Tuesday, July 13, 2021

முதல் விதவைத் திருமணம் பற்றி பெரியார் ஆற்றிய உரை

 பெரியார் ஆற்றிய உரை...


தம் குடும்பத்தில் தாமே நடத்திய விதவைத் திருமணம் பற்றிய பெரியார் உரை .....


என் குடும்பத்தில் 1909 இல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எனது தங்கைக்கு (பொன்னுத்தாய்) ஒரு பெண் இருந்தது. அதற்கு ஒன்பது வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள்.


கல்யாணம் ஆகி 30 ஆம் நாள் நடைபெறும் சடங்கான தாலி மாற்றல் சடங்கு செய்வதற்காக ஏற்பாடு நடந்தது. அன்று மாப்பிள்ளைக்கு 2,3 தடவை திடீரென்று வயிற்றுப் போக்கு போயிற்று. சரி! பிள்ளையாண்டான் பலகாரம் அதிகமாய்ச் சாப்பிட்டிருப்பான், சரியாய்ப் போய்விடும் என்று இருந்து விட்டார்கள். அது 7, 8 தடவை என்றாகி கடைசியில் அது காலரா (பேதி)  என்ற நிலைக்கு வந்துவிட்டது. அப்புறம் என்னென்னவோ செய்தும் பயன் இல்லை. 12 வயதுள்ள மாப்பிள்ளை இறந்து போனான்.


பிறகு இரண்டு மூன்று வரு­ங் கழித்து அந்த பெண் பெரிய மனு´யாகி விட்டது.


உடனே மறுமணத்துக்கு ஏற்பாடு செய்து கடைசியாக ஒரு பையனைப் பார்த்து முடிவு செய்தேன். வெளியில் யாரிடமும் கூறவில்லை. எனக்கு இயற்கையாகவே சிறிது தைரியம் உண்டு.


ஒரு வேலை செய்தேன். நான் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஊரில் இருந்த கொண்டேன்.

என் மைத்துனர், பெண், நம்பிக்கையுள்ள ஒரு அம்மை ஆகிய மூவரையும் சிதம்பரத்தில் நடைபெறும் ஆருத்திரா தரிசனத்தை பார்ப்பதற்கென்று சிதம்பரம் அனுப்பிவிட்டேன்.


பையனைப் பட்டணத்தில் அச்சாபீஸ் சாமான்கள் வாங்குவதற்காக என்ற இந்தப் பக்கம் சொல்லி அனுப்பிவிட்டேன்.


சாமானை வாங்கிக் கொண்டு சிதம்பரம் வந்துவிட வேண்டுமென்று ஏற்பாடு.


சிதம்பரத்தில் ஒரு நாயுடு இன்ஸ்பெக்டர்-எனக்கு மிகவும் வேண்டியவர். அவரிடம் அனுப்பி வைத்தேன். அவரிடம் போய், இராமசாமி அனுப்பி வைத்தான் என்று கூறி வி­யத்தைக் கூறியவுடன், அவர் மிக்க மகிழ்ச்சியோடு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 


அவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதலால் பெரிய மனு­ர்கள் பலர் வந்தனர். அவர்களது இல்லத்திலேயே திருமணம் முடிந்தது. பிறகு எனக்குத் தந்தி வந்தது. ‘எங்களின் யாத்திரை சரியா நடந்து போயிற்று’ என்று.

கல்யாணம் ஆன இரண்டாம் நாள் செய்தி வெளியில் தெரிந்து போயிற்று. நான் ரயிலில் வரவேற்கப் போனேன். எனது அப்பா அழாக் குறையாய் ‘அவமானம் வந்து விட்டதே’ எனத் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்கள். அம்மாவோ தூக்கில் தொங்கவே போய் விட்டார்கள்.


ஊரில் பலர் கூடினார்கள். ஒரு மனதாக சாதி நீக்கம் செய்து விட்டார்கள்.


நாங்கள் மூன்று வீட்டாரும் நீக்கப்பட்ட ஆறு வரு­ம் வரை சாதியி லிருந்து தள்ளப்பட்டு (உறவினர் விலக்கம்) இருந்தோம்.


பிறகு சேர்மன் தேர்தல் வந்தது. நான் நின்று தேர்தலில் ஜெயித்தேன். ஒவ்வொரு சமுகத்தாரும் சீர் கொண்டு வந்து என்னைப் பார்த்துச் சென்றனர்.


ஓரிருவர், ‘என்ன’ நம்முடைய சாதியில் ஒருவன் சேர்மனாக வந்திருக்கிறான், ஊரில் உள்ள மற்ற சாதியார்கள் எல்லாம் சீர் கொண்டு வருகிறார்கள். நாம் சும்மா இருப்பதா? என்று கிளம்பி விட்டனர்.


எது எப்படியோ சூடு பிடித்து கடைசியில் என்னை பார்ப்பதற்கு என்று வந்தார்கள். முதல் நாளே வருவதாக சொல்லியனுப்பி இருந்தார்கள். சரி சரி வரட்டும். என்ன செய்கிறார்களோ பார்ப்போம் என்று ஒரு அண்டா நிறைய காப்பி போட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள். 


அவர்கள் மேளம் வைத்துக் கொண்டு, 7, 8 ரூபாயில் ஒரு (பட்டு) வேட்டியும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். உட்கார்ந்து பேச ஆரம்பித்தவுடன், நாகம்மையார் டம்பளரில் காபியை ஊற்றி ஆள் மூலம் அனுப்பினார்கள். பார்த்தார்கள். சரி என்று இரண்டு மூன்று பேர்கள் வாங்கிச் சாப்பிட்டனர். அவ்வளவுதான். எல்லோரும் மடமடவென்று தொடர்ந்து வாங்கிச் சாப்பிட்டார்கள். ஒரு அண்டா காப்பியும் தீர்ந்து இன்னொரு அண்டா போடும்படி ஆகிவிட்டது.

அன்று முதலே எங்களைத் தள்ளி வைத்தது போய்விட்டது. 


(விடுதலை, 7.4.1959).  (இளந்தமிழன், செப்டம்பர், 2005).

No comments: