Monday, May 30, 2022

பல்லடம் மாணிக்கம் அய்யாவின் நூலகம்

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?

சென்னையிலோ, டில்லியிலோ,  கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை.

#விருத்தாசலத்ததில்தான் இருக்கிறது...

கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.

தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.

இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. 

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு.

திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. 

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள்,  சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது...

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்......

நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும்  கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார்.

இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.

பல்லடம் மாணிக்கம் அவர்கள், 'நிறங்கள்' என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

'வள்ளுவம்' என்ற இதழை நடத்தியுள்ளார்.  24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார். 

பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன....

எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்த நூலக காப்பகம்தான்.

Friday, May 27, 2022

பிஜேபி ஒரு பேரபாயம்

பிஜேபி ஒரு பேரபாயம் - மஞ்சை வசந்தன் - திராவிடர் கழக வெளியீடு - பக்கங்கள் 220 - நன்கொடை ரூ 140/

●  இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை சீர் குலைக்கும் விதமாக; பல இன, மொழி, கலாச்சாரங்கள் கொண்ட மக்களை பிரிக்கும் முயற்சியாக; ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே அரசாங்கம் என்ற பாதையில் பயணிக்கும் அரசியல் கட்சி தான் பிஜேபி.

●  அந்த பிஜேபியின் தோற்றம், கொள்கை, செயல்பாடுகளைப் பற்றி மிகவும் தெளிவாக வரலாற்று அடிப்படையில் எடுத்து சொல்லும் ஒரு அரிய நூல் தான் - பெரியாரிய சிந்தனையாளர், எழுத்தாளர், உண்மை இதழின் பொறுப்பாசிரியர், தோழர் மஞ்சை வசந்தன் எழுதிய பிஜேபி ஒரு பேரபாயம் !

●  ' தாயைப் போல பிள்ளை '  என்ற கருத்துக்கு மிகவும் பொருத்தமான உதாரணம் ஆர்எஸ்எஸ் - பிஜேபி உறவு ! பிஜேபியை அறிய வேண்டுமென்றால் அதன் தாய் -  ஆர்எஸ்எஸ்  உருவாக்கத்திலிருந்து துவங்க வேண்டும் ! ஆர்எஸ்எஸ் மரத்தின் வேர் என்றால் - பிஜேபி அதன் கிளை ! ஆர்எஸ்எஸ் கொடிய  கிருமி என்றால் - பிஜேபி அதனால் உண்டாகும் கொடிய நோய் !

●  1925 ம் ஆண்டு ராம நவமியன்று நாக்பூரில் சித்பவன் பார்ப்பனரான டாக்டர் ஹெட்கேவரும் அவரது நான்கு சகாக்களும் சேர்ந்து தோற்றுவித்த அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் ( Rastria Samayam sevai Sangh ) 

●  ஆரியரும் ( பார்ப்பனர் ) ஆரிய தருமமும் ( வர்ணாசிரம, மநுநீதி ) ஆரிய மொழியும் ( சமஸ்கிருதம் ) ஆரிய நாடும் ( இந்தியா ) இவற்றின் உயர்வுக்காக பாடுபடுவதற்கும், அந்நிய மதத்தவர்களை எதிர்த்து போராடுவதற்கும், அதன் விளைவாக ' இந்து ராஷ்டிரா ' நிறுவச் செய்வதற்காகவும்  தோன்றியதே ஆர்எஸ்எஸ் ! இதுதான் சங்கிகளின் கொள்கை ! இதன் அடிப்படையில் உருவானதே பிஜேபியின் கொள்கை !

●  ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்த குரு, கோல்வல்கர் தனது சிந்தனை கொத்து நூலில் எழுதிய, சங்கிகளின் வேத வாக்கைப் படித்துப் பாருங்கள் :

●  " இந்து ராஷ்டிராவில் வணங்கத்தக்கவர்கள் ஆரிய பார்ப்பனர்களே ! மற்றவர்களெல்லாம் அவர்களது அடிமைகளே ! சூத்திரர்களே ! இழி மக்களே ! " ....

●  " மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தான் இருக்கிறது ! சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கி கொள்ள வேண்டும் ! " ...

●  1925ல் ஆர்எஸ்எஸ் தோன்றிய பிறகு 1927ல் நாக்பூரில் பெரிய மதக் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தில் இந்துக்களுக்கு பாதுகாவலராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் போராடி, வெற்றி பெற்று அதன் மூலம் நற்பெயரைப் பெற்று, தனது கிளைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆர்எஸ்எஸ் பெருக்கியது !

●  அரசியலில் தீவிரம் காட்ட 1930ல் என். பி. கார்வே உருவாக்கியது - இந்து மகாசபை !ஆர்எஸ்எஸ் உடன் அமைப்பு ரீதியான தொடர்பும், கொள்கையும் கொண்டது. இதன் தலைவரில் ஒருவரான டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி 1931ல் ஜனசங் கட்சியை நிறுவினார். இந்து மகா சபையில் தீவிர பங்காற்றிய நாதுராம் கோட்சே 1948 ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தியை சுட்டு கொன்றவன் !

●  ஜனசங் கட்சி 1977ல் ஜனதா கட்சியில் இணைந்தது. பின்பு 1980ல் வாஜ்பாயும் அத்வானியும் இணைந்து பாரதிய ஜனதா கட்சி என்ற பிஜேபியை துவக்கினார்கள் !

●   ஆர்எஸ்எஸ்ஸின் எல்லா கொள்கைகளுக்கும் அரசியல் வடிவம் கொடுக்கும் இயக்கமாக மாறியது பிஜேபி ! 

அரசியலை இந்து மயமாக்கு - இந்து மதத்தை ராணுவ மயமாக்கு என்ற கொள்கையோடு கட்சி வளர்ந்தது !

●  பிஜேபி தனது அரசியல் கனவை நனவாக்க, இந்துத்துவா கொள்கையின் முக்கிய திட்டமான , ' ராமர் கோயில் ' கட்டும் முயற்சியை முன்னெடுத்து, நாடெங்கும் மதவெறுப்பு கோஷங்களை கிளப்பி, இந்து ஒற்றுமை என்ற போர்வையில், மாற்று மதத்தினரை அச்சுறுத்தும் வகையில் பல இடங்களில் கலவரங்களை அரங்கேற்றி தன்னை வளர்த்து கொண்டது !

●  இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம் - டிசம்பர் 6ம் தேதி  1992 ! அன்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியது இந்துத்துவா - சங் பரிவாரங்கள் ! ஆர்எஸ்எஸ் வழி நடத்த, விஎச்பி, பஜ்ரங் தள், இந்து முன்னணி, சிவசேனா, சாது சமாஜ் மற்றும் பிஜேபி இயக்கங்களின் தொண்டர்களும் குண்டர்களும் அந்த நாசவேலையை செய்து முடித்தார்கள் !

●  ' இந்துத்துவா ஒரு பேரழிவு ' என்பதை இந்திய மக்கள் உணர்ந்த தருணம் அது !  பல இடங்களில் மதக் கலவரங்கள். எங்கெல்லாம் மதக் கலவரங்கள் நடந்ததோ அங்கெல்லாம் பிஜேபி ஆட்சியைப் பிடித்திருக்கின்றது.

●  பிஜேபி ஒரு பேரபாயம் என்ற கருத்தை விளக்குவதற்கு ஆசிரியர் மஞ்சை வசந்தன் நிறைய ஆய்வுகளை மேற் கொண்டிருக்கின்றார். ஆர்எஸ்எஸ் துவக்கம் முதல் அதன் பின்னே இந்து மகா சபையாகி, அதன் பின்னர் ஜன சங்காகி, இறுதியில் பிஜேபியாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது ! 

●  பிஜேபி ஒரு பேரபாயம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூல் ஒரு எச்சரிக்கை மணியாக விளக்கம் தருகிறது ! நூலை சிறப்பாக எழுதியுள்ள ஆசிரியர் மஞ்சை வசந்தன் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் உரித்தவராவார் !

பொ. நாகராஜன்.

பெரியாரிய ஆய்வாளர்.

சென்னை. 27.05.2022.

********************************************

பேரறிவாளன் விடுதலை குறித்து நியூஸ் 7 தொலைக்காட்சியில் வந்த தொகுப்பு

நியூஸ் 7 தொலைக்காட்சி சொன்னது என்ன? 

1991 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கு, 

30 ஆண்டுகளாக, எந்த முடிவும் எடுக்கப்படாமல், அரசியல் விவாதங்களுக்கு இடையே சிக்கித் தவித்து வந்தது, 

இந்த நிலையில்தான், 

2022 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள், 

எழுவருள் ஒருவரான பேரறிவாளன் விடுதலை என்கின்ற செய்தி வெளியாகி,  

தமிழ்நாடு உட்பட, இந்தியா முழுமையும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது. 

பேரறிவாளன் வீட்டிலும் மகிழ்ச்சி வெள்ளம் சூழ்ந்தது. 

என் விடுதலைக்காகப் போராடிய என் தாய்க்கும், அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

எனக்கூறி, பறை இசைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன்.

அன்று மாலையில், 

சென்னை வான் ஊர்தி நிலையத்தில், முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களை, பேரறிவாளனும், அவரது குடும்பத்தினரும் சந்தித்து, நன்றி கூறினர். பேரறிவாளனைக் கட்டி அணைத்து முதல்வர் வரவேற்றார். குடும்பத்தின் சூழ்நிலைகளைக் கேட்டு அறிந்ததாகவும், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், முதல்வர் உறுதி அளித்ததாக, ஊடகங்களிடம் கூறினார் பேரறிவாளன்.

அடுத்து அவர்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடியை, அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறினர். 

அடுத்து ஒரு முக்கியமான தலைவரைச் சந்திக்க, பேரறிவாளனின் கால்கள் சென்றன. 

பேரறிவாளன் மட்டும் அல்லாது, 

ஏழு பேரையும் விடுதலை செய்ய, 

தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் மாறி மாறி அலைந்தவர் அவர்.

தூக்கு வரை சென்ற பேரறிவாளன் உட்பட மூவரைக் காப்பாற்றி, விடுதலைத் தீர்ப்பு வந்ததன் பின்னே, உறுதியாய், உறுதுணையாய் இருந்தவர் அவர்தான்; மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்கள் அவை உறுப்பினருமான, நாடாளுமன்றப் புலி என்று அழைக்கப்படுகின்ற வையாபுரி கோபால்சாமி என்கின்ற வைகோ.

மே 19 ஆம் நாள் காலையில், 

சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில், பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மாளும், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, 

வழக்கின் போக்கு எங்கு தொடங்கியது என்பதில் இருந்து, அந்தப்  பயணம் முடிவுக்கு வந்தது வரை, மனம் விட்டு உரையாடினர். 

இங்கு செய்தியாளர்களிடம் பேரறிவாளன் கூறிய வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

இந்த விடுதலைக்கு முழுக்க முழுக்க  அண்ணன் வைகோ அவர்கள்தான் காரணமாக இருந்தார். 

அதற்கு நன்றி கூறுவதற்காகத்தான் வந்தோம். நேற்றைக்கே இங்கு வர நினைத்தோம்; 

ஆனால், நேரம் ஆகி விட்டது. 

இந்தியாவின் தலைசிறந்த வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி, அழைத்துவந்து வாதாடச் செய்தார் வைகோ. 

சிறைக்குச் சென்று கைதிகளைப் பார்க்கின்ற வழக்கம், ராம் ஜெத்மலானிக்குக் கிடையாது. 

ஆனால், வேலூர் சிறைக்கு வந்து எங்களைப் பார்த்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி, தூக்குத் தண்டனைக்குத் தடை ஆணை பெற்றுக் கொடுத்தார். அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, 

அத்தனை அமர்வுகளிலும் பங்கேற்று வாதாடினார். அவருடைய வாதங்கள்தான் எங்கள் விடுதலைக்கு வழி காட்டியது. 

ராம் ஜெத்மலானி தற்போது உயிருடன் இல்லை; ஆனால், அவர் செய்த உதவியை நாங்கள் என்றைக்கும் மறக்க முடியாது என நன்றிப்பெருக்குடன் பேசினார் பேரறிவாளன்.

எழுவர் விடுதலைக்கான சட்டப் போராட்டம் குறித்து, இரண்டு நிமிடங்களுக்குள் பேரறிவாளன் பேசி முடித்தாலும், 

அவர்கள் இருவருக்கான உறவும், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்காக வைகோ நடத்திய சட்டப் போராட்டங்களும் பல்லாண்டுகள் நீண்டவை. சில நிமிடங்களில் அவற்றைச் சொல்லி முடிக்க முடியாது.

1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள், 

திருபெரும்புதூரில் நிகழ்ந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட மறுநாள், 

மே 22 ஆம் நாள், திருபெரும்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

இரண்டு நாள்களுக்குப் பிறகு, 

மத்திய புலன் ஆய்வுத் துறை புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் முதல் கைதாக, 

ஜூன் 11 ஆம் நாள், நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் கைது செய்யப்பட்டனர். 

14ஆம் தேதி முருகனும், நளினியும் சென்னை சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டனர். 

 19 ஆம் தேதிதான், பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 

அதற்குப் பிறகு, விசாரணை வளையம் விரிவு அடையத் தொடங்கியது. 

கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு,

 1992 மே 20 அன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, 

சிபிஐ தரப்பில், 55 பக்கங்கள் கொண்ட குற்ற அறிக்கை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. 

41 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்த நிலையில், 

12 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள்.

மூன்று பேர் தலைமறைவு ஆகினர். 

பிடிபட்ட 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம்,

 1998 ஆம் ஆண்டு,ஜனவரி 28 ஆம் நாள், அந்த 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது. 

அதுவரை இந்தியாவில் இப்படி ஒரு தீர்ப்பை, எந்த நீதிமன்றமும் வழங்கியது இல்லை. 

இதுதான் முதன்முறை.

பழ. நெடுமாறன் தலைமையில் மீட்புக்குழு அமைக்கப்பட்டது. 

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வீட்டில் கூட்டம் நடத்தப்பட்டது. 

வழக்கு உரைஞர் எம்.நடராஜன் மூலம், 

மேல் முறையீடு செய்யப்பட்டது. 

1998 செப்டெம்பர் முதல், 1999 ஜனவரி வரை ஐந்து மாதங்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிபதிகள் கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, சையத் ஷா முகமது கத்ரி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

மே 5 ஆம் நாள் தீர்ப்பு வழங்கினர்.

நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மட்டும் மரண தண்டனையை உறுதி செய்தனர். 

ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் மரண தண்டனையை,

 வாழ்நாள் சிறைத்தண்டனையாகக் குறைத்தனர். சண்முகவடிவேலு, குற்றம் அற்றவர் என விடுவிக்கப்பட்டார். 

மீதம் இருந்த 18 பேரும், குறைந்த அளவு குற்றம் செய்ததாகக் கூறி, அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததைக் கருதி, உடனே விடுதலை செய்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 

சிபிஐ மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.

அவர்கள் குற்றம் அற்றவர்கள், 

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று, தொடக்கம் முதலே ஓங்கிக் குரல் கொடுத்து வந்த வைகோ, 

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரையும் எப்படியேனும் விடுதலை செய்து விட வேண்டும் என, 

அதிக உத்வேகத்துடன் இயங்கினார். 

அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, நான்கு பேரின் தூக்குத் தண்டனையை, வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்ற உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்தப் பிரச்சினையை இப்போது நாங்கள் கையில் எடுத்தால், அது இந்தியா முழுமையும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். 

ஆனால், நீங்கள் கவலைப்படாதீர்கள்; பார்த்துக் கொள்வோம்; எதற்கும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து விட்டுச் செல்லுங்கள் என்று 

வைகோவிடம் தெரிவித்தார் வாஜ்பாய்.

அதன்படி, உள்துறை அமைச்சர் அத்வானியையும் சந்தித்து முறையிட்டார் வைகோ. 

இந்தியாவின் பிரதமராக இருந்தவரைக் கொலை செய்த வழக்கு என்பதால், நாங்கள் இதில் தலையிட முடியாது. ஆனால், முடிந்த அளவிற்கு கிடப்பில் வைத்து விடுகின்றோம் என்று தன்னிடம் அத்வானி சொன்னதாக, மேடைகளில் தெரிவித்தார் வைகோ. 

அந்தக் கால தாமதத்தின் மூலம் கிடைத்த இடைவெளிதான், அவர்களுடைய தண்டனைக் குறைப்பிற்கு வழி ஏற்படுத்தியது என்றார் வைகோ.

அதன்பிறகு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும், தமிழக ஆளுநர் ஃபாத்திமா பீவிக்குக் கருணை மனுக்கள் அனுப்பினர். 

ஆனால், ஆளுநர் ஃபாத்திமா பீவி, அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை; கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

ஆளுநர் அரசைக் கலந்து ஆலோசிக்கவில்லை;  தன்னிச்சையாக முடிவு எடுத்தார் எனக் கூறி, தூக்குத்தண்டனை பெற்றவர்கள் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஆமாம்; ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுத்தது தவறு; தமிழ்நாடு அமைச்சர் அவை எடுக்கின்ற முடிவின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக, 

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், 2000 ஆவது ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள், தமிழக அமைச்சர்கள் அவை கூடி விவாதித்தது. 

நளினிக்கு மட்டும் தூக்குத்தண்டனையை, 

வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றி, ஏப்ரல் 24 ஆம் நாள் அரசு ஆணை வெளியிடப்பட்டது. 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர், 

ஏப்ரல் 26 அன்று குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினர்.

ஆனால், 2000 ஆண்டு முதல், 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவர் பொறுப்பு வகித்த கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் ஆகிய இருவரும், அந்தக் கருணை மனுக்களை நிலுவையில் வைத்து இருந்தனர்.

2007 இல் குடியரசுத் தலைவர் பொறுப்பு ஏற்ற பிரதிபா பாட்டீலுக்கும் கருணை மனுக்கள் அனுப்பினர்.

இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு, வைகோவும், மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி எம்.பி.யும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தனர்.

ஒன்றிய அமைச்சர்கள் அவை எடுக்கின்ற முடிவுகளுக்கு, குடியரசுத் தலைவர் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதால், 

பிரதமரைச் சந்தித்தனர்.

மன்மோகன் சிங், உள்துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு, 

வைகோவும், கணேசமூர்த்தியும் வருகின்றார்கள்; சந்தியுங்கள் என்று சொன்னார். 

அவர்களும் சந்தித்தனர். 

எந்தக் கவலையும் வேண்டாம்; நல்லது நடக்கும் என்று கூறி, வைகோவுக்கு நம்பிக்கை அளித்தார் உள்துறை அமைச்சர்.

மூவரையும், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றி விட்டோம் எனக் கருதி, அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் வைகோ. 

அவர், மூவரையும் விடுதலை செய்து விட்டது போலவே கருதி, சென்னை வந்த அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 12 ஆம் நாள் காலை, தியாகுவிடம் இருந்து வைகோவுக்கு ஒரு அழைப்பு வந்தது. 

அவர் சொன்ன செய்தியைக் கேட்ட வைகோ, அதிர்ச்சியில் உறைந்து போனார். 

ஆம்; மூவரின் கருணை மனுக்களையும், குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்; 

தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதுதான் அந்தச் செய்தி. 

அந்தச் செய்தி வெளியாகி இருந்த ஆங்கில நாளேட்டை வாங்கிப்  படித்து அதிர்ந்து போனார் வைகோ. 

தில்லி வீட்டின் மாடிப்படியில் இருந்து கீழே இறங்கும்போது, தலைசுற்றி மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். 

ஏன் இவ்வளவு பதற்றம் என்று கணேசமூர்த்தி கேட்க, பதில் கூற முடியாமல் திணறினார் வைகோ.

அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தார். 

பிரபல வழக்கு உரைஞர் அந்தி அர்ஜூனாவைச் சந்தித்தார். 

ஆனால், அவர் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி விட்டார்.

மூவரும் தூக்கில் போடப்படுகின்ற தேதியை, 

ஆகஸ்ட் 26 ஆம் நாள் அறிவிப்பதாக செய்தி வந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தார் வைகோ. 

ஆகஸ்ட் 20 ஆம் நாள், வேலூர் மத்தியச் சிறைக்குச் சென்று, மூவரையும் சந்தித்தார். 

‘அண்ணா கவலைப்படாதீர்கள்’ என்று அவர்கள் வைகோவுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

கண்ணீர் வழிய, சிறைக் கம்பிகளுக்கு உள்ளே தன் கையை நுழைத்து, அவர்களுடைய தலைகளை வருடிக் கொடுத்தார் வைகோ.

அவர்கள் மூவரும், செப்டெம்பர் 9 ஆம் நாள் தூக்கில் இடப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகின. 

தூக்குத் தண்டனையைக் கண்டித்து, காஞ்சிபுரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.

 மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு ஆகிய மதிமுக முன்னணியினருடன் வைகோ பங்கேற்றார். 

காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடியும் அந்தச் சங்கிலியில், வைகோவுக்கு அருகில்  கைகோர்த்து நின்றார். 

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் உரை ஆற்றிய வைகோ, மூவரையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே எனக்கூறி கண்ணீர் வடித்தார். 

அவரது உரை, செங்கொடி உட்படப் பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அன்று இரவு, காஞ்சி மக்கள் மன்றத்தின் தலைவி மகேசிடம் பேசிய செங்கொடி, 

வைகோ அண்ணனே இப்படி அழுகின்றாரே, 

இனி அவர்களைக் காப்பாற்ற முடியாதா? என்று கூறி வேதனைப்பட்டு இருக்கின்றார்.

பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கு உரைஞர்கள் கயல் என்ற அங்கயற்கண்ணி, சுஜாதா, வடிவாம்பாள் ஆகியோர், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில், கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்தப் போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக, காஞ்சி மக்கள் மன்றத்தினரும் வந்திருந்தனர். 

ஆனால், நான் வரவில்லை; நீங்கள் செல்லுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு, பெட்ரோல் கேனுடன், தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்றார் செங்கொடி. மூவரையும் விடுதலை செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பிய செங்கொடி, பெட்ரோலைத் தன் மேனியில் ஊற்றிக்கொண்டு செந்தழல் ஏகி இறந்தார்.

அப்போது, சேலம் தமிழ்ச் சங்க மேடையில் பேச ஆயத்தம் ஆகிக்கொண்டு இருந்தார் வைகோ. மேடையில் இருந்த வைகோவுக்கு இந்தச் செய்தி வந்தது. தன் பேச்சை நிறுத்திவிட்டு, செங்கொடியின் உடலைப் பார்க்க விரைந்தார் வைகோ.

அடுத்து வேலூர் சென்று கொண்டு இருந்த வைகோவுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. 

நாங்கள் மும்பைக்கு வந்து, மூத்த வழக்கு உரைஞர்களைச் சந்திக்க முயன்றோம். ஆனால், யாரையும் சந்திக்க முடியவில்லை என்றார், பேரறிவாளனுக்காக வாதாடிக் கொண்டு இருந்த வழக்கு உரைஞர்களுள் ஒருவர்.

இந்த நிலையில், ஒருவரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்பினார் வைகோ. 

அவர்தான், உலகப் புகழ் பெற்ற வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி. 

அவர், வைகோவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால், உடனே அலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டார் வைகோ.  

ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவரது தில்லி தொடர்பு கொண்டார் வைகோ. 

ஜெத்மலானி, மும்பையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே தொடர்பு கொண்டபோது, பெங்களூருவில் இருப்பதாகச் சொன்னார்கள். 

அதன்பிறகு, அவரது மகன் மூலமாக, ஜெத்மலானியைத் தொடர்பு கொண்டு பேசினார் வைகோ. வழக்கு விவரத்தைச் சொன்னார்.

வைகோ, எனக்கு நிறைய வழக்குகள் இருக்கின்றன. இப்போது இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது என்றார் ஜெத்மலானி. 

உலகத் தமிழர்கள் சார்பாக, உங்களை மன்றாடிக் கேட்கின்றேன் என்று கெஞ்சினார் வைகோ. 

சரி; என் நண்பர் வைகோவுக்கு வருகிறேன் என்று சொன்னார்.

இதன்பிறகுதான், வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்து அவர் வாதாடியபோது,

“ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு வந்திருந்தன. மூன்று பேரும் கொடுத்த கருணை மனுவை, 

பத்தே நாள்களில் ஆளுநர் தள்ளுபடி செய்து விட்டார்;

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது;

ஆளுநரின் முடிவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டது;

எனவே, இரண்டாவது முறையாக, கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன; இதுகுறித்து, ஐந்து மாதங்களில் முடிவு எடுக்கப்பட்டது;

அதன்பிறகு மூவரும், 2000 ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்கள் அனுப்பினர்;

அதன் மீது 11 ஆண்டுகள் எந்த முடிவும் எடுக்கவில்லை;

2011 ஆகஸ்ட் 27 அன்றுதான், நிராகரித்து  முடிவு எடுத்தார்; இதற்கு இடையில், மனுதாரர்கள் தரப்பில், ஐந்து முறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டன;

இவ்வளவு காலதாமதம் என்பது, சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரானது;

இந்திய அரசு அமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் கீழ் வழங்கப்பட்டு இருக்கின்ற உரிமைகளுக்கு எதிரானது; அந்தச் சட்டப் பிரிவின்படி, விரைந்து முடிவு எடுத்து அறிவித்து இருக்க வேண்டும்; 

ஆனால், குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் தாமதம் செய்தது, அந்தச் சட்டத்திற்கு எதிரானது. 

இந்த பதினோரு ஆண்டுகளும், மனுதாரர்கள் ஒவ்வொரு நாளும் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து இருக்கின்றனர்;

உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்;

ஒரு குற்றத்திற்கு ஒரு தண்டனைதான்; 

அவர்கள் தூக்குத் தண்டனைக்கும் மேலான தண்டனையை அனுபவித்து விட்டார்கள்;

எனவே, கருணை மனுவை நிராகரித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையை, நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்” என

வாதிட்டார் ராம் ஜெத்மலானி.

அவரது அந்த வாதம், அதுவரை யாரும் சிந்திக்காத கோணத்தில் அமைந்தது; 

வரலாற்றுத் திருப்பமாகவும் ஆனது.

அவரது வாதங்களை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், 

தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கி ஆணை பிறப்பித்தது.

அப்போது, சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் தனக்கு நன்றி சொன்னவர்களிடம், 

Not for Me. Thank Vaikoஎனக்கு அல்ல, வைகோவுக்கு நன்றி கூறுங்கள்;அவர்தான் என்னை இங்கு அழைத்து வந்தார் என்றார் ராம் ஜெத்மலானி.

அதன்பிறகு, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அங்கே விசாரணை நடைபெற்ற அனைத்து நாள்களிலும், ராம் ஜெத்மலானியும், வைகோவும் ஆஜரானார்கள். 

அங்கேயும் சிறப்பாக வாதாடிய ராம் ஜெத்மலானியை, தூக்குத் தண்டனையை ரத்து செய்து, 

வாழ்நாள் சிறைத்தண்டனையாகக் குறைக்க வைத்தார்.

அந்தத் தீர்ப்பு வெளியான நாளில், 

தில்லியில் ராம் ஜெத்மலானியின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் வைகோ. அவரைச் சென்னைக்கு அழைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராட்டு விழா ஏற்பாடு செய்தார் வைகோ. 

சென்னை வந்த ராம் ஜெத்மலானிக்கு எழுச்சியான வரவேற்பு அளித்தார்.

அந்த விழாவில் பேசிய வைகோ, 

இந்த வழக்கிற்காக, ராம் ஜெத்மலானி பணம் வாங்காமல் வாதாடினார் என்பதைச்சொன்னார். 

இந்தியாவின் மிகச்சிறந்த வழக்குஉரைஞர், மிக அதிகமாக சம்பளம் வாங்கும் வழக்கு உரைஞர், அவர் தங்களுக்காக ஆஜராவாரா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த வேளையில், வைகோவின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த வழக்கில் வாதாடினார்; அவருக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டு இருக்கின்றார்கள் என்றார் வைகோ.

அந்த விழாவில், ராம் ஜெத்மலானி வைகோவைப் புகழ்ந்த வார்த்தைகள், 

பெரியார்தாசன் போன்றோரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையச் செய்தது.

யாரும் காப்பாற்ற முடியாது: பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்குத் தண்டனை உறுதி என இந்தியாவே நம்பிக்கொண்டு இருந்தபோது, 

வைகோ என்ற ஒற்றை மனிதன் மேற்கொண்ட விடா முயற்சிகளாலும், துணிச்சலாலும், தூக்குத் தண்டனை தூக்கு எறியப்பட்டது.

அதன்பிறகும் வைகோ விடவில்லை. 

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும்போதெல்லாம், அந்தப் பேட்டிகளிலும் கூட, எழுவர் விடுதலை குறித்துப் பேசி வலியுறுத்தி வந்தார். 

அவர்கள் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். 

அவர் பட்ட துயரங்களுக்குப் பரிசாகத்தான் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்து இருக்கின்றது. அவர்கள் தமிழர்கள் என்பதைத் தாண்டி, என் தம்பிகள் என்று மேடைகளில் பேசினார் வைகோ. 

நானும் அதே வேலூர் சிறையில் பொடா சிறைவாசியாக இருந்தபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு வருகின்ற பழங்களை, அவர்களுக்குத்தான் கொடுத்து வந்தேன். அவர்கள் சமைத்ததை, எனக்குக் கொண்டு வந்து கொடுப்பார்கள். 

சனிக்கிழமைகளில், சிறையில் இலக்கியக் கூட்டங்களும், பட்டிமன்றங்களும் நடத்தினோம் என்பதை எல்லாம் நினைவுகூர்ந்தார் வைகோ.

அத்துடன், எழுவருள் ஒருவரான ரவிச்சந்திரன், வைகோவின் தூரத்து உறவினர் என்பதால், 

வைகோ முயற்சிகள் எடுக்கின்றார் என்று கூற வாய்ப்பு இருப்பதைக் கருதி, 

அவரைச் சந்திக்கவே இல்லை என, வைகோவே கூறினார்.

இளைஞனாக இருந்தபோது தன் வீட்டுக்கு வந்து சென்ற பேரறிவாளன், 

31 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை பெற்று வந்தது வைகோவுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது என்றாலும், எஞ்சிய ஆறு பேருக்கும் விடுதலை கிடைக்கும் வரை  அவர் ஓயப் போவது இல்லை. 

காணொளி உரை தட்டச்சு ..அருணகிரி

03.06.2022 நாளிட்ட சங்கொலி வார இதழில் 

முதல் பக்கம் வெளியீடு.

செ.அருள்செல்வன் எழுதியக் கட்டுரைக்கு மறுப்பு

திராவிட இயக்கத்தின் ஆங்கிலக் குரல் என்ற தலைப்பில் தமிழ் இந்துவில் கட்டுரை எழுதிய செ. அருள்செல்வன் அவர்களுக்குச் சில கேள்விகள்.

அண்ணாவின் அரசியல் குரு பி. பாலசுப்பிரமணியம் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளீர்களே அண்ணா எப்போது பி.பா. என்னுடைய அரசியல் குரு என்று எழுதினார் ஆதாரம் காட்ட முடியுமா?

பெரியார் நீதிக்கட்சித் தலைவராக வந்த உடனே பி,பா.அச்சகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டதாக எழுதி உள்ளீர்கள்.

பெரியார் நீதிக்கட்சித் தலைவராக தோர்ந்தெடுக்கப்பட்டது. 1938இல் திசம்பர் மாதம் 29,30,31 நாள்களில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில். 

பி,பா, 1940 முதல் சண்டே அப்சர்வர் இதழில் பெரியாரைத் தாக்கி எழுதி வந்துள்ளரே எப்படி.?.

ராசாசி அவருக்கு சீனத்தூதுவர் பதவி அளித்ததை இவர் பெருந்தன்மையாக மறுத்துவிட்டார் என்று கூறியுள்ளீர்களே அது உண்மையா?

15.7.1950 முதல் இரசாசி நேரு அமைச்சரைவையில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தாரே தேரியுமா?

வல்லபாய் பட்டேல் இறந்த பிறகுதான் உள்துறை அமைச்சர் பதவி வழக்கப்பட்டது தெரியுமா?

உள்துறை அமைச்சர் எப்படி வெளிநாட்டுத் தூதுவரை நிமிக்க முடியும்?

எல்லாவற்றுக்கும் மேலாக சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் தமிழர் கழகம் என்று பெயர் வைக்கக் கோரினார் என்று எழுதியுள்ளீர்களே அது பொய்யல்லவா?

பி.பா திராவிடர் கழகம் என்ற பெயர் வேண்டாம் பழைய நீதிக்கட்சி என்ற பெயரே வேண்டும் என்று தான் வாதாடியுள்ளார்.

பெரியார் தலைமையை வீழ்த்த வேண்டும் என்று  போரடி தோற்றுப் போன ஒருவருக்கு 1957 தேர்தலில் பெரியார் ஆதரிக்கவில்லை என்று எழுதுவது என்ன நியாயம்?.

குறிப்பு : அருள் செல்வன் அண்ணல் தங்கோவின் பெயரன் எனக்கு நண்பர் தான். பெ.ம.அவர்களோடு இயங்குகிறார்.

வாலாசா வல்லவன் பதிவு

வைகோ ஆற்றிய எழுத்து எனும் கருவறை என்னும் உரை

உலக மனித குல வரலாறு தெரிய வேண்டுமா?

இதோ வைகோ அவர்கள் 'எழுத்து எனும் கருவறை' என்னும் தலைப்பில் 7.8.2010 இல் ஆற்றிய உரையின் ஒரு பகுதி...

மனித குல வரலாற்றில், எழுத்துகள்தாம் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

எழுத்து எனும் கருவறையில் பிறக்கின்ற உணர்வுகள் எரிமலையாக வெடிக்கின்றன.

அடக்குமுறையை, கொடுங்கோலர்கள் எதிர்ப்பதற்கு, பூட்டப்பட்ட விலங்குகளை உடைத்து எறிவதற்குப் பயன்பட்டன.

மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ; அவன் விலங்குகளால் பூட்டப் பட்டுக் கிடக்கிறான்.

‘Man is born free ; but he is everywhere in chains’

இந்த விலங்குகளை உடைப்பது எப்படி?

உடைத்த சம்மட்டிதான் எழுத்து என்கின்ற சம்மட்டி.

அந்தக் கருவறையில் வார்ப்பிக்கப்பட்ட ஆயுதங்கள், சர்வாதிகாரிகளின் கோட்டை, கொத்தளங்களைத் தகர்த்துத் தரைமட்டமாக ஆக்கி இருக்கின்றன.

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பற்றி இங்கே சொன்னார்கள். அந்தக் குரல் முழங்கிய இடம், பாரிஸ் பட்டணம்.  அந்த மூல முழக்கத்துக்குக் காரணமான வால்டேர், லூயி மன்னனை எதிர்த்தான் என்பதால், பாஸ்டைல் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தான். அங்கேதான், சாக்ரடீசின் நூல்களைப் படித்தான். அதை நாடகமாக ஆக்கினான். சிறையிலேயே நூல்களைத் தீட்டினான்.

1778 ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள், வால்டேர் மறைந்தார். தலை சிறந்த சிந்தனையாளன் இயற்கை எய்தினான். ஆனால், அவன் எழுதிய எழுத்துகள், அவனது சிந்தனைக் கருவறையில் இருந்து புறப்பட்ட படைப்பு கள், அவன் எடுத்து வைத்த முழக்கங்கள், இவையயல்லாம் ஆயுதங் களாகி, மண் குடிசைகளை நிமிர வைத்தன. அடிமைகளின் கைகளில் வாள்களை ஏந்தச் செய்தன.

பாஸ்டைல் சிறைக்கூடம் தகர்த்து எறியப்பட்டது. வெட்டுப் பாறைகளில் தீர்ப்புத் தரப்பட்டது. உடைந்து நொறுங்கி சிதறிக் கிடக்கின்றது பாஸ்டைல் சிறைக்கூடம். ஜூலை 14. 11 ஆண்டுகள் கழித்து, எந்தக் கருவறையில் இருந்து ஆயுதங்களை பேனா முனையிலே தந்தானோ, எந்த பாஸ்டைல் சிறையில் அவன் வைக்கப்பட்டு இருந்தானோ, அந்த சிறை உடைத்து நொறுக்கப்பட்டு, குப்பை மேடு போலக் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

வால்டேரின் கல்லறை எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்துத் தோண்டினார்கள். வால்டேரின் சவப்பெட்டியை எடுத்து வந்தார்கள். பாஸ்டைல் சிறையின் மண் குவியல் கிடக்கிறது அல்லவா, அதற்கு மேலே கொண்டுவந்து வைத்தார்கள். ஆடிப்பாடி ஆனந்தக் களிநடனம் புரிந்தார்கள்.

வால்டேர் உயிரோடு இல்லை ; ஆனால், அவனது எழுத்து உயிரோடு இருந்தது. ஜீவனோடு இருந்தது. சர்வாதிகார மாளிகைகளைத் தரை மட்டமாக ஆக்கியது.

வரலாற்றின் விந்தையான காட்சியைப் பாருங்கள். அதே பாரிஸ் நகரில், பிரெஞ்சுப் புரட்சிக்கு மற்றொரு ஆயுதத்தை வார்ப்பித்துக் கொடுத்தவன் ரூசோ. 

சமுதாய ஒப்பந்தத்தைத் (Social Contract) தந்தவன். அந்த நூலை அவன் எழுதிய போது, எப்படி ஈரோடு என்ற பெயரைச் சேர்த்தே இந்தத் திருவிழாவுக்கு ஸ்டாலின் குணசேகரன் பெயர் சூட்டி இருக்கிறாரோ, அது போல, ரூசோ சென்ற இடமெல்லாம் ஜெனீவாவின் பெயரைச் சேர்த்தே சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த ஜெனீவா வீதிகளில், அவனுடைய நூல் தீயிட்டுக் கொளுத்தப் பட்டது. அவமானப்படுத்தப்பட்டான். நாடு கடத்தப்பட்டான். துன்பங்களை அனுபவித்தான். 

ஆனால், அவன் மறைந்ததற்குப் பிறகு, பிரெஞ்சு நாட்டில் புரட்சிக் கொடி ஒளி வீசிய போது, எங்கோ ஒரு மூலையில், யாரும் கேள்வி கேட்பார் அற்ற முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்த ரூசோவின் கல்லறை யைத் தோண்டி எடுத்து, அவனுடைய சவப்பெட்டியைக் கொண்டுவந்து, மேன்மக்கள் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுவந்து புதைத்தார்கள்.

எந்த சமுதாய ஒப்பந்தம் நூலைத் தீயிட்டுக் கொளுத்தினார்களோ, அந்த நூலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தார்கள். ரூசோவை அழிக்க முடிந்தது. அவன் தந்த சமுதாய ஒப்பந்தத்தை அழிக்க முடியவில்லை.

இந்த நூல்களை எல்லாம் படித்தேன். அதனால், என் நாட்டின் அடிமை விலங்குகளை உடைத்து எறிய நான் முடிவு எடுத்தேன் என்று சொன்னவன் ஹோ-சி-மின். வியட்நாமின் விடுதலைக்குக் களம் கண்டவன்.

 ‘வால்டேர், ரூசோவின் நூல்கள்தாம், விடுதலை தாகத்தை எனக்குள் ஏற்படுத்தின’ என்று சொன்னான்.

அதைப் போலத்தான், சரித்திரத்தைத் திகைக்க வைத்த புரட்சியைச் சீனத்திலே நடத்திக் காட்டிய மாவோ, 6000 மைல்கள் அடவிகளில் நடந்தானே, மரண வளையத்தை உடைத்து எறிந்துவிட்டுச் சென்றானே, குடியானவர்களைத் திரட்டி ஆயுதம் ஏந்தச் செய்தானே, அவன் ஒரு தலை சிறந்த எழுத்தாளன். அவன் தூக்கிய ஆயுதங்கள் அந்தப் புரட்சியில் வெற்றியைத் தேடித் தந்தது என்று சொல்வதைவிட, இரவு வேளைகளில் எல்லாம் சிமினி விளக்கை வைத்து மாவோ எழுதிய எழுத்துகள்தாம் புரட்சியைத் தூண்டின என்று சொல்லலாம். 

மாவோவின் மற்றொரு முகம் பலர் அறியாதது. 100 மலர்கள் பூக்கட்டும் ; 100 சிந்தனைகள் மலரட்டும் என்பது போல, மாவோ ஒரு சிந்தனையாளன். அவன் தந்தவை, சிந்தனைப் பேரருவி. கன்பூ´யசின் நூல்களைப் படித்தவன்; சன்-யாட்-சென் கருத்து களைப் பார்த்தவன். மார்க்சின் கருத்துகளை உணர்ந்தவன். 

லெனின் வகுத்த பாதையை அறிந்தவன். அதுபோலத் தனக்கு என்று ஒரு பாதையை வகுத்துக் கொண்டு, அதிலே பயணித்தான். செங்கொடியை ஏற்றினான் சீனத்தில். அந்தப் புரட்சிக்கு, அவனுடைய எழுத்துகளும், நூல்களும் துணையாக நின்றன.

அதைப் போலத்தான், பல நூறாண்டுகளாக, விலங்குகளை விடக் கேவலமாக, அடிமைத் தளைகளில் பூட்டப்பட்டு, சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்யப்பட்டார்களோ நீக்ரோக்கள், அவர்களுக்கும் ஒரு விடியல் வந்தது என்று ஸ்டாலின் குணசேகரன் இங்கே குறிப்பிட்டாரே, அந்த விடியலுக்குக் கையயழுத்து இட்டவன் ஆபிரகாம் லிங்கன். 1863 ஆம் ஆண்டு, ஜனவரி முதல் நாளில் அவன் இட்ட ஒரு கையயழுத்து, அதை அவன் எழுதுகிற போது, ஒரு கணம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

அருகில் இருந்தவர்கள் திகைத்து, என்ன? என்று கேட்டார்கள். இன்று, என் வாழ்வில் மாபெரும் திருநாள். அடிமைமுறையை ஒழிப்பதற்கான பிரகடனத்தில் என் கையயழுத்தை இடப் போகிறேன். பலரோடு கைகுலுக்கிக் களைத்துப் போய் வந்து இருக்கிறேன். சற்றே நடுக்கம் ஏற்பட்டு விட்டாலும், எனது கையயழுத்தில் ஒரு நடுக்கம் தெரிந்தாலும், இந்தப் பிரகடனத்தை வெளியிடுவதில், ஆபிரகாம் லிங்கனுக்குத் தயக்கம் இருந்தது என்று வருங் காலத்தில் யாராவது என்னை விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காக, நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் என்று லிங்கன் குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையின் தாழ்வாரத்தில் லிங்கன் நடந்து வருகின்ற போது, ஒரு பெண் அவரைச் சந்தித்தார்.

‘பெண்ணே நீ யார்?’ என்று கேட்டார் லிங்கன்

தன் பெயரை அந்தப் பெண் சொன்னார். ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் என்று சொன்னார்.

‘ஓ நீதானா அந்த பெண்மணி? அமெரிக்க உள்நாட்டு யுத்தத்துக்குக் காரணமான அந்தப் பெண்மணி?’ என்று கேட்டார்.

‘Uncle Toms Cabin’ என்ற ஒரு புத்தகத்தின் மூலமாக, கோடிக் கணக்கான இதயங்களை உலுக்கினார். அடிமை முறையை ஒழிப்பதற்கான அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு இந்த ஒரு நூல்தான் காரணம் என்று ஆபிரகாம் லிங்கன் சொல்லுகிறார்.

எழுத்துகள் எண்ணங்களை உருவாக்குகின்றன, புரட்சியைத் தூண்டுகின்றன. 27 ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் வாடி வதங்கியவர் மாமனிதர் நெல்சன் மண்டேலா. அவர் ஆயுதம் ஏந்திப் போராடியவர். 

ஆயுதப் போராட்டத்துக்காக ஆள் திரட்டியவர். அதை நியாயப்படுத்தி  நீதிமன்றத்திலே வாதிட்டவர். அவர் சொல்கிறார், ‘என் வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது ஒரு புத்தகம். அதை எழுதியவர் ஜான் ரஸ்கின். புத்தகத்தின் பெயர் கடையனுக்கும் கடைத்தேற்றம்’.‘Unto the last’ எவ்வளவு வியப்பாக இருக்கிறது?

அதே மண்டேலாவின் மனங்கவர்ந்த தலைவர், போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 

அண்மையில் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா சொல்லுகிறார், ‘காந்தியைப் பின்பற்றுங்கள்’ என்று. லிங்கனைத் தந்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிபர், ஆப்பிரிக்க நாடுகளில் உரையாற்றிவிட்டுச் செல்லுகிறார். அவர் காந்தியைப் பின்பற்றச் சொல்லு கிறார். (சங்கொலி, 20.08.2010).

காந்தியார்தான், ஆகஸ்ட் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். ஆம், நாளை விடிந்தால் ‘ஆகஸ்ட் புரட்சி’ வெடித்த நாள் (ஆகஸ்ட் 8, 1942). ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழக்கம் கேட்ட நாள். இந்த ஆகஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய போது, அண்ணல் காந்தியார் சொன்னார் : ‘என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைத் தந்தது, ஜான் ரஸ்கினின், கடையனின் தேற்றம்’.

# விநாயகம் கந்தசாமி

Tuesday, May 17, 2022

தமிழ் நாடு அரசு வெளியிட்ட முக்கியமான தொல்லியல் முடிவுகள்

 தமிழ்நாடு அரசு  மூன்று முக்கியமான தொல்லியல் முடிவுகளை வெளியிட்டது.

- சிவகளை மாணிக்கம்

1. கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை  பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

 *2. சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் சென்றிருக்கக்கூடிய செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றிருப்பதும்* *தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்த நீர் கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.* 

3. மூன்றாவதாக, தமிழ்நாட்டில்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் அகழாய்வுகள் மாநிலத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன.  இந்தத் தொல்லியல் மேட்டின் வாழ்விடப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், 104 செ.மீ. ஆழத்திலும் 130 செ.மீ. ஆழத்திலும் பல இரும்புப் பொருட்கள் கிடைத்தன. 

இந்த இரண்டு அடுக்குகளிலும் இருந்து பல கரிமப் பொருட்களும் கிடைத்தன. இதிலிருந்து இரண்டு கரிம மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு AMS (Accelerator Mass Spectrometry) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 1615 என்றும் மற்றொரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்றும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துவந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாநில தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

இந்தியாவில் இதுவரை இரும்புக்காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட 28 இடங்களில் ஏஎம்எஸ் காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த 28 முடிவுகளிலும் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறையில் கிடைத்துள்ள ஆண்டுக் கணிப்பே காலத்தால் முந்தியது என்கிறது மாநிலத் தொல்லியல் துறை.

விரிவான கட்டுரை: https://www.bbc.com/tamil/india-61395155

Monday, May 16, 2022

மணியரசனுக்கு கொளத்தூர் மணி பதில்

#அய்யா_பெ_மணியரசன்_அவர்களுக்கு,

#கழகத்_தலைவர்_தோழர்_கொளத்தூர்_மணி_அவர்களின்_பதில் !

கடந்த மே மூன்றாம் நாள், 

புலிகள் - திராவிட முன்னேற்ற கழகம் என்ற எதிரெதிர் விவாதங்கள் குறித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இப்படிப்பட்ட தேவையற்ற தரம் தாழ்ந்த விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று கூறி விடுக்கப்பட்ட அறிக்கையின் சில வரிகள் மீதான கேள்விகளை எழுப்பி, தோழர் - மன்னியுங்கள் - அய்யா மணியரசன் அவர்கள், "கொளத்தூர் மணியும், சுப.வீ.யும் பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?" என்ற தலைப்பில் நீண்டதொரு அறிக்கையை எழுதியுள்ளார்.

இறுதிப்பகுதியில் சில கேள்விகளையும் நம்மை நோக்கி வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை, இதுவரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா?

அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. இதுதான் பாஜக எதிர்ப்பு கூட்டணியா?

தோழர் கொளத்தூர் மணி கட்சி, பாஜக மதவாத எதிர்ப்பு வேலைத் திட்டம் தயாரித்து அதை பரிசீலித்து ஏற்குமாறு ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்குமா?

போன்ற கேள்விகளோடு முடித்திருக்கிறார்.

எப்போதுமே அய்யா பெ. மணியரசன் அவர்கள் கேள்விகளை எழுப்பி விடுவார். நாம் பதில் சொன்னால், அதற்கு எந்த விளக்கமும் எழுதமாட்டார். மாறாக, திசை திருப்பிவிட்டு வேறு ஏதாவது ஒன்றைப் பேசி அதை மறக்கடிக்கச் செய்து விடுவார்.

அது குஷ்பூ - கற்பு பற்றிய விவாதத்தின் போதானாலும் அல்லது 2016 ஆம் ஆண்டில் ஒரு மாத காலம் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மணியரசன் பதில் சொல்லுவாரா? என்று கேட்டு தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் எழுப்பிய கேள்விகளானாலும் இதுவரை பதிலோ, விளக்கமோ சொன்னதில்லை. 

தமிழறிஞர்கள்தான் சுயமரியாதைத் திருமணத்தை - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை - தமிழ்நாடு தமிழருக்கே போராட்டத்தைத் தொடங்கி வைத்தவர்கள் என்று பேசியதற்கு, நாம் ஒரு புத்தக வடிவில் பதில் சொல்லி இருந்தாலும், அது குறித்து மூச்சு கூட விட மாட்டார். ஆனால் அவ்வப்போது கேள்விகளை மட்டுமே எழுப்பி தனது தோழர்களை உற்சாகப்படுத்துவதில் மட்டும் மிக மிக உற்சாகமாக இருப்பார்.

நிற்க,

அக்கேள்விகளோடுகூட சில ஆய்வு முடிவுகளையும் அய்யா மணியரசன் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

"கொளத்தூர் மணி, சுப.வீ. போன்றவர்கள் நடைமுறையில் ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள்; பிரபாகரனை எவ்வளவு புகழ்ந்தாலும், ஈழத்தமிழர்களை எவ்வளவு ஆதரித்தாலும், அவர்களைத் திராவிட தத்துவத்திற்கும் திராவிட அரசியலுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

பிரபாகரன் என்ற படிமம் தமிழ் தேசியத்தின் வடிவமாகத்தான் காட்சியளிக்கிறது. எனவே பிரபாகரனைத் தூற்றுவோரை அரவணைக்க வேண்டும்" என்ற முடிவுக்குத் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சுப.வீ.யும் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது" 

என்பது ஓர் ஆய்வு முடிவு

அதைவிடவும், பெரியார் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கிக் கொள்வதற்காக, தந்திரமாக "நானே இந்தியாவுக்கு அடிமையாக இருக்கிறேன்; ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலைக்கு எப்படி உதவ முடியும்" என்று விடை கூறி, ஆதரவு தர மறுத்துள்ளார் என்பதையும் புலனாய்வு செய்து அறிவித்துள்ளார்.

முதல் வரியில் உள்ள 'உதவ முடியும்' என்ற சொல், அடுத்த வரியில் 'ஆதரவு தர மறுத்தார்' என்று மாற்றும் வல்லமை அய்யா மணியரசன் அவர்களைத் தவிர வேறு எவருக்கு வரும்?! 

அந்த காலகட்டத்தில் மட்டுமில்லை; அதற்குப் பின்னரும் ஒரு பத்து ஆண்டுகள் அகில இந்தியாவைத் தொடர்ந்து பேசி வந்த 'தமிழ்த்தேசியர்' 'அய்யா' மணியரசன் அவர்களுக்கு, வேறு சில கேள்விகளை இப்போது முன்வைக்க விரும்புகிறோம்

1) தமிழீழ விடுதலைக்கு ஆதரவுகூட தெரிவிக்காமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்ட பெரியாரின் திடலுக்கு 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை ஆணை பிறப்பிக்கப்பட்ட போதும், அவை ஒவ்வொரு முறையும் நீட்டித்த போதும் அந்த தடை ஆணைகளை, 'தமிழீழ விடுதலைப்புலிகள், மே/பா. பெரியார் திடல், சென்னை -7 ' என்ற முகவரிக்கு ஏன் அனுப்பப்படுகிறது?

2) 1983 ஆம் ஆண்டு எதற்காக திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய கி. வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், அனைத்து கட்சி, தரப்பு, உணர்வாளர்களையும் ஒன்றுதிரட்டி "தமிழீழ விடுதலை மாநாட்டை" இரண்டு நாட்கள் மதுரையில் எப்படி நடத்தினார்?

அந்த மாநாட்டுக்கு முன்னேற்பாடாக தமிழகத்தின் 6 முனைகளிலிருந்து திராவிடர் கழகத் தோழர்களைக் கொண்ட பரப்புரை குழுக்கள் 10 நாட்கள் தமிழகம் முழுதும் முழுதும் நடந்தே பரப்புரையை ஏன் நடத்த வைத்தார்?

3) திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், எவ்வாறு புலிகளுக்குப் பயிற்சிப் பாசறை க்கான இடங்களை அளித்தும், நிதி திரட்டியும், ஆயுத உற்பத்திக்கு ஆன ஏற்பாடுகளை செய்து கொடுத்தும், தமிழகமெங்கும் ஈழவிடுதலை கண்காட்சிகளையும் ஏன் நடத்தினார்கள்? 

ஜெயவர்த்தனே தில்லிக்கு வந்தபோதும், பெங்களூர் வந்தபோதும் ஏன் போராட்டம் நடத்தினார்கள்?

ஆகிய கேள்விகளுக்கும் விடையளித்து இவை குறித்த ஆய்வு முடிவுகளையும் விரைவில் அறிவிப்பார் என்றும் ஆவலுடன் எதிர் பார்ப்போமாக!

ஒருவேளை, தமிழ்த் தேசியத்தின் மீது அவ்வளவு வெறுப்புடன் இருந்த - தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்காமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்ட - பெரியார் அறிவித்ததை போல 

"தமிழ்நாடு தமிழருக்கே" என்று அறிவித்துவிட்டும்,

அவரது 'விடுதலை' ஏட்டில் செய்ததைப் போல - 1956-ஆம் ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டு அவசரகால நிலை காலத்தில் தடை செய்கிறவரை ஏட்டின் தலைப்பில் வெளியிட்டு வந்ததைப் போல "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை தன்னுடைய 'தமிழ்தேசிய கண்ணோட்டத்'திலும் அட்டையிலேயே வெளியிட்டுவிட்டும், -

தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபடத்தை எரித்துவிட்டும், - இந்தி எதிர்ப்புக்காக இந்திய தேசியக் கொடியை எரித்து விட்டும்,

அந்த ஆய்வு முடிவுகளையும் கேள்விக்கான விடைகளையும் அறிவிப்பார் என்ற உறுதியான நம்பிக்கையோடு, இப்போதைக்கு இந்த அறிக்கையை நிறைவு செய்கிறேன்.

அய்யா மணியரசன் அவர்களுடைய ஆய்வு முடிவுகள், விடை ஆகியவை வந்தாலும் வராவிட்டாலும் ஊரடங்கு காலம் முடிந்ததும், எங்களுடைய ஏடான 'புரட்சிப் பெரியார் முழக்கத்'தின் வழியாக பிறவற்றையும் எழுதுவோம் என்பதைக் கூறி இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன்

#கொளத்தூர்_மணி,

#தலைவர்,

#திராவிடர்_விடுதலைக்_கழகம்

15.05.2020

Friday, May 13, 2022

எச். ராஜா பற்றி பாலசுப்பிரமணியன்

 நம்பிய தொண்டர்களின் மாசற்ற அன்பை வைத்து பண மகசூல் செய்யும் மாமா,மருமகனின் குடும்ப அரசியல்...

1988 ஆம் ஆண்டு ஒரு ஓட்டை பஜாஜ் ஸ்கூட்டருடன் காரைக்குடி, சுப்பிரமணியபுரத்தில் 9 ஆவது வீதியில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த ஹெச். ராஜா இன்று மருமகனோடு பல நூறு கோடிக்கு அதிபதி.

உழைப்பில் வந்தால் தவறு இல்லை.

ஆனால் படித்தும் பாவம் செய்த பணம்.

1988 ஆம் வருடம் ஸ்ரீ ரமணி ஐயர், 

1993 ஆம் வருடம் பத்மனாதன் ஐயர்,

2001 ஸ்ரீதரன் ஐயர்,

2002 சந்திரசேகரன் ஐயர்,

பின்னர் 2002 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஹெச்.ராஜா வின் மைத்துனர் சபேசன் ஐயர்.இவர்கள்தான் H.ராஜா உடன் குடும்ப அரசியலில் பயணித்தவர்களின் வரிசைப் பட்டியல்.


அதன் பிறகு 2014 முதல் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான ஹெச். ராஜா வின் மருமகன் சூரியநாரயணன் சிவகங்கை மாவட்ட பாஜக வில் பலரை அரசியல் ரீதியாக ஒழித்ததுடன் கோடிகளை தான் சேர்க்கவில்லை என்பதை மறுக்கவே இயலாது.

லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிடெட் கம்பெனி1995 ஆண்டில் தொடங்கப் பட்டது.

அப்போது H.ராஜா மாநிலச் செயலாளர்.

லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியின் டைரக்டர் H.ராஜா.

இதன் முக்கிய டைரக்டர் ராமச்சந்திரன்.

இவர் H.ராஜா வின் மைத்துனர்.

திருச்சி பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் சிறிது சிறிதாக சேர்த்து ரூ10,50,000 பணம் டெபாசிட் செய்தனர். இவர் திருச்சி பாஜக மாவட்டச் செயலாளர். 2004 ஆண்டில் பணத்தை திரும்ப கேட்கின்றனர் திருச்சி பாஜக பழனியப்பன்-ரேவதி தம்பதிகள். இன்று தருகிறேன்,நாளை தருகிறேன் என்று அவர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். ராஜாவின் மைத்துனர் ராமச்சந்திரன் செக் கொடுத்து சமாளிக்கிறார். செக் ரிட்டன் ஆகிறது. H.ராஜாவிடம் ஞாயம் கேட்கின்றனர். பணம் வராமல் இருக்கவே H.ராஜா வீட்டு முன் திருச்சி மாவட்ட பாஜக செயளாளர் தம்பதியர் சகிதமாக தர்ணா செய்கின்றனர். 

காரைக்குடி லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிடெட் கம்பெனியில் முதலீடு செய்த பாஜக பழனியப்பன் 200 தடவைக்கு மேல் பயணம்  செய்து H. ராஜாவை சந்திக்க நடையாய் நடக்கிறார்.

ராமச்சந்திரன் தலை மறைவானார்.

இந்த கம்பெனியின் ஆடிட்டர் மதுரையை சேர்ந்த முரளியிடம் கேட்டுக் கொள்ளலாம்.

http://www.mycorporateinfo.com/business/lotus-benefit-fund-ltd

https://moonchronicles.tumblr.com/post/164930399289/h-raja-and-the-lotus-benefit-fund-fiasco

இதில் ஆனந்த விகடன் லிங்க் உள்ளது.

அதிகாரம் வந்த பிறகு தம்பதியர்களின் பேட்டி அழிக்கப்பட்ட யூ டியூப் லிங்க் இதில் உள்ளது.

தாமரை என்ற பா.ஜ.க கட்சி சார்ந்த பெயர்களை வைத்து தொழில் மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார் ஹெச். ராஜா என்று செக்காலைத் தெரு மக்களின் குற்றச்சாட்டை இன்றும் இன்றும் பலமாக ஒலிக்கிறது.

2013 ஆண்டில் சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் சிப்காட் எஸ்டேட் ராமன் அவர்கள்  தன்னை நம்பி விற்பனை செய்ய H.ராஜாவிடம் நிலங்களை கொடுக்கிறார். அந்த இடத்தில் அட்வான்ஸ் வாங்கியதை கூட ராமனிடம் சொல்லாமல் அதை ரொட்டேஷன் மோசடி செய்து பெரிய பஞ்சாயத்து ஆகி அது கோர்ட் வரை போய் கட்டாய பஞ்சாயத்து முடிவாகி கேவலம் ஆனதை இல்லை என்று ஹெச்.ராஜாவால் மறுக்க இயலுமா?.


கோயம்புத்தூரில் 2015 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட  ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் பவுண்டேசன் HOLISTIC HEALTH CARE FOUNDATION LLP நிறுவனம்.

என்ற கம்பெனியில் ஹெச்.ராஜாவின் மருமகன் ஆர்எஸ்எஸ் சூர்யா இயக்குநர் ஆகும் அளவுக்கு உயர்ந்தது எப்படி ?. ஹெச். ராஜா இதை இல்லை என்று மறுப்பாரா ?. மறுக்கதான் முடியுமா?.

இதோ ஆதாரம்.

https://www.zaubacorp.com/company/HOLISTIC-HEALTH-CARE-FOUNDATION-LLP/AAD-1846

இந்த “ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் பவுண்டேசன் “ என்ற நிறுவனத்தின் பங்குதாரரில் ஒருவரான கோபால் ரத்தினம் குப்தா மோகன் பிரசாத் என்பவர் பிரபல தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் ஒரு டைரக்டர். 

காரைக்குடியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் H.ராஜா மருமகன் ஆர்எஸ்எஸ் சூரியநாராயணன் ராமதாஸ் உடன் ஒரு தனியார் வங்கியின் இயக்குனரே பங்குதாரராக இணையும் அதிசய பார்முலாவை பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா இந்திய மக்களுக்கு விளக்குவாரா ?.

மதுரை,பெரம்பலூர், சென்னை, கோயம்புத்தூர், கொச்சி ஆகிய நகரங்களில் பினாமி உறவுகள் பெயரிலும் சொத்துகள் வாங்கியது எப்படி என்று ஹெச். ராஜா விளக்குவாரா ?.

தாமரை இன்ஃபோ மீடியா பிரைவேட் லிமிடெட் - இது ஒரு டிவி கம்பெனி.

H.ராஜா மருமகன் ஆர்எஸ்எஸ் சூரிய நாராயணன் ராமதாஸ் சென்னையில் ஹெச்.ராஜா  குடியிருக்கும் வட பழனி வீட்டு விலாசத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்த நிறுவனம் “தாமரை இன்போ மீடியா பிரைவேட் லிட்”.

மருமகன் ஆர்எஸ்எஸ் சூர்யா ஒரு டைரக்டர்.

ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி மற்றொரு டைரக்டர்.

மாமனார் தேசியச் செயலாளர் H.ராஜா அதிகாரப்பூர்வமான ஆலோசகர்.

ஒரு ஷேர் விலை 20 லட்சம்.

200 பேரிடம் ரூ 20 லட்சம் வீதம் ஷேர் வசூல்.

40 கோடி மொத்தம் வசூல் செய்ய வேண்டும்.

தந்தி டிவிக்கு தினத்தந்தி விளம்பரம் போகாவிடில் அதுவே இழுபறி நிலமையாக உள்ளது. 

பெரிய லாபமும் இல்லை.

மற்ற டிவி முதலீடு கதை ஒரு பக்கம்.

இவர்கள் எல்லாம் நஷ்டம் அடைந்தால் ஒரு கம்பெனி வருமானத்தை இன்னொன்றில் போட்டு இன்னொன்றில் பெரிதாக எடுப்பார்கள்!!.

இப்படி உள்ள நிலையில் மாமா ஹெச்.ராஜா தனது ஆர்எஸ்எஸ் மருமகன் சூர்யா நாராயணன் காரைக்குடியில் 8x6 அளவுள்ள கடையில் ஒரு ஜெராக்ஸ் மற்றும் இரண்டு கம்ப்யூட்டரை வைத்து உழைத்துதான் இவைகளை ஈட்டினார் என்று உறுதி சொல்வாரா?.

லோட்டஸ் பெனிபிட் பண்ட் போலவேதான் தாமரை டிவி முடிவும் வரும்.

அன்று மைத்துனர் ராமச்சந்திரன்.

இன்று மருமகன் ஆர்எஸ்எஸ் சூரிய நாராயணன். 

வித்தியாசம் அவ்வளவுதான்.

சரி.காரைக்குடியில் கட்சியை வளர்க்க தனது கைத்தடிகளாக இருந்தவர் முழுவதும் தனது உறவினர். 

அப்புறம் லோட்டஸ் பெனிபிட்டில் ஒரு மைத்துனர்.

அப்பறம் தாமரை டிவியில் ஆர்எஸ்எஸ் மருமகன்.

திமுக வை குடும்ப சொத்து என்று பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?!.

உங்கள் தொழில்களை வளர்க்கும் ஆர்வத்திற்கு தொண்டர்கள் மோசடி மன்னன் ப.சிதம்பரத்திடம் தோற்று அவமானப் படணுமா?!.

அடுத்து H.R.மூவ்மென்ட் என்று கோவில்களை காப்பதாக சொல்லி மாயமாக புறப்பட்டீர்கள்!!

ஒரு பிராமணனாக இருந்து வழி காட்ட வேண்டிய நீங்கள் மேல் மருவத்தூர் சரக்கு சாமிக்கு சால்வை போட்டு காலில் விழுகிறீர்கள்.

H.R. மூவ்மென்டுக்கு ரதம் வேண்டும் என செக்ஸ் நித்யானந்தாவின் காலைப் பிடிக்கிறீர்கள். அதற்கு அறுபடை வீடு ரதம்,வேல் ரதம் என்று சாகசம் காட்டினீர்கள்.

மற்ற தெய்வம் போல் இல்லை நம் முருகர். இந்த ஆண்டு நீங்கள் 1000 நித்யானந்தாக்களை வைத்து இருந்தாலும் முருகர் பெயரை சொல்லி இவைகளை மீண்டும் நடத்த முடிந்ததா??. முருகரை வெற்று பப்ளிசிடிக்கு உபயோகிப்பவர்கள் வேலுக்கும்,மயிலுக்கும் பதில் கூறவே இயலாது. 

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துகிறீர்கள். அங்கு உங்கள் குரு மாஸ்டர் துக்ளக் பனியன்களை அணிய வைத்து கூர்காக்களை வைத்து வேவு பார்க்கிறார்.

ஒவ்வொரு கோவில் பட்டியலையும் சிலைகள்,நிலங்கள் உட்பட அத்தனை விவரங்களையும் சேகரித்து பெங்களூர் வேணு சீனிவாசன் தங்கைக்கு அனுப்புகிறீர்கள். அந்த கோவில் சொத்துகள் கொள்ளை அழிக்கப்படும்.

இதுவே உங்கள் H.R.மூவ்மென்ட்.

நல்ல விஷயமான அறநிலையத் துறையை விட்டு வெளியேறு என கத்தணும். அதை பிடுங்கி டிவிஎஸ் கையில் ஒப்படைக்கணும்.

இதற்கும், உங்க தொழிலுக்கும் சேர்த்து உங்க கூட K.T. ராகவனையும் அழைத்துச் செல்கிறீர்கள். T.R.ரமேஷும் வருகிறார்.

இதற்கு முதலீடு பெங்களூர் சிலை திருடர்கள்தானே.

HR Movement சாக்கிய பௌத்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மற்றொரு புற வாசல் பரிவார்.

பாஸ்...போதும் உங்கள் நாடகம்.

அன்று இல.கணேசன் காலத்தில்

உங்களிடம் ஒரு தொண்டன் வந்து H.ராஜாவிடம் இல.கணேசன் பற்றி சொல்வார். உடனே இல.கணேசனிடம் சொல்லி கொடுத்து விடுவார்கள். இப்போது பொன்.ராதாகிருஷ்ணனை பற்றி H.ராஜாவிடம் புகார் சொன்னால் பொன்.ராதாகிருஷ்ணனிடமே போட்டு கொடுத்து காலி செய்து விடுகிறீர்கள். பொன்.ராதாவிடம் H.ராஜா ஏரியா புகார்கள் வருவதை அவர் இவரிடம் காட்டி கொடுப்பார். எல்லோரும் ஆளாளுக்கு பாஜக தொண்டனை பஞ்சர் செய்து ஓட ஓட விரட்டினால் அவர்கள் எங்கேபா போவார்கள்?.

என்றைக்காவது ஒரு நாள் உங்க சக செத்துப் போன ஆடிட்டர் ரமேஷ் வழக்கை பார்த்தீர்களா?. ஒரு நாளாவது அந்த வீட்டை எட்டி பார்த்தீர்களா?.

மாட்டீர்கள். 

எல்லாம் சுய நலம் .

மருமகனுக்கும்,மாமனாருக்கும் பைசா வண்டி உருளணும். அவ்வளவுதான்.

ஆனால் தொண்டர்கள் உங்களுக்கு பாரத் மாதா கீ ஜெய் போட்டு விட்டு உங்க பின்னாடியே ஓடி வரணும்.

குரும்பூரில் மோகன் சி லாசரஸ் ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பை பெற்றுக் கொண்டு அங்கு உள்ள ஆனந்த விநாயகரை இடிக்க துணிந்தனர். அங்கு நண்பர்கள் இதை தடுக்க பலவாறு போராடினார்கள். சென்னை வரை போய் இந்த இந்து தர்மப் போராளியை சிந்த்திக்க துணிந்தனர். எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று போட்டோ எல்லாம் பிடிச்சாச்சு. கோவிலை உடைக்க JCB வரப் போகிறது என தகவல் வந்த உடன் இந்த இந்து தர்ம போராளியை எல்லோரும் தொடர்பு கொண்டனர். போனை எடுக்கவே இல்லை. உடனே நான் தொடர்பு கொண்டேன். விட்டிருவோமா...நான் உடன் ஸ்பாட் போகிறேன்...அல்லது ஆவன செய்கிறேன் என்று உதார் விட்டார்.வரவும் இல்லை. பிறகு என் போனையும் எடுப்பதில்லை. என் போனை எடுக்க வேண்டாம். ஆனால் ஆனந்த விநாயகர் கோவிலை லாசரஸ் இடிக்க வரும் போது இந்த தர்ம போராளி ஓடுவார். அப்புறம் ஏ...லாசரஸ் என்று கூப்பாடும் போடுவார்.  ஆனால் ரயில்வே கமிட்டியில் இருந்தாலும் ஆனந்த விநாயகருக்கே எதுவும் செய்ய மாட்டார்.

ஆனால் இவரை இந்து தர்ம போராளின்னு ஊரே சொல்லணும். 

https://m.facebook.com/story.php?story_fbid=1041046586053966&id=100004459025108

ஆனால் ஸ்கூல் அட்மிஷன்,காலேஜ் அட்மிஷன், வங்கி பிரச்சனைன்னு சொல்லுங்க...அதற்கு கட்சி நிர்வாகிகளை புரோக்கர் ஆக்கி வச்சு சம்பாதிக்க ஓடோடி வருகிறார். 5 லட்சம் வாங்கு. 2 லட்சம் உனக்கு...3 லட்சம் எனக்கு...இதுதான் இந்து தர்ம போராளி டீலிங். இந்த புரோக்கர் வேலை டீலிங் பூரா வசூல் ராஜா மருமகன் சூர்யாதான். இத்தனை கம்பெனிகளுக்கு டைரக்டர் ஆன பிறகும் எச்சில் மிட்டாய் பரோக்கர் வியாபாரம் நின்றபாடு இல்லை. தொண்டர் எவருக்கும் கமிஷன் தவிர எதுவும் செய்த வரலாறும் இல்லை.

இதே சூர்யா அவர்கள் என்னிடம் மாமா வீட்டை உடைத்து யாரோ வந்தார்கள். மனசு சரி இல்லை,ஏதாவது திருச்செந்தூரில் பூஜை செய்ய வேண்டும் என்றார். அடுத்த ஒரு சில நாளில் குடும்பத்தோடு என் வீட்டுக்கு வர வைத்து கந்த புராண மந்திரத்தை வைத்து சிறந்த பூஜை நடத்தினோம். தேசிய செயலாளர் ஆனார். ஆனால் ஆனந்த விநாயகரை காக்க வர மாட்டார். ஆனால் H.R.மூவ்மென்டில் ஆலய பாதுகாப்பு என்று கதறுவார்.

இந்துத்துவா,இந்து ராஷ்ட்ரம், இஸ்லாம், கிறிஸ்தவர்கள் என வீர வசனத்திற்கு மட்டும் சற்றும் பஞ்சமே இருக்காது. இந்து இந்து என கதறிக் கொண்டு கோர்ட்டில் H.ராஜா மன்னிப்பு கேட்க மட்டும் ரபு மனோகர் என்ற கிறிஸ்தவ வக்கீல் இவருக்கு ஆஜர் ஆவராம்.

கார்த்திக் சிதம்பரம் கூட மோதியதை போல ஒரு லட்டு வேட்பாளர் இவருக்கு இனியும் கிடைக்குமா?!. தேர்தலில் தோற்றால் எல்லோருக்கும் பண லட்சுமி குறையும். இவருக்கு ப.சிதம்பரம் மகனை எதிர்தாலும் லட்சுமி கூடிக் கொண்டே இருக்கிறாளே எப்படி மாமா மருமகனே?!.

எளிமையான ஆர்எஸ்எஸ் மனிதர் H.ராஜா, எளிமையான ஆர்எஸ்எஸ் மனிதர் H.ராஜாவோட அப்பா, எளிமையான H.ராஜாவோட மருமகன் சூர்யா என்றுதானே பழகினோம்!. சாக்கிய பௌத்த யூத டெக்னிக் இப்படிதான் என்று மேலும் தெரிந்து கொண்டேன். வசூல் சிஷயர்களை தவிர கோஷம் போடும் தொண்டர்களுக்கு இங்கு மதிப்பே கிடையாது.

முருகா...வெறி ஊட்டப்பட்டு ஏன் செத்தோம் என்று தெரியாத 400 பேருக்கு மேற்பட்ட ஆன்மாவையும் சாந்தி அடைய வைத்து எஞ்சிய குடும்பத்தினரையும் காப்பாயாக.

மொத்தத்தில் ஒரு எளிமையாளன் என்று பழகியதில் இத்தனை நாசகார முகமூடியா?!..

எங்கு நோக்கினும் சகதி யடா!!. 

Zylog வழக்கை விடாதே,

வானதியை விடாதே என்று என்னை உசுப்பி விட்டு வானதியோடு அடங்கிப் போவது.

பொன்.ராதாகிருஷ்ணனை விடாதே புடி என்பது. 

பின் அவருடன் அடங்கிப் போவது.

இதுதான் தேசியத்தை காக்க புறப்பட்டு வந்த வசூல் ராஜா.


நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை

ஓம் முருகா

பாலசுப்பிரமணியம் ஆதித்தன், 18.6.2019

பகிர்வோம்.

பெரியார் திடலில்

ஆனந்த விகடன் இதழின் பொக்கிஷம் பகுதியிலிருந்து...

வேப்பேரியில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் அருகில் ரண்டால்ஸ் ரோட்டில் உள்ள பெரியார் திடலில், பெரியார் ஈ.வெ.ரா. அடக்கம் செய்யப்பட்டதற்கு மறுநாள் - காலை 9 மணி. சிங்கம் உலாவிய குகை ஒன்றைப் பார்ப்பதுபோன்ற உணர்ச்சி ஏற்படுகிறது...

திடலில் கூட்டங்கள் நடக்கும் கொட்டகைக்கு வலதுபுற மூலையில் பெரியார் நினைவுச் சின்னம் இருக்கிறது. ஓர் ஓரத்தில் பெரியார் கடைசியாகப் பயன்படுத்திய 9595 எண் உள்ள வேன் நிற்கிறது. வேனுக்கு மேல் சக்கர நாற்காலி மடங்கிக்கிடக்கிறது. ஆகஸ்ட் மாதம் பெரியாருக்கு இந்த வேன் வழங்கப்பட்டது. வேனின் ஒரு கதவை மேடைபோல மாற்றி, பொதுக் கூட்டங்களில் அதிலேயே அமர்ந்து அவர் பேச வசதி செய்யப்பட்டு இருந்தது. 19-ம் தேதி தி.நகரில் கடைசியாக நடந்த பொதுக் கூட்டத்தில், இந்த வேனில் அமர்ந்துதான் பேசினார் பெரியார்.

பேச்சின் இடையில் திடீரென்று அவர், ''ஐயோ... அம்மா...'' என்று உரத்த குரலில் வலி தாங்காமல் வேதனையுடன் கூவினார். கூட்டமே திடுக்கிட்டு ''என்ன... என்ன?'' என்று வேனை நோக்கிப் பாய்ந்தது. ஆனால், பிறகு பெரியார் எப்படியோ சமாளித்துக்கொண்டு நீண்ட நேரம் பேசினார்.

''பங்களா வேண்டாம்!''

பெரியார், ஹெச்.டி.ராஜா, ஜி.டி.நாயுடு மூவரும் சேர்ந்து வாங்கிப் பகிர்ந்துகொண்ட இடத்தில் பெரியார் திடல் உருவானது. 'விடுதலை’ அலுவலகம் அங்கேதான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியிலேயே பெரியார் இல்லம் இருக்கிறது. திடலில் நுழைந்ததும் கட்டிலில் பெரியார் அமர்ந்திருக்கும் காட்சிதான் முதலில் கண்ணில் படும்.

சிந்தாதிரிப்பேட்டையிலும் பெரியாருக்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கே சந்தடி அதிகம் என்று அவர் தங்குவதற்காகப் பெரியார் திடலிலேயே பெரிய பங்களா ஒன்று கட்டப்பட்டது.

பெரியார் அந்த பங்களாவை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டார். ''இவ்வளவு பெரிய பங்களா எனக்கு எதற்கு?'' என்று அங்கே தங்க மறுத்துவிட்டார். பிறகு, விடுதலை அலுவலகத்தின் ஒரு பகுதியே இல்லமாயிற்று. பெரியார் தங்கியிருந்த இடம் எளிமையாகக் காட்சி தருகிறது. காலியாக உள்ள பெரியார் கட்டிலின் எதிரே, சோகமே உருவாக மணியம்மை அமர்ந்திருந்தார்.

பல் கிடையாது...

பொதுக் கூட்டங்கள் இல்லாத நாட்களில் இரவு 7-30 மணிக்குப் படுக்கச் சென்றுவிடுவார் பெரியார். காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவார். கொதிக்கக் கொதிக்க ஒரு கப் காபி சாப்பிடுவார். பிறகு, சற்று நேரம் கழித்து இரண்டு இட்லி, மலைப்பழம் சாப்பிடுவார். பழங்களில் மலைப்பழம்தான் பெரியாருக்குப் பிடித்தது. பிற்பகல் 12 மணிக்குக் குறைவான சோறுடன் மட்டன் சாப்பிடுவார். சாதம் குழைவாக இருக்க வேண்டும். மட்டன் நன்றாகப் பக்குவம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு மூன்று கறி வகைகள் கூடாது. ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும்.

சரியாக 2.30 மணிக்கு 'அம்மா’ என்று மணியம்மைக்குக் குரல் கொடுப்பார். காபி வர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு காபிதான். இடையே வேறு எதுவும் சாப்பிட மாட்டார். ஆனால், கழகத் தொண்டர்கள் அன்புடன் கொடுப்பதை மட்டும் சாப்பிடுவது உண்டு. ஒரு வேளைதான் சாப்பாடு. உணவுக்குப் பிறகு, கட்டித் தயிரில் சர்க்கரை போட்டுச் சாப்பிடுவார். இனிப்புகளை பெரியார் நிறையச் சாப்பிடுவார். இறுதி வரை அவருக்கு சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ வரவில்லை. ஹெர்னியா தொல்லை மட்டும் பல ஆண்டுகளாக இருந்தது.

பெரியாருக்குப் பற்கள் கிடையாது. ஆனால், அவர் பேசுவதையோ, சாப்பிடுவதையோ பார்த்தால் அது தெரியாது. ஈறு பலமாக இருந்தது. முறுக்குகளைக்கூட பெரியார் மென்று சாப்பிடுவார்.

கடைசி நாட்கள்...

டிசம்பர் 21-ம் தேதி வட ஆற்காடு பயணம் தொடங்க இருந்தார் பெரியார். ஆனால், 20-ம் தேதி பிற்பகல், ஹெர்னியா தொல்லையால் வலி கண்டு சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அச்சமே இல்லாத பெரியாருக்கு, ஊசி குத்திக் கொள்வது என்றால் மட்டும் குழந்தைகளைப் போலப் பயம். ''பார்த்துக் குத்துங்க...'' என்று சொல்வார். சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவுடன், அந்த அறையில் இதற்கு முன்பு யார் இருந்தார்கள், அந்த நபருக்கு என்ன சிகிச்சை நடந்தது என்றெல்லாம் விசாரித்துஇருக்கிறார். ஏனோ, வேலூருக்குச் சென்று சிகிச்சை பெறவே அவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே, 21-ம் தேதி பிற்பகல் வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.

வேலூரில் சேர்த்தவுடன் ஓர் இன்ஜெக்ஷன் போட்டிருக்கிறார் டாக்டர் பட். உணவு, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அன்று இரவு நன்றா கத் தூங்கியிருக்கிறார். மறுநாள் 22-ம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்து, பேப்பர்களைப் படித்திருக்கிறார். ஹார்லிக்ஸ் சாப்பிட்டார். தூங்குவதற்காகத் தூக்க மருந்து கலந்த ஊசி போடப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு 'வீரமணி’ என்று அழைத்து, வயிற்றில் வலி மிகுதியாக இருப்பதாக டாக்டரிடம் சொல்லும்படி கூறி இருக்கிறார். வீரமணி டாக்டரை அழைத்து வந்தார். வாயு வினால் வலி இருக்கலாம் என்றும், எனிமா கொடுத்து வயிற்றைக் காலிசெய்தால் சரியாகும் என்றும் கூறிய டாக்டர், எனிமா கொடுத்தார். வயிறு சுத்தமான பிறகு, பெரியாருக்கு வலி குறைந்திருக்கிறது. அன்று இரவு 8 மணி வரை சரியாக இருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு பெரியாருக்குத் திடீரென்று மூச்சு வாங்கியது. தூங்கும்போது வாய் மூலம் சுவாசிக்கும் பழக்கம் உள்ளவர் பெரியார். அதனால் தொண்டைச் சளி கட்டிக்கொண்டு சிரமப்பட்டு இருக்கிறார். டாக்டர் இன்ஜெக்ஷன் கொடுத்தவுடன் சற்று சரியாயிற்று.

23-ம் தேதி தூக்க மருந்து கொடுக்கப்பட்டதால் தூக்க நிலையில் இருந்திருக்கிறார். ஆனால், உணர்வு இழக்கவில்லை. மணியம்மை குளுகோஸ் கொடுத்தபோது, 'என்ன அய்யா, வாயில ஊத்தணுமா? நீங்களே கையில எப்பவும் மாதிரி வாங்கிச் சாப்பிடுங்களேன்’ என்று கூறியபோது, பெரியார் கையில் வாங்கி குளுகோஸ் குடித்தார். புரை ஏறியிருக்கிறது. தலையில் தட்டிக்கொண்டார். 'எதையாவது சாப்பிட்டால் தாடியை அழுத்தமாகத் துடைத்துக்கொள்வதுபோல அப்போதும் துடைத்துக்கொண்டார்’ என்றார் வீரமணி.

23-ம் தேதி இரவு மூச்சு வாங்க ஆரம்பித்தது. பல முறை பேசி கெஞ்சிக் கெஞ்சி ஆக்ஸிஜன் டியூப்பை பெரியாரின் மூக்கில் வைத்தார் டாக்டர் ஜான்சன். ஆனால், பெரியார் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டார். கடைசியில் முகமூடி போன்று இருக்கும் ஆக்ஸிஜன் குழாயைப் பொருத்தினார்கள்.

24-ம் தேதி துயரம் மிக்க அந்தப் பொழுது விடிந்தது. 'பல்ஸ்’ குறைந்து டாக்டர்கள் நம்பிக்கை இழந்தார்கள். காலை 7-10 மணிக்கு மசாஜ் செய்து, இதயத்தை இயங்கச் செய்ய முயன்றார்கள். நேரிடையாக இதயத்துக்கு ஊசி போட்டார்கள். 7.22-க்கு பெரியாரின் உயிர் மெதுவாகப் பிரிந்தது.

''யார் இறந்தாலும் அழக் கூடாது என்பது அய்யாவின் கொள்கை. உயிர் பிரிந்த அய்யாவின் சடலத்தை அம்மா (மணியம்மை) அவர்கள் அப்படியே சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். பின்னர், 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் அய்யா அவர்கள் அவருக்கு அளித்த புடவையை எடுத்துவந்து, அவர் கால் மீது வைத்துவிட்டு அப்படியே நின்றார். அவர்கள் அப்படி நிற்பதைக் கண்டு சம்பத் உட்பட நாங்களும் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றோம். அங்கே பேரமைதி நிலவியது. பிறகு, அந்தப் புடைவையைக் காலடியில் இருந்து எடுத்து உடனே உடுத்திக்கொண்டார். எல்லோ ரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, பெரியாருடைய கறுப்புச் சட்டையையும் கைலி யையும் கொண்டுவரச் செய்து, அவற்றை அய்யா அவர்களுக்கு அணிவித்தார். பெரியார் உடல் அருகே அசையாமல் அமர்ந்திருந்த அம்மா, வேனில் உடலை ஏற்றி வேலூரைவிட்டுப் புறப்பட்டவுடன் துக்கம் தாளாமல் கணவரின் காலடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு கதறித் தீர்த்துவிட்டார்.''

உணர்ச்சிமிக்க இந்த நிகழ்ச்சியைக் கண்கள் கலங்கக் கூறினார் விடுதலை வீரமணி

Wednesday, May 11, 2022

நாகம்மையார் மறைவு

 ''முதல் வரியை வாசித்ததும் இரண்டாம் வரியில் இருந்து அவர் அப்படியே திரும்பச் சொல்லத் தொடங்கினார்.''

“நாங்கள் சேர்த்துவைத்திருந்த பெரியாரின் கட்டுரைகளில் இரங்கல் கடிதங்கள் என்று ஒரு பகுதி உண்டு. அதில் நாகம்மை மறைவுக்கு எழுதியதைச் சேர்க்கலாமே என்றார் பெரியார்.  அது எப்படியோ விடுபட்டுப் போயிருந்தது.  மறுநாளே தேடி எடுத்து அந்தக் கட்டுரையைக் கொண்டு போனேன்; அதை வாசிக்கச் சொன்னார்.    

முதல் வரியை வாசித்ததும் இரண்டாம் வரியில் இருந்து அவர் அப்படியே திரும்பச் சொல்லத் தொடங்கினார். 

'‘நாகம்மை இறந்துபோனதை ஒரு துணை போயிற்று என்று சொல்வேனா? ஓர் அமைச்சு போயிற்று என்று சொல்வேனா? ஓர் அடிமை போயிற்று என்று சொல்வேனா?  எல்லாம் போயிற்று என்று சொல்வேனா?..’ என நினைவில் இருந்து சொல்லத் தொடங்கி விட்டார்.தம் தழுதழுத்த குரலில் இப்படிச் சொல்லி முடித்துவிட்டுக் கண்கலங்கினார் பெரியார்.   

நாகம்மை இறந்தது 1933இல்.நான் இதை வாசித்துக் காண்பித்தது 1973இல் .  ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள்.''  

-  15.11.2009 அன்று வெளிவந்த தினமணி கதிர் இதழில் வே.ஆனைமுத்து அவர்கள்.

Tuesday, May 10, 2022

கவிஞர் கருணானந்தம் எழுதிய பெரியார் வரலாறு

தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு - கவிஞர் கருணானந்தம் - முதற் பதிப்பு 1979 - மூன்றாம் பதிப்பு 2022 - தமிழ்க் குடிஅரசு பதிப்பகம் - பக்கங்கள் 776 - விலை ₹ 600/

●  தந்தை பெரியார் ஒரு சுய சிந்தனையாளர்; சுய மரியாதைக்காரர்; சுய படைப்பாளர்; சுய ஒழுக்க சீலர்; சுய வழிகாட்டி ! தனது வாழ்நாள் முழுவதும் பேசியதும் எழுதியதும் - குடிஅரசு, விடுதலை, உண்மை இதழ்களில் வெளியாகி இன்றும் ஆவணங்களாக பாதுகாக்கப் படுகின்றன. இருப்பினும் அவரின் சுயசரிதையை பெரியார் எழுதாமல் போய்விட்டார் !

●  பெரியாரின் ஆரம்ப கால அறுபது ஆண்டுகள் (1879 - 1939) வரலாற்றை, ' தமிழர் தலைவர் ' என்ற நூலை  சாமி.சிதம்பரனார் மிகவும் சிறப்பாக எழுதி, பெரியாரிடமே காட்டி ஒப்புதல் பெற்று வெளியிட்டார். பின்பு அவரது இறுதிகாலம் வரையிலான வரலாற்றை பல தொகுதிகளாக ஆசிரியர் கி. வீரமணி எழுதி வெளியிட்டார் !

●  தந்தை பெரியாரின் வாழ்க்கை முழுவதையும், அவரது பிறப்பு முதல் இறப்பு வரை, ஒரு தகவல்கூட விட்டு விடாமல், பெரியாரே தனது சொந்த டைரியையும் தனது படைப்புகளையும் ஆதாரமாக கொண்டு எழுதியது போல, பெரியாரின் நெருக்கமான தொண்டர், கவிஞர் கருணானந்தம் குடிஅரசு, விடுதலை, உண்மை இதழ்களின் அடிப்படையில், ஏறத்தாழ ஓராண்டு சென்னையிலுள்ள ' பெரியார் பகுத்தறிவு நூலக ஆய்வகத்தில் ' தினமும் வந்து குறிப்புகள் எடுத்து, இந்த வரலாற்று நூலை சிறப்பாக படைத்துள்ளார். நூலை பெரியாரின் நூற்றாண்டையொட்டி 1979ல் முதற் பதிப்பாக வெளியிட்டிருந்தார் !

●  தந்தை பெரியாரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூல், முழுமையான தகவல் களஞ்சியமாக, ஒரே தொகுதியாக உள்ளதால் பகுத்தறிவாளர்களும், திராவிட இயக்கத்தவரும், பெரியாரியவாதிகளும் வாங்கி படித்து பயன் பெற்ற காரணத்தால், இதன் மூன்றாவது பதிப்பை பெரியாரிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான தோழர் வாலாசா வல்லவன் தனது முயற்சியால், இந்த நூலை சீரிய முறையில் வெளியிட்டுள்ளார். அவருக்கு பெரியாரியவாதிகள் மிகவும் கடமைப் பட்டுள்ளார்கள் !

●  தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த நூலை களஞ்சியம் என்பதா ? பொக்கிஷம் என்பதா ? இது ஆவணமா இல்லை ஆவணங்களின் ஆவணமா ? பெரியாரின் சாதனைகள்; எழுத்துக்கள்; பேச்சுகள்; நிகழ்வுகள்; போராட்டங்கள்; அறிவிப்புகள்; மறியல்கள்; மடல்கள்; சந்திப்புகள்; பேட்டிகள்; விளக்கங்கள்; தீர்மானங்கள்; இரங்கல் செய்திகள் என எல்லாம் உண்டு இந்த நூலில் ! இவைகளை எல்லாம் உண்டு செறித்த நூல் இது !

●  எவ்வளவு தகவல்கள் !  எவ்வளவு செய்திகள் !  எவ்வளவு ஆச்சர்யங்கள் ! அடுக்கி கொண்டே போகலாம் !

பானைச் சோறுக்கு பதம் பார்க்க ஒரு சோறு போதும் ! இதுவோ களஞ்சியம் ! அதனால் தான் கையளவு எடுத்து தருகிறேன் !

படித்து பார்க்கவும் - அதை நினைவில் நிறுத்திப் பார்க்கவும் !

இதோ தகவல்கள் :

●  தந்தை பெரியார் - ஈ.வெ.ராமசாமி பிறந்தது - 17.09.1879. மறைந்தது - 24.12.1973. வாழ்ந்த காலங்கள் - 94 ஆண்டுகள், 98 நாட்கள். ஏறத்தாழ 55 ஆண்டுகள் பொது வாழ்க்கை. சாதி வேரோடு அழிவதற்காக ஈரோட்டில் பிறந்தார் !

●  1920 முதல் 1925 வரை காங்கிரசில் இருந்தார். 1925 காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். ஈரோட்டில் குடிஅரசு வார இதழை 02.05.1925ல் துவக்கினார் !

●  கேரளாவின் வைக்கத்தில் நடந்த போராட்டத்தில் பங்கு பெற்று, சிறை சென்று வெற்றியடைந்து பின்பு வைக்கத்தில் நடைபெற்ற வெற்றி விழா நிகழ்ச்சியில் 29.11.1925 அன்று பெரியார் கலந்து கொண்டார். அவருக்கு ' வைக்கம் வீரர் ' பட்டம் சூட்டப்பட்டது !

●  செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு பிப்ரவரி 17, 18 தேதிகளில் 1929ம் ஆண்டு நடைபெற்றது. அதில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1) சாதிப் பட்டங்களை விட்டொழித்தல் 2) மதக் குறிகளை உடலில் அணியாதிருத்தல் 3) தீண்டாமையை ஒழித்தல் 4) பெண்களுக்கு சொத்துரிமை இப்படி பல முற்போக்கான தீர்மானங்கள் !

●  ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாடு மே 10, 11 தேதிகளில் 1931ம் ஆண்டு நடைபெற்றது. இந்தியாவிலேயே ஒரு அரசியல் - சமுதாய மாநாட்டில், அனைத்து சாதி, மத மக்களையும் ஒன்றாக அமர வைத்து - சமத்துவ பந்தி பறிமாறப்பட்டது. உணவு, சமைத்து பறிமாறுகின்றவர்கள் யாவரும் தாழ்த்தப்பட்டோர் என்பதும் - பெரியாரின் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்றாகும் !

●  பெரியார் ரஷ்யாவுக்கு 1932ம் ஆண்டு நீண்ட பயணம் மேற் கொண்டார். அங்கு பல தொழிற்சாலைகளிலும் பொதுக் கூட்டங்களிலும் உரையாற்றினார்.

மே 1ம் தேதி மாஸ்கோ செஞ் சதுக்கத்தில் நடைபெற்ற மேதின அணிவகுப்பை பார்வையிட்டார். அன்று ரஷ்ய தலைவராக இருந்த ஸ்டாலினுக்கு, ' இந்தியாவிலிருந்து வந்துள்ள நாத்திகத் தலைவர் ' என பெரியாரை அறிமுகம் செய்து வைத்தார்கள் !

●  விடுதலை இதழ் 1935ல் சென்னையில் துவங்கப்பட்டது. தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை பெரியார் தமது பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் 13.01.1935 முதல் நடைமுறை படுத்தினார் !

●  சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி இருந்த போது - 25.04.1938 முதல் இந்தி கட்டாய பாடமாக பள்ளியில் திணிக்கப்பட்டது. மேலும் கிராம புறங்களில் ஏழை மக்களுக்காக நீதிக் கட்சி ஆட்சியின் போது துவக்கப் பட்டிருந்த 2200 ஆரம்ப பள்ளிகளை மூடி விடுவதாகவும் ராஜாஜி அறிவித்தார் !

●  பெரியார் தலைமையில் இந்தியை எதிர்த்து பெரிய போராட்டம் நடந்தது. பெரியார் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் 26.06.1938 அன்று இலட்சக்கணக்கான மக்கள் கூடி " தமிழ் வாழ்க .. இந்தி ஒழிக " என்ற கோஷம் விண்னைப் பிளக்க முழங்கினார்கள் !

தாய் மொழிக்கு ஆதரவாகவும், அந்நிய மொழித் திணிப்பை எதிர்த்தும் கூடிய பெரும் கூட்டம் - இதுவரை வரலாறு காணாத செய்தியானது !

●  சென்னையில் தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு 13.11.1938 அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மறைமலையடிகளாரின் மகளான நீலாம்பிகை அம்மையார் தலைமை வகித்து, தோழர் ஈ.வெ.ராமசாமிக்கு, ' பெரியார் ' என்ற பட்டத்தை வழங்கினார்கள் !


●  சேலத்தில் 27.08.1944 அன்று நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில், அண்ணா கொண்டு வந்த தீர்மானத்தின்படி, கட்சியின் பெயரை - திராவிடர் கழகம் என மாற்றுவதாக முடிவு செய்யப் பட்டது !

திராவிடர் கழகம் உதயமானது !

●  சென்னையில் 11.10.1945 அன்று நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் பெரியார் உரையாற்றும் போது, " நமது இழிநிலையை விளக்கிட, எப்போதும் கருஞ்சட்டையை அணியலாம் " ..என்ற கருத்தினை தெரிவித்தார் !

●  மதுரையில் முதலாவது கருஞ்சட்டை மாநாடு மே திங்கள் 11, 12 தேதிகளில் 1946ல் நடைபெற்றது. மாநாட்டு பந்தலுக்கு சனாதன கும்பல் தீ வைத்து தடுக்க நினைத்தும்  - மாநாடு திட்டமிட்டபடி நடந்தேறியது !

●  பிராமணாள் கஃபே - பிராமணாள் என்று எழுதப்பட்ட எழுத்தை அழிக்க நடத்திய போராட்டம் தமிழகமெங்கும் நடந்தது. சென்னை முரளி கஃபே முன்பு நடந்த போராட்டம் 210 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. 837 பேர் கைதாகி தண்டனையும் பெற்றார்கள். இறுதியில் கழகத்தினரின் உறுதி கண்டு, ஓட்டல் உரிமையாளர்கள் பெரியாரை நேரில் சந்தித்து, மன்னிப்பு கோரி, பெயர் பலகையை மாற்றியமைத்தார்கள் !

●  பெரியார் அன்று சொன்னது இன்றும் பொருந்துகிறது என்பதற்கு ஆயிரம் உதாரணம் தர முடியும். அதில் ஒன்று:

" வெள்ளைக்காரனுக்கு பயந்து சுதந்திரம் கேட்டதானது - சாணிக்குப் பயந்து, மலத்தின் மீது கால் வைத்தது போல் ஆகிவிட்டது ! " ..(06.03.1962)

●  பெரியார் சொன்ன மூன்று பேய்களும்; ஐந்து நோய்களும் !

மூன்று பேய்கள் - கடவுள் | சாதி, மதம் | ஜனநாயகம் |

ஐந்து நோய்கள் - பார்ப்பான் | பத்திரிகை | அரசியல் கட்சி | தேர்தல் | சினிமா |... (19.05.1962)

●  காமராஜர் தலைமையிலான காங்கிரசை தோற்கடித்து, அண்ணா தலைமையிலான திமுக - 06.03.1967 அன்று தமிழகத்தில் அரியணை ஏறியது !

●  தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணாவிடம் 20.06.1967 அன்று, " பெரியாருக்கு தியாகிகள் பென்சனும் மானியமும் வழங்கப்படுமா ? " ...என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணா, " இந்த அமைச்சரவையையே அவருக்கு காணிக்கையாக கொடுத்திருக்கிறோம் ! " என்றார் பெருமையாக. அந்த பேரறிஞர் அண்ணா 03.02.1969 அன்று மறைந்தார் !

●  உண்மை இதழ் 14.01.1970 அன்று திருச்சியிலிருந்து வெளியானது. பகுத்தறிவாளர் கழகம் 06.09.1970 அன்று சென்னையில் துவங்கப்பட்டது.

●  மதுரையில் இரண்டாவது கருஞ்சட்டை மாநாடு 30.09.1973 அன்று நடைபெற்றது. ( அதில் நான் கலந்து கொண்டு தந்தை பெரியாரை சந்தித்து அவரிடம், அவர் எழுதிய ' உயர் எண்ணங்கள் ' நூலில் அவரது கையொப்பம் பெற்ற தருணத்தை மறக்க இயலாது )

●  தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு சென்னையில் டிசம்பர் 08, 09 தேதிகளில் 1973ம் ஆண்டு சிறப்பாக நடை பெற்றது.

●  தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை - சென்னை தியாகராயர் நகரில் 19.12.1973 அன்று மக்களால் இறுதியாக கேட்கப்பட்டது !

●  வேலூர் சி.எம். சி. மருத்துவமனையில் 24.12.1973 அன்று காலை 7.22 க்கு பகுத்தறிவு பகலவன் மறைந்தார் !

வரலாற்று நாயகனின் வரலாறு நிறைவு பெற்றது !

●  இந்த களஞ்சியத்திலிருந்து நான் அறிமுகப்படுத்தியதோ ஒரு சதவீதம் கூட இருக்காது !

நூலை முழுவதும் படித்தால் - அதில் தமிழகம் இருக்கும்; தமிழக அரசியல் இருக்கும்; சுயமரியாதை இயக்கம் இருக்கும்; திராவிட உணர்வு இருக்கும்; எல்லாவற்றையும் இணைக்கும் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு இருக்கும் !


●  இந்தப் பெரும் பணியை செய்து விட்டு நம்மை விட்டு பிரிந்த கவிஞர் கருணானந்தம் அவர்களும் நம் நினைவில் நிற்கிறார் !


பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்.

சென்னை. 10.05.2022.

********************************************

Saturday, May 7, 2022

கால்டுவெல் தமிழாற்றுப் படை - வைகோ உரை

'கால்டுவெல் தமிழாற்றுப்படை'

வைகோ ஆற்றிய தலைமை உரை....

1814 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள், அயர்லாந்து நாட்டில், கிளாடி ஆற்றங்கரையில், செப்பேர்டு யார்டு என்று சொல்லப்படும் ஒரு பகுதியில் பிறந்து, பெற்றோரின் பூர்வீகம் ஸ்காட்லாந்து தேசம் என்பதனால் அங்கே சென்று கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பயின்று,

டேனியல் ஸ்டான் போர்டு என்கின்ற கிரேக்க மொழியறிஞர் பேராசிரியராக இருந்ததினால், மொழிகளின் ஒப்பிலக்கணத்தை ஒப்பு நோக்கிப் பயின்றால்தான் மொழிகளை ஆய்ந்து அறிய முடியும் என்பதனை ஆத்திச்சூடி அரிச்சுவடியாக மனதில் ஏற்றக் கொண்டு, 

20 அகவை கடக்கின்ற போதோ மொழி நூல் அறிவு பெற்றவராக தேர்ச்சிப் பெற்றவராக இருக்கின் போது, இலண்டன் கிருத்துவத் தொண்டர் சங்கத்தில் சேர்ந்த பிறகு, இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் இருக்கின்ற தெற்குச் சீமைக்குக் கிறித்துவத் தொண்டு ஆற்றச் செல்ல வேண்டும் என்று சொன்னவுடன், அவரது அருமைத் தாயார், மகனே இந்தியாவின் தென்கோடி முனைக்குச் செல்கிறாய், கிறிஸ்துநாதரின் அருளைப் பெற்றவராகச் சேவை செய்யச் சொல்லுகிறாய்; நான் மனநிறைவோடு மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்புகிறேன் என்று அனுப்புகின்றார்.

அன்னை மேரி என்கிற கப்பலில் புறப்பட்டு வருகிற வழியில் பிரளயம் தாக்கியதைப் போன்று பிரெஞ்சு மரக்கலம் மோதிய காரணத்தால், நூல் இழையில் உயிர் பிழைத்து, 1838 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் அடியயடுத்து வைத்து,

நான்கு மாத காலத்திற்கு பின்னர், திருக்குறளை மொழி பெயர்த்த ஆங்கில நாட்டைச் சேர்ந்த துரு என்கின்ற தமிழ் அறிஞரையும், போப் அடிகளையும், ஜான் ஆண்டர்சனையும் சந்தித்து, 

பைபிளை தமிழில் மொழிபெயர்த்த, பவர் என்ற அறிஞரோடு கலந்துரையாடி, பவனந்தி முனிவர் தந்த நன்னூலை முழுமையாகப் படித்து,

சீவக சிந்தாமணி உள்ளிட்ட காவியங்கள் படித்து, தமிழில் தேர்ச்சியும் பெற்று, தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிக்கும் நடந்தே சென்று மக்களைக் காணப் போகிறேன் என்று புறப்பட்டு, நடந்தே வந்து தரங்கம்பாடி சேர்ந்து, குடந்தை, தில்லையைக் கண்டு,

சோழப் பேரரசன் எழுப்பிய ஆலயம் அமைந்து இருக்கின்ற தஞ்சை யைக் கடந்து, காவிரிக் கரையோரம் நடந்து திருச்சிக்கு வந்து உறையூருக்குச் சென்று,

அங்கிருந்து மேற்கு நோக்கிப் பயணித்து, நடக்க முடியாத முகடுகளாகக் காணப்பட்ட பகுதிகளில் ஏறி, நீலகிரி மலை உச்சிக்குச் சென்று திரும்பி வருகின்ற போது, குதிரை மீது ஏறி சிறிது தூரம் பயணிக்கலாம் என்று வருகின்ற போது, குதிரை இடறி பள்ளத்தில் விழுந்து, குதிரைக்குக் கால் ஒடிந்து, இவரும் காயப்பட்டு, அந்தக் காயங்களைச் சுமந்து கொண்டே அங்கிருந்து நடந்து வந்து, ஒரு குதிரையை விலைக்கு வாங்கலாமா? என்று முயன்று அது முடியாமல் போனதால், நடந்தே கொங்கு மண்டலத்தின் பகுதிகளை எல்லாம் கடந்து,

ஆலவாய் அழகன் குடி இருக்கின்ற மீனாட்சி அம்மன் ஆலயம் எழுந்திருக்கும் மதுரை மாநகர் கண்டு,

அழகியலில் திளைத்து, அங்கிருந்து பொருநை ஆற்றங்கரை வழியாக வந்த போது, இதே பாளையங்கோட்டை கிறித்துவ மக்கள் வரவேற்றனர்.

பின்பு, இங்கிருந்து நாசரேத்துக்குச் சென்று, 1841 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாசரேத்துக்குள்ளே நுழைந்த பின், முதல் ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 28 இல் நாசரேத் கிறித்துவ தேவாலயத்தில் அவர் ஆற்றிய உரை, இந்த மண்டலத்தில் முதல் கிறித்துவ உரை. அதில் ரோமர் 13 ஆம் அத்தியா யத்தில் 12 ஆம் வசனத்தை ஆங்கிலத்தில் சொல்லி, தமிழிலும் தருகின்றார். 

‘இரவு சென்று போயிற்று; பகல் சமீபமாயிற்று. அந்தகாரத்துக் கிரிகை களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக் கடவோம். கங்குல் கழிந்தது. காலை மலரும்’.

இதை அடிப்படைத் தத்துவமாக வைத்து உரையாற்றி, அடுத்த ஞாயிற்றுக் கிழமை கிறித்துவ மக்கள் மட்டுமே குடியேறி உருவான முதலூரில் உரையாற்றி, அங்கிருந்து நடந்தே சென்று இடையன்குடி சேர்ந்து, ஓலைக் குடிசையாக இருந்த வேதியர் குடியிருப்பில் வசித்து, சின்னஞ்சிறு ஆலயத்து அடையாளமாக இருந்த பகுதியில் வாழ்ந்து தெருக்களைச் சீரமைத்து வகுத்து, கிணறுகளை உருவாக்கிக் கொடுத்து,

பாடசாலையை அமைத்து, பெண் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, கல்வியே வாழ்வின் ஏற்றத்துக்கு ஏணி எனப் போதித்து, அந்த இடையன்குடி யில் இருந்து அதன் பின்னர் 1844 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் சார்லஸ் மன்னரின் தலையைச் சீவி இங்கிலாந்து நாட்டின் புரட்சியை நடத்திய ஆலிவர் கிராம்வெல் கொடி வழி வந்த மகளை மணந்த மால்ட் அவர்களுடைய அருமை மகள் எலியாவை மணந்து, ஒரு மகன், இரண்டு மகள்கள் என இல்லற வாழ்வை முறையாக நடத்தி,

'தியாமாலை' போன்று 23 நூல்களைப் படைத்து இருந்தாலும், திருநெல்வேலி சரித்திரத்தை எழுதுகின்ற போது அவர் சொல்லுகிறார்:

மகாபாரதத்தில் தாமிரபரணி வருகிறது; தும்பியின் மகனே மோட்சத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், முனிவர்களும் தேவர்களும் தவம் இருக்கின்ற ஆசிரமத்தை அரவணைத்துக் கொண்டு ஓடுகின்ற நதிக்குப் பெயர் தாமிரபரணி.

அந்தத் தாமிரபரணி கடலோடு கலக்கின்ற இடத்தில் கிடைக்கின்ற முத்துகள்தான் உலகத்தில் மிகச் சிறந்த முத்துகள். கொற்கை என்கின்ற துறைமுகம் இருந்தது. திருச்செந்தூர் ஆலயத்தில் கொற்கை என்ற கல் எழுத்து சுவரில் இன்றும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

‘குற்றாலத்து அருவியில் நீராடிவிட்டு, நான் உலகில் எத்தனையோ இடங்களுக்குச் சென்று இருக்கின்றேன். ஆனால் நேர்த்தியும், சுவையும், அழகும், மகிழ்வும் உடல் நலமும் பெறுகின்ற நீராடுதுறைக் குற்றாலத்தைப் போல இந்த உலகத்தில் எங்கும் இல்லை’ என்பதனைப் பதிப்பித்து இருக்கின்றார்.

இந்த மண்ணில் ஏற்பட்ட வீரப் போர்க்களங்களை வர்ணித்து, கம்மந்தான் கான் சாகிப்பையும், பிரித்தானியத் தளபதிகள் அத்தனைப் பேரையும் சிதற டித்த மாமன்னர் பூலித்தேவர் கண்ட களக்காட்டுப் போர்க்களத்தை, வாசுதேவ நல்லூர் போர்க்களத்தை வர்ணித்து இருக்கின்றார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் தொடுத்த போரை யும், இராமலிங்க விலாசத்தில் கிளார்க்கோடு நடைபெற்ற மோதலையும், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தகர்க்கப்பட்டதையும், கயத்தாறில் புளிய மரத்தில் தொங்கவிடப்படுகின்றபோது, அவன் காலடியை உறுதியாக எடுத்து வைத்து வலது பக்கமும், இடது பக்கமும் பார்த்தவாறு கம்பீரமாகவும், கர்வமாகவும் பாளையக்காரர்களை ஏளனமாகப் பார்த்துக் கொண்டு சென்று, தம்பி ஊமைத்துரையைப் பார்க்க முடியவில்லையே?

கோட்டையை விட்டு வெளியேறியது தவறு; அங்கேயே மடிந்திருக்க வேண்டும் என்று முழங்கியதை சொல்லி, அவன் மடிந்ததையும் சொல்லி, இதே பாளையங்கோட்டை காராக்கிரகத்திலே ஊமைத்துரை கட்டுக் காவலை உடைத்துக்கொண்டு வெளியே வந்து, வல்ல நாட்டுப் போர்க் களத்தைச் சந்தித்து, ஜெரால்டு படைகள் சிதறடிக்கப்பட்டு, எண்ணி சில நாட்களிலேயே கோட்டை மீண்டும் எழுப்பப்பட்ட சரிதத்தையும் சொல்லி இருக்கின்றார்.

‘சாகுந்தலம்’ எழுதிய காளிதாசரைச் சொல்கிறார் கால்டுவெல்.

இப்படி இந்தத் திருநாட்டின் வரலாறை எல்லாம் சொன்னது மட்டுமல்ல, ஆரிய மொழிகளே இந்தியாவின் ஆதி மொழிகள் என்றும், அந்த மொழி களில் இருந்து வந்தவைதான் நம் தென்னாட்டு தமிழ் உள்ளிட்ட மொழிகள் என்றும், ஐரோப்பியர் உள்ளிட்ட நூல் இலக்கணம் கண்டவர்கள் பேசி வந்த வேளையில், இல்லை, இல்லை, தொன்மை மொழி தமிழ் என்று ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்’தைத் தருகின்ற போது சொல் கின்றார், நான் அனைத்துமொழி களையும் பயின்று இருக்கின்றேன்.

ஆனால், இந்த மொழியில் காணப்படுவது போன்று எந்த மொழியிலும் உயர்திணை, அஃறிணை கிடையாது. தமிழிலும், திராவிட மொழிகளில் மட்டும்தான் இருக்கின்றது. பகுத்து அறிகின்ற உயிர்கள் எல்லாம் உயர் திணை. பகுத்தறிவற்ற மாவும், மாக்களும், ஏனைய பொருள்கள் எல்லாம் அஃறிணை.

இந்த மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம், குடகு உள்ளிட்ட ஆறு மொழிகள் திருந்திய மொழிகள். நீலகிரி மலையில் உள்ள ‘தோடர்’ மொழி, கொண்டர் வனத்தில் உள்ள ‘கொண்டர்’ மொழி, ஒடிசி நாட்டில் உள்ள ‘சிலது’ மொழி, நாகபுரியில் உள்ள ‘ஒரிய’ மொழி, ராஜ வார் கிரியில் இருக்கக்கூடிய ‘மேலது’ மொழி, பலுசிஸ்தானத்தில் இருக்கக் கூடிய ‘பிராகி’ மொழி உள்ளிட்ட ஆறு மொழிகள் திருந்தா மொழிகள்.

தமிழ், திராவிட மொழிகளில் இருக்கக் கூடிய சிறப்புகள் வேறு எதிலும் இல்லை என்பதை நிலை நாட்டியவர் பெருமகனார் ராபர்ட் கால்டுவெல். தமிழ் உலகம் அவருக்குக் கடமைப்பட்டு இருக்கின்றது. தமிழர்கள் கடமைப்பட்டு இருக்கின்றார்கள்.

வேனில் காலத்தில் நெருப்பு வெப்பத்தைத் தாங்க முடியாமல் கழுத்தளவு தண்ணீரில் இருந்தவாறே எழுதிக்கொண்டு இருப்பாராம். இனிய இல்லற வாழ்வுதான். மூன்று முறை அவர் இலண்டனுக்குச் சென்றபோது, இங்கேயே தங்கிவிடுங்கள் என்று கூறி இருக்கின்றார்கள். ‘எந்த மக்களோடு வாழ்ந்தேனோ, எந்த மண்ணில் உறைந்து திரிந்தேனோ, அந்த மண்ணிலேயே நான் மரிக்க விரும்புகிறேன்’ என்று இங்கு வந்தார்.

கொடைக்கானலில் இறுதி நாட்களைக் கழித்தார். அவரது துணைவியார் எலிசா அம்மையார் அருகிலேயே இருந்தார். உயிர் பிரிந்தது. 

பேழையில் வைத்து பாண்டிய மண்டலத்து திருச்சபை நோக்கம் கொண்ட 24 பெரு மக்கள் அந்தப் பேழையை மலை வழியாகவேச் சுமந்து வருகின்ற வழியில் இந்தப் பாளையங்கோட்டை மக்கள் கண்ணீர் சிந்தினர். அவர் விழைந்தவாறே இடையன்குடியில் அடக்கம் ஆனார்.

அந்தக் கல்லறைத் திசை நோக்கித் தொழுகின்றேன். எங்கள் தமிழுக்கு உலகத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த கருணை வள்ளலே அருட் தந்தையே ராபர் கால்டுவெல் அவர்களே, ஆற்றுப் படை எத்தனையோ தந்து இன்றைக்கு எங்கள் பொருநை ஆற்றங் கரையில் உங்களுக்கு ஆற்றுப்படை தரவந்திருக்கும் தமிழ்க்குலம் தந்த வரகவியை வாழ்த்துகின்றேன். வணக்கம். 

(25.8.2018 அன்று பாளையங்கோட்டையில் கவியரசு வைரமுத்து அவர்களின் ‘கால்டுவெல் ஆற்றுப்படை’ நிகழ்ச்சியில் வைகோ அவர்கள்  ஆற்றிய தலைமை உரை)

Thursday, May 5, 2022

பொ.வேல்சாமி

 பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா..?

நண்பர்களே…

உங்களைச் சந்தித்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. 

திராவிடச் சிறகுகள் என்ற அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வில் 

 தோழர் செந்தலை ந.கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சை இன்று பார்த்துக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பேச்சில் அவரால் குறிப்பிடப்படுகின்ற அடிப்படைத் தரவுகளில் பல சரியானவைகளாக இல்லாமல் பிழையாக இருந்தன. சிறந்த வரலாற்று அறிஞர் என்று நண்பர்களால் பாராட்டப்படுகின்ற தோழர் செந்தலை ந கவுதமன் பேச்சைக் கேட்டு அதிர்ந்தேன்.  ஆதாரம் இல்லாத இத்தகைய பேச்சுகளை ஐயா அவர்கள் பேசுவது நியாயமா?

1. சர் வில்லியம் ஜோன்ஸால் (28.09.1746 – 27.04.1794)  வடமொழி நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் அவரால் செய்யப்பட்ட அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக ஜெர்மன் மொழியிலும் இத்தாலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இவற்றின் விளைவாக வடமொழி பற்றிய அறிவு ஐரோப்பா முழுமையும் பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றார். வில்லியம் ஜோன்ஸ் வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் மொழிபெயர்க்கவில்லை. அந்தக் காலத்தில் வேதங்கள் உள்பட பல முக்கியமான வடமொழி நூல்களைப் பற்றி ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரியாது. வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் பற்றி ஐரோப்பியர்கள் தெரிந்துகொள்ள தொடங்கிய காலம் என்பது 1847 க்கு பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லியம் ஜோன்ஸால் மொழிபெயர்க்கப்பட்ட வடமொழிகள்  நூல்கள் 3 மட்டுமே. அவை 1. காளிதாசரின் சாகுந்தலம். 2. கீத கோவிந்தம். 3. மாளவ தரும சாத்திரம் ஆகும். இவருக்கு வடமொழியைக் கற்றுக் கொடுத்த இவருடைய நண்பர் சார்லஸ் வில்கின்சன் “பகவத் கீதை“ மற்றும் “இதோபதேசம்“ என்ற இரண்டு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ளத் தொடங்கிய இன்னொரு மொழிபெயர்ப்பு நூல், அவுரங்கசீப்பின் அண்ணன் “தாராசுகோ”வின் முயற்சியால் வடமொழியில் இருந்து பாரசீக மொழியில் மொழிபெயர்க்ப்பட்ட 50 உபநிடதங்கள் ஆகும். இந்த உபநிடதங்கள் முழுமையும் 1801 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது என்றும் இதன் விளைவாக ஐரோப்பா முழுமைக்கும் வடமொழி பற்றிய ஆர்வம் உண்டானதாகவும் “வியத்தகு இந்தியா” (பக்.5 மற்றும் பக்.6) என்னும் நூலில் பேராசிரியர் A.L.பசாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நூலின் அந்தப் பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். 

2. 1812 இல் எல்லீஸால் திருக்குறள் “முழுமையும்” அச்சிட்டு வெளியிடப்பட்டதாக செந்தலை கவுதமன் கூறுகின்றார். எல்லீஸால் வெளியிடப்பட்டது திருக்குறளின் அறத்துப்பால் மட்டுமே. முழுநூலும் அல்ல என்பது குறி்ப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல திருவள்ளுமாலையையும் நாலடியாரையும் இணைத்து எல்லீஸ் வெளியிட்டதாகத் தோழர் கூறுகின்றார். அப்படி எல்லீஸ் வெளியிடவில்லை. 

                                                                         திருக்குறளின் 110 வது பாடலாகிய “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்..” என்று தொடங்கும் குறளுக்கு விரிவுரை எழுத வந்த பரிமேலழகர் 34 புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். அந்த மேற்கோளில் பார்ப்பார் தப்பிய என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பை எல்லீசும் மேற்கோள் காட்டி பிராமணர்களை ”the murder of Brahmans” என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியை விளக்குவதற்கு புறநானூறு 34 வது பாட்டை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோள் உள்ள புறநானூற்று பாடல் வரிகளில் “குரவர் தப்பிய” என்ற வரிகள் உள்ளன. இதே பாடலுக்கு (புறநானூற்றில் 34 வது பாட்டுக்கு) உரை விளக்கம் கூற வந்த “உரைவேந்தர் அவ்வை துரைசாமிபிள்ளை” அவர்கள்,

“குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்குமெனத் திருத்தப்பட்டிருக்கிறது. இத்திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது.” என்று கூறுகின்றார். இப்படியான தரவுகள் இருக்கின்ற போது  புறநானூற்றுப் பதிப்பில் 34 வது பாட்டில் “பார்ப்பார் தப்பிய” என்று உ.வே.சா திருத்தி விட்டார் என்று செந்தலை கவுதமன் கூறுவதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது.?

3. செந்தலை கவுதமன் அவர்களின் பேச்சில், ஆறுமுக நாவலர் திருக்குறளைப் பதிப்பிக்கவில்லை என்று கூறுகிறார். 1861 இல் பாண்டித்துரை தேவரின் தந்தையார் பொன்னுசாமி தேவரின் உதவியாலும் வேண்டுகோளின்படியும் திருக்குறள் பரிமேலழகர் உரையின் பிழைநீக்கி பதிப்பித்துள்ளார். தொடர்ந்து அவர் காலத்திலேயே (1875) இரண்டாம் பதிப்பாகவும் திருக்குறள் வெளிவருகிறது. ஆறுமுகநாவலின் மறைவுக்கு பின்னர் (1879) பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 1861 இல் ஆறுமுகநாவலரால் முதன் முதலாக வெளியிடப்பட்ட இந்நூலின் 110 பாட்டின் பரிமேலழகர் உரை விளக்கத்தின் புறநானூறு 34 வது பாடல் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் “பார்ப்பார் தப்பிய” என்ற வரிதான் உள்ளது. அதன் அடிக்குறிப்பில்தான் பாடபேதமாக “குரவர் தப்பிய” என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 எல்லீஸ் அவர்களும் ஆறுமுகநாவலர் அவர்களும் சமகாலத்தவர்கள் என்பதுபோல  தோழர் பேசுகின்றார். எல்லீஸ் மறைந்தது 1819 ம் ஆண்டு. எல்லீஸ் மறைந்து 3 ஆண்டுகள் கழித்து 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கர்னல் மெக்கன்சியை எல்லீஸ் தமிழ்ச் சுவடிகளைத் திரட்டுவதற்குப் பணி அமர்த்தினார் என்று குறிப்பிடுகின்றார். கர்னல் மெக்கன்சி எல்லீஸால் பணி அமர்த்தப்படவில்லை. கர்னல் மெக்கன்சி தமிழ் ஏட்டுச்சுவடிகள் மட்டுமல்லாது வடமொழிச் சுவடிகள் தெலுங்குச் சுவடிகள் கல்வெட்டுகள் என்று பலவற்றையும் தொகுத்தவர். அவர் தொகுத்த தெலுங்குச் சுவடிகள் தமிழ்ச் சுவடிகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னால் குறிப்பிடப்படும் செய்திகளுக்கான ஆதாரங்களின் படங்களை இணைத்துள்ளேன். தோழர்கள் கவனமாகப் பார்க்கவும். 

தோழர் செந்தலை கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சையும் இணைத்துள்ளேன். 

நம்முடைய அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளைக் காட்டுவதற்காக இப்படி ஆதாரம் இல்லாமல் பிழையாகச் சிலர் பேசுவதைக் காண முடிகின்றது. ஆய்வின் அடிப்படையிலான பேச்சுகளை அவதூறுகளைக் கொண்டு நிரப்புவது என்பது தமிழ் ஆய்வுக்கும் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வுக்கும் நன்மை பயக்குமா? தீமை பயக்குமா? என்பதைத் தோழர்கள் விவாதிக்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=XnsUk-GiV9w

அயோத்திதாசர் பெரியாருக்கு முன்னோடியா? விவாதங்கள்

Gobalakrishnan:

தம்பி மதிவண்ணன் எழுதிய நூலை ஆதாரமாகக் காட்டாமல்.

 அயோத்திதாசரே எழுதிய நூலிலிருந்து ஆதாரத்தை காட்டுங்கள்

ஆர் எஸ் எஸ் காரன் பெரியாரைப் பற்றி எழுதிய நூலில்.  பெரியார் இப்படித்தான் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பெரியாரே எழுதிய நூலைத் தான் படிக்க வேண்டும்....

Vimal Prakash Gvp:

Gobalakrishnan இவற்றுள் இயல்பாகவே அறிவின்றித் தாழ்ந்துள்ள சில வகுப்பாரும் உண்டு. சாதித் தலைவர்களின் விரோதத்தால் தாழ்த்தப்பட்டுள்ளவர்களும் நாளது வரையில் தாழ்த்தி வருகிறவற்றுள் தாழ்ந்தவர்களுமாகிய ஓர் வகுப்பாரும் உண்டு.

அவர்கள் யாரென்பிரேல் குறவர், வில்லியர், சக்கிலியர், மலமெடுக்கும் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள்.

சாதித் தலைவர்களாகும் வேஷ பிராமணர்களால் பறையரென்றும், சாம்பாரென்றும் வலங்கையரென்றும் கூறி அவர்களைச் சுத்த ஜலங்களை மொண்டு குடிக்க விடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாமலும், அந்தஸ்தான உத்தியோகங்களில் பிரவேசிக்க விடாமலும், ஏதோ துரை மக்கள் கருணையால் ஓர் உத்தியோகத்தை பெற்றுக்கொண்ட போதிலும் அதனினின்று முன்னுக்கு ஏறவிடாமலும் பலவகை இடுக்கங்களைச் செய்து தாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். இவர்களைத் தாழ்ந்த வகுப்பார் என்று கூறலாகாது. சாதிபேதமுள்ள மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று கூறல் வேண்டும்.

இவற்றுள் கூளங் குப்பைகளுடன் குணப்பெரும் பொருட்களையும் சேர குவித்து குப்பைக் குழியென்பது போல கல்வியிலும், நாகரீகத்திலும், விவேகத்திலும், ஒற்றுமையிலும் மிகுந்து வேஷ பிராமணர்கள் கற்பனா கதைகளுக்கிணங்காமல் விரோதிகளாய் நின்ற திராவிட பெளத்தர்கள் யாவரையும் பறையர், சாம்பார், வலங்கையரென்று தாழ்த்திக் கொண்டதுமின்றி சக்கிலி, தோட்டி, குறவர், வில்லியர் இவர்கள் யாவரையும் ஐந்தாவது சாதியென்றும், பஞ்சம சாதியென நூதன பெயரிட்டு மேன்மக்களாம் பெளத்தர்களையும் அக்குப்பையில் சேர்த்து பஞ்சம சாதியென்று வகுத்திருக்கின்றார்கள்.” (அயோத்தி தாசர் தொகுதி 1, ப.97)

Gobalakrishnan: 

பண்டிதர் க. அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதினார். அவர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் என்று அயோத்திதாசரை பெருமையோடு எழுத வாய்ப்பு இல்லை தயவுசெய்து அவரே எழுதிய நூலில் இருந்து பதிவு போடவும்

தயவுசெய்து பொய்களையும் புரட்டுகளையும் நம்பாதீர் அதை பரப்பாதீர்கள்.


அயோத்திதாசர் பெரியாருக்கு முன்னோடியா?

 அயோத்திதாசர் பெரியாருக்கு முன்னோடி என்று சொல்லி வருகிறார்கள். உண்மையில் அயோத்திதாசரின் கொள்கை பெரியாரின் கொள்கைக்கு நேரெதிரானது.

பெரியாருக்கு முன்னோடி என்று இரண்டு வகையில் சொல்லலாம். ஒன்று, பார்ப்பன எதிர்ப்பு மற்றொன்று திராவிடம் என்ற சொல். ஆனால் அவரது பார்ப்பன எதிர்ப்பு தங்கள் ஜாதிதான் உண்மையான பிராமணர்கள் என்ற அடிப்படையில் இருந்தது. அதேப்போல் திராவிடர் என்ற சொல்லைக்கூட தங்கள் ஜாதிக்கே பயன்படுத்தினார்.

அவர் கூறிய பூர்வீக பவுத்தமும் தங்கள் சாதியை மட்டுமே பவுத்தர்கள் என்றது. மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பூர்வீக பவுத்தர்கள் கிடையாது என்றார்.

தலித் மக்களின் ஒன்றிணைவை அவர் என்றும் முன்னிருத்தவில்லை. தலித் ஒற்றுமைக்கு எதிராகவே இருந்தார். குறவர், வில்லியர், சக்கிலியர், மலமெடுக்கும் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் என்று கூறினார். மலம் அள்ளுபவர்கள் முதலானோர் கீழானவர்கள் என்று எழுதினார்.

அயோத்திதாசர் எப்போதும் ஒட்டுமொத்த தலித் மக்களுக்காக எழுதவில்லை. தான் சார்ந்த ஜாதிக்காக மட்டுமே எழுதினார். அயோத்திதாசர் சிந்தனை எங்கும் எதிலும் சாதிப்பாசமும், சாதிப் பெருமையும் திளைத்து நிற்கும்.

அம்பேத்கருக்கும் அவர் முன்னோடி இல்லை!

அம்பேத்கர் சென்னை வந்தபோது, பேராசிரியர் லட்சுமி நரசு எழுதிய, "ஜாதியைப் பற்றிய ஆய்வு", "புத்திசம் அடிப்படைக் கொள்கைகள்" ஆகிய புத்தகங்களை தன்னுடன் எடுத்துச் சென்றார். பௌத்தத்தின் சாரம் என்ற தன்னுடைய புத்தகத்தில் அவரைப்பற்றி வெகுவாக பாராட்டி எழுதி இருப்பார். அதை அவரே வெளியிட வேண்டும் என்று விரும்பினார்.

லட்சுமி நரசு பௌத்தம் பற்றி பேசிய அம்பேத்கர் ஏன் அயோத்திதாசர் பௌத்தத்தைப் பற்றி பேசவில்லை?

அயோத்திதாசருக்கும் - சிங்காரவேலருக்கும் இடையே நடந்த 'பௌத்தத்தில் மறுபிறவி' என்ற விவாதத்தில் மறுபிறவி உண்டு என்று அயோத்திதாசர் வாதிட்டார். இது புத்தரின் பௌத்தத்திற்கும், அமபேத்கரின் பௌத்தத்திற்கும் எதிரானது.

சமண மதமே கிடையாது. அது புத்த மதத்தின் அங்கம் என்றார். கிருஸ்துவ கோட்பாட்டிற்கு பௌத்த விளக்கம் கொடுத்தார். ஏசுவையும் - புத்தரையும் ஓப்பீடு செய்தார்.

புத்த மத அழிவிற்கு காரணமான மகாயான பௌத்தக் கருத்தியலை பற்றி பேசினார். அதாவது தீபாவளி, கார்த்திகை தீபம், இந்திர விழா, போகி, இந்திரனை வழிபடும் பொங்கல், ஆடிமாதம் போன்றவை புத்த மதத்திற்கு சொந்தமானது என்று பார்ப்பனிய இந்து மத பண்பாட்டு மீட்பை பற்றி பேசினார். இது புத்த மதத்திற்கே ஆபத்தான ஒன்று. இதனால் மதம் மாறும் தலித் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

எம்.சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன், சகஜானந்தர் போன்ற தலித் தலைவர்களே அயோத்திதாசரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வரலாறு.

ஆதாரம்:-

-ம.மதிவண்ணன் (அயோத்திதாசரின் பார்ப்பனிய சிந்தனை)

-அம்பேத்கரும் தமிழகமும்

-பெரியார் புரட்டுகளுக்கு மறுப்பு

-ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

https://www.facebook.com/100019207502894/posts/998857257431182/


காரல் மார்க்ஸின் மறுபக்கம்

 கே.ஜீவபாரதி 

               மார்க்சின் மறுபக்கம்!

கார்ல் மார்க்ஸ் வரலாற்றை முதன் முதலில் தமிழில் எழுதியவர் அறிஞர் வெ.சாமிநாத சர்மாதான். இந்த நூலுக்கு இணையாக இதுவரை தமிழில் மார்க்ஸ் பற்றி வேறு எந்த நூலும் வெளிவரவில்லை.

இந்த நூலில், "மார்க்ஸ் இல்லா விட் டால் எங்கெல்ஸ் இல்லை; எங்கெல்ஸ் இல்லாவிட்டால் மார்க்ஸ் இல்லை; இருவரும் இல்லாவிட்டால் உழைப் பாளிகள் உழைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்; சுரண்டுகிறவர்கள் சுரண்டி கொண்டிருக்க வேண்டியது தான்" என்கிறார் சாமிநாத சர்மா. 

அவரின் இந்த முடிவு முழுமையான முடிவன்று.

1818 மே 5 நள்ளிரவு இரண்டு மணிக்கு ஜெர்மன் தேசத்தில், ரைன் மாநிலத் தில், டிரியர்  என்ற நகரத்தில் ஹென்றி மார்க்ஸ் - ஹென்றியேட்டோ பிரெஸ் பார்க் என்ற தம்பதிக்குப் பிறந்த குழந்தைதான் கார்ல் மார்க்ஸ். 

1883 மார்ச் 14 அன்று பிற்பகல் 3 மணி அளவில் லண்டனில் கார்ல் மார்க்ஸ் மறைந்தார். இந்த மண்ணில் மார்க்ஸ் வாழ்ந்தது 65 ஆண்டுகள், 10 மாதங்கள், 9 நாட்கள்.

சிறுவன் கார்ல் மார்க்ஸ் குடும்பம் டிரியர் நகரத்தில் வாழ்ந்தபோது பக்கத்து வீட்டில் லுட்விக்வான் வெஸ்ட் ஃபாலன் குடும்பத்தினர் வசித்தனர். இரண்டு குடும்பமும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தது. 

சிறுவன் கார்ல் மார்க்ஸ் மனத்தில் சமூகச் சிந்தனையை விதைத்த சிறப்பு லுட்விக்வான் வெஸ்ட் ஃபாலனையே சாரும். அதனால்தான் டாக்டர் பட்டத் திற்காக தாம் எழுதிய ஆய்வுக் கட்டு ரையை லுட்விக்வான் வெஸ்ட் ஃபாலனுக்கு கார்ல் மார்க்ஸ் காணிக்கையாக்கினார்.

லுட்விக் வான்வெஸ்ட் ஃபாலனின் மகள்தான் ஜென்னி. கார்ல் மார்க்ஸை விட ஜென்னி நான்கு வயது மூத்தவர்;

கார்ல் மார்க்ஸைவிட ஜென்னி அழகானவர். 

கார்ல் மார்க்ஸ் குடும்பத்தைவிட பொருளாதாரத்திலும் அந்தஸ்திலும் ஜென்னி குடும்பம் உயர்ந்தது. இருப் பினும் சின்னஞ்சிறு வயதிலேயே கார்ல் மார்க்ஸ்மீது ஜென்னி அன்பைச் செலுத்தினார். அந்த அன்பே வளர்ந்து காதலாக மலர்ந்தது. 

வசதி படைத்த குடும்ப இளைஞர்கள் சிலர் ஜென்னியின் அழகில் மயங்கி, அவருடைய காதலுக்காகக் காத்திருந் தனர். அவற்றைப் புறந்தள்ளி கார்ல் மார்க்ஸின் அறிவுக்கு அடைக்கலமானவர் ஜென்னி.

1836 - ல் பெர்லின் பல்கலைக் கழகத் தில் பயில்வதற்காக கார்ல் மார்க்ஸ் தயாரானார். அப்போது கார்ல் மார்க்ஸின் தந்தை ஹென்றி மார்க்ஸின் முயற்சியினால் ரகசிய மாக கார்ல் மார்க்ஸ் - ஜென்னி திருமண நிச்சயம் நடந்தது. இது ஜென்னியின் தந்தைக்குக்கூடத் தெரியாது.

இதுபற்றி எழுதிய ரஷ்ய எழுத்தாளர் நி. இவனேவ், "அறிவுக் கூர்மையும், இயல் திறமையும் அழகும் வாய்ந்த ஜென்னி, பொதுவான ஆன்மீகத் தேவைகளாலும், நலன்களாலும் மார்க்ஸுடன் பிணைப்புக் கொண்டி ருந்தார். போதிய நிதி வசதிகளும், சமுதாயத்தில் ஓர் 'அந்தஸ்தும்' இல்லாத ஒரு மாணவனுடன் தனது வாழ்க்கையை இணைத்துக் கொள்ள முடிவு செய்ததன் மூலம் ஜென்னி, பொருளாயத சுபீட்ச வாழ்க்கையைத் தயக்கமின்றித் துறர்ந்தார். மார்க்ஸு டைய இயல்பின் அசாதாரணமான ஆழத்தை முதன்முதலில் உணர்ந்தவர் ஜென்னியே" என்று குறிப்பிடுகிறார்.

பெர்லின் சர்வகலாசாலையில் கார்ல் மார்க்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது அவருடைய நினைவாகவே ஜென்னி வாழ்ந்தார். கடிதத்தின் வழியாகத் தொடர்ந்து கார்ல் மார்க்ஸை ஜென்னி நலம் விசாரித்தார். 

இந்தக் காலகட்டத்தில் தான் எழுதிய கவிதைகளை கார்ல் மார்க்ஸ் ஜென்னிக்கு அனுப்பி வைத்தார். அவற்றில் 'தேடல்' என்ற கவிதையை ஜென்னிக்கு கார்ல் மார்க்ஸ் காணிக்கையாக்கி இருந்தார்.

கார்ல் மார்க்ஸின் தந்தை ஹென்றி மார்க்ஸ், மகனுக்கு எழுதும் கடிதத்தில் எல்லாம் ஜென்னி நிலையை விளக்க மறந்ததில்லை.

ஒரு கடிதத்தில், "உன்னைவிட்டு ஜென்னியைப் பிரிப்பதென்பது எந்த ஓர் அரசிளங்குமரனாலும் முடியாத காரியம். இதைப் பற்றி எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. நீயும் இதை நிச்சயமாக நம்பு. அவள் தன்னு டைய உடலையும் ஆதாமாவையும் உன்னிலே ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்டாள். இது விஷயத்தில் உனக்காக அவள் மகத்தான தியாகம் செய்திருக்கிறாள்.அவளைப்போல சம வயதுடைய பெண்கள் இந்த மாதிரி யான தியாகத்தைச் செய்ய முடியாது. இதனை நீ மறந்து விடவே கூடாது" என்று கார்ல் மார்க்சின் தந்தை குறிப் பிடுகிறார்

கார்ல் மார்க்ஸிற்கும் ஜென்னிக்கும் பாலமாக இருந்த கார்ல் மார்க்சின் தந்தை ஹென்றி மார்க்ஸ், 1838 - ல் மறைந்தார். இதன்பின் கார்ல் மார்க்ஸ் குடும்பத்தில் தலைகீழ் மாற்றம் 

ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் தாய் கார்ல் மார்க்ஸிற்கு அனுப்பிவந்த சிறு தொகையையும் நிறுத்தினார்.

இதுபற்றி 'ஆர்னால்ட் ரூகே' 

என்பவருக்கு 1842 ஜூலை 9 - ல் எழுதிய கடிதத்தில், "என் குடும்பத்தில் ஏற்பட்ட மிகவும் மகிழ்ச்சியற்ற குழப்பங்களால் என் நேரம் பாழ் படுத்தப்பட்டு விட்டது. குடும்பத்திற்குச் செல்வம் இருந்தபொழுதிலும், என்னுடைய பாதையில் செல்ல விடாமல் தடைக் கற்களைப் போடு கிறது. தற்சமயம் என்னை மிகவும் கடுமையான சிரமத்தில் வைத் துள்ளது" என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இந்தச் சூழலிலிருந்து கார்ல் மார்க்ஸ் விடுபடுவதற்கு ஜென்னியின் துணை தேவைப்பட்டது. அதனால், 1843 ஜூன் 13 அன்று 'க்ராயிஷ்னாக்' என்ற ஊரிலிருந்த பதிவு அலுவலகத்தில் ஜென்னியை கார்ல் மார்க்ஸ் திருமணம் செய்தார்.

ஆம்! திருமண நிச்சயம் நடந்து ஏழு ஆண்டுகள் கழித்துத்தான் ஜென்னி -

கார்ல் மார்க்ஸ் திருமணம் நடந்தது. இந்த ஏழாண்டுகால ஜென்னியின் மனப்புழுக்கத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது.

1843 அக்டோபர் மாதத்திலிருந்து ஜென்னியும் கார்ல் மார்க்ஸும் பாரிஸில் வாழ்க்கையைத் தொடங்கினர். இதன்பின் கார்ல் மார்க்ஸின் எழுத்துப் பணியும் இயக்கப் பணியும் தீவிரமாயிற்று.

கார்ல் மார்க்ஸின்  மனைவியாக ஜென்னி இருந்ததுடன் நண்பராகவும், ஆலோசகராகவும், முதல் விமர்சகராக வும் திகழ்ந்தார். இதற்குச் சான்றாக 1844 ஜூன் மாதத்தில் கார்ல் மார்க் ஸிற்கு ஜென்னி எழுதிய கடிதம் திகழ்கிறது.

அந்தக் கடிதத்தில், "மிகவும் அதிகமான வெறுப்புடனும் எரிச்சலுடனும் எழுதா தீர்கள். உங்களுடைய மற்ற கட்டுரை கள் எவ்வளவு அதிகமான விளைவை ஏற்படுத்தின என்பது உங்களுக்கே தெரியும். எதார்த்தமான முறையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் இலேசாகவும் எழுதுங்கள் என்று ஜென்னி குறிப்பிடுகிறார்.

கார்ல் மார்க்ஸ் ஜென்னி இல்லற வாழ்க்கை துயரங்கள் நிறைந்த

தாகவே இருந்தது. அன்றாடச் செலவுக்குக்கூட அவர்கள் விழி பிதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜென்னி பட்ட துயரங்கள் கல் நெஞ்சையும் கரைத்துவிடும். இந்தக் காலகட்டத்தில் அவர் எழுதுகிறார்: "என் மார்பில் ஏற்பட்ட கட்டியால் என் குழந்தைக்கு என்னால் பால்கூட கொடுக்க முடியவில்லை. இதற்கு ஒரு தாதிப் பெண்ணை வைத்துக் கொள்ள வும் எங்களுக்கு பொருளாதார வசதி யில்லை. வேறு வழியின்றி என் குழந்  தைக்கு நானே வலியைப் பொறுத்துக் கொண்டு பால் கொடுத்தேன். பாலை யும் என் மார்புக் கட்டியில் இருந்து வடிந்த சீழையும் சேர்த்துக் குடித்ததது. ஒருநாள் அந்தக் குழந்தை செத்தும் போனது" இதுபோன்று ஜென்னி எழுதிய கடிதங்கள் அவருடைய தியாகத்திற்குச் சான்றுகளாகும்.

1881 டிசம்பர் 2 அன்று ஜென்னி மறைந் தார். இந்த இழப்பு கார்ல் மார்க்ஸை சோகத்தில் தள்ளியது. இதைத் தொடர்ந்து கார்ல் மார்க்ஸின் மூத்த குழந்தையும் மரணத்தைத் தழுவியது. இந்தக் குழந்தையின் பெயரும் ஜென்னிதான். மனைவி ஜென்னி,  மகள் ஜென்னி மறைவினால் கார்ல் மார்க்ஸ் ஒடிந்து போனார்.

1883 மார்ச் 14 அன்று கார்ல் மார்க்ஸும் மறைந்தார்.

பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து, சின்னஞ்சிறு வயதிலேயே கார்ல் மார்க்ஸ்மீது அன்பு கொண்டு, அந்த அன்பைக் காதலாக்கி, காதலை இல்லறமாக்கி, அந்த இல்லறத்தின் பயனாகக் குழந்தைகளுக்குத் தாயாகி, வறுமை நிலையின்போது கார்ல் மார்க்ஸிற்கே தாயாகி, சோகத்தை மட்டுமே வாழ்வின் பெரும்பகுதியாகக் கொண்டு வாழ்ந்து சிறந்த ஜென்னி யின் தியாகத்தை எப்படி மறப்பது?

ஆம்! உலக உழைக்கும் மக்களுக்கு கார்ல் மார்க்ஸ் உயிர் போன்றவர். அவருக்கு ஏங்கெல்ஸும் ஜென்னியும் இருவிழி போன்றவர்கள்.  இதில் எவருடைய தியாகமும்  இளைத்த தன்று.

ஆம்! கார்ல் மார்க்சும் ஏங்கெல்ஸும் ஜென்னியும் உழைக்கும் மக்களின் மும்மூர்த்திகள்!      

(இன்று (05.05.2022) மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்)

Wednesday, May 4, 2022

திருவிதாங்கூர் அலங்கோலம்

 திருவிதாங்கூர் அலங்கோலம்

       - தந்தை பெரியார்

திருவிதாங்கூர் திவான் ஸர்.சி.பி.ராமசாமி நடத்தும் ஹிட்லர் தர்பாரைக் கண்டித்து சென்னை "ஹிந்து" பத்திரிக்கை ஒரு நீண்ட தலையங்கம் எழுதத் துணிந்து முன் வர வேண்டுமானால் திருவிதாங்கூர் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்க வேண்டுமென்று நாம் கூறவும் வேண்டுமா?

ஆம்! திருவிதாங்கூர் நிலைமை இனி ஒரு நாளும், எவராலும் பரிகரிக்கவே முடியாதபடி அவ்வளவு பாழாகப் போய் விட்டது. 

சர்.சி.பி. திவானாயிருக்கும் வரை திருவிதாங்கூர் நிலைமை சீர்படாது என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. சர்.சி.பி.யின் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழை, கோட்டயம் ஆகிய நான்கு நகரங்களிலும் சர்.சி.பி. சர்க்கார் பிறப்பித்திருக்கும் தடை யுத்தரவுகளை மீற திருவிதாங்கூர் சமஸ்தான காங்கரஸ் நிர்வாகிகள் தீர்மானித்து விட்டனர்.

இப்பத்திரிக்கை இன்று வெளிவருமுன் இந்த நான்கு நகரங்களிலும் சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பது நிச்சயம். தர்மராஜ்யம் எனப் புனை பெயர் பெற்ற திருவிதாங்கூரிலே கலவரங்களும், தடை யுத்தரவுகளும், சட்ட மறுப்புகளும், "அரஸ்டுகளும்" தாண்டவமாடுவது சமாதானப் பிரியர்களும் சாதுக்களுமான திருவிதாங்கூர் பிரஜைகளுக்கு வியப்பாகவும், திகைப்பாகவும், நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

கொடிய யதேச்சாதிகாரி

ஆனால் என் செய்வது? துரதிர்ஷ்ட வசமாக ஒரு கொடிய யதேச்சாதிகாரி கையில் திருவிதாங்கூர் சமஸ்தானம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. மகாராஜாவோ உலக அநுபவம் இல்லாத ஒரு இளைஞர். தம்மால் - நியமிக்கப்பட்ட திவானைக் கண்டிக்க அல்லது கல்த்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்ப அவருக்கு இருக்கும் அதிகாரத்தைப் பிரகாயமே செய்ய முடியாதபடி சில கூட சக்திகள் அவருக்கு முட்டைக்கட்டை போடுகின்றன. 

சமஸ்தான உள்நாட்டு விவகாரங்களில் தடையிடக் கூடாதென்ற சம்பிரதாயம் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் தடைக்கல்லாக நிற்கிறது. மேலும் 10 வருஷம் திருவிதாங்கூரில் ஹிட்லர் தர்பார் நடத்துவதற்கு மகாராஜா அவர்களிடமிருந்து ஸர்.ஸி.பி. அதிகார மாத்திரமும் பெற்று விட்டார்.

இந்நிலையில் அவரது யதேச்சாதிகாரத்தைத் தடுக்கச் சக்தியில்லாத நிலைமையில் சமஸ்தான மக்கள் இருந்து வருகிறார்கள். எனினும் எல்லாருமே வாயை மூடிக் கொண்டிருந்தால் சமாதானம் பாழாகி விடுமே என அஞ்சி சமஸ்தான க்ஷேமத்தில் ஆர்வமும், கவலையும் கொண்ட சமஸ்தானப் பிரஜைகள் சிலர் சமஸ்தான க்ஷேமத்துக்காக எத்தகைய தியாகமும் செய்வதெனத் துணிந்து முன் வந்து விட்டனர். 

ஸர்.ஸி.பி. கோபத்துக்கு ஆளான திருவிதாங்கூர் சமஸ்தான காங்கரஸ் நிர்வாகிகள் செய்த பாபம் என்ன?

திருவிதாங்கூருக்கு பொறுப்பாட்சி வேண்டுமென அவர்கள் கூறினார்கள். இதுவே அவர்கள் மீது ஸர்.ஸி.பி. பழிக்குப்பழி வாங்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணம். கொச்சி சமஸ்தானத்தில் பொறுப்பாட்சிக்கு அடிகோலப்பட்ட பிறகும் சமஸ்தானங்களில் பொறுப்பாட்சிக்கு இடமே இல்லையென ஸர்.ஸி.பி. பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். 

ஆகவே அவர் திவான் பதவி வகிக்கும்வரை அவரது யதேச்சாதிகாரத்துக்கு பங்கம் ஏற்படக் கூடாதென்பதே அவரது நோக்கம். எனினும் சமஸ்தான காங்கரசுக்குப் போட்டியாகத் தோன்றியிருக்கும் தேசீய காங்கரஸ்காரர் அவர்கள் இஷ்டப்படி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அவர்கள் லட்சியமும் பொறுப்பாட்சி என்றே சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர்கள் மீது ஸர்.ஸி.பி.சர்க்கார் தடையுத்தரவுகள் பிறப்பிக்க வில்லை.

இம்மாதிரி பாரபட்சம் காட்டப்படுவதற்குக் காரணம் என்ன என்று கேட்டால் சமஸ்தான காங்கரஸ்காரர் ராஜத்துரோகிகள் என்றும், சர்க்காரைக் கவிழ்க்க இரகசியமாக வேலை செய்கிறார்கள் என்றும் ஸர்.ஸி.பி.சர்க்கார் கூறுகிறது. ஆனால் சமஸ்தான காங்கரஸ்காரர் முதல் கூட்டம் கூட்டும் முன்னமேயே - அவர்களது நோக்கம் என்ன என்பதை வெளியிடு முன்னமேயே அவர்கள் மீது ஸர்.ஸி.பி. சர்க்கார் தடையுத்தரவு போட்டுவிட்டதே என்றால் அதற்கு பதில் இல்லை.

அந்தரங்கக் காரணம்

ஆகவே சமஸ்தான காங்கரஸ்காரர் பொறுப்பாட்சிக்காகக் கிளர்ச்சி செய்வதே ஸர்.ஸி.பி. சர்க்கார் கோபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுவது சரியல்ல. அந்தரங்க காரணம் வேறாகவே இருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன? சமஸ்தான காங்கரஸ் வாதிகள் ஸர்.ஸி.பி. சர்க்கார் ஊழல்களை வெட்டவெளிச்சமாக்கி விட்டனர்.

மேற்கொண்டு 10 வருஷம் திவானாக இருக்க ஸர்.ஸி.பி.மகாராஜா அவர்களிடமிருந்து அதிகாரப் பத்திரம் பெற்று விட்டதை அவர்கள் ஆதரிக்கவில்லை. ஸர்.ஸி.பி.திருவிதாங்கூரை விட்டு வெளியேறினாலல்லாமல் சமஸ்தானம் உருப்படாது எனக் கூறுகின்றனர். இதுவே ஸர்.ஸி.பி. சர்க்கார் கோபத்துக்குக் காரணம். தம் மீது பழி சுமத்துவதும் ராஜ துரோகமென ஸர்.ஸி.பி. பகிரங்கமாகக் கூறுகிறாராம்.

ஸர்.ஸி.பி. ஆட்சி ஊழல்களை மக்களும் வெறுக்கத் தொடங்கி விட்டனர். திருவிதாங்கூர் பொருளாதார அபிவிர்த்திக்காக ஸர்.ஸி.பி. வகுத்திருக்கும் ஆக்கத் திட்டங்கள் திருவிதாங்கூர் செல்வநிலையை உயர்த்துவதற்கு பதிலாக ஸர்.ஸி.பி.க்கு வேண்டியவர்கள் சிலர் செல்வநிலையை உயர்த்துவதற்கே அதிகம் உதவி புரியக் கூடியவைகளாக இருக்கின்றன என திருவிதாங்கூர் மக்கள் சரியாகவோ, தப்பாகவோ நம்புகிறார்களாம். ஸர்.ஸி.பி.யின் ஆக்கத் திட்ட ஊழல்களை விளக்கி சமஸ்தான காங்கரஸ்காரர் பகிரங்க அறிக்கைகளும் வெளியிட்டிருக்கிறார்கள். ஸர்.ஸி.பி. நேர்மையுடையவராக இருந்தால் அந்த பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு நேர்மையான முறையில் பதிலளிக்க முன் வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சமஸ்தான காங்கரசையே ஒழித்துவிட ஸர்.ஸி.பி. முடிவு செய்திருப்பது அவரது கோழைத்தனத்தையும், நிர்வாக ஊழல்களையும் உறுதி செய்யக் கூடியதாக இருக்கிறது.

பயங்கரக் குற்றச்சாட்டு

சமஸ்தான காங்கரஸ் மீதுள்ள கோபத்தினால், இந்தியா முழுதும் தொழில் நடத்திப் பிரக்கியாதி பெற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தை விருத்தி செய்து வந்த திருவிதாங்கூர் நாஷனல் அண்டு கொயிலோன் பாங்கியை ஒழிக்க அவர் சூழ்ச்சி செய்தார் எனக் கூறப்படுவது அவருக்கு அழியாக் களங்கத்தையுண்டு பண்ணும் ஒரு பயங்கரமான குற்றச்சாட்டாகும். அந்தக் குற்றச்சாட்டுக்கு நேர்மையான பதிலளியாதவரை திருவிதாங்கூர் மக்கள் அவரை வெறுக்கத்தான் செய்வார்கள். மற்றும் சமஸ்தான காங்கரசை எதிர்க்க ஒரு போட்டி காங்கரஸை அவர் தோற்றுவித்திருப்பதாகக் கூறப்படுவது அவரது அரசியல் ஞானசூனியத்தையே காட்டுகிறது. கெளரவமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாயிருக்கும் ஒரு நிருவாக அதிகாரியின் ஆதரவை பெற்ற அந்த ஸ்தாபனமானது பொது ஜன ஆதரவைப் பெறுமா? பொது ஜன ஆதரவு பெறாத ஒரு ஸ்தாபனத்தின் துணையால் தமது பெயரையும், வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ளலாமென எந்த விவேகியான அதிகாரியாவது எண்ணுவாரா! தற்பொழுது சர்வாதிகாரியாக விளங்கும் ஸர்.ஸி.பி. மூலம் பல நலன்கள் பெறலாம் என்ற ஆசையினால் சில சமய சஞ்சீவிகள் ஸர்.ஸி.பி.யின் திருவிதாங்கூர் நேஷனல் காங்கரசில் மெம்பர்களாகி தாமும் பொறுப்பாட்சிக்காக உழைப்பதாய் பொது ஜனங்களை ஏமாற்ற முன் வரக்கூடும். ஆனால் அவர்களைப் பார்த்து பொது ஜனங்கள் சிரிப்பாய் சிரித்து விடுவார்கள் என்பது மெய். திருவிதாங்கூர் நேஷனல் காங்கரஸ் ஆதரவில் கூட்டப்பட்ட ஒரு கூட்டமாவது இது வரை வெற்றிகரமாக முடிவு பெறாததே நமது கூற்றுக்கு ஆதாரம். பொதுவாக திருவிதாங்கூருக்கு இது ஒரு சோதனை காலமென்றே தோற்றுகிறது. சமஸ்தான மக்கள் ஆண்மையோடும், அமைதியாகவும் நடந்து கொண்டால் சமஸ்தான நெருக்கடியை வெகு சுளுவாக சமாளித்து விடலாம். தற்காலம் இதற்கு மேல் எழுத நமக்கு மனம் வரவில்லை. 

(26.08.1938 "விடுதலை" தலையங்கம்)


குடிஅரசு - கட்டுரை - 28.08.1938