Tuesday, May 30, 2023

திருமாவளவன் பேச்சு

 தமிழக அரசியலில்,

தமிழ்த் தேசிய உணர்வை மேலோங்கச் செய்தவர் வைகோ!


தியாகிகள் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில், 

தொல்.திருமாவளவன் புகழ் ஆரம்! 


நான்கு பேரின் திருஉருவப் படங்களை, 

நாம் இங்கே திறந்து வைத்து இருக்கின்றோம். 

அந்தத் தியாகிகளுக்கு செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகின்றேன்.


காவிரி நீருக்காகவும், 

நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதற்காகவும் தம்முடைய உடலில் தீ வைத்து மாய்த்துக் கொண்டவர்கள் 

இந்த நால்வர். 


நாம் எல்லோரும் பிரச்சினைகளின் பின்னால் ஓடிக்கொண்டு இருக்கின்ற வேளையில், 

அந்தத் தியாகிகளை மறந்துவிடக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தோடு, 

தியாகிகளைப் போற்ற வேண்டும் என்ற மகத்தான மாண்பைக் கொண்ட அண்ணன் வைகோ அவர்கள், 

இந்தக் கொந்தளிப்பான சூழலிலும் 

நால்வரையும் நினைவு கூரக்கூடிய வகையில், 

அவர்களின் திருஉருவப்படங்களை திறந்து வைக்கின்ற நிகழ்வை ஒருங்கிணைத்து இருக்கின்றார். 


அதற்காக அண்ணன் வைகோ அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.


நெஞ்சு வலிக்கின்றது


சிவகாசி ரவி அவர்களும், அன்புச் சகோதரர் சரவண சுரேஷ் அவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தீவிரத் தொண்டர்கள். 


நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகவும் போராடிக் கொண்டு இருக்கின்ற அண்ணன் வைகோ அவர்களைத் 

தமிழகம் அங்கீகரிக்கவில்லையே? என்கின்ற ஆதங்கத்தில்,

தங்கள் உடலில் தீ வைத்துக் கொண்டார்கள்.


சிவகாசி ரவி கட்சித் தொண்டர். 

சரவண சுரேஷ் கட்சித் தொண்டர் என்பதையும் தாண்டி குடும்ப உறவினர். 


அவர்கள் தாம் தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கின்ற மகத்தான போராளிக்கு, 

இந்த மண்ணில், பொதுவாழ்வில் பொன்விழா கண்டு இருக்கின்ற மகத்தான தலைவருக்கு 

அரசியலில் உரிய இடம் கிடைக்கவில்லையே? என்று ஆதங்கப்படுகின்ற அளவுக்குத் தொண்டர்களுக்கு மன அழுத்தத்தைத் தந்திருக்கின்றது என்பதை அறிகின்றபோது 

நமக்கு நெஞ்சு வலிக்கின்றது.


ஈரோடு தருமலிங்கம், 

எந்தக் கட்சியையும் சாராத, பொம்மை விற்றுப் பிழைப்பு நடத்தக்கூடிய, 

வறுமையில் வாடுகின்ற ஒரு இளைஞன். 


அவன் தீ வைத்துத் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டான் என்கிறபோது, 

‘அய்யோ’ என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு எதுவும் நாம் செய்யாத நிலையில், 

அண்ணன் வைகோ அவர்கள், 

அந்த ஏழை வீட்டு இளைஞனை எண்ணி, 

அவன் தியாகத்தைப் போற்றக்கூடிய வகையில் இ

ங்கே அந்தத் தம்பியின் திருஉருவப் படத்தைத் 

திறந்து வைத்துச் சிறப்புச் சேர்த்து இருக்கின்றார்.


தியாகிகளைப் போற்றும் பண்பாளர்


தன்னுடைய கட்சித் தொண்டனுக்கு திருஉருவப் படத்தைத் திறந்து வைக்கின்ற கடமை என்கிற சடங்காக இதைச் செய்யாமல், 

காவிரி நீருக்காக உயிரை மாய்த்துக்கொண்டவர்களின் தியாகத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகப் படத்திறப்பு நடத்தி, 

பாடம் புகட்டக்கூடிய வகையில், 

எந்தக் கட்சியையும் சேராத தருமலிங்கத்தின் திருஉருவப் படத்தையும் திறந்து வைத்து இருக்கின்றார் அண்ணன் வைகோ. 


இதை எண்ணிப் பார்க்கின்றபோது, 

உள்ளபடியே பொது வாழ்க்கையில் இருக்கின்ற என்னைப்போன்றவர்களுக்கு உறுத்தலாக இருக்கின்றது. 


நம் ஒவ்வொருவருக்கும் அந்த உணர்ச்சி வந்திருக்க வேண்டும். 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அந்த இளைஞனின் தியாகத்தைப் போற்றி இருக்க வேண்டும்; 

திருஉருவப் படத்தைத் திறந்து வைத்து 

வீரவணக்கம் செலுத்தி இருக்க வேண்டும். 


அவன் எதை எதிர்பார்த்து இந்தத் தியாகத்தைச் செய்தான்? 


அவன் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நாம் உறுதி பூண வேண்டும் என்ற வகையில், 

அண்ணன் வைகோ அவர்கள் அந்த இளைஞனின் 

திருஉருவப் படத்தையும் திறந்து வைத்து இருக்கின்றார்கள்.


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 

அண்ணன் வைகோ அவர்கள் மீது தீராத காதல் கொண்டவன். 

அவரது உரைகளைக் கேட்கத் தவறுவது இல்லை. 

இளம் வயதிலும் அவனுக்கு அப்படி ஒரு ஈடுபாடு.


காவிரி நீருக்காக அண்ணன் வைகோ அவர்கள் நடத்துகின்ற தியாக வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டவன். 

அண்ணன் அவர்களின் இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும்; அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும்; 

ஆட்சியாளர்களின் கவனத்திற்கு இதை எடுத்துச்செல்ல வேண்டும் என்கிற நோக்கில், 

வாழ வேண்டிய இந்த இளம் பருவத்தில் 

தீ வைத்துக்கொண்டு தன்னைத் தானே 

மாய்த்துக்கொண்டு இருக்கின்றான். 


அவனது குடும்பம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குடும்பம் அல்ல என்றாலும், 

அண்ணன் வைகோ அவர்களின் பங்களிப்பில் தன்னைத் தீவிரமாக ஈடுபத்திக்கொண்ட இளைஞன் என்ற முறையில், 

இவருடைய உழைப்பு அவனைப் பாதித்து  இருக்கின்றது; 

தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 

அதனால் அவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கின்றான்.


எதற்காக இந்தக் கூட்டம்? 


நான்கு தியாகிகளின் திருஉருவப் படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம் என்று சொன்னால், 

அவர்கள் என்ன காரணங்களுக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, 

அந்தக் காரணங்களை நாம் அடை காக்க வேண்டும்; 

அதற்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என்ற உறுதிமொழியை எடுப்பதற்காக இங்கே நாம் கூடி இருக்கின்றோம்.


சிவகாசி ரவி அவர்களும், சரவண சுரேஷ் அவர்களும் 

காவிரி நீர் உரிமைக்காகவும், 

நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதற்கhகவும் தங்களுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்கள். 


அண்ணன் வைகோ அவர்களின் உழைப்பை, தியாகத்தைக் கொச்சைப்படுத்துகின்றார்கள், அவமதிக்கின்றார்கள் 

என்ற வேதனை இன்னொருபுறம் என்பது மிகவும் முக்கியக் காரணம் என்பதை மிகவும் வேதனையோடு பதிவு செய்கின்றேன்.


பொதுவாழ்வில் பொன்விழா கண்ட மகத்தான போராளி அண்ணன் வைகோ என்பதை  

எத்தனையோ மேடைகளில் நான் பதிவு செய்து இருக்கின்றேன். 


அவர் திராவிட முன்னேற்றக் கழகப் பாசறையில் வளர்ந்தவர்; கலைஞரின் அன்புத் தம்பியாக இருந்து களமாடியவர். 


அந்தக் காலத்தில் அவர் எந்தக் களத்தில், எந்த மூலையில் முழங்குவதாக இருந்தாலும் 

இளைஞர் பட்டாளம் ஈ மொய்ப்பதைப் போல் அவரைச் சூழ்ந்து கொள்ளும். 


அப்படிப்பட்ட இளைஞர்களுள் ஒரு மாணவனாக, 

நானும் அவருடைய உரைகளை நள்ளிரவு வரை கhத்திருந்து கேட்டவன்.


இன்றைக்கு 15, 20 வயது இருக்கக்கூடியவர்கள் சமூக வலைதளங்களில் அண்ணன் வைகோ அவர்களைக் கொச்சைப்படுத்துகின்றார்கள். 


அந்தத் தம்பிகளுக்கு நான் சொல்கின்றேன், 


அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டு இருக்கின்றார்கள். 

அதைப் படித்துப் பாருங்கள்.

ஈழத் தமிழர்களுக்காக நடத்திய போராட்டங்களை, 

அதில் புரட்டிப் பாருங்கள்.


தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டியவர் 


தமிழக அரசியலில் தமிழ்த் தேசிய உணர்வு இந்த அளவுக்கு மேலோங்குவதற்காக அவர் ஆற்றி இருக்கின்ற பங்கு எத்தகையது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். 


வெறும் அரசியல் ஆதாயத்திற்காக, 

மதவாதிகளைப் போல நாமும் வெறுப்பு அரசியலைக் கையாளக் கூடாது. 


ஒரு மனிதனை மதிப்பிடுவதற்கு 

மொழியோ, இனமோ, சாதியோ அளவீடு அல்ல. 

அவர்கள் உள்வாங்கி இருக்கின்ற கொள்கையும், ஆற்றுகிற பணிகளும்தான் அதற்கhன அளவுகோல். 


தமிழனாக இருந்தாலும், அவன் சாதியவாதி என்றால்,

 அவன் நம்முடைய எதிரி; 


தமிழனாக இருந்தாலும், அவன் மதவாதி என்றால், 

அவன் நம்முடைய எதிரி; 


தமிழனாக இருந்தாலும், அவன் ஊழல்வாதி என்றால், 

அவன் நம்முடைய எதிரி; 


தமிழனாக இருந்தாலும், அவனுக்கு மொழி உணர்வு, இன உணர்வு, 

ஈழ உணர்வு இல்லை என்றால், 

அவன் நம்டைய எதிரி.


ஆனால் அண்ணன் வைகோ அவர்கள் பேசிய பேச்சுகளும், கலந்துகொண்ட போராட்டங்களும், பணிகளும் 

தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 


கருத்துக்களில் விமர்சனங்கள் இருக்கலாம். 

ஆனால் அவரது பங்களிப்பையோ, உழைப்பையோ, தியாகத்தையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை 

இளம் தலைமுறையைச் சேர்ந்த தம்பிகளுக்கு 

நான் சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.


அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால், 

இந்த மண்ணில் நிலைபெற்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் எத்தனையோ பேர் தமிழின் வளர்ச்சிக்காக, 

இனத்தின் வளர்ச்சிக்காக இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காகப் பங்களித்து இருக்கின்றார்கள். 


அந்த அளவுகோலை வைத்தால், பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், கhர்ல் மார்க்ஸ் ஆகியோரை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியெல்லாம் அளவு கோல் வைப்பது அரசியல் அறியாமை. 

அது அளவுகோல் அல்ல, 

கொள்கைதான் அளவுகோல். 


வைகோ மூட்டிய தீ


ஸ்டெர்லைட் போராட்டம் இவ்வளவு பெரிய மக்கள் போராட்டமாக மாபெரும் புரட்சியாக வெடித்து இருக்கின்றது. 

இன்றைக்கு நாம் போராடுகின்றோம். 

திருமாவளவனாக இருந்தாலும், யாராக இருந்தாலும், 

22 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வே பொதுமக்களுக்கு இல்லாதபோது, 

களத்தில் நின்று போராடியவர் அண்ணன் வைகோ என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


நமக்கெல்லாம் ஸ்டெர்லைட்டைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாதபோது, 

அது எவ்வளவு பெரிய மோசமான நச்சு ஆலை என்பதை நாம் புரிந்துகொள்ள முடியாதபோது, 

அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களே அறிந்துகொள்ளாத காலகட்டத்தில், அந்த ஆலைக்கு அனுமதி வழங்கியபோதே

எதிர்த்துப் போராடிய ஒரு போராளி அண்ணன் வைகோ. 


அவர் மூட்டிய தீதான், 

இன்றைக்கு இந்திய நாட்டையே உலுக்கக் கூடிய அளவுக்கு, தூத்துக்குடியைத் திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு 

மாபெரும் ஊழித் தீயாக வளர்ந்து நிற்கின்றது.


ஆனால், 

அவர் போராடிய போது நமக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. 


ஸ்டெர்லைட் போராட்டம் இன்றைக்கு மாபெரும் மக்கள் போராட்டமாக நடந்துகொண்டு இருக்கின்றது. 

அன்றைக்கு அவர் தன்னந்தனி ஆளாக நின்று போராடினார். இன்றைக்குக் கொச்சைப்படுத்துபவர்களுக்கு, 

அன்றைய போராட்ட வரலாறு தெரியாது. விழிப்புணர்வு இல்லை.


நியூட்ரினோ திட்டத்தைப் பற்றி இன்றைக்கு நாம் படித்தும், போராட்டம் மூலமாகவும் தெரிந்து கொள்கின்றோம். 

எல்லோரும் சேர்ந்து போராடுகின்றோம்; 

குரல் கொடுக்கின்றோம். 


ஆனால் நியூட்ரினோ திட்டம் வரப்போகிறது என்று தெரிந்தவுடன், முதலில் ஒலித்த போர்க்குரல் 

அண்ணன் வைகோவின் குரல். 

யாரும் மறுத்து விட முடியாது.


ஸ்டெர்லைட்டும், நியூட்ரினோவும் வரக்கூடாது என்பதற்காக வெறுமனே வீதியில் நின்று ஊடகத்தினரைப் பார்த்து பேட்டிகொடுத்துவிட்டுப் போகாமல், 

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், 

சட்டப் போராட்டமும் நடத்தி வருகின்றார். 


நீதிமன்றங்களில் மணிக் கணக்கில் நின்று வாதாடி வருகின்றார். 


முதன் முதலில் இந்த ஆலையை மூடுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டது அண்ணன் வைகோதான். 


அனைத்து வகைகளில் இருந்தும் தாக்குதலைத் தொடுத்து இருக்கின்றார்.


இப்படிப்பட்ட ஒரு போராளியைக் கொச்சைப்படுத்துகின்றபோது, திருமாவளவனுக்கு நெஞ்சு பதறாமல் இருக்கலாம்,

சிவகாசி ரவிக்கு நெஞ்சு பதறாமல் இருக்குமா? 

சரவண சுரேசுக்கு நெஞ்சு பதறாமல் இருக்குமா? 


அரசியல் ஆதாயத்திற்காக, நமது தலைவரின் உழைப்பை அவர்கள் கொச்சைப் படுத்துகின்றார்களே,கேவலப்படுத்துகின்றார்களே என அவர்கள் நெஞ்சம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தால், 

பதைத்து இருந்தால், பதறி இருந்தால் 

இப்படிச் செய்து இருப்பார்கள்?


தீக்குளிப்பு ஒரு வகை தற்கொலை. 

தற்கொலை என்பது, ஒருவித மன உளைச்சலால் விளைவது. 

மன உளைச்சலுக்கு இப்படிப்பட்ட அவமானங்கள், அவமதிப்புகள், அவதூறுகள், இழிவுகள் காரணமாக இருக்கின்றன.


களப்போராளிகளின் முன்னோடி வைகோ


அண்ணன் வைகோ அவர்களை நாம் பாராட்ட வேண்டாம்; 

போற்ற வேண்டாம்; 

தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டாம். 

அவரது வயதுக்கும், உழைப்புக்கும், தியாகத்திற்கும் நாம் மதிப்பு அளிக்க வேண்டும். 


தமிழ்நாட்டின் நிலத்தடி நீரை எல்லாம் பாதிக்கச் செய்கிறது என்பதற்கhக  கருவேல மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று கோடாரியை எடுத்துச்சென்று 

முதலில் களத்தில் நின்றவர் அண்ணன் வைகோ. 


கருவேல மரத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகின்றது; 

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகின்றது இதனால் நீர்வளம் பாதிக்கப்படும் என்ற கவலையின் அடிப்படையில், 

தமிழ்நாட்டின் நலன்களுக்கhக, தமிழ் மண்ணின் நலன்களுக்காக 

நாம் எத்தனை பேர் அரிவாளைப் பிடித்தோம்? 

எத்தனை பேர் கோடாரி எடுத்தோம்?


தமிழ்த்தேசியம் பேசுவோருக்கு உந்து சக்தி


தமிழ்நாட்டு மக்களுக்காவும், தமிழ் ஈழ மக்களுக்காகவும் அண்ணன் வைகோ அவர்கள் ஆற்றி இருக்கின்ற பங்களிப்பை, சில மணித் துளிகளில் விவரித்து விட முடியாது. 


1980களின் தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழர்களுக்காக நடத்திய போராட்டங்கள், 

ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மனிதச் சங்கிலி அறப்போராட்டங்கள், அடுக்கடுக்கான மாநாடுகள் அனைத்துக்கும் முன் ஏர் ஓட்டக்கூடிய தலைவராக, 

கலைஞரின் தளபதியாக இருந்து களப்பணி ஆற்றியவர் 

அண்ணன் வைகோ என்பது தமிழ்நாட்டு வரலாறு.


தமிழ்த் தேசியம் பேசுகின்ற அத்துணைப் பேருக்கும் ஒரு உந்து சக்தியாக விளங்கியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


ஈழத்தமிழர்களுக்கhகத் தமிழகத்தில் எங்கhவது ஒரு போர்க்குரல் ஒலிக்கின்றது என்றால் அது அண்ணன் வைகோவின் குரல் என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.


கட்சியின் தலைமைக்கே ஆபத்து வரும் என்கிற அளவுக்கு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளோடு நெருக்கமாக இருந்தவர், விடுதலைப் புலிகள் தலைவரின் நெஞ்சம் நிறைந்தவராக விளங்கியவர் என்கின்ற அடிப்படையில், 

அண்ணன் வைகோ அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் 

எழுந்த காலம் உண்டு. 


அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி, 

எத்தனை முறை என்னை சிறையில் அடைத்தாலும், 

பொடாவில் தூக்கிப் போட்டாலும், தடாவில் தூக்கிப் போட்டாலும் நான் விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன் என்று

மேடைகளில் முழங்கியவர்.


இன்றைக்கு வந்திருக்கிற தம்பிகள், 

விடுதலைப் புலிகளின் வரலாறைக்கூட அறியாதவர்கள். 

அண்ணன் வைகோ அவர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்றபோது, 

உள்ளபடியே நான் வேதனைப்படுகிறேன். 


மேடைக்காக நான் பேசவில்லை, 

வக்காலத்து வாங்குவதற்காக நான் பேசவில்லை, 

முகஸ்துதிக்காகப் பேசவில்லை, 

அந்த அடிப்படையில் என் உரையை நீங்கள் மதிப்பீடு செய்யக்கூடாது. 

உண்மையைப் பேசுகின்றேன். அத்தகைய வரலாற்றுக்கு உரியவர் அண்ணன் வைகோ.

முன்னோடிகளைப் போற்றுவோம்

ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் விரக்தியின் அடிப்படையில் இன்றைக்குப் பல இளைஞர்கள் இப்படிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். 

நான் அடிக்கடி மேடையில் சொல்வேன், 

என் தந்தை படிக்காதவராக இருக்கலாம், 

என் தாய் படிக்கhதவராக இருக்கலாம், 

நான் படித்து விட்டேன் என்பதற்காக, 

அவர்களைப் பாமரர்கள் என்று ஒருபோதும் இழிவு செய்துவிட முடியாது. 

இந்த மண்ணுலகில் என்னை ஆளாக்கியவர்கள் அவர்கள்தான்.  அவர்களை நாம் மதிக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் ஆற்றிய பங்களிப்பில் இன்றைக்குக் குறைகள் இருக்கலாம், 

இன்றைய அரசியலில் வேறு வகையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அந்த மூத்தோரின் பங்களிப்பை, 

தியாகத்தைக் குறைத்து மதிப்பிடுவது, 

கொச்சைப்படுத்துவது அநாகரிகம். 

அண்ணன் வைகோ அவர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. 

யாரும் எந்தக் குறையும் சொல்லிவிட முடியாது. 

அவ்வளவு பெரிய தாக்கத்தைத் தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்தி இருக்கின்றார்.

தேர்தல் அரசியலில் வெற்றி வரும், தோல்வி வரும். அது வேறு. தேர்தல் அரசியலில் அடுக்கடுக்கhன தோல்விகளைச் சந்திக்கலாம். ஆனால் இந்தத் தோல்விகள் அவரது போர்க்குணத்தை எங்கhவது சிதைத்து இருக்கின்றதா? விரக்தியின் உச்சத்திற்குத் தள்ளி இருக்கின்றதா? எதற்கhக இந்த மக்களுக்குப் போராட வேண்டும் என்று என்றைக்கhவது ஓய்ந்து இருக்கின்றாரா? பின்வாங்கியிருக்கின்றாரா? சோர்ந்திருக்கின்றாரா? இல்லை. 

போராட்டக் களத்தில் முன்னணியில் நிற்கின்ற ஒரு போராளியாகத்தான் இருக்கின்றார். 

எல்லாக் களங்களுக்கும் முன்னோடி

இளைஞர்களும், இளம் தலைவர்களும்கூட  அவருக்கு அடுத்துதான் இன்றைக்கும். 

ஈழத்தமிழர்களின் விவகாரமாக இருந்தாலும் சரி, 

தமிழ்மொழியின் பாதுகhப்பாக இருந்தாலும் சரி, 

தமிழ் மண்ணின் பாதுகாப்பாக இருந்தாலும் சரி, 

தமிழ் இனத்தின் நலன்களைப் பாதுகாப்பதாக இருந்தாலும் சரி, அவற்றில் முன்னணியில் இருக்கின்ற ஒரு மூத்த தலைவராக, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, 

அடுத்தத் தலைமுறையினரின் வழிகாட்டியாக அண்ணன் வைகோ அவர்கள் விளங்குகின்றார். 

அதைத்தான் நேற்று கிடைத்த நேரத்தில் அண்ணன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். 

உண்மையைச் சொன்னேன்.

எனக்கு ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் ஈடுபாடு இருக்கின்றது என்று சொன்னால், 

மேடைகளில் தலைவர் கலைஞரின் உரைகளையும், அண்ணன் வைகோ உரைகளையும் கேட்டுத்தான். 

சித்ரா தியேட்டருக்கு முன்னால், ‘நாடாளுமன்றத்தில் நமது குரல்’ மாபெரும் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தபோது, 

கடைசியில் நானும் ஒருவனாக நின்று அண்ணன் வைகோ உரையையும், 

தலைவர் கலைஞர் உரையையும் கேட்டுவிட்டு, 

நடந்தே விக்டோரியா விடுதிக்குச் சென்று உறங்கினேன். 

அப்படிப்பட்ட இளைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்தில் இன்றைக்கு உருவாகி இருக்கின்றார்கள். 

அரசியலில் நாம் பல தோல்விகளைச் சந்தித்து இருக்கின்றோம் என்பதால்தான், 

தோழர்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்று தனக்குத்தானே தீ வைத்துக்கொள்கிற முடிவை எடுக்கின்றார்கள். 

இது தியாகம் என்றாலும் போற்ற முடியாது.

என்ன திட்டம்?

ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் அனில் அகர்வால் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் பெயரே வேதாந்தா ரிசோர்சஸ். 

அவர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர், வேண்டியவர். இங்கிலாந்துக்கு மோடி பயணம் செய்தபோது, அதற்கான முழு வரவேற்புச் செலவையும் ஏற்றுக்கொண்டவர் அனில் அவர்வால். கிரிஜா வைத்தியநாதனுக்கு நெருக்கமானவர் என்பதாலேயே எஸ்.வி.சேகரைக் காப்பாற்றுகிறது காவல்துறை. பா.ஜ.க.வில் ஏதோ சாதாரணப்  பொறுப்பில் இருப்பவர் மீதே தமிழ்நாடு காவல்துறைக் கை வைக்க வில்லை. 

மோடிக்கு வேண்டியவரான அனில் அகர்வால் மீது நடிவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு? 

காவல்துறை இந்த மக்களின் போராட்டத்தை வெற்றி பெற வைத்து விடுமா? 

ராஜீவ் கௌபா தானாகவே வலிய வந்து, ‘தேவைப்பட்டால் தமிழ்நாட்டுக்குத் துணை ராணுவத்தை அனுப்புவோம்’ என்று சொல்கிறார். 

துணை இராணுவத்தை அனுப்புகிற அளவுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதமா நடந்துகொண்டு இருக்கிறது? 

துணை இராணுவத்தை அனுப்புவது எந்த அடிப்படையில்? 

மோடி அனைத்து மாநிலங்களையும் பாரதிய ஜனதா ஆளவேண்டும் என்று விரும்புகின்றார். 

மாநிலங்களைத் தம்வயப்படுத்தியிருக்க வேண்டுமானால், மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றார். மத்திய துணை இராணுவத்தின் மூலமாக ஒரு மாநிலத்தைக் கையகப்படுத்திக் கொள்வது என்ற திட்டத்தை அவர்கள் கையில் வைத்து இருக்கின்றார்கள். 

எனவே துணை இராணுவத்தை அனுப்புவோம் என்று சொல்வதன் மூலம் மத்திய அரசின் தலையீடு இங்கே உறுதிப்படுகிறது.

மூன்றாவது மிக முக்கியமானது. 

அண்ணன் அவர்களும் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம். 

இந்த அளவுக்கு இவர்கள் திட்டமிடுகிறார்கள் என்றால், 

இது உள்ளூர் காவல்துறை எடுக்கின்ற முடிவா? 

இது தமிழ்நாடு அரசு எடுக்கின்ற முடிவா? 

மத்திய அரசாங்கத்துடன் கலந்து பேசித்தான் இந்த முடிவை அவர்களால் எடுத்திருக்க முடியும். 

மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பதற்கு இணைய சேவை முடக்கமும் ஒரு சான்று. 

காஷ்மீர் போன்ற எல்லையோரப் பகுதிகளில் தான் இணையசேவை முடக்கம் நடக்கும். 

எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிகழக்கூடாது என்பதற்காக இண்டர்நெட் பெசிலிட்டியை முடக்குவார்கள். 

ஆனால் தூத்துக்குடி போராட்டத்திற்காக இணைய சேவைகளை ஏன் முடக்க வேண்டும்? 

இதில் மத்திய அரசின் தலையீடு இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் ஒரு பதற்றத்தை உருவாக்கி, தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது என்கிற நிலையில், தமிழகம் முழுவதும் துணை இராணுவத்தைக் கொண்டுவந்து நிறுத்த இவர்கள் திட்டமிடுகின்றார்கள். 

தமிழ்நாட்டை காஷ்மீராக மாற்றுகின்ற முயற்சியில் இவர்கள் ஈடுபடுகின்றார்களோ என்ற சந்தேகம் நமக்கு வலுக்கின்றது. 

அதற்கான அச்சாரமாகத்தான் தூத்துக்குடி சம்பவம் நடந்திருப்பதாகத் தெரிகின்றது.

என்ன நடவடிக்கை?

99 நாட்கள் அறவழியில் போராடியவர்கள், 

100 ஆவது நாளில் பேரணி நடத்துகின்றார்கள். 

100ஆவது நாள் இந்தப் பேரணி நடக்கும் என்பதை,

99 நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்து விட்டார்கள். 

இவர்கள் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டு செய்யக்கூடிய ஆட்சியாளர்களாக இருந்திருந்தால், சட்டம் ஒழுங்கைக் கhப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருந்திருந்தால், 

அந்தப் போராட்டக் குழுவைச் சார்ந்தவர்களோடு இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.

எந்த வழியில் எப்படி பேரணி நடத்தப் போகின்றார்கள் என்று கேட்டு இருக்க வேண்டும். 

குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் தடுத்து நிறுத்தப்படுவீர்கள் என்று கூறியிருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த பத்து இருபது பேர் வாருங்கள் என்று கூறியிருக்க வேண்டும். 

இதுதான் மக்கள் மீது அக்கறையுள்ள ஆட்சியாளர்களின் கடமை.

99 நாட்கள் போராடுகின்ற வரையில் யார் யார் போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்று படமும், வீடியோவும் எடுத்தார்களே தவிர, போராட்டக் குழுவைச் சேர்ந்த யாரையும் இவர்கள் சந்தித்துப் பேசவில்லை. 

பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு இல்லை என்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன எடுத்தீர்கள் என்று ஒரு சான்று சொல்லுங்கள்? 

தூத்துக்குடியை நோக்கி வருகின்ற சாலைகளை இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் தடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்றால் இல்லை. 

எல்லோரையும் தூத்துக்குடிக்கு வருவதற்கு அனுமதித்து இருக்கின்றார்கள். 

இலட்சக்கணக்கில் மக்கள் திரள்வதற்கு அனுமதித்து இருக்கின்றார்கள். 

எந்த அரசு இப்படிச் செய்யும்? 

மக்களைத் திரள விடாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை எதுவும் கிடையாது. 

20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் தனித்தனியே 99 நாட்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

அந்த மக்களை வழிநடத்தியவர்களுள் யாரையாவது ஒருவரை இந்த 99 ஆவது நாளில் கைது செய்து இருக்கின்றீர்களா? 

பேரணி நடப்பதற்கு முதல் நாள் இரவு கைது செய்தீர்களா? அனைவரும் உள்ளே வரட்டும்; 

திரளட்டும் என்று கhத்திருக்கிறார்கள்.

பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு வருவதை எப்படி அணுகுவது என்று கhவல்துறையில் ஒரு பயிற்சி. 

முதலில் லேசாகத் தடியடி நடத்தலாம். 

அதையும் மீறினால் கண்ணீர் புகைக் குண்டு வீசலாம். 

தண்ணீர் பாய்ச்சி அடிக்கலாம்; 

அடுத்து வானத்தை நோக்கிச் சுடலாம்; 

அதையும் மீறினால் முழங்கால்களுக்குக் கீழேதான் துப்பாக்கியால் சுடலாம். 

இதை சீருடை அணிந்து பாதுகாப்புக்கு நிற்கின்ற காவலர்கள்தான் செய்ய வேண்டும். 

ஆனால் என்ன நடந்தது? 

களத்தில் மக்களோடு நேருக்கு நேர் மோதுகின்றவர்கள் சுடவில்லை. மஞ்சள், புளு வண்ண பனியன் அணிந்த, நன்கு பயிற்சி பெற்றவர்கள், கhவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று லென்Þ பொருத்திய Þனைப்பர் துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றார்கள். 

இது மிகவும் திட்டமிட்ட  படுகொலை. அதனால்தான் உடனடியாக முதல்வரிடம் இருந்து வருத்தம் தெரிவித்துச் செய்தி வரவில்லை. முதல்வரின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து இருக்கின்றது. 

உள்ளபடியே வேதனை தருகின்றது. 

நோக்கம் என்ன? 

இந்தச் சம்பவம் இரண்டு கhரணங்களுக்காக நடத்தப்பட்டு இருக்கின்றது.

ஒன்று, ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டத்திற்காக மெரினா கடற்கரையில் அரசியல் சார்பற்று இலட்சக்கணக்கான மக்கள் திரண்டார்கள். 

தூத்துக்குடியில் இவர்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக மாபெரும் மக்கள் திரளைத் திரட்டிக் காட்டினார்கள். 

அதற்கு திமுகவோ, மதிமுகவோ, கhங்கிரசோ, இடதுசாரிகளோ, விடுதலை சிறுத்தைகளோ யாரும் அழைப்பு விடுக்கவில்லை. 

பல்லாயிரக்கணக்கhன மக்கள் திரண்டு வந்தார்கள். 

இது ஆட்சியாளர்களை அச்சுறுத்துகின்றது.

அரசின் மீது இருக்கிற வெறுப்பால், 

பொதுமக்கள் இலட்சக்கணக்கில் திரளுகின்றார்கள். 

திரண்ட பிறகு அவர்களைக் கையாள்வது பெரும் சிரமமாக மாறுகின்றது. 

எனவே இத்தோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே கூடிப்பேசித் திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

நேற்று மெரினா, இன்று தூத்துக்குடி, நாளை எதுவோ? 

இப்படியே இந்த மக்கள் திரண்டு போனால், 

உதிரி அமைப்புகள் ஒன்று சேர்ந்தால், 

தமிழ், தமிழ்த் தேசியம் என்ற பெயரால் அல்லது சுற்றுச் சூழல் பாதுகhப்பு என்கின்ற பெயரால் ஒன்று திரண்டால் என்ன ஆவது? 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

அரசியல் சார்பு அற்ற முறையில், பொதுமக்கள் திரள்வதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்து இருக்கின்றார்கள். 

தன்னெழுச்சியாக மக்கள் திரண்டது 

அவர்களை அச்சுறுத்தி இருக்கின்றது.

அனில் அகவர்வால் ஒரு கhணொளியைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு இருக்கின்றார். 

அதில், ஆலைகளை மூடச் சொல்லி மக்கள் போராடலாம். ஒருவேளை ஆலையை மூடலாம். 

ஆனால், அரசின் துணையோடு, நீதிமன்றத்தின் துணையோடு மீண்டும் ஆலையை நடத்துவேன் என்று சொல்லி இருக்கின்றார்.

அப்படியென்றால் என்ன பொருள்? 

அரசும், ஆட்சியாளர்களும், நீதிபதிகளும் என் கைகளுக்குள், சட்டைப் பைகளுக்குள் என்று சொல்லுகின்ற ஆணவம் அவனிடத்தில் வெளிப்படுகின்றது. 

கார்பரேட் நிறுவனங்களின் செல்லப் பிள்ளை மோடி. 

மக்கள் கட்சி சார்பற்றுப் போராடி உயிர் இழந்திருக்கின்றார்கள்.

தூத்துக்குடியில் பங்கேற்ற பொதுமக்கள் இலட்சத்தைத் தாண்டி இருக்கின்றது என்றால், 

ஏறத்தாழ 70 சதவிதத்திற்கு மேலானவர்கள் கிறிஸ்தவர்கள், மீனவர்கள். 

தமிழகத்தில் இருக்கின்ற அதிமுக அரசு, 

மோடியின் பினாமி அரசு என்று மக்கள் புரிந்துகொண்டு இருக்கின்றார்கள். 

ஆகவே சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் போராடுகின்றார்கள் என்ற கருத்தும், 

அவர்களுக்கு இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள்தான் பயிற்சி கொடுக்கின்றார்கள் என்ற கருத்தும், 

அவர்களுக்குப் பின்னால் 

தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், தமிழ், தமிழ் இனம் என்று பேசுகிறவர்கள்தான் பின்னால் இருக்கின்றார்கள் என்ற கருத்தும் ஆட்சியாளர்களை ஆட்டிப் படைத்து இருக்கின்றது. 

எனவே இதில் பலரைச் சுட்டுத் தள்ளினால் தான் அச்சம் வரும்; பயிற்சி கொடுப்பவர்களுக்கும், போராடக்கூடிய வர்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் அச்சம் வரும் என்கிற அடிப்படையில் இவர்கள் திட்டமிட்டு இருக்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

தப்புக் கணக்குப் போட்டால்...

இப்படிப்பட்ட நிலையில், 

13 பேரைப் பழிவாங்கி விட்டோம், போராட்டத்தை நசுக்கி விட்டோம், இனிமேல் இவர்களால் போராட முடியாது என்று 

தமிழக அரசோ, மோடி அரசோ தப்புக் கணக்குப் போட்டால், மாபெரும் பிரளயத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். 

அப்படிப்பட்ட ஒரு கொதிநிலை இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கின்றது. நாளை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் நாம் அனைவரும் பங்கேற்க இருக்கின்றோம். 

நாளை நாம் நடத்தும் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் போராட்டமாக அமையக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

இத்தகைய போராட்டக் களங்களில் எல்லோரையும் விட ஒரு முன்னணித் தளபதியாக நின்று, 

எப்போதும் முதல் போராளியாகக் களத்தில் நின்று போராடக்கூடிய அண்ணன் வைகோ அவர்கள், 

தமிழ் மண்ணில் ஏற்படுத்தி இருக்கின்ற தாக்கம் மகத்தானது. கhலம் சொல்லும்.

மதிமுக தொண்டர்களுக்கு, 

எனது அருமைத் தோழர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அண்ணன் வைகோ அவர்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெறாமல் இருக்கலாம்; 

ஆனால் தமிழக அரசியலில் அவர் மகத்தான சக்தி என்பதை வரலாறு பதிவு செய்து இருக்கின்றது.

அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

நால்வருக்கும் வீரவணக்கம் செலுத்தி நிறைவு செய்கின்றேன். 

நன்றி, வணக்கம்.

No comments: