Wednesday, December 1, 2021

பத்தாங் பெர்சுந்தை ம.தி.க. கிளை சார்பில் 9.10.2016 அன்று நடைபெற்ற பெரியார் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கவி ஆற்றிய உரை

 பத்தாங் பெர்சுந்தை ம.தி.க. கிளை சார்பில் 9.10.2016 அன்று நடைபெற்ற பெரியார் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கவி ஆற்றிய உரை


பத்தாங் பெர்சுந்தை ம.தி.க. கிளை சார்பில் நடைபெறும் பெரியார் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவின் தலைவர், அய்யா தமிழ்வேந்தன் அவர்களே, ம.தி.க. தேசியத் தலைவர் அய்யா காந்தராஜ் அவர்களே, வரவேற்புரை ஆற்றிய மோகன் அவர்களே, சிலாங்கூர் மாநில ம.தி.க. தலைவர் அய்யா த.பரமசிவம் அவர்களே, பத்தாங் பெர்சுந்தை கிளை உறுப்பினர்களே, சான்றோர்களே வணக்கம்.

பெரியாரும் தமிழும் என்ற தலைப்பிற்குள் போவதற்கு முன் இக்கிளைப் பற்றிய சில செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

பத்தாங் பர்சுந்தையில் 70 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதைக் கொள்கைப் பிடிப்போடு இருந்தவர்கள் அய்யா திராவிட மணி நல்லதம்பி, இரும்பு மனிதர்என்று அழைக்கப்பட்ட நா.மாணிக்கம் மற்றும் டி.சவரிமுத்து, ரத்தனம் போன்றவர்கள்.

அய்யா மாணிக்கம் அவர்கள் தான் மட்டுமல்லாது, தனது தங்கைகளுக்கும் சுயமரியாதை திருமணம் செய்து வைத்தவர். 

17.7.1955 இல் இக்கிளை தொடங்கப்பட்ட போது திராவிடமணி நல்லதம்பி அவர்கள் தலைவராகவும் நா.மாணிக்கம் செயலாளராகவும் இருந்திருக்கிறார்கள். அப்போதய தேசியத் தலைவர் ஜி.குமாரசாமி அவர்கள் தலைமையில் இக்கிளை திறப்புவிழா கண்டது.  ப.மணியரசு, கா.ப.சாமி, கோலக்கிள்ளான் ஆ. சுப்பையா, அ.மு. திருநாவுக்கரசு போன்ற தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந்தப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் இருந்த ஈச்ச மரத் தோட்டம், ஒமுடு தோட்டம், ரிவர்சைடு தோட்டம் மற்றும் புக்கிட் ரோத்தான் ஆகிய பகுதிகளில் சுயமரியாதைக் கொள்கைகளை இக்கிளை பரப்பியது.

சாதியின் பெயரால் தொழில் செய்வதை இழிவு என்று கூறிய காரணத்தால் அய்யா திராவிட மணி நல்லதம்பி அவர்கள் பத்தாங் பெர்சுந்தையிலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வுகளும் நடந்திருக்கிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொண்டு பெரியாரும் தமிழும் என்ற தலைப்பிற்குள் செல்கிறேன்.

பெரியார் அவர்கள் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் மலாயாப் பெரியார் அ.சி.சுப்பையா அவர்கள் கோ. சாரங்கபாணி துணை ஆசிரியராக இருந்த முன்னேற்றம் இதழில் 1933 இல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தொடர்கட்டுரையை எழுதி வந்தார். அதை பெரியார் அவர்கள் தனது பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில்  நூலாக 1935 ஆகஸ்டில் வெளியிட்டார். ஆனால் 1935 ஜனவரி 15 குடிஅரசு இதழிலேயே தமிழ்ச் சீர்திருத்த எழுத்துக்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். 

அதே 1935 இல் மறைமலையடிகள் எழுதிய அறிவுரைக் கொத்து என்னும் நூலிலிருந்து தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்ற கட்டுரை பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பாடப்பகுதியாக இருந்தது. அதை அவர்கள் எடுத்துவிட்டார்கள். இதை எதிர்த்து பெரியாரும் அவருடைய குடிஅரசு இதழும் போராட்டம் நடத்தியது. நாடு முழுவதும் மறைமலையடிகளுக்கு ஆதரவாக நடந்த கூட்டங்களுக்கு ஆதரவளித்தது. இப்படி பெரியார் அவர்கள் தமிழுக்குத் துணையாக நின்றார்.

1938 இல் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம். அது தமிழ் மொழியைக் காப்பதற்கான போராட்டம். நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலைஅடிகள் போன்ற பல தமிழறிஞர்கள் பங்கேற்ற போராட்டம். அதில் பெரியாருக்கு ஒன்றை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை கிடைத்தது. 1938 இறுதியில் கைது செய்யப்பட்டவர் 1939 மே மாதத்தில் 6 மாதத்தில் விடுவிக்கப்படுகிறார். அந்த போராட்டத்தின் இறுதியில்தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார் பெரியார்.

சிறையில் இருந்த அந்த காலக்கட்டதில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைமலையடிகள் மகள் நீலாம்பிகையார் தலைமையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் தரப்பட்டது. சிறையில் இருக்கும் பெரியாருக்கு ஒரு வரலாறு இல்லையே என்ற கவலையோடு அய்யா சாமி.சிதம்பரனார் அவர்கள் குறுகிய காலத்தில் பெரியார் வரலாற்றை எழுதி பெரியாரிடமே காட்டி, ஒவ்வொன்றுக்கும் ஒப்புதல் பெற்று தமிழர் தலைவர் பெரியார் என்ற நூலை வெளியிட்டார்.

1941 இல் தமிழிசை மாநாடு ஒன்றை அண்ணாமலை அரசர் கூட்டினார். நான்குநாட்கள் தமிழிசைக்காவே நடந்த மாநாடு. வழக்கம் போல பார்ப்பனர்களும் அதில் கலந்து கொண்டார்கள். தமிழிசையிலேயே பாடல்கள் பாடினாலும் சில பாடல்கள் பிற மொழிகளிலும் பாட வேண்டும் என்று டைகர் வரதாச்சாரி கூறினார். எம்.எஸ். இராமசாமி அய்யர் தெலுங்கு மொழியிலும் பாடல்கள் பாட வேண்டும் என்றார். 

தமிழிசை மாநாடு குறித்த கட்டுரையையும் ஆசிரிய வுரையும் இந்து நாளிதழ் எழுதியது. அதில், தமிழிசை இயக்கம் இசைக்கலை வளர்ச்சிக்கு இடையூறாய் பொது மக்களின் கலை உணர்ச்சியை தாழ்த்தக் கூடும் என்று நஞ்சைக் கக்கியது.

அதன்பிறகு பெரியார் தலைமையில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் இளவரசர் முத்தையவேள் அவர்கள் தமிழிசை இயக்கத்தின் நோக்கத்தை விரிவாக கூறினார், அவர் கருத்தை வரவேற்ற பெரியார், இந்து நாளிதழுக்கு கண்டனம் தெரிவித்து உரைநிகழச்தினார். இப்படி தமிழ் இசைக்கும் பெரியார் ஆதரவாக நின்றார்.

1949 இல் பெரியார் அவர்கள் திருக்குறள் மாநாடு நடத்தினார். பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு.

 அதில்  திரு. சி. இலக்குவனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், திரு.வி.கல் யாணசுந்தரனார்,  நாவலர் சோமசுந்தர பாரதியார், திருக்குறள் முனுசாமி, கா.அப்பாதுரையார், சக்கரவர்த்தி நாயனார், புலவர் குழந்தை,  பெரும்புலவர் டி.எஸ். கந்தசாமி முதலியார், எஸ். முத்தையா முதலியார், கலைவாணர் என்.எஸ். கிருட்டிணன், அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற அறிவாய்ந்த தமிழ்ப் பெருமக்களைப் பங்கு பெறச் செய்தார். 

இப்படி புலவர்களிடம் மட்டுமே உலவிக் கொண்டிருந்த திருக்குறளை பொதுமக்களிடையே கொண்டு சென்றவர் பெரியார்.

தனித் தமிழ் குறித்தும் தமிழ் பண்பாடு குறித்தும் பெரியார் கூறுகிறார்,

சாதி என்ற வட மொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்க¼eன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும் இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? கூறுங்க¼eன். 

இதே போல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள்‡வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால்  நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்

கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்க¼eன். திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை என்றுதானே கூறுகிறார். அதாவது புரு­னும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள். 

மோட்சம் என்பதற்குத் தமிழ் வார்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருçeயும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி? . ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? 

 நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை.

தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார், 

அது என் தாய் மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? 

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்eது. இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விeங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்கçe நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்e இழிவுகள் நீங்கு வதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழி யமைப்பிலுள்e நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். 

நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி‡ தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்கçe விçeவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல என்று கூறுகிறார்.

இவ்வeவு ஆழ்ந்த விeக்கத்தை தமிழ் மொழிக்குக் கொடுத்த பெரியார்,  தமிழிலிருந்து சிதைந்தவைதான் மலையாeம், தெலுங்கு  மற்றும் கன்னடம் என்று வலியுறுத்திய பெரியார் மேலும் விeக்குகிறார்,

என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாeம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகயeன்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகயeன்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்

நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்கçeக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்e வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை.

மொழிக் கொள்கை என்றால் தனி நாடு பெற்றால் நாட்டில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஆகும். இது தொடர்பாக இங்கு பெரியார் கூறி பதிவு செய்துள்eதை அவர் கூர்ந்து கவனிக்க வேண்டும்,

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு‡தமிழ் நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு தமிழ் நாட்டுக்கு அரசியலுக் கானாலும், இலக்கியத்திற் கானாலும் போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் மொழி தான் 

இவ்வளவு கூறிய பெரியார் பின் ஏன் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்? அதற்கு காரணம் தமிழ்ப்புலவர்கள் மீது அவர் கொண்டிருந்த கோபம். தமிழ்ப் புலவர்களைப் பற்றிச் சொல்கிறார் பெரியார்,

வள்ளுவரை மன்னிக் கலாம். மற்ற எந்த புலவனையும், எந்த இலக்கியத்தையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை வரை யில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள் 

 “சுமார் 50. 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் புலவர்கள் யாரா யிருந்தாலும் பிச்சை எடுத்தே தீருவார்கள்.  அவர்கள் தகுதி எல்லாம் இலக்கியங்கçe உருப்போட்டு ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லி, மக்கçe மருeச் செய்து, காசு வாங்குவதுதான் உயர்ந்த தொழிலாகும். 

புலவரைப் பற்றி என் கருத்து புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன். நா.கதிரைவேற்பிள்çe என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்த போது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்து விட்டார்.

இது வரை நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு இந்த நாட்டில் எந்தப் புலவனாலும் வeர்ச்சி, அபிவிருத்தி காரியமும் ஆனது கிடையாது. அதற்கு தகுதியான புலவன் இன்று இங்கு யாரும் இல்லை. எந்த புலவனாலும் இதுவரை நமது நாட்டுக்கு சிறு மதிப்பிற்குரிய முன்னேற்ற நூல் கூட உண்டாக்கப்பட்டதில்லையே! கம்பராமா யணத்திற்கும் பெரிய புராணத்திற்கும் புதிய பொருள் எழுதிப் பணம் சம்பாதிப்பார்கள்”.

“இன்று தமிழில் மேதாவிகள் டாக்டர்கள் ஏராeமாக ஆகி விட்டார் கள். பூச்சும் பொட்டும் நாமமும் தான். அவர்கள் தலையில் இருக்க வேண்டியது அறவே இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத் தவிர வேறு எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள்.

இதனால் தமிழ்ப்புலவர்கள் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்கிறார் பெரியார் என்று திசை திருப்பிவிட்டார்கள். பார்ப்பனர்கள் தங்களை பெரியார் எதிர்ப்பதை கடவுள் இல்லை என்கிறார் என்று திசை திருப்பியது போலவே தமிழ்ப் புலவர்கள் செய்தார்கள், செய்து வருகிறார்கள் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

கிள்ளான்!

 கிள்ளான்!

இப்பகுதியில் இருந்த ரப்பர் தோட்டங்களில் 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொழிலாளர்கள் வாழ்நிலைக்காக நடத்தியப் போராட்டம் ஏப்ரல் 8 ஆம் நாள் முதல் கட்டமாகவும் மே மாதம் 6 ஆம் ஒரு முக்கியமான தலைவர் கைதானதால் இரண்டாம் கட்டமாகவும் முடிவுக்கு வந்தது. பின் மே மாதம் 8 ஆம் கலவரமாக வெடித்தது.  இத்தகைய எழுச்சிமிகு போராட்டங்களைப் பற்றி நிறைய நூல்கள் வெளி வந்துள்ளன. அய்யா மு.வரதராசு அவர்கள் முன் முயற்சியில் ‘1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி’ என்று தமிழில் வெளிவந்தது. யஹச். ஈ. வில்சன் எழுதிய ஆங்கில மூலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல் அது. அந்த புண்ணிய பூமி கிள்ளான்.

கிள்ளானிலே மலேசியத் திராவிடர் கழகத்தின் கிளை இயங்கி வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டு, நடைமுறைச் சிக்கல் காரணமாக கோலக்கிள்ளான் கிளையோடு இணைக்கப்பட்டது. இது குறித்த குறிப்பு ‘மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்’ என்ற இந்நூலில் 123 ஆம் பக்கத்தில் உள்ளது.

1954 இல் இரண்டாம் முறையாக வருகை புரிந்த பெரியார், புக்கிட் ராசா லெட்சுமி தோட்டத்திற்கு செல்கிறார்.

புக்கிட் ராசா தோட்டத்தின் வாயில்களிலெல்லாம் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் வாழ்த்தொலி எழுப்பி பெரியாரை வரவேற்கின்றனர். அப்போது அத் தோட்டத் தொழிலாளர்களிடம் பெரியார் பேசுகிறார்.

அங்கிருந்த தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்தவுடன், மலாயாவில் கால் வைத்த பிறகு எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்தேன், செல்வர்களைப் பார்த்தேன், நகரவாசிகளைப் பார்த்தேன். ஆனால் உங்களைக் காண்பதில் ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் அப்போது ஏற்படவில்லை. இப்படிப்பட்டவர்களைக் காணாமல் மலாயாவில் சுற்றுப்பயணம் செய்து என்ன பயன் என்றுகூட நான் சஞ்சலப்பட்டுக் கொண்டி ருந்தேன் என்கிறார்.

கடவுளிடம் பக்தி செலுத்துங்கள், அன்பு செலுத்துங்கள், கடவுளுக்குப் பயப்படுங்கள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. கடவுள் மனிதாக இருக்கிறார். நடமாடும் ஜீவன்களாக இருக்கிறார். நீங்கள் மனிதர்களிடம் காட்டும் அன்பை கடவுள் இருந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்வார் என்று அறிவுகூறுகிறார்.

தொழிலாளி மகன் தொழிலாளியாக, தொழிலாளி பேரன் தொழிலாளியாக இருக்கக் கூடாது. பண்டிகைகள் என்று நீங்கள் பாழாக்குகிற பணத்தை மகனின் படிப்புக்குச் செலவிடுங்கள் உருப்படலாம் என்கிறார்.

கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறியும் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் உங்களை உயர்த்துமென்பதை மறந்துவிடாதீர்கள் என்று கூறுகிறார்.

அந்த புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று அய்யா பரமசிவம் அவர்களிடம் கூறினேன். தற்போது ஒரு சிறு பகுதியும் கோவிலும் இருக்கிறது. அதை சென்று பார்த்தோம்.

அருகாமையில் உள்ள காப்பாரில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1947 ஆம் ஆண்டு பெரியார் மலேசியா வருகை தர இருக்கிறார் என்ற அடிப்படையில் வசூல் செய்த தொகை 214 வெள்ளி 15 காசுகளை ஏழு ஆண்டுகள் கழித்து இந்த புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத்திற்கு வந்து பெரியாரிடம் ஒப்படைக்கிறார்கள்.

1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் வெளியான ‘குடிஅரசு’ இதழில் பெரியாரின் முதல் சுற்றுப்பயண விவரங்களும் குறிப்புகளும் விரிவாக இடம் பெற்றிருக்கின்றன. அதில் குறிப்பிட்டுள்ள பகுதிகளை பார்வையிட நான் விரும்பினேன். அய்யா ரெ.சு.முத்தையா அவர்கள், அய்யா மு.கோவிந்தசாமி அவர்கள் துணையோடு பினாங்கு வரை எல்லாப் பகுதிகளுக்கும் என்னை அழைத்துச் சென்று பெரியார் வருகைப் பற்றி விவரித்தார்கள். கெடா மாநிலத்தில் அய்யா அசோகன் அவர்களும் கலியன் புதைக்குழி வழக்கிற்கு உறுதுணையாக இருந்த பட்டவர்த்து புஷ்பநாதன் அவர்களும் உடன் இருந்தார்கள்.

கோலப்பிறை ‘மலாகாப்’ தோட்டத்தில் கலியன் என்ற தாழ்த்தப்பட்ட தொழிலாளர் இறந்து போகிறார். அவருடைய உடல் பொது இடுகாட்டில் புதைக்கப்படுகிறது. உயர் சாதிக்காரர்களின் எதிர்ப்பின் காரணமாக அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடுகாட்டில் புதைக்கப்படுகிறது. இந்தச் சிக்கலை மலேசியத் திராவிடர் கழகம் கையில் எடுக்கிறது. வழக்கு தொடுக்கிறது. ம.தி.க. வழக்கில் வெற்றி பெற்று, கலியன் அவர்களின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக 1971 இலே 3000 வெள்ளி பெற்றுத் தருகிறார்கள்.

அதே 1971 ஆண்டு அக்டோபர் மாதம் பெரியவர் மருதமுத்து அவர்கள் தமிழகம் சென்று பெரியாரைச் சந்திக்கிறார். அப்போது இவ்வழக்கு குறித்து பெரியாரிடம் தெரிவிக்கிறார். அதைக் கேட்ட பெரியார், ‘ஓர் அரிசனத் தோழருக்கு இழைக்கப்பட்ட இழிவைத் தாங்க முடியாமல் கோர்டில் போய் நின்று, நியாயம் பெற்றிருக்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். கடல் கடந்து வாழ்கின்ற நம்மவர்கள் நம்ம கொள்கைகளை எப்படி மதிக்கிறார்கள்.  கடல் கடந்து வாழ்கின்ற மலேசியத் தமிழர்கள் கண்டுள்ள இந்த நியாயத்தை நீங்கள் எல்லோரும் போய் இங்க இருக்கிற பட்டி தொட்டியயல்லாம் சொல்லுங்க. இந்த கலியன் வழக்கு வெற்றிச் செய்திக் கேட்கிற போது எனக்கு இன்னும் நூறு வருசம் வாழ முடியும் என்ற தெம்பு உண்டாகுதையா’ என்று மனம் உருகுகிறார். இதை அய்யா மருதமுத்து அவர்கள் தனது ‘தமிழகப் பயணம்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.  

மலாயாவில் வாழும் தமிழர்கள் தம் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் உயரிய நிலையுறவும், சீனர், மலாய்க்காரர் போன்ற பிற சமூகத்தவரிடையே சமத்துவமாக வாழவும் கட்டாயம் பிரஜா உரிமை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியார் சிரம்பான் கூட்டத்தில் பேசும்போது அறிவுரை கூறுகிறார்.

1929 இல் இம் மலாயா நாட்டிற்குப் பெரியார் வருகைத் தந்தபோது அவரை வரவேற்றத் தலைவர்களில்  காந்தரசம் அ.சி.சுப்பையா, வள்ளல் உ.இராமசாமி நாடார், கோ.சாரங்கபாணி போன்றோருடன் அய்யா ரெ.ரா. அய்யாறு அவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதையும், அதில் அவர்கள் உரையாற்றியிருக்கும் செய்தியும் இந்நூலில் இருக்கிறது.

பெரியாரின் முதல் மலாயா வருகைக்குப் பிறகு 1930 ஆம் ஆண்டாக இருக்கலாம். மலாயாத் தமிழர்கள் செந்தூல் பகுதியில் உள்ள ‘மூங்கில் குத்து கம்பம்’ என்ற பகுதியில் ‘குடிஅரசு வாசக சாலை’ என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறாகள். அந்த பகுதி தற்போது ‘பம்பூ கார்டன்’ என்ற பெயரில் இருக்கிறது. அந்த பகுதியைத் தேடி நானும் அய்யா பரமசிவம் அவர்களும் அலைந்தோம். அது குறித்த இன்னும் சில குறிப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

‘தமிழ்வரிவடிவ ஆராய்ச்சி’ என்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்குத் தோற்றுவாயாக இருந்த நூலையும், தமிழ்ச்சமுதாயச் சீர்திருத்தத்திற்கு ‘சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்’ என்று நூலையும் எழுதி, இம் மலாயா நாட்டில் தமிழர்கள் வாழ்வாங்கு வாழ சீர்திருத்த இயக்கம் கண்ட தலைவர்களுள் முதன்மை யானவர் மலாயாப் பெரியார் அ.சி.சுப்பையா அவர்கள்.

மலாயாத் தமிழர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தை நன்கொடையாக வழங்கியவர் வள்ளல் உ.இராமசாமி நாடார். தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முதல் தலைவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘சமாதான நீதிபதி’ என்று சிறப்பிக்கப்பட்டவர். சப்பானியர் நடத்திய படையயடுப்பின் போது ஆங்கில அரசுக்கு நிதி உதவிகளை வாரி வழங்கியவர்.

‘முன்னேற்றம்’, ‘இந்தியன் டெய்லி மெயில்’, ‘தமிழ்முரசு’ போன்ற ஏடுகளை மலாயா நாட்டில் நடத்திய தோடு மட்டுமல்லாமல், பெரியாரின் ‘குடிஅரசு’ இதழை இந்நாட்டில் பரப்பியதில் முதன்மையானவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி.  இம்மூன்று தலைவர்களும் ஒன்றிணைந்து மலாயா நாட்டின் தமிழர்களின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்திய சங்கமே ‘தமிழர் சீர்திருத்தச் சங்கம்’.

மலேசியத் திராவிடர் கழகத்தின் முதல் தலைவர் பந்திங் நா.பள்ளிகொண்டான், சட்ட விதிகளை வரைத்து ம.தி.க.வை பதிவு செய்த அய்யா ரெ.ரா. அய்யாறு ஆகியோர் பற்றிய சில குறிப்புகளும் இந்நூலில் ஆங்காங்கு இருக்கின்றன.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அமைத்த ‘சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசின்’ வெளியிடுகளின் முதன்மை ஆசிரியராக விளங்கியவர் தமிழறிஞர் சி.வீ.குப்புசாமி. இவருடைய திருமணம் குறித்த செய்தி களும் கட்டுரைகளும் ‘குடிஅரசு’ இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவராக இருந்து பணியாற்றிய திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் பற்றியக் குறிப்புகளையும் இந்நூலில் ஆவணப்படுத்தி யிருக்கிறேன்.

இறுதியாக இந்நூலின் பின் அட்டைப் பற்றி சில குறிப்புகளைக் கூற விரும்புகிறேன், தமிழ்த்தாத்தா ச.சா.சின்னப்பனார் சிங்கப்பூர் பெரியார் தொண்டர். சிறந்த பாவலர். திருக்குறள் வகுப்புகளை மாணவர் களுக்கு இலவசமாக நடத்தியவர். அ.சி.சுப்பையா அவர்களின் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பவர்.

கோ. இராமலிங்கம் அவர்கள் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவர். சிங்கப்பூர்  திராவிடர் கழகத்தின் செயலாளர்களில் முதன்மையானவர் சு.தெ.மூர்த்தி. நான் பல ஆவணங்கள் அவருடைய துணைவியார் சுசீலா அம்மா அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றேன்.

இப்படம் 1954 இல் பெரியார் வந்தபோது, சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவர் சே.நடராசன் அவர்கள் இல்லத்தில்   எடுக்கப்பட்டது.

கடந்த 25.07.2015 அன்று மறைவுற்றார் கப்பலோட்டித் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் கடைசி மகன் வாலேசுவரன்.  88 அகவை கடந்தவர். 2012 ஆம் ஆண்டில் நான் என் குடும்பத்தாருடன் அவரைச் சந்தித்தேன். தமது முதுமையையும் பொருட்படுத்தாது இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கினார். 1936 ஆம் ஆண்டு கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் இறந்தபின் அவரது குடும்பத் துயரைப் போக்க இந்த மலாயா நாட்டிலிருந்து தமிழர் சீர்திருத்தச் சங்கத்தினர் ஒரு குழு அமைதத்து நிதி திரட்டி, 1938 ஆம் ஆண்டு 500 வெள்ளி உண்டியல் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். அந்த செய்தியும் இந்நூலில் உள்ளது.

மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு சரித்திரம் போல் அமைந்திருக்கிறது. தமிழ் இனம் படித்து அறிய வேண்டிய கருத்துப் பெட்டகம் இந்நூல் என்று வாழ்த்து கூறியிருக்கிறார்.

இது முதல் தொகுதிதான். நிறைய ஆவணங்களை வைத்திருக்கிறேன். உங்கள் ஆதரவை எதிர் நோக்குகிறேன். 

நன்றி வணக்கம்.

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்-1

 புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும்

பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற் கொண்டு

கண்ணாற்றில் கலஞ்செலுத்தும் கடுஞ்செய் கைபோல்

கைதூக்கித் தென்னவரை கரையி லேற்றி

தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்தபின்னும்

துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால்

நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்ற லாற்றின்

நானிலத்துப் பெரியாரை வாழ்த்து வோமே!

(முதன்மொழியில் பாவாணர்)

என்று பாவாணரால் படம் அருமையாகப் படித்துக்காட்டப்பட்ட தந்தைப் பெரியாரின் வழியில் இன்று 2046 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டையும் பொங்கல் விழாவையும் கொண்டாடும் மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் அய்யா நாக. பஞ்சு அவர்களே!

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் என்ற இந்த நூலில் உள்ள வரலாறும் மிகப்பெரியது, இந்நூல் உருவான வரலாறும் மிகப் பெரியது.

மலாயாவில் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புரை செய்து மக்களை நல்வழிப்படுத்த தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று செயல்பட்ட மலாயா நாட்டின் தொடக்கக்காலத் தலைவர்களின் வரலாற்றையும், அவர்களிடம் அச்சீர்திருத்தக் கருத்துகளின் தாக்கம் ஏற்பட காரணமாக இருந்த தந்தை பெரியார் அவர்களின் மலாயா நாட்டின் வருகையையும் பதிவு செய்வதே இந்நூலின் நோக்கம்.

1929 இல் இம் மலாயா நாட்டிற்குப் பெரியார் வருகைத் தந்த போது அவரை வரவேற்றத் தலைவர்களில்  காந்தரசம் அ.சி.சுப்பையா, வள்ளல் உ.இராமசாமி நாடார், கோ.சாரங்கபாணி போன்றோருடன் அய்யா ரெ.ரா. அய்யாறு அவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதும்,  மலாயா திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்பே பெரியார் பிறந்தநாள் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றிருப்பதும் அதில் அவர் உரையாற்றி யிருக்கும் செய்தியும் இந்நூலில் இருக்கிறது.

தமிழ்வரிவடிவ ஆராய்ச்சி என்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்குத் தோற்றுவாயாக இருந்த நூலையும், தமிழ்ச்சமுதாயச் சீர்திருத்தத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் என்று நூலையும் எழுதி, இம் மலாயா நாட்டில் தமிழர்கள் வாழ்வாங்கு வாழ சீர்திருத்த இயக்கம் கண்ட தலைவர்களுள் முதன்மை யானவர் மலாயாப் பெரியார் அ.சி.சுப்பையா அவர்கள்.

மலாயாத் தமிழர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தை நன்கொடையாக வழங்கியவர் வள்ளல் உ.இராமசாமி நாடார். தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முதல் தலைவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சமாதான நீதிபதி என்று சிறப்பிக்கப்பட்டவர். சப்பானியர் நடத்திய படையயடுப்பின் போது ஆங்கில அரசுக்கு நிதி உதவிகளை வாரி வழங்கியவர்.

முன்னேற்றம், இந்தியன் டெய்லி மெயில், தமிழ்முரசு போன்ற ஏடுகளை மலாயா நாட்டில் நடத்தியதோடு மட்டுமல்லாமல், பெரியாரின் குடிஅரசு இதழை இந்நாட்டில் பரப்பியதில் முதன்மையானவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி.  இம்மூன்று தலைவர்களும் ஒன்றிணைந்து மலாயா நாட்டின் தமிழர்களின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்திய சங்கமே தமிழர் சீர்திருத்தச் சங்கம்.

மூவார் மு. திருவேங்கடம் அவர்கள் கோ.சாரங்பாணி அவர்களை பற்றி ஒரு சிறிய நூல் எழுதியுள்ளார். தமிழவேள் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் மிகச் சிறந்த வரலாற்று நூல். தனித்தமிழ் நடையில், தமிழவேளின் பன்முகப் பார்வைகளை கொண்ட நூலாக அது இருக்கிறது.

மலேசியத் திராவிடர் கழகத்தின் முதல் தலைவர் பந்திங் நா.பள்ளிகொண்டான், ரெ.ரா. அய்யாறு ஆகியோர் பற்றிய சில குறிப்புகளும் இந்நூலில் ஆங்காங்கு இருக்கின்றன.

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அமைத்த சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசின் வெளியிடுகளின் முதன்மை ஆசிரியராக விளங்கியவர் தமிழறிஞர் சி.வீ.குப்புசாமி. இவருடைய திருமணம் குறித்த செய்திகளும் கட்டுரைகளும் குடிஅரசு இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவராக இருந்து பணியாற்றி திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் பற்றியக் குறிப்புகளும் கலியன் புதைக் குழி வழக்கும் இந்நூலில் ஆவணப்படுத்தப்படுத்தியிருக்கிறேன்.

தற்போது பரபரப்பாக பேசப்படும் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தில் 1929 ஆம் பெரியார் பேசியிருக்கிறார். இராமகிருஷ்ண மி­னில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100 க்கு 90 பேர் யோக்கியமற்றவர்கள் என்று முழங்கியிருக்கிறார்.

1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் வெளியான குடிஅரசு இதழில் பெரியாரின் சுற்றுப்பயண விவரங்களும் குறிப்புகளும் விரிவாக இடம் பெற்றிருக்கின்றன. அதில் குறிப்பிட்டுள்ள பகுதிகளை பார்வையிட நான் விரும்பினேன். அய்யா ரெ.சு.முத்தையா அவர்கள், அய்யா மு.கோவிந்தசாமி அவர்கள் துணையோடு பினாங்கு வரை எல்லாப் பகுதிகளுக்கும் என்னை அழைத்துச் சென்று பெரியார் வருகைப் பற்றி விவரித்தார்கள். கெடா மாநிலத்தில் அய்யா அசோகன் அவர்களும் கலியன் புதைக்குழி வழக்கிற்கு உறுதுணையாக இருந்த பட்டவர்த்து புஷ்பநாதன் அவர்களும் உடன் இருந்தார்கள்.

1954 இல் இரண்டாவது முறையாக பெரியார் மலாயா வந்த போது பினாங்கில் பேசுகிறார், நம் சமுதாய வாழ்வு சாஸ்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் மூச்சுவிடுவதிலிருந்து தொட்டதெல்லாம் சாஸ்திரம். தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்வது கஷ்டமாய் உள்ளது. விஞ்ஞானத்தை ஏற்பவர்கள் சமுதாயச் சீர்திருத்தத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்கிறார் பெரியார்.

தைப்பிங் குந்தோங் அசோசியே­ன் மண்டபத்தில் பெரியார் பேசுகிறார், இரண்டொரு பத்திரிகை தவிர, மற்றவற்றிலெல்லாம் என் பேச்சை வெளியிடாமல் திருத்தியே போடுவார்கள். அப்போது நான் குடிஅரசு பத்திரிகையை நடத்தினேன். இந்த நாட்டில் 2000‡3000 பத்திரிகைகள் விற்பனையாயிற்று. நண்பர் சாரங்கபாணி மாதம் 300 சந்தாக்கள் வீதம் அனுப்பிக் கொண்டே வந்தார் என்கிறார் பெரியார்.

கோலக்கங்சாரில் பெரியார் பேசும் போது, முன்பு பாய்மரக் கப்பலில் வந்தோம். இப்போது புகைக் கப்பல் வந்துவிட்டது. ஆனால் இப்போதும் பாய்மரக்கப்பலில்தான் போவேன் என்றால் என்ன அர்த்தம்? முன்னேற்றத்திற்கு ஆரம்பக்காலத்தில் சற்று எதிர்ப்பு இருந்தாலும் வர வர மக்கள் திருந்தியே தீருவார்கள் என்று கூறுகிறார்.

பத்துகாஜாவில் உரையாற்றும் போது இம்மலாயா நாடு முன்பை விட அழகாக, முன்னேற்றமடைந் திருப்பதாகவே காணப்படுகிறது. காரணம் இங்குள்ள மக்களின் உணர்ச்சியே ஆகும் என்று எடுத்துக் காட்டுகிறார். 

கோலக்கிள்ளானில் பேசும்போது, இருக்கிற வரை அல்லது காந்தியைப் போல் என்னை யாரும் கொல்கிற வரை சமூகத்தில் கீழாக நசுக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்கப் பாடுபட்டப்படிதான் கண்ணை மூடுவேன் என்கிறார்.

கிள்ளானில் இருந்த புக்கிட் ராசா லெட்சுமி தோட்டத்திற்கு செல்கிறார் பெரியார். அங்கிருந்த தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்தவுடன், மலாயாவில் கால் வைத்த பிறகு எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்தேன், செல்வர்களைப் பார்த்தேன், நகரவாசிகளைப் பார்த்தேன். ஆனால் உங்களைக் காண்பதில் ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. இப்படிப்பட்டவர்களைக் காணாமல் மலாயாவில் சுற்றுப்பயணம் செய்து என்ன பயன் என்றுகூட நான் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தேன் என்கிறார்.

தொழிலாளி மகன் தொழிலாளியாக, தொழிலாளி பேரன் தொழிலாளியாக இருக்கக் கூடாது. பண்டிகைகள் என்று நீங்கள் பாழாக்குகிற பணத்தை மகனின் படிப்புக்குச் செலவிடுங்கள் உருப்படலாம் என்கிறார்.

அக்கூட்டத்திற்கு ம.தி.க.முன்னாள் தேசியத் தலைவர் கோலக்கிள்ளான் ஆ.சுப்பையா தலைமை வகித்துள்ளார்.

சிரம்பான் கூட்டத்தில் பேசும் போது, மலாயாவில் வசிக்கும் தமிழர்கள் தம்உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும், உயரிய நிலையை அடையவும், சீனர், மலாய்க்காரர்கள் போன்ற பிற சமூகத்தவர்களிடையே சமத்துவமாக வாழவும் கட்டாயம் பிரஜா உரிமை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியார் அறிவுரைக் கூறினார்.

நாவல்பேஸ் பகுதியில் உரையாற்றும் போது, கடவுள் எண்ணம் அவசியம். தாயும் தந்தையும்தான் கடவுள். அவர்களுக்கு பக்தி செலுத்துவது என்பது மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவதும், நாணயம், ஒழுக்கம், உண்மை முதலியவற்றுடன் நடப்பதும்தான். மோசம் செய்யக் கூடாது, வஞ்சிக்கக் கூடாது. இதுதான் கடவுள் என்கிறார் பெரியார்.

இந்த நாட்டின் வளத்தில் தமிழர்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக் கூடாது. இதற்கு மக்கட்குக் கல்வி அவசியம். ஒரு பால் வெட்டும் தொழிலாளிப் பெற்றோர், தம் பிள்ளை கையில் உளியை எடுத்துக் கொடுக்கக் கூடாது. பேனாவை எடுத்துக் கொடுத்துக் கற்பிக்க வேண்டும். அலகு காவடி எடுப்பது போன்றவற்றை ஒழித்து மற்ற வகுப்பினரைப் போன்று முன்னேற்றமுடன் வாழ நமக்குள் ஒற்றுமை வேண்டும். காசு மிச்சம் செய்து பிள்ளைகட்கு கல்வி தர வேண்டும் என்ற அறிவுரை கூறுகிறார்.

இறுதியாக இந்நூலின் பின் அட்டைப் பற்றி சில குறிப்புகளைக் கூற விரும்புகிறேன், தமிழ்த்தாத்தா ச.சா.சின்னப்பனார் சிங்கப்பூர் பெரியார் தொண்டர். சிறந்த பாவலர். திருக்குறள் வகுப்புகளை மாணவர்களுக்கு இலவசமாக நடத்தியவர். அ.சி.சுப்பையா அவர்களின் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பவர்.

கோ. இராமலிங்கம் அவர்கள் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவர். சிங்கப்பூர்  திராவிடர் கழகத்தின் செயலாளர்களில் முதன்மையானவர் சு.தெ.மூர்த்தி. எனக்கு பல ஆவணங்கள் அவருடைய துணைவியார் சுசீலா அம்மா அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றேன்.

1954 இல் பெரியார் வந்த போது, சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவர் சே.நடராசன் அவர்கள் இல்லத்தில்  இப்படம் எடுக்கப்பட்டது.

இந்நூல் குறித்து இரெ.சு.முத்தையா அவர்கள், மறைந்து போன‡ மறந்து போன மாமனிதர்கள், அறிவியக்கச் சிந்தனையாளர்கள் சிலரை மீண்டும் மனதில் நிழலாடச் செய்யும் என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு சரித்திரம் போல் அமைந்திருக்கிறது. தமிழ் இனம் படித்து அறிய வேண்டிய கருத்துப் பெட்டகம் இந்நூல் என்று வாழ்த்து கூறியிருக்கிறார்.

மலேசியத் திராவிடர் கழக 70 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

 இந்த மலேசியத் திராவிடர் கழக 70 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு மீண்டும் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. 1946 இல் தொடங்கப்பட்ட மலேசியத் திராவிடர் கழகத்தில் 1965 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பேராளர் மாநாடுகளில், தேசியத் தலைவர்களாக இருந்தவர்கள், 

நா.பள்ளிகொண்டான்,

பழ. அம்பலவாணர்,

ஈப்போ ரெ.ரா.அய்யாறு,

கோடையிடி ஜி.குமாரசாமி,

கா.பா.சாமி,

கோலக்கிள்ளான் ஆ.சுப்பையா,

ப.மணியரசு,

மீண்டும் ஜி.குமாரசாமி,

1965 இல் ஈப்போ இரா.சு.மணியம் அவர்கள் வரை 

தங்கள் பதவி காலம் முடிந்தவுடன் அவர்கள் பதவி விலகி அடுத்தவர்களுக்கு வழிவிட்டார்கள். 

2010 இல் தலைமைப் பொறுப்பிற்கு வந்த தேசியத்தலைவர் பி.எஸ்.மணியம் அவர்கள் இரண்டு முறை மட்டும் இப்பொறுப்பில் இருக்க விரும்புவதாகவும் அதற்குள்ளாக கட்டிடத்தை மீட்டுத் தருவதாகவும் உறுதி அளித்தார். அந்த வகையில் கட்டிட மீட்புப் பணியை முழுமையாக செய்து,  தற்போது தமது தலைமைப் பதவியையும் வருங்காலத் தலைமுறையினர்களுக்கு பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்துள்ளார். அத்தகைய ஒரு சிறப்பை இந்த மாநாட்டிற்கு தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

1929 இறுதியில் பெரியார் மலாயா நாட்டிற்கு வந்து சென்ற பின் நம் நாட்டின் பல பகுதிகளில் திராவிட இயக்கங்கள் தொடங்கப்பட்டன என்றாலும், செந்தூல் பகுதியிலுள்ள மூங்கில்குத்து கம்பம் பகுதியில் தொடங்கப்பட்ட குடிஅரசு வாசக சாலை முதன்மையானது. கோலாலம்பூரில் இயங்கிவந்த சிலாங்கூர் சுயமரியாதை சங்கம், கோலாலம்பூர் பகுத்தறிவுச் சங்கம், தமிழர் சீர்திருத்த சங்கம் ஆகிய இயக்கங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட முன்வந்த போது, தந்தை பெரியாரின் கருத்துரையின் பேரில் கோலாலம்பூர் திராவிடர் கழகம் என்ற பெயரில் 4.8.1946 இல் ஒன்றிணைக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் அப்போது தமிழர் சீர்திருத்த சங்கத்தின் தலைவராக இருந்த ஆ. அங்கமுத்து மற்றும் பொதுச்செயலாளர் அ.மருதமுத்து அவர்களுக்கு எழுதிய மடல் இது.

மலாயா நாடு முழுவதும் உள்ள திராவிடர் கழகத் தோழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கோலாலம்பூர் திராவிடர் கழகத்தார் எடுத்த முன் முயற்சியில் 1947 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15, 16, 17 ஆகிய நாட்களில் கோலாலம்பூர் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ஆங்கிலப் பாடசாலையிலும், நகர மண்டபத்திலும் பந்திங் நா. பள்ளிகொண்டான் தலைமையிலும் ஈப்போ ரெ.ரா. அய்யாறு தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பயனாக அகில மாலாயா மத்திய திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

1929 இல் பினாங்கில் ஐக்கிய இந்தியர் பசனைக்குழு என்ற குழு ஏற்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஐக்கிய இந்தியர் சங்கத்தின் கீழ் செயல்பட்டது.  திரு. ஏ.என்.இராமசாமி அவர்கள் பினாங்கில் முதன் முதலாக சுயமரியாதை சங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுத்தவர். இவ்வியக்கம் சீர்திருத்தக் கருத்தக் கருத்துக்களையும் புராண எதிர்ப்புப் பாடல்களையும் பாடி பரப்புரை செய்து வந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நிலையில் ஈப்போ நகரில் கழகத் தலைவர்கள் ரெ.ரா. அய்யாறு அவர்கள் தலைமையில் 1950 இல் மீண்டும் புத்துயிர் பெற்றது.

ஈப்போ ஸ்டார் அச்சக உரிமையாளரும் ம.தி.க. தேசியப் பொருளாளராகவும் இருந்த திரு. த.வ.மு. மகாலிங்கம் அவர்கள் தம் முயற்சியில் இனமணி என்ற இதழைத் தொடங்கினார்.

இதன் பின்னர் கழக அதிகாரப் பூர்வ ஏடாக இரா. மணிமாறன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கொள்கை முரசு 1969 இல் தொடங்கப்பட்டது. இதற்கான வெளியீட்டுக் குழுவில் கே.ஆர்.இராமசாமி அவர்கள் தலைவராகவும், அ.மருதமுத்து, ஆர்.எஸ்.பரசுராமன், திரு.ப.செழியன், திரு.ரெ.செந்தூர் வாசன் போன்றோர் உறுப்பினர்களாகவும் இருந்து பணியாற்றினர். 

இத்தகை நெடிய வரலாற்றுக்குச் சொந்தமான மலேசியத் திராவிடர்க் கழகத்தில் முதல் துணைத் தலைவராக 1947 இல் து. இலட்சுமணன் இருந்திருக்கிறார். இவர் 1938 இல் தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு ஏழரை மாதம் சிறை தண்டனை பெற்றவர். மலேசியாவிலிருந்து இருவரும் சிங்கப்பூரிலிருந்து மூவரும் சிறைதண்டனை பெற்றனர்.

1948 முதல் 1950 வரை துணைத் தலைவராக தமிழ்த் தாத்தா ச.சா.சின்னப்பனார் இருந்திருக்கிறார். சிறந்த தமிழ்ப் புலவர். மலாயாப் பெரியார் அ.சி.சுப்பையா அவர்கள் எழுதிய சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் என்ற நூலுக்கு சாற்றுக் கவி வழங்கியவர். கழகத் தோழர்களுக்கு திருக்குறள் வகுப்பு நடத்தியவர். தமிழறிஞர் சி.வீ.குப்புசாமி அவர்களுக்கு யாப்பு இலக்கணம் கற்றுத் தந்தவர்.

ச.பாபு, நா.மு. காசீம், இரா. தேவராசன் போன்றவர்களும் துணைத்தலைவர்களாக அப்பதவிக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள்.

திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களை பொதுச் செயலாளர் பதவிக்கு அறிமுகப்படுத்திய கோலக் கிள்ளான் ஆ.சுப்பையா அவர்களும் முதலில் துணைத் தலைவராக 1955‡56 ஆண்டுகளில் இருந்திருக்கிறார்.

கா.பா.சாமி அவர்கள் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். 

முன்னாள் தேசியத் தலைவர் கோடையிடி திரு. ஜி. குமாரசாமி அவர்களும் துணைத்தலைவராக இருந்திருக்கிறார். 

திராவடமணி மு. நல்லதம்பி, முத்துசின்னையா, பாண்டுரங்கன் போன்றோரும் துணைத் தலைவர்களாக பணி செய்திருக்கிறார்கள்.

மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் 9 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

 மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் 

9 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் 

9.2.2020 அன்று  கவி ஆற்றிய உரை

 1994 இல் ஒரு பேனாவின் கட்டளைகள், 2000 இல் சமுதாயம் எங்கே போகிறது? நெருப்பு முனையில் திருப்பு முனை, சரித்திரமே விழுத்திடு போன்ற காலத்தால் அழியாத வரலாற்று நூல்களையும் 1998 இல் சாதி ஒழிப்பு மாநாடு, தமிழ்மறை மாநாடு, பன்னாட்டு பகுத்தறிவு மாநாடு, உலகத் தமிழ் உணர்வாளர் மாநாடு என்று  பல உணர்ச்சிகரமான மாநாடுகளையும் நடத்தி, மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் 9 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்றிற்கும் எழுத்தாண்மை ஏந்தல் அய்யா பெரு.அ.தமிழ்மணி அவர்களே! தமிழர் தன்மான இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்களே! உறுப்பினர்களே! வணக்கம்.

முதலில் இந்த மாநாட்டில் சிறப்புரை ஆற்ற வாய்ப்பு அளித்த அய்யா அவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் என் நன்றி. 

நான் யார்.... 

‘பெரியார் பார்வை’ என்ற இதழ் ஆசிரியர்; ‘மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்’ என்ற நூலின் ஆசிரியர்; ‘பெரியார் பட்டறை’ எனும்  பாசறையின் அமைப்பாளர்;

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் அறத்துப்பால் உரையினை மீள்பதிப்புச் செய்தவர்;

தேவநேயப் பாவாணரின் அரிய படங்களைச் சேகரித்து ‘தேவநேயம்’ எனும் 14 தொகுதிகளை வடிவமைத்து, ‘தேவநேயம் இணையதளத்’தை உருவாக்கியும் பாவாணர் பெருமை பரப்பி வருகின்ற திருவாரூர் கவி அவர்கள், ‘தமிழினம் எழுவதாகுக’, ‘தமிழ்க்காவிரி நடந்தாய் வாழி’, ‘பெரியாரின் மொழிக் கொள்கை அறிவு பூர்வமானது’, ‘மறுமலர்ச்சி தி.மு.க. ‡ மற்றுமொரு தி.மு.க.வா?’, ‘தமிழர் கழகம் என்பதை திராவிடர் கழகம் என்று மாற்றினாரா பெரியார்?’ ஆகிய அறிவார்ந்த படைப்புகளை திராவிட இயக்கக் கருவூலமாக ஆக்கித் தந்த தோழர் கவி அவர்கள் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்னைப் பற்றி கூறியுள்ளதை என் தகுதியாகக் கொண்டு இங்கு உரையாற்றத் தொடங்குகிறேன்.

பசிக்குத் தீனி, அலுப்புக்கு உறக்கம் என்று வாழ்வது விலங்கு வாழ்க்கை. 

பகுத்தறிவைப் பெற்றுள்ள கோடானு கோடி மக்களுள்ளும் பலர் அதே விலங்கு நிலையில் தாழ்ந்து கிடக்கிறார்கள். தாழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.  எப்போதோ ஒருமுறை அல்ல..... தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக இருக்கிறார்கள்.

நாடுகள் விடுதலை பெற்றிருக்கலாம். ஆனால் மனிதன் மனிதனுக்கு அடிமையாக இருக்கிறான். அரசியலில் அடிமையாக இருக்கிறான். பொருளாதாரத்தில் அடிமையாக இருக்கிறான்.

சாதி என்னும் கொடுமையான நஞ்சு தமிழர்களை தனித்தனியாகப் பிரித்து வைத்துள்ளது. ஆயிரம் சாதிகளாகப் பிரிந்துவிட்டன. 

ஒவ்வொரு சாதிக்காரர்களும் தனக்குக் கீழே நாலு பேர் இருக்கிறார்களே என்று நினைக்கிறானே தவிர, ஏன் தாழ்ந்த சாதி ? உயர்ந்த சாதி என்று கேட்க யாரும் துணிவதில்லை.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, தட்டிக் கேட்பாரற்று இருந்த சாதிக் கொடுமைகளை தட்டிக் கேட்டவர் தந்தை பெரியார்.

இந்தியாவில் கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தெருவில் நடப்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை.

வைக்கத்தின் வீதி ஊருக்கு பொது. அதில் நடக்காதே என்று தடுக்க யாருக்கு உரிமை? தடுப்பவர்கள் வீதியமைக்க, மண் வெட்டியவர்களா?  மண்கூடை சுமந்தவர்களா? உருளை வண்டி இழுத்தவர்களா என்று போர்ப்பரணி பாடி போராட்டம் நடத்தி, மனித உரிமையை நிலைநாட்டியவர் தந்தை பெரியார்.

சாதியின் பேரால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பேதங்களையும், சமூகத்துறையிலும் பொருளாதார துறையிலும் இருந்து வரும் உயர்வு தாழ்வுகளையும் அகற்றி மக்கள் யாவரும் ஒரே சமூகமாக வாழச் செய்வதுதான் சுயமரியாதை இயக்கமாகும்.

1879 செப்டம்பரில் 17 இல் பிறந்து 10 ஆம் அகவையில் பள்ளிப்படிப்பை விட்டு விலகி மண்டிக்கடை வணிகத்தில் ஈடுபட்டு தனது 19 ஆம் அகவையில் நாகம்மையை திருமணம் முடித்து 21 ம் அகவையில் துறவறம் பூண்டு, பின் அவரது தந்தை வெங்கடப்ப நாயக்காரால் மீட்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பி 1914 இல் ஈரோடு நகர் மன்ற தலைவர்  உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த  பின்பு, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர் ஆகிய கொள்கையில் ஈர்ப்புக்கொண்டு 1919‡20 ஆண்டுகளில் காந்தியாரின் தலைமையேற்று ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு , அதன் காரணமாக வழக்கு மன்றங்களில் தனக்கு வரவேண்டிய 50 ஆயிரம் ரூபாயை பெற  வழக்காடாமல் விடுத்து, அந்த தொகையை இழந்து, பின்பு கதர்இயக்கத்தில் ஈடுபட்டு திருசெங்கோட்டில் கதர் ஆசிரமத்தைத் திறந்து,  மனித சமூகம் சீரழிவதற்கு மதுதான் காரணம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையில் சேலம் தாதம்பட்டியில் உள்ள தன் தோட்டத்தில் 500 தென்னை மரங்களை வெட்டி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறைச் சென்று, மாணவர்களிடையே வருணாசிரம வேறுபாட்டை வளர்த்த வ.வே.சு.அய்யர் நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தை எதிர்த்துப் போராடி, வைக்கம் ஊரில் தெருக்களில் ஈழவ மக்கள் நடக்க உரிமை கோரிப் போராட்டம் நடத்தி சிறை சென்று, பார்ப்பனரல்லாத மக்களுக்காக வகுப்புரிமை கோரிப் போராட்டம் நடத்தி, அக்கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் காங்கிரசிலிருந்து 1925 இறுதியில் வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் தந்தை பெரியார்.

மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கிறான்.  ஆனால் அடிமையாக வாழ்ந்து அடிமையாக சாகிறான். அது எப்படி?

நாடுகள் சுதந்திரம் அடைந்து இருக்கின்றனவே என்ற கேள்விகள் எழலாம்.

கண்களுக்கு அப்படித்தெரியலாமே தவிர, உண்மையில் மனிதன் அந்நிய பண்பாடுகளுக்கு, சிந்தனை களுக்கு அடிமையாக இருக்கிறான். இது உலகம் முழுவதும் இருக்கிறது. நம்மிடம் உள்ள கொடுமையான அடிமைத்தனம் எது என்றால் சிந்திக்க மறுப்பது.

சில சமயங்களில் சிந்தித்தாலும் மனசாட்சியின் குரலை ஒலிக்க மறப்பது ‡ மறைப்பது.

தந்தை பெரியாரின் சிந்தனை சுதந்திரமானது.  மரபு வழி என்பதையும் அது நம்முடைய பழக்கம் என்பதையும் உடைத்தவர் பெரியார். 

பெரியார் அவர்கள் மனிதன் அறிவோடு வாழவேண்டும். மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கருதினார். பெண்களின் முன்னேற்றத்திற்கும் உரிமைக்கும் போராடினார். 

பெரியார் அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி, தொடங்கிய இயக்கம் சுயமரியாதை இயக்கம். உலக அரங்கிலே நாத்திக கொள்கையை முன்னிறுத்தி இயக்கம் தொடங்கியுள்ளார்கள், புரட்சிக் கருத்துக்களை முன்னிறுத்தி இயக்கம் தொடங்கியுள்ளார்கள். ஆனால் சுயமரியாதையை முன்னிறுத்தி இயக்கம் தொடங்கியவர் தந்தை பெரியார்.

பார்ப்பனரல்லாதவர்களுக்கான சுயமரியாதை, தொழிலாளர்களுக்கான சுயமரியாதை, பெண்களுக்கான சுயமரியாதை என்று போராடத் தொடங்கியவர் தந்தை பெரியார்.

மானம் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார். பகுத்தறிவு என்பது மனிதர்க்கு உயிர்நாடி. மூடநம்பிக்கையும் குருட்டு பழக்கமும் சமுகத்தின் முதல் பகைகள். மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது. தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் சாதி ஒழிய வேண்டும். பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும். மனித பண்பை வளர்ப்பதே  என்வாழ் பணி என்று தொண்டாற்றத் தொடங்கினார் பெரியார்.

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஏன் தோற்றுவித்தேன் என்று சொல்கின்ற போது, உலகில் எங்குமில்லாத பிறவிக் கொடுமையாக இருக்கக்கூடிய இந்த சாதி இழிவு பேதம் இந்த சமுதாயத்தில் ஆழமாகப் பற்றியிருக்கின்ற காரணத்தால், ஒரு மனிதனை விட இன்னொரு மனிதன் உயர்ந்தவன், ஒரு மனிதனுக்கு இல்லாத வாய்ப்பு இன்னொரு மனிதனுக்கு இருக்க வேண்டும். ஒரு மனிதனை மதிக்காத இன்னொரு மனிதனை மட்டுமே மதிக்க வேண்டும் என்று இருக்கிற சாதி வருணாசிரம தர்மம் இந்த நாட்டில் அறவே அழிந்து மனித குலம் ஒன்றுபட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே தொடங்குகிறேன் என்றார்.

கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்று கருதினார் பெரியார்.

அதற்காக 1925 இல் தமிழில் குடிஅரசு, 1928 இல் ஆங்கிலத்தில் ரிவோல்ட் 1934 இல் பகுத்தறிவு, புரட்சி, 1935 இல் விடுதலை 1971 இல் உண்மை என்று பல்வேறு ஏடுகளைத் தொடங்கினார்.

1929 இல் முதல் சுயமரியாதை மாநாட்டை செங்கல்பட்டில் நடத்தினார். 1938 இல் நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் போன்ற தமிழ் அறிஞர்களுடன் முதல் இந்திப்போரில் சிறை. நீதிக்கட்சிக்குத் தலைவர். 1940 இல் அண்ணல் அம்பேத்கர் முகம்மது அலி ஜின்னா ஆகியோருடன் சந்திப்பு. திருவாரூர் நீதிக்கட்சி மாநாட்டின் தீர்மானத்தின் படி 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் என்று அடித்து ஆடத் தொடங்குகிறார் பெரியார்.

20.12.1929  அன்று பெரியார் அவர்கள் பினாங்கு துறைமுகம் வந்து சேருகிறார். கப்பல் பயணிகள் குறைத் தீர்க்கும் சங்கத் தலைவர் திரு.எ.சிங்காரம் பிள்ளை, செயலாளர் திரு. எம்.துரைராஜு அவர்கள், கப்பல் பயணிகள் ஆய்வாளர் திரு. எம்.எம்.எஸ். முதலியார் ஆகியோர் பெரியாரை வரவேற்றனர். பிறகு அவர்கள் பெரியாரிடம் தங்கள் வருகையைப் பற்றி சிலர் தப்பாய் எடுத்துக் கூறி  இருக்கிறார்கள்  என்றும்,  ஆனாலும் அதிக மக்கள் ஆவலாய் வரவேற்கக் காத்திருக்கிறார்கள் என்றும்  கடவுளைப் பற்றியும் சமயங்களைப் பற்றியும் பேச வேண்டிய அவசியம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப் படுவதாகவும் சொன்னார்கள். 

இதற்குபெரியார் அவர்கள், கடவுளைப் பற்றியோ சமயங்களைப் பற்றியோ பிரசாரம் செய்வது தனது வேலை அல்லவென்றும், தான் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களுக்கு அதன் எதிரிகள் தக்க சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாமல் பயங்காளித்தனமாயும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியாயும், கடவுள்கள், மதங்கள், வேதங்கள், புராணங்கள் என்பவைகளைக் கொண்டுவந்து முட்டுக்கட்டையாய்ப் போடுவதால் அவைகளை எடுத்து எறிந்துவிட்டு முன்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்படுகின்றதென்றும், ஆனாலும் உண்மை யான கடவுளும் உண்மையான வேதமும் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்துபோகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார். அதிகாரிகள் மூவரும் விடைபெற்றுச் சென்றனர்.

பினாங்கில் ஐக்கிய இந்திய அசோசியேசன் மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பில், பெரியார் அவர்கள் சுயமரியாதையும் சமத்துவமும் அறிவு வளர்ச்சியுமே தனது தொண்டின் இலட்சியமென்றும், ஆதலால் தன்னால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் வந்துவிடாதென்று தான் உறுதியாய் கருதி இருப்பதாயும் கூறினார்.

பினாங்குக்கு அப்பால் 4 மைல் தூரத்தில் ஜனாப் முகமது ராவுத்தர் பங்களாவுக்கு அழைத்துச் செல்லப் பட்டு அங்கு ஒரு பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்து, ஏற்புரையில் பெரியார் அவர்கள், நாங்கள் இங்கு எந்தக் கோவிலையும் இடிக்க வரவில்லை யயன்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ ஆதரவையோ உண்டாக்க வரவில்லையயன்றும் மற்றவர்களைப் போல் பணம் வசூல் செய்து மூட்டைக் கட்டிப் போக வரவில்லையயன்றும் உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோமென்றும் கூறினார்.

கோலப்பிறையில் இருந்த நமசிவாயம் தமிழ்ப் பாடசாலையைச் சென்று பார்த்தார்.

அங்கு ஒப்ரா என்ற மலாய் நாடக மேடையில் ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்பட்டது. ஏறத்தாழ 4‡5 ஆயிரம் பேர்களுக்கு மேலாகவே கூடியிருந்தார்கள். அக்கூட்டத்திற்கு திரு.நமச்சிவாயம் அவர்கள் தலைமை வகித்தார். 

இரவு ஏழரை மணிக்கு மேல், அறுபது மைல் தூரத்தில் உள்ள தைப்பிங்கு போகிறார். தைப்பிங் சேருவதற்கு இரவு பத்து மணி ஆகிறது. திரு. இரத்தினம் பிள்ளை அவர்கள் வீட்டில் பலமான விருந்து நடத்தப்பட்டு அங்கேயே இரவு தங்கியிருந்து மறுநாள் காலையில் (21.12.29) கோலகங்சார் சென்றார்.

கோலகங்சாரில் புகை வண்டி ஏறி பகல் இரண்டு மணிக்கு ஈபோ வந்து சேர்ந்தார்கள். அதே வண்டியில் மாநாட்டுத் தலைவர் ஜனாப் டாக்டர் மகம்மத் கவுஸ் ஜே.பி. அவர்களும் வந்தார்கள். 

இரயில் வண்டி ஈபோ வந்து சேர்ந்ததும் ஈபோ இரயில்வே ஸ்டேசனில்  கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பதினாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து நூற்றுக்கணக்கான மாலைகளாலும் ஆயிரக்கணக்கான வெல்கம்களாலும் பதினாயிரக்கணக்கான ‘ஜே’ சப்தங்களாலும் வரவேற்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, சற்று இளைப்பாரச் செய்து, சாரணர்கள் புடை சூழ தலைவர்கள் முதலியவர்கள் தமிழர் மாநாட்டுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

மாநாடு ஈபோ கானல்லி ரோட்டிலுள்ள சிலோன் அசோசியே­ன் மண்டபத்தில் 21.12.29 ஆம் நாள் மாலை 4 மணிக்கு தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதிநிதிகளுக்கு 75,50,40,30,15, ஏழரை, ஒன்றரை ரூபாய்கள் வீதம் கட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததும் மண்டபம் முழுவதும் பெண்களும் ஆண்களும் நிறைந்து இடமில்லாமல் பிரதிநிதிகள் வெளியிலும் இருக்க வேண்டி இருந்தார்கள்.

திரு. அய்யாரு அவர்கள் தலைமையில் சுவாமி அற்புதானந்தாவால் பெரியாருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப்பட்டது.  பெரியார் அவர்கள் அரை மணி நேரம் அரியக் கருத்துக்களை தெரிவித்து மாநாட்டை திறந்து வைத்தார்.

ஐனாப் மகமத் யூசுப் அவர்களால் பெரியாரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. பிறகு திரு. சதாநந்தம் அவர்களால் அரசர் படம் திறக்கப்பட்டது. பிறகு வரவேற்புத் தலைவர் திரு. அய்யாரு அவர்கள்  வரவேற்பு உரை ஆற்றினார்.

மகாநாட்டு தலைமை வகிக்க, ஜனாப் டாக்டர் மகமது கவுஸ் ஜே.பி. அவர்களை திரு. சாராங்கபாணி அவர்கள் முன்மொழிய சாமி அற்புதானந்தா வழிமொழிந்தார்.

‘தமிழ்நாடு’ பத்திரிக்கையின் மலாய் சீடரான ஜனாப் அமீத்கான் எழுந்து, ஒரு மகமதியர் இம்மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கக் கூடாது என்று சொல்லி அதைப்பற்றி பேச எனக்கு நேரம் கொடுக்கவேண்டும் என்று கேட்டார். 

அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மகமதியர்களுக்கு விரோதம் என்று சொல்லி ஆரம்பித்தவர், கடைசியில் 1300 வரு­த்திற்கு முன்னாலேயே மகமதிய மதத்தில் இந்த சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் முழுவதும் இருக்கின்ற தென்றும் தங்களுக்கு யாரும் சுயமரியாதை போதிக்க வேண்டியதில்லை என்றும், ஆதலால் மகமதியர் தலைமை வகிக்கக் கூடாதென்றும் சொல்லி உட்கார்ந்தார். ஆனால் மக்களின் பேராதரவின் காரணமாக ஜனாப் டாக்டர் மகமது கவுஸ் தலைவராக இருந்து மாநாட்டை நடத்தினார். 

ஜனாப் அமீத்கான் கூறிய கருத்துக்களுக்கு தனது பேச்சில் பெரியார் விடை கூறினார்.

23.12.29 காலையில் பெரியார் அவர்கள்  ஈபோ நாடார் சங்கத்தாரின் அழைப்புக்கு இணங்கி அங்குச்சென்றார்.அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான நாடார் பெருமக்களாலும் ‘ஜே’ கோ­த்துடன் வரவேற்கப்பட்டு மாலை சூட்டப்பட்டனர். பிறகு, மலாக்கா பெருமாள் நாடார் அவர்கள் தலைமையில் ஈபோ நாடார்களால் ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப்பட்டது. 

அப்பத்திரத்தைப் பெற்று ஒரு மணி நேரம் நாடார் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றியும், அவர்களால் சுயமரியாதை இயக்கத்திற்குள்ள ஆதரவைப் பற்றியும், இந்தியாவில் இது சமயம் சுயமரியாதை இயக்கத்திற்குத் தலைவர் ஒரு நாடார் கனவான் என்றும் அவர்தான் உயர்திரு. டப்பள்யூ.பி.ஏ. செளந்திரபாண்டியர் எம்.எல்.சி. என்றும், அவர் உதவியால் இயக்கம் பெற்றுள்ள பலத்தைப் பற்றியும் பெரியார் பேசினார். 

24.12.29 காலையில் திரு.இராமசாமியாரும் அவரைச் சேர்ந்தவர்களும் ஈப்போவிற்கு 5 மைல் தூரத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுக் கிணற்றிற்குச் சென்று நீராடினார்.

 அன்று பிற்பகல் திரு.அய்யாரு அவர்கள் வீட்டில் உணவு கொண்டு நடுப்பகல் 1 மணிக்கு புகைவண்டியேறிச் சிங்கப்பூருக்குப் பிரயாணமானார்கள். 

ரயில் மார்க்கமாக  சிங்கப்பூருக்குப் போய் கொண்டிருக்கையில், விடியும் மட்டும் ரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டே­னிலும் ஜனங்கள் வந்து திரளாகக் கூடிக்கொண்டு ‘ஜே’ போடுவதும், பெரியாரையும் அவரது மனைவியாரையும் தூக்கத்தை விட்டு எழுப்பி வண்டியை விட்டுக் கீழே இறக்கி கணக்கு வழக்கற்ற மாலைகள் போடுவதும், கூடை கூடையாய் ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, மங்குஸ்தான் முதலிய பழங்கள் வண்டியில் கொட்டுவதும், காப்பி, உப்புமா, மிட்டாய் முதலிய பலகாரங்கள் கொடுப்பதுமாகிய அமர்க்களங்கள் செய்த வண்ணமாகவே இருந்தார்கள். ஒவ்வொரு ஸ்டே­னிலும் ரயில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நின்று நேரம் கழித்தே புறப்பட்டுக் கொண்டிருந்தது.

பிறகு 25.12.29 ஆம் தேதி காலை 7 மணிக்கு மெயில் வண்டி சிங்கப்பூர் டேங்க் ரோடு ஸ்டே­னை அடைந்ததும் பிளாட்பாரத்திலும் ஸ்டே­னுக்கு வெளியிலுமாக சுமார் பதினாயிரம் ஜனங்களுக்கு மேலாகவே ஐரோப்பியர், ஜப்பானியர், சீனர், மலாய்க்காரர்கள் முதலியவர்களும், பஞ்சாப்காரர்கள், மகமதியர்கள், தமிழர்கள் ஆகிய மக்களும் பாண்டு வாத்தியங்களுடன் நின்று கொண்டு கைத் தட்டியும், ‘ஜே’ சப்தமிட்டும்  பெருத்த ஆரவாராஞ் செய்தார்கள். 

வண்டி நின்றதும் சுமார் அரைமணி நேரம் வரை 200, 300 மாலைகள் வரை பிளாட்பாரத்திலேயே பெரியார், நாகம்மாள், இராமநாதன் ஆகியவர்களுக்கு ஒவ்வொருவராகப் போட்டுப் போட்டு அறிமுகம் செய்யப்பட்டார்கள். 

இரயில் மேடையிலும் வெளியிலும் ‘ஈ.வி.ஆர் வரவேற்பு’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சடித்த அட்டைகள் எங்கு பார்த்தாலும் ஒட்டப்பட்டும் தோரணங்களாகக் கட்டப்பட்டும் இருந்ததுடன் ஸ்டே­னுக்கு வெளியிலும் சுமார் 200 மோட்டார்கள் வரை இவ்வட்டைகள் கட்டப்பட்டு வரிசை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

வள்ளல் உ. இராமசாமி நாடார் அவர்கள் பெரியாரை வரவேற்பதற்கென்றே புதிதாக வாங்கிய ஒரு பெரிய மோட்டார் கார் வண்டியில் பெரியார், நாகம்மையார், எஸ்.இராமநாதன் ஆகியவர்களும் மற்றுமுள்ளவர்கள் வேறு வண்டிகளிலும் ஏறி நூற்றிருபது வண்டிகள் வரை வரிசையாகச் செல்லவும் திரு.இராமசாமியார் வண்டிக்கு முன்னால் அலங்கரித்த மோட்டார் டிரக்கு வண்டியில் நாற்காலிகள் போட்டு பாண்டு வாத்தியக்காரர்களும், மற்றொன்றில் மேள வாத்தியக்காரர்களும் இடையில் சாரணத் தொண்டர்கள் இருமருங்கிலும் செல்ல, சுமார் ஏழரை மணிக்குத் தொடங்கி இராமசாமி நாடார் அவர்களின் பங்களாவுக்குச் சென்றார்கள்.

இங்கு மலாயாவில் திராவிட இயக்கத்தை வளர்த்த சில முன்னோடிகளையும் நினைவுகூர்தல் வேண்டும்.

மலாயா பெரியார் அ.சி. சுப்பையா.

மீனாட்சி பாய்மரக் கப்பலில் தமிழகத்திலிருந்து அ.சி.சுப்பய்யா அவர்களின் பெற்றோர்கள் மலாயா வந்தார்கள். அவர்களுக்கு 1881 ஆம் ஆண்டு  பிறந்தார் அ.சி.சுப்பய்யா.

விவேகானந்தர் சங்கம், ஆதிதிராவிடர் சங்கம், அகமுடையார் சங்கம் என்று பல சங்கங்களை சிங்கப்பூரிலே தோற்றுவித்து பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர் அ.சி.சுப்பய்யா. 1929 இல் முதல் முறையாக பெரியார் அவர்கள் மலாயா வந்த போது பினாங்கு துறைமுகத்தில் கப்பலிருந்து பெரியாரை வரவேற்று அழைத்து வந்தவர் அ.சி.சுப்பய்யா.  

1930 ஆம் ஆண்டில் பெரியார் மலாயா வந்து சென்று மூன்று மாதங்களுக்குள்ளாகவே தமிழர் சீர்திருத்தச் சங்கம் அமைத்த முன்னோடிகளில் அ.சி.சுப்பய்யா அவர்கள் முதன்மையானவர்.

காந்தரசம் என்னும் சித்தமருத்துவ பார்மசியை ஏற்படுத்தி  மலாயா நாடு முழுவதும் புகழ் பெற்றவர். 1933 ஆம் ஆண்டு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் நடத்தி வந்த முன்னேற்றம் இதழில் தொடர் கட்டுரைகள் எழுதினார். பின்னர் இது தமிழ் வரி வடிவ ஆராய்ச்சி என்னும் பெயரில், தந்தை பெரியார் அவர்களின் முன்னுரையோடு வெளிவந்தது.

1948 ஆம் ஆண்டு மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் வகையில் சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் என்ற நூலை எழுதினார். 

மலாயாத் தமிழர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தை நன்கொடை யாக வழங்கியவர் வள்ளல் உ.இராமசாமி நாடார்.   தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முதல் தலைவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘சமாதான நீதிபதி’ என்று சிறப்பிக்கப்பட்டவர். சப்பானியர் நடத்திய படையயடுப்பின் போது ஆங்கில அரசுக்கு நிதி உதவிகளை வாரி வழங்கியவர். அந்த கட்டிடம் ஜப்பானியர் யுத்தக் காலத்தில் பழுதுபட்டுக் கிடந்தது. அக் கட்டிடத்தத்தை பழுது பார்ப்பதற்கான முழு செலவையும் ஏற்று 19 ஆயிரம் வெள்ளிவரை  செலவு செய்தவர் அ.சி.சுப்பய்யா அவர்கள்.

தமிழகத்தில் அ.சி.சுப்பய்யா அவர்கள் பிறந்த திருமக்கோட்டைக்குச் சென்றேன். மன்னார்குடிக்கு அருகே உள்ள ஊர் அது. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அய்யா செயராமன் அவர்களைச் சந்தித்தேன். அவர் அ.சி.சுப்பய்யா அவர்களின் அண்ணன் மகன். அவருக்கு அகவை 85. அ.சி.சுப்பய்யா அவர்களின் பெயரனும், சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் செயலாளர் அய்யா சு.தெ. மூர்த்தி அவர்களின் மைத்துனருமான அய்யா அருணாசலம் அவர்களையும் சந்தித்தேன். அவருக்கு அகவை 77.

அ.சி.சுப்பய்யா அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை தனது கைப்பட எழுதி அச்சகத்துக்கும் அனுப்பியிருந்தார். அதற்குள் அவர் இறந்து விட்டதால் அந்நூல் இதுவரை வெளிவரவில்லை. அந்த நூல் வந்திருந்தால் அது மிகச்சிறந்த வரலாற்று நூலாக இருந்திருக்கும். அந்நூல் வெளிவராதது மலாயா தமிழர்களுக்கு ஒரு மிகப் பெரிய இழப்பாகும்.

‘முன்னேற்றம்’, ‘இந்தியன் டெய்லி மெயில்’, ‘தமிழ்முரசு’ போன்ற ஏடுகளை மலாயா நாட்டில் நடத்திய தோடு மட்டுமல்லாமல், பெரியாரின் ‘குடிஅரசு’ இதழை இந்நாட்டில் பரப்பியதில் முதன்மையானவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி.  இம்மூன்று தலைவர்களும் ஒன்றிணைந்து மலாயா நாட்டின் தமிழர்களின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்திய சங்கமே ‘தமிழர் சீர்திருத்தச் சங்கம்’.

பிரிக்ஃபீல்ட்ஸ் ரோடு எண்.5 இல் இருந்த ‘மஹான் ரெஸ் டாரண்ட்’ என்னும் சாப்பாட்டுக் கடையில் ( ‘குடி அரசு’ 20.11.1927)  உணவருந்துவோரே இலைகளைக் கொண்டுபோய் தொட்டியில் போட வேண்டும் என்று சாதி அடிப்படையில் கட்டாயப்படுத்தப்பட்டதால் பலர் இதை வெறுத்து வெகுண் டெழுந்தனர். எனவே இதன் விளைவாக ‘இந்தியர் ‡ இலங்கையர் ஓட்டல்’ என்ற ஒரு புதிய உணவு விடுதி அதே அம்பாங் தெருவில் தொடங்கப்பெற்றது. 

1930 ‡31 ஆம் ஆண்டுகளில் மலாயாத் தமிழர்கள் திருவாளர்கள் மா.செ.பரிமணம், கூ.மா.சி. மாரிமுத்து, சி.வீ.குப்புசாமி, க.இராசகோபால், தா.சு.குருசாமி ஆகியோரின் முயற்சியில் செந்தூல் பகுதியில் உள்ள ‘மூங்கில் குத்து கம்பம்’ என்ற பகுதியில்  ‘குடிஅரசு வாசகசாலை’ அமைக்கப்பட்டது. 

அந்த பகுதி தற்போது ‘பம்பூ கார்டன்’ என்ற பெயரில் இருக்கிறது. அந்த பகுதியைத் தேடி நானும் அய்யா பரமசிவம் அவர்களும் அலைந்தோம். அது குறித்த இன்னும் சில குறிப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த வாசகசாலையின் பெயர் ‘செலாங்கூர் இந்திய சுயமரியாதை சங்கம், செந்தூல்’ என்றும் அதன் பிறகு‘சுயமரியாதைச் சங்கம், கோலாலம்பூர்’ என்றும்  மாற்றப்பட்டு 1931 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பெற்றது.

இச் சங்கத்தில் ஆங்கில, தமிழ் மாலை வகுப்புகளும், சொற்பொழிவுப் பயிற்சியும், வாராந்திர சொற்பொழிவுகளும், அ.இரத்தின சபாபதி எழுதிய ‘பாரதி அல்லது பால்ய விதவையின் பரிதாப நிலை’, சி.வீ. குப்புசாமி எழுதிய ‘காந்தா மணி அல்லது கலப்பு மணம்’ ஆகிய நாடகங்களும் நடத்தப்பட்டன.

முதன் முதலாக தமிழர் சீர்திருத்த மாநாடும், தமிழர் சீர்திருத்த இளைஞர் மாநாடும் 1931 ஆம் ஆண்டு பினாங்கில் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் திரு.அ.சி.சுப்பையா அவர்கள் தலைமையில் திரு.கோ.சாரங்கபாணி அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தும், சுவாமி அற்புதானந்தா அவர்கள் பொதுச்செயலாளராக இருந்தும் அரிய பணிகள் ஆற்றினர்.  

செலாங்கூரில் 1936 ஆம் ஆண்டில் திரு.எஸ்.எம்.சுப்பையா அவர்கள் தலைமையின் கீழ் ‘பகுத்தறிவுச் சங்கம் (கோலாலம்பூர்)’ அமைக்கப்பட்டது. 

1938 ஆம் ஆண்டுவாக்கில் ‘தமிழர் சீர்திருத்தச் சங்கம்’ கோலாலம்பூர் செராஸ் ரோட்டில் அமைக்கப்பட்டு அதற்கென ஒரு கட்டடமும் நிறுவப்பெற்றது. அதுதான் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு (1946 இல்) திராவிடர் கழகம் ஆகியது. 

இரண்டாவது உலகப் போருக்கு முன்னரே கோலாலம்பூர் சுயமரியாதைச் சங்கம் பல துண்டு வெளியீடுகளையும் ‘வருங்கால நவயுகம்’, ‘பெரியார் ஈ.வெ.ரா.’ போன்ற நூல்களையும் வெளியிட்டது. 

இரண்டாம் உலகப்போருக்குப் பின் தமிழர் சீர்திருத்தச் சங்கம் தன் பணியைத் தொடங்கியது. தமிழன் தமிழில் ‘வணக்கம்’ என்று கூறுவது இழுக்கென கருதப்பட்டது. அப்படிப்பட்ட சூழலில் தமிழர் சமுதாயம் இருந்தது.  அப்போது தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் போருக்குப்பின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ‘வணக்கம்’ என்று கூற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இரண்டாம் முறையாக வருகை தந்த பெரியார் அவர்கள் 1954 இல் பினாங்கில் கம்போங் ஜாவாரு பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.

2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வள்ளுவப் பெருமகனார் எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருளில் மெய்ப்பொருளைச் சிந்தித்து அறிவதுதான் அறிவு என்றார். அதைப்போலவே புத்தர்பிரான் அறிவுக்கு எட்டியதைப் பின்பற்றுங்கள் என்றார். பெரியார்கள் சொன்னது என்பதற்காக நம்பாதீர்கள். சிந்தித்து முடிவுக்கு வாருங்கள்.

மலாயா வாழ் இந்தியர்களிடையே ஒற்றுமை அவசியம். எவ்விதப் பிளவு மனப்பான்மையும் இங்குள்ள இந்தியர்களிடையே தலைகாட்டல் ஆகாது. தமிழர்களாயினும் சரி, இதர எந்தப் பிரிவினர்களாயினும் சரி ‡ அனைவரும் இந்நாட்டில் ஒன்றுபட்டு வாழ வேண்டும். இந்த நாட்டின் நலன்களுக்கு ‡ அபிவிருத்திக்கு உழைப்பதில், பாடுபடுவதில், நாம் இதர எந்த சமூகத்தினருக்கும் பிற்பட்டு நிற்கக் கூடாது.

கோலப்பிறை செயின்ட் மார்க் ஸ்கூல் திடலில் மேத்யூ ஜே.பி. அவர்கள் தலைமையில் பெரியார் பேசுகிறார். அப்போது,

நான் ஈரோடு சேர்மனாக இருந்தபொழுது குழாய்த் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால் என் தாயார் மட்டி லும் குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் பிடித்து விடுகிறார்களோ, அதில் தீட்டு ஒட்டியிருக்குமே என்பதற்காக! பிறகு திருந்தினார்கள்.

மாறுதல் வேண்டும் போது பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். அக்கம் பக்கத்தைப் பார்த்து மாறுதல் ஏற்பட்டு விடும். உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மனித சமூதாய வளர்ச்சி எந்த அளவில் கொண்டுபோய் விடுமோ என்ன ஆகுமோ யார் கண்டது?

எனவே மாறுதலுக்கு எதிர்ப்பு இருந்துதான் தீரும். அதைப் பற்றிக் கவலை இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ள, பாடுபடுங்கள், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள். இந் நாட்டில் தமிழர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். அதற்காகப் பாடுபடுபவர் களுக்கு உதவியாக இருங்கள். என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் ஜாதி ஒழிப்பே!

டிசம்பர் 18-ந்தேதி சனிக்கிழமை தைப்பிங் குந்தோங் அசோசியே­ன் மண்டபத்தில் பெரியார் பேசுகிறார்.

நான் இந்த நாட்டிற்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். முன்பு அதாவது 1929 இல் இந்த நாட்டு பெருமக்கள் என்னை வரும்படி அழைத்தார்கள். அப்போது புறப்படுவதற்கு நாலு நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு தந்தி வந்தது. அதில் இங்கு கலவரம் ஏற்படும் போல் இருப்பதாகவும் தக்க பாதுகாப்பு செய்ய வசதி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். 

இதெல்லாம் கண்டு எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. என்னடா, நாம் தமிழர்களுக்கு இவ்வளவு உழைக்கின்றோம், பாடுபடுகின்றோம். எவ்வளவோ சொந்த சுகத்தையயல்லாம் புறக்கணிக்கிறோம். ஆனாலும் ஒரு தமிழனையே இன்னொரு தமிழன்தானே எதிர்க்கின்றான் என்பதை எண்ணும்போது வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை. பிறகு எனது பயணம் எந்த விதமான தடையுமின்றி நடைபெற்றது.

கோலக்கங்சார் இந்திய சங்கத்தில் பெரியார்  காலை 10 மணி அளவில் பேசுகிறார்

1920 ஆம் ஆண்டுக்கு 1950 ஆம் ஆண்டு எவ்வளவோ முன்னேறி யிருக்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் மிக மெதுவாக நடைபெற்றுக் கொண்டு வந்தது. தமிழ் நாட்டிற்கு ஆங்கிலேயரின் சம்பந்தம் ஏற்பட்ட பிறகு சற்று வேகமாக முன்னேறியுள்ளது. இனி எதிர்காலத்தில் ஆகாயக் கப்பல் வேகத்தில் முன்னேறுவீர்கள் என்று கருதுகிறேன். 

100 வருடத்திற்கு முன்பு நாம் மந்த நிலையில் இருந்தோம். இப்பொழுது தான் முன்னேற்றம்  என்கிற வண்டி மிகவும் வேகமாக முன்னாலே போகின்றது. இது இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். பெரும் வெள்ளம் வருகின்றபோது ஒரு பாட்டி முறத்தையும் துடப்பத்தையும் எடுத்துக்கொண்டு நான் இந்த வெள்ளத்தை தடுக்கிறேன் என்றால் அது அந்த அம்மாளையும் சேர்த்து அடித்துக் கொண்டு போகுமே தவிர நிற்காது.

முன்பு  இந்த மலாயாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் பாய்மரக் கப்பலில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பயணம் மூன்று மாதத்திற்கு நீடிக்கும். இப்பொழுது புகைக் கப்பல் வந்துவிட்டது. ஆனால் ஒருவன் இப்பொழுதும் பாய்மரத்தில்தான் போவேன் என்றால் என்ன அர்த்தம்?

முன்பெல்லாம் கப்பல் ஏறினால் அவனை சண்டாளன் என்றார்கள். பார்ப்பான் கப்பலில் ஏறினால் அவனை ஜாதிப்பிரஷ்டம் செய்து விடுவார்கள். இப்பொழுதோ பார்ப்பனத் தலைவர்கள் எல்லாம் சர்வசாதாரணமாக கப்பலில் ஏறிச் செல்லுகிறார்கள்.

ஏனப்பா இப்படி கப்பல் ஏறுகிறாய் என்றால் வெளிநாட்டில் வேலை பார்க்க என்கிறார்கள். உன்னை ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுவார்களே என்றால் அதிலேயே பிராயச்சித்தத்திற்கும் வழி இருக்கிறது என்கிறார்கள்.

நாம் பல அதிசயங்களை எதிர் நோக்க வேண்டும். மாறுதல் பெண்களிடமும், இளைஞர்கள் உலகிலும் சர்வ சாதாரணமாகக் காணலாம். இது இயற்கை. 

முன்பெல்லாம் பெண்கள் கையில் கறுப்பு வளையல் இல்லாவிட்டால் அந்தப் பெண்ணை, உங்கள் கணவருக்கு என்ன ஆயிற்று என்பார்கள். இப்போது அது போய்விட்டது. இது மாறுதலுக்காக ஏற்பட்ட மாறுதல். இது சாதாரணமாக ஏற்படும் மாறுதலாகும்.ஆனால் வளர்ச்சிக்காக ஏற்படும் மாறுதலை யாரும் புறக்கணிக்க முடியாது. 

இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரயாணம் செய்வது எவ்வளவு கடினமாக இருந்தது. இப்போது மாறுதல் படிப்படியாக வந்து மணிக்கு 700 மைல் பறக்கிற அளவுக்கு மாறிவிட்டது. 

கம்பார் சொங் வா சீன பாட சாலையில் பெரியார் பேசுகிறார். அவர் தனது உரையில், 

தமிழனிடம் மட்டும் மாறுதலில்லை. மற்றவர்களெல்லாம் பெருத்த மாறுதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட நல்ல வாய்ப்பு நமக்கெல்லாம் ஏற்படாததே காரணமாகும்.  உலகமெல்லாம் விழித்திருந்தும் தமிழன் மட்டும் மாறவில்லை என்றால் என்ன அர்த்தம். 

மேல் நாட்டில் இருந்தவர்கள் எல்லாம் நம்மை போன்று இருந்தவர்கள். அங்கே ஒரு மகான் ஏசு என்று தோன்றினார். பல மாறுதல்கள் ஏற்பட்டு அவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள். அவர் எல்லா வற்றிலும் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்தினார். நம்மைப்போல் அவர்களிடையே ஜாதி பேதம் இல்லை என்கிற மாதிரி ஆயிற்று. 

அதேபோல் அரேபியா நாட்டில் நபி தோன்றி அநேக மூட நம்பிக்கைகளை மாற்றினார். அவர் செய்த நல்ல பெரிய காரியம் ஆயிரக்கணக்கான, பதினாயிரக்கணக்கான கடவுள்களை ஒன்றாக்கினார். அந்த நாட்டு மக்களுக்கும் அது பிடித்தது. பிறகு அந்த ஒரே கடவுளுக்கும் உருவம் இல்லை என்றார். அதற்கு மேல் அவர் அருமையாக எடுத்துச் சொன்னார். மக்களெல்லாம் சமம். மனிதனில் உயர்வு தாழ்வு இல்லை என்றார். அந்த நாடும் திருந்திவிட்டது. நம்முடைய சமுதாயம் அதற்கு பல காலம் முற்பட்டதாக இருந்தும் எந்தவிதமான மாறுதலும் இல்லை.  இப்படி மாறுதல் இல்லாமல் பகுத்தறிவு அற்ற தன்மையோடு இருந்தோமானால் நம்முடைய சமுதாயம் மிக்க பிற்போக்கடைந்துவிடுவதோடு, உலகத்தில் உண்டாகின்ற புதிய மாறுதல்களில் கடைசிப் படியில் நிற்க வேண்டியவர்களாவோம்

பத்துகாஜாவில் பெரியார் அவர்கள் பேசுகையில், நான் சமீபத்தில் பர்மாவைக் கண்டு விட்டுதான் இங்கே வந்திருக்கிறேன். இரண்டு நாடுகளும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவை.  பர்மாவை விட அதிக கஷ்டத்திற்கு இந்த நாடு உள்ளாகியும் என் கண்ணுக்கு இது அழகாகவே, முன்னை விட முன்னேற்றமடைந்துள்ளதாகவே காணப்படுகிறது. இது இப்படி இருப்பதற்குக் காரணம் இங்குள்ள மக்களின் உணர்ச்சியும் அவர்களின் உணர்ச்சியுமேதான்.

நீங்களெல்லாம் இங்கே ஜாதி பேதமற்று இருக்கின்றீர்கள். ஆனால் தமிழ் நாட்டிலோ மனிதனைத் தொடுகின்ற வரையில் ஜாதி பேதம் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் எந்த நல்ல கட்டிடத்தைப் பார்த்தாலும் அது பள்ளிக்கூடம் என்கிறார்கள்.

எங்கள் நாட்டில் பள்ளிக்கூடம் வெகு குறைவு. 100 க்கு 12 பேர்தான் படித்திருக்கிறார்கள்.

கோலக்கிள்ளானில் பெரியார் பேசும் போது, நானென்ன இனிமேல் படுக்கவா போகிறேன்? இருக்கிறவரை அல்லது காந்தியைப் போல என்னை யாரும் கொல்கிறவரை சமூகத்தில் கீழாக நசுக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிடுக்கப்பாடுபட்டபடிதான் கண்ணை மூடுவேன்! என்றார்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த திரு. சோங் ஜின் ஹோ பெரியாரைப் போன்ற மாபெருந் தலைவரை வரவேற்கும் வாய்ப்பு கோலக்கிள்ளான் மக்களுக்கு கிடைத்தது பெரும்பேறு என்று சொன்னார். சுதந்திரப் பாதை நோக்கி நடைபோடும் மலாயாவுக்கு, தங்கள் நாட்டில் பல வெற்றிகளைக் கண்ட தலைவர்கள் வந்து அறிவுரை கூறுவது அதிக நன்மை பயக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கிள்ளானுக்கு அருகிலுள்ள புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத்திற்குச் சென்று தொழிலாளர்களைக் கண்டபொழுது, மலாயாவில் கால் வைத்த பிறகு எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்தேன், செல்வர்களைப் பார்த்தேன், நகரவாசிகளைப் பார்த்தேன். ஆனால் உங்களைக் காண்பதில் இப்பொழுது எனக்கு ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. இப்பேர்பட்டவர்களைக் காணாமல் மலாயாவில் சுற்றுப்பிரயாணம் செய்து என்ன பயன் என்றுகூட நான் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று பெரியார் அங்கு பேசுகையில் குறிப்பிட்டார்.

தோட்டத் திடலின் நடுவில் உயர்த்தி அமைக்கப்பட்டிருந்தது மேடை. 

1947 இல் பெரியாரை அழைப்பதற்காக காப்பார் தமிழ் மக்கள் வசூலித்த 214 வெள்ளி 15 காசையும் திரு. முனியாண்டி, பெரியாரிடம் ஒப்படைத்தார். புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத் தொழிலாளர்கள் 60 வெள்ளி பண முடிப்பு கொடுத்தனர். 6 வயது சிறுவன் ஒருவனும் 3 வயது சிறுமி ஒருத்தியும் தாங்கள் சேர்த்து வைத்த காசை பண முடிச்சாக்கி பெரியார் தாத்தாவிடம் கொண்டுவந்து கொடுத்தனர். சிறுவர்கள் இருவரிடமும் கொஞ்சிப் பேசி தம் அன்பைத் தெரிவித்தார் பெரியார்.

நான் மலாயாவில் இதுவரை சுற்றியதில் அதிகாரிகளையும், மந்திரிகளையும் செல்வர்களையும் பார்த்தேன்! அவர்களிடையே பேசினேன். ஆனால் என் சொல்லினால் ஏதாவது பயன் ஏற்படுமானால் அது உங்களிடம்தான் ஏற்படும். உங்களிடம் தான் ஏற்பட வேண்டும். ஏனெனில் சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ளவர்கள் உயர வேண்டும். படியாதவர்களாக, பாமரர்களாக இருக்கிறவர்கள் நிலை திருந்த வேண்டும் என்பதுதானே என்னுடைய லட்சியம்.

8 மணி நேரமும் 10 மணி நேரமும் பாடுபட்டு வயிற்றுச் சோற்றுக்கே இழுபறியாக இருக்கும் உங்கள் நிலையில்தான் பெருத்த மாறுதல் ஏற்பட வேண்டும். நாளெல்லாம் பாடுபட்டு கிடைக்கிற வரும்படி சோற்றுக்குத்தான் ஆகும். மீதியிருந்தால் கள்ளுகடை, மிச்சமிருந்தால் நாசமாய்ப் போன சாமிகளுக்கு அழுவது என்ற போக்கில் மாறுதல் காண வேண்டும். நான் சாமி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கற்பனைக் கடவுள்கள் நம்மைப் பாப்பராக்கிவிடுகின்றனவே என்றுதான் நொந்து கொள்கிறேன்.

கடவுளிடம் பக்தி செலுத்துங்கள், அன்பு செலுத்துங்கள், கடவுளுக்குப் பயப் படுங்கள். வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. கடவுள் மனிதர்களாக இருக்கிறார்; நடமாடும் ஜீவன்களாக இருக்கிறார்; நீங்கள் மனிதர்களிடம், உங்களிடம் காட்டுகின்ற அன்பை கடவுள் இருந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்வார். 

தொழிலாளி மகன் தொழிலாளியாக, தொழிலாளி பேரன் தொழிலாளியாக இருக்க லாகாது, இருக்கக்கூடாது என்று இடித்துரைத்தார். பண்டிகைகள் என்று நீங்கள் பாழாக்குகிற பணத்தை மகனின் படிப்புக்குச் செலவிடுங்கள், உருப்படலாம் என்றார்.

ஒவ்வொரு மனிதனும் தன் பங்குக்குக் கொஞ்சம்  பாடுபடத்தானே வேண்டும் என்ற நிலை நம் சமுதாயத்தில் இருக்குமானால் பேச்சில்லை. பரம்பரை பரம்பரையாக ஒரு பிரிவினர் உழைப்பது, மற்றவன் கொழிப்பது என்ற நிலை ஏன் இருக்க வேண்டுமென்று கேட்டார் பெரியார். என் தலைமுறையோடு இந்தப் பிழைப்பு ஒழியட்டும். என் பிள்ளை என்னைப் போல்  இந்த வேலை செய்ய வேண்டாம் என்று நீங்கள் கங்கணம் கட்ட வேண்டும். உங்கள் பிள்ளைகளையயல்லாம் தவறாமல் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி படிக்க வைப்பதுதான் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும் ஒரே வழி என்றார் ஈ.வெ.ரா.

கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறியும் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் உங்களை உயர்த்துமென்பதை மறந்து விடாதீர்கள்.

நன்றி

வணக்கம்.

மலேசியத் திராவிடர் கழக வரலாறு

 மலேசியத் திராவிடர் கழக வரலாறு

- கவி, ஆசிரியர், பெரியார் பார்வை

மலேசியத் திராவிடர் கழக வெள்ளி விழா மலரில் (1971) ‘துணைவன்என்ற புனைப்பெயரில் செந்தமிழ்ச் செல்வர் சி.வீ.குப்பு சாமி அவர்கள் எழுதியமலேசியத் திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்என்ற கட்டுரையில் திராவிடர் கழகம் தோன்றுவதற்கு 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 நாள் மலாயா நாட்டிற்கு வந்த பெரியாரின் வருகை ஒரு தாக்கமாக இருந்தது என்று எழுதுகிறார். சி.வீ. குப்புசாமி அவர்கள் 1939 இல்பெரியார் .வெ.ரா.’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈப்போ ரெ.ரா. அய்யாறு தலைமையில் சீர்திருத்த திருமணம் செய்துகொண்டவர்.

மலேசியத் திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்என்ற அக்கட்டுரையில், சி.வீ.குப்புசாமி அவர்கள்,

 பெரியார் .வெ.ரா. அவர்கள் இந் நாட்டுக்கு முதன் முதலில் வருகை தந்த 1929 ம் ஆண்டுக்கு பிறகுதான் அது மேற்க மலேசியாவின் பல பகுதிகளிலும் சிங்கப்பூரிலும் நிறுவன முறையில் அமைந்தது. அதற்கு முன் ஒரு சிலரே குடிஅரசு ஏட்டின் படிஞர்களாக இருந்து சீர்திருத்த சுய மரியாதைக் கொள்கைகளைப் பின்பற்றியும் பரப்பியும் வந்தனர்என்ற எழுதுகிறார்.

1929 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் ஈப்போவில் கானல்லி  சாலையில் சிலோன் அசோசியேசன் மண்டபத்தில் அகில மலாயா தமிழர் மாநாட்டில் சிறப்புரை ஆற்ற பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். அம் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவில் காந்தரசம் .சி.சுப்பையா, ஈப்போ அய்யாரு, முன்னேற்றம் ஆசிரியர் கோ.சாரங்கபாணி, ..பு. ஹமீது, சுவாமி அற்புதானந்தா, திரு. கா. தாமோதரனார் மற்றும் மலாக்கா .சு.மு.பெருமாள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஈப்போ மாநாட்டிலும் அதற்கு பின் பினாங்கு, ஈப்போ, கோலா லம்பூர், செரம்பான், மலாக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய  நகரங்களில் பல்வேறு இடங்களில் பெரியார் ஆற்றிய உரைகள் மலாயா நாட்டு மக்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரியாரின் வருகைக்கு முன்பு பெரியாரின் அண்ணன் .வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மலாயா நாட்டில் ஒரு மாதம் தங்கியிருந்து குடிஅரசு இதழுக்கு ஆதரவு திரட்டியுள்ளார். அதனால் குடிஅரசு இதழ் படிக்கும் வாசகர்களின் எண்ணக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக செந்தூல் மூங்கில் குத்து கம்பம் பகுதியில்  குடி அரசு வாசக சாலை 1930 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது. இது குறித்து சி.வீ. குப்புசாமி அவர்கள், தனது கட்டுரையில்,

1931 ஆம் ஆண்டு வாக்கில் செந்தூல் மூங்கில் குத்துக் கம்பத்தில் குடிஅரசு வாசக சாலை அமைக்கப்பட்டது. அதற்கு ஆணிவேராக இருந்தவர்களில் திருவாளர்களாகிய மா.செ.பரிமணம், கூ.மா.சி. மாரிமுத்து, சி.வீ.குபபுசாமி, .இராசகோபால், தா.சு. குருசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்த வாசக சாலையின் பெயர் பிறகு செலாங்கூர் இந்திய சுயமரியாதை சங்கம், செந்தூல் (பிறகு இது சுயமரியாதைச் சங்கம், கோலாலம்பூர் என்ற பெயரில் வழங்கியது) என்று மாற்றப்பட்டு 1931  ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பெற்றது.

செலாங்கூரில் 1936 ஆம் ஆண்டில் திரு.எஸ்.எம்.சுப்பையா அவர்கள் தலைமையின் கீழ்பகுத்தறிவுச் சங்கம் (கோலாலம்பூர்)’ அமைக்கப்பட்டது. அதே போல் காப்பாரில் திரு.சு.முனுசாமி அவர்களின் தலைமையின் கீழும் காலஞ்சென்ற திரு. பி..முனியாண்டி (இவர் 1947 ஆம் பெரியாரின் வருகைக்காக காப்பார் தமிழ் மக்களால்  வசூலிக்கப்பட்ட தொகை 214 வெள்ளி 15 காசை பெரியார்அவர்களிடம் 1954 இல் பெரியாரிடம் வழங்கினார்கவி) அவர்களது பேராதரவின் கீழும் பகுத்தறிவுச் சங்கம் அமைக்கப்பட்டது. இவர்களுக்குத் துணையாக திரு. இரா.சங்கப் பிள்ளை, திரு.இரா.மணிமுத்து ஆகியோர் இருந்தனர்.

செலாங்கூரில் சீர்திருத்தக் கொள்கைகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று உணரப்பட்டதால் 1938 ஆம் ஆண்டுவாக்கில்தமிழர் சீர்திருத்தச் சங்கம்கோலாலம்பூர் செராஸ் ரோட்டில் அமைக்கப்பட்டு அதற்கென ஒரு கட்டடமும் நிறுவப் பெற்றது. அதுதான் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு (1946 இல்) திராவிடர் கழகம் ஆகியதுஎன்று எழுதுகிறார்.

1930 இல் சிங்கப்பூரிலும் தமிழர் சீர்திருத்தச் சங்கம் தொடங்கப்பட்டது. வள்ளல் .இராமசாமி நாடார், காந்தரசம் .சி.சுப்பையா, தமிழவேள் கோ.சாரங்கபாணி, கா.தாமோதரனார் ஆகியோர் இச்சங்கம் அமைக்கப்பாடுபட்டனர்.

பினாங்கில் ஐக்கிய இந்தியர் சங்கம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அது மேட்டுக்குடி மக்களுக்கான சங்கமாக இருந்தது. சீர்திருத்தக்காரர்கள் சிலர் ஒன்று கூடி ஒரு பகுத்தறிவுச் சங்கம் அமைக்க முயன்றார்கள்.   ஆனால் அவர்கள் அனைவரும் ஏழைகளாக இருந்ததால் தனியாக அமைப்பு தொடங்க முடியாத  நிலையில் ஐக்கிய இந்தியர் சங்கத்தில் ஒரு துணைக் குழுவாக ஐக்கிய இந்தியர் சங்க பசனைக் குழு தொடங்கி சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி வந்தனர்.

இது குறித்து முன்னாள் பினாங்கு இந்து வாலிபர் சங்கம் மற்றும் தமிழர் சீர்திருத்தச் சங்க செயலாளர் வி.ஜி.சுவாமி அவர்கள் தனது கட்டுரையில்,

மலாயா திராவிடர் சமுதாயத்தில் பகுத்தறிவென்ற ஞானசூரியன் உதயமாக வேணுமென்று விரும்பிய அன்பர்களுக்கு, 1929 ஆம் ஆண்டு பெரும் மகிழ்ச்சிக்குரிய ஆண்டாகும். அந்நாளில், தமிழ்நாட்டில் உதயமாகிக் கொண்டிருந்த பகுத்தறிவு பகலன் தந்தை பெரியார் அவர்கள், அவ்வாண்டுதான் தனது அன்பு துணைவியார் நாகம்மையாருடனும், குழுவினருடனும் மலாயாவுக்கு வருகை தந்தார்கள். ‘பெரியார் வருகிறார். அவர் பெரிய நாத்திகர், மலாயா நாட் டுத் தமிழர்களிடையே கலவரங்கள் விளையக்கூடும். அவரை வரவொட்டா மல் மலாயா அரசு தடை செய்ய வேண்டும்என்றெல்லாம் ஆங்காங் குள்ள வைதீக இந்துப் பிரமுகர்களும், சாதி பித்துப்பிடித்த பழமை விரும்பிகளும் பற்பல முயற்சிகளைச் செய்தார்கள்என்று எழுதி யிருக்கிறார்.

மேலும் அவர் தனது கட்டுரையில்,

பினாங்கில் இந்துப் பிரமுகர்களாகிய ஜே.பி. நடேசப்பிள்ளை, ஜே.பி. ஏகாம்பரம் பிள்ளை, ஜே.பி.வீரப்பாப் பிள்ளை, சாதுக்கள் மடாலயம் சாமிப் பிள்ளை மற்றும் சிலர் இந்து சபாவில் கூட்டம் கூட்டி, பெரியாரை வரவொட்டாமல் செய்ய ஆலோசனை நடத்தினார்கள். அச்சமயம் பெரியார் வரத்தான் வேண்டுமென எங்கள் குழுவினர் சொல்லவும், உடனே ஒரு கலகம் மூண்டு, எங்களில் துணிந்து பேசக்கூடிய நண்பர் டி.வி.செல்லையா என்பவரை மண்டையில் தாக்கிக் குருதி கொட்டச் செய்தார்கள்என்று அன்றிருந்த கலவரச் சூழலை விளக்குகிறார்.

திரு.வி.ஜி. சுவாமி அவர்கள் அக்கட்டுரையில் பல செய்திகளைக் குறிப்பிடுகிறார்,

பின்னர், பெரியாரின் குழு புறப்பட்டு தைப்பிங், ஈப்போ, கோலா லம்பூர், ஜோகூர் முதலிய இடங்களுக்கும் சென்று தனது ஆணித்தர மான கருத்துக்களை பொதுக் கூட்டங்களில் விளக்கினார்கள். சில கூட்டங்களில் பெரியாரிடம் கேள்விக் கணைகளையும் தொடுத்தார்கள். அவைகளுக்கு எல்லாம் ஆதாரத் துடனும், சந்தேகம் தெளிவுறும் முறையிலும் பதிலளித்து, மெளடீகர்கள் மனமாற்றங் கொள்ளச் செய்தார்கள்.

 பெரியாரின் பதிலும் உண்மைக் கருத்துக்களும் மலாயா வாழ் தமிழ்க்குடி மக்களுக்கு இந்து சமுதா யத்தில் உள்ள ஊழல்களையும், ‘ஒரு குலத்துக்கொரு நீதி (மனோன்மணியம்) பேசும்மநு () நீதியின் விளக்கங்களையும், ‘சூத்திரர்கள்என்னும் பெயராலும் சாதியின் பெயராலும், தமிழர்களை இழித்தும் பிளவுபடுத்தப்பட்டும் இருப்பதை உணர்ந்து தெளிவும் பெற்றனர்.

இன்றைய மலாயா திராவிடர் கழகம் அமைவதற்கும் பொதுவாக அங்கு சீர்திருத்த இயக்கம் பரவுவதற்கும், முதன் முதலாக வித்தூன்றப் பட்டதே பினாங்கு மாநகரில்தான்.

அச்சமயம் (1929) பினாங்கில்ஐக்கிய இந்தியர் சங்கம் (யுனைடட் இந்தியன் அசோசியேசன்) என்றொரு நிறுவனம் பெரும்பாலும் ஆங்கிலம் படித்த உயர் பதவியாளர்கள் (கிராணிமார்கள்) அங்கத்தினர் களாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது. அதில் சாதாரணப் பதவியாளர்களோ, தொழிலாளர்களோ அங்கத்தினர்களாக முடியாது.

 எனினும் நல்ல மனம் படைத்த வழக்கறிஞர் திரு. குமாரசாமி, திரு. சேவியர் அருள், திரு.கே.பலராம் போன்ற சில பிரமுகர்கள் இருந்தார் கள். அவர்களின் துணைகொண்டு அவர்கள் எடுத்திருந்த கட்டடத்தின் பின்பகுதியில் ஒரு சிறு இடத்தை வாடகையில்லாமல், அந்த நிறுவனத் தின் கிளை போலவேஐக்கிய இந்தியர் சங்க பசனைக் குழுஎன்ற பெயரால், ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டோம். எங்கள் குழு ஏறக் குறைய 25 பேர்களைக் கொண்டது.

நண்பர் .என்.இராமசாமி, பொதுநலனுக்கு சலியாது உழைக்கும் உத்தமர். பினாங்கில் சுயமரியாதை இயக்கம் பரவுவதற்கு முதன் முதலில் முயற்சி எடுத்துக் கொண்டவர் அவரே. ஏழ்மை நிலையில் பல எதிர்ப்புக் கிடையில், பல இடங்களுக்கும் கால்நடையாகவே நடந்து, என் போன்ற பல நண்பர்களைத் திரட்டி, எங்களுடைய சந்தேகக் கேள்வி களுக்கெல்லாம் அன்பு முறையில் பதில் தந்து, எங்களை ஒரு அமைப்பு அடிப்படையில் உருவாக்கியதும் அவரே.

 பசனைக் குழு என்றால் அரிபசனை, கதாகாலட்சேபம் போன்று நடத்துவார்கள் என்று நினைத்திருந்த, இடமளித்த ஐக்கிய இந்தியர் சங்கத்தார்களுக்கு, நாங்கள் வாராவாரம் கூட்டங்கள் கூட்டி, சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதும், ‘இருளோட்டப்பா, .வெ.ராமா, கல்லுருவைத் தெய்வமென்று கடனாளி யாகினோம். பலவித புராண மோசம், பாரில் பார்க்கவே ஆபாசம்என்பன போன்ற சீர்திருத்தஉருவக் கடவுள் எதிர்ப்பும்,  புராண எதிர்ப்புப் பாடல்களைப் பாடுவதும், ஐக்கிய இந்தியர் சங்கத்தார்களுக்குப் பிள்ளையார் பிடிக்க குரங்காக அமைந்த கதை போலிருந்ததால், சில மாதங்களுக்கு மேல் நாங்கள் அங்கு இருக்க முடியாமல், எங்கள் ஏட்டைக் கிழித்து விரைவில் வேறு இடம் பார்த்துக் கொண்டு இடத்தைக் காலி பண்ணச் சொல்லி விட்டார்கள்.

புதியஅமைப்பை என்ன பெயரால் பதிவு செய்வது என்பது பற்றி எங்களுக் குள் வாதம் எழுந்த சமயம் வழக்கறிஞர் உயர்திரு. குமாரசாமி அவர்கள். ‘நீங்கள் இந்து சமயத்தைச் சீர்திருத்த முனைவதால், எந்தப் பெயரை வைத்துக் கொண்டாலும் அதில் இந்து என்ற ஒரு சொல்லும் சேர்ந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் மதத்தினைக் கண்டிக்கவோ, அதன் ஊழலை எடுத்துச் சொல்லவோ, உங்களுக்கு உரிமையுண்டுஎன ஆலோசனை கூறினார்கள். அதன்படியேஇந்து வாலிபர் சங்கம்என்ற பெயரால் எங்கள் குழுவைப் பதிவு செய்துகொண்டு அங்கத்தினர் களிடையேயும், பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி வந்தோம்என்று மலாயா வில் திராவிடர் இயக்கம் தோன்றிய வரலாற்றை எழுதுகிறார்.

.தி.. கோலாலம்பூர் கிளை

.தி.. கோலாலம்பூர் கிளை தோற்றம் பற்றி .மு.திருநாவுக்கரசு அவர்கள் தனது கட்டுரையில்,

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் பகுத்தறிவுக் கொள்கையில் பற்றுள்ளவர்கள், ஆங்காங்கு பல பட்டணங்களில் வெவ்வேறு பெயர் களில் சீர்திருத்தக் கொள்கையைப் பரப்பி வந்தார்கள். குறிப்பாக கோலாலம்பூரில் தமிழர் சீர்திருத்தச் சங்கம், சிலாங்கூர் சுயமரியாதைச் சங்கம், கோலாலம்பூர் பகுத்தறிவுச் சங்கம் என்ற பெயர்களில் சீர்திருத்த கொள்கையுள்ள அமைப்புகள் இயங்கி வந்தன. போருக்குப் பின்னர் மலாயா பகுத்தறிவுவாதிகளிடையே ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்பட்டு திராவிடர் இன அடிப்படையில் ஒரு அமைப்பு இருப்பது மேன்மை என்று கருதி, கோலாலம்பூரில் அப்பொழுது இயங்கி வந்த சிலாங்கூர் தமிழர் சீர்திருத்தச் சங்கம், கோலாலம்பூர் திராவிடர் கழகமாக 4.8.1946 ம் ஆண்டில் மாற்றப்பட்டது. தலைவராக திரு. . அங்கமுத்து அவர் களும், செயலாளராகத் திரு. .மருதமுத்து அவர்களும் பொருளா ளராக திரு. பெ. பெரியய்யா அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர்.

கோலாலம்பூரில் திராவிடர் கழகம் தோன்றியதைப் போன்று மலாயாவின் பல நகரங்களிலும் திராவிடர் கழகம் அமைப்பதற்கு முயற்சி செய்வதென்றும், அமையும் கழகங்கள் கட்டுப்பாட்டுடன் செய லாற்ற ஒரு தலைமைக் கழகத்தை யும் துவக்க வேண்டுமெனவும் முடிவெடுத்து மலாயாவின் பல நகரங்களிலுள்ளஇயக்கத்தில் ஆர்வமுள்ள தோழர்களிடம் தொடர்பு கொண்டு 1947 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் கோலாலம்பூரில் ஆலோசனை மாநாட்டைக் கூட்டி அகில மலாயா திராவிடர் மத்தியக் கழகம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

திராவிடர் கழகமும், மத்திய கழகமும் அமைக்க பெரு முயற்சி எடுத்துக் கொண்டவர்கள் திரு. . அங்கமுத்து, திரு. .மருதமுத்து, திரு. நா. பள்ளிக் கொண்டான் அவர்களும், அவர்களுக்கு உறுதுணை யாக இருந்து செயல்பட்டவர்கள் திரு.ரெ.ரா.அய்யாறு, திரு..வி. ஆண்டியப்பா, திரு.கூ.மா.சி.மாரி முத்து, திரு.பி. பிச்சைமுத்து, திரு. பெ. பெரியசாமி, திரு..மணியரசு, திரு..மு. திருநாவுக்கரசு, திரு.எஸ். அழகப்பா, திரு.மா.செ.பரிமணம், திரு...துரைசாமி, திரு. சு.சுதர்மன், திரு.கு.வீரப்பன், திரு.வெ.செல்லமுத்து, திரு..அழகேசு, திரு.சி.வீ.குப்பு சாமி ஆகியோராவார்கள்என்று வரலாற்றையும் அதற்குக் காரணமாக இருந்த முன்னோடிகளையும் நினைவுப்படுத்துகிறார்.

.தி.. கோலக்கிள்ளான் கிளை

.தி.. கோலக்கிள்ளான் கிளை அமைக்கப்பட்டது பற்றி திரு. பெ.நாரா ணன் அவர்கள் தனது கட்டுரையில்,

1946 ஆம் ஆண்டு! கோலக்கிள்ளானில் (35, கேம்ப் ரோடு) திரு. மணியம் அவர்கள் கடை மேல்மாடியில் தமிழர்களுக்கென ஓர் அமைப்பு வேண்டு மென்று பலர் கூடி ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட்டினார்கள். அக்கூட்டத்தில்இந்தியர் சங்கமா?’ அல்லதுதமிழர் சங்கமா?’ என்ற இரண்டு வகை கருத்துக் கள் எழுந்தன. இவ்விரு கருத்துக்களையும் ஒதுக்கி தென்னிந்திர்களை பிரதி நிதிக்கும் வகையில் திராவிடர் கழகம் என்றிருக்க வேண்டுமென திரு.பா. நாராய ணசாமி அவர்களின் பரிந்துரையின் பேரில் தன்மானக் கொள்கைப் பற்றுடை யவர்கள் பலர் உறுதியுடன் அக்கருத்தை ஏற்று கருத்துரைத்தார்கள். முடிவுபெரும்பான்மையான சீர்திருத்தக் கருத்துடையோருக்கே வெற்றியாக முடிந்தது. திராவிடர் கழகம் அமைக்கப்பட்டது.

கழகம் ஆரம்பத்தில் எண் 35, கேம்ப் ரோட்டில் சிறிது காலமும் அதன்பின் அதே சாலையில் திரு. கண்ணையா கடையில் சிறிது காலமும் இயங்கியது. இரண்டு இடங்களிலும் எதிர்ப்பு வலுத்தன் காரண மாக கழக இல்லம் அமைக்க பெரும் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக 1947 இல் எண்.87, கேம்ப் ரோட்டில் கழக இல்லம் அமைக்கப்பட்டு அதிலே நிலைத்தும் நிற்கின்றது. இந்த சமயத்தில்தான் பொறாமை கொண்ட சிலரின் தூண்டுதலின் பேரில் சமுதாயத் தொண்டர் இரா. தேவராசன், இராமச்சந்திரன், இராசரத்தினம் ஆகியோர் 18 நாட்கள் சிறை யிலிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுஎன்று விவரிக்கிறார்.

ஈப்போ கிளை

மலேசிய திராவிடர் கழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருப்பது ஈப்போ மாநகரமாகும். இக் கிளையின் உருவாக்கம் பற்றி திரு. .கு.சுப்பையா அவர்கள் ஒரு கட்டுரையில்,

1945 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் திரு..மு. சண்முகம், திரு.சா.சி.சுப்பையா, திரு.நா.காளிமுத்து, திரு..மெ.ஆதி மூலம், .கு.சுப்பையா ஆகிய ஐவர் கொண்ட குழுபெரியார் விழாக் கொண்டாடுவதென எண்.3, கெனிஸ் ஸ்திரீட் கட்டிடத்தில் அமைக்கப் பட்டது. இக்குழு விழாவுக்கென 350 வெள்ளி நிதி திரட்டியது. அடுத்து மே திங்கள் மூன்றாம் நாள் மீண்டும் கூடிய இக்குழுவில் நமக்கென ஒரு சங்கம் இருந்தால் நலமாக இருக்கும் என நான் தெரிவித்த கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டு சங்கம் அமைக்கும் பொறுப்பையும்  என்னிடமே ஒப்படைத்தனர். அதன்பின் ஜூன் திங்கள் 26 ஆம் நாள் கொனாலி ரோட்டிலுள்ளபேர்ச் பள்ளிக்கூட மண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. ஏறக்குறைய 90 பேர் கலந்துகொண்டனர். மலாயா பெரியார் உயர்திரு ரெ.ரா. அய்யாறு அவர்கள் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பல பெயர்கள் முன்மொழியப்பட்டாலும் பெரும் பான்மை வாக்குகள் பெற்றுபேராக் தமிழர் சங்கம்என்ற பெயர் தேர்ந் தெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் பல பகுத்தறிவாளர்கள் தமிழர் சங்கத்தை திராவிடர் கழகமாக மாற்றம் செய்ய வேண்டுமென நேரிடையாகவும், நாளிதழ் களிலும் அறிக்கைகள் வெளியிட்டார்கள். அதன் பேரில் சங்கத்தின் பெயரை மறு ஆய்வு செய்ய 1946 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23 ஆம் நாள், பேர்ச் பள்ளிக் கூட மண்டபத்தில் உறுப்பினர் பொதுக் கூட்டம் கூட்டப் பட்டது. (இப் பள்ளி மண்டபத்தை கழக நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் கட்டணமில்லாமல் தந்துதவியவர் அப்பள்ளி ஆசிரியர் திரு. கிருட்டிண சாமி அவர்கள் என்பதை மறுக்க முடியாத ஒன்று). அந்தப் பொதுக் கூட்டத்தில் பெயர் பற்றி ஆய்வு செய்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, பெரும்பான்மை வாக்குகளால்அகில மலாயா திராவிடர் கழகம்என்னும் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கழக சட்டதிட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பையும் தமிழ்ப் பெருங் கிழார் சி.சுப்பையா அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

அவ்வாண்டு மார்ச்சுத் திங்கள் 4 ஆம் நாள் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கழக சட்டதிட்டங்கள் படிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப் பெற்றனர்.

தலைவர் திரு.ரெ.ரா.அய்யாறு (ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்), துணைத் தலைவர் திரு.இரத்தினசாமி, செயலாளர் திரு.அழகேசன் (முன்னாள் சேவிகா ஆசிரியர்), துணைச் செயலாளர் .கு.சுப்பையா, பொருளாளர் திரு. முத்து காமாட்சி, செயலவையினர் திருவாளர்கள்: தா.சா.கணபதி (தமிழ்ப்பள்ளி ஆய்வாளர்), தங்கராசு, சி.சுப்பையா, நா.காளிமுத்து, நாராயணசாமி, கா. காளிமுத்து ஆகியோர்.

இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகமாக மாற்ற வேண்டாம், தமிழர் சங்கமாகவே இருக்கட்டும் என தமிழ் முரசு ஆசிரியர் கோ.சாரங்கபாணி பலமுறை கடிதங்கள் எழுதியிருந்தார். எனினும் மக்களின் ஒருமித்த முடிவே நிலை பெற்றதுஎன்று எழுதியிருக்கிறார்.

கொள்கை முரசு

மலேசியத் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான கொள்கை முரசு 1969 இல் வெளியிடப்பட்டது. இவ் வரலாறு குறித்து மணிமாறன் அவர்கள் எழுதிய கட்டுரையில், 

தந்தை பெரியார் 1929 இல் மலாயாவிற்கு வருவதற்குச் சில பல ஆண்டு களுக்கு முன்னே இந்நாட்டில் பகுத்தறிவு எண்ணக் கிளர்ச்சி முகிழ்த்தெழுந்து விட்டது. அதன் எதிரொலியாக 1928 இல் மலாயாவில் முதல் பகுத்தறிவு நூல்ஆரியரின் கூற்றுஎனும் பெயரில் ஆரிய சமய கோட்பாடுகளால் விளைந்த தீமைகளை விளக்கும் வகையில் சிங்கையில் உருவெடுத்தது.

1947 இல் நடைபெற்ற முதல் கழக மாநாட்டில் மலாயா திராவிடர் மத்தியக் கழகம் அமைத்த போது கழகத்திற்கென ஓர் ஏடு தொடங்கப்பட வேண்டுமென அன்றைய பெரியோர் திட்டமிட்டிருந்தனர். எனினும், கழகத்தின் பொது ஏடாக அன்று முழுப் பொறுப்புடன் வெளியிட இயலாமற் போனாலும், கழக ஏடு எனும் அளவில் அன்று கழகத்தின் முக்கியப் பொறுப்பாளராக பணி ஏற்றிருந்த ஈப்போஸ்டார்அச்சக உரிமையாளர் திரு. ..மு. மகாலிங்கம் அவர்கள் தம் பொறுப்பில் தனி முயற்சியில் 1949 இல்இனமணிஎன்ற பெயரில் கழக ஏட்டை வெளியிட்டார்.

இப்படிப் பல ஏடுகள் தோன்றிய போதிலும் கழகத்தின் அதிகாரம் பெற்றமுழு பொறுப்பும் கொண்ட ஏடாக முதன் முதலில் 1969 இல் தலைமைக் கழகம் வெளியிட்ட ஏடுகொள்கை முரசுஒன்றேயாகும்.

கழகத்திற்கென தனி ஏடு வெளியிட வேண்டுமென்ற எண்ணம் பல்லாண்டுகளாக கழகத்தவரிடையே இருந்த போதிலும் அதற்கென உருப்படியான திட்டம் 14 ‡ 15.4.1967 இல் பினாங்கில் நடைபெற்ற 14 ஆவது ஈராண்டுப் பேராளர் மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

இம்முயற்சிக்குப் பெரும் ஒத்துழைப்பாக இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குச் (சென்னைக்கு) சென்று வந்த கழகப் பேராளர்களின் நன்கொடையில் வாங்கி வரப்பட்ட ஏறத்தாழ 1500 வெள்ளி பெறுமான தமிழ் அச்செழுத்துக்களைப் பயன்படுத்தி கழகமே எழுத்துக் கோப்போரை வைத்து எழுத்துக் கோத்து தனியார் அச்சகத்தில் அச்சிடுவது பெரும் பயனளிக்கு மென்ற பேராளர்களின் ஒருமித்த கருத்தை ஏற்றுக் கொண்ட பின் கழக ஏட்டிற்கு பெயர் சூட்டுவது பற்றி கருத்துரைப்புகள் நிகழ்ந்தன.

சுங்கைப்பட்டாணி கிளைதிராவிடர் முரசு  எனும் பெயரையும் தெலுக்கான் சன் கிளைகொள்கை முரசுஎனும் பெயரையும், பினாங்கு கிளைகழகக் குரல்எனும் பெயரையும், பத்துக்காசா கிளைஇளஞ்சூரியன்எனும் பெயரையும் முன்மொழிந்தன. அத்தோடு 1949 இல் தொடங்கி தொடர்ந்து வெளியிடப்படா மல் மறைந்துவிட்டஇனமணிஎனும் முன்னாள் கழக ஏட்டின் பெயரிலேயே வெளியிடுவது சிறப்பானதென்ற கருத்தும் எழுந்தது. எனினும் பழைய பெயரைப் புதுப்பிப்பதைக் காட்டிலும் புதுப் பெயரில் வெளியிடுவதே நல்லது என்ற பேராளர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டதோடு, ‘திராவிடர் முரசுஎனும் பெயரில் ஈப்போ தோழர்கள் ஏடொன்றை வெளியிடவிருப்பதாக அறிவித்ததன் பேரில் எஞ்சிய மூன்று பெயர்களும் பேராளர்களின் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு பெரும்பான்மை வாக்குகள் பெற்றுகொள்கை முரசுஎனும் பெயரே தேர்வு செய்யப்பட்டது. இத்தோடு முதல்  கழக ஏட்டின் ஆசிரியனாக நான் தேர்வு செய்யப்பட்டேன். இது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்என்று எழுதியிருக்கிறார்.

அகில மலாயா மத்திய திராவிடர் கழக முதல் மாநாடு

 14.3.1947 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டஅகில மலாயா மத்திய திராவிடர் கழகத்திற்கு தற்காலிக நிருவாகச் செயற் குழுவினராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் வருமாறு:

தலைவர்       :                               திரு. நா.பள்ளிக்கொண்டான் (பந்திங்)

துணைத்தலைவர்                :                               திரு. ஹாஜி கா. யாசின் சாகிப் (பினாங்கு)

                                                திரு. து. இலட்சுமணன் (சிங்கை)

பொதுச் செயலாளர்              :                               திரு. .அங்கமுத்து (கோலாலம்பூர்)

துணைப் பொதுச் செயலாளர் : திரு. மு.குணசேகரம் (தைப்பிங்)

பொருளாளர்               :                               திரு. பி.பிச்சமுத்து (கோலாலம்பூர்)

கணக்காயர்கள்        :                               திரு. . மணியரசு (கோலாலம்பூர்)

                                                திரு. மா.செ.பரிமணம் (கோலாலம்பூர்)

ஆலோசகர்கள்         :                               திரு. ரெ.ரா. அய்யாறு (ஈப்போ)

                                                திரு.இரா.. காலகண்டர்

                                                திரு. கோவிந்தசாமி (கோலாலம்பூர்)

பிரச்சார அதிபர்        :                               பண்டிதர் . ஆறுமுகம் (தைப்பிங்)

நிறுவன இலாகா அதிபர்                 :                               திரு. சு.முனுசாமி (கோலாலம்பூர்)

மாதர் பகுதித் தலைவி     :                               திருமதி அமுதவல்லியம்மை (கோலாலம்பூர்)

மலேசிய திராவிடர் தலைமைக் கழக ஆட்சிக் குழு (1947 முதல் 1971 வரை)

ஆண்டு            :               1947

கிளைகள்      :               6

தலைவர்       :               நா.பள்ளிகொண்டான்

துணைத்தலைவர்கள்       :               ஹாஜி யாசின் சாகிப், து.இலட்சுமணன்

பொதுச்செயலாளர்               :               .அங்கமுத்து

துணைப் பொதுச் செயலாளர் :    மு. குணசேகரன்

பொருளாளர்               :               பி. பிச்சைமுத்து

ஆண்டு            :               1948

கிளைகள்      :               6

தலைவர்       :               பழ. அம்பலவாணர்

துணைத்தலைவர்கள்       :               ஹாஜி யாசின் சாகிப்,

                                .சா.சின்னப்பனார்

பொதுச்செயலாளர்               :               ரெ. ரா. அய்யாறு

துணைப் பொதுச் செயலாளர் :    மு. குணசேகரன்

பொருளாளர்               :               ..மு. மகாலிங்கம்

இடைக்கால மாற்றம் :  பழ. அம்பலவாணர் இடையில் தமிழகம் சென்ற        தால் சீவி. இரத்தனசாமி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டு            :               1949

கிளைகள்      :               6

தலைவர்       :               பழ. அம்பலவாணர்

துணைத்தலைவர்கள்       :               .சா.சின்னப்பனார், . பாபு

பொதுச்செயலாளர்               :               ரெ. ரா. அய்யாறு

துணைப் பொதுச் செயலாளர் :    மு.சு.மணியம்

பொருளாளர்               :               ..மு. மகாலிங்கம்

ஆண்டு            :               1950

கிளைகள்      :               6

தலைவர்       :               ரெ.ரா. அய்யாறு

துணைத்தலைவர்கள்       :               .சா.சின்னப்பனார், . பாபு

பொதுச்செயலாளர்               :               ..மு. மகாலிங்கம்

துணைப் பொதுச் செயலாளர் :    மு.சு.மணியம்

பொருளாளர்               :               ..மு. மகாலிங்கம் (தற்காலிகம்)

 

ஆண்டு            :               1951

கிளைகள்      :               6

தலைவர்       :               ஜி. குமாரசாமி

துணைத்தலைவர்கள்       :               . பாபு, .மு. காசிம்

பொதுச்செயலாளர்               :               . மணியரசு

துணைப் பொதுச் செயலாளர் :    .மு. திருநாவுக்கரசு

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1952 ‡ 54

கிளைகள்      :               7

தலைவர்       :               ஜி. குமாரசாமி

துணைத்தலைவர்கள்       :               . பாபு, இரா. தேவராசன்

பொதுச்செயலாளர்               :               . மணியரசு

துணைப் பொதுச் செயலாளர் :    .மு. திருநாவுக்கரசு

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1955 ‡ 56

கிளைகள்      :               9

தலைவர்       :               கா..சாமி

துணைத்தலைவர்கள்       :               . பாபு, . சுப்பையா

பொதுச்செயலாளர்               :               . மணியரசு

துணைப் பொதுச் செயலாளர் :    .மு. திருநாவுக்கரசு

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1957 ‡ 58

கிளைகள்      :               9

தலைவர்       :               . சுப்பையா

துணைத்தலைவர்கள்       :               . பாபு, கா..சாமி

பொதுச்செயலாளர்               :               சி.பி.லூயிஸ்

துணைப் பொதுச் செயலாளர் :    வே..வைரநாதன்

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

இடைக்கால மாற்றம்:

சி.பி.லூயிஸ் விலகலுக்குப் பின் கே. ஆர்.இராமசாமி பொதுச் செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டு            :               1959

கிளைகள்      :               9

தலைவர்       :               . மணியரசு

துணைத்தலைவர்கள்       :               தா.வை.முனியாண்டி, சி. குருசாமி

பொதுச்செயலாளர்               :               கே. ஆர். இராமசாமி

துணைப் பொதுச் செயலாளர் :    சி. பெரியசாமி

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1960

கிளைகள்      :               9

தலைவர்       :               . மணியரசு

துணைத்தலைவர்கள்       :               தா.வை.முனியாண்டி, ஜி.குமாரசாமி

பொதுச்செயலாளர்               :               கே. ஆர். இராமசாமி

துணைப் பொதுச் செயலாளர் :    சி. பெரியசாமி

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

இடைக்கால மாற்றம்:

.வி. ஆண்டியப்பா ஓய்வில் தமிழகம் சென்றதால் பெ. மா. முத்து பொருளாளராகத்  தேர்வு செய்யப்பட்டார்.

 

ஆண்டு            :               1961

கிளைகள்      :               10

தலைவர்       :               ஜி. குமாரசாமி

துணைத்தலைவர்கள்       :               தா.வை.முனியாண்டி, வே.நடராசன்

பொதுச்செயலாளர்               :               கே. ஆர். இராமசாமி

துணைப் பொதுச் செயலாளர் :    மொ.சு.மணியம்

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1962‡64

கிளைகள்      :               12

தலைவர்       :               இரா.சு. மணியம்

துணைத்தலைவர்கள்       :               மு. நல்லதம்பி, மு.வீ.பெருமாள்

பொதுச்செயலாளர்               :               மொ.சு.மணியம்

துணைப் பொதுச் செயலாளர் :    சு.வெ.கு.கதிர்வேலு

பொருளாளர்               :               ரெ.சு.மணியம்

இடைக்கால மாற்றம்:

ரெ.சு.மணியம் விலகலுக்குப் பின் .சு. மணியம்  பொருளாளராகத்  தேர்வு செய்யப்பட்டார். கே.ஆர். இராமசாமி விளம்பரத் துறைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டு            :               1965‡66

கிளைகள்      :               13

தலைவர்       :               கே. ஆர். இராமசாமி

துணைத்தலைவர்கள்       :               . பாபு, பி..டெனிஸ்லாஸ்

பொதுச்செயலாளர்               :               சி. அருணாசலம்

துணைப் பொதுச் செயலாளர் :    இரா. பாண்டுரங்கன்

பொருளாளர்               :               வை. இராசாங்கம்

இடைக்கால மாற்றம்:

வை. இராசாங்கம் விலகலுக்குப் பின்கு.. வேலு  பொருளாளராகத்  தேர்வு செய்யப்பட்டார். கே.ஆர். இராமசாமி விளம்பரத் துறைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டு            :               1967‡68

கிளைகள்      :               18

தலைவர்       :               கே. ஆர். இராமசாமி

துணைத்தலைவர்கள்       :               முத்துசின்னையா, இரா. பாண்டுரங்கன்

பொதுச்செயலாளர்               :               சி. அருணாசலம்

துணைப் பொதுச் செயலாளர் :    இரா. மணிமாறன்

பொருளாளர்               :               கு..வேலு

ஆண்டு            :               1969‡70

கிளைகள்      :               18

தலைவர்       :               கே. ஆர். இராமசாமி

துணைத்தலைவர்கள்       :               முத்துசின்னையா,இரா. பாண்டுரங்கன்,

                                .ஜி. வாசன்

பொதுச்செயலாளர்               :               சி. அருணாசலம்

துணைப் பொதுச் செயலாளர் :    இரா. பெரியசாமி

பொருளாளர்               :               வீ. கண்ணையா