Tuesday, January 14, 2025

பறைக்கருவிகளை எரிக்கச் சொன்னவர் பெரியார் - திரிபுவாதங்களுக்கு ஆதாரத்துடன் மறுப்பு (2) - கொளத்தூர்மணி


பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்தபின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் ஒவ்வொருநாளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக மற்றொரு செய்தியையும் பார்ப்போம்.  

அது 21.12.1946 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் துணைத் தலையங்கமாக “தாழ்த்தப்பட்டோரும் தப்பட்டை வாசித்தாலும்” என்ற தலைப்பில் வந்துள்ள வேண்டுகோள் அறிவிப்பு.

“சென்ற சில மாதங்களுக்கு முன்பு (கடந்த நவம்பர் மாதம் என்பதே சரி) பெரியார் ஈ.வெ.ராமசாமியவர்கள் வாணியம்பாடியில் சொற்பொழிவு நிகழ்த்தும்போது (சொற்பொழிவு முடிந்தவுடன் என்பதேசரி)  அக்கூட்டத்திலேயே “பறையர்கள்” எனப்படுவோர் தமது இழிவுக்கு காரணமான தப்பட்டைகளைக் கொளுத்திவிட்டனர் என்ற செய்தி யாவரும் அறிந்ததே.  இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் பல இடங்களில் பலர் தமது பறைகளைக் கொளுத்தி வருகின்றனராம். 

தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஒருவரான “பறையர்” எனப்படுவோர் தமது தொழிலின் காரணமாகவே பறையர் என்று அழைக்கப்படுவதும், அதனாலேயே இழிவாக எண்ணப்படுவதும், நடத்தப்படுவதும் யாவரும் நன்கு அறிந்த செய்திகளே யாகும்.  எனவே, வாணியம்பாடி தோழர்களைத் தொடர்ந்து எல்லா ஊர்களிலுள்ள பறையர் என்றழைக்கப்படும் தோழர்களும் தம்பரம்பரை இழிவுக்கே காரணமானதும் வேண்டிய வருவாய் கொடுக்க வழியற்றதுமான இத்தொழிலைக் கைவிடுவதற்கு அறிகுறியாக தமது தப்பட்டைகளை கொளுத்தி தமது வெறுப்பை வெளிப்படையாய் தெரிவித்துக் கொள்வார்களாக!

“இதற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தருமாறு ஆங்காங்குள்ள உள்ள திராவிடர்கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.”  

இதுவே அந்த வேண்டுகோள் அறிவிப்பாகும்.

மேற்கண்டவாறு 1946ஆம்ஆண்டு நவம்பர் மாதத்தில் தன் முன்னிலையில் பறைகள் எரிக்கப்பட்டதை அனுமதித்த பெரியார் - 1946 டிசம்பர் மாதத்தில் இவ்வாறான எரிப்புகளை நடத்துமாறும், நடத்துவதற்கு திராவிடர் கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டு தனது ஏடான குடிஅரசு ஏட்டில் வேண்டுகோளை வெளியிட்ட பெரியார்தான்,  இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1948 டிசம்பரில் தன்னை சந்தித்து ஆதரவுகேட்ட இளையபெருமாள் அவர்களிடம் “ பறையடிப்பதை நீங்கள் செய்யாவிட்டால் யார்செய்வார்கள்?” என்று கேட்டாராம்.

'கேழ்வரகில் நெய்வடிகிறது' என்று 2010ல் ரவிக்குமார் எழுதியுள்ளதை சரிபார்த்தல் ஏதுமின்றி பாலசிங்கம் ராஜேந்திரன் 2023இல் மீள்பதிவு செய்துள்ளார்.

புத்திஉள்ளவர்கள் புரிந்துகொள்ளவே இவ்விளக்கங்கள்:

ஆனால் தோழர் ரவிக்குமார் எழுதியுள்ள நூலில் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை பெரியார் அவர்கள் இல்லத்தில் சந்தித்த இளையபெருமாள் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை மட்டும் ஏனோ தோழர் பாலசிங்கம் ராஜேந்திரன் பதிவுசெய்யவில்லை. தேதி, மாதம் ஆகியவற்றை அப்படியே மீள்பதிவு செய்யாமல் 1948ஆம்ஆண்டு என்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார். 

இதற்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. 1948ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான், சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சென்னை மாகாண அரசாங்கம் மீண்டும் இந்தியைத் திணிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த காலக்கட்டம் அது.

 20-6-1948 அன்று சென்னை மாகாணத்தில் ’கட்டாயஇந்தி’ என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.  தமிழ்பேசும் பகுதிகளில் இந்திமொழி விருப்பப் பாடமாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம்பேசும் மக்கள் வாழும்பகுதி யில் கட்டாயப் பாடமாகவும் அரசின் அந்த அறிவிப்பு கூறியது. 

அதனைக்கண்டித்து 17.7.1948 அன்று சென்னை புனிதமேரிமண்டபத்தில் “இந்தித்திணிப்பு எதிர்பாளர்கள் மாநாடு” திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் பெரியார், திரு.வி.க., பாரதிதாசன், ம.பொ.சி, அண்ணா, நாரண. துரைக்கண்ணன், டாக்டர் தருமாம்பாள், அருணகிரி அடிகள் ஆகியோரும் பங்கேற்றனர். 

தொடர்ந்து பலமாநாடுகள், புலவர் மாநாடு,  மாணவர் மாநாடு, பெண்கள் மாநாடுகளும்,  கவர்னர்ஜெனரல் ராஜாஜிக்கு கருப்புகொடி,  அமைச்சர்களுக்கு கருப்புகொடி,  கண்டன ஊர்வலங்கள் என பலவகைப் போராட்டங்கள் தொடர்கின்றன.

 22 8 1948 அன்று சென்னையில் திராவிடர்கழகத்தின் மத்திய நிர்வாகக்குழு இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து ஆலோசிக்கக் கூடியபோது பெரியார், அண்ணா, தி.பொ. வேதாச்சலம், குத்தூசி குருசாமி உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் (சுமார் 100 பேர்கள்) கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் சிறையில் வைத்திருந்து 27.8.1948  அன்று விடுவிக்கப்படுகின்றனர்.

ஐதராபாத் சமஸ்தானத்தில் இந்தியப்படைகள் நுழைந்துள்ள போர்ச்சூழலைக் கருத்தில் கொண்டு இந்திஎதிர்ப்புப்போர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு,  மீண்டும் 2.11.1948 முதல்தொடங்கியது. 

இந்தகட்டத்தில்தான் காவல்துறை யின் வெறியாட்டங்கள் தொடங்குகின்றன.  2.11.1948 அன்றே 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. தடையை மீறி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடக்கின்றன.  தூத்துக்குடி, மதுரை, கோவில்பட்டி, திருக்கோவிலூர்,  திருவாரூர், நன்னிலம், குடவாசல், பேரளம், கள்ளக்குறிச்சி, வேலூர்,  விழுப்புரம் ஆகிய இடங்களில் 144 தடையைமீறி ஊர்வலங்கள் நடந்த போது காவல்துறை கண்மூடித்தனமாக தோழர்களைத் தாக்கி எலும்புமுறிவு, மண்டை உடைப்பு என்ற அளவுக்கான காவல்துறை அத்துமீறல்கள் நடந்தேறின.  

அதனால் பெரியார் 144 தடைஆணை உள்ள கும்பகோணத்தில் 18.12.1948 அன்று மறியலில் ஈடுபடுகிறார். அன்று நள்ளிரவு 2:30 மணிக்கு கைது செய்யப்பட்ட பெரியார் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறார்.  அங்கு வந்த சப்கலெக்டர்  “144 சீக்கிரத்தில் எடுக்கப்பட்டுவிடும்; நீங்கள் ஊர்வலத்தை நிறுத்திவிடுங்கள்” என்று கேட்க, பெரியார் “ சீக்கிரம் என்றால் எனக்கு ஒருகுறிப்பு வேண்டும், ஒருவாரத்தில் எடுத்து விடுவீர்களா?” என்கிறார்.

அதற்கு சப்கலெக்டர் "அரசாங்கத்தோடு கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறார். “அதற்கு இரண்டுநாள் போதுமே!  அதுவரை நிறுத்துகிறேன்“ என்கிறார் பெரியார்.  ஆனால் நாள்குறிப்பிடாமல் நிறுத்துங்கள் என்று வேண்டுகிறார் சப்கலெக்டர். “என்னுடைய முடியாமையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முடித்துக்கொள்கிறார் பெரியார்.

19.8.1948 இரவு எட்டுமணிக்கு 9 நாட்கள் ரிமாண்ட் என்று அறிவிக்கிறார்கள்.  இரவு 10 மணி வரை அழைத்துபோகப்படாததால் அங்கேயே படுத்து அனைவரும் தூங்கிவிடுகிறார்கள்.  அடுத்தநாள் காலை பெரியார் மட்டும் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று கூறி ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு அழைத்துச் செல்லப்படுகிறார்.  திருச்சி சிறைக் கண்காணிப்பாளரோ “151 பிரிவில் கைது செய்யப்பட்டவர்களை அரசின் ஆணையின்றி சிறையில் வைக்க முடியாது“ என்று மீண்டும் கும்பகோணத்திற்குத் திருப்பி அனுப்பிவிடுகிறார்.  தஞ்சை வந்து காவல்துறை கண்காணிப்பாளர் தஞ்சை சப்ஜெயிலில் ஒன்பது நாட்களுக்கு வைக்குமாறு ஆணைவழங்குகிறார்.  ஆனால் தஞ்சை சப்மாஜிஸ்திரேட் கும்பகோணம் சப்கலெக்டர் கொடுத்த ரிமாண்டை ஏற்றுக்கொள்ளமுடியாது உள்ளூர் அதிகாரி கொடுத்தால்தான் ஒத்துக்கொள்வேன் என்று திருப்பி அனுப்புகிறார். பின்னர் தஞ்சை அடிசனல் மேஜிஸ்திரேட்டிடம் ஆணைபெற்று வந்து தஞ்சை கிளைச்சிறையில் அடைக்கப்படுகிறார் பெரியார். (20.12.1948) அன்றுமாலை 4 மணியளவில் ஒரு உளவுத்துறை காவலர் பெரியாரின் அறைக்குவந்து உங்களுக்கு இப்போது எங்கு செல்ல ஆசை என்று கேட்கிறார்.  பெரியாரும் எந்த சிறைக்கு செல்கிறீர்கள் என்று கேட்பதாக கருதிக்கொண்டு சென்னைக்கு அனுப்புங்கள் என்று கேட்கிறார்.  அவர் சென்ற சிறிது நேரத்தில் சப்மாஜிஸ்திரேட் வந்து உங்களை விடுதலை செய்யச் சொல்லி ஆணைவந்துவிட்டது. ஆனால் அவ்வாணையில் அடிஷனல் மாஜிஸ்ட்ரேட் கையெழுத்து இல்லாததால் மீண்டும் அனுப்பியுள்ளேன் என்று கூறுகிறார்.

மாலை 5 மணிஅளவில் பெரியாரைக் காண பெரியகூட்டம் வெளியே கூடிவிட்டது. பெரியாரும் பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது காவல்துறை 6.30 மணிக்குதான் விடவேண்டும் என்று சொல்லிவிட்டதாக பெரியாருக்குத் தெரிவிக்கப்படுகிறது.  அதுபோலவே 6.30 மணிக்கு காவல் துணை கண்காணிப்பாளர், ஒருசார்ஜண்ட், ஒருஉதவிஆய்வாளர், நான்கு காவலர்கள், ஒரு கார், லாரியுடன் வந்து பெரியாரைவெளியே அழைத்துச் செல்கிறார்கள். 

வெளியேமக்களும் தோழர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடிகளுடன் முழக்கம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அவர்களிடம் பேசக்கூட முடியாதவாறு பெரியார் காரில் ஏற்றப்பட்டு காவல்துறை லாரி ஒன்று பின்தொடர மக்கள்கூட்டத்தை விரட்டித் தள்ளிகொண்டு வெளியேசெல்கிறது. 

பத்துமைல் தூரத்திலிருந்த அய்யம்பேட்டை ரயில்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.  தஞ்சையில் கட்டுப்படுத்த முடியாத அளவு மக்கள் இருந்ததால் இங்கு அழைத்துவரவேண்டியதாகிவிட்டது என்று துணைகண்காணிப்பாளர் விளக்கம் கொடுத்துவிட்டு 20.12.1948 அன்று இரவு அங்கிருந்து தொடர்வண்டியில் ஏற்றி அனுப்பிவைக்கிறார்கள். 

21.12.1948 அன்று காலை 5.40 மணிக்கு தொடர்வண்டி சென்னை எழும்பூர் வந்து சேர்ந்துள்ளது.

அன்றே சென்னை டாக்டர்சடகோபன் அவர்களிடம் பெரியார் அவர்களுக்கு உடல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

மேற்கண்டசெய்திகள் 21.12.1948, 22.12.1948  நாளிட்ட விடுதலை இதழில் வெளிவந்துள்ள செய்திக்குறிப்பிலும்,  பெரியார் எழுதியுள்ள “ எனது அரஸ்ட் வேடிக்கை” என்ற நீண்டகட்டுரையிலும் காணக்கிடக்கின்றன (இந்தி எதிர்ப்புப் போராட்டம் 31.12.1948 இல் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 1949ஆம்ஆண்டில் இந்தித்திணிப்பு ஆணைதிரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

பெரியார் 18.12.1948 இரவு கைது செய்யப்பட்டு 20.12.1948 அன்று மாலை தஞ்சையில் விடுதலை செய்யப்பட்டு தொடர்வண்டியில் அனுப்பப்பட்டு 21.12.1948 காலையில் சென்னை வந்து சேர்ந்துள்ளார் என்பதை எடுத்துக் கூறுவதே இவற்றை விரிவாக எழுதவேண்டி வந்ததன் நோக்கம் ஆகும்.

தோழர்ரவிக்குமார் 2010ஆம் ஆண்டில் வெளியிட்ட “எல். இளையபெருமாள் வாழ்வும்பணியும்” என்ற நூலில், இளையபெருமாள் அவர்களின் கூற்றாக (21.12.1948 அன்று காலை சென்னை வந்து சேர்ந்த பெரியாரை) 20.12.1948 அன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் சந்தித்து பெரியாரிடம் பறைஒழிப்புக்கு ஆதரவுகேட்டபோது “ நீங்கள் செய்யாவிட்டால் யார் செய்வார்கள்?”  என்று பெரியார் எதிர்க்கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளது தவறானதாகும், பொய்யானதாகும்.

பொய்யை உருவாக்கியவர் இளையபெருமாளா? ரவிக்குமாரா? அவரவர் யூகித்துக் கொள்ள வேண்டியதுதான்.  - (தொடரும்)

நன்றி : புரட்சி பெரியார் முழக்கம்      14-9-2023

பெரியார் மீதான விமர்சனங்களுக்கு மறுப்பு (3)

 

நேர்காணலா? நேர்மையற்ற காணலா? 

                                                                       - - -கொளத்தூர்மணி

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்தபின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் ஒவ்வொருநாளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

 இதே ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு, நெய்வேலியில் இருந்து வெளிவந்த ‘தலித்’ இதழில் இதே இளையபெருமாள் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.

‘தலித்’ எண்.1 இதழ் ஏப்ரல்,1997 இதழில் ஒருநேர்காணல்:

“தற்கொலைப் படையாக மாறுங்கள்!  

தலைவர் எல்.இளையபெருமாளிடம் ஒருபேட்டி..."என்ற தலைப்பில் பக்கம் 11  முதல் பக்கம் 17 முடிய ஏழு பக்கங்களைக் கொண்ட பேட்டி அது. 

 நாம் விவாதிக்கும் பொருள் குறித்த செய்தி பக்கம் 15இல் உள்ளது.

கேள்வி: கே.பி.எஸ்.மணியோடு உங்களுக்கு எப்போது இருந்து பழக்கம்? 

பதில்: 1945 முதல் அவரோடு பழக்கம்.  முதலில் அவர் பெரியார் கட்சியில் இருந்தார். பெரியார் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுமனசோடு பாடுபடவில்லை. அம்பேத்கர் பிறந்தவிழா நடத்தியதற்காக 'தொண்டு' வீராசாமியை பெரியார் கட்சியைவிட்டு நீக்கினார்.  'பறைமேளம் அடிக்கக்கூடாது' என்று கே.பி.எஸ்.மணி பிரச்சாரம் செய்தார். 

'பறை மேளம் அடிப்பதால் என்ன தவறு' என்று பெரியார் அவரிடம் கேட்டார். 'நம் கட்சிக்காரர்கள் அனைவரும் மேளம் அடிக்கலாமென உத்தரவு போடுங்கள். நான் அதை எதிர்க்கவில்லை.  ஆனால் எங்கள் சாதி மக்களை மட்டும் அடிக்கச் சொன்னால் அதை நான் எதிர்ப்பேன்' என்று பெரியாரிடம் கே.பி.எஸ்.மணி சொல்லிவிட்டார். தன்னை எதிர்த்துப் பேசியது பிடிக்காமல் அவரைப் பெரியார் கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்... "என்ற பகுதியே அது.

பூவிழியன் என்பவரால் எழுதப்பட்டு 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ”கே.பி.எஸ்.மணி :  ஒரு போராளியின் வரலாறு” என்றொரு நூல்.

 எல்.இளையபெருமாள் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய கே.பி.எஸ். மணி என்பவரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் அது. 

அந்நூலின் 110,111 ஆகிய பக்கங்களில் உள்ள செய்தி ஒன்றினைக் காண்போம்.

ராணுவத்திலிருந்து 1946-ல் திரும்பியப் பிறகு ‘விடுதலை’ பத்திரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு “நான் இந்தகட்சியை இங்கு ஆரம்பிக்கப்போகிறேன்”என கே.பி.எஸ்.மணி அலைந்துள்ளார்.  தந்தையை ஒருநாள் நள்ளிரவில் எழுப்பி இதனைக்கூறியும் இருக்கிறார்.  தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு பற்றி பெரியார் விடுதலை பத்திரிக்கையில் எழுதியதாலும், இவைகளைப்பற்றி கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து வருகின்றார் என கேள்விப்பட்டதன் வாயிலாகவும் இவரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவராக இரண்டு வருடங்கள் இருந்தார் கே.பி.எஸ்.மணி.

அப்பொழுது பெரியார் சிதம்பரத்தில் திராவிடர்கழகக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவரும்போது அதில் கே.பி.எஸ்.மணி கலந்து கொண்டார்.  கூட்டம் நிறைவு பெற்றபின் கே.பி.எஸ்.மணி ஒரு வேண்டுகோளை பெரியாரிடம் கூறினார்.  அதாவது தாங்கள் தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பிற்காக மிகக் கடுமையான முறையில் பாடுபட்டு வருகிறீர்கள்.  அதனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே செய்கின்ற பிணம் புதைத்தல், பறை அடித்தல்,  பிணக்குழி வெட்டுதல், இறந்த மாடுகளைத் தூக்குதல் போன்ற வேலைகளை இனிசெய்யக்கூடாது.  அவரவர் வகுப்பில் உள்ளவர்களே அவர்களுக்கான இவ்வேலையை செய்து கொள்ளவேண்டும் என 'விடுதலை'யில் ஒருநாள் தலையங்கம் எழுதுங்கள் என்று கேட்டார்.

உடனே பெரியார் “மணி, என் கட்சியையும், என் பத்திரிக்கையையும் ஒரே அடியாகக் கெடுக்கிறதா நீ முடிவுபண்ணிட்டியா,  இந்தத் தொழில் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யக் கூடாதுன்னா,  அப்புறம் யார் தான் செய்யுறது” எனக்கேட்டார். 

இதற்கு பதில் கூறவிரும்பாத கே.பி.எஸ்.மணி அன்றைய தினத்தில் இருந்து பெரியாரின் உறவையும், அவரின் கொள்கைகளையும் விட்டுவிலகினார்.

கே.பி.எஸ்.மணி 1946-இல் இராணுவத்தில் இருந்து திரும்பிய பின்னர் திராவிடர்கழகத்தில் இணைந்தார். இரண்டு ஆண்டுகள் இருந்தார். பெரியார் பறைஒழிப்பை ஏற்கவில்லை; அதனால் திராவிடர்கழகத்திலிருந்து விலகினார். இதுவே அவரது வாழ்க்கை வரலாற்று நூல்சொல்லும் செய்திகளின் சாரம்.

இவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வோம்.  1947 முதல் 1948 முடிய பெரியார் இரண்டு முறை மட்டுமே சிதம்பரம் வந்துள்ளார். முதல்முறை 1947 மார்ச் 8ஆம்நாள். இரண்டு ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் இருந்துள்ளார் கே.பி.எஸ்.மணி. 

 எனவே சந்திப்பும் விவாதமும் நடந்தது அந்த நாளில் இருக்க முடியாது.  அடுத்ததாக சிதம்பரம் வந்தது 29.9.1948 அன்று நடந்த பொதுக் கூட்டத்திற்காகத்தான்.  அன்று நடந்த சிதம்பரம் நிகழ்வை குறித்து 30.9.1948 விடுதலை கீழ்காணும் செய்தியை வெளியிட்டுள்ளது.

சிதம்பரம், செப் 29 :  கழகக்கொடி தாங்கிய ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் முன்னே அழகுற அணிவகுத்துச் செல்ல, பல்லாயிரக்கணக்கான மக்கள் இயக்க ஒலிமுழக்கம் செய்துகொண்டு பின்செல்ல, பெரியார் அவர்களும் தோழர் மதியழகன் அவர்களும் காரில் அமர்த்தப்பட்டு இவ்வூர் மேலவீதி அஞ்சல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டனர்.  மாலை 5 மணிக்கு ஊர்வலம் தொடங்கி தெற்குவீதி, ரயிலடித்தெரு இவற்றின் ஊடேசென்று 5:45க்கு டவுன்ஹால் மைதானத்தை அடைந்தது. பெரியார் அவர்கள் காரைவிட்டு இறங்கவும், ஏற்கனவே மைதானத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் “பெரியார் வாழ்க, பெரியார் வாழ்க” என்று வாழ்த்தொலி முழக்கம்செய்து பெரியார் அவர்களை வரவேற்றனர். ஆங்காங்கு மின்விளக்குகளும், ஒலிபெருக்கிகளும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில் உள்ளூர் வெளியூர் தோழர்கள்   15 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர்.  பெரியார் அவர்கள் மேடைமீது அமரவும் தோழர்கள் இன்னிசைபாடினர்.  பிறகு மதியழகன் தலைமையில் பொதுக்கூட்டம் இனிது தொடங்கியது.  தில்லை திராவிடர் கழகத் தலைவர் தோழர் கிருஷ்ணசாமி அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூற, தோழர் திருநாவுக்கரசு அவர்கள் தில்லை திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் அவர்களுக்கு வரவேற்புரை வாசித்தளித்தார்.  பிறகு செல்வம் வாசகசாலை, அவ்வையார் கல்விக் கழகம், தெற்கிருப்பு மக்கள்கழகம், அண்ணாமலைநகர் இளைஞர்கழகம், புவனகிரி நெசவு தொழிலாளிகள் சங்கம், அண்ணாமலைநகர் திராவிடமாணவர்கழகம், கூத்தன் கோயில் திராவிடர்கழகம் ஆகிய கழகங்கள் சார்பாக மலர்மாலைகள் அணிவிக்கப்பட்ட தோடு,  கூத்தன் கோயில் திராவிடர்கழகத்தின் சார்பாகவும், திருவிடைமருதூர் திராவிடர்கழகத்தின் சார்பாகவும் முறையே 101 நாலணாக்கள் கொண்ட பணமுடிப்புகள் இந்தி எதிர்ப்பு நிதிக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது.

தோழர் மதியழகன் தலைமை உரைக்குப் பின்பு தோழர்ஏ.பி. ஜனார்த்தனம் அவர்கள் சிறிதுநேரம் பேசினார்.  பிறகு பெரியார் அவர்கள் நீண்ட கைத்தட்டலுக்கிடையே எழுந்து, காந்தியார் மறைவுகுறித்தும், ஜின்னாமறைவு (11.09.1948)  குறித்தும் வருத்தம் தெரிவித்துக் கொண்டதோடு இவர்கள் மறைவால் நாட்டுக்கேற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டு விட்டு திராவிடர்கழகத்தின் வளர்ச்சி, திராவிடர்கழகத்தால் சாதிக்கப்பட்ட அருஞ்செயல்கள்,  காங்கிரசின் பிற்போக்கு, பார்ப்பனிய வர்ணாசிரம தர்மம் அழிக்கப்பட வேண்டியதன் அவசியம்,  இந்திஎதிர்ப்பின் நேர்மை, மாணவர்கடமை, பெண்கள் முன்னேற்றம் என இன்னோரன்ன பலவிஷயங்கள் பற்றியும் மிகத் தெளிவாக சுமார் 3:15  மணிநேரம் பேசினார்.

கூட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கான மக்களும் பெரியார் அவர்களது சொற்பொழிவை மிக அமைதியாகக்கேட்டனர். 

தாய்மார்களும், குறிப்பாக கல்லூரி மாணவிகளும் பெரும்அளவுக்கு கூட்டத்தில் வந்து கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.  இரவு 10:30 மணிக்கு கூட்டம் இனிது முடிவுற்றது.

பெரியார் அவர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு, தோழர் பொன்ராமலிங்கம் அவர்கள் அழைப்புக்கிணங்கி அவருடன் புதுவை வந்து இரவு 1  மணிக்கு உணவு எடுத்துக்கொண்டு திண்டிவனம் வழியாக 30ஆம்தேதி காலை சென்னை வந்து சேர்ந்தார்கள்.

இவ்வாறு முழுசெய்தியையும் எழுதவேண்டிவந்ததற்குக் காரணம் இல்லாமல்இல்லை.

”பெரியார் சிதம்பரத்தில் கழகக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவரும்போது அதில் கே.பி.எஸ்.மணியும் கலந்து கொண்டார்.  கூட்டம் நிறைவுபெற்ற பின் கே.பி.எஸ்.மணி ஒரு வேண்டு கோளை பெரியாரிடம் கூறினார்” என்கிறது கே.பி.எஸ்.மணியின் வாழ்க்கைவரலாறு.

29.9.1948 அன்று கூட்டம் முடிவுற்றதும், ‘பெரியார் அவர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு தோழர் பொன்.ராமலிங்கம் அவர்கள் அழைப்புக்கிணங்கி அவருடன் புதுவைபுறப்பட்ட செய்தியை ‘விடுதலை’ஏடு கூறுகிறது. 

அவ்வாறாக கூட்டமைதானத்தில் இருந்து புதுவை தோழருடன் புறப்பட்டு விட்ட பெரியாரிடம் கே.பி.எஸ்.மணியின் வாழ்க்கை வரலாற்றுநூல் கூறுவது போன்ற (கூட்டம் நிறைவுபெற்ற பின் கே.பி.எஸ்.மணி ஒருவேண்டுகோளை பெரியாரிடம் கூறினார் ) நீண்ட உரையாடலை நிகழ்த்துவதற்கான வாய்ப்பெதுவும் இருந்திருக்கமுடியாது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

தொகுத்துப்பார்ப்போம்.

ரவிக்குமார் இளையபெருமாள் அவர்களின்  “75வது பிறந்தநாளின் போது அவரிடம் பதிவு செய்யப்பட்ட அவரது சுருக்கமான தன் வரலாற்றை    ‘சித்திரைநெருப்பு’என்றபெயரில் சிறுநூலாக வெளியிட்டேன்.  அந்த ஆண்டுதான் தமிழகஅரசின் ‘ அம்பேத்கர் விருது’ அவருக்கு வழங்கப் பட்டது“ என்று அவரது 2010ஆம் ஆண்டு பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். (இளைய பெருமாளுக்கு தமிழக அரசின் ‘அம்பேத்கர்விருது’ வழங்கப்பட்டது 24.12.1998 அன்று ஆகும்)

அந்த ‘சித்திரைநெருப்பு’ நூலின் 56ஆவது பக்கத்தில் பறைஒழிப்புக்கு ஆதரவு கேட்டபோது “இந்ததொழிலை வேறுயார் செய்வது?  இளைய பெருமாள் நீயே ஒருமாற்றுக்கூறு” என்று 20.12.1948  அன்று சிந்தாதிரிப் பேட்டை வீட்டில் சந்தித்து கேட்டபோது சொன்னதாக குறிப்பிட்டுள்ளார். 

 20.12.1948   அன்று இரவுதான் சிறைபடுத்தப்பட்ட பெரியார் தஞ்சையில் விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தியை முன்னரே கூறியுள்ளோம். 

அதே தலைவர் இளையபெருமாள் நெய்வேலிஇருந்து அதே ரவிக் குமாரின் தொகுப்பிலும் தயாரிப்பிலும் வெளிவந்த ‘ தலித்’ஏட்டின் முதல் இதழில் (1997, ஏப்ரல்)  ரவிக்குமாரும் உடன் இருந்துபதிவு  செய்த நேர்காணலில் “பறைமேளம் அடிக்கக்கூடாது” என்று கே.பி.எஸ்.மணி பிரச்சாரம் செய்தார்.

பறைமேளம் அடிப்பதால் என்ன தவறு என்று பெரியார் அவரிடம் கேட்டார்,  அனைவரும் மேளம் அடிக்கலாம் என்று உத்தரவு போடுங்கள் நான் அதை எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் சாதிமக்களை மட்டும் அடிக்கச் சொன்னால் அதைநான் எதிர்ப்பேன் என்று பெரியாரிடம் கே.பி.எஸ்.மணி சொல்லிவிட்டார்“என்று கே.பி.எஸ். மணி வாதிட்டதாக உள்ளது.

1997 ‘தலித்’ ஏட்டில் கே.பி.எஸ்.மணி பறை அடிப்பதை தடுக்க வேண்டும் என்று வாதிட்டதாக ரவிக்குமார் எடுத்த நேர்காணலில் கூறியுள்ளார் இளைய பெருமாள்.

1998ஆம்ஆண்டு இளையபெருமாளின்  75ஆவது பிறந்தநாளை ஒட்டி ரவிக் குமார் பதிவு செய்த நேர்காணலில் (‘சித்திரைநெருப்புநூல்’) இளைய பெருமாளே பெரியாரிடம் கேட்டதாகவும் பெரியார் மறுத்ததாகவும், அதே இளையபெருமாள் கூறியுள்ளார்.

இரண்டில் எது உண்மை? 

இரண்டு நேர்காணலையும் பதிவு செய்த ரவிக்குமார்தான் விளக்கவேண்டும் அல்லது இரண்டுமே பொய்யா? 

ரவிக்குமார் இதில் முரண்பட்டு நிற்கிறார். 

ஒருநேர்காணல் பதிவில் கே.பி.எஸ்.மணி பெரியார் பறைஅடிப்பது குறித்து கேள்விக்கேட்டார் என இளையபெருமாள் கூறினார் என்கிறார். அடுத்த ஆண்டு இளையபெருமாளே பெரியாரிடம் பறைஅடிப்பது குறித்து கேட்டதாக இளையபெருமாள் கூறினார் என்கிறார்.

தொடரும் 

நன்றி : புரட்சி பெரியார் முழக்கம் 21-09-2023

Sunday, January 12, 2025

சீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தமிழரை சிவந்தி ஆதித்தனிடம் இருந்து வாங்கி கொடுத்த வரலாறு

நமது NAMATHU.blogspot.com . . . . . . . 

வெள்ளி, 3 ஜனவரி, 2020

சீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தமிழரை சிவந்தி ஆதித்தனிடம் இருந்து வாங்கி கொடுத்த வரலாறு

T.பாலசுப்ரமணிய ஆதித்தன். :

சீமான் , நெல்லைக் கண்ணன்...

2011 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணு தடை ஆணை பெற்ற நேரம் அவருக்கு ஒரு பாராட்டு விழா தாமிரபரணி அமைப்பின் சார்பில் திருநெல்வேலி மார்கெட் திடலில் நடத்தினேன்...

அதில் எனது ஆசான் V.சுந்தரம் IAS அவர்கள் தலைமை தாங்கினார்.

நம்மாழ்வார் ஐயா உள்பட பலர் வந்து இருந்தாலும் வேகமாக பேச ஒரு ஆள் தேவை என்று என் நண்பர்கள் இருவரை சொன்னார்கள்.

அது சீமானும், நெல்லை கண்ணனும்.

சீமானைப் பற்றி அன்று எனக்கு தெரியாது. அவர் நாடார் சமுதாயம் என்றும் அப்போது எனக்கு தெரியாது.

குருமூர்த்தி, சோ பின்னணியில் தினத்தந்தியில் பேசி நாம் தமிழர் இயக்கத்தை இவர் மூலமாக நடத்துகிறார் என்றும் தெரியாது.

அப்போது சீமான் வைத்து இருந்தது நாம் தமிழர் இயக்கம். கட்சி அல்ல.

நானும் எனது நண்பரும் வளசரவாக்கம் சீமான் வீட்டுக்கு திருநெல்வேலி நண்பர் மூலமாக நிகழ்ச்சிக்கு பேச காலை 11 மணி சென்றோம். என் பெயரை சொன்ன உடன் சீமான் வீட்டில் ஒவ்வொரு அறையாக திறந்து மாடி ஹாலில் அமர வைத்தார்கள்.

சீமான் குளிக்கிறார்.

அமருங்கள் என்றனர்.

நாங்கள் இருவர் மட்டுமே ஹாலில் இருந்தோம்.

நான் உட்கார்ந்து இருந்த சோபாவின் கீழ்,எதிரில் சுற்றிலும் புத்தம் புதிய 3 அடி வீச்சு அரிவாள் கட்டு கட்டாக, ஏராளமான துப்பாக்கிகள்,ரிவால்வர்கள் இருந்தன.

ஒரு சினிமாகாரனாக இருந்தவருக்கு இது ஏன்? எப்படி ? என எனக்குள் கேள்விகள். என் நண்பர் என்னை பார்க்க,நான் அவரை பார்க்க...

அப்போது ஒருவர் டீ கொண்டு வந்தார்.

இவைகள் எல்லாம் எதற்கு என்று கேட்டேன் அவரிடம். நம்ம பசங்க எதாவது தேவைன்னா அவங்களுக்கு உடனே கிடைக்காது. அதான் மொத்தமாக வாங்கி வச்சிருக்கோம் என்றார்.

சிறிது நேரத்தில் சீமான் வந்தார்.

விஷயத்தை சொன்னேன்.

நல்லக்கண்ணு விழாவுக்கு வராமல் இருக்க இயலுமா?!. கட்டாயம் வருகிறேன். எனது பெயரை போட்டுக் கொள்ளுங்கள்.சரியாக வந்து விடுகிறேன் என்றார்.

நல்லது என்று அங்கு இருந்து 5 நிமிடத்தில் கிளம்பிச் சென்றோம்.

இரவில் தூக்கம் வரவில்லை.

அப்போது சீமான் யார்?

தினத்தந்திக்கு, குருமூர்த்தி, சோவுக்கு என்ன உறவு என்று சிலரிடம் விசாரித்த பிறகு மனம் ஆறுதல் அடையவில்லை.

சிவந்தி ஆதித்தன் அவர்களிடம் பேசினேன்.காலை அவர்கள் வீட்டுக்கு வரச் சொன்னார்கள். காலை 7.30 சென்றேன்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று சொல்லி சீமானுக்கும், தினத்தந்திக்கும் தொடர்பு உண்டா?.

ஏன் சி.பா.ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் இயக்கத்தை அவருக்கு கொடுத்து இருக்கிறீர்களே! அதற்கு காரணம் ஏதும் உண்டா என்று கேட்டேன்.

சோ எனது நண்பர்.

குருமூர்த்தி தினத்தந்தி ஆடிட்டர், ஆலோசகர்.

இருவரும் ஒரு நாள் என்னை சந்திக்க வந்து தமிழில் ஈடுபாடு உள்ள ஒரு பையன் சீமான் என்று நடிகராக இருக்கிறார். சினிமாவில் நடிப்பது அவருக்கு சரியாக வரவில்லை. அதனால் தமிழை வளர்க்க முயற்சி செய்கிறான்.

நாங்களும் உதவி செய்கிறோம், தங்களது அப்பா சி.பா.ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் பெயரை எங்களுக்கு கொடுங்களேன் என்று கேட்டனர்.

எனது அப்பாவின் நாம் தமிழர் இயக்கம் பெயரை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லி விட்டேன். 

உடனே சீமான் வெளியில் இருந்தவரை வரச் சொன்னார்கள்.

பார்த்தேன். என் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

ஒரு சில நாடார் சமுதாய விழாவில் அவனை பார்த்து உள்ளேன். அவரின் வளர்ச்சிக்கு பணம் செலவு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். எல்லாம் செய்தேன் என்றார் அண்ணன் சிவந்தி ஆதித்தன்.

இந்த சீமானின்,துப்பாக்கி,வீச்சு அரிவாள் என் மனதில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது.

உடனே என் உடன் வந்தவரிடம் திருநெல்வேலியில் சீமான் அப்பாயின்ட்மென்ட் வாங்கி தந்த நண்பரிடம் சீமானை நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்றேன். 

என்ன அண்ணாச்சி இப்படி சொல்றீங்க என்று அவர் கேட்டார்.

இனி வேண்டாம் என்று தீர்க்கமாகவே சொல்லி நடிகர் சீமானை தாமிரபரணி விழாவுக்கு கேன்சல் செய்து விட்டேன்.

எனக்கு அப்போது சோ,குருமூர்த்தி மேசானிக் கன்ட்ரோலர் என்றும் பத்திரிக்கை டிரஸ்ட் நடத்த அண்ணன் சிவந்தி ஆதித்தன் அவர்கள் அதில் மேசானிக் மெம்பர் என்பதும் எனக்கு அப்போது தெரியாது.

சென்னையில் இருந்தே நெல்லைக் கண்ணனை அழைக்க நம்பர் வாங்கி அலைபேசியில் அழைத்தேன்.

தன்மையாகதான் என்னிடம் பேசினார்.

நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றார்.

கட்டணம் எவ்வளவு தர வேண்டும் என்று கேட்டேன். தாமிரபரணி விழா என்பதால் உங்கள் விருப்பம் என்றார். சரி ஐயா...

ஊருக்கு வந்து தங்களை பார்க்கிறேன் என்றேன். இறுதியில் யார் எல்லாம் வருகிறார்கள் என்று கேட்டார் !

நான் உடனே V.சுந்தரம் IAS, நடராஜ் IPS என்று வரிசையாக கூறிய அடுத்த நிமிடம் நல்லக்கண்ணு விழாக்கு பாப்பாரப் பயல்களை கூட்டி உட்கார வைக்கிறீர்களே என்று போனில் பேச அந்த திமிர் பிடித்த,வயதுக்கு மரியாதை தெரியாத கயவன் நெல்லை கண்ணனையும் தாமிரபரணி நிகழ்ச்சியில் இருந்து புறக்கணித்து விட்டேன்.

4000 பேர் இருக்கையும் நிறைவு ஆகி 1000 பேர் சேர் இல்லாமல் நின்று இரு பக்க டாஸ்மாக் கடைகளை பற்றி கவலை படாமல் தாமிரபரணி நிகழ்ச்சி >அருமையாக நடைபெற்றது.

ஐயா நம்மாழ்வார் வந்திருந்து என்னை ஆசி அளித்தது மறக்க இயலாத ஓர் அனுபவ நிகழ்வு.

இதே நெல்லைக் கண்ணன்தான் இன்று பாரத பிரதமர் மோடிக்கு ஆண்மையற்ற எச்சரிக்கை விடுகிறார். இதனால் பிரச்சனை கூடுமா? குறையுமா ?.

குருமூர்த்தி பாணியில் சொன்னால் தமிழக பாஜக ஆண்மை அற்ற முண்டங்கள் ஆண்டாளை பேசிய போது இருந்த மாதிரியே இப்போதும் வாயில் பிளாஸ்டர் ஒட்டிக் கொண்டு உள்ளார்கள் என்றால் விஷயம் புரிகிறதா ?

நெல்லைக்கண்ணன், சீமான் இருவரையும் நான் அப்போதே கணித்த மதிப்பீடு சரியாகி விட்டது.

சினிமாவில் பேசுபவர்களும், அரசியலில் பேசுபவர்களும் இன்று மேசானியர்களின் எச்சில் பணத்திற்காகதான் வெட்கம் இன்றி வாழ்கிறார்கள் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்

T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.

Saturday, January 11, 2025

சீமானின் சில்லறைத்தனம்

ஆய்வறிஞர்  பொ.வேல்சாமி  அவர்களின் பதிவு:

கடந்த இரண்டு நாட்களாக பொதுவெளியில் சீமானுடைய பொறுப்பற்ற பொறம்போக்கான பேச்சுக்கு பலரும் பலவகைகளில் எதிர்வினைகள் புரிந்து வருகின்றார்கள். மனசாட்சியே இல்லாமலும் எவ்விதமான சான்றையும் காட்டாமலும்  “தந்தைப் பெரியார்” மீது அக்கிரமமானதும் அவதூறு நிறைந்ததுமானதுமான பழிச்சொல்லை அள்ளி வீசியிருக்கிறார். இவ்வாறான சீமானின் பழிச் சொல்லுக்கு ஆதாரம் காட்டுவதாக அவருடைய அடிவருடிகளில் ஒரு சிலர் 02.06.1945 குடியரசில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை எடுத்துக் காட்டுகின்றனர். 

இவர்களால் சுட்டிக் காட்டப்படுகின்ற “அந்தக் கட்டுரையில்” தந்தைப் பெரியாரின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எங்கே உள்ளது ?  அந்த அல்லக்கையர்கள் இக்கட்டுரையின் இறுதிபாராவில் கையாளப்பட்டுள்ள    “சமயோசிதம்”     என்ற சொல்லுக்குள் தங்களுக்கான ஆதாரம் “மறைந்து”ள்ளது என்கின்றனர்.   இவ்வாறான எத்தகைய அபத்தத்தையும் எளிதில் நம்பிவிடும் முட்டாள்கள் தங்களிடம் நிறைந்திருப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்களா ? 

இவர்கள் குற்றம் சுமத்துகின்ற இந்தக் கட்டுரையில் (02.06.1945) எங்கே இவர்கள் சொல்வது போன்று எழுதப்பட்டுள்ளது ? அப்படி ஒரு வாசகம் இல்லவே இல்லை. உண்மையில் அந்தப் பேச்சானது ஒரு சிறப்பான மானிடவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரையாகத்தான் எழுதப்பட்டுள்ளது. மார்க்சிய மூலவர்களில் ஒருவரான “எங்கல்ஸ்” எழுதிய “குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்”  என்ற நூலிலும்    “சிக்மெண்ட் பிராய்டு” அவர்களுடைய மனித உளவியல் பற்றிய சிந்தனைகளிலும், தர்ஸ்டனுடைய “தென்னிந்திய குலங்களும் குடிகளும்” ( 7 தொகுதிகள் ) தொகுதிகளிலும்   அவரே எழுதியுள்ள இன்னொரு முக்கியமான நூலான “தென்னிந்திய மானிடவியல்” ( மணிவாசகர் நூலகம் வெளியீடு ) போன்ற சமூக மானிடவியல் சார்ந்த  ஆராய்ச்சி நூல்களின் பிழிவாகாத்தான் தந்தைப் பெரியாரின் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறான சமூக மானுடவியல் ஆய்வுக் கட்டுரையாக எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ளக்கூடிய “அறிவற்ற மனிதர்களான” இத்தகையவர்கள் இந்த நூலில் சொல்லாத ஒரு விசயத்தை தந்தைப் பெரியார் சொன்னதாகக் கதைகட்டி கதறுவதை “சுய அறிவுள்ளவர்கள்” அறிந்து கொள்ளாமல் இருப்பார்கள் என்று நினைத்து விட்டார்களா ? 

குறிப்பு

அவர்கள் சுட்டிக்காட்டுகின்ற அந்தக் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். 


குடும்பம் தனிச்சொத்து அரசு

https://archive.org/details/m000017_202401


தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி ஒன்று

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2lup6&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 2

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1l8yy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%202#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 3

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1kMyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%203#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 4

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1jxyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%204#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 5

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2lhyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%205#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 6

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2l8yy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%206#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 7

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1kxyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%207#book1/

Thursday, January 9, 2025

சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா?

சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா?

சிதம்பரம் நடராசர் கோவில் நிர் வாகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது செல்லாது என்றும், நிர் வாகம் பொது தீட்சிதர்களின் கைகளில்தான் இருக்கவேண்டு மென்றும் உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு மெச்சத்தக்கதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்கத்தில்தான் இந்தக்கோவில் இருக்க வேண்டும் என்று நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அமைப்பு கூறியுள்ளது சமூகநீதி சக்திகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தென்னாடுடைய சிவனே போற்றி என்றுபோற்றப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலின்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட, சிவனடியாரான ஆறுமுகசாமிக்கு தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப் பட்டது. தொடர்ந்து பலஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தப் பின்னணியில்தான் 2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப் படுத்தியது. இதை எதிர்த்து தீட்சி தர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமான்கள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரி செய்ய கோவில் நிர் வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார் வையிடலாம் என்று கூறியுள்ளனர். இந்த முரண்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை.

சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பரிந்துரை வழங்கலாம். ஆனால் அதை ஏற்க வேண்டுமென்ற அவசியம் எதுவும் தீட்சிதர்களுக்கு இல்லை என்றாகிறது. சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார் கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படவும் இல்லை.

தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் பல்வேறு ஜாதியினரால் நிர்வகிக் கப்பட்டு வந்தநிலையில் தமிழக அரசு அந்தக் கோவில்களை அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது. ஆனால் இப்போதைய தீர்ப்பு அனைத் துக் கோவில்களும் மீண்டும் ஜாதி களின் கையில் செல்லவும், அறநிலை யத்துறையே அர்த்தமற்றுப் போகவும் வழிசெய்யும் ஆபத்து உள்ளது.

தேவாரப் பாடல்களை பதுக்கி வைத்தது, நந்தனாரை தீயில் தள்ளிக் கொன்றது, வள்ளலாரை கோவில் கருவறைக்குள் அனுமதிக்க மறுத்தது, சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து நொறுக் கியது நகைகள் திருட்டு என்று சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வரலாற்று காலந் தொட்டு ஏராளமான புகார்கள் உள்ளன.

கோவில் சொத்தை நிர்வகிப்பதிலும் வெளிப்படையான கணக்கு வழக்கு இல்லை. இந்த கோவில் நிர்வாகத்தை ஏற்ற தமிழக அரசு வழக்கை நடத்து வதில் உரிய அக்கறை காட்டவில்லை என்ற புகார் உள்ளது. சேது சமுத்திர திட்ட வழக்கிலும் கூட நம்பிக்கை என்பதற்கு கொடுத்த அழுத்தத்தை வளர்ச்சிப்பணி என்பதற்கு உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை.

இந்த வழக்கிலும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (மறு சீராய்வு) செய்வதன் மூலம் நீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்ட முன்வரவேண்டும்.

நன்றி: தீக்கதிர், தலையங்கம், 8.1.2014

நியூட்ரினோ ஆய்வு மையம்… ஆராய்ச்சியா? அணுக்கழிவா?

அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தை அலறவைக்கப்போகிற சொல்… ‘நியூட்ரினோ’!

1,450 கோடி ரூபாய் செலவிலான நியூட்ரினோ ஆய்வு மையம் தேனி அருகே தேவாரம் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டம் தங்களுக்கு நன்மையானதா, தீமையானதா என்பது யாருக்கும் தெரியவில்லை. பலர் அஞ்சுகின்றனர்; சிலர் நன்மை நடக்கும் என்கின்றனர். ஆனால், யாருக்கும் நியூட்ரினோ திட்டம் என்பது என்ன என்பதுகூட தெரியவில்லை. தெரிந்தது எல்லாம், ‘பூமிக்குள்ள பெருசா குகை தோண்டி எதையோ ஆராய்ச்சி செய்யப்போறாங்க’ என்பது மட்டும்தான். இந்தப் பகுதியில் உள்ள அமைப்புகளும் இயக்கங்களும்கூட, இதைப் பற்றி அதிகம் அறியவில்லை. அந்த அளவுக்கு அரசு இந்தத் திட்டம் பற்றி மௌனம் காக்கிறது.

இதற்கிடையில் கேரள கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன், ‘நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது, அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்காகவே உருவாக்கப்படுகிறது’ என்று கூறியிருப்பது சர்ச்சையை வலுவாக்கியுள்ளது.

நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன?

”நியூட்ரினோ என்பது சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் வெளிப்படும் துகள். இது மிக, மிக நுண்ணியது. எந்த அளவுக்கு என்றால், ஒரு மில்லிகிராம் எடையில் பல கோடி, கோடி நியூட்ரினோ துகள்கள் இருக்கும். மனிதன் இதுவரை கண்டறிந்த பொருள்களிலேயே எடை குறைந்தது இதுதான். இந்த நியூட்ரினோ துகள், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது. தன் எதிரில் உள்ள எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. உதாரணமாக, இப்போது இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட, பல்லாயிரம் கோடி நியூட்ரினோ துகள்கள் உங்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும். மனித உடம்பை மட்டுமல்ல… மொத்த பூமியையும் குறுக்கும் நெடுக்குமாக ஒவ்வொரு கணமும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் சென்றுகொண்டே இருக்கின்றன. பூமியின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் ஊடுருவி சென்று அண்ட சராசரத்தில் கலந்துவிடுகின்றன.

பொதுவாக ஒரு பொருளை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், அது மற்ற பொருள்களுடன் எப்படி வினை புரிகிறது என்பதை வைத்தே அந்த ஆய்வு செய்யப்படும். ஆனால் நியூட்ரினோ என்பது, வேறு எந்தப் பொருளுடனும் வினை புரியாத, மின்காந்த சக்தியற்ற ஒரு துகள். யாருடனும் ஒரு வார்த்தைக்கூடப் பேசாத இறுக்கமான ஒரு நபரைப் புரிந்துகொள்வது சிரமம்தானே..? நியூட்ரினோவுக்கும் அது பொருந்தும். இதனால் நியூட்ரினோ மீதான உலக விஞ்ஞானிகளின் ஆய்வு மோகம் அதிகரித்தது.

1956-ல் ஃபெடரிக் ரெய்னஸ் என்கிற அறிவியலாளர், நியூட்ரினோ துகள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தார். இதற்காக பின்னர் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. எனினும், அதன் பிறகான நியூட்ரினோ ஆய்வுகள் ஒன்றும் சூடுபிடித்துவிடவில்லை. மெத்தப் படித்த அறிவியலுக்கு அந்தச் சின்னஞ்சிறிய துகள்கள் இப்போது வரை சவால்விடுகின்றன.

நியூட்ரினோ ஆய்வில் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது, பூமியின் மேற்பரப்பின் மீது பரவியிருக்கும் காஸ்மிக் கதிர்கள்தான். நியூட்ரினோ சோதனையின் போது காஸ்மிக் கதிர்களும் வினை புரிகின்றன. இதனால் சோதனையின் முடிவில், இது காஸ்மிக் கதிர் ஏற்படுத்தியதா, நியூட்ரினோ ஏற்படுத்தியதா என்று குழப்பம் வந்துவிடுகிறது. ஆகவே, காஸ்மிக் கதிர் ஊடுருவாத இடத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.

1985-ல் ஜப்பானில் 1,000 மீட்டர் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள். கனடாவின் சட்பரி (Sudbury) என்ற இடத்தில் 2,000 மீட்டர் ஆழத்திலும், ஃபிரான்ஸ் நாட்டில் ஆன்ட்டெரீஸ் (Antares) என்ற இடத்தில் கடலுக்கு அடியில் 2,500 மீட்டர் ஆழத்திலும் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் 2,000 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகத்தை நிறுவியுள்ளது அமெரிக்கா. இப்போது இந்தியாவில் முதன்முறையாக தேனியில் நிலத்துக்கும் கீழே சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்போகின்றனர். இதுதான் உலகளாவிய அளவில் நியூட்ரினோ ஆய்வின் வரலாறு” என்று விளக்குகிறார் ‘சிறகு’ இணையதளத்தில் இதுகுறித்து கட்டுரைகள் எழுதி வரும் சாகுல் ஹமீது. மதுரையைச் சேர்ந்த இவர், இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

ஏன் தேனி?

தேனி, தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் கிராம எல்லையில் உள்ள மலைப்பகுதிதான் ஆய்வகம் அமையவிருக்கும் இடம். இதை India-based Neutrino Observatory (INO) என்கிறார்கள். சுருக்கமாக, ஐ.என்.ஓ.

கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மன்மோகன் சிங், இந்தத் திட்டத்துக்கு 1,450 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார். எனினும், பல்லாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு தொடங்கிவிட்டது. கோலார் தங்கச் சுரங்கத்தில் 2,500 மீட்டர் ஆழத்தில் செயல்பட்டுவந்த ஆரம்ப நிலையிலான நியூட்ரினோ ஆய்வு, 1992-ல் சுரங்கம் மூடப்பட்டதும் தனது பணிகளையும் நிறுத்திக்கொண்டது. அதன் பிறகு புதிய ஆய்வகம் அமைக்க இடம் தேடி அலைந்தனர். முதலில் தேர்வு செய்யப்பட்டது முதுமலை காட்டில் உள்ள ‘சிங்காரா’ என்ற இடம். அது வனவிலங்குகள் செறிவாக வசிக்கும் ரிசர்வ் வனப்பகுதி என்பதாலும், எதிர்ப்புகள் பலமாக இருந்ததாலும் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு, பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் தேனியில் வந்து நிலைகொண்டது. இப்போது பொட்டிபுரத்தில் ஐ.என்.ஓ. செயல்படுத்தப்படும் இடத்தைச் சுற்றி சுமார் ஐந்து கி.மீ. சுற்றளவுக்கு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. உள்ளே பிரமாண்டத் தண்ணீர் தொட்டி ஒன்று  கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டிக்கு உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலமாகத் தண்ணீர் வருகிறது. சுரங்கம் தோண்டுவதற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

என்னதான் பிரச்னை?

‘இதுதான் திட்டம், இதைத்தான் செய்யப்போகிறோம்’ என்று மக்களுக்கு விளக்காததுதான் முதல் பிரச்னை. உலகில் வெகுசில இடங்களில் மட்டுமே இருக்கும் அறிவியல் ஆய்வகத்தைக் கொண்டுவரப் போகும் நிலையில், அதுகுறித்து மக்களிடம் விளக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அரசோ, ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மர்மமான அணுகுமுறையைக் கையாள்கிறது. அரசியல் கட்சிகளும்கூட இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றன. வழக்கமாக இதுபோன்ற பெருந்திட்டங்களை ‘நாங்கள்தான் கொண்டுவந்தோம்’ என்று கட்சிகள் உரிமை கோருவார்கள். ஆனால், தேர்தல் சமயமாக இருந்தும்கூட யாரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. யாருடைய கவனத்திலும் நிகழ்ச்சி நிரலிலும் இந்தத் திட்டம் இடம்பெறாதது ஏன்?

"நாங்கள் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்த்து சாலை மறியல் செய்தோம். ஆனால், ஊருக்குள் புகுந்து எங்களை எல்லாம் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் உட்காரவைத்து, ஐந்து பேர் மீது வழக்குப் போட்டு கடுமையாக மிரட்டினார்கள்” என்று இப்போதும் அச்சத்துடன் பேசுகின்றனர் ஐ.என்.ஓ. திட்டத்தின் நுழைவிடத்தில் உள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள். மிகவும் செழிப்பான இந்தப் பகுதியில் ஏராளமான காய்கறிகள் விளைகின்றன. எதிர்காலத்தில் நிலம் பறிக்கப்படலாம் அல்லது நீர் பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படலாம் என்பது இந்த மக்களின் பயம். தங்களை ஊரைவிட்டே காலி செய்துவிடுவார்களோ என்றும் அஞ்சுகின்றனர். வைகை அணைக்கு தங்கள் கிராமங்களைத் தாரை வார்த்தவர்களை அறிந்துள்ள இவர்கள், தங்களுக்கும் அந்த நிலை வரலாம் என்று நினைக்கின்றனர்.

இந்தப் பகுதி கிராமங்களில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நியூட்ரினோ திட்டம் குறித்து சில விஞ்ஞானிகள் மூலம் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தியது ஐ.என்.ஓ. அதன் பிறகு, யாரும் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. ஒருவேளை, கூடங்குளம் போராட்டத்தில் இருந்து படிப்பினையைக் கற்றுக்கொண்டிருக்கும் அரசு, நியூட்ரினோ திட்டத்தை வேறுவிதமாக அணுக முடிவெடுத்து இப்படிச் செய்யக்கூடும்.

"முதலில் இந்தத் திட்டம் குறித்த முழுமையான விளக்கத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் எங்கள் கோரிக்கை” என்கிறார் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளரான மோகன்.

தேவாரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் பேசும்போது, ”கேரளாவைச் சேர்ந்த ஒருவர், ஐ.என்.ஓ. திட்டம் அமையும் இடத்தைச் சுற்றியுள்ள இடங்களை வளைத்து, வளைத்து வாங்குகிறார். நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு முடிந்ததும், பத்திரத்தை நம்மிடமே கொடுத்து, ‘கேட்கும்போது நிலத்தைத் தந்தால் போதும்’ என்று சொல்லிவிடுகிறார். என்னிடம்கூட இப்படி 10 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். யாராவது பணத்தையும் கொடுத்து, நிலத்தையும் திருப்பித் தருவார்களா? ஐ.என்.ஓ-வுக்காக மறைமுகமாக நிலம் வாங்கப்படுகிறது என்பதுதான் எங்கள் சந்தேகம்” என்கிறார்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பா?

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு என்ன பிரச்னை வரும்? ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசியபோது, ”மேற்குத் தொடர்ச்சிமலை என்பது, பல்லுயிரியல் சூழலில் முக்கியமான பகுதி. தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும்கூட. நிறைய அணைகளுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதியும் அதுதான். தற்போது நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்க வேண்டும். அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகங்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் செயல்பட்டு வந்த ஆய்வகம் மூடப்பட்டுவிட்டது. ஜப்பானில் செயல்பட்டு வந்த ஆய்வகத்தின் உள்ளே சோதனைக் குழாய்கள் வெடித்துச் சிதறி மறுபடியும் அமைத்தனர். இப்போது மீண்டும் அது செயல்படாமல் உள்ளது. ஆகவே, இங்கு எந்தப் பாதிப்புமே வராது என்று யாரும் உத்தரவாதம் தர முடியாது. மேலும், 2.5 கி.மீ. சுரங்கம் தோண்டும்போது உருவாகும் தூசி மண்டலம், அந்தப் பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாயும். அந்தப் பகுதி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்” என்கிறார்.


மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரசார்’ அமைப்பில் பணிபுரியும் விஞ்ஞானியும் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரனின் கருத்து வேறாக உள்ளது.

"நியூட்ரினோ ஆய்வகம் என்பது, 100 சதவிகிதம் தெளிவான அறிவியல். அந்த அறிவியலில் கடுகளவும் பிரச்னை இல்லை. அதேபோல சுரங்கம் தோண்டுவதால் அணை பாதிக்கும், சூழல் கெடும் என்பதும் கற்பனையே. உதாரணமாக, சென்னையில் இப்போது மெட்ரோ ரயில் வேலைகள் நடக்கின்றன. கிட்டத்தட்ட 50 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கிறார்கள். அதனால் ஏதாவது பெரும் பிரச்னை வந்துவிட்டதா? சென்னை போன்ற நகர்ப் பகுதியிலேயே இதை வெற்றிகரமாகக் கையாள முடியும் எனும்போது அங்கு இன்னும் சுலபமாகச் செய்ய முடியும்” என்கிறார்.

அணுக்கழிவைக் கொட்டப்போகிறார்களா?

இதுதான் இருப்பதிலேயே ஆபத்தானதும், விடை காண வேண்டியதுமான சந்தேகம். அச்சுதானந்தன் மட்டுமல்ல… பத்மநாபன் என்கிற விஞ்ஞானிகூட இதுகுறித்து தொடர்ந்து எழுதிவருகிறார்.

அவர் தனது கட்டுரை ஒன்றில், ‘சென்னை தரமணியில் உள்ள கணிதவியல் அறிவியல் நிறுவனம் (The Institute of Mathematical Sciences)தான், ஐ.என்.ஓ-வுக்கான பணிகளைச் செய்து வருகிறது. இந்தக் கணிதவியல் கழகம், ஐ.என்.ஓ-வுக்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தில் ஐ.என்.ஓ. என்பதை, ‘அணு உலை/அணு உலை எரிபொருள் உலை/ அணு உலைக் கழிவுகள்’ என்று வகையின் கீழ்தான் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் அணு உலை அமைக்கவோ, அணு உலை எரிபொருள் ஆலை அமைக்கவோ முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கான தண்ணீர் வளம் அங்கு இல்லை. ஆக, அணுக் கழிவுகளைக் கொட்டுவது மட்டும்தான் மிச்சம் இருக்கும் ஒரே வாய்ப்பு’ என்று எழுதியுள்ளார் பத்மநாபன்.

இதையேதான் சுந்தர்ராஜனும் கூறுகிறார். "2013 மே 6-ல் உச்ச நீதிமன்றம் கொடுத்தத் தீர்ப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்திய அணு உலைக் கழிவுகளை எங்கு புதைப்பது (Deep geological repository) என்பதை இந்திய அணுசக்திக் கழகம் முடிவுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுவரைக்கும் இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் அணு உலைக் கழிவுகளை ஆங்காங்கே வைத்துள்ளனர். அவற்றை மொத்தமாக ஓர் இடத்தில் புதைத்தாக வேண்டும்.

தேனியில், நியூட்ரினோ ஆய்வு மையம் என்ற பெயரில் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஐ.என்.ஓ. தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. மேலும், மதுரை –வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதுவும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. அவர்கள் ஐ.என்.ஓ-வை அமைத்தாலும்கூட அதில் அணு உலைக் கழிவுகளையும் கொட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்கிறார்.

ஆனால், த.வி.வெங்கடேஸ்வரன் இதை மறுக்கிறார். "ஐ.என்.ஓ. ஆய்வகத்தில் அணு உலைக் கழிவுகளைக் கொட்டுவது என்பது சாத்தியமே இல்லாதது. காஸ்மிக் கதிர்களை வரவிடாமல் தடுத்து நியூட்ரினோவைப் பற்றி ஆய்வு செய்யத்தான் பூமியின் அடியாழத்துக்குச் செல்கிறோம். அப்படி இருக்கும்போது, கதிர்வீச்சை உமிழக்கூடிய அணுக் கழிவை எப்படி அதற்குள் கொட்ட முடியும்? அதிகம் வேண்டாம்… ஒரே ஒரு சாக்கு மூட்டை அளவு அணுக் கழிவைக் கட்டி அந்தச் சுரங்கத்தில் போட்டுவிட்டால்கூட நியூட்ரினோ ஆய்வை நடத்தவே முடியாது. 10 ஆயிரம் வாட்ஸ் மின்விளக்கின் முன்பு ஒரு மெழுகுவத்தியை வைத்தால், அந்த ஒளியைப் பார்க்க முடியாது இல்லையா… அதுபோல” என்கிறார்.

ஆய்வின் நோக்கம் என்ன?

சரி, இவ்வளவு மெனக்கெட்டு, இத்தனை ஆயிரம் கோடிகளைக் கொட்டி, உலகம் முழுவதும் நடைபெறும் நியூட்ரினோ ஆய்வின் நோக்கம்தான் என்ன?

இதற்கு, தீர்மானமான விடை எதையும் சொல்ல இயலாது. ஏனெனில், அறிவியல் ஆய்வு என்பதே அனுமானங்களைச் சோதித்துப் பார்ப்பதுதான். சோதனையின் முடிவுகளில் இருந்து அது அடுத்த கட்டத்தை அடைகிறது. உதாரணமாக, நாம் பேசும் அலைபேசிகளின் அடிப்படை என்ன? ஒலி அலைகள் மின் சைகைகளாக மாற்றப்பட்டு, அவை மீண்டும் ஒலி அலைகளாகப் பெறப்படுகின்றன. இதுகுறித்த ஆரம்பக்கட்ட சோதனையின்போது, ‘இதனால் என்ன லாபம்?’ என்று கேட்டிருந்தால், என்ன விடை கூறியிருக்க முடியும்?

1897-ல் ரூதர்போர்டு எலெக்ட்ரானைக் கண்டறிந்தார். அந்த எலெக்ட்ரான் துகள் மூலம்தான் இன்று நம் கம்ப்யூட்டர்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதை, அன்றைய நாளில் யாரும் யூகித்திருக்க முடியாது. ஆகவே, அறிவியல் ஆய்வுகளின் நோக்கத்தை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது.

ஒருவேளை, நியூட்ரினோவைக் கையாளும் சாத்தியத்தைப் பெற்றுவிட்டால், முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அறிவியல் உலகத்துக்குள் நாம் பிரவேசிக்கக்கூடும். ஒளியின் வேகத்துக்கு இணையாகச் செல்லும் திறன்கொண்ட நியூட்ரினோ பூமியையே ஊடுருவிச் செல்லும் என்றால், மொத்த பூமியின் ஒவ்வொரு விநாடி அசைவையும் கண்காணிக்கும் சாத்தியம் உருவாகலாம். இந்தப் பேரண்டத்தின் பல ரகசியங்கள் திறக்கப்படலாம். இவை எல்லாமே யூகிக்கப்படும் சாத்தியங்களே. ஆனால், அவை நடக்குமா, நடக்காதா, நடந்தால் எப்போது நடக்கும்… எதுவும் தெரியாது.

அறிவியலா? தொழில்நுட்பமா?

"அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. அறிவியல், ஒரு விஷயத்தைச் சோதனை செய்து கண்டுபிடிக்கும். தொழில்நுட்பம், அதைச் செயல்படுத்தும். அறிவியல் ஆய்வுகளுக்கு மிகப் பெரும் முதலீடு தேவை. இந்தியா போன்ற பொருளாதாரரீதியாக இன்னும் தன்னிறைவை அடையாத, கோடிக்கணக்கான ஏழைகளைக் கொண்ட ஒரு நாடு, அறிவியல் ஆய்வுகளுக்கு பல்லாயிரம் கோடி பணத்தை வாரி இறைப்பது மிகவும் தவறானது. மாறாக, மேலை நாடுகளில் கண்டறியப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நாம் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.

நியூட்ரினோ என்பது அறிவியல்; அதுவும் விடை தெரியாத, இந்தத் துகளின் மூலம் நன்மை விளையுமா, விளையாதா என்று யூகிக்க முடியாத அறிவியல். உலகம் முழுவதும் எத்தனையோ ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொட்டி ஆய்வு செய்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது, இந்தியா களம் இறங்குகிறது. தொடக்கத்தில் 1,450 கோடி ரூபாய் என்றால், போகப் போக எவ்வளவு செலவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இந்திய மக்கள், இப்படி ஓர் ஆய்வகம் வேண்டும் என்று கேட்டார்களா? அவர்கள் கேட்பது எல்லாம் தரமான குடிநீர், நல்ல சாலைகள், வேலைக்கும் உணவுக்குமான உத்தரவாதம், குடியிருக்க வீடுகள், தரமான கல்வி, மருத்துவம் போன்றவைதான். இவற்றைச் செய்துதராத அரசு, நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் என்ன பயன்?

யாரோ சில நூறு விஞ்ஞானிகளின் அறிவை நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் ரத்தமும் வியர்வையுமான வரிப்பணம் செலவிடப்படுவது என்ன நியாயம்? கேட்டால் வல்லரசு என்பார்கள். பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்தபோதும், இதே போன்ற வெற்றுப் பெருமிதம்தானே பேசப்பட்டது?!” என்று கேட்கிறார் சாகுல் ஹமீது.

கண்ணுக்குத் தெரியாத நியூட்ரினோவைக் கண்டறிய பல்லாயிரம் கோடியை ஒதுக்கும் இந்திய அரசு, கண்ணுக்குத் தெரியும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கேவலத்தை ஒழிக்க எத்தனை ஆயிரம் கோடியை ஒதுக்கியது? அதற்கு ஒரு கருவி செய்ய எந்த ஆய்வகத்தை அமைத்தது? இரண்டையும் நேருக்குநேர் வைப்பது பொருத்தமற்ற ஒப்பீடு என்று சொல்ல முடியாது. அடிப்படை வசதிகள்கூட நிறைவேறாத, தெருப் புழுதிகளில், சாக்கடை ஓரங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்கிற மக்களைக்கொண்ட இந்தியா போன்ற ஒரு நாடு, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கேள்விதான் இதற்கான அடிப்படை.

வேலைவாய்ப்புக்கு வழி இல்லை!

இந்த ஐ.என்.ஓ. திட்டத்தின் செயல்பாட்டில் பல ஆய்வு நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்துள்ளன. டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம், பாபா அணுசக்தி ஆய்வு மையம், சகா அணு இயற்பியல் நிறுவனம், இந்திரா காந்தி அணு ஆய்வு மையம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி-மும்பை என்று நீளும் இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகமும் இருக்கிறது.

பொதுவாக, இதுபோன்ற திட்டங்களில் வேலைவாய்ப்பு என்பது பிரதான அம்சமாகப் பேசப்படும். ஆனால், ஐ.என்.ஓ.-வைப் பொறுத்தவரை இது ஓர் அறிவியல் ஆய்வகம் என்பதால் பெரிய அளவில் வேலைவாய்ப்புக்கு வழியில்லை. வெகுசிலருக்கு, அடிமட்ட வேலைகள் கிடைக்கலாம்.

 இங்கு அமைக்கப்படும் ஐ.என்.ஓ. ஆய்வகம் என்பது, உலகளாவிய நியூட்ரினோ ஆய்வின் ஓர் அங்கம். மற்ற நாடுகளின் ஆய்வகங்களில் இருந்து நியூட்ரினோ இங்கு அனுப்பப்பட்டு, இங்கிருந்து அங்கு அனுப்பப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படும்.

சிதம்பரம் நடராசர் கோவில் கதவுகள் சாத்தப்பட்ட கதை !

பார்ப்பனர்களை vindicate செய்வதற்கெனவே  உள்ள நமது vindicate மன்றம் சிதம்பரம் தீட்ஷிதர்களுக்கு "நீதி"வழங்கிவிட்டது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசுக்கு அரசியல் விருப்புறுதி இருந்தால் பெருவாரியான மக்களின் கருத்தை ஏற்று அவசரச்சட்டம் ஒன்றை இயற்றலாம்.  தமிழக அரசு இதைச் செய்யுமா?

அது சரி ஒரு நாள் சிதம்பரம் நடராசர் கோவிலின் நான்கு கோபுர வாயில்களும் சாத்தப்பட்ட கதை தெரியுமா? அது பிப்ரவரி 14, 1934. 

யாருக்காகக்ச் சாத்தப்பட்டன ?

இரண்டாவது 'ஹரிஜன யாத்திரைக்காக" தமிழகம் வந்த காந்தியடிகளை எதிர்த்துத்தான். அவரது தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச இயக்கத்தைக் கண்டித்துத்தான். 

சாத்தியது மாத்திரம் அல்ல. இப்படியொரு துண்டறிக்கையை  7x5 அங்குல அளவில் அச்சிட்டும் விநியோகித்தனர். அதில் இருந்த வாசகங்கள்  இங்கே ( முழு விவரத்திற்கும் பார்க்க என் "காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்" நூல், பக்.66)

காந்தியே நீர் போம்!

""""""""""""""""""""""""

சுயராஜ்யம் பறந்து போச்சு காந்தியே நீர் போம்!

இந்து முஸ்லிம் குளறிப் போச்சு காந்தியே நீர் போம்!

உப்புக் கலகம் ஓஞ்சு போச்சு காந்தியே நீர் போம்!

கதர் பேச்சு காஞ்சு போச்சு காந்தியே நீர் போம்!

தொட்டதெல்லாம் விட்டுவிடும் காந்தியே நீர் போம்!

கைவைத்தால் கெடுக்கும் மகான் காந்தியே நீர் போம்!

காங்கிரசைக் கொன்றுவிட்ட காந்தியே நீர் போம்!

நம்பினோரை நாசமாக்கும் காந்தியே நீர் போம்!

தர்மங்களைத் தாக்கவந்த காந்தியே நீர் போம்!

ஊர் ஊராய்ப் பணம் பறிக்கும் காந்தியே நீர் போம்!

வீர்யம் போன வெறும் பொருளே காந்தியே நீர் போம்!

சிதம்பரம்                                                    இங்ஙனம்

16.2.34                                                                 G.B.C

இந்தத் துண்டறிக்கையைத் தனது 'குத்தூசி' இதழில் முழுமையாக வெளியிட்டுக் கண்டித்திருந்தார் பகுத்தறிவுச் சிந்தனையாளரும் சிறந்த பத்திரிகையாளருமான குத்தூசி குருசாமி அவர்கள்.

(பேரா. அ. மார்க்ஸ் முகநூல் பதிவு 7.1.2014)