர்கள் துணையுடன் வைத்திருந்தான். அதிலும், தனது அரச குடும்பத்திலிருந்து ஒருத்தியை, தனது சொந்த தம்பி மகளான திரிசடையை அவளுக்கு ஏவல் புரிய அனுப்பி வைத்தான். ஆக ஆநிரை கவர்தல் என்ற முறையிலேயே சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்


அது போல போர்க்களத்தில் இராவணன் மரணத் தருவாயில் இருக்கும் போது இராமன், இராவணன் அருகில் சென்று ஆட்சித் திறன் நுணுக்கங்களை கேட்டறியுமாறு இலட்சுமணனிடம் கூறினான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. இதைதான் பெரியார் சொல்கிறார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் திராவிடர்களின் மகிமையை அவர்களால் முழுமையாக மறைக்க முடியவில்லை என்கிறார்.


காங்கிரசில் இருந்த போதே பெரியார் தனது இராமாயண எதிர்ப்பைத் தொடங்கிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது 1925-ஆம் ஆண்டில்தான். ஆனால் அவர் காங்கிரசில் இருந்த போதே, 1922-ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் நுழைவை வலியுறுத்திய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனை கடுமையாக எதிர்த்தும் மறுத்தும் வைத்தியநாத அய்யர் என்ற ஒருவர் பேசிய போது, இராமாயணம், மனு சாஸ்திரம் போன்ற புனித நூல்கள் கூட இவற்றைத் தவறு என்றுக் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். உடனே பெரியார், “நான் மனித உரிமைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். அப்படியான மனித உரிமைகளை இந்த நூல்கள் மறுக்குமாயின், அந்த இராமாயணத்தையும் மனு சாஸ்திரத்தையும் எரித்து விட வேண்டியதுதான்” என்று மிக எளிமையாக, ஆனால் வலுவாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.


1926-ஆம் ஆண்டு தனது வார இதழான ’குடி அரசில்’ இராமாயண ஆராய்ச்சி என்ற தலைப்பில் பேராசிரியர் இ.மு.சுப்ரமணியப் பிள்ளை என்பவர் எழுதிய கட்டுரைத் தொடரை வெளியிடுகிறார்.


தொடர்ந்து இராமாயணத்தை விமர்சித்து பல வாதங்களை பெரியார் முன் வைக்கிறார். ஆரியர்களின் நாயகர்களான இராமனும் கிருஷ்ணனும் நமது நாயகர்களாக, ஆரியர்களால் உள்வாங்கப்பட்ட மன்னர்களாக இருக்கலாம் என்கிறார் பெரியார். வர்ணாசிரமம் என்பது மனிதர்களை வர்ணம் எனப்படும் நிறத்தின் அடிப்படையில் படிநிலைப்படுத்துவது. அப்படி பார்த்தால் இராமனும் கிருஷ்ணனும் ஆரியர்களின் நிறத்தில் இல்லை. அவர்கள் கருப்பர்கள். ஆசிரமம் என்பது வாழ்வின் நான்கு நிலைகளான பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம். ஆனால் இராமனும் கிருஷ்ணனும் கிரகஸ்த நிலையிலேயே மரணம் அடைந்து விடுகின்றனர். அவர்கள் வனப்பிரஸ்தத்திற்கும் செல்லவில்லை.


சன்னியாசியாகவும் ஆகவில்லை. எனவே ஏன் அவர்கள் ஆரியர்களால் வெல்லப்பட முடியாத நமது மன்னர்களாக இருக்கக் கூடாது என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.


இட ஒதுக்கீட்டால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆன நமது அதிகாரிகளைப் பார்ப்பனப் பெண்கள் மணந்துகொள்வதின் வழியே அவர்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடியவர்களாய் மாற்றப்படுவதில்லையா?


ஜவகர்லால் நேரு உட்பட பலரும் மகாபாரதம் என்பது ஆரியர்களுக்குள் நடந்த போர் என்றும் இராமாயணம் என்பது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பெரியார் இராமாயணத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததற்கு காரணம் உள்ளது. தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் நாயகராக இன்றளவிலும் போற்றப்படும் இராஜகோபாலாச்சாரியார், “பார்ப்பனர்களுக்கு சிக்கல் வந்தால் இராமாயணத்தை புரட்டிப் பாருங்கள், வழி கிடைக்கும்” என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு


பார்ப்பனர்களுக்கான நூலாக அது இருப்பதால்தான் நான் அதனை ஆராய முற்படுகிறேன் என்கிறார் பெரியார். தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள பார்ப்பனர்கள் இராமாயணத்தைப் பயன்படுத்தினால் அவர்களின் மேலாதிக்கத்தை தகர்க்க நான் இராமாயணத்தை விமர்சிக்கிறேன் என்றார் பெரியார்.


அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு இராவணன், இரணியன், மேகநாதன் என்று ஆரியர்களால் அரக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டத் தொடங்குகிறார். தொடர்ந்து ஆரிய எதிர்ப்பின் அடையாளமாக புத்தரின் பெயர்களான கவுதமன், ராகுலன், சித்தார்த்தன் போன்ற பெயர்களையும் சூட்டுகிறார். இன்று வரை அந்த மரபு தமிழ்நாட்டில் தொடர்கிறது.


நான் முன்பே குறிப்பிட்டதைப் போல இராமாயணம் குறித்து பெரியார் தொடர்ந்து எழுதுகிறார். இராமாயண குறிப்புகள், வால்மீகி இராமாயண சம்பாஷணைகள் என்று ஆய்வு நூல்கள் வெளிவருகின்றன. இந்தப் பிரச்சாரங்களினால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பேரா. பூர்ணலிங்கம் பிள்ளை என்பவர் 1928-ஆம் ஆண்டு ‘சுயஎயயே – வாந பசநயவ’ என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிடுகிறார். பின்னர் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.


இதற்கிடையே பல முறை இராமாயணம் எரிக்கப்பட வேண்டிய ஒரு நூல் என்பதை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.


இந்த குரல் வலுக்க வலுக்க, இதற்கு எதிர்ப்பும் எழுகிறது. 1943-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் இரா. பி. சேதுப் பிள்ளை போன்ற புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களுக்கும் இடையே “எரிக்கப்பட வேண்டியதா இராமாயணம்” என்ற தலைப்பில் பல விவாதங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் வாதிட்டவர் பின்னர் தமிழக முதல்வரான சி. என். அண்ணதுரை ( அண்ணா ) யாவார்.


1944-ஆம் ஆண்டு “இராமாயண பாத்திரங்கள்” என்ற தலைப்பில் இராமனின் உண்மை முகத்தைத் தோலுரித்தும், இராவணனின் மேன்மையை விளக்கியும் நூல் ஒன்றினை பெரியார் எழுதி வெளியிடுகிறார். இதில் சிறப்பு என்னவெனில், இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டவை அனைத்தும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை மட்டுமே. ஆரியர்கள் போற்றும் நூலிலிருந்தே அவர்களுக்கு எதிரான வாதங்களை முன் வைத்தார்.


1944-ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிறப்படுத்தப்பட் டோர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் இராமாயணத்தை விமர்சித்து நீண்ட உரை ஆற்றுகிறார். அவரது உரை முடிந்த உடன் கூடியிருந்த மக்கள், “இராவணாக்கி ஜே“ என்று முழக்கமிடுகின்றனர்.


இந்தத் தொடர் பிரச்சாரங்களினால், தமிழ் நாட்டில் சாதாரண மக்களிடம் கூட இராவணன் என்ற பெயருக்கான பிம்பம் முற்றிலுமாக மாறுகிறது. சுய மரியாதை இயக்ககத்தின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இராவணனின் மேன்மையைப் போற்றி பா ஒன்றை படைக்கிறார். அதனால் ஈர்க்கப்பட்ட புலவர் குழந்தை 1946- ஆம் ஆண்டு இராவணனை காவியத் தலைவனைக் கொண்டு “இராவண காவியம்” என்ற ஓர் காப்பியத்தைப் படைக்கிறார். 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழில் வெளியான காப்பிய வகை நூல் இது மட்டுமே.


இந்த நூல் 1948-ஆம் ஆண்டு தடை செய்யப்படுகிறது. அதே ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் 19-ஆவது மாநில மாநாட்டில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்குவதான அறிவிப்பு ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது.


1954-ஆம் ஆண்டு இராமனை கேலி செய்து “இராமாயணம்” என்ற தலைப்பிலான நாடகம் ஒன்றை எம். ஆர். இராதா மேடையேற்றுகிறார். இந்த நாடகத்தில் வால்மீகி இராமாயணத்தின் வரிகளை நேரடியாக மேடையிலேயே வாசித்து, அந்த வரிகளுக்கு ஏற்ப இராமன் ஒரு கையில் சோமபானமும் மறு கையில் மாமிசத்தையும் உண்டவாறு மேடையில் நுழைவார். பின்னர், பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு விருந்துண்ண சென்ற இராமனுக்கு பரத்வாஜர் கொழுத்த இளம் பசுங்கன்றின் மாமிசத்தை சமைக்கச் செய்வார். இதனை விளக்கும் வரிகளும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து வாசிக்கப்படும். இராமன் மாட்டுக்கறி உண்ணும் காட்சி மேடையில் அரங்கேறும். அவர் அந்த நாடகத்திற்கு இட்டத் தலைப்பு இராமாயணமாக இருந்த போதும், அதைத் தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் அதனை “கீமாயணம்” என்று விமர்சித்தனர்.


இந்நாடகத்திற்கு மக்கள் பெருங்கூட்டமாக எழுச்சியுடன் வந்ததைத் தொடர்ந்து இந்நாடகத்திற்கெனவே “தமிழ்நாடு நாடகக் கட்டுப்பாடு சட்டம் – 1954“ என்ற ஒரு புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்நாடகத்திற்காகவே எம். ஆர். இராதா அவர்கள் 54 முறை கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி அவர் கைது செய்யப்படும் பல நேரங்களில், ஒரு கையில் சோமபானம் கொண்ட மொந்தையையும், மறு கையில் மாமிசத்தையும் ஏந்தியவாறு, இராமன் வேடத்திலேயே எம். ஆர். இராதா செல்வார். “இராமன் செல்ல வேண்டிய இடத்திற்குதான் செல்கிறான்” என்று கூறியவாறே அவர் காவலர்களுடன் செல்வார். அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டு வெகுண்ட பெரியார், தனது அனைத்து நிகழ்ச்சி களையும் இரத்து செய்து விட்டு சென்னையில் ஒரு மாதம் முழுவதும் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொண்டார். இந்த நிலையில் 1954-ஆம் ஆண்டு இராஜ கோபாலச்சாரி “சக்கரவர்த்தி திருமகன்” என்றதலைப்பில் தொடர் ஒன்றை எழுதத் தொடங்குகிறார். அவர் பதவியை இழக்கும் போதெல்லாம் இவ்வாறு ஏதாவது எழுதுவது வழக்கம். 1939-ஆம் ஆண்டு இதே போன்று முதலமைச்சர் பதவியை இழந்தபோது ’வியாசர் விருந்து’ என்று மகாபாரதத்தைக் குறித்து எழுதினார்.


 


பின்னர் 1954-இல் சக்கரவர்த்தித் திருமகன் என்று இராமாயணத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறார். இதற்கு எதிர்வினையாக (பின்னர் தமிழத்தின் முதல்வரான) கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் “சக்கரவர்த்தியின் திருமகன்” என்ற தலைப்பில் கிண்டலாக எழுதத் தொடங்குகிறார். இராஜகோபாலாச்சாரியின் தந்தையின் பெயர் சக்கரவர்த்தி ஆகும். ஆக, இராமனையும் இராஜ கோபாலாச்சாரியையும் ஒரு சேர குறிக்கும் வகையில் அந்தத் தலைப்பை அவர் வைத்தார். பின்னர் கருணாநிதி “பரதாயணம்” என்றத் தலைப்பில் மற்றொரு தொடரையும் எழுதினார். நாளுக்கு நாள் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் வலுபெற்று வந்த நிலையில் 1956-ஆம் ஆண்டு புத்தரின் 2500-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இராமர் பட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். பெரியார் ஒரு நாத்திகராக அறியப்படுகிறார். அது உண்மைதான். அவர் கடவுள் மறுப்பாளர்தான்.


ஆனால் பெரியார் வெறுமனே நாத்திகர் மட்டுமல்ல. அவரது முதன்மைக் கொள்கை ஜாதி ஒழிப்பே. “நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றேன். அவர்கள் அது மதத்துடன் இணைந்தது என்றார்கள். அப்படி ஆண்ட மதத்தை ஒழிக்க வேண்டும் என்றேன். அது வேதங் களினால் உருவாக்கப்பட்டது என்றார்கள். நான் வேதங்களை ஒழிக்க வேண்டும் என்றேன். அது கடவுளால் அளிக்கப்பட்டது என்றார்கள். எனவே நான் கடவுளை கேள்விக்கு உள்ளாக்க வேண்டி வந்தது. கடவுளை அழித்தால்தான் ஜாதி ஒழியு மெனில் அந்த கடவுளை நான் அழிப்பேன்” என்கிறார் பெரியார்.


 


“இந்நாட்டில் மதம் என்பது மக்களை முட்டாளாக்கி, அவர்களை அடிமைப்படுத்தவே உதவுகிறது. எனவே நான் இந்த இந்து மதத்தை ஒழிப் பதையே என் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்” என்கிறார் பெரியார். இந்த அடிப்படையிலேயே பெரியார் இராமர் எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார். வெறுமனே நாத்திகப் போராட்டமாக அல்ல. இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான், இதே போன்றதொரு புத்தர் பிறந்த நாளில், விநாயகர் சிலை உடைப்புப் போராட்டத்தை அறிவித்து அதை செய்தும் காட்டியிருந்தார் பெரியார். எனவே இராமர் பட எரிப்புப் போராட்ட அறிவிப்பு பெரும் கொந்தளிப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது. ஏறத்தாழ 6000 பேர் இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


1959-ஆம் ஆண்டு குடி அரசுக் கட்சி (Republican Party) வட இந்தியாவில் பல இடங்களில் பெரியாரின் கூட்டங்களை நடத்தியது. இவற்றின் இறுதிக்கூட்டம் கான்பூரில் நடைபெற்றது. ஏற்கனவே 1957-ஆம் ஆண்டு பெரியார் எழுதிய “இராமாயண குறிப்புகள்” நூல் “சுயஅயலயயே – ய கூசரந சுநயனேைப” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டிருந்தது. அந்த ஆங்கில நூலினை லாலாபாய் சிங் யாதவ் என்பவர் “சச்சி இராமாயண்” என்ற தலைப்பில் இந்தியில் மொழிப் பெயர்த்து அம்மாநாட்டில் வெளியிடுகிறார். அந்த மாநாட்டிலேயே 3000 படிகள் விற்றுத் தீர்ந்தது. 1970-ஆம் ஆண்டு இந்நூல் உத்தர பிரதேசத்திலும் தில்லியிலும் தடை செய்தனர்.


பெரியார் இறந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1976-ஆம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று இந்நூல் மீதான தடை உச்ச நீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டது.


பெரியார் தொடர்ந்து இராமாயணத்தை விமர்சிப்பதைக் கண்டித்து பெரியார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சியினர் கண்டனம் எழுப்புகின்றனர். இதனைத் தொடர்ந்து இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்கிறது. இதனை அறிந்த பெரியார், “நீங்கள் எங்கள் பிரச்சாரத்தைத் தடை செய்வீர் களானால், உண்மையில் அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ள இராமாயணத்தைதான் நீங்கள் தடை செய்ய வேண்டும். அரசியல் சட்டம் அனைவருக்கு சம உரிமையும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கூறுகிறது.


ஆனால் இராமாயணமோ சமத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. எனவே இராமாயணத்தை தடை செய்யாமல், இராமாயணத்தை நான் விமர்சிப்பதற்காக நடவடிக்கை எடுப்பீர்களானால்… இதோ நான் அதை எரிக்கவே போகிறேன்” என்று அறிவிக்கிறார். 1966ஆம் ஆண்டு மைலாப்பூரில் அய்யாயிரம் பேருக்கு மேலாக கலந்துகொண்ட நிகழ்வில் இராமாயண எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.


1971ஆம் ஆண்டு பெரியார், தமிழகத்தின் முக்கிய நகரமான சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அந்த ஊர்வலத்தில், வால்மீகி இராமாயணத்தில் கூறியபடி, ‘அசுவமேதயாகம்’ என்ற (குதிரைகளுடன் தசரதன் மனைவியர் உறவுகொண்டு இராமன் பிறந்தான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது) முறையில் இராமன் பிறந்ததையும், இந்து கடவுள்களின் புராணங்கள் கூறும் ஆபாச பிறப்புகளையும் படங்களாக சித்தரித்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.


அப்போது சில ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் (ஹிந்து மிஷன் ) ஊர்வலத்தின்மீது செருப்பு வீசினர். உடனே பெரியார் தொண்டர்கள் அந்த செருப்பை வீசியவர் மீது திருப்பி வீசாமல், ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட இராமன் படத்தின் மீது அடித்துக் கொண்டே ஊர்வலத்தில் வந்தனர். மாநாட்டின் இறுதியில் இராமனின் 10 அடி உயர உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அந்த நிகழ்வு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.


அதே 1971-ஆம் ஆண்டு பெரியார் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். “15 நாட்களுக்குள் இராமாயணத்தை தடை செய்யவில்லை எனில், எங்கள் ஆட்கள் குடிகார இராமனாகவும் விபச்சாரி சீதையாகவும் வேடமிட்டு மாநிலமெங்கும் சென்று சூத்திர சம்பூகன் எவ்வாறு வஞ்சகமாக கொல்லப்பட்டான் என்பதை நடித்துக் காட்டுவார்கள்” என்று அறிவித்தார்.


இதே போன்றதொரு போர்க் குணத்துடன் இருந்தவர்தான் பெரியார். அவரைத் தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு தலைமையேற்ற மணியம்மை யார் அவர்கள். 1974ஆம் ஆண்டு மணியம்மையார் அவர்கள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு ஓர் கடிதம் எழுதினார். “இராம லீலா என்ற பெயரில் எங்கள் திராவிடர் மன்னர்களான இராவணன் மற்றும் இந்திரஜித் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இதனை உடனே தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது திராவிடர்களாகிய எங்களை இழிவுப்படுத்துவதாகவும் எங்களை இரண்டாம்தர குடிமக்களாக சிறுமைப் படுத்துவதாக வும் உள்ளது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடு கிறார். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் நாள் இராம லீலா இந்தியாவெங்கும் கொண்டாடப் படுகிறது. இதற்கு எதிர்வினையாக, அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள், பெரியாரின் முதல் நினைவு நாள் அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் “இராவண லீலா” என்ற பெயரில் இராமன், இலட்சுமணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட்டன. அதற்காக திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.


அதன் பின்னர் 1996-ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து தொடங்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகம் என்ற பெரியார் இயக்கம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இராவண லீலாநடத்தியது. எதிர் வரும் அக்டோபர் 12 அன்று, தோழர் இராமகிருட்டிணன் தலைமையிலான பெரியார் இயக்கமான தந்தை பெரியார் திராவிடர் கழகம், சென்னை சமஸ்கிருத கல்லூரியின் வாசலில் இராவண லீலா நடத்த உள்ளது. இராமன், இலட்சு மணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட உள்ளன. அதுவும் ஆரியர்களின் அடையாளமாக உள்ள சமஸ்கிருதக் கல்லூரியின் வாசலில்.


தற்போதைய காலக்கட்டத்தில் இராமனின் உண்மை முகத்தைக் காட்டவும் இராவணனைப் போற்றவும் நமக்கு முன்னெப்போதையும் விட அதிக காரணம் உள்ளது. இவை இரண்டுமே கற்பனை கதாபாத்திரங்கள் என்பதை நாம் அறிவோம். இராமாயணம் என்பது நாம் சிறு வயதில் படித்த கற்பனை தேவதைக் கதைகளை போன்ற ஒன்றேயன்றி வேறு இல்லை என்பதையும் நாம் அறிவோம். ஆனால் நாம் இராவணனை போற்ற வேண்டிய காரணம் என்ன?


இராமாயணத்தை நமக்கு சொல்பவர்கள் நமது சிந்தனையில் எதனை திணிக்க விரும்புகிறார்கள்? ஒரு காலத்தில் இராமனின் படங்கள் அவனது துறவு கோலத்தைக் குறிப்பதாக இருக்கும். காவியுடைஅணிந்து மனைவி சீதையுடனும் தம்பி இலட்சுமணனுடனும் காட்டுக்குச் செல்லும் இராமனின் படங்களையே நாம் அதிகமாக பார்த்திருப்போம்.


அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் இராமன் பட்டாபிஷேகப் படங்கள் அதிகமாக வெளியாயின.


தற்போது இந்துத்துவ அமைப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தும் இராமனின் படங்கள் போர்வீரன் கோலத்தில் கையில் வில்லேந்தியவையாக உள்ளன.


இப்போது கடவுளாக அல்லாமல் போர் வீரனாக இராமன் முன்னிறுத்தப்படுகின்றான்.


ஒரு காலத்தில் இந்து மதம் பக்தியை போதித்தது. அதற்கு துறவு இராமன் பயன்பட்டான். அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் ஆரியர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதையும் திராவிடர்கள் தோற்றவர்கள் என்பதை யும் குறிக்க பட்டாபிஷேக இராமனின் படங்கள் பயன்பட்டன. தற்போது தனது எதிரிகளை அழித்தொழிக்கு போர் வீரனாக அவனை முன்னிறுத்துகின்றனர்.


யார் அவனது எதிரிகள்? : இராட்சர்கள் – யார் இக்காலத்திய இராட்சர்கள்? இசுலாமியர்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள். எல்லா முஸ்லிம்களும், எல்லா சூத்திரர்களும் எல்லா தலித்துகளுமா? இல்லை. எதிர்த்து நிற்கும் முஸ்லிம்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள். அனுமான்களும் உள்ளனர். அடிபணியும் சூத்திரர் களும் தலித்துகளும் முஸ்லிம்களும். அனுமன் எவ்வாறு இராமனின் காலடியில் உள்ளானோ அவ்வாறோ நமக்கு நமது இடத்தை காட்ட அவர்கள் விரும்புகிறார்கள். அப்துல் கலாம் போன்று பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து செல்பவர்களை அவர்கள் போற்றுகிறார்கள். பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவர்கள் இராட்சசர்களாக, அரக்கர்களாக, தேச விரோதிகளாக முன்னிறுத்து கிறார்கள். அதிலும் பி.ஜே.பி அரசு பதவியேற்றப் பிறகு இது மிகுதியாக அதிகரித்துள்ளது.


தற்போதைய மோடி அரசு பதவியேற்ற பிறகு எவ்வளவு முனைப்புடன் சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.


ஆசிரியர் தின விழாவை குரு உத்சவ் என்பதும் பள்ளிகளில் குரு பூஜைகள் நடத்தச் சொல்வதும் நடக்கிறது. இது ஓர் எடுத்துக் காட்டு மட்டுமே.


இவ்வாறு பல வழிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படும்


அதே வேளையில், இந்த இந்துத்துவ அரசு ஆரியர்கள் மேலானவர்கள் என்றும் திராவிடர்கள் கீழானவர்கள் என்றும் தொடர்ந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது.


இந்த நிலையில் இராவணனை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது. அது இராவணன் என்ற ஒரு கதா பாத்திரத்திற்காக அல்ல. மாறாக, திராவிடர்  களாகிய நமது சுயமரியாதையை நிறுவுவதற்காக.


இராவணன், மகிசாசுரன் என்ற திராவிடர் இன பாத்திரங்களை கொடூரமானவர்களாக சித்தரித்து அதன் மூலம் நமது சுயமரியாதைக்கு அவர்கள் இழுக்குத் இழைப்பதற்கு எதிராக… நமது வளமான திராவிட மரபை நினைவுகூரும் விதமாக… நாம் இதனைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.


ஓணம் பண்டிகைக்கு மாற்றாக வாமன ஜெயந்தியை பா.ஜ.க முன்னிறுத்திய போது, கேரளாவின் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இருவருமே அதனை எதிர்த்து “நாங்கள் எங்கள் திராவிட மரபை (னுசயஎனையைே டுநபயஉல) விட்டுக் கொடுக்க மாட்டோம். வாமன ஜெயந்தி என்று இதற்கு பெயர் சூட்ட முனைவதை கடுமையாக எதிர்க்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டனர். இத்தகைய ஒன்றிணைந்த செயல்பாட்டினையே நாமும் மேற் கொள்ள வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.


விழா நிகழ்ச்சி : ‘இராவணாடே மகாநீயுடு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராவண விழாவுக்கு அகில இந்திய தலித் உரிமைக்கான அமைப்பின் மாவட்ட தலைவர் கே. வெங்கட்டரமணா தலைமை தாங்கினார். ஆந்திர பல்கலைக்கழக மானுடவியல் துறைத்தலைவரும், மிகச் சிறந்த கருத்தாளர் பேச்சாளருமான முனைவர் பி.டி சத்யபால், விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலை துணை மேலாளர் முனைவர் மாதுரி சிறீனிவாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் முன்னணி அமைப்பான ‘அய்த்வா’வின் ஆந்திர மாநில தலைவர் வி. பிரபாவதி, ஆந்திர மனித உரிமைக் கழக மாவட்ட தலைவர் கே. சிறீதர மூர்த்தி, ‘முல்னிவாஸ்சங்’ (மண்ணின் மைந்தர்கள் சங்கம்) அமைப்பைச் சார்ந்த இரவி சித்தார்த், கல்யாண் ராவ், நாத்திகர் மய்யத்தைச் சார்ந்த இலாசரஸ் ஆகியோர் நிகழ்வில் உரை யாற்றினர்.


– நமது செய்தியாளர்


பெரியார் முழக்கம் 27102016 இதழ்

Tuesday, November 2, 2021

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கை - உண்மை வரலாறு

 பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கை : உண்மை வரலாறு


கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், 

திராவிடர் கழகம்


‘இந்து தமிழ்’ நாளிதழில் 22.10.2021 அன்று வெளியான ம.வெங்கடேசனின் ‘பச்சையப்பன் கல்லூரியில் பட்டியலினத்தோர் சேர்க்கப் பட்டது எப்படி?’ கட்டுரையை வாசித்தேன். ‘நீதிக்கட்சி ஆதிதிராவிட மக்களுக்காக எது வும் செய்யவில்லை’ என்பதாக உருவாக்கப் படும் அவதூறுகள், கட்டுக்கதைகளின் ஒரு பகுதிதான் இது!


பச்சையப்பன் கல்லூரிப் பிரச்சினை பற்றி ரெட்டைமலை சீனிவாசன் 1893-இல் குறிப்பிடுகிறார். 1906-இல் அயோத்திதாசரின் ‘தமிழன்’ ஏட்டில் ஒரு குறிப்பு இருக்கிறது. 1917-இல் பிட்டி.தியாகராயர், தான் அறக்கட்டளையில் தலைவராக இருந்தபோதே பச்சையப்பன் கல்லூரியில் அனைத்து மாணவர்கள் சேர்க்கை மறுக்கப்பட்டது பற்றிப் பேசியிருக்கிறார். இதற்காக எம்.சி.ராஜா குரல் கொடுத்திருக்கிறார். 1921-ல் சட்டசபையிலேயே இப்பிரச்சினை பற்றி நீதிக்கட்சியின் ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனாரும் முகமது உஸ்மான்சாகிபும் பேசியிருக்கிறார்கள். இப்படிப் பல்வேறு காலகட்டங்களிலும் பேசப்பட்டுவந்த பிரச்சினைதான், 1927-இல் வழக்காக வந்து மீண்டும் கவனம் பெறுகிறது.


பச்சையப்பன் கல்லூரியில் மட்டுமில்லை; பெரும்பாலான இடங்களிலும் இதுதான் நிலை. ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிற மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருந்ததால்தான், இரட்டை ஆட்சி முறையில் இருந்த குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்டு, பள்ளிக் கல்வி தொடங்கி, கல்லூரிக் கல்வி வரை அனைத்து மக்களுக்கான உரிமைக்காகப் பல ஆணைகளை, உதவிகளை நீதிக்கட்சி அரசு செய்யத் தொடங்கியிருந்தது.


* நான்காம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த ஆதிதிராவிட மாணவர்களுக்கு, மாதத்துக்கு இரண்டு ரூபாய் முதல் ஏழு ரூபாய் (ஒரு பவுன் 13 ரூபாயாக இருந்த காலகட்டத்தில்) கல்வி உதவித்தொகை.


* இலவச நண்பகல் உணவு.


* வணிகக் கல்வி படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்குக் கல்விக் கட்ட ணத்தைத் திருப்பியளித்தது.


* மருத்துவக் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை.


* பள்ளிகளில் ஆதிதிராவிட மாணவர் களுக்கென்று தனி வகுப்புகள் அமைக் காமல், எல்லா வகுப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்கான ஆணை.


* ஆதிதிராவிட மாணவர்களை அதிகம் சேர்க்கும் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி உதவி; சேர்க்காத பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட மாட்டாது என்ற ஆணை.


* கல்லூரிகளில் அனைத்து வகுப்பாரும் சேர்க்கப் படுவதற்கான மாணவர் சேர்ப்புக் குழுக்கள் அமைப்பு.


இப்படி, ஒவ்வொரு கட்டமாக ஆதிதிராவி டர்களுக்கான தடைகளெல்லாம் தகர்க்கப் பட்டு வந்தன நீதிக்கட்சியால்!


பெரியாரின் தாக்கம் தந்த மாற்றம்


காங்கிரசில் இருந்தபோதும், வெளியேறிய பிறகும் இத்தகைய ஜாதி-தீண்டாமை ஒழிப்புக் காகவும், சமூக நீதிக்காகவும்தான் பெரியார் போராடினார்; குரல்கொடுத்தார். 


‘‘பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப் புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டப் படாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்து சொல்லுவோம். ஏனெனில், அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ முன்னே றவே இல்லை. சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமே யானால், இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும், பிராமணக் கொடு மையும் நமது நாட்டில் இருக்குமா?’’ என்று கேட்டவர் பெரியார். (குடிஅரசு 8.11.1925) இந்துக்களாகக் கருதப்பட்டு, ஆதிதிராவி டர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்பது மட்டும் பிரச்சினையில்லை. இந்துக்கள் அல்லாதோர் என்ற வகையில், இஸ்லாமி யருக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடம் மறுக்கப் பட்டுவந்தது. அனைவருக்குமான பிரச்சினை யாகத்தான் அதை நீதிக்கட்சி அணுகியது.


நீதிக்கட்சியின் கடுமையான தீர்மானம்


1927 அக்டோபர் 22, 23 ஆகிய இரு நாட்கள் பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி உள்ளிட்ட ஏராளமான நீதிக்கட்சித் தலைவர்கள் பங்கேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியார் எழுச்சியுரை ஆற்றினார். அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவரான சுரேந்திரநாத் ஆரியா கொண்டு வந்த முக்கியமான தீர்மானம் எது தெரியுமா?


‘‘பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கல்லூரியின் அறங்காவலர்களுக்கு வலியுறுத்தி இந்த மாநாடு கூறுகிறது.


...இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்றுச் செயல்படத் தவறினால், அக்கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது” என்ற கடுமையான எச்சரிக்கையுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


இந்நிலை பச்சையப்பன் கல்லூரியில் மட்டும் இல்லை என்பதை, இதே மாநாட்டில் ஆர்.வி.சொக்கலிங்கம் என்பவர் முன்மொ ழிந்த தீர்மானம் எடுத்துக் காட்டுகிறது. கல்லூரி சேர்க்கைக் குழுக்களையும் தாண்டி, தனித்து வமான விதிமுறைகளைக் காட்டி பச்சையப்பன் அறக்கட்டளையில் இந்துக்கள் அல்லாதோர் தவிர்க்கப்பட்டுவந்த நிலையில், ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளி களுக்கு நிதி உதவி ரத்து என்ற ஆணையை (கல்வி.87, 16.1.1923) கல்லூரிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதைத்தான் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.


என்.சிவராஜின் வரலாற்றில்


1927-இல் நடைபெற்ற வழக்கில், அறங் காவலர் குழுவின் முடிவு சாதகமாக இல்லாத சூழலில், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பிறகு, நீதிக்கட்சி ஆதரவோடு சட்டமன்றத்தில் இடம்பெற்றவரான என்.சிவராஜ், அவரது மாமனார் வி.ஜி.வாசுதேவப் பிள்ளை ஆகியோரின் முயற்சியாலும், நீதிக்கட்சியின் கோபதி நாராயணசுவாமி செட்டி அவர்களின் தலையீட்டாலும் 1928-இல் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள் சேர்க் கப்பட்டுள்ளனர். ஆனால், ம.வெங்கடே சனோ பிரச்சினை முடியும் வரை நீதிக்கட்சியும், பெரியாரும் இது பற்றி எதுவும் பேசவே இல்லை என்று உண்மைக்கு மாறான கருத்தை முன்வைக்கிறார்.


பனகல் அரசரின் ஆலோசனையிலேயே சுப்பராயன் செயல்படுகிறார் என்று கருதித் தானே, சைமன் கமிஷனை சாக்காக வைத்து சுயராஜ்ஜியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது; அதை திராவிடர் ஆதரவு ஆட்சி என்று குறிப்பிட்டதில் என்ன தவறு?


நன்றி: 'இந்து தமிழ் திசை' (1.11.2021)

Monday, November 1, 2021

பி.ஏ.கிருஷ்ணனுக்கு இன்னொரு மறுப்பு -ஆசீப் நியாஜ்

 பி.ஏ.கிருஷ்ணனுக்கு இன்னொரு மறுப்பு !

*********************************************************

- ஆசீப் நியாஜ் அவர்கள் 01.11.2017 இல் எழுதிய முகநூல் பதிவு


இப்போதெலாம் பெரியார் எனப் பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அடித்து விடுவதில் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு நிகர் அவரே ! இன்று ஒரு பதிவில் 1933 ஆம் ஆண்டு 9 மாதச் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் மன்னிப்புக் கடிதம் கொடுத்து 1934 மே மாதமே வெளிவந்துவிட்டார் என்கிறார். இது எதற்கு என்றால் சவர்க்கார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது பற்றி விமர்சித்தது தவறாம். அவர் 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருந்தாராம். அதனால் சவர்காரை பெரிய ஆளுமையாகவும், பெரியாரை வெத்து வேட்டாகவும் ஆங்கிலேய அரசு பார்த்ததாம்.


லண்டன் கர்சன் வில்லி கொலை (சுட்டது மதன் லால் டிங்கரா) மற்றும் நாசிக் கலெக்டர் ஜாக்சன் கொலை (சுட்டது ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே) என இரண்டுக்கும் மூளையாய்ச் செயல்பட்டதாய் லண்டனில் கைது செய்யப்பட சவர்கார் இந்தியா வரும் வழியில் கப்பலின் கழிவறை சன்னலை உடைத்துத் தப்பித்து மீண்டும் பிரான்ஸ் நாட்டில் பிடிபட்டார். யாரிடம் ஒப்படைப்பது என்ற வழக்கின் படி பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சவர்காரை 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது. ஒரே ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி வெளியே வரவில்லை. வந்த மூன்றாண்டுக்குள் நான்கு முறை மன்னிப்புக் கடிதம் எழுதினார். பின் பல முறை மன்னிப்புக் கடிதம் வழங்கிய பின் "என்னை விடுதலை செய்தால் நான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருப்பேன்" என எழுதிக் கொடுத்தே வெளி வந்தார்.எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா??  இதையேதான் பாரதியும் கடலூர் சிறையிலிருந்து எழுதிய மன்னிப்புக் கடித்தில் எழுதினார். (I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.) என்ற பாரதியின் வரிகளைத்தான் சர்வாகாரும் எழுதினார்..பாரதி கடயத்தில் இருந்ததைப் போலவே சவார்காரும் சகலத்தையும் அடக்கிக் கொண்டு ரத்தினகிரியில் இருந்தார். 2 கொலை, வரும் போது தப்பி ஓட்டம், வரிசையா மன்னிப்புக் கடிதம்.. இதலாம் ஒரு பெருமையா ??? !!


1930-லேயே பொதுஉடமைக் கருத்துக்களைப் பேச ஆரம்பித்துவிட்ட பெரியார் 1932-ல் ரஷ்யா சென்று, அந்நாளைய சோவியத் யூனியன் ஜனாதிபதி காலினினை நேரில் சந்தித்து உரையாடியவர். செஞ்சதுக்க மே தின விழாவில் உரையாற்றியவர். ரஷ்யா செல்லும் முன்னரே மார்க்ஸ் & எங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையையும் (4.10.1931), லெனினும் மதமும் என்ற நூலையும் (11.12.1931) வெளியிட்டார். பின் 29.12.1933-ல் ஈரோட்டில் தனது வீட்டில் சுயமரியாதைத் தொண்டர்களைக் கூட்டி 'சமதர்மத் திட்டத்தை' வெளியிட்டார்.இது "ஈரோட்டு பாதை" எனவும் அறியப்படும். தன்னுடைய சுய மரியாதை இயக்கத்தில் சமதர்மப் பிரிவு என ஒன்றை ஆரம்பித்து தமிழகமெங்கும்சமதர்மச் சங்கங்களைத் துவக்கினார். மே தினம் சமதர்மப் பெருநாள் என தமிழகம் முழுவதும் சுய மரியாதை இயக்கத்தாரால் கொண்டாடப்படும் என14.5.1933 குடி அரசில் அறிவித்தார்.


சரி, விசயத்திற்கு வருவோம் பொதுஉடைமை பேசியதற்காக 1933 டிசம்பரில் கைதாகி மன்னிப்புக் கொடுத்து வெளிவந்ததாகச் சொல்வது பொய் !


29.10.1933 அன்று குடி அரசில் "இன்றைய  ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?" என்றத் தலைப்பில் ஒரு அறிக்கை எழுதுகிறார். இதற்காகத்தான் பெரியார் மீது ராஜதுவேஷ குற்றச்சாட்டுச் சுமத்தப்படுகிறது. பெரியாரின் தங்கை கண்ணம்மாள் அவர்களும் குடி அரசு "பதிப்பாளர்" என்ற முறையில் இதே குற்றச்சாட்டிற்கு உள்ளாகிறார். அத்தோடு குடி அரசுக்கு ரூ.2000 ஜாமீன் தொகையாகக் கட்டவேண்டும் என்றது. 12.11.33 அன்று குடி அரசு தலையங்கத்தில் இது பற்றித் தெரிவிக்கிறார் பெரியார்.


"குடி அரசு பத்திரிக்கைக்கு இந்திய அரசாங்க அவசரசட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக் காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிக்கை யின் பிரசுர கர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும் இருக்கிறார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜி°டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டாய்விட்டது." - குடி அரசு – தலையங்கம் – 12.11.1933


அதே இதழில் தனக்கு வந்த நோட்டிசையும் காட்டியுள்ளார். (பார்க்க படம் 1). பணம் கட்டமுடியாமல் குடி அரசு தடை செய்யப்படுகிறது.


பெரியார் அந்த வாரமே "புரட்சி" என்ற இதழை ஆரம்பிக்கிறார். ஆசிரியர் அவரது அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி. புரட்சியின் முதல் தலையங்கம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. எதற்கு புரட்சி என்பதை பெரியார் சொல்கிறார்.


"“குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆக்ஷியாகிய குடி அரசுக்குஉலகில் இடமில்லையானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆக வேண்டும்." "வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று “புரட்சி” வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த “புரட்சி” தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப “புரட்சி” தோன்றியதல்ல. அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த புரட்சி வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய்வாழச் செய்யவேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே “புரட்சி” தோன்றியிருக்கிறது." - புரட்சி 26.11.1933


டிசம்பர் 1933 பெரியாரும், கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு நடக்கிறது. 1 வாரம் கழித்து கண்ணம்மாள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


"இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மாஜிஸ்திரேட் தோழர் கண்ணம்மாளை ஜாமீனில் விடுதலை செய்ய உத்திரவிட்டிருப்பதாகக் கூறினார். தோழர் டி.டி. ஆர் பிள்ளைக்கு உதவியாக தோழர்கள் ஈரோடு வேணு கோபால், சென்னை கே.எம்.பாலசுப்பிரமணியம், கோவை நஞ்சுண்டையா முதலிய வக்கீல்கள் ஆஜரானார்கள். “புரட்சி” பத்திரிகை பிரசுரகர்த்தாவும் பதிப்பாளருமான தோழர் எஸ். ஆர். கண்ணம்மாளை, அவர்மீது கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு விசாரனை முடியும் வரை ஜாமீனில் விட வேண்டுமென கோவை ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் மனுச் செய்து கொள்ளப்பட்டது. ஜில்லா மாஜிஸ்டிரேட் அவரை ரூ.500 சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு மற்றும் ஒரு நபர் ரூ.500 ஜாமீனும் கொடுத்தால் விடுதலை செய்யும்படி உத்திரவிட்டார். தோழர் கண்ணம்மாள் ஜாமீன் கொடுத்து விடுதலையடைந்து அன்றிரவே மெயிலில் ஈரோடு வந்து சேர்ந்தார். தோழர் ஈ.வெ. ராமசாமி, எஸ்.ஆர். கண்ணம்மாள் இவர்கள் இருவர்மீதும் கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு ஜனவரி மாதம் 4 தேதி கோவை ஜில்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை வரும்." - புரட்சி-துணைத் தலையங்கம் – 31.12.1933


இ.பி.கோ.  124-A  செக்ஷன்படி  தொடரப்பட்டுள்ள  “”பொதுவுடைமை”  பிரசாரத்திற்காகவும்  “”இராஜ  நிந்தனை”  என்பதற்காகவுமுள்ள  வழக்கு  கோவையில் ஆரம்பிக்கப்பட்ட  போது  தோழர்  ஈ.வெ.  இராமசாமி  அவர்கள்  கோவை  ஜில்லா  கலெக்டர்  G.W.  வெல்ஸ்  I.C.S  அவர்கள்  முன்  தாக்கல்  செய்த  அறிக்கையை பி.ஏ.கி பார்க்க வேண்டும் சவர்காருடன் ஒப்பிடும் முன்..


"வழக்குக்கு அஸ்திவாரமான  291033  தேதி  “”குடி  அரசின்”  தலையங்கத்தை  இப்போது  பலதரம்  படித்துப்  பார்த்தேன்.  அதை  நான்  எழுதினேன்  என்பதை  ஒப்புக்  கொள்ளுகிறேன். அதில் எழுதப்பட்டிருக்கும்  விஷயங்களுக்காவது  வாக்கியங்களுக்காவது  ராஜத்துவேஷக்  குற்றம்  சாட்டப்படுமானால்  இன்றைய  அரசாங்க  முறை,  நிர்வாக  முறை  முதலியவைகளைப்  பற்றி  ஆராய்ச்சி  செய்து  குறைகளை  எடுத்துச்  சொல்லவோ,  அவற்றால்  மக்களுக்கு  ஏற்படக்கூடிய  கஷ்டங்களை  விலக்கப்  பரிகாரம்  தேட  ஏற்பாடு  செய்யவோ  யாருக்கும்  சுதந்திரம்  கிடையாது  என்றுதான்  முடிவு  செய்யப்பட்டதாகும்."


"ஏதாவது ஒரு கொள்கைக்கு  பிரசாரம்  பரவ  வேண்டுமானால்  அக்கொள்கையில்  நம்பிக்கை  கொண்டவர்கள்  அக் கொள்கைக்கு  இடையூறு  செய்பவர்களால்  அடக்கு  முறைக்கு ஆளாக  வேண்டியதும்  அவசியமேயாகும். "


"இதனால் பொதுஜனங்களுடைய  கவனிப்பு  இன்னும்  அதிகமாவதோடு  அவர்களது  ஆதரவும்  பெற  நேர்ந்து  கிளர்ச்சிக்கு  பலமேற்படக்  கூடுமாதலால்  என்  மீது  சுமத்தப்பட்ட இந்த  வழக்கில்  ஒரு  ஸ்டேட்மெண்டை  மாத்திரம்  கொடுத்து  விட்டு  எதிர்  வழக்காடாமல்  இப்போது  கிடைக்கப்போகும்  தண்டனையை  மகிழ்ச்சியோடு  வரவேற்கின்றேன்." -  புரட்சி  அறிக்கை  21.01.1934


தன் மேல் சுமத்தப்பட்டக் குற்றத்தை ஒப்புக் கொண்டு, ஒரு கொள்கைக்கு  பிரசாரம்  பரவ  வேண்டுமானால் அடக்கு  முறைக்கு  ஆளாக  வேண்டியதும்  அவசியமே எனச் சொல்லி எதிர்வழக்காடாமல் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் என்ற பெரியார் எங்கே, தப்பி ஓட முயன்று, பிடி பட்டு மன்னிப்புக் கோரிய சவர்கார் எங்கே ?????


ஜனவரி 24 அன்று வந்த தீர்ப்பு:


"ராஜநிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான் ஆகிய தோழர் ஜி.டபள்யூ. வெல்ஸ், ஐ.சி.எஸ். அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 24ந் தேதியன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறார். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங் காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3மாதம் வெறுங் காவல் தண்டணையும் 300 ரூபாய் அபராதமும், அபராதத் தொகை செலுத்தாத பட்சம் மேற்கொண்டு தலா ஒவ்வொரு மாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள்."


தீர்ப்பிலேயே 6 மாதச் சிறை (படம் 2)  என்றுதான் இருக்கிறது.. பி.ஏ.கி 9 மாதம் என்கிறார்..


பெரியார் சிறையிலிருக்கும் போது கூட "புரட்சி" பொது உடமைக் கருத்துக்களை எழுதுவதை நிறுத்தவில்லை.  22.4.1934-ல் புரட்சியில் மே தினம் கொண்டாடச் சொல்லி விஷேச அறிக்கை வந்தது. (படம் 3)

29.4.1934 புரட்சித் தலையங்கத்திலும் மே தினம் பற்றி எழுதுகிறார்.


டிசம்பரில் கைதான பெரியார் மே மாத மத்தியில் ராஜமகேந்திரம் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார். சாதாரண கைதியாகவே நடத்தப்பட்டதை புரட்சி துணைத் தலையங்கம் 20.5.1934 கூறுகிறது


."தோழர்  ஈ.வெ.ராமசாமி  அவர்கள்  15ந்  தேதி  ராஜமகேந்திரம்  ஜெயிலிலிருந்து  விடுதலையாகி,  16ந்  தேதி  சென்னை  வந்து  அங்கிருந்து  அன்றே  புறப்பட்டு  17ந்  தேதி  ஈரோடு  வந்து  சேர்ந்தார்.  அரக்கோணம்,  காட்பாடி,  ஜோலார்பேட்டை,  சேலம்  ஆகிய  ஸ்டேஷன்களுக்கு  ஆங்காங்குள்ள  சுயமரியாதை  இயக்கத்தைச்  சேர்ந்த  நண்பர்கள்  வந்து  சந்தித்துப்  பேசிப்  போனார்கள்." (படம் 4)


சிறையிலிருந்து வந்தததும் அதைப் பற்றி பெரியார் பேசியதுதான் சவர்கார்க்கும் பெரியார்க்கும் உள்ள வித்தியாசம். பெரியார் எழுதினது ஒரு சப்பை மேட்டர், அதுக்கு இந்தத் தண்டனை ரொம்ப அதிகம்.. தன்னிடம் கேட்டிருந்தால் வேற நலல அறிக்கையை எடுத்துக் கொடுத்திருப்பேன் எனப் பகடி செய்கிறார்.


"அதாவது  குடி  அரசு  பத்திரிகையில்  என்னால்  எழுதப்பட்ட  ஒரு  சாதாரணமானதும்,  சப்பையானதுமான  விசயத்திற்காகத்தான்  நான்  சிறைக்குப்  போக  நேரிட்டதே  தவிர,  மற்றப்படி  செல்லத்தக்க  ஒரு  சரியான காரியம்  செய்துவிட்டு  சிறைக்குப்  போகவில்லை.  சர்க்கார்  இந்தக்  “”குடி  அரசு”ப்  பத்திரிகையின்  பழைய  இதழ்களைப்  புரட்டிப்  பார்த்தால் என்னை வருடக்கணக்காய்  தண்டிக்கக்கூடியதும்,  நாடு  கடத்தக்கூடியதுமான  விசயங்கள்  நூற்றுக்கணக்காக  தென்படலாம். "


பெரியாரின் டிசம்பர் 33 - மே 34 சிறை வாசத்தில் இதுதான் நடந்தது.. விதிக்கப்பட்டத் தண்டனையை அவர் கிட்டத்தட்ட 95% முடிந்த பிறகே விடுதலை ஆகி வெளியே வந்தார். அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை !!


பெரியார் சிறையிலிருந்த சமயத்தில் தோழர்.ஜீவா புரட்சி இதழில் எழுத ஆரம்பித்திருந்தார்.. பின், மாவீரன் பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற கட்டுரையை ஜீவா தமிழாக்கம் செய்தார். அதை தந்தைபெரியார் புரட்சி ஏட்டில் பதிப்பித்து வெளியிட்டார். அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக அரசு பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமிக்கும் (ஆசிரியர் என்ற முறையில்) , மொழி பெயர்ப்பாளர் ஜீவாவுக்கும் சிறைத் தண்டனை விதித்தது. பெரியார் சொன்னபடி ஈ.வெ.கி-யும் ஜீவா அவர்களும்  மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். முதலில் மறுத்த ஜீவா,.கட்சி சொன்னதன் காரணமாக ஜீவாவும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலையானார். இதுதான் "கடித" விசயத்தில் நடந்தது. இதில் பெரியார் கைதாகவே இல்லை.


பெரியார் தனது அண்ணனை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொன்னது மட்டுமே உண்மை. ஈ.வெ.கி & ஜீவா கொடுத்த மன்னிப்புக் கடிதம் செய்தித் துணுக்காக  குடி அரசில் இருக்கிறது. (படம் 5)


"நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்” என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் “”பீபிள்ஸ்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்ததும், அச்சிட்டுக் கொடுத்ததும் ராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல வென்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும்." - குடி அரசு  செய்தித் துணுக்கு   24.03.1935


ஜீவா சமதர்மம் என்ற இதழை ஆரம்பித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தற்கு விளக்கம் அளித்தார். இது தேவையில்லா மனக்கசப்பை ஏற்படுத்தும் எனக் கருதிய பெரியார், இந்தக் கடிதத்திற்கு தானே பொறுப்பு என்றார்.


31.03.1935 குடி அரசு தலையங்கத்தில் இது பற்றி "எனது அறிக்கையின் விளக்கம்" என்றத் தலைப்பில் விரிவாக எழுதினர்.


"உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும். அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீவா. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள். இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்." - குடி அரசு  தலையங்கம்  31.03.1935


மேற்கொண்டத் தரவுகள் மூலம் பி.ஏ.கி சொன்னது போல பெரியார் தனது 9 மாதத் தண்டனையை மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனார் என்பது உண்மையல்ல என்றும் பின்னர் வேறு பிரச்னைக்கு பெரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஈ.வெ.கி & ஜீவா மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனதையும் நிறுவலாம். !!


விடுதலையாகி வெளியே வந்த யாரும் பாரதி/சவர்கார் சும்மா இருக்கவில்லை..அதே ஆண்டு அக்டோபரில், தமிழ்நாட்டில் உள்ள நாத்திகர்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்று நினைத்து சென்னை ராஜதானி நாத்திகர்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். நாத்திகப் பிராச்சாரம், குட்டி குட்டி முதலாளித்துவமும், செவிட்டு அரசும் ஆகிய கட்டுரைகளை புரட்சி தொடர்ந்து வெளியிட்டது. இறுதியில் ஆங்கில அரசால் "புரட்சி" தடை செய்யப்பட்டது....


பெரியார் தொடர்ந்து சமதர்மம் பேசினார்.


28.04.1935 குடி அரசு  அறிக்கையில் "இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி,வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன். தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசீய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரசாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்."


01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய முடிவுரையில் மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும் என்றார்.


08.09.1935 ஆம் நாள் தேவகோட்டையில் தோழர் லட்சுமிரதன் பாரதியார் வீட்டு மைதானத்தில் “சமதர்மம்’ என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு

"நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதிபேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால் தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய், காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது."


19.10.1935  ஆம்  நாள்  திருச்சி  டவுன்ஹாலில்  பெரிய  கொட்டகையில்  நடைபெற்ற  திருச்சி  மாவட்ட  சுயமரியாதை  மாநாட்டில்  ஆற்றிய  தலைமையுரையில்

"ஈரோட்டு வேலைத் திட்டக் கூட்ட சமதர்ம திட்டத்துக்கு நாம் ஒருபோதும் பின் வாங்கக் கூடாது. ஆனால் அத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டிய விஷயத்தில் நமது பொறுப்பைக் கொண்டு செலுத்த அவற்றை அமுலுக்குக் கொண்டுவர, தக்க அனுபவ சாத்தியமான திட்டத்தோடு வேலை செய்ய வேண்டும். இவற்றிற்கு ஜஸ்டிஸ் கட்சியாரின் உதவியை எவ்வளவு தூரம் உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள வேண்டும். "


"சமதர்மம் என்பதைத் தமிழ்நாட்டு வாலிபருள்ளத்திற் புகுத்தித் தணல் விட்டெரியச் செய்தது, நான்தானென்று தோழர் ஜீவானந்தம் சொன்னார். “”சமதர்மம் ஒரு நாளில் ஏற்படக் கூடியதல்ல. ரஷியாவில்கூட ஒரு நாளில் சமதர்மம் ஏற்பட்டுவிடவில்லை. பல காலத்து வேலையால்தான் அதுவும் சந்தர்ப்பம் சரியாய் இருந்ததால்தான் முடிந்தது. முதலில் சமூகத் துறையில் சமதர்மம் ஓங்க வேண்டும்" -குடி அரசு  சொற்பொழிவு  27.10.1935


1936 மே தின கொண்டாட்ட வேண்டுகோள் -

"மற்ற தேசங்களில் தொழிலாளர் குறைபாடுகளை வெளிப்படுத்தி உலக அரசியலிலும், சமூக இயலிலும் தொழிலாளர்கள் சமத்துவமும் ஆதிக்கமும் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டு மே தினம் கொண்டாடுகிறார்கள். இந்தியர்களாகிய நாமும் சமூகத்துறையில் ஜாதி மத இழிவிலிருந்தும், பொருளாதாரக் கொடுமையில் இருந்தும் விடுதலை பெறவும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பொதுக்கூட்டம் கூட்டி நமது இழிவையும், கொடுமையையும் எடுத்துச் சொல்லி சகல மக்களுக்கும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கவேண்டுமென்று விளக்கிக் கொண்டாட வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன்." -குடி அரசு அறிக்கை 19.04.1936


அத்தோடு பொது உடைமைத் தீர்மானங்களை நீதிக் கட்சிக்கு அனுப்பி அவற்றை நீதிக் கட்சியை ஏற்கவும் வைத்தார். இதில்தான் ஜீவா உட்பட சிலருக்கு பெரியாருடன் முரண்பாடு உண்டானது.


1936 ஆம் ஆண்டு நடந்த திருத்துரைப்பூண்டி தஞ்சை ஜில்லா 5 வது சுயமரியாதை மகாநாட்டில் சுய மரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறித் தனிக் கட்சித் தொடங்கிய ஜீவா போன்றோருக்கு பெரியார் பதில் கூறினார். இறுதியில் சுய மரியாதையா, பொது உடமையா என வரும் போது சுய மரியாதை இயக்கந்தான் முக்கியம் என்று பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன் என்றும் கூறினார்.


"நான் இப்போது சர்க்காருக்கு பயந்துவிட்டேன் என்றும், பொதுவுடமைப் பிரசாரத்தை விட்டு விட்டேன் என்றும் குறைகூறப்பட்டது. இதைப்பற்றி விஷமப் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சமயத்தில் எனது கருத்தை தைரியமாகவும், விளக்கமாகவும் வெளியிடுகிறேன். தயவு செய்து கவனித்துக் கேட்கவேண்டுமாய்க் கோருகிறேன். நான் ரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ரஷ்யாவில் இருந்து வந்தவுடனும் அதை இன்னும் தீவிரமாய்ப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். அதோடு மாத்திரமல்லாமல் தமிழ் நாட்டில் சுமார் 150 சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படும்படி செய்து அவைகள் ஒரு அளவுக்கு வேலை செய்து வரும்படி செய்ததும், அவைகளுக்கு நான் சில உதவிகள் செய்து வந்ததும் உண்மைதான். ஒன்றையும் மறைக்கவில்லை. ஆனால் சர்க்காரார் பொதுவுடைமை கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகும், அதனால் பல கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவை ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்னடைந்து விட்டதைப் பார்த்தும், நம்முடைய தோழர்கள் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாலும், பலர் வெறும் வேஷ விளம்பரத்துக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் எனக்கு புத்திசாலித்தனமாக சில காரியம் செய்யவேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது."

"இப்பொழுதும் நான் ஒரு தினசரி நடத்த சகல ஏற்பாடுகளும் செய்து கொண்டு சர்க்காரை அனுமதி கேட்டதில் பெருவாரியான தொகை ஜாமீன் கட்ட வேண்டுமென்று உத்திரவு வந்து விட்டது. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு நான் மாத்திரம் வீரனாக ஆவதற்கு ஜெயிலில் போய் உட்கார்ந்து கொள்ளுவதா? அல்லது பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இயக்கத்தின் மற்ற திட்டங்களை நடத்துவதா என்று யோசித்துப்பாருங்கள். இதுதான் எனது உண்மை."


சுயமரியாதை இயக்கம் சந்தித்த அரசின் பல்வேறு அடக்குமுறைகளை பட்டியலிடும் பெரியார், சுயமரியாதைக் கொள்கையிலேயே சமதர்மமும் பொதுவுடைமையும் அடங்கியுள்ளது என்று விளக்குகிறார். “இந்த இயக்கம் எந்த தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது” என்று கூறுவதோடு “புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையில் இருந்து பார்த்துவிட்டுத்தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன்” என்று குறிப்பிடுகிறார்.


“ஈ.வெ.ரா. விளக்கம்” எனும் தலைப்பில் பெரியார் தன்னைப் பற்றி எழுதி வெளிவந்துள்ள மற்றொரு தலையங்கம் இவ்வாறு கூறுகிறது.


இந்த இயக்கம் தோழர் ஈ.வெ.ரா. வுக்கு ஒரு ஜீவன மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கோ என்று இல்லாமல் வெறும் பொதுநல காரியத்துக்காகவே அவர் நடத்துகிறார். அதுவும் அவரது ஜீவன் உள்ள வரை ஒரு நேர்மையும், பொதுநலப் பயனும் உள்ள ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே என்பதற்காகவே செய்கிறாரே ஒழிய மற்றப்படி இன்ன காரியத்தை சாதிப்பதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கோ அல்லது அதைச் செய்துதான் முடிக்க வேண்டும் என்கின்ற அவதாரத் தன்மைக்கோ, வீரத் தன்மைக்கோ அவர் அவ்வேலைகளைச் செய்யவில்லை. அன்றியும் அவர் காரிய “வீரரே” தவிர கொள்கை வீரரல்ல. கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கை களைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சௌகரியமாயிருந்தால் செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜெயிலுக்குப் போவது மேலானதாக ஆகிவிடாது என்கின்ற கருத்தும் கொண்டவர். ஆகையால்தான் காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்கு பெயர் கோழை யென்றாலும், துரோகம் என்றாலும் அவருக்குக் கவலை இல்லை. கோழை என்பது செய்வதற்கு சவுகரியமுள்ள காரியங்களை விட்டு விட்டு ஓடுவதேயாகும். துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டு சுயநலத் துக்காகப் பின் வாங்குவதாகும். இன்று அவருக்கு செய்வதற்கு சவுகரியமுள்ள காரியம் எதையும் விட்டு விட்டு அவர் ஓடவில்லை. இரண்டாவதாக யாரிடத்திலும் எவ்வித வாக்குறுதி கொடுத்தோ கடுகளவாவது தன் சுயநலத்துக்கு பிரதி பிரயோஜனமடைந்தோ வேறு எந்தவித சுயநல காரியத்துக்கோ ஆசைப்பட்டு பின் வாங்கி விடவில்லை. - குடி அரசு தலையங்கம் 29.03.1936


ஆக சமதர்மத்தைப் பற்றி சற்று அதிகமாக பேசியதால் கைது செய்யப்பட்டார் என்பதும் மன்னிப்பு கேட்டப்பின் விடுதலை ஆனார் என்பதும் பொய் எனத் தெரிகிறது. ஏனெனில் 1934 - ல் விடுதலை ஆனப் பின்னேதான் நிறைய சமதர்மம் பேசுகிறார், 100-க்கும் மேற்ப்பட்ட சமதர்மச் சங்கங்களை ஆரம்பிக்கிறார்.


இத்தரவுகளைக் கொண்டு எனக்குத் தெரிவது என்னவென்றால் சவர்காரை குத்திய குத்தில் அவர் எழுதிய மன்னிப்புக் கடிதங்களைப் பார்த்த ஆங்கில அரசு "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், ரொம்ப நல்லவனு" வடிவேல் மாதிரித்தான் நடத்தியிருக்கிறார்கள். வெளியே போனாலும் இவரால் எந்தத் தொந்தரவும் இல்லை என்பதால்தான் அவரை விடுதலை செய்துள்ளனர். P.A.K அவர்களும் 1934-ல் விடுதலைக்கு பெரியார் எழுதிய மன்னிப்புக் கடிதத்தைக் காட்டி இதைப் போல் நிறுவினாரெனில் எம் கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.

Tuesday, October 19, 2021

பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! –தலைவர் கொளத்தூர் மணி.

 பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! –தலைவர் கொளத்தூர் மணி.

மீண்டும் மீண்டும் பெரியாரை கொச்சைப்படுத்தும் சில தமிழ்த் தேசியவாதிகளுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக பதிலளித்தார். டிசம்பர் 24 அன்று வடசென்னை பெரம்பூரில் நடந்த கூட்டத்தில் கழகத் தலைவர் ஆற்றிய உரை:

இன்று பெரியாரின் நினைவு நாளில் நாம் கூடியிருக் கிறோம். வழக்கமாக பெரிய அளவில் எடுக்கப்படும் பிறந்த நாள் விழாக்களைவிட, நினைவு நாள் விழாக்கள்தான் மிகவும் தேவையானதும், பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம். பிறந்த நாள் விழாக்களை அந்தந்த தலைவர்கள் வாழுகின்ற காலம் வரை எடுப்பார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம். அவர்களுக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்கும் அடைமொழிகளை பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கிற அளவுக்கு, பல்வேறு அடைமொழிகளை கொடுத்து சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறைந்துவிட்ட தலைவர்களுக்கு நினைவு நாள் எடுப்பது என்பதுதான், அவர்களுடைய கொள்கைகளை, அவர்கள் ஆற்றிய தொண்டினை, அவற்றை நாம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய தேவையை, இவை எல்லாவற்றையும் எண்ணி பார்க்கிற நிகழ்ச்சியாகவும் இருக்கும். நினைவு நாள் கூட்டம் என்பதுதான் ஒரு இயக்கத்திற்கு மிகவும் தேவையானது என்ற அடிப்படையில், இன்று நாம் பெரியார் நினைவு நாள் எடுக்கிறோம்.

நம் நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மிகப் பெரிய தலைவராக கருதப்பட்ட மனிதர்களுக்கும் மேலாக கருதப்பட்ட ‘மகாத்மா’க்களெல்லாம் வாழ்ந்திருக் கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நினைவு நாள் என்பது, அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்குவதை படம் பிடிக்க, செய்தியாளர்களை ஏற்பாடு செய்வது என்ற அளவோடு முடிந்து விடுகிறது. நினைவு நாள் கூட்டங்களில் அவருடைய கொள்கைகளைப் பற்றிப் பேசுவதில்லை. அவர் நம்மிடம் என்ன எதிர்பார்த்தார் என்பதையோ, நாம் அவருடைய வழியில் ஏன் செல்ல வேண்டும் என்ற தேவையை விளக்குவதற்கோ எந்த முயற்சியும் செய்வ தில்லை. தமிழ்நாட்டிலும் பெரியாருக்கு இணையாக (வயதில்) வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார். இந்த நாட்டின் பொறுப்பில் இருந்தார். குடிஅரசு தலைவருக்கு இணையான, கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு உள்துறை அமைச்சர், இலாகா இல்லாத அமைச்சர், முதலமைச்சர் என இருந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குள் இறந்து போன இராஜாஜி, அவர் உயிரோடு இருந்த காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினர், அவரை மூதறிஞர் என்றெல்லாம்கூட பாராட்டினர். இன்று அவரைப் பற்றிப் பேச ஆள் இல்லை. சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் இராஜாஜி சிலை இருக்கிறது. அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், நகராட்சி ஊழியர்கள் சலிப்போடு ஒரு மாலை அணி விக்கிறார்கள். வேறு யாரும் மாலைகூட அணிவிப்பதில்லை.

ஆனால், பெரியார் மறைந்து இவ்வளவு காலங்களுக்குப் பின்னால், முப்பத்தி ஏழு ஆண்டுகள் கடந்த பின்னாலும், அவருடைய கொள்கைகளைப் பேச, செயலாற்ற பல இயக்கங்கள், பெரியாரை இன்றும் பேசியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பல இயக்கங்கள் இருப்பதை பார்க்கிறோம். பெரியார் வாழ்ந்த காலத்தில், அவரை விமர்சித்தவர்கள் கூட, இன்று பாராட்டி போற்றுவதை பார்க்கிறோம். பொதுவுடமை இயக்கங்கள் எல்லாம் அவரைப் பற்றி பேசினர். முதலாளித்துவ சிந்தனையாளர் என்று சொன்னார்கள். “அடிக் கட்டுமானத்தில்” இல்லாத சமயத்தை, சாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று எகத்தாளம் செய்தவர்களெல்லாம், இன்று அவர் கொள்கைகளைத் தான் பேசிக் கொண்டிருக் கிறார்கள். அதை செயல் திட்டமாக வைத்துக் கொண் டிருக்கிறார்கள். உலகத்தில் தங்களைவிட அறிவாளி கள் யாரும் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கம் சி.பி.எம். கட்சி. அவர்கள் பெரி யாரைப் பற்றி செய்கிற விமர்சனங்கள் (பெரியாரை மட்டும் அல்லாமல், தமிழர், தமிழீழம் பற்றியும்) எதிராகத்தான் இருக்கும். இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று வைத்துக் கொண்டு, சாதி ஒழிப்பை ஒரு செயல் திட்டமாக வைத்திருக்கிறார்கள். அதை நாம் விமர்சிக்கவில்லை; வரவேற்கிறோம். பெரியார் இறுதியாக கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருந்தார். அனைத்து சாதி யினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவிலின் கருவறையில் தொண்டர்களோடு நுழையப் போவதாக அறிவித்தார். அப்போது வரவேற்றார்களோ இல்லையோ, இப்பொழுது வருகிற ஜனவரி 30-ம் நாளில், இந்திய பொதுவுடமைக் கட்சி அதே மன்னார்குடி ராஜ கோபால்சாமி கோவிலில் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் சொன்ன, சமய வழிபாட்டு இடங்களிலும் சமத்துவம், தமிழ் மொழிக்கு முன்னுரிமை வேண்டும் என்பதைப் பற்றியே பேசுகிறார்கள்.

பெரியார் 1925-க்கு முன்னால் பேசியவற்றை, சுமார் எண்பது, எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுது எல்லோரும் பேச தொடங்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல மருத்துவர் என்பவர் நோயை துல்லியமாக தெரிந்து கொள்வார். அதுவே பாதி மருத்துவம் முடிந்தது போல என்று சொல்வார்கள். அதேபோல பெரியார், இந்த சமுதாயத்தின் நோயை மிகத் துல்லியமாக அறிந்திருந்தார். அதற்கான மருந்தை மிகச் சரியாக மக்களிடத்தில் கொண்டு போய் கொடுத்தார் என்பதை பெரியார் தொண் டர்களைவிட அவர்கள் சரியாக புரிந்து கொண்டிருக் கிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், பழுத்த மரத்தின் மீது தான் கல்லடி படும் என்று சொல்வார்கள். இப்பொழுது அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு பழுத்த மரமாக கண்ணுக்கு தெரிவது பெரியார் தான். பெரிய தத்துவங்களை பேசுகிறவர்கள் எல்லாம், பெரியார் மீது தங்கள் விமர்சனங்களை பேச துடிக் கிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர் மீது குற்றச்சாட் டுக்களை வைத்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன் கூட, பெரியாரை தமிழ் தேசத்தின் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார். (அவரிடம் நாம் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை) பெரியார் குழப்பமாக பேசினார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியார், தமிழ் தேசியமே பேசவில்லை. தனி தமிழ்நாடு வேண்டும் என்று தான் பேசினார் என்பதை இவர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்றால், ஸ்டாலினும், லெனினும் ஒரு கொள்கையை உண்டாக்கி வைத்து விட்டார்கள் என்பதற்காக பெரியார் இங்கு தனி தமிழ்நாடு கேட்கவில்லை. ரஷ்யாவில் தைத்து விட்ட செருப்பை எடுத்துக் கொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் – அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம். பிரிந்து செல்லும் உரிமையோடு இணைந்து வாழ விரும்புகிற சிந்தனை அவருக்கு இருக்கவே இல்லை. நாம் இணைந்து வாழ முடியாது, பிரிந்தே சென்றாக வேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னவர். “அருகோ” எனும் தோழர் அரு.கோபாலன் சொல்லிக் கொண் டிருக்கிறார் “திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டு நாள் அன்று காலை வரை, தமிழர் கழகம் என்று பெயர் வைப்பதாக இருந்ததாம். நீங்கள் கன்னடராயிற்றே, தமிழர் கழகம் என பெயர் வைப்பதா என்று, சத்யமூர்த்தி அய்யர் பெரியாரிடம் தொலைபேசியில் கேட்டாராம். உடனே திராவிடர் கழகம் என பெரியார் மாற்றிக் கொண்டாராம்”. சத்யமூர்த்தி அய்யர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான், அந்த மாநாடே நடைபெற்றது. இறந்து போனவர் எப்படி தொலைபேசியில் பேச முடியும் என நமது பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதினார். பிறகு இராஜாஜி பேசியதாக மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் நுணுக்கமான கேள்விகளைப் பார்ப்பனர்கள்தான் கேட்க முடியும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலும். 1939 முதல் தமிழர், திராவிடர் என்பதை பற்றி பேசி விவாதிக்கப்பட்டு, பெரியார் தெளிவான விளக்கத்தையும் சொல்லியிருக்கிறார். தமிழர் கழகம் என்பது மொழி போராட் டத்திற்கு தான் பயன்படும். சமூக விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதி தான் மொழி போராட்டமே யொழிய, அதுவே முழு போராட்டமாகி விடாது. இந்தி எதிர்ப்பு என்பது மொழி போராட்டம் அல்ல, தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, சமயயியல் இவற்றில் ஆரியத்தை, மனுதர்மத்தை புகுத்த நினைக்கும் சூழ்ச்சிக்கு எதிரானது என்றே பெரியார் சொன்னார்.

பெரியார் மறைந்த அடுத்த மாதமே, 1974 ஜனவரியில் திராவிடர் கழகத்தால் ஒரு பிரச்சார பயணம் தொடங்கப் பட்டது. அப்பொழுது மணியம்மையார் தலைவராக இருந்த காலம். “பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடிப்போம்” என்று சூளுரையை பொதுக் கூட்டத்தில் நாங்களெல்லாம் உறுதிமொழியாக எடுத்தோம். உறுதிமொழியை எங்களுக்கு சொன்ன மணியம்மையார் மறைந்தார். அவருக்கு பின்னால் சொல்லிக் கொண்டிருந்தவர் சூளுரையை மறந்து விட்டார். இப்பொழுது நாங்கள் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் தான், அதை பின்பற்றச் சொல்ல முடியும். பெரியாரின் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த வீரமணி அவர்கள், நாங்கள் வெளியிட்ட பெரியாரின் நூல்களுக்கு, ‘குடிஅரசு’ தொகுப்பு வெளியீட்டுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார். பெரியார் நீண்டகாலமாக திராவிடர் என்ற சொல்லை எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாரென்பது அந்த குடிஅரசு பக்கங்களை புரட்டும்போது தெரிகிறது. திராவிடர் என்ற சொல்லை இன விடுதலைக்கு, சமூக விடுதலைக்கு அவர் பயன்படுத்தினார். நம்மை அடிமையாக்கிய ஆரியத்திற்கு எதிரான சொல்லாக திராவிடத்தை பார்த்தார். அரசியல் விடுதலைக்கு தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசினார். சமூக விடுதலை என்று வருகிறபோது திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத் தினார்.

1944 இல் தென்னிந்திய நல உரிமை சங்கம், திராவிடர் கழகம் என மாற்றப்படுவதற்கு முன்பே, சுயமரியாதை இயக்க தலைமையோடு, நீதிகட்சி தலைமையையும் பெரியார் ஏற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே, பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு விட்டன. 1942 ஆம் ஆண்டிலேயே திருச்சியில் உள்ள பொன்மலையில் திராவிடர் கழக ஆண்டு விழா கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார். 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் திராவிடர் கழகம் என்ற அமைப்பை துவங்கி வைக்கிறார். 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் திராவிடர் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் பேசுகிறார். திராவிடர் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இயங்குகிறது என்றாலும், அதிகார பூர்வமாக பெயர் மாற்ற எப்பொழுது முடிவு செய்தார்கள் என்றால், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியிலுள்ள தேவாங்கர் பள்ளிக்கூடத்தில் நீதிக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் பெரியார் தலைமையில் நடை பெற்றிருக்கிறது. 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாத குடிஅரசில் (26.11.1943) அக்கூட்டத்தின் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம் என்பதை, தமிழில் திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் சௌத் இந்தியன் திரவிடியன் பெடரேசன் (South Indian Dravidian Federation) என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும், கடந்த திருவாரூர் மாநாட்டில் திட்டமிட்ட படி அடுத்த ஆண்டு சேலத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் இதை அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று தமிழ் தேசியவாதிகள், காலையில் முடிவு செய்து, மாலையில் பெரியார் மாற்றிக் கொண்டதாக, பொய்ப் பிரசச்hரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பெரியார் ஒரு பழுத்த மரம் என்பதுதான்.

பெரியார், திராவிட நாடு என்று சென்னை மாகாணத்தைதான் சொன்னார். நான்கு நாடுகளின் கூட்டு அரசே, திராவிட நாடு என்று அண்ணா தான் சொன்னார். அண்ணாகூட பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நாடுகளின் கூட்டு அரசாகத் தான் திராவிட நாட்டை கூறினார். மொழி வழி பிரிந்தும், இன வழி கூடியும் உள்ள நாடாகத்தான் திராவிட நாட்டை கூறினார். முப்பது மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் உரிமையோடு நான்கு நாடுகள் கொண்ட அண்ணாவின் திராவிட நாட்டை ஏன் விமர்சிக்கிறார்களோ, நமக்கு புரியவில்லை.

அப்படித்தான் எல்லைப் போராட்டத்தில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்றும், இப்பொழுது ஒரு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 1953 இல் ஆந்திரா பிரிந்தபோதுதான் இந்த சிக்கல் வந்தது. அப்போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று, திருத்தணியில் நடந்த ஒரு எல்லைப் போராட்டம், மற்றொன்று சென்னை நகரை ஆந்திராவுக்குக் கேட்டார்கள் என்பது. இதில் பெரியார் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, வேலூரில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசுகிறார், எல்லைப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி வருகிறது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார். “முதல் கூட்டத்தில் ம.பொ.சி. உட்பட நாங்கள் எல்லோரும் கலந்து கொண்டோம். எல்லைப்போராட்டத்தைப் பற்றி பேசினோம். அப்போது நான் ஐந்து திட்டங்களை முன் வைத்தேன். எல்லைப் போராட்டத்தில் கலந்து கொள்ள தயார். இந்தப் போராட்டத்தோடு இந்தி எதிர்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். படை, போக்குவரத்து, வெளியுறவு துறை தவிர அனைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குதான் இருக்க வேண்டும். சென்னை ராஜ்யம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தட்சிண பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்க நினைக்கிறது அதை எதிர்க்க வேண்டும்” – என்று.

இந்த ஐந்து கோரிக்கைகளில், தமிழ் தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால், தமிழ் தேசத்தின் தந்தையாக கருதப்படுகிற ம.பொ.சி. சொன்னார் – அவர், “நான் இந்தியன் என்பதால் இந்தி மொழியை ஏற்றுக் கொள்கிறேன். நான் இந்து என்பதால் என் சமய சடங்குகளில், சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என்றவர். இதை இரண்டையும் எதிர்த்த பெரியார் வைத்த அந்த கோரிக்கைகளுக்கு, “கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை, எனவே வேண்டாம்” என ம.பொ.சி. சொன்னார். ம.பொ.சி. உயிரோடு இருந்த காலத்தில் பெரியார் இதை பதிவு செய்துள்ளார். தாராளமாக நீங்கள் போராடுங்கள், நாங்கள் உங்களோடு இணைந்து நிற்க முடியாது என்று பெரியார் தெரிவித்து விட்டார்.

அதன் பின்னால் சென்னையைப் பற்றி விவாதம் வந்தபோது தான், நான் விஸ்தீரணத்திற்கு போராடுபவன் அல்ல. விடுதலைக்கு போராடுபவன் என்று அழுத்தமாக பெரியார் சொன்னார். இருந்தாலும் இதில் ஏன் சம்பந்தப் பட்டிருக்கிறேன் என்றால், மொழிவாரி என்று பேசுகிறவர்கள், மொழிவாரியாக பிரிந்துவிட்டு, மொழி அல்லாத நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த பார்க்கிறார்களே என்ற கருத்துதானே அல்லாமல், மற்றபடி சென்னை நகரம் தமிழர்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது. செய்து வருகிறது. அல்லது செய்ய முன்வரும் என்பதற்காக அல்ல என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டையும் சொன்ன பெரியாரின் கருத்துகளை, எங்கள் பழைய தலைவர் (வீரமணி) மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தால், இந்த தமிழ் தேசியவாதிகள் சொல்லும் புரட்டுகளை மக்கள் புரிந்திருப்பார்கள். பெரியாரின் கொள்கைகள் திடலுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறது. வெளியே கொண்டு வருபவர்களையும், தடுக்க பார்க்கிறார்கள். குடிஅரசு வழக்கில் பார்த்திருப்பீர்கள். உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கே தகுதி அற்றது என்று தள்ளுபடி செய்த செய்தி, வீரமணி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்தது. கோரிக்கைளை மாற்றிக் கொள்கிறோம் என்ற மனுவை, இப்பொழுது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பெரியார் நினைவு நாள் பரிசாக அவருக்கு கொடுத்திருக் கிறது.

பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லுகிற, நடைமுறைபடுத்துகிற, பெரியாரின் வழியில் தொடர்ந்து போராடுகிற இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள சக்தி குறைவாக இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தி, செயல்படுத்த வேண்டும் என்று கருதுகிறோம். அதன் வெளிப்பாடாகத்தான், பல போராட்டங்களை நடத்துகிறோம். அண்மையில் ஆயுத பூஜை அன்று கூட ஒரு போராட்டம் நடந்தது. அரசியல் சட்டம் எழுதப்பட்ட போதே, இது மதசார்பற்ற நாடு என்று எழுதி விட்டார்கள். அரசு அலுவலகங்களை கோவிலாக்காதே, கடவுள் படங்கள் இருந்தால் அகற்றுங்கள் என அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆணை பிறப்பித்தார். அதன் பின்னர், அடிக்கடி கலவரம் ஏற்பட காரணம் என்ன என்பதை கண்டறிய, 1994 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி காலத்தில், உள்துறை மூலமாக ஒரு குழுஅமைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் மதம் கலப்பதுதான் இதற்கு காரணம் என அந்த குழு அறிவுறுத்தியது. அரசு அலுவல கங்களில் கடவுள் படங்களை நீக்கவும் மத வழிபாடுகள் கூடாது என்றும், மத சுலோகங்கள் எழுதப்படக் கூடாது என்றும், மத வழிபாட்டிடங்களை கட்டக் கூடாது என்றும் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது. தலைமை செயலாளர் இப்போது இருப்பதை போலவே அப்போதும் ஒரு பார்ப்பனர்தான் (ஹரி பாஸ்கர்). அவர் அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு எ.டி.ஜி.பி.யாக இருந்த லத்திகாசரண் (இப்போது டி.ஜி.பி.), காவல் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பாக காவலர் குடியிருப்புகளில்கூட மதவழிபாடு நடத்தக் கூடாது என்று உள்ளது. இவ்வளவு இருந்தும் தொடர்ந்து காவல் நிலையங்களில் ஆயுதபூஜை நடைபெற்று வந்தது. இவ்வாறு இந்த ஆண்டும் நடக்குமேயானால், அதை தடுக்கும் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம் என, பெ.தி.க. தலைமை செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத் தின்படி, பல இடங்களில் எங்கள் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையிலும், மேட்டூரிலும் தடுத்து, வழக்குகளை சந்தித்தார்கள். பெரியார் வன்முறையை விரும்ப மாட்டார் என்று அப்போது பலர் சொன்னார்கள்.

ஆனால், பாரதிதாசன் பாடல்களை பாட நூல்களில் சேர்க்கப்பட வேண்டும் என்ற செய்திகளைக் குறிப்பிட்டு விட்டு, “எனக்கு பின்னால் இதை சொல்லவும் ஆள் இல்லை, தி.மு.க.வை தவிர இதை செய்யவும் கட்சியில்லை. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றாவிட்டால், நானும் எனது தோழர்களும் உள்ளே நுழைந்து அகற்றுவோம்” என, 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெரியார் விடுதலை நாளேட்டில் ஒரு அறிக்கை விடுகிறார். அதை இன்று நாங்கள் செய்திருக்கிறோம்.பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடித்திருக்கிறோம். இது தானே நாம் பெரியார் மறைந்த வுடன் எடுத்த உறுதிமொழி.

நாம் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பதில் பெரியாரின் நிலைபாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் பெரியார் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று பார்ப்பனர்கள் சொல்லி கொண்டிருந் தார்கள். காங்கிரஸ் கட்சியை எதிர்த்த வண்ணம் இருந்த பெரியார், 1954 இல் காமராசர் வந்தவுடன் ஆதரித்தார். அடுத்து தி.மு.க.வை ஆதரித்தார் அவ்வளவுதான்.

காமராசர் ஆட்சியின்போதுகூட காங்கிரசை ஆதரிக் கிறேன் என்பது தவறு. காமராசரைத் தான் ஆதரிக்கிறேன் என்று பலமுறை தெளிவாக கூறியிருக்கிறார். காமராசருக்கு பின், ஆட்சிக்கு வந்த பக்தவத்சலத்தை எதிர்த்து, 1965இல் பக்தவச்சலம் ஆட்சி கண்டன கூட்டம் நடத்தியவர் பெரியார். எப்பொழுதும் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று சொல்லப்பட்டபோது, “எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்கான காரணம்” என்ற தலைப்பில் 19.9.1968 இல் ஒரு அறிக்கை எழுதினார். எனது ஆசை யெல்லாம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாக (நாத்திகர்களாக) ஆக வேண்டும். சாதி ஒழிய வேண்டும். உலகில் பார்ப் பனர்கள் இருக்கக் கூடாது. பல கட்சிகளை ஆதரித்ததும் இதற்காகத்தான். இனி எந்த கட்சியை ஆதரிப்பேனோ, எதிர்ப்பேனோ, எனக்கே தெரியாது” என்று எழுதி விட்டு, கீழே குறிப்பு என்று ஒன்று எழுதுகிறார். அதில், “இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரியானால், என் நிலை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது” என்று எழுதியுள்ளார். அண்ணா ஆட்சியில் இருக்கும்போதே இதை எழுதி யுள்ளார். கல்வித் துறை உட்பட எந்த துறையில் பார்ப்பனர்கள் இருந்தாலும், பெரியார் உடனடியாக “விடுதலை” நாளேட்டில் பட்டியல் போட்டுவிடுவார். ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்வார்கள். எனவே தவறு நடந்தால் பட்டியல் போட்டு சுட்டிக்காட்ட ஒருவர் வேண்டும்.

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்…. 

என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு ஆட்சிக்கு ஜால்ரா அடிப்பதல்ல பெரியார் தொண் டனின் வேலை. 2001 முதல், இந்த நாட்டில் தொடர்ந்து யார் தலைமை செயலாளராக இருக்கிறார்கள்? பாப்பாத்தி ஆட்சியைகூட விட்டுவிடுங்கள். ‘திராவிடர்கள்’ ஆட்சி வந்த பின்னால், திரிபாதி, ஸ்ரீபதி, மாலதி உட்பட எல்லோரும் பார்ப்பனர்கள். இந்த நாட்டின் தலைமை செயலாளராக தொடர்ந்து பார்ப்பனர்களே இருந்தால் நமக்கு என்ன நடக்கும்? இதை சுட்டிகாட்ட வேண்டாமா? சுட்டிக்காட்டாமல் இருப்பது தவறு என்றுதான், எங்கள் பங்காளி இயக்கத் திற்கு சொல்கிறோம். கல்லூரி முதல்வராக இருந்தபோது ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சரிசெய்ய மாணவிகளை அனுப்பி வைத்ததாக இரண்டு முறை குற்றம்சாட்டப்பட்ட மீனா என்ற ஒரு பார்ப்பன அம்மையார், திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்திற்கு இப்போது துணைவேந்தராக வந்துள்ளார். உடனே இவ்வளவு காலம் இயங்கி வந்த ‘பெரியார் உயராய்வு மய்யம், பாரதிதாசன் உயராய்வு மய்யம்’ உடனடி யாக மூடப்பட்டுவிட்டது. நாம் யாருமே போராடத் தான் இல்லை.

பெரியாரின் முதல் கொள்கையாக இருந்தது சாதி ஒழிப்பு. காங்கிரஸ்காரராக இருந்தபோதே, கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, அது மலையாள நாடாக இருந்தபோதும், அங்கு சென்று போராடினார். அப்போது, தென்னாட்டில் நடந்த இரண்டு சம்பவங்கள் என் மனதை உலுக்கியது என்றும், அதில் ஒன்று வைக்கத்தில் இராமசாமி நாய்க்கர் நடத்திய போராட்டம் என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் தனது ஏட்டில் தலையங்கம் எழுதினார்.

1922 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர் களையும், நாடார்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று, திருப்பூர் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னாளில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தி யதாக சொல்லப்பட்ட வைத்தியநாத அய்யர் இராமா யணத்தையும் மனுதர்மத்தையும் எடுத்துக் காட்டி, அப்போது கோயில் நுழைவை எதிர்த்துப் பேசினார். இராமாயணமும் மனுதர்மமும் என் மக்களை கோவிலில் நுழைய தடுக்குமே யானால், அதை எரிக்க வேண்டும் எனப் பேசினார் பெரியார். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடன், சாதி ஒழிப்பு வேலைகளைத் தான் செய்தது. 1926 முதல் பெண்ணுரிமையைப் பற்றிப் பேசினார். 1928 இல் இருந்து பொதுவுடமையைப் பற்றிப் பேசினார். 1938 இல் தனி தமிழ்நாட்டைப் பற்றி பேச தொடங்கினார். பெரியார் தொண்டர்கள் என்பவர்கள் இந்த நான்கு கொள்கைகளை முன்னெடுத்து செல்வோர் தான்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்ற பிரச்சினையைப் பற்றி உங்களுக்கு தெரியும். 1971 இல் கலைஞர் சட்டம் போட்டார். 234 சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது. ஒட்டு மொத்த தமிழகமும் ஏற்றுக் கொண்டதை, பதினொரு பார்ப்பனர்கள், பதிமூன்று வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார்கள். அப்போது தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும், அதே நேரத்தில் பார்ப்பனர் அல்லாதாரை நியமித்தால் என்னிடம் வா என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ‘ஆபரேசன் வெற்றி, நோயாளி மரணம்’ என பெரியார் சொன்னார். பி.வி.கானே என்ற ஒருவன் ஒரே ஒரு புத்தகம் எழுதினான் (சட்டபுத்தகம் அல்ல). இந்து சட்டங்கள் பற்றிய தொகுப்பு எழுதினான். அதை வைத்து தீர்ப்பு சொன்னார்கள். பெரியார் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். ஒரு குழு அமைத்தார். ஆய்வு செய்தார்கள். கலைஞர் ஆட்சிக்கு வந்து அர்ச்சகர் பயிற்சி கொடுத்தார். எல்லாம் முடிந்தது. மீண்டும் பார்ப்பனர்கள் தடை ஆணை வாங்கிவிட்டார்கள். நீதிமன்றம் சொல்லிவிட்டது. நான் என்ன செய்வது என கலைஞர் இப்போது சொல்லிவிட்டார்.

ஆனால், சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ உறுப்பினராக இல்லாத பெரியார், தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கொள்கையோடு வைத்திருந்த இயக்கத் தோழர்களை கொண்டு பெரியார் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வந்தார். எனவே நாம் மக்களை திரட்டி போராடியிருக்க வேண்டும். கேரளாவில் ராகேஷ் என்ற தாழ்த்தப்பட்டவரை அர்ச்சகராக்கியதற்கு, ஆதித்யன் என்ற பார்ப்பான் வழக்கு தொடுத்தான். மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும், மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் பராசரன் வாதாடினார். இந்தியாவில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பின்னால், சமவாய்ப்புகளை மறுக்கும் சாஸ்திரம் உட்பட எதுவும் செல்லாது என தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பைச் சொன்னவர்கள், தமிழ்நாட்டை சார்ந்த துரைசாமி ராஜூ, கர்நாடகத்தில் பிறந்திருந் தாலும், தமிழ்நாட்டில் படித்து, பகுத்தறிவு பெற்ற ராஜேந்திரபாபு நீதிபதிகளாக இருந்தார்கள். தென்னாட்டைச் சார்ந்தவர்கள் சட்டம் தான் பெரிது என்றார்கள். ஆனால், நமக்கு எதிராக தீர்ப்பு சொன்ன வடநாட்டு பார்ப்பனர்கள், சாஸ்திரம் தான் பெரிது என்கிறார்கள்.

உங்களுக்கு சாஸ்திரம் பெரிது என்றால், எங்களுக்கு தமிழர்களுக்கு, குறைந்தபட்சம் இறை நம்பிக்கையுள்ள தமிழர்களுக்கு, திருமூலம் பெரிது. திருமூலர் சொல்கிறார்,

“பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சிக்கில்

போர்கொண்ட மன்னர்க்கு பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”

பார்ப்பான் பூஜை செய்தால், நாட்டில் பஞ்சம், ஆட்சி செய்கிறவர்களுக்கு நோய் வரும் என்கிறார் திருமூலர்.

அதேபோல தொல்காப்பியம், பார்ப்பனர்களுக்கு என்ன வேலை என்பதை சொல்கிறது.

காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும்,

கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,

ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,

செலவுறு கிளவியும் செலவழுங்கிளவியும்

அன்னவை பிறவும் பார்பார்க்கு உரிய.


என்ன பொருள்? ஒருவரின் காம உணர்வை அவன் விரும்பும் பெண்ணிடம் கூறுவது, பிரிந்து சென்ற தலைவன் வந்து கொண்டிருக்கிற தேர் வரும் நிலைகளைச் சொல்வது (அதோ உன் காதலர் வந்து விட்டார், கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது பார் என்பது போல), மாட்டை வைத்து நல்லது கெட்டது கூறுவது (தலையாட்டி விட்டது, சாணம் போட்டுவிட்டது, சிறுநீர் கழிக்கிறது – இது நல்லது கெட்டது என்று கூறுவது);, செலவுறு கிளவி – இப்போது செல்ல லாம் – அப்பா வெளியூர் போயிருக்கிறார். அம்மா கோவிலுக்கு போயிருக்கிறார். அவள் தனி யாகத்தான் இருக்கிறாள் என்பது போல – செலவழுங்கிளவி – செல்லக் கூடாது என்ற செய்தி கூறுதல் (அவன் அண்ணன் கல்லூரியில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறான். இன்று அந்த பக்கம் போய்விடாதே – உதைத்தான் விழும் என்பது போல…) இவைகள் தானய்யா தொல்காப்பியர் பார்ப்பனருக்குரிய வேலைகள் எனக் கூறுகிறார். பூஜை செய்வதை அல்ல….

அவ்வையார் சொல்கிறார்

“நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்,

கோலெனிலோ பாங்கே குடிசாயும் – நாலாவான்

மந்திரியுமாவான், வழிநடைக்குத் துணையும் ஆவான்,

அந்த அரசே அரசு”…


என்று! பார்ப்பான் ஆட்சி செய்தால் காட்டிக் கொடுத்து நாடு கெட்டுவிடும். சத்ரியன் ஆட்சி செய்தால், சண்டையாகவே இருக்கும். வைசியன் ஆட்சி செய்தால் வரி போட்டே ஒழித்து விடுவான். சூத்திரன் ஆள்வதுதான் நல்ல அரசு.

தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் இவைகளெல்லாம்தானே சட்டமாக இருந்திருக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு எந்த தடையும் வந்திருக்காதே!

பெரியார், காரைக்குடி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசுகிறபோது சொல் கிறார், “பறையன், சக்கலியன் என்பதைவிட சூத்திரன் (வேசிமகன்) என்பவன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது கொள்கை. குடிப்பதற்கு தண்ணீர் தராமல், அவன் குளிக்கவில்லை என்று சொல்வது உன் தவறா? அவன் தவறா? என்று கேட்டார். இப்படி வாழ்கிறபோது இருக்கிற சாதி கொடுமை, இறந்த பின்னால் சுடுகாட்டிலும் இருக்கிறது. இதை ஆதிக்க சாதிகள் மட்டும் அல்ல, அரசும் செய்கிறது.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்படும் சுடுகாட்டில், தாழ்த்தப்பட்டவர் சுடுகாடு, இதரர் சுடுகாடு என பிரித்து வைத்திருக்கிறார்கள். தீண்டாமை வன்கொடுமை சட்டம் யார் மீது பாய வேண்டும்? மாவட்ட ஆட்சி தலைவர், திட்ட அலுவலர், வட்டார அதிகாரிகள் மீதல்லவா பாய வேண்டும்? தீண்டாமையை ஒழிக்கிறேன் என போலித்தனமாக பேசிக் கொண்டிருந்த, காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள், போராட்டத்தை எடுத்தோம். அப்போது, குறைந்தபட்சம் அரசு திட்டங்களில் கட்டப்படும், இரட்டை சுடுகாடுகளையாவது அகற்றுங்கள் என்று பெரியாரின் சிந்தனைகளை ஆட்சியில் நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொன்ன அண்ணா அவர்களின் நினைவுநாள் வரை அரசுக்கு ஒரு கால அவகாசத்தை கொடுத்தோம். பெரியார் நினைவு நாளில், பெரியாரின் விரல் பிடித்து அரசியல் நடை பயின்ற, கலைஞரிடம் நாம் வைக்கிற வேண்டுகோள், உங்களை ஆளாக்கி, அமைச்சரவையில் உட்கார வைத்த அண்ணா நினைவு நாளுக்குள் குறைந்தபட்சம் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட சுடுகாடுகளில், இடுகாடுகளில் இருக்கும், இடைச் சுவரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், சட்டவிரோதமாக இருக

Monday, October 18, 2021

ஆந்திராவில் இராவண விழா: தலைவர் தோழர்கொளத்தூர் மணி ஆற்றிய உரை,

 ஆந்திராவில் இராவண விழா: தலைவர் தோழர்கொளத்தூர் மணி ஆற்றிய உரை,

“இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவண னின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன.

முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை புரிந்து ஏற்றுக் கொள்ளும் நாம் அதற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை என்ன?

இரண்டாவதாக, இந்து மதத்தில் உள்ள நூற்றுக் கணக்கான கடவுள்களில் இராமனும் ஒரு கடவுள். அவ்வளவுதான். அப்படியிருக்க இராமனை மட்டும் நாம் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கவும் விமர்ச்சிக்கவும் தேவை என்ன?

இறுதியாக, இராமாயணம் ஒரு கதை என்ற அளவில், அக்கதையின் ஒரு பாத்திரமாக உள்ள இரா வணனை நாம் கொண்டாட வேண்டிய தேவை என்ன?

இது குறித்து பெரியாரின் சிந்தனைகளை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் தமிழகத்தில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இராவணனைத் தங்கள் இனத்தைச் சேர்ந்தவனாக கொண்டாடும் மரபு உள்ளது. இவற்றிற்கு காரணமாக இருந்தது பெரியாரும், பெரியார் இயக்கமுமே.

திராவிட மக்களின் மாண்பையும் பகுத்தறிவையும் முடமாக்கி அவர்களை மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்க ஆரியர்கள் பயன்படுத்திய கருவிகளில் முதன்மை யான பிரச்சாரக் கதைகளாக இராமாயணமும் மகாபாரதமும் இருப்பதாக பெரியார் கருதினார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை அவர் குறிப்பாக விளக்குகிறார்.

இராமாயணம் மனு தர்மத்தை வலியுறுத்துகிறது. நம் மக்கள் அதனை பின்பற்றத்தகுந்த அளவில் அதில் எவ்வித தெய்வீகத் தன்மையோ, நீதியோ, கற்க வேண்டிய பாடமோ இல்லை. உண்மையில் இராமாயணம் என்பது ஆரிய பார்ப்பனர்கள் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க மட்டுமே உருவாக்கப்பட்டக் கதையாகும். அக்கதை நெடுகிலும் திராவிடர்களுக்கு எதிரான ஆத்திரமும் பழி உணர்ச்சியும் அழுத்தமாக உள்ளது. பல முக்கிய வரலாற்று உண்மைகளை இழிவுப்படுத்தி, ஆரிய – திராவிடப் போரை தங்களது சொந்த கற்பனைகளுடன் அது விளக்குகிறது. திராவிடர்கள் இராட்சதர்கள், அரக்கர்கள், அசுரர்கள், குரங்குகள் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். திராவிட மக்கள், தாங்கள் எவ்வாறு இழிவுப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் உணருமாறு செய்ய வேண்டியது மிக முக்கியமானது என்று பெரியார் கருதினார்.

மேலும் இராமன் ஒரு சூழ்ச்சி மிகுந்த நேர்மையற்ற ஒருவனாக, நம் சொந்த மக்களை அழிக்க நம்மவர்களான குகன், சுக்ரீவன், அனுமான், விபீடணன் போன்றவர்களை பயன்படுத்தியவனாக, அதாவது நம் கையைக் கொண்டு நம் கண்ணைக் குத்துவதில் தேர்ந்தவனாகவே பெரியார் பார்க்கிறார். இந்தக் காரணங்களுக்காகவே இவற்றிற்கு எதிரான ஒரு கலகமாக பெரியார் இராவணனை முன்னிறுத்தத் தொடங்கினார்.

பெரியார் இராமனின் சூழ்ச்சி பாங்கையும் இராவணனின் உண்மையான வீரத்தையும் விளக்குகிறார். திராவிடர்களின் ஆயுதம் வேல். ஆரியர்களின் ஆயுதம் வில்லும் அம்பும். அதனால்தான் ஆரியர்கள் வேல், வேலாயுதம் எனும் பெயர்களை வைப்பதில்லை. தண்டபாணி, கோதண்டராமன் போன்ற பெயர்களை தான் வைப்பார்கள். வில் அம்பு என்பது எதிரியை மறைந்து இருந்து கொல்லும் வல்லமைக் கொண்டது. அந்த வகையில்தான் இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான். இராமனுக்கும் வாலிக்கும் எந்த பகையும் இல்லை. ஆனால் நமது ஆயுதமான வேல் நேருக்கு நேர் நின்று எதிரிக்கு அருகில் சென்று அவனைக் கொல்லக் கூடியது. இதுதான் திராவிட போர் முறைக்கும் ஆரிய போர் முறைக்கும் உள்ள வேறுபாடு.

அதே போல, தமிழர் போர் மரபில் ஒரு வழக்கம் உண்டு. எடுத்த உடனேயே நேரடியாக போரை தொடுத்துவிட மாட்டார்கள். முதலில் சென்று எதிரி நாட்டில் உள்ள ஆடு மாடுகளை கவர்ந்து வருவார்கள். அது ஒரு எச்சரிக்கை. இதற்கு ஆநிரை கவர்தல் என்று பெயர். இந்த வகையில்தான் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். தனது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாடகையைக் கொன்று, தனது காதலை தெரிவித்த சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து அவமானப் படுத்திய இராமனுக்குப் பாடம் புகட்ட இராவணன் விரும்பினான். இராமன் ஒரு மன்னனின் மகனாக இருந்த போதும் அச்சமயத்தில் அவன் ஏதுவுமற்றவனாகவே இருந்தான். அதனால் அவனது மனைவியான சீதையை இராவணன் தூக்கிச் சென்றான். சென்றாலும், அவளை அசோக வனத்தில் மிகுந்த பாதுகாப்பாக, பெண் காவலர்கள் துணையுடன் வைத்திருந்தான். அதிலும், தனது அரச குடும்பத்திலிருந்து ஒருத்தியை, தனது சொந்த தம்பி மகளான திரிசடையை அவளுக்கு ஏவல் புரிய அனுப்பி வைத்தான். ஆக ஆநிரை கவர்தல் என்ற முறையிலேயே சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்

அது போல போர்க்களத்தில் இராவணன் மரணத் தருவாயில் இருக்கும் போது இராமன், இராவணன் அருகில் சென்று ஆட்சித் திறன் நுணுக்கங்களை கேட்டறியுமாறு இலட்சுமணனிடம் கூறினான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. இதைதான் பெரியார் சொல்கிறார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் திராவிடர்களின் மகிமையை அவர் களால் முழுமையாக மறைக்க முடியவில்லை என்கிறார்.

காங்கிரசில் இருந்த போதே பெரியார் தனது இராமாயண எதிர்ப்பைத் தொடங்கிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது 1925-ஆம் ஆண்டில்தான். ஆனால் அவர் காங்கிரசில் இருந்த போதே, 1922-ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் நுழைவை வலியுறுத்திய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனை கடுமையாக எதிர்த்தும் மறுத்தும் வைத்தியநாத அய்யர் என்ற ஒருவர் பேசிய போது, இராமாயணம், மனு சாஸ்திரம் போன்ற புனித நூல்கள் கூட இவற்றைத் தவறு என்றுக் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். உடனே பெரியார், “நான் மனித உரிமைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். அப்படியான மனித உரிமைகளை இந்த நூல்கள் மறுக்குமாயின், அந்த இராமாயணத்தையும் மனு சாஸ்திரத்தையும் எரித்து விட வேண்டியதுதான்” என்று மிக எளிமையாக, ஆனால் வலுவாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.

1926-ஆம் ஆண்டு தனது வார இதழான ’குடி அரசில்’ இராமாயண ஆராய்ச்சி என்ற தலைப்பில் பேராசிரியர் இ.மு.சுப்ரமணியப் பிள்ளை என்பவர் எழுதிய கட்டுரைத் தொடரை வெளியிடுகிறார்.

தொடர்ந்து இராமாயணத்தை விமர்சித்து பல வாதங்களை பெரியார் முன் வைக்கிறார். ஆரியர்களின் நாயகர்களான இராமனும் கிருஷ்ணனும் நமது நாயகர்களாக, ஆரியர்களால் உள்வாங்கப்பட்ட மன்னர்களாக இருக்கலாம் என்கிறார் பெரியார். வர்ணாசிரமம் என்பது மனிதர்களை வர்ணம் எனப்படும் நிறத்தின் அடிப்படையில் படிநிலைப்படுத்துவது. அப்படி பார்த்தால் இராமனும் கிருஷ்ணனும் ஆரியர்களின் நிறத்தில் இல்லை. அவர்கள் கருப்பர்கள். ஆசிரமம் என்பது வாழ்வின் நான்கு நிலைகளான பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம். ஆனால் இராமனும் கிருஷ்ணனும் கிரகஸ்த நிலையிலேயே மரணம் அடைந்து விடுகின்றனர். அவர்கள் வனப்பிரஸ்தத்திற்கும் செல்லவில்லை. சன்னியாசியாகவும் ஆகவில்லை. எனவே ஏன் அவர்கள் ஆரியர்களால் வெல்லப்பட முடியாத நமது மன்னர்களாக இருக்கக் கூடாது என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.

இட ஒதுக்கீட்டால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆன நமது அதிகாரிகளைப் பார்ப்பனப் பெண்கள் மணந்துகொள்வதின் வழியே அவர்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடியவர்களாய் மாற்றப்படுவதில்லையா?

ஜவகர்லால் நேரு உட்பட பலரும் மகாபாரதம் என்பது ஆரியர்களுக்குள் நடந்த போர் என்றும் இராமாயணம் என்பது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பெரியார் இராமாயணத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததற்கு காரணம் உள்ளது. தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் நாயகராக இன்றளவிலும் போற்றப்படும் இராஜகோபாலாச்சாரியார், “பார்ப்பனர்களுக்கு சிக்கல் வந்தால் இராமாயணத்தை புரட்டிப் பாருங்கள், வழி கிடைக்கும்” என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு பார்ப்பனர்களுக்கான நூலாக அது இருப்பதால்தான் நான் அதனை ஆராய முற்படுகிறேன் என்கிறார் பெரியார். தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள பார்ப்பனர்கள் இராமாயணத்தைப் பயன்படுத்தினால் அவர்களின் மேலாதிக்கத்தை தகர்க்க நான் இராமாயணத்தை விமர்சிக்கிறேன் என்றார் பெரியார்.

அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு இராவணன், இரணியன், மேகநாதன் என்று ஆரியர்களால் அரக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டத் தொடங்குகிறார். தொடர்ந்து ஆரிய எதிர்ப்பின் அடையாளமாக புத்தரின் பெயர்களான கவுதமன், ராகுலன், சித்தார்த்தன் போன்ற பெயர்களையும் சூட்டுகிறார். இன்று வரை அந்த மரபு  தமிழ்நாட்டில் தொடர்கிறது.

நான் முன்பே குறிப்பிட்டதைப் போல இராமாயணம் குறித்து பெரியார் தொடர்ந்து எழுதுகிறார். இராமாயண குறிப்புகள், வால்மீகி இராமாயண சம்பாஷணைகள் என்று ஆய்வு நூல்கள் வெளிவருகின்றன.

இந்தப் பிரச்சாரங்களினால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பேரா. பூர்ணலிங்கம் பிள்ளை என்பவர் 1928-ஆம் ஆண்டு ‘சுயஎயயே – வாந பசநயவ’ என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிடுகிறார். பின்னர் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

இதற்கிடையே பல முறை இராமாயணம் எரிக்கப்பட வேண்டிய ஒரு நூல் என்பதை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த குரல் வலுக்க வலுக்க, இதற்கு எதிர்ப்பும் எழுகிறது. 1943-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் இரா. பி. சேதுப் பிள்ளை போன்ற புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களுக்கும் இடையே “எரிக்கப்பட வேண்டியதா இராமாயணம்” என்ற தலைப்பில் பல விவாதங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் வாதிட்டவர் பின்னர் தமிழக முதல்வரான சி. என். அண்ணதுரை ( அண்ணா ) யாவார்.

1944-ஆம் ஆண்டு “இராமாயண பாத்திரங்கள்” என்ற தலைப்பில் இராமனின் உண்மை முகத்தைத் தோலுரித்தும், இராவணனின் மேன்மையை விளக்கியும் நூல் ஒன்றினை பெரியார் எழுதி வெளியிடுகிறார். இதில் சிறப்பு என்னவெனில், இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டவை அனைத்தும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை மட்டுமே. ஆரியர்கள் போற்றும் நூலிலிருந்தே அவர்களுக்கு எதிரான வாதங்களை முன் வைத்தார்.

1944-ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிறப்படுத்தப்பட் டோர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் இராமாயணத்தை விமர்சித்து நீண்ட உரை ஆற்றுகிறார். அவரது உரை முடிந்த உடன் கூடியிருந்த மக்கள், “இராவணாக்கி ஜே“ என்று முழக்கமிடுகின்றனர்.

இந்தத் தொடர் பிரச்சாரங்களினால், தமிழ் நாட்டில் சாதாரண மக்களிடம் கூட இராவணன் என்ற பெயருக்கான பிம்பம் முற்றிலுமாக மாறுகிறது. சுய மரியாதை இயக்ககத்தின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இராவணனின் மேன்மையைப் போற்றி பா ஒன்றை படைக்கிறார். அதனால் ஈர்க்கப்பட்ட புலவர் குழந்தை 1946-ஆம் ஆண்டு இராவணனை காவியத் தலைவனைக் கொண்டு “இராவண காவியம்” என்ற ஓர் காப்பியத்தைப் படைக்கிறார். 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழில் வெளியான காப்பிய வகை நூல் இது மட்டுமே.

இந்த நூல் 1948-ஆம் ஆண்டு தடை செய்யப்படுகிறது. அதே ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் 19-ஆவது மாநில மாநாட்டில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்குவதான அறிவிப்பு ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது.

1954-ஆம் ஆண்டு இராமனை கேலி செய்து “இராமாயணம்” என்ற தலைப்பிலான நாடகம் ஒன்றை எம். ஆர். இராதா மேடையேற்றுகிறார். இந்த நாடகத்தில் வால்மீகி இராமாயணத்தின் வரிகளை நேரடியாக மேடையிலேயே வாசித்து, அந்த வரிகளுக்கு ஏற்ப இராமன் ஒரு கையில் சோமபானமும் மறு கையில் மாமிசத்தையும் உண்டவாறு மேடையில் நுழைவார். பின்னர், பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு விருந்துண்ண சென்ற இராமனுக்கு பரத்வாஜர் கொழுத்த இளம் பசுங்கன்றின் மாமிசத்தை சமைக்கச் செய்வார். இதனை விளக்கும் வரிகளும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து வாசிக்கப்படும். இராமன் மாட்டுக்கறி உண்ணும் காட்சி மேடையில் அரங்கேறும். அவர் அந்த நாடகத்திற்கு இட்டத் தலைப்பு இராமாயணமாக இருந்த போதும், அதைத் தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் அதனை “கீமாயணம்” என்று விமர்சித்தனர்.

இந்நாடகத்திற்கு மக்கள் பெருங்கூட்டமாக எழுச்சியுடன் வந்ததைத் தொடர்ந்து இந்நாடகத்திற்கெனவே “தமிழ்நாடு நாடகக் கட்டுப்பாடு சட்டம் – 1954“ என்ற ஒரு புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்நாடகத் திற்காகவே எம். ஆர். இராதா அவர்கள் 54 முறை கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி அவர் கைது செய்யப்படும் பல நேரங்களில், ஒரு கையில் சோம பானம் கொண்ட மொந்தையையும், மறு கையில் மாமிசத்தையும் ஏந்தியவாறு, இராமன் வேடத் திலேயே எம். ஆர். இராதா செல்வார். “இராமன் செல்ல வேண்டிய இடத்திற்குதான் செல்கிறான்” என்று கூறியவாறே அவர் காவலர்களுடன் செல்வார்.

அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டு வெகுண்ட பெரியார், தனது அனைத்து நிகழ்ச்சி களையும் இரத்து செய்து விட்டு சென்னையில் ஒரு மாதம் முழுவதும் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொண்டார்.

இந்த நிலையில் 1954-ஆம் ஆண்டு இராஜ கோபாலச்சாரி “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில்  தொடர் ஒன்றை எழுதத் தொடங்குகிறார். அவர் பதவியை இழக்கும் போதெல்லாம் இவ்வாறு ஏதாவது எழுதுவது வழக்கம். 1939-ஆம் ஆண்டு இதே போன்று முதலமைச்சர் பதவியை இழந்தபோது ’வியாசர் விருந்து’ என்று மகாபாரதத்தைக் குறித்து எழுதினார். பின்னர் 1954-இல் சக்கரவர்த்தித் திருமகன் என்று இராமாயணத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறார். இதற்கு எதிர்வினையாக (பின்னர் தமிழத்தின் முதல்வரான) கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் “சக்கரவர்த்தியின் திருமகன்” என்ற தலைப்பில் கிண்டலாக எழுதத் தொடங்குகிறார். இராஜகோபாலாச்சாரியின் தந்தையின் பெயர் சக்கரவர்த்தி ஆகும். ஆக, இராமனையும் இராஜ கோபாலாச்சாரியையும் ஒரு சேர குறிக்கும் வகையில் அந்தத் தலைப்பை அவர் வைத்தார். பின்னர் கருணாநிதி “பரதாயணம்” என்றத் தலைப்பில் மற்றொரு தொடரையும் எழுதினார். நாளுக்கு நாள் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் வலுபெற்று வந்த நிலையில் 1956-ஆம் ஆண்டு புத்தரின் 2500-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இராமர் பட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார்.

பெரியார் ஒரு நாத்திகராக அறியப்படுகிறார். அது உண்மைதான். அவர் கடவுள் மறுப்பாளர்தான். ஆனால் பெரியார் வெறுமனே நாத்திகர் மட்டுமல்ல. அவரது முதன்மைக் கொள்கை ஜாதி ஒழிப்பே. “நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றேன். அவர்கள் அது மதத்துடன் இணைந்தது என்றார்கள். அப்படி ஆண்ட மதத்தை ஒழிக்க வேண்டும் என்றேன். அது வேதங் களினால் உருவாக்கப்பட்டது என்றார்கள். நான் வேதங்களை ஒழிக்க வேண்டும் என்றேன். அது கடவுளால் அளிக்கப்பட்டது என்றார்கள். எனவே நான் கடவுளை கேள்விக்கு உள்ளாக்க வேண்டி வந்தது. கடவுளை அழித்தால்தான் ஜாதி ஒழியு மெனில் அந்த கடவுளை நான் அழிப்பேன்” என்கிறார் பெரியார்.

“இந்நாட்டில் மதம் என்பது மக்களை முட்டாளாக்கி, அவர்களை அடிமைப்படுத்தவே உதவுகிறது. எனவே நான் இந்த இந்து மதத்தை ஒழிப் பதையே என் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்” என்கிறார் பெரியார்.

இந்த அடிப்படையிலேயே பெரியார் இராமர் எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார். வெறுமனே நாத்திகப் போராட்டமாக அல்ல. இதற்கு 3 ஆண்டு களுக்கு முன்னர்தான், இதே போன்றதொரு புத்தர் பிறந்த நாளில், விநாயகர் சிலை உடைப்புப் போராட் டத்தை அறிவித்து அதை செய்தும் காட்டியிருந்தார் பெரியார். எனவே இராமர் பட எரிப்புப் போராட்ட அறிவிப்பு பெரும் கொந்தளிப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது. ஏறத்தாழ 6000 பேர் இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

1959-ஆம் ஆண்டு குடி அரசுக் கட்சி (சுநயீரடெiஉயn ஞயசவல) வட இந்தியாவில் பல இடங்களில் பெரியாரின் கூட்டங்களை நடத்தியது. இவற்றின் இறுதிக் கூட்டம் கான்பூரில் நடைபெற்றது. ஏற்கனவே 1957-ஆம் ஆண்டு பெரியார் எழுதிய “இராமாயண குறிப்புகள்” நூல் “சுயஅயலயயே – ய கூசரந சுநயனiபே” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டிருந்தது.

அந்த ஆங்கில நூலினை லாலாபாய் சிங் யாதவ் என்பவர் “சச்சி இராமாயண்” என்ற தலைப்பில் இந்தியில் மொழிப் பெயர்த்து அம்மாநாட்டில் வெளியிடுகிறார். அந்த மாநாட்டிலேயே 3000 படிகள் விற்றுத் தீர்ந்தது. 1970-ஆம் ஆண்டு இந்நூல் உத்தர பிரதேசத்திலும் தில்லியிலும் தடை செய்தனர். பெரியார் இறந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1976-ஆம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று இந்நூல் மீதான தடை உச்ச நீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டது.

பெரியார் தொடர்ந்து இராமாயணத்தை விமர்சிப் பதைக் கண்டித்து பெரியார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சியினர் கண்டனம் எழுப்புகின்றனர். இதனைத் தொடர்ந்து இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்கிறது. இதனை அறிந்த பெரியார், “நீங்கள் எங்கள் பிரச்சாரத்தைத் தடை செய்வீர் களானால், உண்மையில் அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ள இராமாயணத்தைதான் நீங்கள் தடை செய்ய வேண்டும். அரசியல் சட்டம் அனைவருக்கு சம உரிமையும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இராமாயணமோ சமத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. எனவே இராமா யணத்தை தடை செய்யாமல், இராமாயணத்தை நான் விமர்சிப்பதற்காக நடவடிக்கை எடுப்பீர்களானால்… இதோ நான் அதை எரிக்கவே போகிறேன்” என்று அறிவிக்கிறார். 1966ஆம் ஆண்டு மைலாப்பூரில் அய்யாயிரம் பேருக்கு மேலாக கலந்துகொண்ட நிகழ்வில் இராமாயண எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

1971ஆம் ஆண்டு பெரியார், தமிழகத்தின் முக்கிய நகரமான சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அந்த ஊர்வலத்தில், வால்மீகி இராமாயணத்தில் கூறியபடி, ‘அசுவமேத யாகம்’ என்ற (குதிரைகளுடன் தசரதன் மனைவியர் உறவுகொண்டு இராமன் பிறந்தான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது) முறையில் இராமன் பிறந்ததையும், இந்து கடவுள்களின் புராணங்கள் கூறும் ஆபாச பிறப்புகளையும் படங்களாக சித்தரித்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அப்போது சில ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் (ஹிந்து மிஷன் ) ஊர்வலத்தின்மீது செருப்பு வீசினர். உடனே பெரியார் தொண்டர்கள் அந்த செருப்பை வீசியவர் மீது திருப்பி வீசாமல், ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட இராமன் படத்தின் மீது அடித்துக் கொண்டே ஊர்வலத்தில் வந்தனர். மாநாட்டின் இறுதியில் இராமனின் 10 அடி உயர உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அந்த நிகழ்வு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அதே 1971-ஆம் ஆண்டு பெரியார் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். “15 நாட்களுக்குள் இராமாயணத்தை தடை செய்யவில்லை எனில், எங்கள் ஆட்கள் குடிகார இராமனாகவும் விபச்சாரி சீதையாகவும் வேடமிட்டு மாநிலமெங்கும் சென்று சூத்திர சம்பூகன் எவ்வாறு வஞ்சகமாக கொல்லப்பட்டான் என்பதை நடித்துக் காட்டுவார்கள்” என்று அறிவித்தார்.

இதே போன்றதொரு போர்க் குணத்துடன் இருந்தவர்தான் பெரியார். அவரைத்  தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு தலைமையேற்ற மணியம்மை யார் அவர்கள். 1974ஆம் ஆண்டு மணியம்மையார் அவர்கள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு ஓர் கடிதம் எழுதினார். “இராம லீலா என்ற பெயரில் எங்கள் திராவிடர் மன்னர்களான இராவணன் மற்றும் இந்திரஜித் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இதனை உடனே தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது திராவிடர்களாகிய எங்களை இழிவுப்படுத்துவதாகவும் எங்களை இரண்டாம்தர குடிமக்களாக சிறுமைப் படுத்துவதாக வும் உள்ளது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடு கிறார். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் நாள் இராம லீலா இந்தியாவெங்கும் கொண்டாடப் படுகிறது. இதற்கு எதிர்வினையாக, அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள், பெரியாரின் முதல் நினைவு நாள் அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட் டில் “இராவண லீலா” என்ற பெயரில் இராமன், இலட்சுமணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட்டன. அதற்காக திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

அதன் பின்னர் 1996-ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து தொடங்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகம் என்ற பெரியார் இயக்கம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இராவண லீலா நடத்தியது. எதிர் வரும் அக்டோபர் 12 அன்று, தோழர் இராமகிருட்டிணன் தலைமையிலான பெரியார் இயக்கமான தந்தை பெரியார் திராவிடர் கழகம், சென்னை சமஸ்கிருத கல்லூரியின் வாசலில் இராவண லீலா நடத்த உள்ளது. இராமன், இலட்சு மணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட உள்ளன. அதுவும் ஆரியர்களின் அடையாளமாக உள்ள சமஸ்கிருதக் கல்லூரியின் வாசலில்.

தற்போதைய காலக்கட்டத்தில் இராமனின் உண்மை முகத்தைக் காட்டவும் இராவணனைப் போற்றவும் நமக்கு முன்னெப்போதையும் விட அதிக காரணம் உள்ளது. இவை இரண்டுமே கற்பனை கதா பாத்திரங்கள் என்பதை நாம் அறிவோம். இராமா யணம் என்பது நாம் சிறு வயதில் படித்த கற்பனை தேவதைக் கதைகளை போன்ற ஒன்றேயன்றி வேறு இல்லை என்பதையும்  நாம் அறிவோம். ஆனால் நாம் இராவணனை போற்ற வேண்டிய காரணம் என்ன? இராமாயணத்தை நமக்கு சொல்பவர்கள் நமது சிந்தனையில் எதனை திணிக்க விரும்புகிறார்கள்?

ஒரு காலத்தில் இராமனின் படங்கள் அவனது துறவு கோலத்தைக் குறிப்பதாக இருக்கும். காவியுடை அணிந்து மனைவி சீதையுடனும் தம்பி இலட்சு மணனுடனும் காட்டுக்குச் செல்லும் இராமனின் படங்களையே நாம் அதிகமாக பார்த்திருப்போம். அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் இராமன் பட்டா பிஷேகப் படங்கள் அதிகமாக வெளியாயின. தற்போது இந்துத்துவ அமைப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தும் இராமனின் படங்கள் போர்வீரன் கோலத்தில் கையில் வில்லேந்தியவையாக உள்ளன.  இப்போது கடவுளாக அல்லாமல் போர் வீரனாக இராமன் முன்னிறுத்தப்படுகின்றான்.

ஒரு காலத்தில் இந்து மதம் பக்தியை போதித்தது. அதற்கு துறவு இராமன் பயன்பட்டான். அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் ஆரியர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதையும் திராவிடர்கள் தோற்றவர்கள் என்பதை யும் குறிக்க பட்டாபிஷேக இராமனின் படங்கள் பயன்பட்டன. தற்போது தனது எதிரிகளை அழித் தொழிக்கு போர் வீரனாக அவனை முன்னிறுத்து கின்றனர்.

யார் அவனது எதிரிகள்? : இராட்சர்கள் – யார் இக்காலத்திய இராட்சர்கள்? இசுலாமியர்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள். எல்லா முஸ்லிம்களும், எல்லா சூத்திரர்களும் எல்லா தலித்துகளுமா? இல்லை. எதிர்த்து நிற்கும் முஸ்லிம்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள்.

அனுமான்களும் உள்ளனர். அடிபணியும் சூத்திரர் களும் தலித்துகளும் முஸ்லிம்களும். அனுமன் எவ்வாறு இராமனின் காலடியில் உள்ளானோ அவ்வாறோ நமக்கு நமது இடத்தை காட்ட அவர்கள் விரும்புகிறார்கள். அப்துல் கலாம் போன்று பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து செல்பவர்களை அவர்கள் போற்றுகிறார்கள்.

பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவர்கள் இராட்சசர்களாக, அரக்கர்களாக, தேச விரோதிகளாக முன்னிறுத்து கிறார்கள். அதிலும் பி.ஜே.பி அரசு பதவியேற்றப் பிறகு இது மிகுதியாக அதிகரித்துள்ளது.

தற்போதைய மோடி அரசு பதவியேற்ற பிறகு எவ்வளவு முனைப்புடன் சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். ஆசிரியர் தின விழாவை குரு உத்சவ் என்பதும் பள்ளிகளில் குரு பூஜைகள் நடத்தச் சொல்வதும் நடக்கிறது. இது ஓர் எடுத்துக் காட்டு மட்டுமே. இவ்வாறு பல வழிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படும் அதே வேளையில், இந்த இந்துத்துவ அரசு ஆரியர்கள் மேலானவர்கள் என்றும் திராவிடர்கள் கீழானவர்கள் என்றும் தொடர்ந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இராவணனை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது. அது இராவணன் என்ற ஒரு கதா பாத்திரத்திற்காக அல்ல. மாறாக, திராவிடர் களாகிய நமது சுயமரியாதையை நிறுவுவதற்காக. இராவணன், மகிசாசுரன் என்ற திராவிடர் இன பாத்திரங்களை கொடூரமானவர்களாக சித்தரித்து அதன் மூலம் நமது சுயமரியாதைக்கு அவர்கள் இழுக்குத் இழைப்பதற்கு எதிராக… நமது வளமான திராவிட மரபை நினைவுகூரும் விதமாக… நாம் இதனைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.


ஓணம் பண்டிகைக்கு மாற்றாக வாமன ஜெயந்தியை பா.ஜ.க முன்னிறுத்திய போது, கேரளாவின் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இருவருமே அதனை எதிர்த்து “நாங்கள் எங்கள் திராவிட மரபை விட்டுக் கொடுக்க மாட்டோம். வாமன ஜெயந்தி என்று இதற்கு பெயர் சூட்ட முனைவதை கடுமையாக எதிர்க்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டனர். இத்தகைய ஒன்றிணைந்த செயல்பாட்டினையே நாமும் மேற் கொள்ள வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.