Sunday, February 27, 2022

அரிமா வளவன் என்னும் நச்சு

 ஆண்டனி வளனின் அருமையான கட்டுரை, அரிமாவளவனைப் பற்றி தோலுரித்துள்ளார். 

பாதிரியார் "லேனார்ட்” என்ற “அரிமா வளவன்” சில அதிர்ச்சியான மற்றும் கசப்பான உண்மைகள்!

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்ட பல்வேறு அமைப்புகளில், இந்த தமிழர் களமும் ஓன்று.தமிழர் களம் என்பது எதோ ஒரு தமிழர் நலன் சார்ந்த இயக்கம் போல என்று தான் ஆரம்பத்தில் எண்ணி இருந்தேன்.ஆனால் அவர்களின் கொள்கைகள், மற்றும் செயல்பாடுகள் எவற்றின் மீதும் நமக்கு உடன்பாடு இல்லை எனினும் கூட, கடுமையான விமர்சனங்கள் வைத்தது இல்லை.

முதலில் இப்படி ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதே பலருக்கு தெரியாது என்பது வேறு விடயம். ஆனாலும் கூட ஒட்டுமொத்த தமிழகமும் இவர்களால் தான் இயங்குகிறது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால் யார் என்ன சொன்னாலும் எது எதார்த்தம் உண்மை என்பது எல்லோருக்கும் புரியும்.நமக்கு இவர்கள் ஒவ்வாததற்கு காரணம் இவர்களின் அடிப்படையே கொள்கையான மரபணு பரிசோதனை. வைகோவை இன்றும் நேசிப்பவன் நான். ஆனால் வடுகரான வைகோவை நேசிக்கும் நீ எப்படி தமிழனாக இருக்க முடியும் என்று நமக்கும் தமிழனா இல்லையா என்று சான்று வழங்கும் இந்த மன நோயாளிகளை நாம் எப்படி ஏற்க முடியும்? இது ஒருபுறம் இருக்கட்டும்.

இன்னொருபுறம் இடிந்தகரை அணு உலை எதிர்ப்பு போராட்டத்திலும் நாங்கள் தான் அனைத்தையும் செய்தோம் என்று ஊரெல்லாம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தேர்தல் அரசியலில் பங்கு பெற்றால் தமிழர் களம் தலைப்பில் தேர்தலை எதிர்கொள்ளட்டும், அப்படி செய்வது தான் சரி என்பது போல இவர்கள் பேசி வருகிறார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு சரி தவறு என்பதை போராட்டத்தை,போராட்ட குழுவினரை நன்கு அறிந்தவர்களுக்கு ஓரளவுக்கு தெரியும்.

அதாவது வருடத்தில் ஒரு ஐந்து நாள் போராட்டக் களத்துக்கு போய் வந்தவர்கள் எல்லாம் எங்களால் தான் இந்த போராட்டமே என்று மார் தட்டினால், மூன்று வருட காலம் அந்த களத்திலேயே முடங்கி கிடந்தும், லட்சக்காணக்கான பொய் வழக்குகளை சுமந்து கொண்டு, சிறை வாழ்க்கை அனுபவித்து, உயிரைத் தியாகமாய் தந்த சாதாரண மக்கள், மற்றும் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் இந்த போராட்டத்தை மிகுந்த கட்டுக்கோப்போடு கொண்டு செல்லும் போராட்ட குழு உறுப்பினர்கள் எல்லாம் எந்த அளவுக்கு மார் தட்ட வேண்டும்?ஆக இங்கே எல்லாரும் தேவை. நம் எல்லோரின் கூட்டு முயற்சி என்ற மனப்பக்குவத்துக்கு வந்து விட வேண்டும். இங்கே யார் பெரியவன் என்று தங்கள் சுய பெருமை பேச ஆரம்பித்தால், அசிங்கப்படப் போவது நிச்சயம். போராட்டத்தை நன்கு அறிந்த நண்பர்கள் பலர் இந்த சமபவங்களை எல்லாம் அறிந்திருக்க கூடும். எனவே தங்களால் தான் இந்த உலகமே இயங்குவதாக கற்பனை செய்து கொள்ளும் அறிவாளுகளுக்கு அல்லது தற்குறிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அது என் வேலையும் அல்ல.

ஆனால் தமிழர் களம், தமிழர் களம் என்று சொல்கிறார்களே இதன் அமைப்பாளர் யார் என்பதை கொஞ்சம் தோலுரிக்க வேண்டிய நேரம் இது. என் கேள்விகளுக்கு பதில் சொல்லத் திராணி உள்ளவர்கள் பதில் சொல்லலாம். சவாலாகவே சொல்கிறேன்!

தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் அரிமா வளவன் என்று பலர் அறிந்திருக்க கூடும். கட்சிக் கொடி, சுவரொட்டி, மாநாடு என்று தூத்துக்குடி சார்ந்த பகுதிகளில் அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். இது ஒரு தேர்தல் அரசியல் இயக்கம்.

சரி அரிமா வளவன் என்பது இவரது உண்மையான பெயரா?

கிடையாது.அப்படியானால் இவரது உண்மையான் பெயர் லேனார்ட்.

இவரது சொந்த ஊர்? நெல்லை மாவட்டம் உவரி. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் வார்த்தை சித்தர் வலம்புரி ஜானின் சகோதரர் மகன்.

இவரது பணி அரசியலா? அல்லது வேறு பணி செய்கிறாரா?

இவரது உண்மையான பணி அரசியல் இல்லை. இவர் தற்போதும் ஒரு கத்தோலிக்க கிறித்துவ பாதிரியார்.

இவருக்கு திருச்சபை பணி எங்கே ?

தற்போது திருச்சி மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணி புரிகிறார்.

தற்போது என் கேள்விகள் மிக எளிது!

உலக மகா வெண்ணை வெட்டி நியாயங்கள், மரபணு பரிசோதனை, கொள்கை, கோட்பாடு, ஊருக்கு உபதேசம் எல்லாம் சொல்லும் பாதிரியார். லேனார்ட் என்ற அரிமா வளவன், எப்படி தான் ஒரு பாதிரியாராக இருந்து கொண்டே,ஒரு தேர்தல் அரசியல் கட்சியை நடத்த முடியும்? அந்த கட்சியின் பொது செயலாளராக பதவி வகிக்க முடியும்? அப்படி அரசியல் கட்சி நடத்துவதற்கு கத்தோலிக்க பாதிரியார்களுக்கு அதிகாரம் கிடையாது. அது அவர்களின் பணியும் அல்லவே!

அப்படி கட்சி நடத்துவது தான் முதன்மைப் பணி என்றால்,தன் பாதிரியார் பணியை உதறி விட்டு வெளியே வந்து, அதன் பின்னர் அரசியல் கட்சி நடத்துவது தானே முறையாகும்.பாதிரியாராக இருந்து கொண்டே அரசியல் கட்சி நடத்துவது தவறு என்பது இவருக்கு தெரியாதா?

அரசியலுக்கு ஒரு பெயர், ஆலயத்துக்கு ஒரு பெயர் என்ற ரெட்டை வேடம் எதற்கு? நான் சொல்லும் இந்த உண்மைகள் எத்தனை பேருக்கு தெரியும்?

தற்போதும் பாதிரியாராக இருக்கும் இவரால், எப்படி சாதியம் சார்ந்த பாகுபாட்டை, ஒரு சாதிய வெறுப்பை/வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு, யார் தமிழன் என்று மரபணு பரிசோதனை செய்து கொண்டே,பல சமுதாய மக்கள் வாழும் பகுதியில்,அவர்களுக்கு மத்தியில் இறைப் பணி செய்ய இயலும்?

வைகோ என்ற மனிதனை நேசிக்கும் என்னைப் பார்த்து,எப்படியடா ஒரு வடுகனை நேசிக்கும் நீ தமிழனாக இருக்க முடியும் என்று கேட்கும் ஒரு இயக்கத்தை சேர்ந்த நபர், இறைப்பணி செய்யும் ஊரில் பல சமுதாய மக்கள் ஆலயத்துக்கு வந்தால் என்ன மன நிலையோடு ஏற்கும்?

அதாவது இவரது சாதிய வன்மத்துக்கு ஒரு சின்ன உதாரணம். இவர் நடத்தும் வேர்கள் பத்திரிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழன் அல்லாத பேரறிவாளனின் தூக்குதண்டனைக்காக தமிழர்கள் எல்லோரும் பாடுபடுகிறார்கள், ஆனால் தமிழர் அல்லாதவர்கள் அந்த அளவுக்கு நன்றியோடு நடந்து கொள்வதில்லை என்ற பொருளில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்த ஆதாரத்தை வைத்து அவர் மீது கடுமையான கண்டனங்கள் எழுந்தன. உடனே, யாரோ எனக்கு தவறான தகவல் தந்து விட்டார்கள் என்று பம்மினார், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். இது குறித்து ஆதாரத்தோடு ஒரு பதிவை நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இங்கே அவர் மன்னிப்பு கேட்டாரா கேட்கவில்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால் ஒரு பாதிரியாருக்கு இது போன்ற மக்களைப் பிளவு படுத்தும், கேவலமான அரசியல் தேவையா? இதை செய்வது முறையா? என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கிறித்துவர்கள் சாதி பாகுபாடு பார்க்க கூடாது என்று இருக்கும் போது, கிறித்துவப் பாதிரியார் எப்படி சாதிய துவேஷத்தை மக்கள் மத்தியில் விதைக்கலாம்? இது ஒரு தவறான முன் உதாரணம்.

இன்னும் சில ஆச்சர்யங்கள் உண்டு. அது என்ன?

இவர் கிறித்துவப் பாதிரியாராக இருக்கிறார் என்று கணக்குக்கு சொன்னாலும் கூட நான் இவரது எழுத்துக்களைப் படித்து புரிந்து கொண்ட வகையில் இவர் ஒரு கிறித்துவர் அல்ல. இது இன்னும் வேடிக்கை அல்லவா! எதனால் இவர் கிறித்துவர் அல்ல என்று சொல்கிறேன்? இவரது பல்வேறு பதிவுகளை நான் முன்பே படித்து இருக்கிறேன். இயேசு கிறித்து ஒரு கடவுள் அல்ல, அவர் யூத மக்களுக்காக போராடிய ஒரு போராளி மட்டுமே! அதாவது எப்படி பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய மாபெரும் போராளியோ, அப்படித் தான் இயேசு கிறித்துவும் யூத மக்களுக்காக போராடிய ஒரு போராளி மட்டுமே என்பது தான் இவரது தத்துவம்.அவர் அப்படி எழுதிய பதிவுகளை நான் படித்திருக்கிறேன்.அவரது முகநூல் பக்கத்திலேயே அந்த பதிவுகள் இன்னும் இருக்கலாம்.

பிரபாகரனை போராளி என்று ஏற்பது போலவே, இயேசு கிறித்துவும் ஒரு போராளி மட்டுமே என்று ஏற்கும் மன நிலை கொண்ட மனிதர் எப்படி கிறித்துவராக இருக்க முடியும்?

அது மட்டும் தானா இவரது கருத்தியல் என்றால் கட்டாயம் இல்லை. இவர் உருவாக்கிய தமிழர் களம் கட்சி நபர்களிடம் இவர் உருவாக்கி வைத்திருக்கும் கருத்து என்னவென்றால், மீனவர்கள் தங்கள் அதிகாரங்களை இழந்து போக காரணம், அவர்கள் கிறித்துவர்களாக மதம் மாறியது தான்.ஆக இந்த கிறித்துவ மதம் தான் மீனவர்களின் அரசியல் அதிகாரங்களை சீரழித்துப் போட்டது. அப்படியானால் இதற்கு தீர்வு என்ன? மீண்டும் தாய் மதமாம் இந்து மதத்துக்கு மாறுவது தான் மீனவர்களின் அரசியல் அதிகாரத்துக்கு தீர்வு என்று ஒரு அரை வேக்காட்டு தீர்வையும் சொல்லி வருகிறார். இதே கருத்தைத் தான் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.க்ரூசும் சொல்லி வருகிறார். இவர்கள் இருவரின் ஊரும் ஒன்றே, சித்தாந்தமும்,சிந்தனைகளும் ஒன்றே!

ஜோ.டி.க்ரூசைப் பொறுத்தவரையில் அவர் கிறித்துவ மதத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் உளறலாம். காரணம் கிறித்துவ மதத்தில் இருந்து வெளியேறி தன் தாய் மதத்துக்கே திரும்பி விட்டார். அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுக்காக, ஜெயமொகன் களுக்காக, சாகித்திய விருது போன்ற பலவற்றுக்காக அவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இந்துத்வாவைப் பற்றி பேசலாம்.அது தான் மீனவர்களுக்கான ஒரே தீர்வு என்று சொல்லலாம்.ஆனால் அதை ஏற்க வேண்டுமா வேண்டாமா என்பதை கடலோர மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

ஜோ.டி.க்ரூஸ் பேசுவதைப் போன்றே பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா பேசலாமா என்றால் பேசக் கூடாது. அப்படி கிறித்துவ மதம் தான் மீனவர்களை சிதைத்தது, மீண்டும் இந்துக்களாக மாற வேண்டும்,அது தான் மீனவர்களுக்கான தீர்வு என்று பேசும் ஒரு நபர் பாதிரியாராக இருக்க தகுதி அற்றவர். இதை இந்த பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா உணரவில்லையா? அல்லது இதற்கு முன் இந்த கேள்விகளை யாரும் இவரிடம் கேட்கவில்லையா? கிறித்துவத்துக்கு முரணாக நின்று போதிக்கும்,கிறித்துவை கடவுளாக ஏற்காத ஒரு மனிதர் எப்படி பாதிரியாராக இருக்க இயலும்?

பாதிரியாராக தன்னைக் காட்டிக் கொள்ள லேனார்ட் என்ற பெயரும், வெள்ளை அங்கியும், அதே நேரத்தில் அரசியல்வாதியாக வலம் வர அரிமா வளவன் என்ற பெயரும்,வெள்ளை வேட்டியுமாக திரியும் இந்த மனிதர், ஏதாவது ஒரு பணியை செய்வது மட்டும் தான் சரியாக இருக்க முடியும். இந்த ரெட்டை வேடம் ஒருபோதும் இவருக்கு பொருந்தாது என்பதை விட தவறு!

அரசியல் என்று முடிவெடுத்த பிறகு, உழைத்து சம்பாதித்து, தன் சொந்த பணத்தில் அரசியல் செய்ய வேண்டும். பாதிரியாராக இருக்கும் ஒரு நபருக்கு, இத்தனை நாள்,எப்படி ஒரு அரசியல் கட்சி நடத்த பணம் வருகிறது? எங்கிருந்து வருகிறது? அவர் என்ன வேலை செய்கிறார்?அப்படியானால் அரசியல் கட்சி நடத்த, அதற்கான பணத்துக்காக பாதிரியாராக நடிக்கிறாரா?

என்னைப் பொறுத்தவரையில் நல்ல மனுஷனாக இருப்பவன் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும். தன் மனசாட்சிக்கு மிஞ்சுன நீதிபதி இந்த உலகத்தில் எவரும் இல்லை.

கடந்த பல ஆண்டுகளாக பாதிரியாராகவும், அரசியல்வாதியாகவும் ரெட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கும் பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா வளவன் கத்தோலிக்க பாதிரியார் என்ற நிலையை வகிப்பதற்கு தகுதி அற்றவர்.எனவே நியாயமான மனிதராக, மனசாட்சியோடு, குருத்துவப் பணியில் இருந்து விலகிய பிறகு, அரசியல் செய்வது தான் சரி.

ஒரே நேரத்தில் பாதிரியாராகவும், அரசியல்வாதியாகவும் தொடரும் அரிமா வளவன் அப்படி நியாயப்படி நடந்து கொள்வாரா?

இந்த பதிவு பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா அவர்களுக்கு மட்டுமல்ல, தமிழர் களம் கட்சியில் பொறுப்புகளில் இருக்கும்,

தூத்துக்குடி மறை மாவட்டத்தை பாதிரியார்களுக்கும் சேர்த்தே தான். புரிய வேண்டிய நபர்களுக்கு புரியும் என்று எண்ணுகிறேன். அவர்களும் தங்கள் பாதிரியார் பொறுப்புகளில் தானாகவே விலக வேண்டும். ஊருக்கெல்லாம் உலக நியாயம் பேசும் நபர்கள்,முதலில் தாங்கள் அதைக் கடை பிடிக்க வேண்டும் அல்லவா!

குறிப்பு:

எந்த மதத்தின் பிரதி நிதிகளையும் அவர்களின் தனி மனித தவறுகள் குறித்து கேள்வி கேட்கவோ விமர்சனம் செய்யவோ எனக்கு விருப்பம் கிடையாது.அப்படி செய்ததும் இல்லை. ஆனால் இங்கே இப்போது இவர்கள் செய்வது அடிப்படைத் தவறு. ஒரு மத போதகர் என்பவர் ரெட்டை வேடம் அணிந்து, ஒரு பக்கம் பாதிரியாராகவும், இன்னொரு பக்கம் அரசியல்வாதி, கட்சிக் கொடி, தேர்தல் என்று செயல்படுவதும் ஏற்க முடியாதது. அரசியல் ஆசைகளை வைத்துக்கொண்டு இருக்கும் இவர்கள்,தங்கள் அன்றாட வாழ்க்கை சவுகரியங்களுக்காக மட்டுமே கத்தோலிக்க பாதிரியார்களாக இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.சாதிய வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் பேசும் இவர்கள்,என்ன கிறித்துவத்தை போதிக்கப் போகிறார்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்விக் குறி!

அன்பின் ஆழத்தில்

ஆன்டனி வளன்

ஆறு முறை மன்னிப்புக் கேட்ட வீர சாவர்க்கர்

 சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினாரா?..

ஆம் ஒன்று அல்ல இரண்டு அல்ல,

ஆறு கடிதங்கள்🤣🤣... 

1911, ஜூலையில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் சாவர்க்கர் தனது முதல் மன்னிப்புக் கடிதத்தைச் சமர்ப்பித்தார். 

1913, நவம்பரில் சாவர்க்கர் தனது இரண்டாவது மன்னிப்புக் கடிதத்தைச் சமர்ப்பித்தார். 

1914, 1918 ஆகிய ஆண்டுகளில் சாவர்க்கர் எழுதியதாகக் கூறப்படும் மன்னிப்புக் கடிதம் பற்றி 1920-ம் ஆண்டு, சட்டமன்றத்தில் உள்துறை உறுப்பினர் சர் வில்லியம் வின்சென்ட் குறிப்பிட்டிருக்கிறார்” எனப் பதிவு செய்திருக்கிறார். மேலும், 

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து 1914-ம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி புறப்பட்டு 1915-ம் ஆண்டு, ஜனவரி 9-ம் தேதியே இந்தியாவுக்கு வருகை தந்தார். 

அவரது வருகைக்கு முன்பே சாவர்க்கர் இரு முறை கருணை மனுக்களை எழுதியிருக்கிறார்" 

என ஓர் ஆங்கில நாளேட்டுக்கு எழுதிய கட்டுரையில் விவரித்திருக்கிறார்...

அதேபோல, 

சாவர்க்கர் பற்றி ஆய்வுகள் செய்துவரும் நிரஞ்சன் தக்லே என்பவர், 

1911, ஜூலை 11-ம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்குக் கொண்டு செல்லப்பட்டார், 

அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது, ஆகஸ்ட் 29-ம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கடிதத்தை எழுதினார்...

அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளில், அவர் ஆறு முறை மன்னிப்புக் கடிதங்களைக் கொடுத்திருக்கிறார். 

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், 1924-ல் சாவர்க்கர் தனது ஆறாவது மன்னிப்புக் கடிதத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதியிருக்கிறார்" 

என ஒரு சர்வதேச ஆங்கில ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 


அதேபோல் இன்னொரு கடிதத்தில், "பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு முறைகள் எனக்கு நம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றன. இப்போது வன்முறையின் பாதையைக் கைவிட்டுவிட்டேன்"

என வீர.சாவர்க்கர் கடிதம் எழுதியதாகவும்,

அதன் விளைவாக 1919, மே 30, 31 ஆகிய இரு தேதிகளில் அவருடைய மனைவி, தம்பிகளைப் பார்க்க அந்தமான் சிறையிலிருந்த சாவர்கருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் நிரஞ்சன் தக்லே கூறியிருக்கிறார்.

மேலும், 

சாவர்க்கர், இன்னொரு கடிதத்தில் ``சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை,

எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள்,

அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், 

நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்குச் சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்டவில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்!"

எனப் பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 


சாவர்க்கர் தனது ஐந்தாவது கடிதத்தில் தன் மீது கருணை காட்டுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட மாட்டேன் என்றும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

மேலும், சாவர்க்கர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்துக்காகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார் எனவும் கூறப்படுகிறது...


இதன் விளைவாகவே, 

சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 1921, மே மாதம் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும், 

1924-ம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ஆறாவது கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், 

"எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக் கூடாது, 

ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தைவிட்டு வெளியேறக் கூடாது, 

அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது"

போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில், 

1924, ஜனவரி 6-ம் தேதி சாவர்க்கர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 

-ஏ.ஜி.நூரானி

(வழக்கறிஞர், எழுத்தாளர்)...

Saturday, February 26, 2022

ஆசிட் தியாகராசன்

பெரியாருக்குத் தண்டனை விதித்தவர் மேல் ஆசிட் வீசினேன் -

#ஆசிட்_தியாகராசன்....

தந்தை பெரியாருக்கு – 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால் ஆத்திரமடைந்த பெரியார் தொண்டர் ஒருவர், அரசு வழக்கறிஞரான பார்ப்பனர் முகத்தில் ‘ஆசிட்’ வீசினார். 

ஆசிட் தியாகராசன் உரையிலிருந்து..

என்னருமை உணர் வாளர்களே! நான் அதிகம் பேச முன்வரவில்லை. உண்மையைச் சொன்னால் – எனது 78 வயதில் நான் ஏறியுள்ள முதல் மேடை இது தான். புரட்சிகர இயக்கங்களுக்கு தனித் தனிப் படைகள் தேவை. நீங்கள் பிரச்சாரப் பீரங்கிகள்; பிரச்சாரப்படை. நான் தீவிர வாதத்தில் தான் இருப்பேன் (கைதட்டல்) .

பெரியார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போராட்டங்களில் நான் கலந்து கொள்வது இல்லை. நான் கருப்புச் சட்டையும் போடமாட்டேன். என்னுடைய நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கருதுபவன். என்னுடைய போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் எனக்கு நானே பொறுப்பாக்கிக் கொண்டுதான் நடத்துவேன். சுருக்கமாகச் சொல்கிறேன்..

பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் விபூதி வீரமுத்து என்பவன், பெரியார் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் போவதாகச் சொன்னான். 

திருச்சி திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா, எந்தத் தோழரும், விபூதி வீரமுத்து பக்கம் போக வேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார், அறிக்கையும் விட்டார். நான் வீட்டில் இருந்து கொண்டு, எனது சகாக்களை அழைத்துப் பேசினேன். டி.டி.வீரப்பா, கட்சியின் கட்டுப்பாடுபடி நடக்கட்டும். ஆனால், நாம் நமது ‘சட்டத்திட்டப்படி’ அதை சந்திப்போம் என்று கலந்து பேசினேன். அன்று எனக்கு டைபாயிடு காய்ச்சலே வந்துட்டுதுங்க. கடும் காய்ச்சலில் கிடந்த நான் கண்விழித்துப் பார்த்தபோது – என் கையில் கத்தி இருந்தது.

அப்போது மணி மாலை 7. அய்யோ, இந்நேரம் பெரியார் படத்தை செருப்பால் அடித்திருப்பானே யென்று, தலைதெறிக்க ஓடினேன்.

திருச்சி டவுன் ஹாலை நோக்கி, கூட்டத்தைக் கலைக்க, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால், விபூதி வீரமுத்து விடம் எத்தனை பேர் இருந்தார்கள் தெரியுமா? 25 பேர் மட்டும்தான். ஆனால் போலீஸ் பட்டாளம் அதிகமாக இருந்தது. 

நம்முடைய தோழர்கள் சாலையின் மறு பக்கத்தில் நின்று கொண்டு, பயங் கரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். என்னுடைய சகாக்களுக்கு நான் செய்ய வேண்டியதை எல்லாம் முன் கூட்டியே சொல்லி விட்டேன்; நான் சோடா விற்பவனாக மாறு வேடத்தில் போலீஸ் தடையை மீறி உள்ளே நுழைந்துவிடுவேன்; நான் சைகை காட்டியதும், நீங்கள் கற்களை வீச வேண்டும்; கல் விழுந்தவுடன் நான் செய்ய வேண்டியதை செய்வேன் என்று கூறி விட்டேன்.

அப்போதெல்லாம் என்னிடம் காசு கிடையாது; ஒருவரிடம் கடன் வாங்கி, அதில் ‘சோடா கிரேடு’களை வாங்கி, அதைத் தூக்கிக் கொண்டு, தலையில் துண்டு கட்டிக் கொண்டு, சோடா விற்பவனைப் போல் உள்ளே நுழைந்தேன். விபூதி வீரமுத்துவின் ஆள் கண்ணன் என்பவர், யார் நீ என்று கேட்டார். தலைவருக்கு சோடா தர வந்திருக்கிறேன் என்றேன்; உள்ளே போனதும், விபூதி வீரமுத்துவை நோக்கி எனது தோழர்கள் மலத்தை வீசினார்கள்; நான் டவுன் ஆல் கதவை உடைத்து, 

டவுன் ஆல் கோபுரத்தின் மீது ஏறி விட்டேன்; விபூதி வீரமுத்து என்பவன் பெரியார் ரஷ்யாவுக்குப் போன போது எடுத்த படத்தை ஒரு மூட்டையில் ஒட்டி, அந்தப் படத்தை செருப்பால் அடிக்கத் திட்டமிட்டிருந்தான். ‘வெள்ளைக்காரனுக்கு காட்டிக் கொடுத்த நாயை செருப்பால் அடிக்கிறேன்’ என்று கூறி – பெரிய செருப்பை, விபூதி வீரமுத்து தூக்கினான். அவ்வளவுதான், டவுன் ஹால் கோபுரத்திலிருந்து சோடா பாட்டிலையும், கற்களையும் விபூதி வீரமுத்து தலையை இலக்கு வைத்து அடித்தேன்; முதல் அடியில் அவன் தலை கிழிந்தது. பெரியார் படம் கீழே விழுந்தது. என்னைக் கெட்ட வார்த்தை பேசி திட்டினான்.

மீண்டும் விட்டேன் எனது ‘அஸ்திரத்தை’; பிறகு 7 பேர் மொட்டை அடித்துக் கொண்டு பெரியார் படத்தை வைத்துப் பாடை கட்டி தூக்கி வந்தனர். அத்தனை பேரையும் இலக்கு வைத்து அஸ்திரத்தை வீசினேன்; அப்படியே ஓட்டம் பிடிச்சானுங்க; மேலே இருந்த என்னைப் பார்த்து, போலீசார் வெறிக் கூச்சல் போட்டு, என்னை சுற்றி வளைக்க வந்தாங்க; நான் மேலே இருந்து அப்படியே கீழே குதித்தேன்; எனக்கும் சில ‘ஸ்டண்ட்’ வேலைகள் தெரியும்.

ஆனால் உங்களை எல்லாம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்; யாரும், டி.வி., சினிமாக்களைப் பார்க்காதீங்க. அதெல்லாம் ‘விசிலடிச்சான் குஞ்சு’ சமாச்சாரம்; நடைமுறைக்கு வாங்க. நான் ஃபால் ஆப் பெர்லின், பகத்சிங், உலக யுத்தத்தில் – உடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு கப்பலைத் தகர்ப்பானே, அது போன்ற படங்களைத்தான் பார்த்திருக்கிறேன். கூட்டத்தையே கலைத்தேன். என்னுடைய திட்டம் முழு வெற்றிப் பெற்றது. என்னுடைய வாழ்நாளில் எவ்வளவோ போராட்டம் செய்திருக்கிறேன். சொல்ல நேரமில்லை.

பெரியாருக்கு 3 ஆண்டு தண்டனை தரப்பட்டபோது, முதல் நாளே என்னைக் கைது செய்து விட்டார்கள். கைது செய்த என்னை அடுத்த நாள் நீதிமன்றம் கொண்டு வந்தார்கள். இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன் என்னை நிறுத்தி வைத்திருந்தார்கள். மாவட்ட நீதிமன்றத்தில் அய்யாவுக்கு 3 வருட தண்டனை கொடுத்து, மற்றொரு பக்கம் அய்யாவைக் கொண்டு போகிறார்கள். தண்டனை அறிவித்தவுடன் எனது சகாக்கள் கடும் அமளியில் இறங்கி விட்டார்கள். 

அய்யாவுக் குத் தண்டனை தந்த பிறகு என்னால் சும்மா இருக்க முடியுங்களா? சீனிவாசாச்சாரி என்ற வெறி பிடித்த அய்யங்கார் பார்ப்பனன்தான் அரசு வழக்கறிஞர். நமது இனத்துக்கு மிகப் பெரும் கேடு செய்தவன். அவனது கடந்த கால சரித்திரம் முழுமையும் நான் தெரிந்து கொண்டேன். அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.

என்னிடம் கழக முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்து, நீங்கள் தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்கள். ஜனவரி 26 ஆம் தேதி அய்யாவை விட்டு விடுவார்கள் என்றார்கள். அதுவரை பொறுமையாகக் காத்திருந்தேன். ஜன.26 மாலை ஓரு முடிவுக்கு வந்தேன்.

என்னுடைய அருமையான தோழர் சின்னச்சாமி. ஒரு பெரிய திட்டத்துக்கு தயாராகி நின்ற எங்களிடம் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? நான்கு அணா. வெறும் நான்கு அணா தான்! ரேடியோ செய்தி கேட்டேன். பெரியார் விடுதலைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. குடியரசு நாள் நிகழ்ச்சியில், அரசு வழக்கறிஞர் கலந்து கெள்கிறார் என்ற சேதி கிடைத்தது. என்னுடைய நண்பன் சின்னச்சாமியிடம் கூறினேன். நான் முடிவு செய்து விட்டேன்; நீ போய்விடு என்று கூறினேன். பெரியார் வாழ்க என்று கூறி இருவரும் கை குலுக்கினோம்.

என்னுடைய நண்பன் சின்னச்சாமி பற்றி சொல்ல வேண்டும். அற்புதமான நண்பன். பீடி சுற்றித்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஒரு நாள் பீடி சுற்றினால் 75 காசு கிடைக்கும். அதை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை. நான் அழைக்கும்போது, பீடி சுற்றுவதை அப்படியே நிறுத்திவிட்டு என்னோடு வந்துவிடுவான். என்னால் மறக்கவே முடியாத காட்சிகள் அவை. அந்த நண்பன் சின்னச்சாமி, இப்போது காச நோய்க்கு உள்ளாகி மருந்து வாங்குவதற்குக்கூட காசு இல்லாமல் இருக்கிறான்.

அப்போது, சின்னச்சாமி, என்னைத் தனியே விட்டுப் போக மறுத்துவிட்டான். நானும் சேர்ந்து கொள்கிறேன் என்றான். “வேண்டாம் சின்னச்சாமி, தயவு செய்து நீ போய்விடு. என்னுடைய தாயை மறந்துவிட்டு நான் இந்த இடத்தில் நிற்கிறேன்; எனக்கு அய்யா தான் முக்கியம்” என்று சொன்னேன்.

சீனிவாசாச்சாரி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு வந்தான். போலீசுக்கு எதிரேயே போய் கழுத்தைப் பிடித்துச் சுழற்றி முகத்தில் ‘ராஸ்கல்’ என்று கூறி ‘ஆசிட்’ வீசினேன். அவன் கீழே விழும்போது 8 மணி சங்கு ஊதியது. தோளிலும், முகத்திலும் குத்தினேன். 300 பேர் விரட்டி வந்தனர். முடியுமா? என்னிடம் யாரும் நெருங்க முடியவில்லை.

அதற்குப் பிறகு காவல்நிலையத்தில் – என்னை அழைத்துப் போய் விசாரித்தார்கள். இன்ஸ்பெக்டர் என்னை மிகவும் மதித்து சமமாக உட்கார வைத்து தோளில் கைபோட்டுப் பேசினார். அப்போது என்னிடம் கேட்டார். “எவ்வளவோ பெரியார் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத கவலை உனக்கு மட்டும் ஏன்? நீ மட்டும் ஏன் இத்தகைய தீவிரவாத செயல் களில் ஈடுபடுகிறாய்?” என்று கேட்டார்,

நான் சொன்னேன்.

“நீங்கள் சேர்வை சமூகத்தைச் சார்ந்தவர்; நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்; என்னை சமமாக உட்கார வைத்து, நீங்கள் எனது தோளில் கை போட்டுப் பேசுகிறீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன், எனது சமூகம் தீண்டப்படாத சமூகம்; இன்று எனக்கு இந்த சம உரிமையைப் பெற்றுத் தந்தது பெரியார். அந்த உணர்வுதான் என்னை இயக்குகிறது.

ஏதோ ஒரு நாள் – இதே திருச்சியில் பெரியாரின் இறுதி ஊர்வலம் போகும். அப்போது எல்லோரும் கண்ணீர் விட்டு அழுவார்கள்; அப்போது நான் மட்டும் அழமாட்டேன். காரணம், பெரியாரை தண்டித்தவர்களுக்கு எல்லாம், சரியான பாடம் புகட்டி விட்டேன் என்ற மனநிறைவில் நான் மகிழ்ந்து நிற்பேன்” என்று கூறி விட்டு, நான் குலுங்கி குலுங்கி அழுதேன். எனக்கு முன்னாள் புகைப்பிடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், சிகரெட்டை தூக்கி வீசி விட்டு அவரும் கண்ணீர் விட்டார்.

பெரியாரின் போர் படை தளபதிக்கு வீரவணக்கம்...

Friday, February 25, 2022

காந்தியம் -பொதியவெர்பன் - 1

 எத்தனை எத்தனை கட்டுக்கதைகள்தாம் திரிப்பீர்நீம்?

அத்தனை அத்தனைத் தித்திருக்கும் கட்டவிழ்த்தே

வைக்கம் போராட்டத்தில் எந்தை பெரியார் வகிபாகம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருத்தி விரிவாக்கப்பட்ட மீள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'வைக்கம் வீரர்'  எனில் எந்தை பெரியாரே!

வைக்கம் போராட்டக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்தே

உண்மை வரலாற்றுக் குறிப்புகள்:1

°<~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~>•

1.அதியமானும் அறியொணாப் பக்கங்கள்:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அ. மகாத்மாவின் எளிமைக்கான விலை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சமூக அசைவியக்க ஆவணங்களாக நம்பகமான முதன்மை ஆதாரங்ளைத் தேடித் துருவி வரதராஜுலு நாயுடு,சேரன்மாதேவிக் குருகுலப் போராட்டம் குறித்த

வரலாற்றாவண நூல்களை வழங்கிய என் மதிப்பிற்குரிய ஆய்வாளரே நண்பர் பழ•அதியமான். அவர் 'வைக்கம் போராட்டத்தில் காந்தியின் வருகை நிகழ்த்திய மாற்றங்கள்'('இந்து தமிழ்த்திசை- 22•10•2019) என்ற கட்டுரையை முன்வைத்துள்ளார்.

Selva Puviyarasan. கே.கே.மகேஷ் முருகேஷ் மு  த.ராஜன் 

"வ.வே.சு. ஐயரைப் பாதுகாக்கும் நோக்கம் (அவரையும் அறியாமல்) இழையோடும் ஆங்கிலக்கட்டுரை" என அக்குருகுலப் போராட்டங் குறித்த நூலில் அவர் ஆர்.சண்முசாமியின் கட்டுரை குறித்துச் சுட்டுமாப்போலவே அதியமானின் இக்கட்டுரையுங் கூடக் காந்தியாரைக் காப்பாற்றமுயலும் கட்டுரையாகவே காணக்கிடக்கின்றதெனலாம். இக்கட்டுரையில் குறிப்பிட்ட சிலபுள்ளிகள் குறித்து விவாதிக்குமுகமாகவே இதனை முன்வைக்கிறேன்:

"எர்ணாகுளத்திலிருந்து படகுமூலம் வந்த காந்தியை, வரவேற்பவர்கள் முன்சென்று அழைத்துவரப் படகுகள் சூழப்போனார்கள்.எளிமையைக் கடைப்பிடிக்கும் காந்தி, இந்த படாடோபத்தை விரும்புவாரா? பிடிவாதமாகத் தடுத்து,தனியாய்த்தான் தன் படகு பயணிக்கவேண்டும் என்று சொல்லி விட்டார்"- பழ•அதியமான். இத்தொடர்பில் ஒத்தும் உறழ்ந்தும் ஏனைப் பிற மாற்றுத்தரப்புகள்:

"காந்தி குறித்து மிகவும் தவறான பல தகவல்களே ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளன....அவரை எளிமையாக வைத்துக்கொள்வதற்காக ஏராளமாகச் செலவுசெய்ய

வேண்டியிருக்கிறது எனப் பாதி நகைச்சுவையாகச் சொல்லப்பட்ட கூற்றையே ஆதாரமாகக் கொண்டு காந்தி பற்றிய மதிப்பீட்டை உருவாக்கியுள்ளவர் பலர்"-

அ•மார்க்ஸ்('புத்தகம் பேசுது'-ஜுலை 2008)

Puthagam Pesuthu. Mohammed Sirajudeen.

சிவகுருநாதன் முனியப்பன் 

காந்தியார் ரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே பயணிப்பார்.  ஏன் மூன்றாம் வகுப்பிலேயே பயணிக்கிறீர்கள் எனக்கேட்டால்  நான்காம் வகுப்பில்லையே என்பர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? மாற்றுத்தரப்புகளைக் காண்போம்:

*

ஆ.காந்தி - லெனின் ஒப்பீடு :

குஹா நோக்கிலும் கோரா நோக்கிலும்

°~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~•

"இருவரும் சமகாலத்தவர்கள்.மிகப் பாரம்பரியமான

 கலாச்சாரப்பின்னணியும் வரலாறும் கொண்ட நாடுகளின் இணையற்றதலைவர்கள் இருவரும். இருவருமே அரசியல் அடக்குமுறைக்கும் பொருளாதாரத் தேக்கநிலைக்கும் எதிராகப் போராடியவர்கள். மக்களுக்காக  வாழ்ந்தவர்கள்"

"லெனின் கூட நல்ல உணவையும் மதுவையும் சுவைப்பதில் ஆர்வமுள்ளவர் இந்திய கம்யூனிஸ்ட்களால் பூர்ஷ்வா என்றும் வலதுசாரி என்றும் அர்ச்சிக்கப்பட்ட காந்தி சாமானியர்களைப் போலவே எளிமையாக உடை உடுத்தியவர். உடுத்தியவர்.சாப்பாடும் அப்படியே."

-ராமசந்திர குஹா ('இந்துத் தமிழ்த்திசை'-30-1-2020)

மாற்றுத்தரப்புகளைக் காண்போம்:

மலிவு விளம்பரங்கள் மூலம்மகிமை அடைந்த கதை

°<~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~>•

['குற்றவாளிக் கூண்டில் காந்திஜீ' இரண்டாவது பாகம்]

"இந்தியமக்களில் பெரும்பாலோர்  வறுமையில் வாடுகிறார்கள் என்றும்  உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி பரிதவிக்கிறார்கள் என்றும் காரணம் காட்டிக் காந்திஜீ அவர்கள் தமது உணவுமுறையையும்

மாற்றிக்கொண்டார்.ஆடைகளையும் குறைத்துக் கொண்டார்.ஆட்டுப்பாலும் நிலக்கடலையும் கனிகளும் காய்கறிகளுமே அவரது பிரரதானஉணவாக அமைந்தன"

"இந்தியமக்களின் உண்மையான பிரதிபலிப்பாகத்தாம் விளங்குவதாக வெளியில் அவர் காட்டிக்கொண்டார். 

பத்திரிகைகள் அனைத்தும் அவரது செயலை வெளிச்சம் போட்டுக் காட்டின. 'அரை நிர்வாணப் பக்கிரி'(Half Naked pakir) என்று வின்ஸ்டண்ட் சர்ச்சில் காந்திஜீயை வருணித்தார்.இந்திய மக்கள் இதனைப் பெருமையாகஎடுத்துக் கொண்டார்கள்"-ஏ•கே•ரிபாயி

('மறுமலர்ச்சி'•30-9-1994) AK Refaye Pathipagam 

Hilal Musthafa 

இதனை ரிபாயி சித்துவிளையாட்டுக்கள் என்றும் 'ஸ்டண்ட்' செய்ய முற்படுதல்  என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்:

"இந்தியமக்கள் வறுமையில் வாடும்பொழுது ஆடம்பரமாக முதலாம்வகுப்பு, இரண்டாம்வகுப்பு என ரயில்பயணம் செய்வது பாவம் என அவர் கருதினார். மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் என்றுதான்  பெயர். அவர் பிரயாணம் செய்யும் கம்பார்ட்மண்ட்டில் அவரும் அவரது சகாக்களும் உதவியாளர்களும் தான் இருப்பார்கள்.மற்ற பயணிகள்  யாரும் அந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறிப் பயணம் செய்யமுடியாது சுருக்கமாகச் சொல்வதானால், அந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் அவருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. இதற்குப் பெயர்தான் எளிமையான மூன்றாம் வகுப்புப் பயணம்"-ஏ•கே•ரிபாயி

"To Keep Gandhi in poverty, the congressparty has to spent millions of rupees"- Sarogini Naidu"

('மறுமலர்ச்சி' மேலது)

நம்மில் பலருக்குக் காந்தியையும் குஹாவையும் பற்றித் தெரிந்த அளவிற்குக் குமரப்பாவையோ,கோராவையோ பற்றித் தெரியாது. ஏன் பெரும்பாலான காந்தியர் எனப்படுவோரே குமரப்பாவையோ கோராவையோ பற்றிப் பேசுவதே கிடையாது.

காந்தி-லெனின் ஒப்பீட்டில் இருவருமே பொருளாதாரத் தேக்கத்துக்கு எதிராகப் போராடியோர் எனவும்;

வெவ்வேறு மதங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் காந்தியாக மட்டுமே இருக்கமுடியும் என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய தரப்புகளே யாகும்.

'காந்தி நினைவு டிரஸ்ட்டி'ன்  அலுவலகம் எளிமையாக ஒரு கிராமத்தில் அமையாமல் ஆடம்பரமாகத் தில்லியில் அமைந்தது. பெருமுதலாளிகளும் தொழிலதிபர்களும் அறங்காவலராயினர். நிதியென்னவோ18 கோடி குவிந்தது. ஆனால் காந்தியப் பணிகளுக்குத் தம்மை அர்ப்பணிக்குமாறு குமரப்பா விடுத்த வேண்டுகோளைக் காங்கிரசார் ஏற்கத்தயாராக இல்லை. காந்தியிருந்த போதும், காலமானபின்னும் பெருமுதலாளிகளும் தொழிலதிபர்களும் காந்தியப்பணிகளுக்கான நிதியாதாரங்களை வழங்கத் தயாராக இருந்தனர். ஆனால் என்றுமே உடைமைக்கு அடிமையாகாத  ஓரிரு கோராக்களும், குமரப்பாக்களும் மட்டுமே காந்தியத்துக்கு ஆதாரசுருதியாகத் தம்மையே ஆத்மார்த்தமாக அர்ப்பணித்து அதனைத் தம் வாழ்வறத்தால் அர்த்தபூர்வமாக ஆக்கினர்.

அடுத்து, கோரா நோக்கில் காந்தி-லெனின் ஓப்பீட்டை நோக்குவோம்:

"பஞ்ச் குவான் சாலையில் அமைந்திருந்த ஆசிரமத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுடன் காந்தி தங்கியிருந்தார்"

"1974 -ஆமாண்டு நான் மாஸ்கோ சென்றேன். படைத்தளபதியின் பெரியமாளிகைக்குப் பக்கத்தில் இருந்த  அந்தப்பணியாளனின்  குடியிருப்பைக் கண்டபோது லெனின்மீது நான் கொண்டிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்தது. அந்தப் பணியாளனின் குடியிருப்பில்தான் லெனின் வாழ்ந்தார். காந்தியின் சுய சேவாக்கிராமக் குடிசையும், லெனின்தங்கிய குடியிருப்பும் உடனே அருகருகே என் மனக்கண்முன் தோன்றின"- கோரா ('நாங்கள் நாத்திகரானோம்')

எது சரியான ஒப்பீடு?

*

இ•திலகரைத் தோற்கடித்துக் காந்தியாரைச்

சர்வாதிகாரியாக ஆக்கியோர் யாவர்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வைக்கம் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது காந்திவருகை என்பதே அதியமான் தரப்பாகும். அந்த வருகை எதற்காக நிகழ்ந்தது? யாராலவர் யாருக்கு மாற்றாகத் தருவிக்கப்பட்டார்? என்பதற்கான கேள்விகளுக்கு விடை காண்போம். அதற்கு முன் இன்னும்  இரு கேள்விகள்!

பெரியாரைத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஆக்கியது யார்? காந்தியாரை அனைத்திந்திய காங்கிரஸ் தலைவர் ஆக்கியது யார் யார்?:

"என்னை இராஜாஜீ அவர்கள்தான் முதலாவதாகக் கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் செக்ரட்ரி ஆக்கினார்.பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஆக்கினார்.என்னிடம் அவர் முழுநம்பிக்கை வைத்து அவர் நமது தலைவர் நாயக்கர் என்று அழைத்ததோடு, வெகுபேரை என்னைத் தலைவர் என்று அழைக்கும்படிச்செய்தார்"- ஈவெரா ('விடுதலை'26-12-1972)

"இராஜாஜீ,காந்தியை ஆதரித்து அவரைத் தன்வயப்படுத்த முயன்று வேலை செய்து வந்தார். சென்னைப் பார்ப்பனர்கள் திலகரைப் பிடித்துத் தம்வசப்படுத்தி இராஜாஜீயை ஒழிக்க முயற்சி செய்தார்கள்.

அமிர்தசரஸ் காங்கிரசில் எங்கள் ஆதரவால் காந்தி வெற்றி பெற்றார்.திலகர் தோல்வி யடைந்தார்.ஒரு ஆண்டுக்குள் அந்தக் கவலையால் திலகர் செத்தார்.

காந்தி எதிர்ப்பில்லாத ஏக தலைவர் ஆனார். அவரைச் சர்வாதிகாரி ஆக்கிவிட்டோம். இதற்கு இராஜாஜீக்கு முக்கிய பங்குண்டு"-ஈ•வெ•ராமசாமி 

('பெரியார் பார்வை'-இதழ்த்தொகுப்பு).

இத்தொடர்பில் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளுக்கு இணங்கியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர் எவ்வாறு தம்மனம் ஒப்பாமலே ஆளாக நேர்ந்தது?அவருடைய சூழ்ச்சிகள் யாவை என்பன குறித்து இனிக்காண்போம்:

""வைக்கம் சத்தியாக்கிரக சரித்திரம் ஒரு பெரிய சூழ்ச்சிக்கதையாகும். அதற்குத்  தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவர்களும்  காந்தியாரும் கொடுத்த தொல்லைகள் செய்த சூழ்ச்சிகள் அளவிடற்குரியதல்ல.

காந்தியாரையே அவரது சர்வ வல்லமை யுள்ள பிடிவாதத்திற்கு விரோதமாக இறங்கிவந்து தனது கருத்துக்களை அவர் இஷ்டத்திற்கு விரோதமாக மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியத்திற்குக் கொண்டுவந்து விட்டதானது வைக்கம் சத்தியாக்ககிரகமாகும்.ஆனால் வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பார்ப்பனர்கள் மனமார மாற்றி எழுதிவிட்டார்கள்"- ந•க•மங்களமுருகேசன்  ('சுயமரியாதை இயக்கம்')

*

ஈ •பெரியாருக்கே அந்தப்புகழ்!  ஆனால்....

°<~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~>

"திருவிதாங்கூரிலே தீண்டாமையை ஒழித்த மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்ற பெரியாருக்கே அந்தப்புகழ், பெருமை. ஆனால் அந்தப்புகழ் யாருக்கோ போயிற்று."-    திருவிக (திரு•வி•க•  வாழ்க்கைக் குறிப்புகள்).

"அந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபடுவார் என்று அந்த (திருவிதாங்கூர்) அரசரோ அல்லது ஆட்சியோ எதிர்பார்க்கவில்லை. காரணம் அந்த அரசர் டெல்லிக்குச் செல்கிற நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள்வீட்டில் விருந்தினரா  இருந்து ஈரோட்டில் தங்கிவிட்டுச்

 செல்வது வாடிக்கை. எனவே  பெரியார் அவர்கள் அங்கு போகும் போது அரசுமரியாதைகளோடு அதிகாரிகளை அனுப்பி வரவேற்பு  கொடுத்த நேரத்தில் நான் இங்கு

வந்திருப்பது விருந்துக்காக அல்ல உரிமைப் போராட்டத்திற்காக எனவே அருள்கூர்ந்து நான் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவருக்கே உரிய தன்மையோடு  எடுத்துக்கூறியதோடு தன்னுடைய

 அந்தப் போராட்டஉணர்வை நியாயப்படுத்தி அந்த மக்களை எல்லாம் தட்டியெழுப்பும்படியாகச் செய்தார்களென அங்கு வாழ்ந்த பாமரமக்களுக்குக் கூட

அந்த உணர்வை  ஊட்டினார்கள்" -  சி•என்•அண்ணாதுரை ('பெரியார் பார்வை').

"சத்தியாக்கிரகத்த தெரிந்தவர்களைக் கூட வசீகரித்துப் போராட இழுக்கும் ஈர்ப்புத்தன்மையுடையனவாக இருந்தன. பெரியார் சொற்பொழிவுகள்  அவற்றில் அவர் திருவாங்கூர் அரசை  வன்மையாகக் கண்டித்துக் காரசாரமாக விமர்சனம் செய்தார்"- கே.ராஜன்   ('திராவிட இயக்கம்  உரையாடல்கள்)

"திருவிதாங்கூர் திவான் பெரியாருடன் பேசுவதற்கு ஆச்சாரியாரைத் தூது பிடித்தார். ஆச்சாரியார் அந்தச் சந்தர்ப்பம் பெரியாருக்கு வாய்ப்பதை இஷ்டப்படாமல் காந்தியாரையே  தருவிப்பதாக ஒப்புக்கொண்டு உடனே காந்தியாரை  அழைத்தார். என்றாலும் சமாதானம் பேசும்போது காந்தியார் பெரியாரையும் தன்கூட இருக்கும்படி செய்துகொண்டார்"

- ந•க•மங்கள முருகேசன்(' சுயமரியாதை இயக்கம்')

காந்தியாரின் வருகை குறித்த அதியமான் தரப்போ போராட்டத்தை அடுத்த நகர்வுக்குச்  செல்ல உதவியது, முடிவை நோக்கி உந்திய முக்கியபயணம் என்பதாக முன் நிறுத்தப்படுகின்றது. ஆனால் காந்தியார் வருகையே பெரியாருக்கு மக்கள் மத்தியிலிருந்த  செல்வாக்கைக் கண்டஞ்சி ஆச்சாரியார் செய்த சூழ்ச்சி என்பது அதியமான் அறியாத பக்கமாகும். 

தொடரும்....

காந்தியம் - பொதியவெர்பன் - 2

 'வைக்கம் வீரர்' எனில் எந்தை பெரியாரே!

வைக்கம் போராட்டக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்தே

உண்மை வரலாற்றுக்குறிப்புகள்:2


2.ரெங்கையா முருகனார் கண்டுணர்ந்ததும்,

காணத் தவறியதும்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"காந்தி குறித்து பல தரவுகள் இருப்பது ஆரோக்கியமான ஒன்றே."- பட்டாபிராமன்

Pattabi Raman 

"சமகாலத்திற்கென அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது தொடரும் உரையாடல்களில் இப்பதிவு முக்கியமானது. தொடர் போராட்டங்களுக்கும் சந்தர்ப்பவாத திரிபுவாதங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் போலான ஒன்றுதான் இது.

பொதி தோழர் தொடர்ந்து  இதைச்செய்கிறார்" 

Yavanika Sriram 

"யவனிகா! தங்கள் கீழ்க்காணும் நூலை விரைவில் வெளிக்கொணர்க. 

நாம்சகபயணியரே. மகிழ்ச்சி, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!


"கார்ல் மார்க்ஸை போன்ற அகிலம்சார் யதார்த்தவாதியையும் காந்தியைப்போன்ற தேசிய  முதுமைவாதியையும் அம்பத்கரைப்போன்ற அடித்தள அறவியல்வாதியையும் பெரியாரைப்போன்ற இளமைச் சிந்தனையாளரையும் ஏன் நாம் நினைவில் கொள்கிறோம்?கீழைத்தேய சிந்தனைகளின் இருத்தலியத்திற்குள் இவர்கள் எவ்வாறு ஊடுருவினார்கள்?

 நவீனத்துவ தத்துவங்களும்  முரண்பாடுகளும் நடைமுறைகளும் பாகம் -1" - பொதி

*

"அகிம்சை, எளிமை என்ற பேரில் தன்னை உருவகப்படுத்திக் கொண்டாலும், இல்லை எளிய மக்களால் அப்படியே அழைக்கப்பட்டாலும் பெரியவர் வ.உ.சி.க்கு தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கொடுத்து விட்ட பணவிசயத்தில் அவ்வளவு முரட்டுத்தனம் காண்பித்தது எந்த அகிம்சையோ? அதாவது ஒரு மடலில் பெரியவர் வ.உ.சி. 'தங்களது இருப்புப் பணத்தில் இருந்து ஏதாவது ஒரு பணத்தை அனுப்பி வையுங்கள். அவருக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கான பட்டியல் வந்ததும் முன்னே பின்னே வந்தாலும் கணக்கு பார்த்துக் கொள்ளலாம்' என்று இரங்கி எழுதிய கடிதத்திற்குக் கூட; 'இல்லை பட்டியல் வராமல் தங்களுக்கான பணத்தை அனுப்ப இயலாது' - என்ற காந்தியாரின்  (செயலை என்ன வகை ஹிம்சையில் சேர்ப்பது? 1915 வாக்கில் எல்லா வகையிலும் பிரிட்டிஷ் அரசு பெரியவரை முடக்கி வைக்கிறது. எந்த மனநிலையில் இருந்து தனக்காக அனுப்பப்பட்ட பணத்தை உரியநேரத்தில் சேர்க்காமல் விட்டது காந்தியாருக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால், பெரியவருக்கு அந்த நேரத்தில் சேர்த்திருந்தால் பொருளாதார விடுதலை வேட்கைக்காக தன் பொருளாதாரத்தை முற்றிலும் இழந்த கர்ம தியாகியை அகிம்சைவாதியும் சேர்ந்து சோதித்ததை தமிழ் காந்தியவாதிகளிடம் சிலரிடம் உரையாடிய போது அவர்கள் உள்ளமும் விசனிக்கத்தான் செய்கிறது." -

Rengaiah Murugan 

 - இது காந்தியாரின் 'அகிம்சையின் வன்முறை 'யை முருகனார் கண்டுகொண்ட பக்கம்

மகாத்மாவின் அந்தராத்மா ' அசரீரி' எழுந்தருளும் அவதார இந்து லெட்சண உட்கிடை ரகசியம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பூனா ஒப்பந்தத் தருணத்தில் காந்தியார் மேற்கொண்ட காந்தியாரின் உண்ணாநோன்பையே ' அகிம்சையின் வன்முறை' என்னும் ஓஷோ அண்ணல் அம்பேத்கரின் வகிபாகத்தையே அகிம்சையின் வடிவம் என்றார்:

"கொலை செய்வேன் என்பது மட்டுமா வன்முறை? ஒரு கோரிக்கைக்கான முன்னிபந்தனையாகத் தற்கொலை மிரட்டலை முன்வைப்பதும் வன்முறைதானே என்பதுதான் ஓஷோவின் வாதம். 

அதுமட்டுமல்லாமல் கசையடியைத் தன்மீது பிரயோகித்து, அதன் மீதெழும் கழிவிரக்கத்தை முன்னிறுத்திப் பிழைப்பவனுக்காவது அத்தகைய சுயவதையே அவனுக்கான ஜீவனோபாயமான அவலம் என விட்டுவிடலாம். ஆனால் காந்தியாரின் சுயவதை மிரட்டல்  அகிம்சையின் வன்முறைதானே என்பதே ஓஷோவின் பார்வைக் கோணம் . ('குறளி':1- யூன் 2012)

"காந்தியத்தைப் பொறுத்தமட்டில், அறவியலை  மனிதவாழ்வின் எந்தக் கூறுகளில் இருந்தும் பிரித்துவிட இயலாது. அரசியலை அவர் மதமயப் படுத்தியது என்பதன்பொருள் மிகவும் ஆழமானது, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்குகள் அல்லது தத்துவங் களுக்கு உட்பட்டும் அரசியலை வளைத்த ஒரு முயற்சி அல்ல அது அரசியலை 'அறவியலாக' மாற்றிய ஒரு முயற்சி அது. " - அ.மார்க்ஸ்('புதிய பார்வை' 16/10/2007)

வள்ளுவரிடமும், வள்ளலாரிடமுங் கூட ' வருணதர்ம இந்துக்கறை'களைக் காணவல்ல தீட்சண்ய மிக்க அ.மா. விழிகளுக்கு, மகாத்மாவின் அந்தராத்மா இந்துலெட்சணமே அரசியலையே அறவியலாகக் காட்சி

அளிப்பதில் வியப்பிலை தானே? இத்தொடர்பில் பல்வேறு

மாற்றுத்தரப்புகளை ஒத்துறழ்ந்து காண்போம்:

" காந்தியாரின் உண்ணாவிரதம் அவர் தலைமையேற்ற

காங்கிரஸ் இயக்கத்தால் முடிவு செயய்யப்பட்டதன்று.

தம்முடைய உள்ளொளி தனக்கு ஆணையிட்டதாகக் காந்தியடிகள் கூறினார்." - பியாரிலால்

"அரசியல் பிரச்னை ஒன்றிற்கு,  மதம் தொடர்பான, உணர்வுபூர்வமான அவரது (காந்தியடிகளது) அணுகுமுறை எனக்குக் கோபத்தை உண்டாக்கிற்று. இது தொடர்பாகக் கடவுளை அடிக்கடி குறிப்பிடுவதும் எனக்குப் பிடிக்கவில்லை. உண்ணாவிரதம் இருப்பதற்கான நாளையும் கடவுளே குறிப்பிட்டார் என்கிறது போல் அவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் பிறருக்கு முன்னுதாரணமாக இருப்பதா? " - நேரு

"ஹரிஜனம் என்னுமொரு பத்திரிகையையும் பிரசுரம் செய்துவருகிறார். அவர் மனம் போனபடி ஏதேதோ எழுதி வருகிறார். அவற்றில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர் அபிப்ராயம் அல்லவென்று சொல்லலாம். அது தன்மயத் தேட்டம். அவர் அசரீரி வாக்கைக் கேட்டறியும் அருள்பெற்றஒ ரு நல்ல ஆத்மா."- ரெட்டைமலை சீனிவாசன்

'பூனா ஒப்பந்தம்  ஒரு சோகக்கதை'- தொ.பரமசிவம்)

ஒரு புதியதிறப்புத் தரவாதாரம்:

"இதர அரசியல் தலைவர்களுடனோ பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது காந்திஜீ ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டுவிடுவார். ஆனால் சிலநாட்கள் கழித்து அவர் ஒப்புக்கொண்டதை மீறிவிடுவார். இதற்கு அவர் சொன்ன காரணம்

'எனது அந்தராத்மா அப்படிச் சொல்லிற்று. எனவே எனது கருத்தை மாற்றிக் கொண்டேன்' என்று சர்வசாதாரணமாகக் கூறிவிடுவார்" - ஏ.கே.ரிபாயி AK Refaye Pathipagam. Hilal Musthafa 

[('மறுமலர்ச்சி' - 30/9/1994) * ('பறை -2015') - 'மணல் வீடு']

Mu Harikrishnan 

- இதுதான் மகாத்மாவின் அந்தராத்மா இந்துலெட்சண அந்தர்பல்டி லீலைககளின் உட்கிடை.


*

"// வைக்கம் போராட்டத்தில் தனது அளப்பரிய பங்களிப்பனை செலுத்தி, 60 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு, மிகவும் துன்புற்று கிடந்த காந்தியவாதி ஈரோடு ஈஸ்வரன் வரலாற்று பக்கங்களில் தேடி பார்க்கும் நிலையில்தான் உள்ளது.."// - 

 ரெங்கய்யா முருகன். இது முருகனார்  மீள மீளப் பெரியாரின் வகிபாகத்தைக் காணமறுக்கும் பக்கமே.

 ஈரோடு ஈஸ்வரனைக் குறித்து  மெய்யாலுமே முருகனைத் தவிர மற்றெவருமே பேசக்கேட்டு நாமறியோம். அவரைப் பற்றி அறிந்திருந்த இவரை அத்தொடர்பில் பதிவிட யார் தடுத்தார். தனியே பதிவிட வேண்டியது தானே? அடிக்கடி அவருக்குப் பெரியாரின் வகிபாகத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டியே உள்ளது. 

மீளவும் இப்பவும் இன்னுமொருமுறை...

*

பெரியாரின் வகிபாகப் பெருஞ்செயல்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1.காலநேரம் கருதி,ஓரீரு சமயங்களில் பார்ப்பனர் அல்லாதவர்களில் ஒரு சிலர் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.தந்தை

பெரியார், திருவிக, வஉசி,வரதராசலு நாயுடு ஆகியோரின் தியாகமும் தொண்டும் போற்றப்பட வேண்டிய அளவுக்குச் சிறப்பிக்கப்படவில்லை"-

சே•இராசேந்திரன்

 Rengaiah Murugan பின்னூட்டத்திற்கு எதிர்வினை. பெரியார்,திருவிக,வஉசி, வரதராசுலு நாயுடு தொடர்பான என் பதிவிற்கான பின்னூட்டத்தில்பெரியார் தன்னை உயர்த்திக் கொண்டவர் என்கிறாரவர்.

*

"முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ்க்குத் தொண்டுசெய்தவர் என்றமுறையில் எவர்க்கேனும் பரிசில்வழங்கப் புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும்.  த.நா. காங்கிரஸ் நாயக்கர் உழைப்பை

நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரஸ் வெறிகொண்டு நாலாபக்கமும் பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன்.நாயக்கரும் யானும் சேர்ந்து சேர்ந்து எங்கெங்கேயோ தொண்டு செய்தோம்"

"ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டத்தில் திளைத்தவர்,வெயில்படாது வாழ்ந்தவர்,ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஸ்ரீமான் நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து வறியோர் போல எளியஉடை தரித்து,எளிய உணவு உண்டு,இரவு பகல் தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை அறிவார்?"

"திருவிதாங்கூரிலே தீண்டாமையை ஒழித்த மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்ற பெரியாருக்கே அந்தப் புகழ், பெருமை.ஆனால் அந்தப்புகழ்

யாருக்கோ போயிற்று.அத்தியாகம் எனதுவாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. எனக்குப் பெண்டு பிள்ளைகள் இல்லை.நான் செத்துப் போனால் எனக்காக அழுகின்ற ஒருநண்பர் இருந்தால் அது பெரியார் இராமசாமி ஆகத்தான் இருக்கமுடியும்.இந்நாட்டில் பெரியகாரியம் செய்தவர் பெரியார் ஒருவர்தான்"- திருவிக


*

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தனது இல்லத்தில் கண் மூடி படுத்திருக்கிறார் பெருந்தலைவர் காமராசர். தூங்குகிறார் என நினைத்து அருகில் அமைதி காக்கிறார் தோழர் (பெயர் நினைவில் இல்லை). காமராசரின் கண் இமை ஓரத்தில் நீர் வடிகிறது. 

சில நிமிட அமைதி!. படுக்கையை விட்டுத் திடீரென எழுந்து ஆக்ரோஷமாக சத்தமிடுகிறார் காமராசர்,

"யார் இருக்கான்னேன்?  இனி எந்த நாதி இருக்குன்னேன்..? தமிழனுக்காக குரல் கொடுத்த அந்தக்குரலும் போய்விட்டதே ? " என்று சொல்லிக் குலுங்கி குலுங்கி அழுதிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு இரங்கற் கூட்டம் இராஜாஜி மாளிகையில் நடை பெற்றது. 

அதில் கலந்துகொண்ட காமராஜர், " பெரியாரின் வரலாறு  தான் தமிழகத்தின் வரலாறுன்னேன். தமிழகத்தின் வரலாறு தான் பெரியாரின் வரலாறுன்னேன்” என்றார்.

 Amudhan maheshvarma .

தொடரும்...

அடுத்த பதிவு: 'இந்திய சமூகவெளியில்  காந்தி பெறும் முக்கியத்துவம்':       Puthiyamaadhavi Sankaran புதியமாதவி தரப்பும் எதிரீடும்

காந்தியியம் - பொதியவெர்பன் -3

வைக்கம்போராட்டக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்தே:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3.பாமரர் பங்களிப்புக்கா இட்டுச்செல்லும் காந்தியாரின் தர்மகர்த்தா சோசலிசமும்; நிலக்கிழமை வர்ணதர்மமும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1.காங்கிரசைப் பாமரர் பங்களிப்புக்கு இட்டுச்சென்ற வகையில் காந்தியாரின் முக்கியத்துவம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"காந்தி மீது அவர் பயணித்த மூன்றாம் வகுப்பு குறித்தும் விமர்சித்தவர் காங்கிரசில் புகழ்பெற்ற பெண்மணி சரோஜினி நாயுடு அவர்கள். Gandhi's simplicity being an expensive affair என்று சொன்னவர். ஆனால்  அதே அந்த சரோஜினிதேவி அவர்கள் உபி கவர்னராக இருக்கும்போது சிம்லா பயணத்தில் palace of wheels  - வைஸ்ராய் பயணித்த ஆடம்பரமான ரயிலில் பயணிக்கிறார். காங்கிரசில் இருந்த பண்ணையார்கள் இளவரசர்கள் ஜமீந்தார்கள் இரண்டாம் உலகப்போரின் போது பணம் சம்பாதித்த தொழிலதிபர்களின் கூடாரமாக இருந்த காங்கிரசை பாமரர்களின் பங்களிப்புக்கு இட்டுச்சென்ற வகையில் இந்திய சமூகவெளியில் காந்தி முக்கியத்துவம் பெறுகிறார். இது காந்தியின் இன்னொரு பக்கமாகவும் நாம் சேர்த்தே வாசிக்க வேண்டி இருக்கிறது."

- புதியமாதவி

""Puthiyamaadhavi Sankaran!  எப்போதுமே பதிவை முழுமையாக வாசிக்கப் பொறுமை கிடையாதா? சரோஜினி தேவி ஆடம்பர ரயிலில் பயணித்ததும் காந்தியார் இருந்த கம்பார்ட்மெண்ட் முழுக்க அவர் அன்பர்களுக்குமாக எடுக்கப்பட்டு அதை மூன்றாம் வகுப்புப்பயண எளிமை எனக் காந்தியர் பேசிநிற்பதும் ஒன்றாமா? ஆடம்பரப்பயணமன்று பேசுபொருள், எளிமையைப் பராமரிக்கக் கொடுத்தவிலையே பேசுபொருள்!2. காந்தியின் இன்னொரு பக்கமாகப் புதியமாதவி கோருவது தர்மகர்த்தா சோசலிசத்தையும்,

அவர் வர்ணதர்மத்துக்கு வக்காலாத்து வாங்கக் காரணமான நிலக்கிழமைச் சார்பையும் தாமே?இவை இரண்டுந்தாமே காந்தியத்தின் பலவீனம்? எவ்வாறதனை  நியாயப்படுத்த எத்தனிக்கிறார் புதிய மாதவி?"

"Pothi dear Pothi sir, ur writing style is differ. I am reading ur non fictions from Sugan magazine time onwards. u take many many reference to your main subject . Iam not saying anything about that. Here in this article ur first point is , மகாத்மாவின் எளிமைக்கான விலை. My view on that is my comment. U may differ.no problem sir. 🙏🙏" - Puthiyamaadhavi Sankaran 

" அன்பினிய புதிய மாதவி! மன்னிக்கவும் தமிழிலேயே உரையாடலாந்தானே?  இங்கு எதற்கு ஆங்கிலம்? 

மிக்க நன்றி புதியமாதவி! நல்லவேளை உரிய தருணத்தில்'சுகன்' இதழை நினைவூட்டியமைக்காக.

1.மூன்றாம் முறையாக மீளவும் சுட்டிக்காட்டுகிறேன்,  ஒரு சிறு உள்விபரத்துடன் சத்தியசந்தர் 'காந்தியாரின்

எளிமை என்ற காந்தியர் பொய்மைக்கு விலை' (ஒட்டுக்க ஒரு பெட்டியையே  கட்டணங்கட்டி  எடுத்ததை மறைத்து, எளிமை எனப்புளுகும் காந்தியர் பொய்ம்மைக்கு விலை) ஆடம்பரமாகப் பயணிப்பதல்ல, எளிமை என்ற பொய்மையின் பேரில் ஆடம்பரமாகப் பயணித்ததே இங்கான பேசுபொருள்!


2//காங்கிரசில் இருந்த பண்ணையார்கள், இளவரசர்கள், ஜமீன்தார்கள், இரண்டாம் உலகப்போரின் மீது பணம் சம்பாதித்த தொழிலதிபர்களின் கூடாரமாக இருந்த காங்கிரசை பாமரர்களின் பங்களிப்புக்கு இட்டுச்சென்ற வகையில் இந்திய சமூகவெளியில் காந்தி முக்கியத்துவம் பெறுகிறார்// 

உள்ளபடியே நான் மதிக்கும் புதியமாதவி இடமிருந்து இப்படி ஒரு பார்வையை அறவே நான்எதிர்பார்க்கவே இல்லை. மாற்றுத்தரப்புகளைக் காண்போம்:

காந்தியத்தின் இரு கருத்தாக்கங்கள் சமூகஇருப்பைத் தக்கவைக்கும் ஷேப்டி வால்வ் சிஸ்ட்டமாகச் செயல்பட்டன. அவரது வர்ணதர்ம வியாக்கியானம் நிலக்கிழமைக்கு

அரணாகவும்; தர்மகர்த்தா சோசலிசம் முதலாளியத்துக்கு அரணாகவும் பாதுகாவலாயின. அவற்றினின்றும்

விடுபட்டது ஜோசப் கொர்னீலியஸ் குமரப்பாவின் விடுதலை இறையியல். காந்தியப் பொருளாதாரத்தை

வளர்ந்தெடுத்துக் கோட்பாட்டாக்கமாக வடிவமைத்தவரும் குமரப்பாவே.

காந்தியாரிடமே கறாராகக் கணக்குக் கேட்டவர். அவர் மீது காந்தியாரிடமேபுகார் அளிக்கப்பட்டபோது ,

' அவர் மதராஸிதானே!  மதராஸிகள் எப்போதும் காரசாரமானவர்களே" எனப் புன்னகையோடு பதிலளித்தார்.

குமரப்பா கீழைவானின் நம்பிக்கை நட்சத்திரமே. மாவோவை நேரில் சந்தித்து உரையாடியவர். அவரையும்

ஆந்திரபூமியின் கோராவையும் நான் பின்னைகாந்தியர் என வரையறை செய்கிறேன்.

2.காந்தியாரின் தர்மகர்த்தா சோசலிசம்:

ஒரு குறுக்குவெட்டுக் கோணம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அ.அண்ணல் அம்பேத்கர் நோக்கில்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"அரசியல் இயந்திரத்தை இயக்குவதற்குப்  பணம் தேவை.பனியாக்களிடம் இருந்துதான் பணம் வரவேண்டும். காங்கிரசுக்குப் பனியா பணம் கொடுக்கக் காரணம் காந்தி பணியாவாக இருப்பதுதான்.

அரசியலில் பணத்தை முதலீடு செய்வது பெரும் இலாப ஈவுகளைப் பெற்றுத்தரும்"- பி.ஆர்.அம்பேத்கர்

('காந்தியும் காங்கிரசும்  தீண்டப்படாதார்க்குச் செய்ததென்ன?')

"அதனால்தான் பிர்லா சங்கரமடம் கட்ட ஐந்தரைக்கோடி ரூபாய் செலவழிக்கிறார்" -  எஸ்.வி.இராஜதுரை :வ.கீதா

('திராவிட தினமணியின் பார்ப்பனியம்')

அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த அதனை பம்பாய் உயர்நீதிமன்றம் வழிமொழிந்தது :

" டாடா இரும்பு எஃகுத் தொழிற்சாலைக் கம்பெனியார் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குத் தங்கள் கம்பெனிப் பணத்திலிருந்து நன்கொடை அள்ளிக் கொடுக்கலாம். இப்போதைய ஆளும்கட்சி தனிஉடைமைக்கு ஆக்கம் தருவதாகும். ஆதலால் தனிஉடைமை முதலாளிகளாக டாடா கம்பெனியார் வழங்கும் பணம் அவர்களது தொழில் செழிக்க வகைசெய்யும். இது அரசியல் வாழ்க்கையைக் கைக்கூலிப் பித்தர்கள் உலவும் இடமாக்காது." -

பம்பாய் உயர்நீதிமன்றத் தீர்ப்பு

('குறள் முரசு'. 18-1- 1957)

காந்தியாரும் காங்கிரசாரும் கையாண்ட தர்மகர்த்தா சோசலிசத்தின் ஒரு குறுக்குவெட்டுக் கோணமே இவையாவும். 

பிர்லா வழங்கிய நிதிஆதாரம் மகாத்மா கேட்டு வாங்கிய காரணங்களுக்குச் செலவிடப்படவில்லை மாறாக மடை மாற்றி விடப்பட்ட விவரங்களை எல்லாம் அண்ணல் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.

காந்தியாரிடம் பெரியவர் வஉசி வசம் சேர்ப்பிக்குமாறு ஒப்படைக்கப்பட்ட நிதி அவரால் கட்சிப்பணிகளுக்கு மடைமாற்றி விடப்பட்ட கதையும் நாமறிவோம். 

மதக்கோட்பாடுகளுக்கு எதிரான முறையில் இருப்பதாகக் குறிப்பிட்டு அதைத் தீர்க்குமுகமாக ஏதாவது செய்தாக வேண்டும் என்றே காந்தியார் நிதிஆதாரங்களை வேண்டினார்.இத்தொடர்பில் இதற்கு ஆதாரமாக அவருடைய ஒரு கடிதம்:

"அன்புமிக்க. கன்ஷியாம் தாஸ்! ஒத்துழையாமை இயக்கம்தான் நமக்கு மேலும் மேலும் வலுவூட்டும் என்று நம்புகின்றோம். இவ்வியக்கத்தின் ஆற்றல் வேண்டப்படுவது இதனைச் செயற்படுத்தும் ஆற்றலேயாகும். இந்து - முஸ்லீம் சிக்கலின் பெருந்தடையாகக் குறுக்கே கொண்டுவந்துவிட்டது."

"எனக்கு ஏற்பட்டுள்ள பணிஆசை தணிக்க முடியாதது.

கதர், தீண்டாமை, கல்வி இத்துறைகட்காகக் குறைந்தது 2,00,000 இப்போது எனக்கு வேண்டும் பால்பண்ணைக்காக மேலும் 50,000 ரூபாய், இவற்றுடன் 'ஆஸ்ரம' வேலைகள் வேறு இருக்கின்றன. எந்த ஒருபணியும் பணமுடையால் குறைவுபட்டு நிற்கவில்லை. ஆனால் கடுஞ்சோதனைகள் பலவற்றுக்கு உள்ளாக்கிய பின்னரே கடவுள் இவற்றை எனக்குத் தருகின்றார்.

இது என்னைத் திருப்திப்படுத்துகிறது. தாங்கள் எந்தெந்தப் பணிகளுக்கு நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களோ, அவற்றுக்காக எவ்வளவு பணம் கொடுக்க விரும்பினிலும் என்னிடம் கொடுங்கள்.

இந்து - முஸ்லீம் சிக்கல் பற்றி மதிப்பிற்குரிய மாளவியா அவர்கட்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். இந்த வகையில் ஏற்றதொரு முறையில் ஏதாவது செய்தாக வேண்டும். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பவை மதக்கோட்பாடுகளுக்குப் புறம்பானவை களாக எனக்குத் தோன்றுகின்றன"-

தங்கள் அன்புள்ள

மோகன் தாஸ் 

1-10- 192 ( இருபதுகளில்)

(' குறள் முரசு'. 18-1- 1957)

*

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆ. மார்க்சிய நோக்கில்  ஜனநாயக சோசலிசம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"விஞ்ஞான கம்யூனிசத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் ஜனநாயக சோசலிசம் என்பதுதான் தற்காலச் சீர்திருத்த வாதத்தின் அதிகாரபூர்வமான தத்துவமாகும். வர்க்கப் போராட்டம், சோசசலிசப்புரட்சி, அரசியல் ஆட்சி அதிகாரத்தை உழைப்பாளி மக்கள் கைப்பற்றுவது ஆகியவற்றுக்கு எந்த அவசியமும் இல்லை என்று ஜனநாயக சோசசலிசத் தத்துவம் மறுக்கிறது." -

போரிஸ் புத்தின் ('அரசியல் சொற்களஞ்சியம்')

*

~~~~~~~~~~~~~~~~~~

இ. அண்ணா நோக்கில்

~~~~~~~~~~~~~~~~~~

"இன்று பிர்லாக்களை கொழுக்க வைத்துக்கொண்டே காங்கிரஸ் ஜனநாயக சோசலிசம் பேசிவருகிறது." - 

('தொகுதி:7')

"தம்பி சோசலிச உற்பத்தியின் அடிப்படை தொழில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அந்த உற்பத்தி மக்களின் வசதிகளை அதிகப்படுத்த பயன்படவேண்டுமே அன்றி முதலாளிகளின்  இலாபத்தைப் பெருக்கப் பயன்படக் கூடாது."- ('தொகுதி:5')

"தர்மகர்த்தாமுறை பரீட்சீக்கப்பட்டு அது போதுமானதாக இல்லை என்று மெய்ப்பிக்கப்பட்ட காரணமாகவே புதியமுறை வகுக்கப்பட்டது. அந்தப் புதிய முறையே சமதர்மம் -சோசலிசம்" -(' தொகுதி:7')

"மகாத்மா காந்தியார் தமது ஆயுட்காலம் முழுவதும் இந்த போதனையைத் தான் செய்துவந்தார். ரஷியநாட்டுத் தத்துவமேதை டால்ஸ்டாய் - வேதாந்தவித்தகர் - இந்த

போதனை நடத்தியவர் - அறிவோமே!" -

சி.என். அண்ணாதுரை (' தம்பிக்கு அண்ணாவின்

கடிதங்கள்' -'தொகுதி:7')

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3.காந்தியாரின் வர்ணதர்ம அரணான நிலக்கிழமை மனோபாவம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அ.பெரியார் நோக்கில் காந்தியாரின்  வருணாசிரமம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'இந்திய ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கின்றது" என்றார் காந்தியார். 'கிராமங்கள் ஒழிக' என்றார் பெரியார். 'நீதிக்கட்சி' நடத்திய 'நகர தூத'னுக்கு எதிராகவே காந்தியச் சார்பினர் 'கிராம ஊழிய'னை வெளிக்கொணரலாயினர்.

" கிராமம் × நகரம் என்று பிரித்துக் காட்டுவதே வருணாசிரம முறைப்படியேதான்.சமதர்மம் பேசுகின்றவர்களே கிராமம் × நகரம் என்ற பிரிவின இருக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்கிறார்கள். தோழர் காந்தியார் சிலவருடங்களுக்கு முன் ஒரு

சமஸ்தான கிராமவாசிகள் இடையில் கீழ்க்காணுமாறு பேசியுள்ளார்:

'கிராமமக்களாகிய உங்கள் கையில் வெள்ளிக்காசுகள் இருக்கக்கூடாது. நகரத்தில் உள்ளவர்களுக்கு ஊழியம் செய்யவே உங்களைக் கடவுள் படைத்திருக்கிறார்.

ஆதலால் நகரதத்தில் உள்ள மக்கள் சௌகரியமாய் வாழும்படி அவர்களுக்குப் பால்,நெய்,காய்கறி, செருப்பு ஆகியவற்றைத் தயார்செய்யும் ஊழியம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.'

 - இதிலிருந்து காங்கிரஸ்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சிந்தியுங்கள்" -

ஈ.வெ.ராமசாமி ('குடி அரசு' - 22/9/1949)

நகர்மயமாதலுக்கும் தொழில்துறைமயம் ஆதலுக்குமான காந்தியாரின் எதிர்ப்பு பாரம்பரிய நோக்கு அவராலதனை அதனை நியாயப்படுத்துமுகமாகவே முன்னெடுக்கப்பட்டது:

"பெரிய நகரங்கள் மாயக்கவர்ச்சிப் பொருள், பயனற்ற தொல்லை. இங்கே திருடர்களும் கொள்ளைக்காரர்களும் தோன்றுவார்கள், வேசித்தொழிலும், கெட்டநடத்தைகளும் பெருகும்.பணக்காரரர்கள் ஏழைகளைச் சுரண்டுவார்கள்.

ஆதலால் இவற்றில் மக்கள் மகிழ்ச்சி கரமானவர்களாக இருக்கமாட்டார்கள் என்றனர் அவர்கள். எனவே சிறு கிராமங்களே நமது மூதாதையரைத் திருப்திப்படுத்தின."

எம்.கே.காந்தி ('Hindswaraj')

மூதாதையரின் குக்கிராமம் × பெருநகரம் எனும் இத்தகு இருமை முரணெதிர்வாக முன்வைக்கப்படும் பார்வை மிகவிசித்திர மானதே யாகும். திருட்டும் விபச்சாரமும், சுரண்டலும் என்னவோ பெருநகரங்களுக்கே உரித்தானவை தாமா? குக்கிராமங்களிலவை இல்லையா? நிலக்கிழமையின் ஆதிக்கமிக்க குக்கிராமங்களின் சாதிய இறுக்கம் குறித்த ஓர்மை அவருக்கு வாய்த்திருக்கவே இல்லையா?

"இந்தியக் கிராமங்களை இலட்சிய உருவகமாக முன்வைத்தது  குறித்து காந்தி விமர்சிக்கப்பட்டாலும், சாதிய இறுக்க அம்சங்கள் குறித்த புரிதலற்றவராகவே அவர் இருந்தார்." -

 மதுரை சந்தானம் சாந்தி (' Religion, State & Civil Society)

ஆ. சோவியத் இந்தியவியல் ஆய்வாளர் வரைக்கும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இத்தகு புரிதல்கள் இங்குள்ள தலைவர்கள் மத்தியில் மட்டுமல்லாமம் சோவியத் இந்தியவியல் ஆய்வாளர்கள் வரையிலுங்கூட வாய்த்தே இருந்தது:

"காந்தியின் நிர்மாணத்திட்டங்களில் பல கற்பனாவாத அம்சங்கள் இருந்ததை இவருடைய விமர்சகர்கள் மட்டுமன்றிச் சீடர்களும் பன்முறை குறிப்பிட்டனர்.

காந்தியின் 'கருணை'த்தத்துவம், சுரண்டும் வர்க்கங்கங்களுக்கு 'மறுகல்வி' (அல்லது சுயமறுகல்வி) புகட்டும் கருத்து முற்றிலும் யதார்த்த்தத்துக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. உதாரணமாகக் காந்தி ஜமீந்தார்களின் நிலப்பிரபுத்துவ முறையை அகற்றுவதற்கு எதிராக இருந்தார்."

"ஒருவருக்கு மூளை உழைப்பையும் மற்றவர்களுக்கு உடல் உழைப்பையும் வழங்கிய 'இயற்கையான' ஜாதிப் பாரம்பரியங்களை அங்கீகரித்தார்."- விளதிமிர் ஹோரொஸ் ('வளர்முக நாடுகளில் பாப்புலிசம்') மேலதிகப் புரிதல்களுக்குக் காண்க: ' ஏவலாளியையேகாவுவாங்கிய ஏவல்தேவதை: ஒரு கருப்புமந்திரக்கதை' - Soundara Sugan '

('சௌந்தர சுகன் : 316 - செப்.2013)

 (அ.மார்க்ஸ் குறித்த தொகுப்புக்காக தொகுப்பாளர் மீனா கேட்டவண்ணம் நான் அனுப்பிய கட்டுரை கந்தறு கோலமாகக் கத்தரிக்கப்பட்டுத் தொகுப்பாசிரியரால் எனக்கு மட்டும் தனியாக அதில் மறுப்புடன் வெளியிடப்பட்டது. அதனை நான் விரிவாக்கம் செய்து தொடர் கட்டுரைகளாக அவை

'புதுப்புன''லில் வெளியாகின.மருதா பதிப்பக

வெளியீடாக அவை 'மார்க்சியத்துக்கும் அஃதே துணை' என நூலுருப்பெற உள்ளன.)


தொடரும்

தந்தை பெரியாரின் பார்பன எதிர்ப்பு


தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி? - கி. வீரமணி - முதல் பதிப்பு பிப்ரவரி 2022 - பக்கங்கள் 216 - நன்கொடை ரூ 200/

●  பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்பது ரத்த ஆராய்ச்சி மூலம் உருவானது அல்ல ! அவர்தம் பண்பாடு பற்றிய அடிப்படையிலானது ! பெரியார் மீது பார்ப்பனர்களுக்குள்ள கோபம் என்பது அவரது கடவுள் மறுப்பு கொள்கைக்காக அல்ல ! அவரது சமூகநீதி கொள்கைக்காக ! அவரது ஜாதி ஒழிப்பு கொள்கைக்காக ! அவரது ஆதிக்க ஒழிப்பு கொள்கைக்காக ! 

●  இந்த விவரங்களை இன்றைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் மீண்டும் நினைவூட்ட, ஆசிரியர் கி. வீரமணி அய்யாவின் கைவண்ணத்தில் விரிவான தகவல்களோடு வெளியான புதிய படைப்பு - இந்த நூல் !

●  ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே, தமிழகத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும், அரசியலையும், அநியாயங்களையும் நேருக்கு நேர் சந்தித்தவர் - பெரியார். அந்த வேளைகளில் எங்கு நோக்கினும் பார்ப்பன மயமும், பார்ப்பன மாயமும் தான் ! சூத்திர்களுக்கு ஹோட்டல்களில் அனுமதியில்லை ! தெருவில் நடக்க அனுமதியில்லை ! தண்ணீர் எடுக்க அனுமதியில்லை ! பள்ளியில் அனுமதியில்லை ! கோவில்களில் அனுமதியில்லை !

●  அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழன் ஆட்சியிலோ, மந்திரியாகவோ இருந்தால் - ஒழுங்கான நிர்வாகம் இல்லை என்றும், தமிழர்கள் நீதிபதியாக இருந்தார்கள் என்றால் - நீதி கெட்டுப் போச்சு என்றும், தமிழர்கள் பதவிக்கு வந்தால் - நிர்வாகம் கெட்டுப் போச்சு என்றும், தமிழ் மாணவர்கள் படிக்க ஆரம்பித்தால் - படிப்பின் தரம் கெட்டுப் போச்சு என்றும், பார்ப்பனர்களும் பார்ப்பன பத்திரிக்கைகளும் பதறினார்கள் ! பரப்பினார்கள் ! 

பெரியார் இவைகளை கண்டு எதிர்க்க கிளம்பினார் !

●  பிராமணாள் சாப்பிடுமிடம் !

பிராமணாள் தங்குமிடம் !

பிராமணாளுக்கு மாத்திரம் !

இந்த அறிவுப்புகளை தினம் கண்டு 

பெரியார் கொண்டார் ஆத்திரம் !

●  வேதங்களும், மதகுருமார்களும் பார்ப்பனீயத்திற்கு துணையாக இருந்ததையும் பெரியார் ஆராய்ந்து பார்த்தார் !

ரிக்வேதம் - 62ம் பிரிவு - 10வது சுலோகம் - ' இந்த உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது | கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர் | மந்திரங்கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை | எனவே பிராமணனே கடவுள் | அவனை தொழுவதே சரி | ' ...

●  பரமஹம்சர் என்று மதவாதிகளால் போற்றப்படும் ராமகிருஷ்ணர், தான் பூணூல் அணிவது பற்றி கூறியது - " பூணூல் என்பது அலங்காரச் சின்னம் ! நான் பிராமணன் ! எல்லோரையும் விட உயர்ந்தவன் என்பதின் சின்னம் ! "..என்று பூணூல் பெருமை பேசியவர். மனிதனை ஏற்றதாழ்வு கொண்டு பிரிப்பது இந்த ' பூணூல் ' என்பதை - அவாளும் அவாள் குருக்களும் இப்படியெல்லாம் பேசியிருக்கா ! இவைகளை கண்டு, வெறுப்போடு  உருவானது தான் பெரியாரின் - பார்ப்பன எதிர்ப்பு !

●  "  ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன், என்னோடு கைகுலுக்குகிறான் ! தொட்டுப் பேசுகிறான் ! ஆனால் அடுத்த தெருவில், வீட்டில் உள்ள பார்ப்பானோ என்னைப் பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்கிறான் !

என்னிடம் கைகுலுக்கும் வெள்ளையன் அந்நியனா ? என்னைப் பார்த்தால் தீட்டு என்ற பார்ப்பான் அந்நியனா ? " ...என மண்டையில் சம்மட்டியை அடித்தது போல வினவினார் - பெரியார் ! 

●  சக்கரவர்த்தி ராஜாஜி முதல் சர்க்கரை பொங்கல் சாமிநாத அய்யர் வரை, எந்த பார்ப்பனரும் இது நாள் வரை இதற்கு பதில் தர தெம்பில்லை !

பிரம்மாவின் தலையில் 

பிறந்ததாக 

பிதற்றுவோரின் நிலை இதுவே !

●  பெரியார் - " பார்ப்பனர்களை அழிப்பதல்ல என் லட்சியம் ! பார்ப்பனீயத்தை அடியோடு ஒழிப்பதுதான் எனது முக்கியமான வேலை ! "..என்றார். 

பார்ப்பனர்களை எதிர்த்த பெரியார், ஒரு போதும் வன்முறையை தூண்டியதில்லை ! பெரியார் செய்தது ரத்தம் சிந்தா புரட்சி ! அமைதிப்புரட்சி ! மனித நேயமே அவரது இலக்காக இருந்தது. பெரியாருக்கு பல பார்ப்பன நண்பர்களும் இருந்தார்கள் !

●  எவரிடத்தும், எதைச் சொல்லியாகிலும், எதைச் செய்தாகிலும், யாரைக் காட்டி கொடுத்தாகிலும் தங்கள் இனம் சுகபோகிகளாக வாழ்வதில், கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒர் இனம் உலகில் உண்டென்றால், அது இந்த பார்ப்பன கும்பல் தான் என்பதை, தந்தை பெரியார் நூறு ஆண்டுக்கு முன்பே உணர்ந்து, அதற்கேற்றார் போல தனது கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்தார், என ஆசிரியர் இந்த நூலில் வியந்தும் விவரித்தும் எழுதியுள்ளார் !

●  காந்தியாரும் பெரியாரும் சந்தித்து உரையாடிய சுவராஸ்யமான காட்சி ஒன்று :

பெல்காமில் 1924ல் இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டுக்கு காந்தியார் தலைமை ! அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் அதில் பங்கேற்றார். பின்பு காந்தியாரை சந்தித்து, உரையாட வாய்ப்பு கிடைக்கிறது. காந்தியாரிடம் தமிழகத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க அட்டூழியங்கள் பற்றி எடுத்து சொல்கிறார் ! அதன் பின்னர் நடந்த காந்தியார் - பெரியார் உரையாடல் :

●  காந்தியார் - நல்ல பார்ப்பனர்களே உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?

●  பெரியார் - என் கண்களுக்கு தெரியவில்லை ! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் !

●  காந்தியார் - கோபால கிருஷ்ண கோகலே !

●  பெரியார் - மகாத்மாவாகிய உங்கள் கண்களுக்கே ஒரே ஒருவர் மட்டும் தான் தென்படுகின்றார் ! நானோ சாதாரண ஆத்மா ! என் கண்களுக்கு எப்படித் தெரியும் ? என்றாராம். 

●  காந்தியார் தனது வாழ்நாள் முழுவதும்  இப்படி ஒரு கேள்வியையும், இப்படி ஒரு தலைவனையும் சந்திக்கவே இல்லை !

●  பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு -  அவர் காங்கிரசில் செயலாளராக இருந்த போது, சேரன்மாதேவி குருகுல சமபந்தி போஜன ( 1923 - 23 ) விவகாரமாகட்டும்; ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது கொண்டு வந்த குலக்கல்வி திட்ட எதிர்ப்பு ( 1952 - 54 ) போராட்டமாகட்டும்; தமிழகமெங்கும் நடைபெற்ற பிராமணாள் ஹோட்டல் பெயர் விவகாரத்தினால், சென்னை ' முரளி கபே ' ( 1957 - 58 ) மறியல் போராட்டமாகட்டும் -  இவை அனைத்திலும் பெரியாரே முன்னின்று நடத்தி அதில் வெற்றியும் கண்டார் ! 

●  இந்த பார்ப்பன எதிர்ப்பு  போராட்டங்களின் பயனாகத்தான், இந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டங்களின் பயனாகத்தான்,  இன்றைய தமிழகத்தை - பெரியார் மண் என்கிறோம் !

●  ஆசிரியர் கி. வீரமணி அய்யாவின் இந்த புதிய படைப்பு -

நேற்றைய தொண்டர்களுக்கும்,

இன்றைய மாணவர்களுக்கும்,

நாளைய தலைவர்களுக்கும் பயனாகவும் பாடமாகவும் இருக்கும் !


பொ. நாகராஜன். சென்னை. 25.02.2022.

********************************************

Wednesday, February 23, 2022

சுந்தர ராமசாமி பற்றி பொதியவெற்பன்

 தோழர் பொதியவெற்பன் அவர்களின் பதிவு

"பெரியார் சொற்களில் ஈரம் இல்லை. . எழுத்துகளில் ஓர் அழகுணர்ச்சி இல்லை"

- பெரியாரைப் பற்றி சுந்தர ராமசாமி

சு.ரா. ஒரு இலக்கிய வீதியில் நடந்த விபத்து.  அவ்வளவுதான்.  அவர் ஒரு அரை வேக்காட்டு சிந்தனையாளர் என்று கடந்த ஓராண்டு காலத்தில் நான்கைந்து பதிவுகளாவது பதிந்திருப்பேன்.  அது ஏதோ தெய்வகுத்தம் போல நிறைய பேர் விலகிச் சென்றார்கள்.

பெரியாரைப் பற்றிய சு.ரா வின் இந்தப் பதிவும் அதை உறுதிப்படுத்துகிறது. 

சு.ரா எழுத ஆரம்பித்து பதினைந்து இருபது ஆண்டுகள் வரை யாராலும் அறியப்படாமலும் சீண்டப்படாமலும்தான் இருந்தார். 

ஆனால் சுஜாதாவை கடுமையாக கிண்டல் செய்த ஜெயகாந்தனை நேரடியாக விமர்சிக்க முடியாமல் 1970 களின் பிற்பகுதியில் சுஜாதா "தமிழின் தலை சிறந்த இலக்கியவாதி சுந்தர ராமசாமி" என்று பேட்டியளித்து தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொண்டார்.  

உடனே சுஜாதா ரசிகர்கள் சுந்தர ராமசாமியை தேடத்தொடங்கினார்கள்.  ஜெயகாந்தனை பிடிக்காத ஒரு சிலர் சு.ரா தான் பிதாமகர் என்று தீர்மானித்து அவரிடம் எல்லாவற்றை பற்றியும் கருத்துகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். 

 எப்படி இலக்கிய உலகில் தான் பாசாங்குகள் அற்றவன் என்று காண்பிக்க சாரு நிவேதிதா  ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்று பரபரப்பை உண்டாக்கினாரோ அது போல சு.ரா. தலைகீழாக கைகளை ஊன்றிக் கொண்டு நடந்து தன்னுடைய வித்தியாசமான நடையால் கவனத்தை ஈர்த்தார்.  அவ்வளவுதான். 

பெரியார் ஓர் இலக்கியவாதியே அல்ல! அவர் வியர்வையும் இரத்தமும் சொட்ட சொட்ட களத்தில் நின்ற போராளி!

ஒரு போராளியின் ஆடைகள் சலவை செய்யப்படாமல் கசங்கி இருக்கின்றன என்றோ தலை கலைந்திருக்கிறது என்றோ மாதக்கணக்காக ஷேவ் செய்யாமல் மீசை தாடி மண்டிக் கிடக்கிறது என்றோ செய்யப்படும் விமர்சனங்களை விட கேனத்தனமாக இருக்கிறது "அவர் சொற்களில் ஈரம் இல்லை.. எழுத்துகளில் அழகுணர்ச்சி இல்லை" என்னும் பெரியாரைப் பற்றிய சு.ரா வின் விமர்சனங்கள்.

ஒப்பற்ற சுய சிந்தனையாளர்

ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார் - டாக்டர் மா. நன்னன் - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு - பக்கங்கள் 128 - நன்கொடை ரூ 80/

◆  பகுத்தறிவுப் பேராசிரியர், டாக்டர் மா. நன்னன் அவர்களின், அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளையின் ' பெரியார் பேருரையாளர் ' ஆய்வு சொற்பொழிவில் 1979ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் - மூன்று நாட்களின் தொடர் சொற்பொழிவின் உரைத் தொகுப்பே இந்த நூல். நன்னன் நமக்கு தந்த நல்ல கருத்துகளின் வெளிப்பாடாய் இந்த நூல் அமைந்துள்ளது. 

◆  தந்தை பெரியாரவர்கள் அடிப்படை கல்வி மட்டுமே பள்ளியில் கற்றவர் ! இயற்கையாகவே எதையும் உடனேயே நம்பாத, சிந்திக்கும் இயல்புடையவராக இருந்த காரணத்தால், உலகத்தை உற்றுக் கவனித்தவர். கவனித்ததோடல்லாமல் - சிந்தித்து, சீர்தூக்கி, சிறப்பை அறிந்தவர். 

◆  சாதி தோன்றியது ஏன் ? மதம் தோன்றியது ஏன் ? கடவுள் தோன்றியது ஏன் ? அந்த கடவுளர்களுக்கு ஏஜெண்டுகளாக பார்ப்பனர்கள் தோன்றியது ஏன் ?..ஏன் ? என தனக்கு தானே வினவி, விடை கண்டார். அப்படி தன்னை தானே செதுக்கியதால்தான் - பெரியார் ஒரு சுயசிந்தனையாளர் !

◆  பெரியார் சுயசிந்தனையாளரோடு மனித இனப் பற்றாளராகவும் இருந்தார். மனிதனை நினைக்க வேண்டுமானால் கடவுளை மறக்க வேண்டும் என்பார் ! கடவுளை மறக்க வேண்டுமானால் மனிதனை நினைக்க வேண்டுமென்பார் ! அவரது மனிதாபிமானமே அவரது மிகச்சிறந்த கொள்கையாக - ' கடவுளை மற ! மனிதனை நினை ! ' என்று உருவாகி, இன்று உலகோரால் பாராட்டப்படுகின்றது !

◆  பேராசிரியர் நன்னன், பெரியாரின் கடவுள் கொள்கைகளை விளக்கும் போது , " கடவுள் கருத்து செயற்கையானது ! கற்பனையானது ! தாமாக உணர்ந்து அனுபவிக்க இயலாதது ! கடவுளைப்பற்றி யாரும் எடுத்து சொல்லாவிட்டால், நம்பும்படி பிரச்சாரம் செய்து திணிக்காவிட்டால், அந்த எண்ணம் மக்களுக்கு ஏற்படவே ஏற்படாது ! " ...என ஆணித்தரமாக பேசியுள்ளதை, பதிவு செய்துள்ளார்.

◆  ஒரு சுயசிந்தனையாளர் எந்த அளவிற்கு நியாயமானவராக இருப்பார் என்பதற்கு பெரியாரின் இந்த கருத்தை, நன்னன் எடுத்துரைக்கிறார் - " ஒருவனுடைய எவ்வித அபிப்பிராயத்தையும் மறுப்பதற்கும் யாருக்கும் உரிமையுண்டு ! ஆனால் அதை வெளியிடக்கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது ! " ..( குடிஅரசு - 13.04.1930 )

◆  பெரியார் பார்ப்பனீயத்தின் எதிரிதானே தவிர, பார்ப்பனர்களின் எதிரி இல்லை என்பதற்கு, அவரது பேச்சிலிருந்து ஒரு சான்று - " எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழக பிரச்சாரத்தின் கருத்து, ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரன் ஆகக்கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பதல்ல ! "... ( குடிஅரசு - 09.11.1946 )

◆  பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை எவ்வளவு எளிதானதென்பதை, நன்னன் தனது உரையில் உதாரணமாக காட்டியது - " நாங்கள் கடவுள் இல்லையென்று கூற உங்களிடையே வரவில்லை ! கடவுள் இல்லை என்று கூற அறிவுள்ளவரால் தான் முடியும் ! அந்த அறிவு உங்களுக்கு வருகிறவரையில் ஏதோ ஒரு கடவுளை வைத்துக் கொள்ளுங்கள் ! ஆனால் அந்த கடவுள் தமிழ்க் கடவுளாக இருக்கட்டும் ! ".. இப்படியொரு நாத்திகர் தான் பெரியார். ( விடுதலை - 19.071961 )

◆  பெரியாரின் முதல் வேலை - ஜாதி ஓழிப்பு பிரச்சாரமாகத் தான் இருந்தது. அதற்கு தடையாக இருந்த - மதம், கடவுள், சாத்திரம், மநுநீதி, பார்ப்பான் இவைகள் அத்தனையும் எதிர்த்தார் ! " இந்து மதத்தை ஒத்துக்கொண்டு, கிருஷ்ணனை கடவுள் என்று ஏற்றுக்கொண்டு, அவன் கூறியதாக சொல்லப்படும் பகவத்கீதையையும் ஒத்துக் கொண்டிருக்கின்ற எவனாலும், தீண்டாமையையோ ஜாதியையோ ஒழிக்கவே முடியாது ! " ..( குடிஅரசு - 23.06.1935 ) 

◆  சுயசிந்தனையாளர் ஒருவர் தன்னைப்பற்றியோ, தன் கொள்கைகளைப் பற்றியோ, தன் யோக்கியதைப் பற்றியோ, தன் இலக்கைப் பற்றியோ, தந்தை பெரியாரைப் போன்று வேறு எவராவது, இதுவரை வெளியிட்டதுண்டா, என அவரது இந்த - சுய அறிவிப்பை நன்றாக படித்து விட்டு உணர்ந்து அறியவும் :

◆  " ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தை திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல, மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற் போட்டுக்கொண்டு, அதே பணியில் இருப்பவன் !

       அத்தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால் , நான் அதை மேற் போட்டுக்கொண்டு, தொண்டாற்றி வருகிறேன் !

        இதைத்தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்கு தகுதி உடையவன் என்றே கருதுகிறேன் ! சமுதாய தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன் ! "....

◆  பேராசிரியர் டாக்டர் மா. நன்னனின் பேருரை, பல அரிய தகவல்களை கொண்டதாக உள்ளது. படித்து பயன் பெற வேண்டிய நூல் இது.

● சுய முயற்சி -   அவரை எழுத்தாளராக்கியது 

● சுய ஒழுக்கம் - அவரை

தலைவராக்கியது !

● சுய அனுபவம் - அவரை

சீர்திருத்தவாதியாக்கியது !

● சுய சிந்தனை - அவரை

நாத்திவாதியாக்கியது !

● சுய மரியாதை - அவரை

பெரியாராக்கியது !

●அவர் தாம் பெரியார் ! !


பொ. நாகராஜன். சென்னை. 23.02.2022.

********************************************

Monday, February 21, 2022

உ.வே.சா. தமிழ்ப்பற்றும் சாதிப்பற்றும்

உ_வேசா.வின் தமிழ் மொழிப்பற்றும் சாதிப்பற்றும்!

திருச்சி வானொலி நிலையத்தில்

1941ஆம் ஆண்டு ‘எது தமிழ்?’ என்ற தலைப்பில் உ.வே.சா. அவர்களின் பேச்சு ஒலிபரப்பானது. இந்தப் பேச்சுக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் கண்டனம் தெரிவித்து துண்டறிக்கை வெளியிட்டார். 

அந்தத் துண்டறிக்கையில் 

கி.ஆ.பெ. குறிப்பிட்டுள்ள செய்தி :

👉 சோறு தின்கிறாயா? என்பது தமிழல்லவென்றும் போஜனம், நிவேதனம், பிக்ஷை ஆயிற்றா என்பதே தமிழ் மரபு என்றும் திரு. ஐயர் அவர்கள் கூறியது பெருவியப்பைத் தருகிறது. 

திரு. ஐயர் அவர்களின் இக்கூற்றிலிருந்து தமிழ் மொழியில் அவருக்குப் பற்று இல்லையென்பதும் வடமொழியில் பற்றுமிக்குளதென்பதும் வெளிப்படையாகப் புலப்படுகின்றன...

பழமையான தமிழ் நூல்களை வாழ்நாள் முழுவதும் தேடித்தேடிப் படித்து ஆராய்ந்து அழகுற வெளியிட்ட உ.வே.சா. அவர்கள் தமிழ் சொற்களை தமிழ் இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல் வடமொழி சொற்களைத் தமிழ் என்று சொல்வதைக்கண்டு கி.ஆ.பெ. அவர்கள் பதறிப் போனார். 

அவர் வெளியிட்ட துண்டறிக்கையில்,

உ.வே.சா. குறிப்பிட்டுள்ள வடமொழிசொற் களுக்கு இணையான தமிழ்ச்சொற்களையும் பட்டியலிட்டு, இதுவயது மூப்பால் வந்த ஞாபகமறதியாக இருக்கக்கூடும் என்பது போன்றும் குறிப்பிடுகிறார். 

அத்தோடு திருச்சி வானொலிக்கு ஒரு கோரிக்கையையும் வைக்கிறார் அவர் :

“அரசியலாரால் நடத்தப்படுகிற வானொலி நிலையத்தினர் திரு.ஐயர் அவர்களைப் போன்றவர்களுக்குக் கொடுக்கும் ‘சலுகை’களை மற்ற தமிழறிஞர்களுக்கும் கொடுத்து நடுநிலைமையைக் கையாள்வார்களென நம்புகிறேன்.

(K.A.P. விசுவநாதம், திருச்சி, இஸ்லாமியா பிரஸ், பாலக்கரை,திருச்சி.)

மறைந்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் எழுதுகிறார் :

அப்போ எனக்குப் பதினாறு வயது. சென்னையில் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்தேன். 

உ.வே.சாமிநாத ஐயர் அந்த அச்சகத்தில் வந்து தனது நூல்களை அச்சுக்குக் கொடுப்பார். முதல் நாள் கொடுத்துவிட்டுப் போகும் கட்டுரையை, மறுநாள் வந்து புரூப் பார்த்து பிழை திருத்திக் கொடுத்து விட்டுப் போவார்.

எனக்கு அந்த வயசிலேயே மிகுந்த தமிழ் ஆர்வம். என் அச்சக உரிமையாளர் ஒரு ஐயங்கார்.  நான் அவரிடம், “உ.வே.சா விடம் தமிழ் கற்க விரும்புகிறேன். நீங்கள் சிபாரிசு செய்து என்னை அவரிடம் தமிழ்பாடம் கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்” என்றேன் “அதற்கென்னடா, தாராளமாகச் செய்கிறேன்!” என்றார் அவர்.

ஒரு நாள், உ.வே.சா பிழை திருத்தி விட்டுச் சென்ற புரூப்பை எடுத்துப் படித்தேன். அதில் இரண்டொருபிழை அப்படியே இருந்தது.

உ.வே.சா. கண்ணில் படவில்லை போலும். அந்தப் பிழையை நானே திருத்தினேன்.

மறுநாள், உ.வே.சா. வந்தார். பார்த்தார், “நான் கவனிக்காமல் விட்ட பிழையை யாரோ திருத்தி யிருக்கிறார்களே! பலே என்று பாராட்டினார். ஐயங்கார் என்னை அழைத்து, “இந்தச் சிறுவன் தான் திருத்தினான்” என்றார்.

உ.வே.சா. என்னைத் தட்டிக்கொடுத்தார். என் தமிழார்வத்தை விசாரித்து, பாராட்டினார். அப்போது ஐயங்கார், “இவன் உங்களிடம் தமிழ் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறான். நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் வருவான் தமிழ் கற்றுக் கொள்ளட்டும்!” என்றார்.

உ.வே.சா. பதிலேதும் சொல்லவில்லை.  வேலை முடிந்து புறப்படும் போது ஐயங்காரை அச்சகத்திற்கு வெளியே அழைத்தார்.

இருவரும் சென்றனர்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த ஐயங்கார், கோபமாகத் கத்திக்கொண்டே வந்தார். “விடுடா! இந்த ஐயர் மட்டும் ஒரு அப்பிராமணன்  (அதாவது பிராமணர் அல்லாதவர்) மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றுக் கொள்ளலாம். ஆனால், இவர் மட்டும் ஒரு அப்பிராமணணுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டாராம்! என்னைத் தனியே கூப்பிட்ட, பிராமணப் பையனாக இருந்தால் தான்  தமிழ் சொல்லித் தருவேன்! என்கிறார். இவர் கிடக்கிறார். நான் உன்னை வேறு ஒருவரிடம் தமிழ் கற்க ஏற்பாடு செய்கிறேன்! கவலைப்படாதே !"என்றார்.  

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் 168 ஆவது பிறந்தநாள் இன்று.

தமிழ்த்தாத்தா உ.வே.சா. வாழ்க !

Tuesday, February 15, 2022

அனைத்து சாதியினர் அர்ச்சகர் பணி நியமன ஆணைக்கு ஆபத்து...

  வரலாற்றுச் சிறப்பு மிக்க அனைத்து சாதி மாணவர்களின் பணிநியமனத்துக்கு ஆபத்து!

- வா.ரங்கநாதன், 

தலைவர்,

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்,

தமிழ்நாடு. 

தொடர்புக்கு : 9047400485

"சென்னை உயர்நீதிமன்றத்தில் 17 வழக்குகள் தொடரப்பட்டு 

பிப்ரவரி.16, 2022 –ல் விசாரணை!"

  சமூக நீதி கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள், தமிழ் ஆன்மீக அமைப்புகள், ஆதீனங்கள் வழக்குகளில் இணைய வேண்டும்!

 அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை வரவேற்பதாகச் சொன்ன பா ஜ க – வின் நிலைப்பாடு என்ன? 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு திருவண்ணாமலை மாவட்டம்

90474 00485.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் - தமிழ்நாடு

மதுரை

384, முதல் தளம்,கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20, .9865348163

+++++++++++++++++

நாள்: 15.02.2022

பத்திரிக்கை செய்தி

 வரலாற்றுச் சிறப்பு மிக்க அனைத்து சாதி மாணவர்களின் பணிநியமனத்துக்கு ஆபத்து!

 சென்னை உயர்நீதிமன்றத்தில் 17 வழக்குகள் தொடரப்பட்டு பிப்ரவரி.16, 2022 –ல் விசாரணை!  

  சமூக நீதி கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள், தமிழ் ஆன்மீக அமைப்புகள், ஆதீனங்கள் வழக்குகளில் இணைய வேண்டும்!

 அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை வரவேற்பதாகச் சொன்ன பா ஜ க – வின் நிலைப்பாடு என்ன? 

 தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் இருந்த கருவறைத் தீண்டாமையை, அகற்றும் விதமாக, கடந்த ஆகஸ்ட்.14, 2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து சாதி அர்ச்சகர் நியமனங்களை வழங்கினார். 

தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில்   படித்த 22 அர்ச்சக மாணவர்கள் உட்பட 57 மாணவர்களுக்கு முறையான நேர்காணல் மூலம் பணிநியமனம் வழங்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் பணியாற்றி வருகின்றனர்.

பரம்பரை வழி அர்ச்சகர்கள் பல நெருக்கடிகள் கொடுத்தாலும் விடாப்பிடியாக இறைவனுக்கான பணியில் அரசு அர்ச்சகர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஒட்டு மொத்த தமிழ்நாடும் தி.மு.க அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றபோதும், சிவாச்சார்யார்கள்,பட்டாச்சாரியார்கள் என அரசு பொதுக் கோயில்களில் வாரிசு முறையில் பணியாற்றி வந்த சிலரும், வைதீக இந்துத்துவ மத அடிப்படைவாத அமைப்பினரும் மட்டுமே அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்தனர்.

தற்போது, சட்டத்தின் சந்து,பொந்துகளில் நுழைந்து அர்ச்சகர் நியமனத்தை எதிர்க்க முனைந்துள்ளனர்.     

உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர் வழக்கை நடத்தி, கடந்தகால சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டவர்கள் என்ற முறையில் தமிழக மக்களுக்கும், கட்சிகளுக்கும் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்குகள் தொடர்பான விபரங்களைத் தெரிவிக்கிறோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், 

(i) அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனத்தை (CHALLENGING THE ADVT.DATED:06.07.2021) எதிர்த்து 5 வழக்குகளும், 

(ii) அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கான, தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணிவரன்முறை விதிகள்,2020 (CHALLENGING G.O.Ms.No.114 – TAMIL NADU RELEGIOUS INSTITUTIONS EMPLOYEES (CONDITIONS OF SERVICE) RULES,2020- மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை   எதிர்த்து 10 வழக்குகளும், 

(iii) அரசு அர்ச்சகப் பள்ளிகளை எதிர்த்து 2 வழக்குகளும் என மொத்தம் 17 வழக்குகள் பல்வேறு நபர்களால் தொடரப்பட்டுள்ளன. எதிர்வரும் பிப்ரவரி.16, 2022 அன்று மேற்படி 17 வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளன.

மேற்படி வழக்குகளில்  ஆதி சைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் , தென்னிந்திய  வைகாசன அர்ச்சகர்கள் சங்கம், கோயில் வழிபாட்டாளர் சங்கம் உள்ளிட்ட பலர் முன்வைக்கும் வாதங்கள்: 

ஆதி சைவ சிவாச்சாரியார்கள் என்ற தனி மத உட்பிரிவினர் 25000 குடும்பங்கள் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமே  சைவக் கோயில்களில் பூஜை செய்யும் உரிமை படைத்தவர்கள்; ஆகமப்படி மற்ற சாதி இந்துக்கள் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என சேசம்மாள் வழக்கின் தீர்ப்பு உள்ளது.

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் குறித்து விதி உருவாக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை; அரசின் விதிகளில் கடவுளின் மொழியான சமஸ்கிருதம் படிப்பது, எழுதுவது தொடர்பான ஆற்றல் குறித்த விதிகள் ஏதும் இல்லை; 

அர்ச்சக மாணவர்களுக்கான பாடத்திட்டம் வகுக்கும் உரிமை அரசுக்கு இல்லை; 

அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கான பணி வயது,சம்பளம்,ஓய்வு பெறும் வயதை  அரசு நிர்ணயம் செய்ய முடியாது;

மரபு,பழக்க,வழக்கம்,ஆகமங்களின்படி எல்லோரும் அர்ச்சகர் ஆக முடியாது.

தமிழக முதல்வர் அவர்கள் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று சொல்லி நாத்திகரான பெரியாரின் பெயரில் நியமனம் செய்துள்ளார்.

இது உள்நோக்கமுடையது.அர்ச்சகர் நியமனங்கள் சேசம்மாள் , ஆதி சைவ சிவாச்சார்யார்கள் வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது. 

தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலும் தனித்துவமானது;அரசு பொதுவான விதியை இயற்ற முடியாது; கோயில்களுக்கு அரசு நிர்வாக அதிகாரிகள் நியமிப்பதே அரசியல் சட்டத்திற்கு முரணானது. 

தமிழக அரசின் நடவடிக்கை அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 19, 25, 29-க்கு எதிரானது.எனவே, அர்ச்சகர் நியமனம், விதிகளை ரத்து செய்து,பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.   

பிறப்பால் “பிராமணர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் கூறப்படவில்லை.  

ஆனால், ஆகம விதி என்று சொல்லும் இடங்களிலெல்லாம் மரபு – பழக்க வழக்கம் என்ற சொற்றொடர்களையும் சேர்த்துத்தான் எப்போதும் பயன்படுத்துகின்றனர். எப்படி வேண்டுமானாலும்  பொருள் கொள்வதற் கான வாய்ப்பை வழங்குகின்ற இந்தச் சொற்றொடர்களின் துணை கொண்டுதான் இன்றுவரை அர்ச்சகர் நியமனம்  எதிர்க்கப்படுகிறது.

2015 அர்ச்சகர் தீர்ப்பிற்குப்பின் சபரிமலை அய்யப்பன் கோயில் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. 

இத்தீர்ப்பில் “ இந்திய அரசியல் சட்டம் சமூக மாற்றம், சமூக சமத்துவத்திற்கான ஓர் ஆவணம்;அரசியல் சட்ட அடிப்படையிலான முன்னுரிமை என வரும்போது ஒரு தனி நபர், குழுவின் மத உரிமை – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனி மனித கண்ணியம் உள்ளிட்டவைகளை முன்னிருத்தும் அரசியல் சட்ட அறங்களுக்குக்கு உட்பட்டே செயல்பட  முடியும். 

பிறப்பு, உடற்கூறு வகைப்பட்ட பாகுபாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. 

தனி மனித கண்ணியத்தை, மற்ற குடிமக்களை கீழானதாகக் கருதும் எதையும் ஏற்க முடியாது.

பிரிவு.26-ன் கீழான மத உட்பிரிவுகளின் உரிமை, பிரிவு 25 (2) (ஆ)-வுக்கு உட்பட்டே இயங்கும்.

தனி நபரின் சுதந்திரம், கண்ணியம், சமத்துவத்தை மீறி எந்த மதக் கோட்பாடு,பழக்க வழக்கம், மரபுகள், நம்பிக்கைகள் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவை அரசியல் சட்டப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் சட்டத்திற்கு அர்த்தம்  உள்ளதென்றால் மதம், தனி மனித நம்பிக்கையாகவோ, மதக் கோட்பாடாகவோ யாரையும் இழிவு படுத்த முடியாது” மிகவும் ஆணித் தரமாகக் குறிப்பிடப்படுகிறது.

அர்ச்சகர் தீர்ப்பு இரண்டு நீதிபதிகள் வழங்கியது.சபரிமலை தீர்ப்பு 5 நீதிபதிகள் வழங்கியது. எனவே சபரிமலைத் தீர்ப்பின் ஒளியிலேயே, அர்ச்சகர் தீர்ப்பு பொருள் விளக்கம் கொள்ளப்பட வேண்டும். மேலும் சேசம்மாள் வழக்கு முதல்  2015 மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கு வரை கூறப்பட்ட தீர்ப்புகளில் “அர்ச்சகர் நியமனம் என்பது அரசின் மதச் சார்பற்ற நடவடிக்கை“ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசும், மற்ற அரசு ஊழியர்களுக்கு இருப்பதுபோல்,  அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கான, தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணிவரன்முறை விதிகள்,2020-அய் உருவாக்கியுள்ளது. ஆனால், அரசின் எந்தச் சட்டம், விதிகளின் கீழும் தாங்கள் வரமாட்டோம் என சிவாச்சார்யார்களும், பட்டாச்சாரியார்களும் சொல்கிறார்கள்.அரசுப் பொதுக் கோயில்களில் பணிபுரியும் இவர்கள் இப்படிச் சொல்ல முடியுமா? இவர்களைப் போல், அரசின் வேறுதுறைப் பணியாளர்கள் சட்டம்,விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் என்னவாகும்? சிவாச்சார்யார்களும், பட்டாச்சாரியார்களும் அரசியல் சட்டத்திற்கு மேற்பட்டவர்களா?

எனவே,அரசியல் சட்டப்படியான சமத்துவத்தை மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுக்கோயில்களில் நிலைநாட்டும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முயற்சியை, தடுப்பதற்கான பணிகள் சட்ட வடிவில் திட்டமிட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் ஆர் எஸ் எஸ் சிந்தனை கொண்ட சிலரும் துணைபோகிறார்கள்.பல மத அடிப்படைவாத அமைப்பினரும் பின்னணியில் உள்ளனர்.

சமத்துவத்திற்கு விரோதமான இம்முயற்சியை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது. அர்ச்சக மாணவர் சங்கம் சார்பில் வழக்குகளில் நாங்கள் இணைந்துள்ளோம். இதே போல், தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், முற்போக்கு அமைப்புகள், இயக்கங்கள், ஆதீன மடங்கள் உள்ளிட்ட பலரும் , சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் இணைய வேண்டும்.தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மிக அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு  வழக்குகளை நடத்த வேண்டும் என்று கோருகிறோம்..

சமத்துவ வரலாறு மீண்டும் பின்னோக்கிச் செல்ல நாம் அனுமதிக்கக் கூடாது. 

--------------------------------------------

வா.ரங்கநாதன், தலைவர் 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு. 

தொடர்புக்கு : 9047400485

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், 

மாநில ஒருங்கிணைப்பாளர், 

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

தொடர்புக்கு : 98653 48163.

Archakar & Rules Challenging Writ Petitions

15534 / 2021  - S.Sridharan 

16287 / 2021  - All India Adi Saiva Sivacharyargal Seva Sangam, Rep. by its General Secty BSR.Muthukumar

17717 / 2021 - 1) The TN Thirukoil Thozhilalargal Union, Chennai-34

2) S.Gururasan

17802 / 2021 - All India Adi Saiva Sivacharyargal Seva Sangam, Rep. by its General Secty BSR.Muthukumar

18418 / 2021  - Rangarajan Narasimman

18438, 18441 & 18443 / 2021 S.Muthusamy & 7 Others

18678 / 2021  - Rathina Rajkumar

18753 / 2021  - Rathina Rajkumar

19795 / 2021 -  The South Indian Vaikanasa Archakas Association, Madras, Rep by its Secty Sathishkumar A. Triplicane, Ch.05

19800 / 2021 - The South Indian Vaikanasa Archakas Association, Madras, Rep by its Secty Sathishkumar A. Triplicane, Ch.05

29936 & 19938 / 2021 Sri Koonampatti Kalayanapuri Aatheenam Rep. by its 57th Pontiff Srimath Raja Saravana Manickavasagaguru Paramacharya Swamigal Pallagoundanpalayam Post, Tiruppur Dist

20480 /2021 Sri Rangam Koil Miras Kainkaryaparagal Matrum Athanai Sarntha Koilgalin Miraskainkaryaparargalin Nalasangam Rep.by its President R.Muralidharan Battar, Srirangam

20489 / 2021 Sri Rangam Koil Miras Kainkaryaparagal Matrum Athanai Sarntha Koilgalin Miraskainkaryaparargalin Nalasangam Rep.by its President R.Muralidharan Battar, Srirangam

21175 / 2021-  B.Jagannath

Monday, February 14, 2022

ஈ.வெ.ரா.வின் கெய்ரோ கடிதம்

 ஈ. வெ. இராமசாமியின் “கெய்ரோ” கடிதம்

போர்ட் சைட்டிலிருந்து எழுதிய வியாசம் கிடைத்திருக்கலாம். அதில் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” என்கின்ற கப்பல் விஷயத்தைப்பற்றி மாத்திரம் எழுதமுடிந்தது. மற்றபடி கொழும்பிலிருந்து கப்பல் புறப்பட்ட தற்குப் பின் கண்ட விஷயங்களைப்பற்றி சுருக்கமாக எழுதுகிறேன்.

கொழும்பிலிருந்து டிசம்பர் 17 -ம் தேதி காலை புறப்பட்ட கப்பல் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ‘ஜிபுட்டி’ என்கின்ற பிரஞ்சு துறைமுகம் வந்து சேர்ந்தது. இது ஏடனுக்கு எதிர்பாகத்தில் இருப்பதும் பிரஞ்சுக்காரருடைய துறைமுகமுமாகும். நாங்கள் பிரஞ்சுக்கப்பலில் பிரயாணம் செய்ததால் பிரஞ்சு கப்பல் அங்கு செல்ல வேண்டியதாயிற்று. பிரஞ்சுக்காரருக்குச் சொந்தமான தீவாகிய மடகாஸ்கர் என்னும் தீவுக்கு அனுப்பப்படும் சாமான்களும் அத்தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சாமான்களும் ஜிபுட்டி என்கின்ற துறைமுகத்தின் வழியாகத்தான் வரவேண்டும்.

இந்த துறைமுகத்தில் நாங்கள் இறங்கினதும் “கமாலியர்” என்கின்ற ஒரு ஜாதியார் நீக்கிறோவர்களைப் போல் அதிக கருப்பும் மிகவும் சுருண்ட தலைமயிரும் உடையவர்கள் தான் இந்தத் தேசத்தில் அதிகமாய் இருக்கிறவர்கள், இவர்கள் பாஷை அரபு -  மதம் இஸ்லாம். மிகவும் இளைத்த சரீரம் உள்ளவர்கள், பார்வைக்கு விகாரமானவர்கள், ரொம்பவும் ஏழைகள், அழுக்கு துணியுடையவர்கள் இவர்கள்தான் இவ்விடத்திய கூலிகள். பெண்கள் விகாரமாய் மலை லம்பாடி ஜாதியாரைப் போல் நகை அணிந்துகொண்டு நீண்ட குப்பாயம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கு சில அரபியரும், நம் பக்கத்திய அதாவது மரைக்காயர்கள், ராவுத்தர்மார்களைப் போல் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் நல்ல உடை உடுத்திக் கொண்டு சுத்தமாகவும், நல்ல தோற்றமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் முதலாளிகளாகவும், சற்று நாகரீக வாழ்க்கைகாரராகவும் காணப்படு கிறார்கள்.

தினசரிவாழ்க்கை

ஜிபுட்டி துறைமுக பாகம் மாத்திரம் நல்ல உயர்தரக் கட்டடங்களும், நல்ல உயர்தர ஷாப்பு கடைகளும், பிரஞ்சுக்கார வெள்ளையர்களால் மிகுதி யும் குடியிருக்கப்பட்ட மாளிகைகளும் உடையதாக காணப்படும். மற்றப்படி ஊருக்கு ஒரு பெண் கூட முகத்தை மூடிக் கொண்டு போனதை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் முக்காடு மாத்திரம் போட்டிருக்கிறார்கள். இங்கு பம்பாய் குஜராத்தி வியாபாரிகள் சிலரைப் பார்த்தோம்.  இங்கு தபால் எழுதிவிட்டு சில சாமான்கள் சாப்பாட்டுக்கு வாங்கினோம். 

பிறகு 24ந்தேதி மாலை - 5 மணிக்கு ஜிபுட்டியிலிருந்து கப்பல் புறப்பட்டு 29ந்தேதி சூயஸ் துறைமுகத்துக்கு வந்தது. அத்துறைமுகம் மிக்க அழகானதாகவும், ஊர் மிகவும் புதிய முறையில் ஏற்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. ஜிபுட்டி யிலிருந்து செங்கடலில் கப்பல் புறப்பட்டவுடன் தினம் 1க்கு 3, 4 கப்பல் வீதமும், சூயசுக்கு பக்கத்தில் வரவர ஒரு மணி ஒன்றுக்கு ஒரு கப்பல் வீதம் கடலில் போவதையும் வருவதையும் பார்த்துக் கொண்டே இருந்தோம். சூயசுக்கு பக்கத்தில் வந்தவுடனே சிறிது சிறிதாய் குளிர் அதிகப்பட்டு சூயசில் நடுங்கும்படியான குளிர் ஏற்பட்டது. 

ஏனெனில் அங்குதான் முதலில் குளிர்கண்டோம். கப்பலில் எங்களுடைய இடம் 4வது வகுப்பு (மேல் தட்டு) ஆனதால் அங்கு சென்னையில் கப்பல் ஏறினது முதல் 4, 5 நாள் வெய்யிலாலும், மழையாலும் மிகவும் கஷ்டப்பட்டதுடன், சாமான்களுடன் அடிக்கடி மூட்டைகள் இறக்கும்போதும் ஏற்றும் போதும் இடம் மாறவேண்டியதாயும் இருந்தது. புதுச்சேரி துறைமுகத்தில் எனக்கு சிறிது காய்ச்சலும், மயக்கமும், தலைவலியும் அதிக தொந்தரவு செய்ததுடன், வெய்யிலிலேயே இருக்க வேண்டி இருந்ததாலும் சற்று  மன வருத்தமும் உடல் நிலையைப்பற்றி கவலையும் ஏற்பட்டதால் 4வது வகுப்பில் இருந்து 3-வது வகுப்புக்கு மாற்றலாம் என்று தீர்மானித்து புதுச்சேரியிலிருந்து எங்களைக் காண வந்திருந்த திரு. பாரதிதாசன், திரு. நோயேல், திரு. செல்வம், அவர்களுடைய காரியதரிசி ஆகியவர்கள் மூலமாய் கப்பல் கமிஷனரிடம் சென்று மாற்றும்படி கேட்டதில் அவர் சென்னையில் 3-வது வகுப்புக்காக சொல்லப்பட்ட சார்ஜை விட 2 - பவுன் அதிகமாக கூட்டி 1 - டிக்கட்டுக்கு 120ரூ. வீதம் அதிகம் கொடுக்க வேண்டுமென்று சொன்னார். அதற்கும் சம்மதித்ததில் இங்கிலீஷ் பவுன்நோட்டு எடுக்க மாட்டேன் என்று சொல்லி இந்திய நாணய நோட்டே வேண்டுமென்று கேட்டார்.

 எங்களிடம் இருந்த தொகைகள் எல்லாம் இங்கிலீஷ் நாணய நோட்டாகவே மாற்றப் பட்டிருந்ததால் புதுச்சேரி டவுனுக்கு இங்கிலீஷ் பவுன் நோட்டை அனுப்பி, இந்திய நாணயமாக மாற்றிக்கொண்டு வந்து கொடுப்பதாகச் சொல்லி நாணயம் மாற்ற திரு. பாரதிதாசன் அவர்களை புதுச்சேரி ஊருக்குள் அனுப்பினோம். அவர் இந்திய நாணயத்தையும் சில தின்பண்டங்களையும் ஒரு டாக்டர் வசம் அனுப்பி கொடுத்தார். அதற்குள் எனக்கு சற்று குணமாயிருந்ததாலும், டாக்டர் பரீக்ஷித்துப் பார்த்து சில பக்குவம் சொன்னதாலும் 3-வது வகுப்புக்கு மாறாமல் 4-வது வகுப்பிலேயே இருந்து கொண்டோம். பிறகும் 2, 3 நாள் கஷ்டப்பட்டோம். 

கப்பலில் நாங்கள் மூட்டைகளை விட கேவலமாகவே நடத்தப்பட்டோமானாலும் 4-ம் நாள் ஒரு கீழ் தட்டில் சாமான்களை வைத்துக் கொள்ள கப்பல் கமிஷனர் அனுமதி கொடுத்தார். 

அந்த கீழ்தட்டானது மூட்டைகள் போடவும் ஒரு பக்கம் பிரஞ்சு சோல்ஜர்கள் இருக்கவும் ஏற்பட்டது. அதில் 50 சோல்ஜர்கள் இருக்க இடமுண்டு. 50 சோல்ஜர்கள் ஏற்கனவே இருந்தார்கள். நாங்கள் மூட்டைகளின் மேல் இருந்தோம். இரண்டொரு நாள் சோல்ஜர்கள் எங்களுடன் பழகி விட்டதாலும், மூன்று தமிழ் பிரஞ்சு இந்திய சோல்ஜர்கள் மிக்க பழக்கமாகி விட்டதாலும் பிரயாணம் சிறிது கூட கஷ்டமாக தோன்றவில்லை. ஆகாரம் இந்த சோல்ஜர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆகாரமே தான் எங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அதாவது தினம் 2 வேளை வேக வைத்த உருளைக் கிழங்கும், கொள்ளு, அல்லது அவரை, கடலை முதலிய ஏதாவதொரு தானியமும் வேகவைத்துக் கொடுப்பதுடன், உருண்டை ரொட்டி 3-ம் இதுகளும், மாட்டு மாம்ச துண்டும், சாராயமும் கொடுக்கப்படுவது வழக்கம். காலையில் பால் இல்லாத காப்பியும் ரொட்டியும் உண்டு. இவற்றுள் சாராயம் மாட்டு மாம்சம் ஆகியவைகளை நாங்கள் உபயோகிக்கவில்லை. மற்றதுகளுடனும், கொழும்பிலும், சென்னையிலும் புதுச்சேரியிலும் வாங்கின பிஸ்கட், ஆரஞ்சுப்பழம் ஆகியவைகளுடனும் காப்பி, டீயுடனும் சரிப்படுத்திக் கொண்டோம்.

சூயஸ் கால்வாய்

சூயசிலிருந்து 29-தேதி பகல் 2 மணிக்குக் கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக போர்ட் சைட்டுக்குப் புறப்பட்டது. இந்தக் கால்வாயானது செங்கட லுக்கும் மத்தியதரை கடலுக்குமாக சுமார் 100 மைல் நீளம். மணல் தரையில் வெட்டப்பட்ட கால்வாயாகும். இதன் அகலமெல்லாம் சுமார் 150 அடி தானி ருக்கும். நமது வாய்க்கால் போலவே இருபக்கம் கரையில் நடக்கும் ஜனங் களுடன் பேசிக் கொண்டே கப்பலில் போகலாம். ஆனால் 40 ஆயிரம் 50 ஆயிரம் டன் கனமுள்ள கப்பல்கள் எல்லாம் தாராளமாய் போகத்தகுந்த ஆழம் வெட்டப்பட்டிருக்கிறது. கால்வாய் வேலைகள் இன்னமும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றது. எதிரில் கப்பல் வந்தால் ஒதுங்கி நிற்க ஆங்காங்கு வசதி இருக்கின்றது. 

கால்வாய்க்கு நெடுக வாட்சுமேன்களும், காவல்களும், பந்தோபஸ்துகளும் உண்டு. இந்த கால்வாய் “சூயஸ் கால்வாய் கம்பெனியார்” என்கின்ற ஒரு கம்பெனியாரால் முதல் போட்டு வெட்டப்பட்டு ஒவ்வொரு கப்பலுக்கும் சுங்கம் வாங்குவதன் மூலம் பங்குக்காரர்களுக்கு லாபம் கிடைத்து வருகின்றது.   ஒரு கப்பலுக்குச் சுமார் 10, 000 பத்தாயிரம் ரூபாய், 15, 000 ரூபாய் போல் சுங்கம் வசூலிக்கப்படுவதாகக் கேள்விப்பட்டோம். சூயஸிலிருந்து போர்ட் சைட்டுக்கு போவதற்குள் குளிர் அதிகப் பட்டுக் கொண்டே வந்துவிட்டது.

போர்டு சைட்

29- தேதி இரவு 10 மணிக்கு கப்பல் போர்ட் சைட்டுக்கு வந்தது. இரவு 11 மணிக்கே பிரயாணிகளை கப்பலை விட்டு இறக்கிவிட்டார்கள். துறைமுகம் சென்னையைப் போலவே கப்பலிலிருந்து தரையில் கால் வைக்கலாம். ஸ்தல யாத்திரைகளில் எப்படி பண்டாரங்களும் அர்ச்சகர்களும் யாத்திரை வழி காட்டிகளும் ரயிலிலேயே வந்து தொந்திரவு செய்வார்களோ அதுபோல் guide என்று சொல்லப்படும் வழிகாட்டிகள் கப்பலுக்குள்ளாகவே வந்து சூழ்ந்து கொண்டு இம்சைப்படுத்திவிட்டார்கள். பிறகு ஒருவன் எங்களுடன் விடாப்பிடியாய்த் தொடர்ந்து எங்கள் சாமான்களைக் கப்பலில் இருந்து போட்டில் ஏற்றிக் கொண்டு, எங்களை கஸ்டம் ஆபீசு, டாக்டர் சோதனை, சாமான் சோதனை முதலியவைகளை நடத்திக் கொடுத்து ‘அக்ராப்போல்’ என்கின்ற ஒரு ஓட்டலில் கூட்டிக் கொண்டு வந்து இரவு 12 மணிக்கு விட்டான்.

இங்கு ஓட்டல் என்பது தங்குமிடம் மட்டுந்தான். அதாவது ஒரு அறையில் சாமான் வைத்து படுத்துக் கொள்ளலாம். கட்டில், நாற்காலி, மேஜை உண்டு. சாப்பாட்டுக்கு வேறு ஏற்பாடுதான் செய்து கொள்ள வேண்டும். இந்த ஓட்டலில் நாள் 1க்கு 3 பேருக்கும் தங்குவதற்கு தினம் 3 ரூ. வீதம் பேசி ஒரு வாரம் இருந்தோம். சாப்பாடு சொந்தத்தில் செய்து கொண்டோம். வழிகாட்டி 7 ரூபாய் வாங்கிவிட்டான். வழிகாட்டிகளின் கஷ்டத்தைத் தவிர வேறு கஷ்டமில்லை. பாஷை தெரியாதவர்கள் இந்த கஷ்டம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

போர்ட்சைட் ஊரானது சூயசைப் போலவே புதிதாக உண்டாக்கப்பட்ட சிறிய பட்டணம் 3 புறமும் தண்ணீர் சூழ்ந்தது. இங்குள்ள மக்கள் பெரும் பாலும் எகிப்தியர்கள். அநேகமாக 100க்கு 90 பேர் இஸ்லாம் மதக்காரர்கள் மற்ற பல தேசத்தாரும் இங்கு இருக்கிறார்கள். துறைமுகம் என்பதைத் தவிர இதற்கு வேறு பெருமை கிடையாதானாலும் பெரிய பெரிய ஷாப்புகளும், அலங்கார சாமான் கடைகளும் தாராளமாய் உண்டு. சரி பகுதி காப்பிக் கடைகள் இருக்கும். சாமான்கள் நிலவரமெல்லாம் நமது ஊர்களிலுள்ளது போலவேயொழிய அதிகமில்லை. ஆனால் கடைகளில் சாப்பிட்டால் செலவு அதிகம். ஜனங்கள் பார்வைக்கு வெள்ளைக் காரர்களை போலவே இருக்கிறார்கள்.   எகிப்திய இஸ்லாம் பெண்களுக்கும், ஐரோப்பிய பெண்களுக்கும் வித்தி யாசம் கண்டு பிடிப்பது கடினம். 

கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கூட அடையாள வித்தியாசம் கிடையாது. 3ல் 2 பாகம் பெண்கள் ஐரோப்பிய உடையுடனும் தொப்பிகளுடனுமே திரிகிறார்கள். ஆண்கள் எல்லாம் ஐரோப்பிய உடைதான், சில ஏழைக் குடும்பப்பெண்களும், சில கிராமக் குடும்ப பெண்களும் மாத்திரம் உள்ளே ஐரோப்பிய உடை அணிந்து மேலே கருப்புத் துணியினால் போர்த்துக் கொண்டு வாய் மாத்திரம் மறையும் படி ஒருவித வலை துணிகட்டிக் கொள்ளுகிறார்கள். (நெற்றி, கண், மூக்கு எல்லாம் தெரியும்) 

ஆண்கள் ஐரோப்பிய உடையுடன் சிலர் ஐரோப்பிய தொப்பியும் துருக்கி தொப்பியுமணிகிறார்கள். தாடி என்பது கிடையவே கிடையாது. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் இங்கு அடையாளம் கண்டு பிடிக்கவே முடியாது. இந்த ஊர் ஜனங்கள் எல்லோருக்கும் இந்த துறைமுகத்திற்கு வந்து போகும் பிரயாணக்காரர்களால்தான் வியாபாரமும் பிழைப்பும் நடக்க வேண்டியதே தவிர வேறில்லை. எகிப்திய இஸ்லாம் பெண்களின் டேன்சு தினமும் நடக்கும். பலர் உடம்பெல்லாம் பலவித பச்சைகுத்திக் கொள்ளுகிறார்கள்.

கெய்ரோ

போர்ட் சைட்டில் ஒரு வாரம் இருந்து விட்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி காலை 8 மணிக்கு கெய்ரோவுக்குப் புறப்பட்டு ரயிலேறி 5-ந் தேதி பகல் 1 மணிக்கு கெய்ரோவுக்கு வந்தோம்.  150 மயில் தூரம் 3 வது வகுப்புக்கு மயிலுக்கு அரை அணா ரயில் சார்ஜ் விகிதம் ரயில் வண்டிகள் எல்லாம்                      S.I.R சின்ன வண்டிகளில் இரண்டு, இரண்டு பேருக்கு பெஞ்சிகள் இருப்பது போலவே எல்லா வண்டிகளிலும் இருக்கின்றது. வண்டிகள் எல்லாம் பெரிய வண்டிகள்.  முதல் வண்டியிலிருந்து கடைசி வண்டி வரை வண்டி நடுவில் நடந்து போகலாம். கெய்ரோ பட்டணமானது ஆப்பிரிக்கா தேசத்திலேயே பெரிய பட்டணமாகும்.

இதில் 10 லட்சம் ஜனங்கள் வசிக்கிறார்கள். இது ஈஜிப்ட் (எகிப்திய) தேசத்தின் தலைநகரமுமாகும். எகிப்திய தேசம் என்பது உலகத்தில் உள்ள பழமையான தேசங்களிலெல்லாம் மிகப் பழமையானது. நாகரிகங்க ளிலும் எகிப்திய நாகரிகமே மிகப் பழமையானது. இது உலகுக்கு மத்திய தேசமுமாகும், இவ்விடத்திய சீதோஷ்ண நிலை குளிர் காலத்தில் பெங்களூரைப்போலவும் வெய்யில் காலத்தில் நமது ஊர்களைப் போலவும் இருக்கும். இங்குள்ள மலைகள் அநேகமாய் மணல் மலைகளேயாகும். நிலங்கள் பெரும்பாகம் வெரும் மணல் பூமிகளாகவே இருக்கும்.

கெய்ரோவில் ஒரு பெரிய நதி ஓடுகின்றது. அதற்குப் பெயர் நைல் (Nile) நதி என்று பெயர். இது உலகத்திலேயே பெரிய நதியாகும். இதன் நீளம் 3500 மைல். இதில் கப்பல்கள் தாராளமாகப் போகின்றன. இதற்கு பல வாய்க்கால்களும் தாராளமாகப் பாசனங்களும் உண்டு. இங்கு மழை என்பதே கிடையாது. ஒட்டகம், குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகியவைகளால்தான் எல்லா வேலையும் செய்யப்படுகின்றது. பசுமாடு பால்கரக்கவும், காளை மாடுகள் சாப்பிடவும் தான் பயன்படுகின்றன. உருளைக் கிழங்கு, முட்டை கோஸ் முதலிய குளிர் தேசக் காய்கரிகளே தான் அதிகம். எல்லோரும் கோதுமை ரொட்டியும் சப்பாத்தியும் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்.  உடை விஷயங்கள் நம் ஊர் உடைகளைவிட அதிகம் தேவை இருக்கிறதுடன் அதிகமாகவே உபயோகிக்கிறார்கள். அவற்றின் விலைகள் எல்லாம் நமது பக்கத்தை விட நயமாகவே இருக்கின்றன.

பொதுவாக கிராமங்கள் எல்லாம் மண் சுவர் வீடுகளாகவும் மேற் கூரைகள் எல்லாம் மரம் போட்டு பலகை போட்டு மண்பரப்பியதாகவுமே இருக்கின்றன. மழை இல்லாததால் கூரையைப் பற்றி இவர்கள் கவலைப் படுவதில்லை. பட்டணங்களில் வீடுகள் 3, 4, 5, 6, 7 மாடி வரையில் இருக் கின்றன. 3, 4 மாடிகளே அதிகம். பொதுவாகப் பம்பாய்க் கட்டடங்கள் போலவே காணப்படும்.

நிற்க, நான் இதுவரை எனது உடைகளை மாற்றிக் கொள்ள வில்லை. தலைக்கு மாத்திரம் ஒரு கம்பளி குளிர் (மங்கி கேப்) குல்லாய் போட்டுக் கொண்டேன். ஆகாரம் ரொட்டி, முட்டை, காப்பி இவைகள்தான் முக்கியமாய் உபயோகிக்கிறேன். முட்டை இவ்விடம் மிக மலிவு. 2 அணாவுக்கு 5 முட்டை கிடைக்கின்றது.

இந்தப் பக்கத்துக்காரர்களுக்கு நான் ஒருவனே தாடி வைத்தவனாகவும், ஒரு புதுமாதிரி மனிதனாயும் காணப்படுவதால் யாரும் குறிப்பாய்ப் பார்ப்பதும் மற்றும் மரியாதை செய்வதுமாய் இருக்கிறார்கள். கூடுமான வரையில் ஜனங்கள் நமது ஜனங்களை விட நல்ல குணமுள்ளவர் களாகவும், விவேகிகளாகவும் இருக்கிறார்கள்.

இந்தியன் என்றால் மிகப்பிரியமாய்ப் பேசுகிறார்கள். ஐரோப்பியரிடம் வெருப்பாய் இருக்கிறார்கள். இவ்விடத்திய பெண்கள் மிகவும் சுரு சுருப்பாகவும், சுதந்திர உணர்ச்சியும், தைரியமும், துணிவும் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகள் சிறுவர்கள் ஆகியவர்களுக்கு நமது பக்கத்திய குழந்தைகளை விட அதிக புத்தியும், சுதந்திர உணர்ச்சியும் துணிவும் இருக்கின்றன. மற்ற அரசியல் மதவியல் சம்மந்தமான விஷயங்கள் பின்னால் எழுதுகிறேன். இன்னும் இரண்டு மூன்று தினத்தில் ‘ஏதன்சுக்கு’ (கிரீக் தேசம்) போவோம்.

குடி அரசு - பயணக் கடிதம் - 07.02.1932

பதிவு : வாலாசாவல்லவன்

Friday, February 11, 2022

பெரியார் - அ.மார்க்ஸ்

பெரியார் தலித்துகள் முஸ்லிம்கள் தமிழ்த் தேசியர்கள் - அ. மார்க்ஸ் - அடையாளம் வெளியீடு - பக்கங்கள் 175 - விலை ரூ 160/

●  பேராசிரியர் அ. மார்க்ஸ், மார்க்சிய சிந்தனையாளர். மனித உரிமை போராளி. மார்க்சியம், பெரியாரியம், பௌத்தம், கல்வி, இலக்கியம் என பல்வேறு தளங்களில் செயல்படுபவர். சென்ற முப்பதாண்டுகளுக்கு முன்பு, பெரியார் குறித்த அவதூறுகளை தமிழ் தேசியர்களில் சிலரும், தலித் எழுத்தாளர்களில் ஒரு சிலரும் முன் வைத்த போது, அவற்றின் பொய்மைகளை உடனுக்குடன் தனது பதில் கட்டுரைகளால்  தோலுரித்தவர். அந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல் !

● மார்க்ஸின் இந்த கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு காலங்களில் எழுதப்பட்டது. 

பெரியார் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரியா | பெரியாரும் தலித்துகளும் | பெரியாரும் அயோத்திதாசரும் | பெரியாரும் முஸ்லிம்களும் | திருமணம் குறித்து பெரியார் | கற்பு குறித்து பெரியார் | பெரியாரும் தமிழ்த் தேசியரும் | என்ற பல கட்டுரைகள்.

●  இந்த கட்டுரைகளில் மார்க்ஸ் மிகவும் சிரத்தையுடன் ஆதாரங்களோடு, அவதூறுகளுக்கான பதிலடியை தந்துள்ளார். இந்த நூலில் முக்கியமாக பெரியார் தலித்கள் பற்றியும், பவுத்தம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தரப்பட்ட தகவல்கள் வேறு யாரும் இந்த அளவிற்கு சிரத்தையோடு பகிர்ந்தளிக்க வில்லை. அதனாலேயே இந்த நூல் பெரியாரியத்துக்கான பங்களிப்பாக உள்ளது. 

நூலிலிருந்து சில வரலாற்று தகவல்களை காண்போம் :

●  பெரியார் தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் மாநாடுகள் நடத்தி தலித் பிரச்சினைகளை நோக்கி, மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

" பறையருக்கு மேலாக இருந்தால் போதும் என நினைக்காதீர்கள் ! தீண்டாமையை கைவிடாமல் உங்கள் சாதி இழிவு ஒழியும் என நினைக்காதீர்கள் ! " .... என பிற்படுத்தப்பட்ட மக்களை பார்த்து கடிந்து கொண்டார் !

●  "  உயர் சாதி எனச் சொல்லிக் கொண்டு எவன் குறுக்கே வந்தாலும், பாம்பை அடிப்பது போல அடியுங்கள் ! " .... என தாழ்த்தப்பட்ட மக்களை ஊக்குவித்தார் ! வெறும் பேச்சோடு நிற்காமல், தீண்டாமைக்கு எதிராக போராடி, சிறைக்கும் சென்றார் !

●  இந்துத்துவாவும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் போன்ற வலது சாரி, பிற்போக்கு சக்திகளும், கையில் எடுக்க முடியாத ஒரு நெருப்புத் துண்டு - பெரியார் ! யாரை நெருங்கினாலும் பெரியாரை நெருங்க முடியாது ! புத்தரை நெருங்கி, புத்த மதத்தை துரத்தி விட்டார்கள் ! அம்பேத்கரை வணங்கி தங்களவராக்க தொடர் முயற்சியில் உள்ளார்கள் !

●   ஆனால் பெரியாரோ - மக்களிடம் உரையாடி, பேசிப்பேசி, பேசியதை எழுதி, எழுதியதை நூல்களாக்கி, பிரசுரித்து, பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக எழுதி, பாதுகாத்து வைத்து விட்டார் தன் கொள்கைகளை ! 

அதனால் தான் பெரியாரை அவதூறு செய்யவும் இயலவில்லை ! அபகரித்து அழிக்கவும் இயலவில்லை !

●  ' பவுத்தம் ஒரு மதமல்ல, புத்தர் ஒரு கடவுளல்ல ' ..என 15.05.1957 அன்று சென்னை மகாபோதி கழகத்தில் நடந்த - 2501 ம் ஆண்டு புத்தர் விழாவில், பெரியார் ஆற்றிய தலைமையுரை மிகச் சிறப்பான ஒன்று ! புத்தர் பற்றியும் இந்து மத அவலம் பற்றியும் இவ்வளவு எளிமையாக பெரியாரால் மட்டுமே விளக்கம் தர முடியும் !

●  " புத்தர் - மகானோ, ரிஷியோ அல்ல ! இந்த தன்மையையே எதிர்த்தவர் புத்தர் ! அந்த காரணத்தினால்தான் இன்று நாம் அவரை கொண்டாடுகிறோம் ! பவுத்தம் என்பது ஒரு மதமல்ல ! ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும் ! மோட்சம் நரகம் வேண்டும் ! ஆத்மா, பாவ புண்ணியம் அதற்கான தண்டனை இவையெல்லாம் வேண்டும் ! "...

●  " இன்னும் சிறந்த மதத்திற்கு ஒரு கடவுள் போதாது ! அவற்றிற்கு பொண்டாட்டி, பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி இவை எல்லாம் வேண்டும் ! இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும் ! ஆனால் புத்தரோ - முதலில், கடவுளைப் பற்றி கவலைப் படவேண்டாம், மனிதனைப் பற்றி கவலைப்படு என்று சொல்லி விட்டார் ! மோட்சம் நரகம் இல்லை, ஒழுக்கம் தான் முக்கியமென்று சொல்லி விட்டார் ! இன்னும் அறிவுதான் முக்கியமென சொல்லி விட்டார் ! புத்தியானவர் அதனால் தான் அவர் புத்தர் ! " ....பெரியாரின் தெளிவான சிந்தனைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு !

●  நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரே முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல் தலைவர் - பெரியார் ஒருவர் தான் ! புத்தரைப் பற்றி பேசியது போல முகமது நபியைப் பற்றியும் அவரது கருத்துக்கள் சிறப்பானவை !

"  முகமது நபியை பற்றி யார் எப்படி எடுத்துக் கொண்டாலும், நான் அவரை ஒரு மனிதர் என்றும்  நம்மை போல இயற்கையாக பிறந்தவர் என்றும் கருதித்தான், அவரைப்பற்றிய விஷயங்களை நான் புகழ்கிறேன் ! "..என தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். 

●  பெரியார் இஸ்லாம் மதக் கொள்கைகளை முழுவதும் ஒப்புக் கொண்டதாகவோ, அவைகளை சுயமரியாதை கொள்கைகள் என்று அவர் எப்போதும் பேசியதில்லை . அந்த மதத்திலுள்ள மூடநம்பிக்கைகளான - சமாதி வணக்கங்கள், சந்தனக்கூடு, கூண்டு உற்சவம், கொடி வணக்கம், அல்லாசாமி பண்டிகை ஆகியவற்றை பலமுறை கண்டித்துள்ளார்.  இந்து மதத்திலுள்ள தீண்டாமை ஒழிய -    '  நீங்கள் 5 மணிக்கு இஸ்லாமிற்கு மாறினால் - 5.30 மணிக்கே உங்களது தீண்டாமை ஒழிந்து விடும் ' .. என்றளவில் பெரியார் பேசி, இஸ்லாமை ஆதரித்தார் !

●  தற்போது கூட பர்தா அணியும் விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது சம்பந்தமாக பெரியாரின் கருத்துக்களை பாருங்கள். 

"  முகமதிய மதத்தில் கோஷாமுறை, மதச்சின்னம், கடவுள் போன்ற பல கெடுதிகள் இருக்கலாம். அப்படியெல்லாம் கூட நாத்திகர்களுக்கும், பெண்ணுரிமை வாதிகளுக்கும் வேண்டுமானால் இவைகள் வேண்டாத தாக இருக்கலாம் ! ஆனால் தீயர்கள், புலையர்கள், பறையர்கள், நாடோடிகள் என நாயிலும் கேவலமாக இந்து மதத்தால் கருதப்படும் மக்களுக்கு, அதில் என்ன குறைகாண முடியும் ? " ...சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பே பெரியாரின் செயல் திட்டங்களில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும் ! அவைகளை சிறப்பாக விளக்கம் நூல் இது !

●  பெரியாரியலுக்கு, பேராசிரியர் மார்க்ஸ் எழுதிய இந்த படைப்பு - 

அணிகலமாகவும் இருக்கிறது !

ஆயுதமாகவும் இருக்கிறது !

பொ. நாகராஜன். சென்னை. 11.02.2022.

********************************************

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி கவியரசு கண்ணதாசன்

 செம்பொன் மணியாரத்தொடு

          செல்வம் பல தரலாம்

  தம்பிப் படை யாவும் பல

          தங்கத் திரள் தரலாம்

 நம்பித் தமிழ் முறைபாடிடும்

         நலமே நிறை அண்ணன்

தெம்புக்கது குறைவே-அவர்

         திறனுக்கது சிறிதே

- அண்ணா குறித்து கண்ணதாசன் எழுதியது

திராவிடன் - முதல் இதழ்

 'திராவிடன்'

‘திராவிடன்’ தினசரி இதழ் சென்னையி லிருந்து சவுத் இந்தியன் பீபில்ஸ் அசோசியேஷன்ஸ் (தென்னிந்தி மகாஜன சபை) சார்பில் (பிங்கல வருடம் வைகாசி மாதம் 19 ஆம் தேதி) 1917 ஜுன் முதல் வெளிவந்தது.

இவ்விதழின் வெளியிடுவோர் பகுதியில் Printed & published by Rao Bahadur P.Thiagaraya Chetty for the Indian Peoples Association Ltd at the Justice Printing Works. 16A Mount Road, Madras என்று காணப்படுகிறது. 

இப்பத்திரிகை வருவதற்கு முன்னால், நீதிக்கட்சி தோன்றிய 1916 நவம்பர் 20 முதல் ‘ஜஸ்டிஸ்’ என்னும் பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளிவந்து கொண்டிருந்தது. திராவிடன் தோன்றிய நாளிலேயே ‘ஆந்திரப் பிரகாசினி’ என்ற பெயரில் தெலுங்குப் பத்திரிகை ஒன்றும் வெளிவந்தது.

இப்பத்திரிகைகளை நடத்துவதற்கு South Indian Peoples Association  என்னும் பெயரில் கம்பெனி ஒன்று நிறுவப்பட்டு ரூ 100 வீதம் 1000 வாங்கப்பட்டன. அரசியல் விவகாரங்களைத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் South Indian Liberal Federation-SILF) கவனித்து வந்தது. இதுவே ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்டி என அழைக்கப்பட்டது. தமிழில் நீதிக் கட்சி எனக் கூறப்பட்டது.

திராவிடன் பத்திரிகைக்கு ஆசிரியராக பக்தவத்சலம் பிள்ளை பி.ஏ. அவர்களும், துணை ஆசிரியர்களாக சுவாமி மிருத்ர கோடீஸ் வரரும் பண்டித வில்வபதி செட்டியாரும் நியமிக்கப்பட்டனர். ஆந்திரப் பிரகாசினிக்கு ஆசிரியராக ஏ.சி.பார்த்தசாரதி நாயுடு அவர்களும் துணை ஆசிரியர்களாக பண்டித கானாலா ராகவைய நாயுடுவும் நரசிம்ம ராவ் நாயுடும் நியமிக்கப்பட்டனர்.

‘ஜஸ்டிஸ்’ ஆங்கிலப் பத்திரிகை தொடங்கியபோது கருணாகர மேனனை ஆசிரியராக ஏற்பாடு செய்திருந்தனர். பத்திரிகை வெளிவர ஆறுநாட்கள் இருக்கும் போது பெசண்டு அம்மையார், சர்.பி.இராமசாமி அய்யர், கேசவபிள்ளை ஆகியோர் தூண்டுதலால் அவர் அப்பொறுப்பை ஏற்க மறுத்தார். பத்திரிகைத் தொழிலிலும் ‘புலமை’ உடைய டி.எம்.நாயரே கௌரவ ஆசிரயராக ஆனார். ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ ஆசிரியர் பி.என்.இராமன் பிள்ளை துணை ஆசிரியராக ஆனார். பின்னர் சர்.பிட்டி தியாகராய செட்டியாரும், ஏ.இராமசாமி முதலியாரும், எ.ஏ.வி. நாதனும் ஆசிரியராக விளங்கினார்கள்.

திராவிடன் நாளிதழுக்கு அப்பெயர் சூட்டப்பட்ட காரணத்தைப் பிற்காலத்தில் அந்நாளிதழின் ஆசிரியர்களுள் ஒருவராகத் திகழ்ந்த பண்டிதர் எஸ்.எஸ். அருணகிரிநாதர் விவரிக்கிறார்:

‘சுமார் இரண்டு மூன்று நாட்கள் டாக்டர் நாயரும் மற்றத் தலைவர்களும் கூடி யோசித்த பின்னரே தமிழ் நாளிதழுக்குத் ‘திராவிடன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

பிராமணரல்லாதாராகிய எல்லா சாதி வகுப்பாரையும் ஒரே குறியீட்டுப்  பெயரால் அழைத்து வரும்படியான வழக்கம் ஏற்பட வேண்டும். அக்குறியீட் டுப் பெயரால் அவர்களுடைய இன உணர்ச்சியை எழுப்பிவிட வேண்டும் என்ற விருப்பமே எல்லாருடைய பேச்சிலும் தெரிவிக்கப் பட்டது. அப்பெயரே ஏற்கப்பட்டது’.

இக்குறிப்பை திரு. குமார சாமி தம் தியாகராயர் பற்றிய நூலில் எழுதி உள்ளார்.

...

‘திராவிடன்’ தான் தோன்றிய தன் நோக்கத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

‘நமது தேச அபிவிர்த்தியைக் கோரி உழைக்கவும், பிராமண ரல்லாத இந்துக்களுக்கு உள்ள குறைகளை அவ்வப்போது எடுத்துக் காட்டி வரவும் ‘சவுத் இந்தியன் பீபில்ஸ் அசோசியேசன்ஸ் லிமிடெட்’ என்னும்  கம்பெனியரால் ஜஸ்டிஸ் என்னும் ஆங்கில தினசரிப் பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறதென்பது அனைவரும் அறிந்த விஷயமே. மேற்கூறிய நோக்கங்களோடே நிகழும் 1917 வருடம் ஜுன் மாதம் 1 தேதியிலிருந்து தமிழ் தினசரிப் பத்திரிகை ஒன்றும் மேற்படி கம்பெனியரால் பிரசுரிக்கப்பட்டு வரும் இந்தக் கம்பெனியின் அரிய பெரிய நோக்கங்கள் யாவும் அதனால் பிரசுரிக் கப்பட்ட விஞ்ஞாபனத்தால் நன்கு விளங்கும்.

இத்தமிழ் தினசரிப் பத்திரிகையில் ராஜிய விஷயங்கள், விவசாய சமாசாரங்கள், வித்யா சம்பந்தமான சங்கதிகள், யுத்தங்கள் சம்பந்தமானவும், இதர விஷயங்கள் சம்பந்தமானவுமான சமா சாரங்கள், ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பொது சங்கதிகள், மனதைக் களிப்பிக்கும் மாண்புள்ள கதைகள் சம்பாஷணைகள் முதலிய பல பல விஷயங்களும் தக்க வித்வான்களால் எழுதப்பட்டு வரும். நமது தமிழ் நாட்டா ரொவ்வருவரும் இதை வாங்கி வாசித்து நமது நோக்கங்களை முன்னுக்குக் கொண்டு வர முயலுவார்களென நம்புகிறோம்.’ (நன்றி: இளந்தமிழன்)