Thursday, July 28, 2022

உண்ணாவிரதத்தை எதிர்த்த பெரியார்

பட்டினியில் எனக்கு நம்பிக்கையில்லை

தந்தை பெரியார்

மற்றும் தோழர் ஜெகதீசனின் பட்டினியைப் பற்றி சிலர் பேசினார்கள். இம்மாதிரி பட்டினியைப் பற்றி எனது அபிப்பிராயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பட்டினியில் எந்த விதமான ஆத்மார்த்தம் என்பதோ தெய்வீகம் என்பதோ ஆன தத்துவம் இருக்கிறது என்பதை நான் என்றும் நம்பினதில்லை.

அதனால் எதிரியை மனம் இளகச்செய்து விடலாம் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வித பட்டினியையும் நான் ஆதரித்து அதனால் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்பதாக நான் ஆசைப்பட்டதில்லை. 

தோழர் ஸ்டாலின் தான் தப்பு என்று காரியத்தை ஒழிக்க சரி என்ற பட்ட காரியத்தைச் செய்ய வேண்டுமென்று கருதி அதற்காக ஜீவன்களுக்கு மிக்க அருமையான உயிரைக் கொடுக்க முன் வந்த வீரத்தை மதிக்க வேண்டியது என்பதை மறுக்க முடியாது.

 அன்றியும் தோழர் ஸ்டாலினின் பட்டினியானது காந்தியாரின் பட்டினித் தத்துவத்தை வெளியாக்கவும் தோழர் காந்தியாரின் இனி இம்மாதிரி பட்டினி காரணங்களால் மக்கள் ஏமாந்து போய்விட மாட்டார்கள் என்பதையும் விளக்கவும் அதாவது தோழர் ஸ்டாலின் பட்டினியை காந்தியாரும் காந்தி பக்தர்களும் எப்படி கருதுகிறார்களோ அதுபோலவே இனிமேல் ஏதாவது ஒரு காரியத்துக்கு காந்தியாரும் மற்றவர்களும் பட்டினி இருந்தால் அப்படியே கருதும்படி செய்யவும் இப்பட்டினி பயன்படுவதால் இது ஒரு நல்ல சம்பவம் என்று சொல்ல பின்வாங்கவில்லை.

காந்தியார் விஷமத்தனம்

ஆனால் காந்தியார் தான் பட்டினி இருந்த காலத்தில் அதற்கு அவர் சொல்லிக்கொண்ட காரணங்களும் அதற்காக மற்ற மக்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று கட்டாயப்படுத்திய செய்கைகளும் உலகம் அறிந்திருந்தும் தோழர் ஸ்டாலின் பட்டினியைப்பற்றி மிக்க விஷமத்தனமாக கொடுத்த அபிப்பிராயத்தை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. 

இதிலிருந்தாவது பொது ஜனங்களுக்கு காந்தியாரின் உண்மையான நிலை தெரிய சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்பதற்காகவும் இந்த பட்டினி வரவேற்கத்தக்கதாகின்றது என்கின்றேன்.

மக்கள் உலகில் இறப்பது இயற்கையானாலும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் இறந்தே தீர வேண்டியது முடிவே ஆனாலும் தானாகவே பட்டினி கிடப்பதன் மூலம் சாகத் துணிவது என்பது பொது மக்கள் கவனத்தை இழுக்க மிக்க பயன்படத்தக்கதாய் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில் இக்காரியத்துக்காக மனிதத் தன்மைப்படி பரிதாபப்படா விட்டாலும் இதை குறை கூறுவதும் குற்றம் சொல்வதும் சிறிதும் யோக்கியமான காரியம் ஆகாது என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை.

கடற்கரை சொற்பொழிவு 10.7.1938 குடி அரசு.

Tuesday, July 26, 2022

ரிவோல்ட்

 "ரிவோல்ட்"

திராவிடம் ஊடகங்கள்

  “ரிவோல்ட்” என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றை சென்ற ஆறாம் தேதி செவ்வாய்க் கிழமை பட்டிவீரன்பட்டி திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்தி 7 ஆம் தேதி புதன் கிழமை முதல் இதழ் வெளிப்படுத்தி விட்டோம். இனி அதை ஆதரித்து அதன் கொள்கைகளை வெற்றி பெறச் செய்து வைக்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும்.

“ரிவோல்ட்” பத்திரிகையின் ஆரம்பத்தின் உத்தேசமெல்லாம் நமது நிலைமையையும் கொள்கையையும் தமிழ் மக்கள் தவிர மற்ற மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆவலேயாகும். நமது நிலைமை சென்னை மாகாணத்திலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷைகளை நாட்டு பாஷையாகக் கொண்ட பல ஜில்லாக்களுக்கே தெரியவில்லை என்றால் வெளி மாகாணங்களுக்கும் வெளி தேசங்களுக்கும் எப்படித் தெரிந்திருக்க முடியும்?

உதாரணமாக ஒரு சமயத்தில் இந்தியா மந்திரியுடன் திரு. டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது, “சென்னை பார்ப்பனரல்லாதார்களுக்காக பெரிய உத்தியோகங்கள் அளிக்கப்படவில்லை” என்று சொன்னபோது “திரு. க்ஷ.சூ. சர்மா என்பவர் இந்திய அரசாங்கத்தில் நிர்வாக சபை மெம்பராயிருந்து 6500 ரூபாய் சம்பளம் வாங்குகிறாரே, அது போதாதா” என்று இந்தியா மந்திரி சொன்னாராம். அதற்கு திரு. டாக்டர் நாயர் அவர்கள் "நான் இந்தியாவை விட்டு புறப்படும் வரை திரு. க்ஷ.சூ. சர்மா அவர்கள் பார்ப்பனராயிருந்தார், நான் புறப்பட்ட பிறகு அவர் ஏதாவது பார்ப்பனரல்லாதாராய் விட்டாரோ என்னமோ எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தயவு செய்து அவர் பார்ப்பனரல்லாதாராக ஆயிருப்பதாய் தங்களுக்கு வந்த செய்தியை காட்டுகிறீர்களா” என்று கேட்டாராம். அதன் பிறகு அந்த இந்தியா மந்திரி திடுக்கிட்டு, “நான் இத்தனை நாளாக அவரை பார்ப்பனரல்லாதார் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; இப்போது தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாய் இருக்கின்றது” என்று சொன்னாராம்.

அதுபோலவே சென்னையில் சென்ற வருடம் நடந்த காங்கிரசுக்கு கல்கத்தாவிலிருந்து வந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு. கோஸ்வாமி என்கின்றவரோடு நாம் பேசிக் கொண்டிருந்தபோது, “சென்னை மாகாணத்தில் தெருவில் நடக்கக் கூடாதவர்களும், கோவிலுக்குள் போகக் கூடாதவர்களும், தொடக்கூடாதவர்களும், நிழல் மேல் படக்கூடாதவர்களும் இருக்கின்றார்களே, அவர்களைப் பற்றி தங்கள் அரசியல் திட்டத்தில் என்ன கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கேட்டபோது, அவர் ஆச்சரியப்பட்டு, “அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. இது உண்மையா” என்று பக்கத்தில் இருந்த திரு.ஆர். கே. ஷண்முகம் செட்டியாரைக் கேட்டார். அதற்கு திரு.ஷண்முகம் செட்டியார் அவர்கள் சிரித்துக் கொண்டே, “இதற்கு சாக்ஷிக்காக அதிக தூரம் போகாதீர்கள். நானே சில கோவிலுக்குள் போகக் கூடாத ஜாதி என்பதைச் சேர்ந்தவன். ஹைக்கோர்ட்டு வரையில் விவகாரம் செய்து பார்த்தும் எங்களை அந்த கோவிலுக்குள் போகக்கூடாத ஜாதியிலேயே சேர்த்து தீர்ப்பு பெற்று விட்டார்கள். எனவே இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் உண்டா” என்று கேட்டார். பிறகு திரு. கோஸ்வாமி பட்ட ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.

இதுபோலவே பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். எனவே நம் நிலையையும் தேவையையும் வெளி நாட்டார்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியப்படுத்த வேண்டுமானால் தாக்ஷண்யமும் பயமும் சுயநலமும் அற்ற தன்மையில் தைரியமாய் வெளிப்படுத்தக் கூடிய ஒரு சாதனம் இருந்தாக வேண்டும் என்ற கருத்தைக் கொண்டே “ரிவோல்ட்” ஆரம்பித்து விட்டோம். அதன் கொள்கையைப் பற்றி நாம் அதிகமாக சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

முக்கியமாக அரசியல் துறையில் உழைக்க வேண்டும் என்பது அதன் கவலையல்ல. ஆனால் அரசியல் அயோக்கியத்தனங்களை தைரியமாயும் தாராளமாயும் வெளியாக்கி விடவேண்டும் என்பதே “ரிவோல்ட்”டின் பெருங்கவலைகளில் ஒன்றாகும். அதுபோலவே சாமியைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும் அதற்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அவற்றின் பேரால் நடைபெறும் அயோக்கியத்தனங்களையும் கொடுமைகளையும் அடிமைத்தன்மைகளையும் அறியாமையையும் வெளியாக்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது ஆகும்.

சுருக்கமாகவும் மொத்தமாகவும் கூறுமிடத்து இதற்கு முன் ஒரு தடவை அதாவது, “ரிவோல்ட்” பத்திரிகையை அரசாங்கத்தாரிடம் பதிவு செய்து கொண்ட சமயத்தில், அதன் கொள்கை என்ன என்பதாக அரசாங்கத்தார் அறிய விரும்பிய போது தெரிவிக்கப் பட்டதையே மறுமுறையும் தெரிவித்து இதை முடித்து விடுகின்றோம். அதாவது :-

“ரிவோல்ட்” என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து, இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் “குடி அரசு” என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ‘ரிவோல்ட்’ என்கின்ற வார்த்தைக்கு எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி, மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாக்ஷிப்படி சாத்தியமான வழிகளில் பிரசாரம் செய்வதே அதன் நோக்கம் என்பதாகும்.

இதற்கு முக்கிய பத்திராதிபராக திரு. எஸ்.ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் இருந்து வருவார். நாமும் அதில் பங்கு எடுத்து வருவோம். எனவே இதை வாலிப உலகம் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம். எம் வாலிப நண்பர்கள் ஆங்காங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் சந்தாதாரராய்ச் சேருவதுடன் ஒவ்வொருவரும் இது சமயம் மூன்று சந்தாதாரர்களுக்கு குறையாமல் சேர்த்து விட்டு மறு காரியம் பார்ப்பது என்கின்ற உறுதியைக் கொள்ள வேண்டுகின்றோம்.

சந்தா விபரம்

வருட சந்தா ரூ 4 - 0 - 0

மாணாக்கர்களுக்கு ரூ 3 - 0 - 0

வெளிநாட்டிற்கு ரூ 5 - 0 - 0

(விடுதலை 26.07.2022)

Monday, July 18, 2022

காலத்தை வீணடிக்கும் மூட நம்பிக்கை

 காலத்தை வீணடிக்கும் மூடநம்பிக்கை...

................................................................

நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....

.....................................................................

இராகுகாலம் 1 மாதத்திற்கு.. 1.30 X 30 = 45

ஒரு ஆண்டிற்கு........................ 540 மணி

எமகண்டம் 1 மாதத்திற்கு.... 1.30 x 30 = 45

ஒரு ஆண்டிற்கு....................... 540 மணி

அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)

ஒரு ஆண்டிற்கு...                     48x12 = 576 மணி

நவமி (மாதத்திற்கு 2 நாள்)

ஒரு ஆண்டிற்கு .......................48x12 = 576 மணி

மரணயோகம் 1 மாதத்திற்கு.. 1.30 x 30 = 45

ஒரு ஆண்டிற்கு 540 மணி

கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)

ஒரு ஆண்டிற்கு....                       864 மணி

பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)

ஒரு ஆண்டிற்கு.....                                   48x12=576 மணி

சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு

ஒரு நாள்..                                           .. 24 மணி

சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு

ஒரு நாள்................................                   :24 மணி

மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு

33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு......               33 x 24 =792 மணி

ஆக, மொத்தம்......                                    : 5052 மணி

(5052/24 மணி = 210 நாட்கள்)

ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.

மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத 

நம் நேரம் வீணடிக்கப்படுகிறது.

நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை முதலில் 

உடையுங்கள்...

வாட்ஸ் அப் பதிவிலிருந்து...

Tuesday, July 12, 2022

டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்

டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்

...சு. குமாரதேவன் ...

* தனது ஒன்பதாவது வயதில் (1929) செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் தன் தந்தையாருடன் கலந்து கொண்டு நாவலர் பார்வையாளராகப் பங்கேற்றார். பின்பு அவர் பேசாத ஊர், பங்கேற்காத இயக்கக் கூட்டங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்.

* நாவலர் என்ற அடைமொழி அண்ணா அளித்ததாகும். சமயச் சொற்பொழிவில் சிறந்த ஆறுமுகநாவலர், சபாபதி நாவலர் மற்றும் இலக்கியச் சொற்பொழிவில் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று சிலருக்கு மட்டுமே இருந்த பட்டம் நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பொருந்தியது. இலக்கியம், வரலாறு, சமயம், சட்டம், சமுதாயம் என்று எந்தத் தலைப்பிலும் ஆழமான, பொருட்செறிவான நகைச்சுவையுடன் கூடிய உரை என்பது நாவலரின் தனித்தன்மை. இதனால் அவர் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டு வந்தனர். கைகளை நீட்டி,குறுக்காக வளைத்து, உயரே தூக்கி ஏற்ற இறக்கத்தோடு பேசுவதை இன்றும் அவர் பேச்சை நேரில் பார்த்துக் கேட்டு ரசித்தவர்கள் அதே ரசனையோடு சொல்வார்கள்.

* ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மூக்கின் கீழே நடுவில் அடர்த்தியாகவும் பக்கவாட்டில் கோடாகவும் செல்லும் ஒரு மாதிரியான மீசை, நீளமான காலர் இல்லாத ஜிப்பா, நீளமான இரு பக்கமும் தவழும் துண்டு என பார்க்க கம்பீரமாக இருப்பார். குறிப்புகள் இல்லாமல் எந்தக் கூட்டத்திலும் பேச மாட்டார். அவர் பேச்சைக் கேட்டவர்கள் அந்தப் பேச்சின் ரீங்காரம் அவர் பெயரைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் உணர்வர்.

* 11-07-1920 இல் பட்டுக்கோட்டை அருகே திருக்கண்ணபுரம் என்ற ஊரில் ராஜகோபாலன் என்ற நீதிக்கட்சி பிரமுகருக்கு நாராயண சாமி என்ற இயற்பெயருடன்  மகனாகப் பிறந்தார். ஒரு தமக்கை, இரு தம்பிகள், ஒரு தங்கை என உடன் பிறந்தோர் அனைவரும் திராவிடர் இயக்கக் கொள்கைளில் பற்றுள்ளோர்.இவர் தம்பி சீனிவாசனும் திராவிடர் இயக்கப்பற்றால் நெடுஞ்செழியன், செழியன் என்று பெயர் மாற்றிக் கொண்டனர். நாவலரின் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவத் தோழர்கள் பேராசிரியர் அன்பழகன் மற்றும் புலவர் நன்னன் ஆகியோர்.அண்ணாமலைப் பல்கலையில் திராவிடர் இயக்கம் காலூன்றக் காரணமானவர்களில் நாவலர் பங்கு அதிகம்.

* இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே முதல் மாணவர். இலக்கியம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் போன்றவற்றில் எந்தக் கேள்வியைக் -கேட்டாலும் மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழி வாற்றுவதில் வல்லவர். நன்றியுரை ஆற்ற நாவலரைத் தான் அழைப்பார்கள். அந்த நன்றியுரை இரண்டரை மணி நேரம் வரை நீளும்.மதுவுண்ட வண்டு போல் மாணவர்கள் மயங்கிக் கேட்பர்.

* நாவலரின் பேச்சைக் கேட்டதிருவாரூர்க் கட்சிக்காரர் ஒருவர், மாணவர்களான நாவலரையும், பேராசிரியர் அன்பழகனையும் அழைத்து பொதுக் கூட்டத்தில் பேச வைத்தார். அவர் வேறு யாருமல்ல., கலைஞர் தான்.

* தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் சிறந்த பேச்சாளராகலாம் என்பதற்கு நாவலர் வாழ்வு சிறந்த உதாரணம்.ஆரம்பத்தில் திக்குவாய்ப் பிரச்சினையால் சரியாகப் பேசமுடியாமல் தவித்த இவருக்கு முறையாகப் பேச்சுப் பயிற்சி தந்தவர் சக மாணவரான க.இராமையா (பின்னாளில் பேராசிரியர் அன்பழகன்).வேகமாகப் பேசும்போது திக்கித் திணறி வார்த்தைகள் வராதபோது 'ங்' என்று ஒரு விதமாக சத்தம் வந்தது. அதையே அவரது பேச்சுப் பாணியாகக்  கொண்டு வெற்றி பெற்றார். பலர் அவர் போல் பேச வேண்டும் என்று பயிற்சி எடுத்தனர்.

* சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைப் பரப்பிய மாணவர்கள் நன்னன், செழியன், அன்பழகன் வரிசை யில் முதன்மைப் பங்கு வகித்தவர் நாவலர்தான். தந்தை பெரியார், அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, சி.பி. சிற்றரசு என்று பல திராவிட இயக்கத்தலைவர்களை அழைத்து சொற்பொழிவாற்ற வைத்தார்.

* பெரியாரைத் தன் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரோடு எம்.ஏ.பட்டம் பெற்றவுடன்  நான்கு ஆண்டுகள் உடனிருந்து பணிபுரிந்தார். சிக்கனத்தில் பெரியாரையும் மிஞ்சும் வாழ்வு வாழ்ந்தார்.

* 1937ல் அண்ணா பற்றி கேள்விப்பட்டு அவரது பேச்சைக் கேட்டு அவரிடம் பழகியது 1943ல் தான். அப்போது தொடங்கிய பழக்கம், 1969 வரை தொய்வின்றித் தொடர்ந்தது. இலக்கியம் பற்றி நாவலரைப் பேசச் சொல்லி அண்ணா கேட்டு இன்புறுவார். ஆரம்பத்தில் படித்தவர்கள் மட்டுமே கேட்டு இன்புற்ற பேச்சு பெரியாரால் பாமரரும் கேட்டு இன்புற மாற்றப்பட்டது.

* கல்லூரிக் காலங்களில் நீண்ட இளம் தாடி, கருப்புநிற புஷ்கோட், ஆறடிக்கும் மேலான உயரம் என்று நாவலரின் தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும்.  பேச ஆரம்பித்தால் பல இடங்களில் கலவரமும் வரும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்று, தான் சொல்ல வந்த கருத்தைச் சொல்லி விட்டுத்தான் அமர்வார், மாணவரான இளந்தாடி நெடுஞ்செழியன்.

* சங்க இலக்கியங்கள், ராமாயணம், பெரியபுராணம் மற்றும் இலக்கண நூல்களைப் படித்து அதை மனப்பாடமாக உரிய இடத்தில் சொல்லி தன் கொள்கைக்கு மிகப்பெரிய ஆதரவைத் திரட்டுவார் நாவலர். மனப்பாடம் எப்படி செய்வது என்பது பற்றி கேட்டால் முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் எல்லாம் வரும் என்று சொல்லி அதற்குத் துணையாக சங்க இலக்கியப் பாடலொன்றைக் கூறுவார்.

* பாரதிதாசன் பாடல்களை நாவலர் போல் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் யாரும் இல்லை எனலாம். பேச்சு ஆரம் பிக்கும் போதும், இடையிலும், முடிக்கும் போதும் பாரதிதாசன் பாடல்களை எழுச்சியோடு பாடி, தான் சொல்லவரும் கருத்துக்கு வலுசேர்ப்பார் நாவலர். உணர்ச்சி வயப்பட்டு பாரதிதாசன் பாடல்களை பேசிடும் அழகே தனி. ஆரம்பிக்கும் போதும் இடையிலும் முடிவுறும் போதும் பாரதிதாசன் கவிதைகள் இன்றி முற்றுப்பெறாது அவர் பேச்சு.வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என்று முடிக்கும் போது கேட்கும் கூட்டம் உணர்வு பொங்க முழுக்கமிடும் அதிசயம் அவர் பேச்சுக்கும்  உண்டு.

* இடி மழைபோல், அருவி போல் காட்டாற்று வெள்ளம் போல் நாவலர் பேசினாலும் நகைச்சுவை அங்கே இழையோடும். அந்த நகைச்சுவை மாற்றுக் கட்சியினராலும் ரசிக்கப்படும். அப்போதைய அரசியலை இணைத்து அதில் சேர்த்து விட்டு கூட்டம் ரசித்து சிரிக்கும் போது அமைதியாகப் பார்த்து ரசித்து அடுத்த செய்திக்குப் போவார்.

* நாவலரின் தனித்தன்மையான பேச்சைக் கண்டு கேட்டு வியந்த பெரியார், நாவலரை தன்னுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அண்ணா அவரது பேச்சை வியந்து நாவலரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைத்துப் பெருமைப்படுத்தினார். அவர் பேசாத ஊர் இல்லை. அந்தந்த ஊருக்கேற்ப, மக்களின் மனநிலையறிந்து பேசி அடுத்த ஊர் சென்றவுடன் அவர் பேசியதுநகர் முழுவதும் பிரபலமாகி இருக்கும்.

* "சும்மா"என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் நம் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைத்துப் பேசுவார். இது சும்மா பேசியது அல்ல நீங்கள் சிந்திக்கப் பேசியது என்று இறுதியில் ஒரு "பஞ்ச்"வைப்பார்.

*  அண்ணா, நாவலரைப் பொதுச் செயலாளராக்கி 'தம்பி வா' தலைமையேற்க வா. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று அழைத்தார். தம்பிக்கு எழுதிய பல கடிதங்களில் நாவலரின் பெருமைகளைப் பல படப் புகழ்ந்திருப்பார்.

* 1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் 207 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் நாவலர். நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அண்ணா "ஒரு தங்கத்தை உங்களுக்கு அளித்தேன் அதைப் பயன்படுத்தாமல் என்னைப்பங்கப்படுத்தி விட்டீர்கள்" என்று வருத்தப்பட்டுப் பேசினார்.

* இலக்கிய உலகிற்கு நாவலர் அளித்த அற்புதமான கொடை அவரது திருக்குறள் உரை, பாவேந்தர் கவிதைகள் திறனாய்வு, திராவிட இயக்க வரலாறு போன்ற நூல்களாகும், திருக்குறளில், நன்கு ஆழங்கால்பட்ட நாவலர், திருக்குறள் மனு தர்மத்திற்கு எதிரான நூல் என்று ஒரு சிறந்த ஆய்வுரையினை அளித்திருப்பார். மதக்கருத்து குறளில் இல்லை என்பதை தனது நெடிய ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். இறை, ஊழ், தாமரைக்கண்ணான், இந்திரன் போன்ற இந்துமதம் சம்மந்தமான கருத்துக்கள் உள்ளன என்பதை மறுத்து அவர் சொன்னதற்கு இன்றுவரை யாரா லும் மாற்றுக் கருத்து சொல்ல முடிய வில்லை.

* அரசியல் வாழ்வில் பல மாறுபாடு களை எடுத்திருந்தாலும் அடிப்படை திராவிடர் இயக்கக் கொள்கைளில் இறுதி வரை மாறாமல் இருந்தார் நாவலர்.

* திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின்  "கீதை யின் மறுபக்கம்"என்ற நூல் அறிமுக விழாவில் அவர் ஆற்றிய ஆய்வுரை போற்றத்தக்க ஒன்று. அந்தப் பேச்சின் ஒலிவடிவம் கேட்போர் கீதை பற்றிய தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வர். ஆணித்தரமாக, தக்க சான்றுகளோடு, சரளமாக அவர் கூறிய கருத்துக்கள் தர்க்கத்தின் இலக்கணம் என்று கூறலாம்.

* தன் அமைச்சர் பதவிக்காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அளிக்கப் பட்ட வரவேற்பை  ஏற்க மறுத்த நாவலர், தனக்கிட்ட பணியான ஆய்வுப் பணியை சிறப்புடன் செய்து முடித்தார். இது அப் போது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.

அப்பொழுது "சபாஷ் சபாஷ் நெடுஞ்செழியன்" என்று பாராட்டினார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். கோப்புகளைக் கையாள்வதிலும், முடிவெடுப்பதிலும் நாவலர் விரைந்து சட்டத்திற்குட்பட்டு முடிவெடுப்பார்.

* பெரியாரின் அணுக்கத் தொண்டராக இருந்ததால், தன் திருமணத்தைக்கூட திருமணம் முடிந்தவுடன் தான் அறிவித்தார். ஏன் உங்கள் திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை என்று கேட்ட தன் நண்பரிடம், எனக்குத் தானே திருமணம் அதில் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டு வாயடைத்தார். சிக்கனம் என்பது திருமணத்திலும் இருக்க வேண்டும் என்பது நாவலரின் திடமான கருத்து. 

ஆயிரக்கணக்கான சுய மரியாதைத் திருமணங்களை நடத்திய நாவலர், மதிமுக தலைவர் வைகோ, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் திருமணங்கள் நாவலர் நடத்திய திருமணங்களே.ஆடம்பரமாக நடக்கும் திருமணங்களில் கலந்து கொண்டு ஆடம்பரம் தேவையில்லை என்பதை தன் பாணியில் இடித்தும் காட்டுவார்.

* நாவலர் எழுதிய நூல்களில் "மதமும் மூடநம்பிக்கையும் "

என்ற நூல் மிகச் சிறப்புடையது. தன் வாழ்க்கை வரலாற்றை "என் வாழ்வில் கண்டதும் கேட்டதும் " என்று எழுதினார். ஒரே தலைப்பைப் பலமுறை பேசினாலும், ஒவ்வொருமுறையும் அந்தப் பொருள் பற்றி வித்தியாசமாகக் குறிப்பில்லாமல் பேசமாட்டார்.

 *பகுத்தறிவாளர்கள்

பன்னெடுங்காலம் வாழ்பவர்கள் என்பதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுக்கள், கேட்க மலைப்பாக இருக்கும் இறுதியாக பெரியார் வாழ்ந்தது மிக அதிகம் என்று முடிப்பார். நாவலரும் 80 வயதை தாண்டி 2000ஜனவரி 12ஆம் நாள் மறைந்தார். அதற்கு முன் சென்னை பெரியார் திடலில் 31.12.1999 அன்று திராவிடர் கழகம் நடத்திய புத்தாயிரம் நிகழ்ச்சியில் இறுதியாகக் கலந்து கொண்டு பேசினார். நாவலர் என்னும் பெரியார் தொண்டரின் இறுதிப் பேச்சு பெரியார் திடலில் தான் கடைசியாக முடிவுற்றது.திராவிடர் கழக மேடையில் ஆரம்பமான அவர் பேச்சு அதே மேடையில் இறுதியாக முடிவுற்றது.

* "நாவெல்லாம் தமிழ் மணக்க, செவியெல்லாம் தமிழ் மணக்க, சிந்தையெல்லாம் தமிழ் மணக்க அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர், தன்மான இயக்கத்தின் தூண் சாய்ந்துவிட்டதே என தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார். அவர் புகழ் வாழ்க. அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க " என்று கலைஞர் தன் இரங்கலுரையில் குறிப்பிட்டார்.

* நீண்டதொரு இரங்கல் அறிக்கை அளித்த ஆசிரியர் கி.வீரமணி பல தகவல்களை அதில் அளித்தார்.

* நாவலர் கொள்கைப்படி எவ்வித மூடச் சடங்கும் இல்லாமல் அவர் இறுதி நிகழ்வு நடந்தது. தன் நீண்ட நாள் நண்பருக்கு ஓடோடி வந்து இறுதி மரியாதை செலுத்தினார் முதல்வர் கலைஞர்.தி.க., தி.மு.க., மதிமுக., கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. நாவலர் நிறைவான கொள்கை வாழ்வு வாழ்ந்து நிறைந்தார்.

* மனிதன் சிந்திக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்க மறுப்பவன் 

அவனுக்குத் தானே துரோகியாகிறான். சிந்திக்க அஞ்சுபவன் மூடநம்பிக்கையின் அடிமையாகிறான் என்று நாவலர் பேசிய பேச்சு இன்றும் நம் காதுகளில் ஒலிக்கிறது.

வாழ்க டாக்டர் நாவலர்!


Saturday, July 9, 2022

சார்லஸ் பிராட்லா

 கே. ராஜூ புதிய ஆசிரியன்

ஜுன் 13 பதிவு…

வரலாற்றில் இடம் பிடித்த சார்லஸ் பிராட்லா

நாத்திகம் பேசியதால்.. பதவியேற்பு நிறுத்தப்பட்டு, 

நான்கு முறை நடந்த மறு தேர்தல்களிலும் வென்று..சாதனை படைத்தவர் சரித்திர நாயகர் சார்லஸ் பிராட்லா (1833 – 1891).

இவரின் பிடிவாதத்தால் 

பிரிட்டனின் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

சார்லஸ் பிராட்லா,  நாத்திகர். 

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். 

" கடவுளின் சாட்சியாக"பதவி ஏற்குமாறு கூறினார்கள்.  

ஆனால் அவரோ, 

"இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைத்துவர முடியாது"  என்று கூறி, 

கடவுளின் பெயரால் பதவி ஏற்க உறுதியாக மறுத்துவிட்டார்.

"உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா? இல்லையா? என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை; 

இந்தப் பேரவை நம்புகின்றது, 

இந்த நாட்டின் அரசு அமைப்புச் சட்டம் நம்புகின்றது, அதற்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்; எனவே, 'கடவுள் சாட்சியாக' என்று கூறித்தான் நீங்கள் பதவி ஏற்க வேண்டும்; 

அதற்கு நீங்கள் மறுப்பீர்களேயானால் உங்கள் தேர்வு நீக்கப்படும்" என்றார்கள்.

அதற்கு சார்லஸ் பிராட்லா, 

"இந்தப் பதவி  ஐந்து ஆண்டுகள்தான்; 

இதற்காக, என் வாழ்நாள் முழுமையும் நான் கட்டிக்காத்துவரும் என்கொள்கைகளை விட்டுவிடமுடியாது; 

நீங்கள், உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம் என்று கூறி விட்டார்.

அவர்களும் அவர் உறுப்பினர் ஆக முடியாது என்று அறிவித்தனர்.

அவருடைய தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடந்தது; 

மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்; 

மீண்டும் வெற்றிபெற்றார்; 

மீண்டும் அதே பிரச்சனை!

"எனக்கு ஒரு கொள்கை - ஒரு நம்பிக்கை இருக்கின்றது... அதை எந்தக் காரணத்திற்காகவும் என்னால் விட்டுத்தர இயலாது"

என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் பிராட்லா.

மீண்டும் அவர் தொகுதிக்குத் தேர்தல் நடந்தது.

 மூன்றாவது முறையும் பிராட்லா போட்டியிட்டார்; இந்த முறை முந்தைய இரண்டுமுறை வாங்கிய வாக்குகளைவிடக் கூடுதல்  வாக்குகள் வாங வெற்றி பெற்றார் பிராட்லா!

இம்முறை கெஞ்சினார்கள்

"தயவுசெய்து பிடிவாதம் பிடிக்காமல் இந்த அவையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள்; 

பிராட்லா மிகவும் உறுதியாகச் சொன்னார், 

"நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் என் தொகுதி மக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுக்கிறார்கள்; 

என் தேர்வை நீக்குவதன் மூலமாக என்னைத் தேர்ந்து எடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கின்றீர்கள்; அவர்களுடைய உரிமைகளை இழிவு செய்கின்றீர்கள்; அவர்களுடைய தன்மானத்தைச் சோதிக்கின்றீர்கள்"

என்று கடுமை காட்டிய பிராட்லா,

 "இதற்குமேல் பேச என்னிடம் எதுவும் இல்லை"  என்று கூறி விட்டார். 

இந்த முறை பிரிட்டன் நாடாளுமன்றம் பணிந்தது. 

"தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டும் அன்றி மனச்சாட்சியின் பெயராலும் பதவி ஏற்கலாம்" என பிரிட்டனின் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

இன்று பகுத்தறிவுவாதிகள் உட்பட பலருமே மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சார்லஸ் பிராட்லாதான் காரணம்.

Thursday, July 7, 2022

மணிப்புரி மொழியில் திருக்குறள்

 உலகப் பொதுமறையாம் திருக்குறளை மணிப்பூர் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்ட மணிப்பூர் மங்கை ரேபிகா தேவி அவருக்கு தமிழகத் தமிழர்களின் சார்பாக நம் வாழ்த்துகளை பகிர்வோம் !

மணிப்புரி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீட்டு விழா, வியாழக்கிழமை மணிப்பூர் மாநில தலைநகரமான இம்பாலில் நடைபெற்றது.

மணிப்பூரை சேர்ந்த திருமதி.சொய்பம் ரேபிகா தேவி அவர்கள் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா, இம்பாலில் நடைபெற்றது. நூலை மணிப்பூர் மாநில கவர்னர் திரு.வீ.கே. துக்கள் அவர்கள் வெளியிட்டார்.

திருக்குறளை தமிழகத் தமிழர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க தயங்கும் இக்காலத்தில் திருக்குறளின் பெருமையை உணர்ந்து ஒரு மணிப்பூர் மங்கை திருக்குறளை தனது தாய் மொழியில் மொழி பெயர்த்திருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இந்திய அரசு இன்று வரை ஒப்புதல் வழங்கவில்லை . அதனால் திருக்குறள் இந்திய பாடத்திட்டங்களில் சேர்க்கப்படவில்லை.

தமிழ்நாட்டு பிள்ளைகள் வடநாட்டு நூல்களை படிக்கும் நிலையில் தமிழகத்தின் ஒப்பற்ற திருக்குறள் , தொல்காப்பியம் போன்ற நூல்களை வடநாட்டிற்கு நாம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை. ரேபிகா தேவி போன்றவர்களின் உதவியால் இப்போது தேசங்கள் கடந்து திருக்குறள் சென்றுள்ளது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ரேபிகா தேவி போன்ற தமிழ் ஆர்வலர்களை பாராட்டத் தயங்கக் கூடாது . அவருக்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசும் வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் கவர்னரின் செயலாளர் டாக்டர். ஆர்.கே.நிமாய் சிங், முதலமைச்சரின் செயலாளர் திரு. என்.அசோக் குமார் (இ.ஆ. ப). சி.ஐ.சீ.டி இயக்குனர் திருமதி. வீ.ஜி.பூமா, சுரச்சந்பூர் துணை கமிசனர் திருமதி.ஜெசிந்தா லாசரஸ் (இ.ஆ.ப), உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. செல்வன் நாகரத்தினம் (இ.கா.ப), திருமதி.சொய்பம் ரேபிகா தேவி, மோரே தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மோரே தமிழ்ச் சங்கத்திற்கும் , மணிப்பூர் வாழ் தமிழர்களுக்கும் நம் பாராட்டுகள் !(15.3.2014 முகநூலில் வந்த பதிவு)

Wednesday, July 6, 2022

பொப்பிலி அரசரின் உரை

மேனாள் சென்னை மாகாண பிரதமராக (முதல்வராக) இருந்த பொப்பிலி அரசர் நீதிக்கட்சி அரசின் சாதனைகளை விளக்குகிறார்....

காங்கிரஸ் தப்புப் பிரசாரத்திற்கு மறுப்பு

பொப்பிலி ராஜா அவர்கள் பிரசங்கம்

நாட்டிற்கு ஜஸ்டிஸ் கட்சியார் செய்திருக்கும் அரிய சேவை

அக்டோபர் மாதம் 22  விசாகப்பட்டணம் ஜில்லாவில் மாரடம் என்னும் நகரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சென்னை அரசாங்க முதல் மந்திரி கனம் பொப்பிலி ராஜா அவர்கள் செய்த பிரசங்கமாவது :-

தோழர்களே! ஜஸ்டிஸ் கட்சியானது, தான் ஏற்பட்ட 18 வரு­ காலத்திற்குள் பொது ஜனங்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்துகொண்டு வந்திருக்கிறது. இது இனிமேலும் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறது. நான் அவற்றை யயல்லாம் உங்களுக்கு விவரித்துச் சொல்வதற்கு முன்பாக எங்கள் கட்சியானது இன்ன கொள்கைகளைக் கையாளுகிறதென்று உங்களுக்கு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். எங்கள் கொள்கைகளாவன :-

1. சமாதானமுடையதும் சட்ட சம்மதமுடையதும் ஒழுங்கு முறைக்கு ஒத்ததும் ஆன எல்லா வழிகளாலும் எவ்வளவு சீக்கிரம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஒரு அங்கமாக இந்தியாவுக்கு சுயராஜ்யம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுயராஜ்யம் சம்பாதிக்க வேண்டியது.

2. பல திறப்பட்டனவாக இருக்கப்பட்ட மதத்தினர்களுக்குள்ளும் சமூகங் களுக்குள்ளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடனும் நல்லணத்துடனும் இருக்கும்படி செய்ய வேண்டியது ; அதற்காக வேண்டிய, சகல பொது ஸ்தாபனங்களிலும் உத்தியோகங்களிலும் சகல மதத்தினர்களுக்கும் சகல சமூகங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இருக்கும்படி செய்து அவரவர்களுக்குரிய நலன்களையும் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டியது. அத்துடன், மக்களுக்குள் ஆங்காங்கு இருக்கின்ற தாழ்மை, ஏழ்மை ஆகியவற்றைப் போக்கி-நிலைமைகளை உயர்த்தி- மக்களை முன்னுக்குக் கொண்டுவந்து-முடிவான பயனாய் சாதி வேற்றுமைகளை யயல்லாம் ஒழியும்படி செய்து மக்களையயல்லாம் ஒன்றாய் இருக்கும்படி வைப்பது.

3. சகல வகுப்பார்களின் கல்வியபிவிர்த்திக்காகவும், சமூக சமத்துவதற்திற்காக வும், பொருளாதார மேம்பாட்டிற்காவும், கைத்தொழில் வளர்ச்சிக்காகவும், விவசாயப் பெருக்கத்திற்காகவும், அரசியல் முன்னேற்றத்திற்காகவும் மேன்மேலும் பாடு படுவது.

4. தென்னிந்தியாவில் உள்ள ஜனங்களுக்கு எந்த ஒரு பொது வி­யத்தைப் பற்றியும் சரியான - செம்மையான அறிவு ஏற்படும்படி செய்து, நாட்டின் ஒவ்வொரு முக்கிய பொது விவகாரத்திலும், அவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை விளக்கமாய்த் தெரிவிக்கும்படி செய்தல் ; அதன் மேல் அவற்றைப் பின்பற்றி நடப்பது. 

5. மேற் சொல்லியபடி நம் கட்சியின் கொள்கைகளை அனுபவத்தில் சாதித்துக் கொள்வதற்கு என்ன காரியங்கள் - என்ன முறைகளை அனுசரித்தால், தகுமானதா யும் வெற்றியளிக்கக் கூடிய தாயும் இருக்குமோ அவற்றையயல்லாம் அனுசரிப்பது.

தாழ்த்தப்பட்டார்க்கு சேவை

இந்தியாவிலேயே முதன் முதலாக ஜஸ்டிஸ் கட்சிதான், தாழ்த்தப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும் இருக்கிற சாதியார்களையயல்லாம் அவர்களது தாழ்மை, கஷ்டம் என்பவற்றிலிருந்து விடுவித்து அவர்களை க்ஷேம அபிவிருத்தி அடையும்படி செய்விக்கப் பாடுபடத் தொடங்கிற்று. நாங்கள் அவ்விதம் பாடுபட்டுக் கொண்டு வருகை யில்,  காங்கிரஸ் கட்சியார் சும்மா நின்று கொண்டு, சுயராஜ்யம் வந்தால்தான் அவர்களுக்குத் தாங்கள் ஏதும் செய்ய முடியுமென்று மேடைப் பிரசங்கங்கள் செய்து விட்டுப் போகிறார்கள். நாம் என்ன சொல்லுகிறோமென்றால், அரசியல் முன் னேற்றம் ஏற்படுகிறபடி ஏற்பட்டும். ஆனால் அது பூராவும் கிடைத்து முடியும் வரைக்கும் ஏழை மக்களை தாழ்மையையும் வறுமையையும் அனுபவிக்கும்படி விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டு சும்மா இராமல், அவர்கள் முன்னுக்கு வரக்கூடிய ஒவ்வொரு வழியையும் பின்பற்ற வேண்டும் என்பதே. இப்படி இவர்களை முன்னுக்குக்குக் கொண்டு வருவதில் நாம் மேலே இருக்கிறவர்ளை கீழே பிடித்துத் தள்ள வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஆனால், கீழே இருக்கிறவர்களை மேலே தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறோம்.

குடியரசு என்றால் என்ன பொருள் எனில், ஜனங்களின் நன்மைக்காக - ஜனங்களுடைய அரசாங்கம் என்பதாகும். ஆதலால், நாம் இத்தகைய அரசியலைப் பெற வேண்டுமாகில், எந்த சாதியில்- எந்த சமூகத்தில் பிறந்த யாராயிருநதாலும் அவரையயல்லாம் நாம் நாட்டின் அரசாங்கத்திலுள்ள எப்படிப்பட்ட பதவியையும் அடைவதற்குண்டான சம சந்தர்ப்பத்தையும் செளகரியத்தை உடைத்தாயிருக்கும்படி செய்ய வேண்டும். சுருங்கச் சொல்லவோமாகில், நம் நாட்டிலுள்ள எந்த ஒரு ஆசாமியும் முன்னுக்கு வருகிற வி­யத்தில், தன் பிறவி காரணமாக எந்த ஒரு இடைஞ்சலையும் தடங்கலை யும் அடையக் கூடாது. இன்றைக்குப் பொது மக்களின் பிரதிநிதித்துவம் விளங்குகிற ஸ்தானங்களிலெல்லாம் மக்களின் சமூகத்தில் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் காணப்படுகிறார்களென்றால் அது ஜஸ்டிஸ் கட்சியார் அரசியல் அதிகாரத்தை ஒப்புக்கொண்டு ஆட்சி செலுத்தி வருகிற தன்மையினாலும் அவர்களது பத்திரிகைகளாலும் அவர்களது பிரசார வேலையினாலும் விளைந்திருக்கிற பயனே.

ஜஸ்டிஸ் கட்சியின் சேவை

ஜஸ்டிஸ் கட்சியினால் நாட்டுக்கு விளைந்த நலன்கள் பல உண்டு என்று நான் வேறு சில இடத்தில் கூறியிருக்கிறேனானாலும், அவற்றை இந்த இடத்திலும் எடுத்துக் கூறும்படியாக நேர்கிறது. அதற்கு என்ன காரணமெனில், காங்கிரஸ்காரர்கள் சதா காலமும்-அதிலும் தற்சமயம்‡மிக மும்முரமாக எங்களைத் திட்டுவதிலும், எங்கள் மேல் பழி சொல்லி எங்களுக்கு விரோதமாகத் தப்பான அபிப்பிராயத்தைப் பரவ வைப்பதிலும் பிரமாதமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதே, நாங்கள் ஒரு சமூகத்தாரின் (பார்ப்பனர்களின்) கட்டுப்பாடான எதிர்ப்புக் கிடையிலும் மக்களுக்கு நம்மாலான நன்மையைச் செய்வோம் என்று பதவி ஏற்கையில் நமக்கு முன்னொரு போதும் ஏற்பட்டில்லாத பெரும் பணத் தட்டு ஏற்பட்டுவிட்டது. ஆனால் கையிலுள்ள வருவாயைக் கொண்டு நம் கட்சியானது கிராம ஜனங்களின் க்ஷேமாயி விர்த்தியை கட்சித் திட்டத்தின் முதல்அம்சமாக வைத்துக் கொண்டிருக்கிறது.

 நாங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் போக வர உள்ள சாதனத்தையும் வைத்திய வசதியையும் இலகுவில் கிடைக்கும்படி செய்திருக்கிறோம்.

கிராம வைத்திய சாலைகளையும் ஆங்காங்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். முனிசிபாலிட்டி (நகர பரிபாலன சபை)களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு நிலையான வசதிகள் உண்டுபண்ணிக் கொடுத்து வருகிறோம். பஞ்சாயத்து சபைகளுக்கும், இப்படிப்பட்ட வசதிகள் கிட்டும்படி செய்திருக்கிறோம். நாங்கள் சுகாதார இலாக்காவின் வேலையைப் பெருக்கி, விழா நாட்கள்- சந்தை நாட்கள் ஆகிய இப்படிப்பட்ட காலங்களில் தொத்து வியாதி பரவாமல் தடுக்க எல்லா வித ஏற்பாடுகளையும் நடத்துகிறோம்.

நில அடமான பேங்குகள் ஏற்படுத்தல், பயிர்ச் செலவில் அதிகப்படியான பயன் அடைவிக்கிறதற்கான மார்க்கங்களை ஜனங்களுக்கு கற்றுக் கொடுத்தல் ஆகிய நன்மைகளும் செய்கிறோம். விளைச்சலான பொருளைச் சேமித்து வைக்கக் களஞ்சியங்களும் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதைக் காலம் பார்த்து நல்ல விலைக்கு விற்பதற்காகவும், வேண்டுங்கால் அவற்றின் மேல் அரசாங்கத்தார் கடன் கொடுப்பதற்காகவும், வசதிகளும், ஏற்பாடுகளும் நடத்திக் கொடுக்கிறோம். கூட்டுறவுச் சங்கங்களையும் அமைத்து அவற்றால் மக்கள் நன்மை அடையச் செய்திருக்கி றோம். கிராமத்தில் பலர் கடனாளிகளாய் - தமது சொத்துக்களைக் கடன்காரர்கள் வசம்விட்டுவிட்டு அவஸ்தைப்படுகிற நிலைமைகளைத் தடுத்து, அவர்களது கடன் பளுவைக் குறைக்க மார்க்கங்கள் செய்திருக்கிறோம்.

 விவசாயிகள் கடன் சட்டம் என்ற ஒரு சட்டத்தை விரிவாக்கி அதிலும் கிராமத்தாரது கடன்கள் இலகுவில் ஒழிவதற் குண்டான மார்க்கங்களை அமைத்திருக்கிறோம். நில அடமான பேங்குகள் இல்லாத இடங்களில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வழக்கு விவகாரம் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில், அவ்விவகாரத்தைக் கோர்ட்டுகளுக்குக் கொண்டு போகாமல் ராசியாக்க-மத்தியஸ்த ராசி சபைகள் அமைத்திருக்கிறோம். 

இத்தகைய மத்தியஸ்த ராசி சபைகளில், தற்சமயம் சில மட்டுமே அமைக்க முடிந்தவரையில் முடித்து விடலாம் என்று எண்ணியிருக்கிறோம்.

நாங்கள் சட்டசபையில் அரங்கேற்றி அமுலில் நடத்திக் கொண்டிருக்கிற ஹிந்து மத தர்ம பரிபாலன சட்டத்தினால், ஹிந்து மதக் கோவில்களும்  மத ஸ்தாபனங்களும் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாம் மாட்டு வண்டித் தீர்வையை எடுத்துவிட்டிருக்கிறோம். அதனால் விவசாயிகளுக்கு சங்கடம் தவிர்த்திருக்கிறோம். கிராமத்தைத் தொழில் வளர்வதற்கு உதவி செய்கிறோம். அதற்காக சட்டமும் செய்திருக்கிறோம்.

இந்நாட்டு சுதேச வைத்தியம் அபிவிருத்தியடைய வேண்டுமென்று இந்திய வைத்தியக் கல்விக் கழகம் நிறுவியுள்ளோம். நாட்டில் அகவிலை குறைந்துவிட்டதால் நிலவரியை எவ்வளவு குறைக்கலாமோ அவ்வளவு குறைக்க வேண்டுமென்று அரசாங்கத்துடன் நாங்கள் மன்றாடிக் கொண்டு இயன்றதைக் குறைத்துக் கொண்டு வருகிறோம். 

சமீபத்தில் அரசாங்கத்தார் நடத்திய ரீசெட்டில்மெண்டின் பயனாய், புதுவரி விதிப்பதை நிறுத்தி வைக்கும்படி செய்துவிட்டோம். 

ஜமீன்தார்களின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் குடியானவர்கள் இலகுவாகத் தங்கள் பயிர்ச்செலவு வேலைகளை நடத்தவும் வீண் நிலங்கள் என்ற பகுப்பை மாற்றவும் நிலங்களை விற்று விடுதல் என்ற காரியத்தை இலேசாய் முடித்துவிடாமல் செய்யவும் நாங்கள் வழிகள் கோலியிருக்கிறோம். தானிய விலை குறைந்திருந்தால் அதற்குத் தகுந்தாற் போல் குத்தகை வீதத்தையும் குறைக்க வேண்டுமென்று கூட சட்டம் செய்திருக்கிறோம்.

இனாம் மசோதா

கடைசியாக நாம் இனாம் குடியானவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்று ஒரு சட்டம் கொண்டுவந்து அதைச் சட்டசபையில் நிறைவேற்றி வைத்திருக்கிற செய்தி உங்களுக்குத் தெரியும். இதனால் 50 இலட்சம் ஜனங்கள் சமாதானமாகவும் கவலையில்லாமலும் வாழ முடியும். இதில் கிட்டதட்ட 10 லட்சம் குடியானவர்களுக்கு வோட் அளிக்கும் உரிமையும் ஏற்படும். இதனால் வோட்டர்கள் தொகையும் விரிவடைந்திருக்கிறது. இந்தச் சட்டமானது கூடிய சீக்கிரம் வைஸ்ராயின் அங்கீகாரம் பெற்று அமுலுக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். (இது, வைஸ்ராயின் அங்கீகாரம் பெற்றுவிட்டது. ப-ர்).

நாங்கள் மாகாண பொருளாதார கெளன்சிலையும் ஜில்லா கெளன்சில் களையும் தொடக்கம் செய்திருக்கிறோம். இவைகள் நாட்டில், கல்வியையும் பொருளாதாரத்தையும் விவசாயத்தையும் கைத் தொழிலையும் மேன்மேலும் சிறப்படையச் செய்யும். 

நான் குறிப்பிட்ட இந்த கெளன்சில்கள் பொது ஜன அபிவிர்த்திக்குண்டான எல்லா இலாக்காக்களுடனும் அரசாங்க உத்தியோகஸ்தரல் லாதவர்களுடனும் கலந்து மக்களுக்கு பல வழியிலும் நல்ல நிலைமையை எய்து விக்கும்.

தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் நன்மைகள்நன்மைகள்

இந்தியாவிலேயே ஜஸ்டிஸ் கட்சியார்தான் தாழ்த்தப்பட்டவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்கிற நோக்கத்தை தம்முடைய திட்டத்தில் முதலாவது அம்சமாகக் கொண்டவர்கள். இது உங்களுக்கு ஐயமறத் தெரிந்த செய்தி.

இன்றைக்கு நாட்டிலுள்ள பொது ஜனப்பிரதிநிதித்துவ சபைகளிலெல்லாம் தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட சமூகத்தார் வீற்றிருக்கும்படி ஏற்பட்டதே ஐஸ்டிஸ் கட்சியாரின் தீவிர வேலையினால் தான். அவர்களை நாங்கள் இன்னமும் எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வரப்போகிறோம். கடந்த சில வரு­ங்களில் அரசாங்கத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களிலிருந்து 9908 மனைகள் வீடுகட்டிக் கொள்வதற்காக இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக் கின்றன. 11128 வீட்டு மனைகள் கவர்ண்மெண்டாரால் இவர்களுக்காக தயார் செய்யப்பட்டும் இருக்கின்றன.

 லேபர் டிபார்ட்டுமெண்டார் இவர்களுக்காக ஒவ்வொரு வரு­மும் ஆங்காங்கு கிணறுகள் வெட்டிக் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் இவர்களுக்கு நிலங்கள் வாங்கப் பொது ஜனப் பண்டுகளிலிருந்து பாதியளவுக்கு பணம் தர உத்தேசித்திருக்கிறோம். அவர்களைக் கல்வியில் தேர்ச்சி பெறுவிக்க, அவர்களது மாணவர்களுக்கு உபசாரச் சம்பளங்களும் மற்ற வசதிகளும் வர வர அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

 கவர்ண்மெண்டாரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவுப்படி அவர்களுக்கு சகல பதவிகளிலும் வீதாசாரம் கிடைத்தே தீரும். 

அவர்களுக்காக நாம் அரங்கேற்றி அமுல் நடத்தி வருகிற சட்டங்களின்படி எல்லா பொதுஸ்தலங்களிலும் அதாவது குளங்கள், கிணறுகள், பாட சாலைகள், கச்சேரிகள் ரஸ்தாக்கள் ஆகியவற்றிலெல்லாம் அவர்கள் புழங்குவதற்கு எவ்வித தடங்கலும் ஏற்படாதபடி தடுத்திருக்கிறோம்.

 இன்னும் நாம் அனேக சட்டங்களை நிறைவேற்றி அவர்களுக்கு ஜனசமூகத்திடை பிறவி காரணமாக ஏற்படுகிற எவ்வித தங்குதடைகளும் இல்லாதபடி செய்யவும் போகிறோம்.

தாழ்த்தப்பட்டோரைக் காங்கிரஸ்காரர் ஏமாற்றியது

நாம் இவர்களுக்காக எவ்வளவோ காலமாக உழைத்துவருகிறதைக் கண்டுதான், சமீப காலத்திற்குமுன் காங்கிரஸ்காரர்கள் நாமும் அவ்விதம் செய்து ஐனங்களின் ஆதரவை அடையவேண்டுமென்று கருதித் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஹரிஜனம் என்ற பெயரைக் கொடுத்தழைத்துத் தாமும் நன்மை செய்யப் பாடுபடுவதாகச் சொல்லுகிறார்கள்.

காங்கிரஸ்காரர்கள் எங்களைப் போல் சமாதானமாகவும் அனுபவ சாத்திய மாகவும் ஆகக்கூடிய எந்த ஒரு அலுவலையும் செய்து தாழ்த்தப்பட்டவர் களுடைய நிலைமையை மேன்மைப்படுத்தி வந்தவர்களல்ல. அவர்கள் எடுத்த உடனேயே தாழ்த்தப்பட் ஒடுக்கப்பட்ட சமூகத்தார்களை ஏமாற்றி விட எண்ணினார்கள். 

கோவில் நுழைவையே கிடைப்பிப்பதாக காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். அதற்காகச் சட்டம் செய்யப் போவதாகவும் பொய் சொன்னார்கள். இந்த வார்த்தையில் தாழ்த்தப்பட்ட சமூகத்துத் தலைவர்கள் நம்பிக்கை வைத்து விட்டார்கள். அப்படி நம்பிக்கை வைத்து விட்டார்கள். அப்படி நம்பிக்கை வைத்துப் பூனா பேக்ட்-ல் காந்தி முன்னிலையில் கையயழுத்துப் போட்டார்கள். 

இவ்வண்ணம் இவர்களிடம் கையயழுத்து வாங்கித் தங்கள் நோக்கத்தைப் பூர்த்தி செய்த கொண்ட பிற்பாடு தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதன் பயனாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரண்டுவித சங்கடங்கள் ஏற்பட்டுவிட்டன! அவர்கள் இரண்டு தடவை தேர்தலுக்கு நிற்க வேண்டி இருக்கிறது!

 கவர்ண்மெண்டார் இந்த பூனா பேக்டை யயாட்டி வகுப்புவாரி உரிமைத் திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்துவிட்டனர். இந்த மாறுதல் ஆனவுடன் காங்கிரஸ்காரர்கள் கோவில் நுழைவு மசோதாவை தற்சமயம் வேண்டாம் என்று வாபீஸ் வாங்கிக் கொண்டனர். என்ன மோசம் பார்த்தீர்களா! 

தாழ்த்தப்பட்டோர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் மேலும் இழைத்த தீங்கைக் கேளுங்கள். அவர்கள் ஹரிஜன நிதி என்று பெயர் கொடுத்துத் தாழ்த்தப்பட்ட வர்களுக்காக ஒரு நிதி பொது ஜனங்களிடமிருந்து வசூலித்தார்கள். 

வசூலித்தபின் அந்தப் பணத்தை தங்கள் கட்சியின் ஆதிக்கத்தையே பெருக்குவதற் காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தின் நிர்வாக செலவுக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

ரஸ்தாக்கள் அபிவிருத்தி

இது நிற்க, நாங்கள் பத்து ஆண்டுத்திட்டமொன்று அமைத்திருக்கிறோம். அதன்படி இந்த மாகாணத்திலுள்ள எல்லா கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதிக்கான ரஸ்தாக்கள் போட்டு ஆகிவிடும். பாலங்கள் கூட வேண்டிய இடங் களுக்குப் பாலங்களும் கட்டி ஆகிவிடும். இத்திட்டத்திற்கு ‘ரஸ்தா அபிவிர்த்திக்குரிய வைப்பன் திட்டம்’ என்று பெயர்.

வரப்போகிற சீர்திருத்தங்களின் பயன்

கூடிய சீக்கிரத்தில் நம் அரசியல் அமைப்பில் பெரிய மாறுதல்கள் ஏற்படப் போகின்றன. பூரணமான சுய ஆட்சி கிடைக்கப்போகிறது.

 மாகாணத்தின் ஒவ்வொரு இலாக்காவையும் - ஒவ்வொரு காரியத்தையும் ஜனப் பிரதிநிதியாக இருக்கக் கூடிய ஒவ்வொருவரே அமுல் நடத்திக் கொண்டிருக்கப் போகின்றார். அவ்விதம் நடத்துபவர் எவரும் சட்ட சபைக்கு உள்ளடங்கித்தான் இருக்க நேரும். ஆகவே நம்மை நாமேதான் ஆளப் போகிறோம். மத்திய கவர்ண்மெண்டில் அகில இந்திய ஐக்கிய அரசாங்கம் ஏற்படப் போகிறது. அதில் இந்திய சுதேச சமஸ்தானங்களும், தம் பங்கு வீதப்படி பிரதிநிதித்துவ உரிமையை அடையும். இடைக்காலம் என்று சொல்லப்படுகிற கொஞ்ச காலம், இந்தியப் பாதுகாப்பும் அந்நிய நாட்டு விவகாரங்களும் வைஸ்ராயின் கையில் இருக்கும். அவை மாற்றப்படாத இலாகாக்கள் ஆகும். மற்ற இலாகாக்களை பொது ஜனப் பிரதிநிதிகளே நிர்வகிப்பார்கள். இதனால் மத்திய கவர்ண்மெண்டில் பூரணமான பொறுப்பாட்சி கொடுக்கப்பட்டதாக இல்லை. இதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆயினும், இதுவரைக்கும் இருந்த இரட்டை ஆட்சியை விட இப்போது கிடைத்திருக்கிற  ஆட்சி எவ்வளவோ பங்கு மேலானாது. இதை என் அனுபவத்தினால் சொல்லுகிறதாக நினையுங்கள். கொடுக்கப்படுகிற சீர்திருத்தம் மத்திய கவர்ண்மெண்டில் சில வி­யங்களை வைஸ்ராயின் நேர் அதிகாரத்தில் இருக்கும்படி செய்கிறதானாலும், ஒழுங்கு முறைப்படி அரசியல் உரிமைகளுக்குப் போராடி வருகிற நாம் இப்போழுது கிடைக்கிற ஆட்சியை ஏற்று நடத்தினால் நாட்டுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்ய இயலும்.  

காங்கிரஸ் நிர்வாக ஊழல்கள்

ஆகவே இப்பொழுது வாக்காளர்கள், சட்ட வரம்புக்கு உட்பட்டு அனுபவ சாத்தியமான கொள்கைகளைச் சொல்லி டீக்களுக்குப் பாடுபடுகிற ஜஸ்டிஸ் கட்சியாராகிய எங்களுக்கே வோட் செய்து ஆதரவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பொது ஜனங்களுக்குக் காங்கிரஸ் கட்சியாரின் அழிவு வேலைத் திட்டங்கள் தெரியாததல்ல. கலகம் பண்ணிக் கொண்டு -எதைக் கொடுத்தாலும் மறுத்துத் தள்ளிக் கொண்டு - மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யாமல் இருக்கிற அவர்களுக்கு ஸ்தல ஸ்தாபன இலாகாக்களைக் கூட சரிவர நிர்வகிக்கத் தெரியாமல்  போனதோடு அவர்கள் நடத்தும் நிர்வாகம் மிக்க ஊழல் நிரம்பியதாயும், லஞ்சம் வழங்குதல் சர்வசாதாரணமானதாயும் தன் இனத்தையே ஆதரித்துக் கொண்டு மற்றோரைக் கைவிடும் பட்சபாதம், நிரம்பியதாயும் , ஏற்கனவே ஜஸ்டிஸ் கட்சியாரின்  கீழ் ஊழியஞ் செய்தவர்களின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுவதாயும் அற்பச் செய்கைகளெல்லாம் நிறைந்ததாயும் இருக்கிறது. அவர்கள் இந்த ஸ்தலஸ்தாபனங்களைக் கைப்பற்றச் செய்த சூழ்ச்சிகளோ மகாகேவலமானவை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

அவர்களின் தேர்தல் அறிக்கை ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாததாயும் அனுபவ சாத்தியமில்லாததாயும் இருக்கிறது. அவர்கள், இந்திய சட்டசபைத் தேர்தலில் வெற்றி கிடைத்தால் அரசியல் அமைக்கப் போவதாயும் வாக்களர்களிடம் சொல்லி, வோட் வாங்கியனதையெல்லாம் நினைக்கவே இல்லை.

அந்த வெற்றியினால் அவர்கள் நாட்டுக்குச் செய்த நன்மையும் ஒன்றுமே இல்லை. அவர்கள் இனி வெற்றி பெற்றாலும் நாட்டுக்கு ஏதும் நன்மை செய்யப் போவதாகக் காணோம். அவர்கள் வருகிற சீர்திருத்த அரசியலமைப்பை உடைக்கப் போவதாகத் தான் சொல்லுகிறார்கள். இப்படி உடைத்துத் தகர்க்கப் போகிறவர்கள் கராச்சி திட்டத்தை எவ்விதம் நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை. ஒரு திட்டபடி வேலை செய்ய வேண்டுமென்றால் பதவிகளை ஏற்று ஒழுங்காக ஊழியம் செய்தால் தானே முடியும். இந்திய நே­னல் காங்கிரஸ் தலைவரான ஜவஹர்லால் அவர்கள் காங்கிரஸ்கட்சியானது வர போகிற சீர்திருத்தத்தை உடைத்துதத்தான் எறியும் எனறு சொல்லிவிட்டார். 

காங்கிரஸ்காரர்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாதவர்கள், ஒருவரை ஒருவர் அழுத்தப்பார்க்கிறவர்கள், இந்த நிலைமை காரணமாகத் தான் அவர்கள் பதவியேற்றல் என்ற வி­யத்தைப் பின்னால் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துவிட்டார்கள். அவர்கள் இன்னது உங்களுக்குச் செய்யப் போகிறார்கள் என்று நீங்கள் ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் வோட்டுக் கொடுத்தல் வேண்டுமென்றும், ஆனால் அவர்கள் உங்களுக்கு ஏதும் கட்டுப்பட்டு நடக்க ஜவாப்தாரித்தனம் கொண்டில்லாமல், எங்கேயோ அவர்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிற யாரோ சிலருடைய கட்டளைகளின்படி நடக்க உத்தேசித்திருக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். 

இது உலகத்தில் குடிஅரசு தத்துவம் உள்ள எங்காவது யாராவது சொல்லுவார்களா? என்ன விபரீதப் போக்கு! இதனால் காங்கிரஸ்காரர்கள் ஜனங்களை முட்டாள்கள் என்று கருதிவிட்டதாக ஏற்படவில்லையா? காங்கிரஸ் கட்சிக்கு எப்பொழுது ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டுமென்ற நோக்க மில்லையோ அப்பொழுது அவர்கள் சட்டசபைகளுக்கும் பிரவேசிக்கக்கூடாது. அவர்கள் ஒழுங்கு மீறி நடந்து இந்த கவர்ண்மெண்டை எந்த வழியில் அசைத்துவிட முடியும் என்று கேட்கிறேன்.

இவர்களுடைய ஒழுங்கு தப்பான பேச்சுவார்த்தை- கோட்பாடு-நடவடிக்கைகளினாலும் இவர்களுடைய கடன் மறுப்பு-சட்ட மறுப்பு- ஒத்துழையாமை ஆகிய தாறுமாறான செய்கைகளாலுமே பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவுக்கு வழங்குகிற சீர்திருத்தங்களில் பாதுகாப்பாக விதிகளை ஏற்படுத்தினார்கள். 

காங்கிரஸ்கார்கள் அரசியலை நடக்கவொட்டாமல் செய்ய நடவடிக்கைகள் அனுசரிக்கும்போது அந்தப் பாதுகாப்பு விதிகள் பிரயோகிக்கப்படும். கவர்னரே அந்தச் சமயத்தில் மாகாண ஆட்சியை தன் கையில் எடுத்துக் கொள்வார். ஆகவே, காங்கிரஸ்காரர் அரசாங்க வேலைகள் நடைபெற வொட்டாமல் செய்ய நடவடிக்கைகள் அனுசரிக்கும்போது அந்தப்பாதுகாப்பு விதிகள் பிரயோகிக்கப்படும். கவர்னரே அந்தச் சமயததில் மாகாண ஆட்சியை தன் கையில் எடுத்துக்கொள்வார். 

ஆகவே, காங்கிரஸ்காரர் அரசாங்க வேலைகள் நடைபெற வொட்டாமல் தடைகள் செய்வார் களேயானால், அப்பொழுது ஜனநாயக ஆட்சி என்பது ஒழிக்கப்பட்டுப் போய், யதேச்சாதிகார அதிபதிகளின் ஆட்சி ஏற்பட்டுப் போகும். நாம் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களான இரட்டையாட்சி ஏற்படுவதன் முன் நாம் எப்படியிருந்தோமோ அந்தப் பழைய நிலையை அடையும்படி ஆகிவிடும். காங்கிரஸ்காரர்களின் ஒத்துழையாமையும் சட்ட மறுப்பும் நம் நாட்டை படுத்திய பாடு கள் உங்களுக்குத் தெரியாததல்ல. அவர்களது திட்டமே அனபவ சாத்தியமில்லாதது. ஆனால் பகட்டு மிகுந்தது. 

முடிவுரை

இந்த மாகாணத்தார் எப்பொழுதும் நிதான புத்திக்கும் ராஜ தந்திர ஞானத்திற்கும் பேர்போனவர்கள். ஆகையால் நான் உங்களிடம் என்ன நிச்சயமாக எதிர்பார்க்கிறேனென்றால், நீங்கள் ஜஸ்டிஸ் கட்சி அபேட்சர்களையே சட்டசபை களுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அவர்களே சட்டசபைகளுக்குப் பெரும்பாலோராக வர வேண்டும். நீங்கள் அவ்வண்ணம் செய்தால்தான் நாங்கள் எங்களது திட்டத்தை நிறைவேற்றி வைத்து, மேன்மேலும் ஆக்க வழிகளை நாட முடியும்.

நாங்கள் உங்களை வரவேண்டுமென்று கேட்டுக் கெண்டதற்கிணங்க நீங்கள் ஏராளமாக இங்கு கூடி பொறுத்திருந்து, என் பிரசங்கத்தைச் செவி சாய்த்துக் கேட்டதற்கு நான் உங்களுக்கு வந்தனம் செய்கிறேன். என்னுடைய தேர்தல் வட்டத்து ஜனங்களாகிய உங்ளைக் கண்டு பேசுதல் எனக்கு எப்பொழுதும் மிகவும் பிரியமானவொரு காரியம். நீங்கள் இதுவரைக்கும் என்னிடம் நம்பிக்கை வைத்தது போல் இனி மேலும் நம்பிக்கை வைத்து, வோட் செய்து ஆதரித்து, நான் முக்கியமாக, இந்த ஜில்லாவுக்கும் - பொதுவாக இந்த மாகாணத்திற்கும் - ஊழியம் செய்யும்படியான சந்தர்ப்பம் தருவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உங்களுக்கெல்லாம் என் வந்தனம்.

 நான் அமரப் போகுமுன், பொப்பிலி ஜில்லா போர்டின் தலைவராகிய மிஸ்டர் செலிகண்ண ஸ்ரீ ரங்கநாயகலு அவர்களுக்கும் இந்த மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்த மற்ற தலைவர்களுக்கும் மிகுந்த வந்தனம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.(கரகோ­ஷம்).( குடிஅரசு, 1936 நவம்பர் 8).

---------------

பொப்பிலி ராஜாவுக்கு ஜே!

இனாம் சட்டம் வைஸ்ராய் அங்கீகாரம்

கனம் பொப்பிலி ராஜா அவர்கள் முயற்சியால் சென்னை சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி சட்டமாக்கப்பட்ட இனாம் மசோதாவை வைஸ்ராய அங்கீகாரம் செய்துவிட்டார் என்று கெஜட் அறிவிக்கிறது. ( குடி அரசு.1938).

Tuesday, July 5, 2022

டாக்டர் சி.நடேசனார் உரை

திராவிடர் சங்கம் தொடங்கிய டாக்டர் சி. நடேசனார், நீதிக்கட்சியின் சாதனைகளைப் பற்றி 1936 இல் ஆற்றிய அரிய உரை....

திருச்சி ஜில்லா ஜஸ்டிஸ் மகாநாடு

தலைவர் தோழர் டாக்டர் சி. நடேச முதலியார் M.L.C.. அவர்களின்  தலைமைப் பிரசங்கம்....

28.9.36 ந் தேதி திருச்சியில் நடைபெற்ற திருச்சி ஜஸ்டிஸ் மகாநாட்டுத் தலைவர் தோழர் டாக்டர் சி. நடேச முதலியார் எம்.எல்.சி. அவர்களின் தலைமைப் பிரசங்கம் வருமாறு:-

திருச்சி ‘ஜஸ்டிஸ்’ கட்சி மகாநாட்டிற்கு என்னை தலைமை வகிக்கும்படி கேட்டுக் கொண்ட வரவேற்புக் கழகத்தாருக்கு நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன். 

இந்த மாகாணத்தின் வடபகுதியிலும் தென்பகுதியிலுள்ள ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் மகாநாடுகள் கூட்டி நமது கட்சியின் உயரிய லக்ஷ்யத்தை யும் நமது கட்சி சாதித்த காரியங்களையும் நமது எதிர்கால வேலைத் திட்டத்தையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக்காட்டி தேச மக்களின் அரசியல் அறிவை விருத்தி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜஸ்டிஸ் கட்சி நமது மாகாணத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுமையிலுமே ஒரு விசே­ நிலைமையில் இருந்து வருகிறது. அது மிகவும் அருமையான பல காரியங்களையும் சாதித்திருக் கின்றது.


ஐஸ்டிஸ் கட்சி தோற்றம்


எல்லா ஜில்லாக்களிலுமுள்ள சர்க்கார் காரியாலயங்களிலும் வந்த சமூகமும் உத்தியோகங்களை ஏகபோக உரிமையாய் வகிக்கக் கூடா தென்பது 1810-லே ரெவினியூ போர்டார் உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அந்த உத்தரவு அலட்சியம் செய்யப்பட்டது. சர்க்கார் காரியாலயங்களிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் தமது பங்குக்குரிய ஸ்தாபனங்களிலும் தமது பங்குக்குரிய ஸ்தாபனங்கள் அளிக்கப்படவில்லையயன்று மாகாண முழுவதும் பல சமூகத்தாரும் குறை கூறிக்கொண்டிருந்தனர். ‘ஹோம் ரூல்’ கிளர்ச்சிக்காலத்து இந்த அதிருப்பதி மிகவும் உச்சஸ்தானத்தை அடைந்தது. தாம் எந்நாளும் அடிமைப்படுத்தி  வைக்கப்படுவதாகப் பாமர ஜனங்கள் உணர்ந்தனர். இருப்பதா, இறப்பதா, சுயமரியாதையைக் காப்பாற்றத் திரண்டெழுவதா அல்லது எந்நாளும் அடிமையாக வாழ்வதா என்ற பிரச்சனையை பாமர ஜனங்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. எனவே சில இளைஞர்கள் தைரியமாக முன்வந்து பலதிறப்பட்ட சமூகங்களின் உரிமைகளையும் தேச மகாஜனங்களுக்கும் சர்க்காருக்கும் எடுத்துக்காட்ட முயன்றனர். இந்தியாவுக்கு சுய ஆட்சியோ அல்லது வேறு எத்தகைய ஆட்சியோ கொடுக்கப்பட்டால் ஒவ்வொரு சமூகத்துக்கும் அதில் பங்கு கிடைக்க வேண்டுமென்று அவர்கள் உரிமை பாராட்டினார்கள்.


அவர்களின் ஸ்தாபனமான சென்னை திராவிட சங்கம் அந்தக் காலத் துக்கு சர்க்காருக்கும் பாமர ஜனங்களுக்கும் இடையினின்று பாமர ஜனங்களின் உரிமைகளையும் குறைபாடுகளையும் சர்க்காருக்கு உணர்த்தி ஒவ்வொரு சமூகத்தினுடைய உரிமையையும் விளக்கிக்காட்டி பாமர மக்களைத் தட்டி எழுப்பிற்று. 

கலாசாலைப் பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறும் பொருட்டு 1915 ல் கூடிய திராவிட சங்கக் கூட்டத்தில் தோழர் ஸி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். டாக்டர் நாயர் பட்டாதாரிகளுக்கு பிரசங்கம் செய்தார். இதுவரை பரம சத்துருக்களாயிருந்த டாக்டர் நாயரும், ஸர். தியாக ராய செட்டியாரும் அந்தக் கூட்டத்தில்தான் சந்தித்து நண்பர்களானார்கள். 

கோகலே மண்டபத்தில் கூடிய திராவிட சங்கக் கூட்டம் ஒன்றில் இப்பொழுது கொச்சி திவானாக இருக்கும் ஸர்.­ண்முகம் செட்டியார் ‘இந்த திராவிட சங்கமே பிற்காலத்து‘ ஜஸ்டிஸ் கட்சி’யாக மாறியது’ என்று பேசியுள்ளார்.

ஜஸ்டிஸ் கட்சி தோன்றுமுன் திராவிட சங்கம் செய்த வேலைகள்

அநேகமாக சர்க்கார் காரியாலங்களில் எல்லா உத்தியோகங்களுக்கும் முக்கியம் மதராஸ் போர்டு ஆபீஸ் உத்தியேகங்களுக்கு பி.எ. பட்டாதாரிகளே நியமிக்கப்பட்டு வந்தார்கள். ‘ஸ்பெ­ல் டெஸ்டு’ பரீட்சைக்குப் பட்டாதாரிகளே அனுமதிக்கப்பட்டார்கள்.

‘ஸ்பெ­ல் டெஸ்டு’ பரீட்சையில் தேர்ச்சியடையாத பட்டாதாரிகளுக்கு 40 ரூபாய்க்கு மேல் சம்மபளமுள்ள உத்தியோகங்கள் பெற முடியாமலிருந்தது. சர்க்கார் காரியாலயங்களில்முக்கியமாக போர்டு ஆபீஸில் மிகச் சொற்ப பார்ப்பனரல்லாதாரே 40 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் பெற்றுவந்தார்கள். திராவிட சங்கம் செய்துவந்த கிளர்ச்சியினால், குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.ஸி. பரீட்சை தேறியவர்களுக்கும் போர்டு ஆபீஸில் உத்தியோகம் பெற முடிந்தது. பி.ஏ.பட்டம் பெறாதவர்களும் ஸ்பெ­ல் டெல்லி பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டார்கள். 40 ரூபாய் சம்பளத்துக்கு மேல் பெற முடியாதிருந்த எத்தனையோ பேர் அதிகப்படியான சம்பளம் பெற்றார்கள். பலர் சப் மாஜிஸ்டிரேட் போன்ற உயர்ந்த உத்தியோ கங்களும் பெற்றார்கள். இரண்டு டிப்டி கலெக்டர்களுக்குப் பதிலாக 12 டிப்டி தாசில்தார்கள் எடுத்தார்கள். 

கலெக்டரால் அந்த உத்தியோகங்கள் பல சமூகங்களுக்கு வீதாசாரப்படி வழங்கப்பட்டன.

 பார்ப்பனருக்கும் பார்ப்பன ரல்லாதாருக்கும் நிர்வாகசபை மெம்பர் பதவி முறைப்படி கொடுக்கப்பட்ட தினால் ஒரு முஸ்லீமுக்கோ இந்திய கிறிஸ்தவருக்கோ ஒரு நிருவாக சபை மெம்பர் பதவியளிக்க வேண்டுமென்று திராவிட சங்கத்தார் கிளர்ச்சி செய்தனர். பிற்காலத்து ஒரு முஸ்லீம் சபையின் நிர்வாக சபை மெம்பரானார்.

இந்த சங்கத்தின் முயற்சியினால் ஒரு ஹாஸ்டல் ஸ்தாபிக்கப்பட்டது. சஞ்சம் முதல் கன்னியாகுமரி வரை மாகாணத்துள் பல பாகங்களிலுமிருந்து வந்த 40 மாணவர்கள் ஜாதி மத வித்தியாசம் பாராட்டாமல் அந்த ஹாஸ்டலில் வசித்து வந்தார்கள். அந்த ஹாஸ்டலில் தங்கியிருந்த சில மாணவர்களில் சிலர் பெயரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர் பட்நாய்க்கு. அவர் அப்பொழுது சட்ட மாணவராக இருந்தார்; இப்பொழுது வக்கீலாக இருக்கிறார். இனாம்தார் மசோதாவுக்காக நிபுண மெம்பராக நியமிக்கப்பட்டிருந்த பட்நாய்க்கின் சகோதரரே அவர். மற்றவர்கள் இப்பொழுது திருச்சி பப்ளிக் பிராசிக்யூட்டராயிருப்பவரும் மாஜி சட்டசபை மெம்பரும் ஜில்லா போர்டு தலைவருமான தோழர் டி.எம். நாராயாணசாமிப் பிள்ளை, டிஸ்டிரிக்ட்டு முன்சீப்பாயிருக்கிற சுப்பிரமணியமும்.

ஜஸ்டிஸ் கட்சி சாதித்த காரியங்கள்

இவ்வண்ணம் ‘ஜஸ்டிஸ்’ இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஸர். தியாகராய செட்டியார் ஒரு அறிக்கை வெளியிட்டார். ஒரு ஆங்கில தினசரியும் ஆரம்பிக் கப்பட்டது. அந்த தினசரிக்கு டாக்டர் நாயர் ‘ஜஸ்டிஸ்’ எனப் பெயர் சூட்டினார். ஸர். தியாகராய செட்டியாரும் டாக்டர் நாயரும் தலைவர்களால் தேர்ந்தெடுக் கப்பட்டார்கள். காலஞ்சென்ற பனகால் ராஜா தென்னிந்திய ஜன சங்கத்தின் தலைவராக இருந்தார்.


சென்னையிலும் வெளி ஜில்லாக்களிலுமுள்ள சில பார்ப்பனரல்லாதார் சேர்ந்து சென்னை மாகாணச் சங்கம் என்னும் பெயரால் ஒரு போட்டிச் சங்கம் ஸ்தாபிக்கவும் டாக்டர் நாயரும் ஸர். தியாகராய செட்டி யாரும் தாம் தலைவர்கள் அல்லவென்றும் ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை  பிராமண ரல்லாதாரின் பொதுப்பத்திரிகை அல்லவென்றும் கூற முயன்றார்கள். அவர்கள் முதல் கூட்டத்தை கோகலே மண்டபத்தில் கூட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நகரத்திலுள்ள இளைஞர்களும் சில தலைவர்களும் சும்மா இருக்கவில்லை. சென்னை மாகாணச் சங்கத்தின் முதல் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. அந்தச் சங்கமும் கருவிலேயே அழிந்தது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஒருவர் அக்கூட்டத்திலிருந்து வெளிவந்த போது பொது ஜனங்கள் சுமார் 5000 பேர் பேரானந்தமடைந்து ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு ஜே’ என்று ஆரவாரம் செய்தார்கள். இது சென்னை நகர இளைஞர்களும் திராவிட சங்க ஹாஸ்டல் மாணவர்களும் சாதித்த காரியமாகும். 

சென்னை இளைஞர் கள் சுமார் 3000 பேர் தொடர்ச்சியாக கிளர்ச்சி செய்து கொண்டே இருந்தார் கள். ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி சபை அமைக்கும்வரை அந்தக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருந்தது.


ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஆக்க வேலைகள்


ஜஸ்டிஸ் கட்சி அதிகார பதவி வகிக்க சேர்ந்த போது சகல சமூகங்களின் முன்னேற்றத்துக்காக தன் சக்தி முழுமையையும் பிரயோகம் செய்தது. ஸ்தலஸ்தா பனங்களிலும் மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் அதுவரை பிரதிநிதித்துவம் பெறாமலிருந்த சமூகங்களுக்கெல்லாம் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதித்துவம் அளித்தது. ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்ட சபைகளிலும்  மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் ஒரு ஜாதி இந்துவின் பக்கத்தில் உட்கார்ந்தறியாத ஒடுக்கப்பட்ட சமூக அங்கத்தினரும் ஜாதி ஹிந்துப் பிரதிநிதிகள் பக்கத்தில் உட்காரும்படி உரிமையும் பெற்றார்கள். தீண்டாமையும் ஓரளவு ஒழிக்கப்பட்டது.

 இவ்வண்ணம் சமூகத்தில் கத்தியின்றி இரத்தமின்றி ஒரு புரட்சி செய்யப்பெற்று வெற்றியும் அடைந்தது. 

சீர்திருத்தம் வருவதற்கு முன்னமேயே, ஜஸ்டிஸ் கட்சியார் கிளர்ச்சியின் பயனாக ஒடுக்கப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டசபை மெம்பரானார். மற்றொருவர் சைமன் செண்டிரல் கமிட்டி மெம்பரானார். வேறொரு ஆதி திராவிட கனவான் லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார். சொற்ப தினங்களுக்கு முன் ஒரு ஆதிதிராவிட கனவான் திவான் பகதூரானார்.  இந்தியா முழுமையிலும் ஒடுக்கப்பட்டவர்களில் அவர் ஒருவரே திவான் பகதூர் பட்டம் பெற்றவர்.

கனவான்களே! ஜஸ்டிஸ் கட்சி தோன்றுமுன் ஒடுக்கப்பட்ட சமூகம் இருந்த நிலைமையைச் சிந்தித்துப் பாருங்கள். இவையயல்லாவற்றிற்கும் மேலாக, சில வரு­ங்களுக்கு முன்னே ஒரு ஹிந்துவின வீட்டுக்கு பத்தடி தூரம்வரை பிரவேசிக்க முடியாத ஆதிதிராவிட கனவானும் அவரது மனைவியாரும் சக்கரவர்த்தியாலும் சக்கரவர்த்தினியாராலும் பக்கிங்காம் அரண்மனையில் வரவேற்று உபசரிக்கப் பட்டார்கள்.    

ஆதிதிராவிடர்களின் க்ஷேம லாபங்களை கவனிக்கும் பொருட்டு ஒரு லேபர் கமி­னர் நியமிக்கப்பட்டார். 

பொதுக் கிணறுகளிலும் ரஸ்தாக்களிலும் பொது வீதிகளிலும் ஒடுக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டார்கள். லேபர் ஸ்கூல்களும்  ஹாஸ்டல்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஒரு சர்க்கார் உத்தர வினால் மாகாணக் கல்லூரி, வைத்தியக்கல்லூரி போன்ற  கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சர்க்கார் உத்தியோகங்களும் கொடுக்கப்பட்டன. உபகாரச் சம்பளங்களும் அளிக்கப்பட்டன. நிலங்களும் அவர்களுக்குப் பதிவு செய்து கொடுக்கப்பட்டன. 

அவர்களுக்கு வீடுகட்ட ஸ்தலங்களும் வாங்கப்பட்டன.

ஹிந்து அரசர்கள் காலத்தில் ராமானுஜர் போன்ற சமயாச்சாரியர் களினால் சாதிக்க முடியாத காரியங்களை பிரிட்டிஷ் சர்க்கார் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் சாதித்திருக்கிறார்கள்.

கிறித்துவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் செய்த நன்மைகள்

கிறித்துவர்கள் லா காலேஜ் பிரின்ஸிப்பாலாக நியமனம் செய்யப்பட்டதற் கும் சட்டசபை  தலைவராக நியமிக்கப்பட்டதற்கும் பப்ளிக் சர்விஸ் மெம்பராக நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியே காரணம். ஹைக்கோர்ட் ஜட்ஜு களாகவும் ஹோம் மெம்பராகவும் நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ்கட்சியாரே நேர்முகமாகவும் மறைமுகமாகவும் காரணஸ்தராயிருந்திருக்கிறார்கள். இன்னும் இங்கு விளக்கிக் கூற முடியாத எவ்வளவோ இருக்கின்றன.

முஸ்லீம்களுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஆக்க வேலைகள்

முஸ்லீம்களுக்கு ஒரு தனி கலாசாலை ஸ்தாபிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். 

ஒரு முஸ்லீம் கார்ப்பரே­ன் கமி­னராக நியமிக்கப் பட்டதற்கும், ஒருவர் பப்ளிக் சர்விஸ் கமி­ன் மெம்பராக நியமிக்கப்பட்ட தற்கும், ஒருவர் சென்னை மேயராக நியமிக்கப்பட்டதற்கும் ஒருவர் ஹோம் மெம்பராகவும் ஆக்டிவ் கவர்னராகவும் நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். அவர்கள் இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறார்கள். அவைகளை இங்கு விளக்கிக் கூறுவது சாத்தியமல்ல. ஜஸ்டிஸ் கட்சியாரின் நன்முயற்சியின் பயனாக தென்னாட்டில் ஹிந்து முஸ்லிம் பிணக்குமில்லை. இந்த மகாணத்தில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் எப்பொழுதும் வெகு ஜாக்கிரதையாகவே இருந்து வருகிறார்கள். நாங்கள் முஸ்லீம்களை சகோதர்களாக மதித்து அவர்களது உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம். (குடிஅரசு, 1936, அக்டோபர் 11) 

ஆங்கிலோ இந்தியர் சென்னை கார்ப்பரே­ன் கமி­னராகவும், ரெஜிஸ்ட் ரே­ன் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் மற்றும் பல பெரிய உத்தியோகஸ்தர் களாகவும் நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். சர்க்கார் சர்வீஸில் ஆங்கிலோ இந்தியர்களுக்கு விசே­ சலுகை காட்டவேண்டு மென்று வட்டமேஜை மகாநாட்டில் அவர்கள் பிரதிநிதி ஸர் யஹன்ரி கிட்னியு டன் சேர்ந்து கொண்டு வற்புறுத்தியதும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரதிநிதியேயாகும்.

சமூக வாழ்வில் பின்னணியில் நிற்கும் வகுப்புகளையும் ஜஸ்டிஸ் கட்சி யார் அலக்ஷ்யம் செய்யவில்லை. 

அவர்களுடைய பிரதிநிதிகள் ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்டசபையிலும் நியமனம் செய்யப்பட்டார்கள். பள்ளிக் கூடங்களிலும் கலாசாலைகளிலும் அவர்களுக்குப் பிரத்தியேக ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. 

பின்னணியில் நிற்கும் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கெல்லாம், பாதி பீஸ் சலுகை காட்டப்பட்டிருக்கிறது. இவ் வண்ணம் மகாணத்திலுள்ள சகல பெரிய சிறிய சமூகங்களுக்கும் பிராமணர் களும் பிராமணரல்லாதாருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர் களுக்கும் பின்னணியில் நிற்பவர்களுக்கும் முன்னணியில் நிற்பவர்களுக் கும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள், இந்தியப் பிரஜை களான ஐரோப்பியர்கள் ஆகிய சமஸ்த சமூகங்களுக்கும் ஐஸ்டிஸ் கட்சி தயங்காமல் உதவி புரிந்து வந்திருக்கிறது.

பிரிட்டிஷ் அரசாட்சியில், நீதி மன்றங்களிலும் மற்றய உயர் பதவிகளிலும்  மற்றைய உயர் பதவிகளிலும் வீற்றிருந்து, அரும்பணியாற்றக்கூடிய மணி கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கின்றன என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியது ஜஸ்டிஸ் கட்சியேயாகும். அது இல்லாமற் போயிருப்பின் அம்மணி கள் மங்கி மாசு படிந்து மறைந்தேயன்றோ போயிருக்கும்?

நகரங்களிலும் கிராமாந்தாங்களிலும் உள்ள கீழ்த்தர மத்திய வகுப்பு களுக்கும் அவைகளில் க்ஷேம லாபங்களுக்கான காரியங்களை ஜஸ்டிஸ் கட்சி தாரமாகச் செய்து வருகிறது. பிரசவத்துக்கு முன் தாய்மாரைப் பராமரித்து சிசு மரணத்தைக் குறைக்கும் பொருட்டு சிகிச்சைச் சாலைகள் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றன. தாய்ப் பாலில்லாக் குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுக்கப்பட்டு வருகிறது. 

குழந்தைகள் ஒரு வயது அடையும் வரை சிசுப் பாதுகாப்புச சங்கத்தார் கவனித்து வருகிறார்கள். 5 வயது வரையுள்ள குழந்தைகள் பிரத்தியேகமாக கவனிக்கப்பட்டு வருகிறார்கள். 

சில குறிப்பிட்ட இடங்களில் 6 வயது முதல் 11 வயது வரை குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்வி புகட்டப்பட்டு வருகிறது. அந்தப் பள்ளிக்கூடங்களில் வைத்திய பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிக் கூடங்களில் குழந்தை களுக்கு மத்தியானச் சாப்பாடு கொடுக்கப்பட்டு வருகிறது. 

பின்னணியில் நிற்கும் சமூகங்களிலுள்ள பிள்ளைகளுக்கும் எல்லா பள்ளிக்கூடங் களிலும் கலாசாலைகளிலும் பாதிப் பீஸ் சலுகை காட்டப்பட்டு வருகிறது. இவ் வண்ணம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகள் முதல் பக்குவ வயதடைந்த பிறகு ஜஸ்டிஸ் கட்சியின் திட்டத்தினால் பல ஜாதியார்கள் கவர்மெண்ட் உத்தியோக முறை யில் பிரதிநிதித்துவமடைய உரிமை உண்டாயிற்று.

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, வேலை நேரக் குறைப்பு, விடுதி வசதியாரையும் வேண்டுமென ஜஸ்டிஸ்கட்சியே கிளர்ச்சி செய்து வந்தது. ஜஸ்டிஸ் கட்சியின் உதய காலத்திற்கு முன்பே, காலஞ்சென்ற நமதியக்கத் தலைவர் டாக்டர் நாயர், தொழிலாளர் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வந்தார்.

சிவில் மெடிக்கல் உத்தியோகங்களை மாகாணச் சர்க்கார் அதிகாரத்திற் குள்ளாகவும் இந்தியமயமாக்கவும் ஜஸ்டிஸ் கட்சியார் சாத்தியமான ஏற்பாடு கள் எல்லாம் செய்திருக்கிறார்கள். அம்மாதிரி ஏற்பாடுகள் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இதுவரை செய்யப்பட்டதே இல்லை. 

நகரத்திலுள்ள வாடகைக் குடியிருப்போர் ரயத்துக்கள் முதலியவர்கள் பாதுகாப்புக்காக நகர டெனண்டு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மற்ற வெளி ஜில்லாக்களிலுள்ளவர்களுக்கு மலையாள குடி சட்ட எஸ்டேட் லேண்ட்ஸ் சட்டம் அமெண்ட்மெண்ட்ஸ் இனாம் பில்லும் நிறைவேற்றியிருக் கிறார்கள். தேவையான உதவியளிப்பதற்காக நில அடமானச் சட்டம், கூட்டுறவுச் சங்க சட்டம், விவசாயக் கடன் சட்டம், தற்கால கடன்களுக்காக ஏற்பட்ட கொடூரமான தீர்மானங்களை ஒழிக்க ஏற்பாடுகள் முதலியவை இயற்றப்பட்டன.

ஐஸ்டிஸ் இயக்கம் ஆரம்பமானது முதற்கொண்டு கிராமப்புனருத்தா ரணம் அவ்வியக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. அதற்காக ஒரு திட்டமும் போடப்பட்டிருந்தது. நில அடமான பாங்கிகள் ஏற்படுத்தியும், கூட்டுறவு ஐக்கிய நாணயச் சங்கங்கள் ஸ்தாபித்தும், விவசாயிகளுக்குக் கடன் உதவியும் விவசாயிகள் கடன் பளுவைக் குறைக்கச் சட்டங்கள் செய்தும், விளை பொருட்களை விற்பனை செய்ய வசதிகள் அளித்தும் கால் நடைகளை வளர்க்க புதுமுறைகளை போதனை செய்தும் குடிசை கைத் தொழில் விருத்தி செய்தும் ஜல சப்ளை, சுகாதாரம் முதலியவை சீர்படுத்தியும் ஆரம்பக் கல்வியை வளர்த்தும் கிராமவாசிகளுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் எவ்வளவோ நன்மை செய்திருக்கிறார்கள்.

இவ்வண்ணம் தாங்கள் செய்துள்ள வேலைகளினால் கிராமவாசிகளுக் கிடையில் ஒரு நல்லுணர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறார்.

ஆங்கில வைத்தியம் சென்னை மாகாணத்தில் அமலில் வந்த போது தேச மக்களில் 100 க்கு 90 பேர் நாட்டு வைத்தியத்தைக் கையாண்டும் சர்க்கார் நாட்டு வைத்தியத்தை அலக்ஷ்யம் செய்து வருவதாக ஒரு குறை கூறப்பட்டு வந்தது. மெடிகல் காலேஜில் நாட்டு வைத்தியப் பயிற்சிக்கு ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமென்று ஒரு சிபார்சு செய்யப்பட்டது. 

அது பலிக்காததினால் நாட்டு வைத்தியத்துக்கென ஒரு தனிக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. அங்கு சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யூனானி வைத்தியம் முதலிய 3 வித வைத்தியமும் கற்பிக்கப்படுகின்றன. அங்கு பயிற்சி பெறுகிறவர்கள் சர்க்கார் பரீட்சையில் தேறி டிப்ளோமாவை பெற்றவர்களுக்கு ரிஜிஸ்டர் செய்ய ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள். தற்கால வைத்தியர்களிலும் கிராமவாசி களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதென்று கண்டவுடனே கிராம வைத்தியர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். உத்தியோகத்திலுள்ள வைத்தியர் களின் சம்பளங்களை உயர்த்தினார்கள்.

தர்ம மத ஸ்தாபனங்களை சர்க்கார் மேற்பார்வையில் கொண்டுவர வேண்டுமென்று ஒரு நூற்றாண்டு காலம் நடந்து வந்த கிளர்ச்சியின் பயனாய் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

மாகாண சட்டசபைகளிலே, மாதருக்கு ஜஸ்டிஸ் கட்சி ஓட்டுரிமை வழங்கிற்று. பிறப்பாலோ, பழைய கொள்கையின் படியோ, மனிதருக்குள்ளே வித்தியாசங் கூடாதென்றே ஜஸ்டிஸ் கட்சி கருதி வருகிறது. ஜஸ்டிஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்து வந்த மாபெருஞ் சேவையின் பயனாகவே இப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தாரிடையும்.

முன்னேற்றமடையாத வகுப்பாரிடையும் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ஜனங்களுக்கு நன்மையளிக்கக் கூடிய எந்தச் செயலையும் செய்ய ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை தவறியதே இல்லை. ஆகவே இந்தியாவிலேயே ஜஸ்டிஸ் கட்சி ஒரு முக்கியமான ஸ்தானம் வகித்து வருகிறது.

எமது சேவையின் அளவையோ, மதிப்பையோ அளக்க ஆரம்பிப்போர், நாங்கள் எமது சேவைகளை அரசியல் அமைப்பின்படி ஏற்பட்டுள்ள எத்தனைவித சிக்கலுக் கிடையே செய்துவர நேரிட்டது. எத்தனை தடைகள் இருந்தன என்பதை மனதில் இருத்த வேண்டும். வேறுகட்சி ஒன்றும் இதை விட அதிகமாகச் செய்திருக்க முடியாதென நான் தீரமாகச் சொல்லுவேன்.

பல பெரிய பிரமுகர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்குள் நிர்வாகத்திறனைப் பற்றியும், சட்ட ரீதியான வேலை செய்ய அதற்குள்ள ஆர்வத்தைப் பற்றியும் புகழுரை தந்துள்ளனர். சுயாட்சிக்குச் சென்னை சிறப்பாகத் தகுதியுடையது எனக் கூறப்படுகிறது. இந்த உன்னத நிலைமைக்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியே யாகும். ஜஸ்டிஸ் தலைவர்கள் விடாப்பிடியாக, சுயாட்சிக்காகவே பாடுபட்டு வந்துள்ளனர்.

நமது தலைவர்

நமது தலைவர் ஒரு அதி அற்புதமான கனவான். அவர் ஜனநாயக லட்சியத்தில் மூழ்கிய ஒரு ஜமீந்தார். 

தலைவராக இருக்க வேண்டியவர்கள் மூன்று ‘C’கள் அதாவது (Capital) பணம், (Capacity) திராணி, (Character) ஒழுக்கம் உடையவர்களாயிருக்க வேண்டுமென்று ஸர். முகமது உஸ்மான் கூறுவதுண்டு. 

எனது அபிப்ராயத்தில் அவற்றுள் மிகவும் முக்கியமானது ஒழுக்கம்; இராண்டாவது திராணி, அந்த மூன்று அம்சங்களும் நமது தலைவரிடத்தில் ஏராளமாக அமைந்திருக்கின்றன.

 ஜமீன் நிலச் சட்டத்தினா லும் இனாம் சட்டத்தினாலும் அவர் தமது வருமானத்தில் பெரும் பகுதியை இழந்தார். 5 லக்ஷம் விவசாயிகள் விடுதலை பெற்றார்கள். ‘பொப்பிலி ராஜா இல்லையானால் ஜமீன் குடிகளுக்கும் இனாம் குடிகளுக்கும் விடுதலை யில்லை’ என்று கூடச் சொல்லலாம். அந்த இரண்டு சட்டங்களையும் அவர் நிறைவேற்றி வைத்ததினால் சட்டசபையிலுள்ள எல்லாக் கட்சியாருடைய பாராட்டையும் பெற்றார். அவரது அதிகாரத்திலுள்ள துறைகளைப் பற்றி அவருக்குப் பரிபூரண ஞானமுண்டு.

 நெருக்கடியான விவாத காலங்களில் அஞ்சாமல் விடையளிப்பார். அவர் கொண்டுவந்த மசோதாக்களை யயல்லாம் வெகு சாமர்த்தியமாக நிறைவேற்றி வைத்திருக்கிறார். 

சட்டசபை யிலும் வெளியிலும் அவர் நிகழ்த்திய பிரசங்கங்கள் அவரது அபார ஞானத்தை விளக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. நெருக்கடியான ஒரு காலத்து அவர் நமது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜஸ்டிஸ் கட்சியின் அதிர்ஷ்டமே. பொப்லி இல்லாவிட்டால் ஜஸ்டிஸ் கட்சியே இல்லை என்று கூட எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்காக அவர் செய்துள்ள, செய்கின்ற உதவிகளுக்காக நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன்.

நமது கட்சிப் பத்திரிகை

ஜஸ்டிஸ் நமது கட்சிப் பத்திரிகை. சென்ற 20 வரு­ காலமாக அது நமது உரிமைகளுக்காகப் போராடி வருகிறது. இந்த மகாணத்திலுள்ள லக்ஷக் கணக்கான மனிதர்கள் குடிகளின் உரிமைகளை அது விளக்கிக் காட்டி வருகிறது. கட்சியும் கட்சி பத்திரிகையும் பல லக்ஷக்கணக்கான மக்களுக்கும் பலன் தந்து வருகிறது. மாகாண மக்களில் 100 க்கு 90 பேரும் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்கும் பக்ஷத்தில் இதுவே மாகாணத்தில் தலைசிறந்த பத்திரிகையாக இருந்திருக்கும். எல்லா சமூகங்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் அப்பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு சமூகத்தினு டைய கடமையாகும். குறைந்த பக்ஷம் 50,000 பிரதியாவது செலவாகும் படி செய்ய வேண்டும், ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையோ, ‘விடுதலை’ பத்திரிகையோ ஏதாவது ஒன்று ஒவ்வொரு கிராமவாசி கையிலும் இருக்கும்படி செய்ய வேண்டும். தம் கையில் ஜஸ்டிஸ் பத்திரிகையை வைத்துக் கொண்டிருப்பதை ஒவ்வொருவரும் ஒரு பெருமையாக மதிக்க வேண்டும். ஏனெனில் அது பாமர மக்களின் குறைகளை எடுத்துக் கூறுகிறது. ஒரு பொழுதும் பொய் பேசுவ தில்லை. ஜஸ்டிஸ் கட்சியாலும் பத்திரிகையாலும் பலனடைந்தவர்கள் லக்ஷக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். 

நன்றியறிதலைக் கருதியாவது அவர்கள் ஒவ்வொருவரும் ஜஸ்டிஸ் பத்திரிகையை ஆதரிக்க வேண்டும்.

இப்பொழுது கட்சியை முனனேற்றமடைய அதிக பாடுபடுபவரும் ஜஸ்டிஸ் பத்திரிகையையயாரு திறமையாக நடத்தி வருபவருமான தோழர் டி.எ.வி. நாதனுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். (குடிஅரசு, 1936, அக்டோபர் 18).

#கந்தசாமி விநாயகம்

அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

 அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

       -கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

“அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர், பீமாராவ் ராம்ஜி என்ற மாணவன் கல்வியில் மிக உயர்ந்த நிலை அடைவதற்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்தார். அவருடைய உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் பீமாராவ் ராம்ஜி உயர்ந்த நிலைக்கு வரவே முடிந்து இருக்காது.

அந்த நன்றியின் வெளிப்பாடாகத்தான் அந்தப் பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் குடும்பப் பெயராக பீமாராவ் ராம்ஜி இணைத்துக் கொண்டார்” என்ற ஒரு கருத்து மக்களிடையே வலுவாகப் பரவி உள்ளது. இக்கருத்தைப் பார்ப்பனர்கள்தான் உருவாக்கி, பரப்பி நிலைபெறச் செய்து இருக்கிறார்களே ஒழிய இதில் இம்மி அளவும் உண்மை இல்லை.

இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களேகூட இதை வலுவாக நம்புகிறார்கள். எவ்வளவு வலுவாக நம்புகிறார்கள் என்றால்  இதைப் பற்றிக் கூறினால் “பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் உண்மைச் செய்தி களைக்கூட மறுப்பது / எதிர்ப்பது சரி அல்ல” என்று வலு வாக எதிர்வாதம் செய்யும் அளவுக்கு நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் “பார்ப் பனர்கள் அம்பேத்கர் போன்ற திறமைசாலிகளை மதிக் கவும் வளர்க்கவும் தவறுவதே இல்லை. பார்ப்பனர்களின் கருணையினால்தான் அம்பேத்கர் இவ்வளவு உயர்ந்த நிலைக்குச் செல்ல முடிந்து இருக்கிறது. ஆகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது தவறான / நன்றி கொன்ற செயலாகும்” என்ற கருத்தைப் பரப்பி ஜாதியக் கொடு மைகளை நிரந்தரப்படுத்த அவாள்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

உண்மையில் அண்ணலின் குடும்பப்பெயர் (Surname)  சக்பால் (Sakpal)  என்பது ஆகும். அவரு டைய சொந்த ஊர் (பிறந்த ஊர் அல்ல) மகராட்டிர மாநிலத்தில், இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள அம் பாதவே (Ambadawe) என்ற கிராமம் ஆகும்.இதை அம்பேத் (Ambed)  என்று சுருக்கியும் சொல்வார் கள்.

அண்ணலின் தந்தை அண்ணலைப் பள்ளியில் சேர்க்கும்போது, குடும்பப் பெயரைக் கூறவேண்டிய இடத்தில் தன் சொந்த ஊரின் பெயரைக்கூறி இருக்கிறார். பள்ளி நிர்வாகத்தினரோ அம்பாதவே என்று பதிவு செய்வதற்குப் பதிலாக அம்பேத்கர் என்று பதிவு செய்து விட்டனர். இவ்வாறுதான் அம்பேத்கர் என்ற பெயர் அண்ணலுக்கு ஏற்பட்டது, நிலைபெற்றது. 

ஆனால் அம்பேத்கர் மிக உயர்ந்த நிலையை அடைந்த உடன், அவருடைய அத்தனைப் புகழுக்கும் பார்ப்பனர் கள்தான் மூல காரணம் என்று பார்ப்பனர்கள் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் இரண்டு விதக் கதைகளைக் கட்டி விட்டு உள்ளனர்.

முதல் கதை அண்ணலின் அத்தனை முன்னேற்றத் திற்கும் அம்பேத்கர் என்ற பார்ப்பனர்தான் காரணம் என்றும், அந்த நன்றிக் கட.னுக்காகத்தான், அவருடைய பெயரை தன் குடும்பப் பெயராக அண்ணல் ஏற்றுக் கொண்டார் என்பது. இது நகைப்புக்கு உரிய கற்பனை. 

அண்ணல் தன் முன்னேற்றத்திற்கு உதவிய “அந்தப்” பார்ப்பன ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்க அப்பெயரை தன் குடும்பப் பெயராக ஏற்றுக்கொண்டு இருந்தால், அது அவர் வளர்ந்து நிலைபெற்றபிறகு அல்லவா நடைபெற்று இருக்கும்? ஆனால் அம்பேத்கர் என்ற பெயர் தொடக்கப்பள்ளிப் பதிவேடுகளிலேயே உள்ளதே? 

அப்படி இருக்கையில் தன் முன்னேற்றங்களுக்குக் காரணமான பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் பெயராக ஏற்றுக்கொண்டார் என்று கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

இரண்டாவது கதை என்னவென்றால் கிருஷ்ண கேசவ் அம்பேத்கர்  (Krishna Keshav Ambedkar) என்ற பார்ப்பன ஆசிரியர் அண்ணலின் அறிவாற்ற லைக் கண்டு, மெச்சி, அன்பின் உச்சத்தில் இருந்து கொண்டு, தன் குடும்பப்பெயரை அண்ணலின் குடும்பப் பெயராக இணைத்தார் என்பது தான். 

ஒரு மாணவனைப் பள்ளியில் சேர்க்கும்போதே தன் குடும்பப் பெயரைக் “கொடையாக” அளிக்கவேண்டும் என்று தோன்றும் அளவுக்கு அவனுடைய அறிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு விடமுடியுமா?   

அதுமட்டுமல்ல மகாராட்டிர மாநிலத்தில் உள்ள குடும்பப் பெயர்களில் அம்பேத்கர் என்ற குடும்பப் பெயரே இல்லை என்று தெரியவருகிறது. இல்லாத குடும்பப் பெயரை எப்படி ஒருவர் வைத்துக் கொண்டு இருந்தார் என்ற புதிருக்கு விடை காணவே முடியவில்லை.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அறிவுத்திறன் பார்ப்பனர்களின் அறிவுத்திறனுக்குச் சற்றும் குறைந்தது அல்ல. சொல்லப் போனால் மக்களுக்குத் தேவையான தொழிலைச் செய்வதில் பட்டறிவு இல்லாததால் பார்ப் பனர்களின் அறிவுத்திறன், உழைக்கும் வகுப்பு மக்க ளின் அறிவுத்திறனுக்கு அருகில் நெருங்கி வரவும் முடி யாது. 

ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அறிவுத் திறன்தான் உயர்ந்ததாக இருக்கும். பார்ப்பனர்களின் அறிவுத் திறன் என்பது வெறும் ஏமாற்று வித்தையே. இந்த ஏமாற்று வித்தையின் வெளிப்பாடுதான் அம்பேத்கர் என்பது பார்ப்பனக் குடும்பப் பெயர் என்று கதைகட்டி இருப்பது. 

அம்பேத்கரின் குடும்ப பெயர் சக்பால். அவருடைய சொந்த ஊர் மகாராட்டிரா மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில்  உள்ள அம்பாதவே. அதை அம்பேத் என்று சுருக்கி வழங்கி வந்துள்ளனர்.

துக்ளக் சில விளக்கங்களைத் தர வேண்டும்

மகாராட்டிராவில் அம்பேத்கர் என்ற குடும்பப் பெயர் கொண்ட பார்ப்பனர்கள் எங்கு உள்ளனர்? அம்பேத்கர் என்ற குடும்பப் பெயரில் மகாராட்டிராவில் யாருமே இல்லை. இருந்தால் அந்தப் பட்டியலை வெளியிடுவார்களா? 

என்றோ எழுதிய பொய்யை தொடர்ந்து எழுதினால் அது உண்மையாகிவிடுமா? அம்பேத்கர் என்ற பெயரில் பார்ப்பனர்களின் குடும்பப் பெயர் இருந்தால் இன்று அதை ஒரு கூட்டம் பெருமையாக பயன்படுத்தி இருக்குமே - ஏன் பயன்படுத்தவில்லை?

பள்ளியில் சேர்க்கும் போதே அவரது தந்தை அம்பேவத் என்றுதான் பெயரோடு சேர்த்துள்ளார், ஆனால் அப்போது பதியப்பட்டபோது தவறுதலாக "கர்" சேர்க்கப்பட்டு பின்னர் அது அம்பேத்கர் என்று ஆகிப் போனது. அதாவது ஒரு மாணவன் பள்ளியில் சேர்க்கும் போதே ஒரு ஆசிரியர் எப்படி தனது குடும்பப்பெயரை அடுத்தவரது பெயருக்குப் பக்கத்தில் போட ஒத்துக் கொள்வார்?

கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்