Sunday, January 23, 2022

பெரியார் ஆனந்த விகடனுக்கான நேர்காணல்


இது எழுத்தாளர் #சாவியும் , #மணியனும் ஆனந்தவிகடனுக்காக எடுத்த நேர்காணல்

செய்தி , உதவி :

திருமதி Saroja Saroja Nagaikavin Nagaikavin.

                ☆☆☆☆☆

#பெரியார் #பேசுகிறார்

"சாவி"

+திருச்சி #பெரியார் #மாளிகைக்குள் காலடி எடுத்துவைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், ''ஐயா உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கனு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க'' என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.

+உள்ளே... கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த #பெரியாரைப் பார்த்ததும், ''வணக்கம் ஐயா!'' என்று கும்பிடுகிறோம்.

''வாங்க... வாங்க, ரொம்ப சந்தோசம்...'' எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே ''இப்படி உட்காருங்க'' என்கிறார்.

+சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். 

+அந்த முனைகள் இரண்டும் அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் கைகள் தாமாகவே அவற்றை இறுக்கிவிடுகின்றன. 

+நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, சிற்சில சமயங்களில் பலமாகக் குரைத்து வீட்டையே அதிரவைக்கிறது. 

+ #பெரியாரின் பேச்சு எதனாலும் தடைபடவே இல்லை.

''#ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.''

''தெரியுமே. #வாசன் #அவங்களை எனக்கு ரொம்பக் காலமாத் தெரியும். நான் ' #குடியரசு’ பத்திரிகை ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். 

+' #கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் என்கிட்டேதான் கதர் போர்டிலே #கிளார்க்கா இருந்தார். ரொம்ப #யோக்யமானவரு. கதர் போர்டு ஆட்டம் கொடுத்ததும், நான்தான் #திருவிக-வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன். 

+' #நவசக்தி’யிலே சேர்ந்து கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. அப்புறம்தான் விகடன்லே சேர்ந்துட்டார்.''

+'' #ராஜாஜியோடு தங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்போது?''

+''அதுவா? அந்தக் காலத்துலே ஈரோட்லே பி.வி. #நரசிம்மய்யர்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் சேர்மனா இருந்தப்போ, குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும். அந்த கேஸ் எல்லாம் அவருக்கு அனுப்புவேன். #யாருக்கு? #நரசிம்மய்யருக்கு. 

+நான் சேர்மனா வர்றது சில பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. 

+சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலெக்ஷன்ல #ஜெயிச்சதும் நேராப் போயி #சேர்ல #உட்கார்ந்துட #முடியாது. #கலெக்டர் சிபாரிசு செய்யணும்னு வெச்சிருந்தாங்க. 

+அந்தச் சமயத்துலே #சர் #பி. #ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியுமானதாலே, பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை #சேர்மனாக்கிட்டார்.''

+''ஆமாம். அந்த மாதிரி உங்களைப் பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் போட்ட ஆசாமி யார்?''

+'' #சீனிவாச #முதலின்னு ஒரு வக்கீல். ஒரு #நான்பிராமின் வக்கீலாயிருக்காரே, முன்னுக்குக் கொண்டாருவோம்னு நான்தான் அவரை முன்னுக்குக் கொண்டுவந்தேன். 

+ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டுவந்தார். 

+அப்ப #ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி ) சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார வக்கீல்னு சொல்வாங்க. 

+அதனாலே என்கிட்டே வர்ற கேஸெல்லாம் அவருக்கு அனுப்பிவைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வரப் போக இருந்தாரு. எங்க வூட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப #சேலத்துலே #சேர்மன்.''

+''எந்த வருஷம். அது?''

+'' *தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு (1919) ஞாபகம்...''

+'' #வரதராஜுலு #நாயுடு கேஸ் சம்பந்தமா அவர் மதுரைக்குப் போறப்ப நீங்களும் கூடப் போறது உண்டு இல்லையா?''

+''ஆமா; போயிருக்கேன். 'நீ சேர்மன் பதவியை விட்டுட்டு காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து பொதுப் பணி செய்யலாம்’னார். வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு விட்டுட்டேன். 

+அப்ப காங்கிரஸ் #சத்தியமூர்த்தி 'குரூப்’ கையிலே இருந்தது. அமிர்தசரஸ் காங்கிரஸின்போது காங்கிரஸ் பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப் பிரிஞ்சுட்டது. 

+சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், திலகர் இவங்க ஒரு 'குரூப்’... காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு 'குரூப்’.

+நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே அமிர்தசரஸ் காங்கிரஸுக்கு அப்புறம்தான். அதுவரைக்கும் ராஜகோபாலச்சாரியும் நானும் நண்பர்கள்தான். அப்புறம்தான் சேர்ந்து வேலை செஞ்சோம்.''

+''அதுக்கப்புறம் என்ன ஆச்சு?''

+''எங்க நட்பு வளர்ந்தது. காங்கிரஸும் வளர்ந்தது. எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். நான் கோவை ஜில்லா காங்கிரஸ் காரியதரிசி. அப்பவெல்லாம் செகரெட்டரிதான்; பிரசிடென்ட் கிடையாது. 

+தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வந்தது. அப்பவும் நான்தான் செகரெட்டரி.''

+''ஆமாம்; ராஜாஜி உங்களை எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?''

+'' #ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.''

+''உங்களோடு வேறு யாரும் இல்லையா?''

+''இருந்தாங்க... #திரு.வி.க-வும் #வரதராஜுலு நாயுடுவும் இருந்தாங்க. எங்க மூணு பேரையும்தான் எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே பேச விடுவாங்க. 

+வரதராஜுலு நாயுடு பேச்சில் #வசவு இருக்கும். 

திரு.வி.க. பேச்சு #தித்திப்பா இருக்கும். #நல்ல #தமிழ் பேசுவார். 

என் பேச்சில் #பாயின்ட் இருக்கும். பாயின்ட்டாப் பேசி #கன்வின்ஸ் பண்ணுவேன். 

+நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி எல்லாம் எழுந்து பேசுவாங்க...''

+''இந்த '#பிராமின் - #நான்பிராமின்’ தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?''

+''எப்படி வந்தது வினைன்னா - #வவேசு.#ஐயரால் வந்தது. சேரன்மாதேவியில் 'நேஷனல் காலேஜ்’னு ஒண்ணு ஆரம்பிச்சு, வீரர்களை உற்பத்தி செய்யப்போறதாச் சொன்னாங்க. 

+பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ அதுக்குப் பேர். அந்த #குருகுலத்துக்கு எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. 

+சிங்கப்பூர், மலேயாவில் இருந்தெல்லாம் பணம் வசூல் செஞ்சாங்க. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலேருந்தும் பணம் கேட்டாங்க. 

+நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செகரெட்டரி. ராஜாஜி 'நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். வ.வே.சு.ஐயர் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருபதாயிரம் வேணும்னார். 

+நான், 'முதல்லே பத்தாயிரம் இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு சொன்னேன். ராஜாஜி சரின்னுட்டார்.''

வ.வே.சு.ஐயர் அன்னிக்கு சாயந்திரமே பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்...''

+''பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங்களே...''

+''ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா, எனக்கென்னவோ சரியாப் படலே, அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட்டதுக்குத் தகுந்தாப்பலேயே காரியம் நடந்துட்டுதே!''

+''என்ன ஆச்சு?''

+''முதல் மந்திரியாயிருந்தாரே #ஓபிஆர். #ரெட்டியார்...''

+''ஆமாம்...''

+''அவர் #மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான். அடுத்த மாசமே அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். 'என்னடா?’னு கேட்டோம். 'குருகுலத்துலே #பார்ப்பனப் பிள்ளைங்களையும் #எங்களையும் #வித்தியாசமா நடத்துறாங்க. அவங்களுக்கு #இலைபோட்டு சாப்பாடு. எங்களுக்கு #பிளேட். 

+அவங்களுக்கு #உப்புமா, எங்களுக்கு 

#பழையசோறு. அவங்க #உள்ளே படுக்கணும். நாங்க #வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. எங்களுக்கு ஒரு பிரார்த்தனை’னான். 

+அவ்வளவுதான். #ஜாதிவேற்றுமையை வளர்க்கிற குருகுலத்துக்கு இனி பணம் கிடையாதுன்னுட்டேன். அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி ராஜகோபாலாச்சாரிக்குத் தெரியப்படுத்தினேன். 

+அவர் உடனே வ.வே.சு.ஐயரைக் கூப்பிட்டு விசாரிச்சாரு. 'என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா? தேசாபிமானமா? கொஞ்சம்கூட நல்லாயில்லே’னு கோபிச்சுக்கிட்டார்.''

+''வ.வே.சு.ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?''

+''என்ன சொன்னாரு! 'நான் என்ன செய்யட்டும்? குருகுலம் ஆரம்பிச்சிருக்கிற இடம் ஒரு #வைதீகசென்டர். அதனாலே அந்த இடத்துல அப்படி நடக்க வேண்டி வந்துட்டுது’னு சமாதானம் சொன்னார். 

+அப்ப ரெண்டு ஜாயின்ட் செகரெட்டரிங்க. கே.எஸ்.சுப்பிரமணியம்னு கடையத்துக்காரர் ஒருத்தர். அவர் ஒரு செகரெட்டரி. 

+வ.வே.சு.ஐயர், எனக்குத் தெரியாம அவர்கிட்டே போய் இன்னொரு ஐயாயிரத்துக்கு செக்கை வாங்கிட்டுப் போயிட்டார். 

+அதுக்குப் பின்னாலே ஒரு மாசம் கழிச்சுத்தான் இந்த சங்கதி அம்பலத்துக்கு வந்தது.''

+''கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?''

+''செகரெட்டரி டு சைன்’ங்கிறது ரெசல்யூஷன். கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால, அவர்கிட்டே #தந்திரமா கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டார்.''

+''அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு..?''

+''அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம்தான். அப்புறம் எங்கே போனாரோ? ஆசாமி திரும்பி வரலே.

ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் புரிஞ்சுபோச்சு, கோளாறு வந்துட்டுதுன்னு. 

+அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? அந்த விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு #சேரன்மாதேவி #குருகுலப் #போராட்டம்னு பேர். 

+டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு.வி.க. இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. வரதராஜுலு நாயுடுவே இந்தப் போராட்டத்தை நடத்தினார். குருகுலம் ஒழிஞ்சது.''

+''ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந்தாரா?''

+''சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க... #வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமா #வகுப்புஉணர்ச்சியைத் தூண்டுற மாதிரி நடந்துக்கிறார்னு அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். 

+எனக்கு அது சரியாப் படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல் ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு #ராஜாஜி #தீர்மானத்தைத் #தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார். என்.எஸ்.வரதாச்சாரி, சாமிநாத சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே.சந்தானம், ஹாலாஸ்யம் இவங்களெல்லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. 

+நான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டுது...''

(''க்ளிக்!'' - போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.

இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி, காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார்.

நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்)

+''சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?'' - இவ்வாறு நான் (சாவி) கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.

+''வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். #புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!'' -

(உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன)

+''அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு #ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? 

+கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. 

+அந்த #மோர், அந்தத் #தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?'' - சிரிக்கிறார் பெரியார்.

( இதற்குப் பின் பதிவு இல்லை).

ஒளிவுமறைவற்ற நடுநிலயான இந்தப்பதிவில் நுணுக்கமான செய்தி என்னவென்றால்.

1. பிராமணர்கள் பலர் பெரியாரின் நண்பர்கள்.

2. அவர் வெறுத்தது "பிராமணீயத்தை" பிராமணர்களை அல்ல.

3.பிராமணரல்லாதவர்கள் (சீனிவாச முதலி, கடையம் கே.எஸ் சுப்பிரமணியம் ) இவருக்கு எதிராகச் செயல்பட்டிருக்கின்றனர்.


+பெரியாரின் நேர்மையை வாழ்த்தி வணங்குவோம்.

No comments: