Sunday, April 26, 2026

பெரியாரின் புறநானூறு - கவி

பெரியாரின் புறநானூறு - கவி

 1996 ஆம் ஆண்டு தேர்தலில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி கண்ட நேரம். நான் ‘சங்கொலி’ இதழை விரும்பிப் படிப்பதுண்டு. சென்னையில் நான் பணியாற்றிய காலத்தில், தங்குவதற்கு தன் வீட்டிலேயே இடம் கொடுத்து எனக்கு உதவி புரிந்த  நண்பர் சங்கொலி முகவர் திரு. சுப்பாரவ் அவர்களுடன் புதன் கிழமை தோறும் ம.தி.மு.க அலுவலகமான தாயகம் செல்வேன். அப்போதைய சங்கொலி பொறுப்பாசிரியர் திரு. க. திருநாவுக்கரசு அவர்களுடன் அவ்வப்போது உரையாடிவிட்டு வருவேன்.

சங்கொலியில் ‘திராவிட இயக்க 80 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் வைகோ எழுதிய தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. கலைஞர் எழுதிய திருக்குறள் உரைக்கு மறுப்புத் தெரிவித்து, திரு. க. திருநாவுக்கரசு அவர்கள், ‘திருக்குறளும் திராவிடர் இயக்கமும்’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘திராவிடர் இயக்க ஏடுகள்’ கருத்தரங்கு பற்றிய செய்திகள் சங்கொலியில் வெளிவந்தன.

 இவற்றையயல்லாம் படித்து, திராவிடர் இயக்க வரலாற்றை உள்வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், எஸ்.வி.இராசதுரை மற்றும் வ.கீதா எழுதிய ‘பெரியாரும் சமதர்மும்’ என்ற நூலும் ‘பெரியார் :ஆகஸ்ட் 15’ என்ற நூலும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னையில் நடந்த ‘பெரியார் ஆகஸ்ட் 15’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அங்கு நடந்த பெரியார் ஆய்வரங்கு என்னை புதியதோர் பாதைக்கு இட்டுச்சென்றது.

ஆய்வரங்கில் ஏற்பட்ட எண்ணயோட்டத்தோடு நான் சென்னை அண்ணாசாலையில் நடந்து வந்தபோது ‘கவிதாசரண்’ என்ற இதழின் பழைய பதிப்பு ஒன்று கிடைத்தது. அதில் கோ.கேசவன் அவர்கள் பெரியார் பற்றிக் கூறிய அவதூறுகளுக்கு எஸ்.வி.இராசதுரை எழுதிய மறுப்புக் கட்டுரையைப் படித்தேன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘அண்ணா பொது வாழ்வியல் மையம்’ சார்பாக ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பெரியாரின் பன்முகத்தை அங்கு பல பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், பெரியாரின் வழித்தோன்றல்கள் பேசினர்.

ஆர்.எம் .வீரப்பன் தொடங்கி வைத்த விழாவில், நீதியரசர் மோகன், ‘பெரியாரின் சிந்தனைகளை’ 3000 பக்கங்களுக்கு மேல் தொகுத்து வெளியிட்ட அறிஞர் வே. ஆனைமுத்து ஆகியோர் பெரியார் பற்றி ஆய்வு சொற்பொழிவு நடத்த முதல் அமர்வு முடிவுற்றது. இரண்டாவது அமர்வில் பேரா. அய்யாசாமி தலைமையுரையாற்ற, ‘தன்மானம்’ என்ற தலைப்பில் அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தலைவர் இராமலிங்கம் அவர்களும், ‘பெரியாரின் அரசியல் தத்துவம்’ பற்றி மாநிலக் கல்லூரி பேரா. முத்துச்சாமி அவர்களும் சொற்பொழிவாற்றினர். இத்துடன் இரண்டாம் அமர்வு முடிவுற்றது.

பிற்பகல் அமர்வுக்கு பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவில் ‘பெரியாரின் பொன்மொழிகள் மற்றும் கல்வெட்டு பொறித்தல்’ பொறுப்பைப் பெற்று, பெரும் பணியைச் செய்த பேரா. நன்னன் அவர்கள் தலைமையேற்க, பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் ‘மூடநம்பிக்கை’ என்ற தலைப்பிலும், மாநிலக் கல்லூரி பேராசிரியர் இளவரசு அவர்கள் ‘பெரியாரின் மொழிக்கொள்கை’ பற்றியும், மலையமான் அவர்கள் ‘பெண்ணியம்’ பற்றியும் திரு.குருநாதன் அவர்கள் ‘வள்ளுவம்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். இறுதியாக பேராசிரியர் நன்னன் பேச, இக்கருத்தரங்கு முடிவுற்றது.

இதன் பின் 1998 ஆம் ஆண்டு ஏப்பிரல் 27 முதல 29 வரை மீண்டும் ‘அண்ணா பொது வாழ்வியல் மையம்’ திராவிட இயக்கம் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. பேரா. அன்பழகன் அவர்கள் திராவிடர் இயக்க முன்னோடிகள் பிட்டி.தியாகராயர், சி. நடேசனார் மற்றும டி.எம்.நாயர் ஆகியோர் பற்றியும் நீதிக் கட்சி பற்றியும் விரிவாக சொற்பொழிவாற்றினார். மிகவும் அரியக் கருத்துக்கள் அடங்கிய சொற்பொழிவு.

மறுநாள் நடைபெற்றக் கருத்தரங்கில் பேராசிரியர்கள் ஈ.சா.விசுவநாதன், சிவஞானம், கருப்பையா, சந்திரசேகரன், டாக்டர் பாலகிருட்டிணன் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர். மாலையில் ‘தமிழ்வழிக் கல்வி’க் குறித்து மகாதேவன், ‘தமிழிசை வளர்ச்சி’ப் பற்றி சாம்பமூர்த்தி ஆகியோர் பேசினர். பேராசிரியை சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களும் பேரா. மு.க. சுப்ரமணியன் அவர்களும் சொற்பொழிவாற்றினர்.

இந்த இரண்டு கருத்தரங்குகளும் பெரியாரைப் பற்றியும் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும் நான் அறிந்து கொள்ள, செம்மைப்படுத்திக் கொள்ள உறுதுணையாக இருந்தது.இவ்விரு கருத்தரங்குகளின் பேச்சுக்களை அப்போது நான் முடிந்த வரை குறிப்பெடுத்தேன்.

அத்துடன் திருவான்மியூரில் வசிக்கின்ற, திராவிடர் இயக்க ஆய்வாளரும், காமரசர் ஆட்சிக்காலத்தில் கல்வி இயக்குநராகவும் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராகவும் இருந்த திரு.நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடன் ஏழரை ஆண்டுகாலம் உடனிருந்து அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுத துணைபுரிந்தவரும், குருவிக்கரம்பை வேலு அவர்களுக்கு ‘குத்தூசி குருசாமி’ என்ற நூல் எழுத துணை நின்றவரும், ‘தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்’ என்று அழைக்கப்படுவர்களில் ஒருவரான மாரிமுத்தா பிள்ளையின் ஏழாம் தலைமுறையைச் சார்ந்தவருமாகிய பேராசிரியர் தி.வ.மெய்கண்டார் அவர்களின் தொடர்பும் நட்பும் அவரது ‘இளந்தமிழன்’ இதழும் என்னை திராவிடர் இயக்கச் சிந்தனையில் முழுவதுமாக ஈடுபட வைத்தது.

இந்த பின்னணியில் பெரியாரைப் பற்றிய இன்னொரு கோணமும்  இருப்பதை பலரும் வெளிப்படுத்த விரும்பாத நிலை, ‘ஈ,வே.இரா. சிந்தனைகள்’ என்ற தொகுப்பு நூலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது தெரிந்தது. பெரியார் நடத்திய போராட்டங்கள், அதறகு அவர் மேற்கொண்ட வழிமுறைகள், அவருக்குக் கிடைத்த சிறை தண்டனைகள், வழக்குமன்றங்களில் அவர் தன்தரப்பு வாதங்களை மட்டும் பதிவு செய்துவிட்டு, எதிர்த்து வழக்காடாமை போன்றவை மக்களிடம் பரவலாக்கம் செய்யப்படாமை என்னுள் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அரசியல் சட்ட எரிப்புப் போர், காந்தி பொம்மை உடைப்பு,   இவற்றைப் பற்றியயல்லாம் பெரியார் வெளியிட்டிருந்த ஆழமான கருத்துக்கள் என்னை வியக்கவைத்தது.

இந்த மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்திய இத்தகைய போராட்டங்களையும் அவற்றின் வரலாற்றையும் மறைக்கின்ற இந்நிலையில், பெரியார் பட்டறை இத்தொகுப்பு நூலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறது.

அன்புடன்

கவி

பெரியார் 95 - (1973)

எனது 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கத்துக்கு வழமை போல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுத வேண்டு இருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். அப்படி எழுதப்படும் இக்கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசி கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனா, இல்லையோ என்கிற பிரச்சனை மாத்திரமல்லாமல், எழுதும் படியான வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்.

ஏனெனில், இன்ணும் நாம் இருப்பதுபோலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ்சாதி (சூத்திர மகனாகவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசி மகன் என்ணும் பெயருடன், நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாகவும் இருக்கும் தன்மையாகலேயே இருப்போமா என்கின்ற கருத்தைக் கொண்டே இப்படி எழுதுகிறேன்.

இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாய் இருக்கும் வரை இந்துவாய், அதாவது, கிறிஸ்துவனாகவோ, முஸ்லிமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாத வரை, நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தணுக்கும்-ஜெயினணுக்கும் சமானமாக இருக்கம் படியாக இருந்தாலும், பகுத்தறிவுவாதியாக இருந்தாலும் வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருபவனாக இருந்தாலும் சூத்திரனாகத்தான்-பார்ப்பானின் தாசிமகனாகத்தான் இருந்தாக வேண்டும்.

இதுதான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்தச் சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ நம் மக்களுக்கு ஒரு நாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத நிலையில் இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விலக்கிக்கொள்ள முயற்சி செய்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயமான -நிர்ப்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தாலும், இம் முயற்சியில் நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயேதான் இந்தப் படி எழுதுகிறேன்.

நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்சனை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்சனையில் நாம் இன்று இருக்கும் இழிதன்மையில் இருந்து அதாவது சூத்திரனாக, தாசிமகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாஸ்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக் கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா?

இந்தியாவில் நாம் இருக்கும் வரை இந்துவாகத்தானே இருந்து ஆக வேண்டும்.இந்து என்றாலே முஸ்லிம், கிறிஸ்துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர், தாசி மக்கள் தான் என்று இருப்பதால் ஏதாவது முயற்சி செய்துதான் ஆக வேண்டும்.

நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய் கருதுபவர்களாவார்கள்.

ஆதலால் நாம் உடனடியாக விடுதலை, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி, சுதந்திரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம் முயற்சிக்கு இன்றைய தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருத முடியாது. ஏனெனில், தி.மு.க ஆட்சி விரும்புவதெல்லாம் இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சிதான் அது விரும்புகிறது.

மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மணுதர்ம நிலையை மிக மிகப் பலப்படுத்திக் கொண்டபடி இருக்கிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், கர்ப்பக் கிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னதி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர் நீதி (சுப்ரீம்) மன்றத் தீர்ப்பு இருப்பதினாலும், இன்ணும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத் தகாதவர்கள் போல் வாயில்படிக்கு வெளியில்தான் எட்டி நிற்க வேண்டும் என்றால் மற்றபடி எதில் நாம் மாறுதலைக் காணமுடியும்?

இன்று அமுலில் இருக்கும் `இந்து லா’ என்ணும் சட்டத்திலும், பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர்களை மிக மிக இழிவாகக் கூறி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்ணும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால், `கிறிஸ்துவர்கள்-முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்’. இதன் படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.

நான் முதலில் நான் இந்து அல்ல என்று சொல்லி விட்டால் இழிவு நீங்கிவிடும் என்றுதான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள்- இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாயே தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில்தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும், நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள். காரணம், பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல  வேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள். 50 வருஷ காலமாகச் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு-பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு, அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு ந்லல அளவுக்குப் பலம் பெற்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே, நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வரவேண்டியது ஒவ்வொரு தமிழணுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

`சுதந்திரத் தமிழ்நாடு- எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொரு இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று  ஆசைப்படுகிறேன். பொது மக்களே! இளை…ர்களே! பள்ளி கல்லூரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்!

(95 வது பிறந்தநாள் மலர் -17-9-1973)

பெரியார் 94 - (1972)

 எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியோடு 93 ஆண்டு முடிவ டைந்து 94 ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றிவிட்டது. 93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், நாட்களில் 34045 நாட்கள், பிறைகளில் (அமாவாசைகளும்) 1635 ஏற்பட்டு மறைந்துவிட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானம்தான் காணமுடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது (இயற்கையில்) முடியாத காரியமேயாகும்.

என் வாழ்நாளில் நான், மற்றவர் (அனேகர்) கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத்தாலும் வெளியில் சொல்லப்பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக் காட்ட முடியாதது காரியத்திலும் நடந்து வந்ததோடு. ஓரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும் படி-விளங்கும் படி ஓரளவுக்கு நடத்திக் காட்டியும் வந்திருக்கிறேன்.

இந்த நிலை உலகெல்லாம் பரவ வேண்டும் என்ற எண்ணங்கொண்டு அதற்காக வாழ்கிறேன்-;எனற் எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வ சக்தி இல்லை என்பதாக எதுவும் இல்லை, மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய்வ சக்தி- தெய்வீகத்தன்மை என்பதாக எதுவுமில்லை; அப்படிப்பட்ட தெய்வீகத்தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை; அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவே இல்லை என்றும் திண்ணமாய்க் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கிறேன்-வருகிறேன்.

இந்த எனது நிலையில் எனது 93 ஆண்டு வாழ்நாளில் எனக்கு யாதொரு குறைவும் சங்கடமும் மனக் குறைவோ, அதிருப்தியோ கூட ஏற்பட்டதேயில்லை. மேற்கண்ட எல்லாக் காரியங்களிலும் மற்றவர்கள் எளிதில் பெற முடியாத அனேக ஏற்றங்களைச் சாதாரணமாகப் பெற்றிருக்கிறேன். மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் விருப்பப்பட்டும் போற்றப்பட்டும் வந்திருக்கிறேன்.இதனால் உலகுக்கு-மக்களுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்பதோடு நாட்டுக்கும் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம்.

நமது கருத்து வெளியீடும் பிரச்சாரமும் துவக்கப்பட்ட காலத்தில் நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண்டேயாகும். கல்வியில் நமது மக்கள் 100-க்கு 8பேர் 10 பேர் என எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள்; அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்திபேதி) வந்தால் 100-க்கு 90 பேர் சாவார்கள். பிளேக் வந்தால் 100-க்கு 100-ம் சாவார்கள். இருமல் வந்தால் 100-க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100-க்கு 50 பேர்களுக்கு மேல் சாவார்கள். தொத்து நோய்களும் பல; குழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்ப ஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன.

அரசியலில் அன்னிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறையிலும் பார்ப்பன மயமும் முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும் எஜமான் -அடிமைத் தன்மையும் இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வ நிலையோ ஒரு இலட்சம் என்பதான் உயர்ந்த நிலை. 10 இலட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ கீழ் நிலைக்கு ஆளாகி இருந்தது மாத்திரமல்லாமல் அந்நிலைப்பற்றி வெட்கப்படாமலும் கவலைப்படாமலும் வாழ்ந்து வந்தோம்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல்-இவற்றின் விளைவுபற்றி யாருமே கவலைப்படாமல், `எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’ என்று கருதி, நிம்மதியுடன் மக்கள் இருந்த காலத்தில் நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய்ச் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும், இதுவரை சிந்திக்காததுமே தான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும் சாஸ்திரங்களையும் முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக் கட்டி, மக்களுக்குப் புது எண்ணங்களை-அறிவை உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங்களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.

கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும், அழிக்கவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது, எப்படி வந்தது என்றால், மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக்காலமான சுமார் 2000, 3000 ஆண்டுகளுக்கு முந்தின மிருகப் பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல் தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம்; அவை மாத்திரமா? பகுத்தறிவு, சிந்தனை அற்ற காலம்; வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.

சாதாரணமாக, கந்த புராணம், வாயுபுராணம், பாரத புராணம், இராமாயண புராணம் முதலிய கடவுள் சம்பந்தமான, மத சம்பந்தமான, சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், வி·ணூ புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம், திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் முதலிய ஆதாரங்களையும் இலக்கியங்களையும் பார்த்தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.

மற்றும், இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில் 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர், வித்வான், மகாமகோபாத்தியாய, பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பட்டம் பெற்ற பெரிய படிப்பாளி, அறிவாளிகள் என்பவர்களெல்லாம் கூட நம்பி, அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இந்த காட்டுமிராண்டிக் காலத்தியக் கற்பனையை நம்புவதும், நடிப்பதும், அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகியவைகளை ஏற்படுத்தி, பரப்பி, கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக-காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க மாட்டார்கள்?

அவ்வளவு ஏன், கிரணங்களை நம்புகிறவர்கள் எத்தனை பேர்? இன்று கூட சாதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு அப்பால் உலகம் இருப்பதாகவே தெரியாதோர் எத்தனை? இன்றைக்கு 150, 200, 300 ஆண்டுகளுக்கு முன் நம் நிலை என்ன என்று பார்ப்போமானால்-நெருப்புக் குச்சி ஏது? இரயில், கார், கப்பல், ஆகாயக் கப்பல் ஏது? நடக்க நல்ல பாதை ஏது? இந்த நிலையில் உள்ள மக்களின் மூட -காட்டுமிராண்டி நம்பிக்கையான-அதன் தோற்றங்களான கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பவைகளை ஒழிக்க ஒரு மனிதன் துணிவு கொள்வானானால், அத் துணிவில் அதிசயம் ஏது? எப்படி இருக்க முடியும்?

பகுத்தறிவுள்ள மனிதனாக இருந்து கொண்டு , கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பனவாகியவைகளை நம்புவதும்; அழிக்காமல் ஒழிக்காமல் இருப்பதும், பின்பற்றுவதும் தான் முட்டாள்தனமான-காட்டுமிராண்டித்தனமான துணிவு கொண்ட தன்மையாகும் என்று சொல்லலாம். 

நிற்க, மேலே கண்ட எனது துணிவான கருத்துக்களால், பிரச்சாரத்தால் இவ்வய்ம்பது ஆண்டுகளுக்கப்பால் ந்ம நாட்டாருக்கு, மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன, கேடு என்ன என்று பார்த்தால்; ஒரு சாதாரண மனிதணுக்கும், அவன் கடுகளவு சிந்தனையாளனாக இருந்தால் ஒன்றும் ஏற்படவில்லை என்பதோடு, மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள் ஏற்பட்டிருப்பது தெரியாமல் போகாதே! அது மாத்திரமா? இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கருத்து என்பவைகளால் நாட்டுக்கு-மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட கேடுகளும், வளர்ச்சித் தடைகளும் எப்படிப்பட்ட மூடணுக்கும் புரியாமல் போகாது. எனவே, நான் 93 ஆண்டுகள் வாழ்ந்தததை வீண் வாழ்வு என்று கருதவில்லை. என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை.

இனிமேலும் வாழ்வதைத்தான் க·டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகிவிட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம். இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.

காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு-சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக்கட்டாததால் சமுதாய விஷயத்தில், சாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும். ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சி வரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளைச் சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன். 

(94 வது பிறந்த நாள் மலர் - 17.9.1972)

பெரியார் 93 - (1971)

எனது 93 வது ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு. வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக்குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்த நாள் மலருக்குச் சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்த நாள் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக-ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும். 

நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது, சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுவேன். சாதி அமைப்பு என்பது `கடவுள்’ `மதம்’ மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது  மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல. நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால் சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளைச் சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச்சும்மா விட்டுக் கொண்டு இருக்க மாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.

நானோ எனது பிரச்சாரத்தில் கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காகவே சிறுமைப்படுத்தி,இழிவுபடுத்தி -செய்கையாலும் காட்டிக் கொண்டே, நடந்து கொண்டே வருபவன். இந்த நிலையில் எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கையில் பட்டதென்பதை நல்ல வண்ணம் மக்களுக்கு விளங்கும்படி, `கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி’ நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன்.

இந்த நிலையில், எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக் கொண்ட இருப்பானா?- என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தணும் நினைத்து-அவணுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும் `கடவுளாவது வெங்காயமாவது’ என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.

சென்ற எனது 92-ஆம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய எனது பிறந்தநாள் செய்தியில் `எனது 91 ஆவது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரம் அல்லாமல், இது போல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும் மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கின்றேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல மக்களைக் காண்கின்றேன்.

கடவுள், மதம் சாதி முதலிய விஷயங்களால் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கின்றேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும் மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்று நம்பிக்கைக்கும் அவாவிற்கும் காரணமாகும்.

இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டு `நான் ஏன் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று’ என்று எழுதிச் சலிப்படைந்து இருக்கின்றேன். இந்தச் சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறி…ர் அண்ணா அவர்களும் திரு. காமராசர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி உற்சாகமூட்டினார்கள்.

அறி…ர் அண்ணா, கலை…ர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகுதான் நான் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.

உண்மையில் எனது தொண்டு சாதி  ஒழிப்புத் தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும்.

இப்போதும் சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள்.அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயணும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக் கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்தர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவதுதான் சாதி ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாளகவேதான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும் அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டுதான் இப்படிச் சொல்கின்றேன். 

அதாவது, `கடவுளைச் செருப்பால் அடித்ததாக’ 10 இலட்சக் கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள், மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஐனசங்க இயக்கம் முதலிய-சாதித் துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராக பாடுபட்டு -230 இடங்களில் சுமார் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க.) வெற்றி பெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்தநாள் செய்திக்கு நான் கொண்ட கருத்து-அதன் அளவுக்கு மேல் மெய்யாகி வெற்றிபெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.

இனி நமது சாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது.

இந்த நிலையில் நான் நமது மக்களை அடிபணிந்த வேண்டிக்கொள்வதெல்லாம்-கோயில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும். உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக் குறி அணியாமல் இருக்க வேண்டும் என்பதேயாகும்.

மற்றும் நான் நினைக்கின்றேன். அண்மையில் ஓர் மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன்.

இதுதான் எனது 93-வது பிறந்த நாள் விண்ணப்பம்

 (93வது பிறந்த நாள் மலர், 17.9.1971)

பெரியார் 92 - 2 (1970)

 இன்றைய நிலையில் தமிழர்கள் (திராவிடர்கள்) ஒரு அளவுக்கு முன்னேற்றப் பாதையில் செல்லுகிறார்கள். அவர்கள் அடைய உரிமையுள்ள இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறமுடியாது. சமுதாயத் துறையில் ஒரு அளவுக்குப் பார்ப்பனரைப் பகி·கரித்திருக்கிறார்கள். என்றாலும் அந்த அளவு பகுதிக்கும் குறைவான அளவு என்றுதான் சொல்ல வேண்டும். கல்வித் துறையில் பார்ப்பனர்களுக்கு ஏகபோகம் இல்லையென்றுதான் சொல்லலாமே தவிர அவர்கள் தங்கள் விகிதாசார அளவுக்கு 100-க்கு 500 பங்கு முதல் 1000 பங்கு வரை அதிகமாக அணுபவித்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த விகிதம் ஒழிந்து அவர்கள் தங்களுக்குள்ள உரிமையுடன் இருக்க வேண்டுமானால் டில்லி ஆதிக்கம் ஒழிந்தே ஆக வேண்டும். டில்லி ஆதிக்கம் ஒழியும் வரை திராவிடர்கள் 4-ஆம் சாதி- இழிசாதி என்கிற இழிவும் நீங்காது என்பது உறுதி. அரசியல் தலைமைத் துறை, அமைச்சர்துறை ஆகியவற்றில் அவர்களுக்கு இடமில்லாமல் ஆகிவிட்டது என்றாலும் அவர்கள் அவற்றில் இல்லாமலே அவர்களுக்கு வேண்டிய காரியங்களும் நாம் வளர்ச்சி அடைய முடியாமல் இருக்கும் படியான காரியங்களும் தாராளமாய் அவர்களால் செய்ய முடிந்துதான் வருகிறது.

இவற்றிற்கெல்லாம் அவர்களுக்கு ஆதாரமாக `சஞ்சீவி’ மருந்தாக இருந்துவரும் சாதனம் பத்திரிகை உலகம் 100-க்கு 100 அவர்களுடையதாகவும் அவர்களுடைய அடிமைகளுடையதாகவும் இருந்து வருவதேதான். இந்தத் துறையில் தமிழர் சிறிது கூட சிந்தனை செய்ததாகவே காணமுடியவில்லை. அந்த ஒரு காரயத்தில் நாம் முயற்சி எடுத்து நமது மானாபிமானத்தைக் காட்டாத வரையில் வேறு எந்தக் காரியத்தில் நாம் வெற்றிபெற்ற போதிலும் அதன் பயனை நாம் அணுபவிக்கவே முடியாது என்பது மாத்திரமல்லாமல் நம்முடைய நாட்டிலே, அதிலும் மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 90-க்கு மேற்பட்ட

மேற்பட்டவர்களாக இருக்கும் நமது நாட்டிலே 100-க்கு 3 பேராய் இருப்பவரும் நமது பிறவி எதிரியும் நமது கேட்டிற்கும் அழிவிற்கும் இழிவிற்குமாகவே உழைத்து வரும் வெகு வெகு சிறு சாதியாரான இனத்தாரிடம் நமது நாட்டுப் பத்திரிகைகளும் பத்திரிகைகளின் ஆதிக்கமும் இருந்து வருவது என்றால், இது நமது சமுதாயத்திற்கு எவ்வளவு இழிவான நிலை என்பதும் யோசிக்கத் தக்கதாகும்- என்பதோடு இது (நம்) போன்ற இழிவான, மானங்கெட்ட சமுதாயம் போன்ற வேறு ஒரு சமுதாயம் நானறிந்தவரை உலகத்தில் வேறு எங்குமே இருப்பதாகத் தெரியவே இல்லை. அது மாத்திரமா?நமது பத்திரிகை என்பவைகளை நமது மக்கள் ஆயிரக்கணக்கில் வாங்கிப் படிக்கிறார்கள் என்றால் நமது எதிரிகளான பார்ப்பனருடையவும், அவர்கள் அடிமைகளுடையவும், அவர்கள் ஆதரவால்தான்-அவர்களுக்க நல்ல பிள்ளையாய் இருந்தால்தான் வாழமுடியும் என்று கருதுபவர்களுடையவுமான பத்திரிகைகளை லட்சக்      (1,00,000) கணக்கில் நமது மக்கள் வாங்கிப் படித்து ஈனமக்களாக ஆகிவருகிறார்கள்.

சாதாரணமாகச் சொல்லுவோமானால் தமிழர் நல்வாழ்வுக்காகவே, மான வாழ்வுக் காகவே, வளர்ச்சிக்காகவேயென்று 45 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் சுயமரியாதை (சமூக முன்னேற்ற) இயக்கம் என்பது ஆரம்பிக்கப்பட்டு, மூலை முடுக்குகளெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தும், நம் எதிரிகளை `பிராமணாள்’ `சாமி’ என்றழைப்பது 1000-க்கு பத்து வீதமான மக்களால் கூட நிறுத்தப்படவில்லை என்பதோடு, பத்திரிகை படிப்பவர்களில் 1000-க்கு ஒருவரால் கூட நம் எதிரிகளது பத்திரிகைகளை வாங்கிப் படிப்பது நிறுத்தப்படவில்லையென்றால் நம் மக்கள் தன்மைக்கு எந்தக் குணத்தை உதாரணமாகக் கூறுவது என்பது நமக்குப் புரியவில்லை.

அது மாத்திரமா? நமது கேட்டிற்கும் இழிவிற்கும் வளர்ச்சித் தடைக்கும் என்பதற்காகவே நடத்தப்படும் நம் எதிரிகளுடைய பத்திரிகைகளால் எதிரிகள் ஆண்டு ஒன்றுக்கு ஒன்று, இரண்டு, மூன்று - ஏன் அய்ந்து இலட்ச ரூபாய்கள் வரை இலாப வருவாய் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

ஆகவே, நமது இழி நிலையானது நமது எதிரிகள்-மேல் சாதியார், பிராமணாள், சாமி என்று நம்மாலேயே அழைப்பவர்களாகவும், நமது செல்வத்தையே ஆண்டு ஒன்றுக்கு ஒன்று முதல் அய்ந்து இலட்ச ரூபாய் வரை இலாப வருவாய் உள்ளவர்களாக இருப்பதற்கு நாம் இடம் கொடுத்து வருகிறோம். நாம் ஆளாக இருந்து வருகிறோம் என்றால் மறுபடியும் நமது நிலை எவ்வளவு இழிவானது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். எனவே நான் எனது 92-வது ஆண்டின் வேலைத் திட்டமாக இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளை நம் மக்கள் பகி·கரிக்கும்படி செய்யும்படியான ஒரு இயக்கத்தைத் துவக்கி நடத்தலாமென்று ஆசைப்படுகிறேன்; ஆத்திரப்படுகிறேன்.

இதற்காக மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நடத்திப் பிரச்சாரம் செய்யச் செய்வது கூடுமானவரை ஒவ்வொரு கிராமங்களிலும் `நம் எதிரிகளின் பத்திரிகை பகி·கார சங்கம்’ என்பதாக ஸ்தாபனம் ஏற்பாடு செய்வதும் இந்தக் காரியத்திற்காக ஒரு இலட்ச ரூபாய் நிதி திரட்டி, பல தொண்டர்களை முழு நேர வேலைக்காரர்களாக ஏற்படுத்தி, நாடெல்லாம் தொண்டாற்றச் செய்யவும் செய்ய வேண்டும் என்று திட்டமிட முடிவு செய்திருக்கிறேன்.

நன்கொடையாளர்கள் பெயர்கள் தெரிவிக்கப்படமாட்டாது. கண்டிப்பாய் ஒவ்வொருவரும் இதற்கு நன்கொடை அளித்தாக வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அதிகாரிகளும், அமைச்சர்களும் உதவ வேண்டும். அவர்களுக்கு இதனால் ஏராளமான பலணுண்டு. மற்ற தலைவர்களும் வியாபாரிகளும் அவசியம் உதவ வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறேன். பொது மக்களும் இதற்கு நல்லவண்ணம் ஆதரவளிக்க வேண்டும்.

இந்தப் பணியானது கடவுளை, மதத்தை ஒழிக்கும் பணியை விட, கோவில்களை இடிக்கும் பணியை விட முக்கியமானதும் பயன் அளிக்கத் தக்கதுமான பணி என்பது எனது உறுதியான எண்ணமாகும். எனவே மளமளவென்று நன்கொடை வரவேண்டுமென்றும்-என்றும் உறுதியும் தகுதியும் உள்ளவர்கள் முன்வரவேண்டுமென்றும் வேண்டிக்கொள்வதோடு, நன்கொடை அளிப்பவர்களை நண்பர் வீரமணி அவர்களிடம் கொடுத்தருள வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன். விஷயம் மிக முக்கியமானதும் செய்து தரப்படவேண்டியதுமான இன்றியமையாத பணி என்றும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். இந்தக் காரியத்தை நான் செய்வதால் எனது வாழ்நாளில் ஒருபயணுள்ள காரியத்தைச் செய்ததாக நான் கருதிக் கொண்டு முடிவடைவேன்.

 (92 வது பிறந்த நாள் விழா மலர் - 17.9.1970)

பெரியார் 92- ( 1970)

 எனக்கு வயது 91. ஆண்டுகள் 91 முடிந்து விட்டன. 17.9.1970 வது நாள் முதல் 92-வது ஆண்டு துவங்குகிறது.

91 வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழித்ததுடன் மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன் வாழ்நாள் தீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் போல் எனக்குத் தோன்றுகிறது.

மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதல்களுக்கு இணங்குபவர்கள் போல் மக்களைக் காண்கிறேன்.

அதாவது கடவுள் மதம், சாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதலடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காணூகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும் மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் அவாவுக்கும் காரணமாகும்.

இந்த நிலையில், நான் எனது 92-வது பிறந்த நாள் சார்பாக மக்களுக்குத் தெரிவித்துக்கொள்வதெல்லாம், மனம் துணிந்து மேலும் மாறுதலடையுங்கள் என்பதேயாகும். 

நான் இந்த நிலை அடைந்ததற்கும் மக்களை இந்த அளவுக்கு நான் வேண்டுவதற்கும் முக்கியமான காரணம், இந்த இரண்டு மூன்றாண்டுகளாக நமது நாட்டில் நடந்து ஆட்சியாகும்.

நமது நாட்டு ஆட்சியானது பகுத்தறிவு ஆட்சி என்பதோடு எந்தவித மாறுதலுக்கும், எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு  பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டிருக்கிறது. இது இயற்கையின் காரணம் என்றாலும் மக்கள் இன்ப வாழ்வு வாழ்கிறார்கள் என்று திருப்தியடையத்தக்கதாகவே இருந்து வருகிறது. எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.

இவற்றை ஏன் பெருமையாகக் குறிப்பிடுகிறேனென்றால், பதவி வெறியால் தூண்டப்பட்ட எதிரிகள்,எதிர்க் கட்சிகள், `தங்கள் சமுதாயத்திற்கு ஆபத்து வந்து விட்டது’ என்று கருதிப் பயந்து கிடக்கும் நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் இந்த ஆட்சியை அழிக்கச் செய்த,செய்து வருகிற இமாலயப் பிரயத்தனங்கள் தவிடு பொடியாகி வருவதுடன் எவ்விதத் தடையுமின்றி ஆட்சியின் காரியம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருப்பதுதான்.

இந்த நிலையில் தான் எனது 92-வது ஆண்டு செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்ன வென்றால், இந்த ஆட்சியை இன்ணும் ஒரு பத்தாண்டுக்குப் பாதுகாத்து வரவேண்டுமென்பதே ஆகும்.

தேசம் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. யாரும் எப்படிப்பட்ட வரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காணமுடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத் தக்கதாய் இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சிதான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம், ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்குக் கேடில்லாமல் ஆள முடியும்?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்த ஆட்சிக்க மாற்றம் ஏற்படுமானால் அடுத்துவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான்-அதாவது வருணாசிரமத்தை நிலைநிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி. உறுதியேயாகும். ஏனிப்படிச் சொல்கிறேன் என்றால் இந்தியா முழுவதற்குமே இன்று வருணாசிரமப் பாதுகாப்பு ஆட்சி, கட்சி, மக்கள் என்பவர்கள் அல்லாமல் வேறு கட்சியும் இல்லை. மக்களும் இல்லை. கொள்கையும் இல்லை. காமராசர் பலமற்றுப் போய்விட்டார். அவரது எண்ணங்களும் மாற்றமடைந்து வருகிறது. பார்ப்பனரைத் தஞ்சமடைய வேண்டிய நிலைமைக்கப் போய்க்கொண்டிருக்கிறார். அவரது கட்சியும் (காங்கிரசும்) உருக் குலைந்து விட்டது. அவருக்கு உதவியாளரும் யாரம் தகுதியானவரில்லை. இவை மாத்திரமா? நமது பொது எதிரியான பார்ப்பனத் தலைவர் - நம் சமுதாயத்தை அழித்து ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இராஜாஜி பலம் பெற்று வருகிறார். இதற்குக் காரணம் காங்கிரஸ் பிளவுபட்டதேயாகும்.

இந்த நிலையில் இன்றைய நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராசர் ஆட்சி ஒருநாளும் அந்த இடத்திற்கு வராது; மற்றெது வருமென்றால் பார்ப்பனர் ஆட்சி-இராஜாஜி ஆதிக்க ஆட்சி தான் வரும். அதுவோ வேறு எதுவோ வந்தாலும் பழிவாங்கும் ஆட்சியாய்தானிருக்கும். அல்லது அசல் காலித்தன, பலாத்காரத்தாண்டவ ஆட்சியாகத்தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 

ஆகவே எனது 92 ஆம் ஆண்டுச் செய்தி என்பதாக எனது 91 ஆண்டு அணுபவ அறிவைக் கொண்டு சொல்லுகிறேன்.

மக்கள் எல்லோரும் பகுத்தறிவுவாதிகளாக மாறுங்கள்!

எப்பாடு பட்டாவது இன்றைய நம் தி.மு.க. ஆட்சியை இனியும் ஒர பத்தாண்டுக்கு நல்ல பலம் பொருந்திய ஆட்சியாக இருக்கப் பாடுபடுங்கள் என்பதுதான்.

(92 வது பிறந்தநாள் விழா மலர் -17.9.1970

பெரியார் 91 - (1969)

 எனது 90-வது ஆண்டு `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்கின்ற கட்டுரை எழுதும் போது, 91 வது ஆண்ட `பிறந்த நாள் விழா’ மலருக்கு `எனது நிலை’ என்பது பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் எழுதினேன். என்றாலும் எப்படியோ 91-வது ஆண்டு `பிறந்த நாள் விழா’ மலருக்கும் `எனது நிலை’ என்பது பற்றி எழுதும் படியான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதாவது 90-வது ஆண்டு `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்ற கட்டுரையில் `எனக்கு வயது 90’ உடல் நிலை மிகவும் மோசம்; கைகால் நடுக்கம் அதிகம்; சிறுநீர் கழிக்கும் போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன். அதாவது, அவ்வளவு வலி; தூக்கம் சரியாய் வருவது இல்லை.

நினைத்த போது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலியேற்பட்டு சில ஏப்பமோ, காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது. உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை; முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை; எந்த காரியம் பற்றியும் மனத்திற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது; நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுவதும் ஏப்பம் வந்த பிறகு குறைவதுமாக இருக்கிறது. எதைப்பற்றியும் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது.

சுருக்கமாகச் சொல்லுவதானால், வாழ்வே வெறுப்பாக இருக்கிறது. என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள். அந்தப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ 100-இல் இருந்து ரூ 150 ஆக ஏற்படுத்தி விட்டேன்.

ரூ.100 எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்திய செலவு முதலியவைகளுக்கு அனேகமாகச் சரியாய்ப்போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2,3 பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி,பிரச்சாரத்திற்குப் பயன்படும்.

எனக்கு இனிப் பிரச்சாரத்தில் ஆசை இல்லை. ஒரு வாரப் பத்திரிகை துவக்கி, அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதில்தான் ஆசை அதிகமாக இருக்கிறது. மற்றும் வெளியாக்கப்பட வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது. இதற்காக எளிதில் காணமுடியாத ஒரு தனி இடத்திற்குப் போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய்விடலாமா என்று கூட எண்ணூகிறேன்.

இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்குக் கவலை இல்லை. இருந்த வரை தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன். ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும், ஏற்படுவதும் இயற்கையேயாகும். அதுபோல் என் முடிவும் இருக்கலாம்.

பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னமோ’ இந்தப்படி எழுதியிருக்கிறேன். அதை ஊன்றிப்படித்தாலே நான் எழுதியதின் தன்மை விளங்கும்.

இப்போது எனக்கு 90 ஆண்டு முடிந்து 91-வது ஆண்டு நடக்கிறது என்றாலும் 90-வது ஆண்டுக்கும் 91-வது ஆண்டுக்கும் இடையில் ஏற்பட்ட எனது உடல் நிலையின் தன்மை 91-வது ஆண்டு போல் இல்லாமல் 94,95 வது ஆண்டு என்று கருதும் படி அவ்வளவு கிழத்தன்மை ஏற்பட்டுவிட்டது என்று ஆகிவிட்டது. இது உடல் நிலை மாத்திரமல்லாமல் பஞ்சந்திரியங்களோடு புத்தி, மனது, சிந்தனா சக்தி முதலிய தன்மைகளும் மிக்கக் குறைந்து பலவீனப்பட்டு விட்டன.

என்றாலும், இவ்வோராண்டு நாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தால் எனக்கு மற்ற கருவி காரணாதிகளின் பலக் குறைவு எப்படி இருந்தாலும் மனம் உற்சாகம் அடையும்படியான பல நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன.

முதலாவது நிகழ்ச்சி நமது தி.மு.க. ஆட்சியில் 13 மந்திரிகளில் 13 பேரும் தமிழர்கள் என்பதோடு, 18 அய்க்கோர்ட் ஜட்ஜுகளில் 14 பேர் தமிழர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்) டெல்லி ஆதிக்கமில்லாத அதிகாரங்களில் 100-க்கு 500-க்கு மேல் 75 வரை பார்ப்பனரல்லாதவர் இருக்கும்படி ஆகிவிட்டது. அரசியலில் ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் தலைவர்கள், பணியாளர்கள் யாவருமே 100-க்கு 100-ம் தமிழர்களேயாவார்கள். இதை அணுசரித்தே மற்ற நிலைகளும் மாற்றமடைந்து வருகின்றன. இவ்வளவுக்கும் காரணம் தி.மு.க. ஆட்சி என்றே சொல்லுவேன்.

காங்கிரஸ் மத்திய ஆட்சி ஆதிக்கத்திலும், பச்சையாகப் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிளவும், வடநாடு-தென்னாடு என்கின்ற உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகிவிட்டது. இவையெல்லாம் நம் தமிழர் சமுதாய விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் நல்ல வெற்றிவாய்ப்பு என்றே சொல்லத் தக்கவையாகும்.

மற்றும், 90 வது `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்ற கட்டுரை முடிவில் `துறவியாய்ப் போய் விடலாமா’ என்று எழுதி இருக்கிறேன். இன்று எனக்கு அப்படி இல்லை. அந்த எழுத்தைப் பார்த்து உயர் காமராசரும் அறி…ர் அணணாவும் எனக்குத் தெரிவித்தது போல், அதாவது `இப்போது உங்களுக்கு எதற்காகக் கவலை? நீங்கள் நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறது? கவலையை விட்டு விடுங்கள்’ என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் `விபீஷணப் பரம்பரை’ வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில `சாதிக்கு’ (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதேயாகும். ஆகவே, எனது 90-வது வயதைவிட 91-வது வயது திருப்தியையும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து. விபீஷணர்கள் திருந்துவார்களாக.

தி.மு.க. ஆட்சி இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். எனக்கு இதற்குமேல் கருத்தும் ஓட வில்லை. எழுதவும் முடியவில்லை.

 (91 வது பிறந்த நாள் விழா மலர், 17.9.1969)