Tuesday, August 29, 2023

அம்மை ஒரு நோய்

அம்மை என்பது ஒரு நோய் என்று அறியாமல், மாரியம்மன் என்னும் கடவுளின் கடுங்கோபம் என்று கருதிய காலம் ஒன்றுண்டு. அம்மை நோய் கண்டால் மாரியம்மன் கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்று வார்கள் - நோயாளியின் தலை மாட்டில் உட்கார்ந்து மாரியம் மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடுவார்கள்.

இந்த நிலையில் வெள்ளை யர்கள் ஆட்சியின்போது அம்மை நோய்க்குத் தடுப்பு நடவடிக்கைகள் என்றால், மூட நம்பிக்கையில் முட்டையிட்டுப் பொரித்த மூளை உள்ளவர்கள் ஏற்கமாட்டார்களே! என்ன செய்தனர்!

தடுப்பூசி நடவடிக்கையை அம்மன் பிரசாதம் என்றே கூறுவார்களாம்.

1937 ஆம் ஆண்டு காரைக் குடி ஊராட்சி உறுப்பினர் (கவுன்சிலர்) சார்பில் தெய்வத் தன்மை தெய்வீக முறை என்ற பெயரில் அம்மை நோய் போட்டுக் கொள்வதற்கான கையேடுகள் வெளியிடப்பட் டன. அதில் பெரியம்மை எனும் தொற்றுநோயை அழிக்க அம்மன் தந்த வரப்பிரசாதமே அம்மைப் பால் என்ற வகை யில் வரிகள் இடம்பெற்றிருந்தன.

இது மட்டுமா? நாடகங் களில்கூட அம்மைக்கான தடுப் பூசி அம்மன் பிரசாதமாகவே காட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் கிருஷ்ணசுவாமி என்ற சுகாதார துறை ஆய்வாளர் எழுதிய நாடகத்தின்மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தத் தகவல்களை சென்னை நாளை முன்னிட்டு தரமணி ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அறிவி யலுக்கும் மதத்துக்கும் தொடு புள்ளியாய் அம்மன் எனும் தலைப்பில் அமெரிக்க உதவிப் பேராசிரியை பெருந்தேவி குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அம்மை என்பதுதான் என்ன?

பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த எட்வின் ஜென்னர் இருபது ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். தனது ஆய்வை ப்யூஸ்டெரின் மருத்துவ முறை மூலம் தீர்வு உண்டு என்று உறுதியாக நம்பினார் ஜென்னர்.

இதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய ஜென்னர் 1796 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் தனது தோட்டக்காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கவுபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கவுபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குண மடைந்தான்.

சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தி னார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர். சிறுவனின் உயிரோடு விளை யாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்தத் தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்பட வில்லை. அம்மைக்கான தடுப் பூசி கிடைத்துவிட்டது என் பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வர லாற்றில் அழியா இடம் கிடைத் தது.  அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798 ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங் களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

எட்வர்டு ஜென்னருக்கு முன்னர் 1770-களிலேயே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அய்ந்து கண்டுபிடிப்பா ளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி 1774, ரெண்டெல், பிளெட் 1791) கவுபாக்சு நோயிலிருந்து தடுப் பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர். இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க் கெதிரான தடுப்பூசியினை தானும், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக்கத்துடன் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.

ஆக மூடத்தனம் என்ற நோயை ஒழித்ததால்தான் அறிவியல் அடிப்படையில் அம்மை நோய் ஒழிக்கப்பட்டது என்பதை அறிக.

- கவிஞர் கலி. பூங்குன்றன்