Friday, October 13, 2023

மோகன் சி லாசரசுக்கு ஆதரவாக துக்ளக் குருமூர்த்தி

குரும்பூர் ஆனந்த விநாயகர் கோவிலை உடைக்க மோகன் சி லாசரஸ்க்கு ஆதரவாக செயல் படும் ஆடிட்டர் குருமூர்த்தி...

திருச்செந்தூர் ரயில் நிலையத்திலும், குரும்பூர் ரயில் நிலையத்திலும் அக்காலத்தில் ரயில்வே அதிகாரிகள் துணையோடு பக்தர்கள் சிறு ஆனந்த விநாயகரை வழி பட்டு வருகின்றனர்.

மெகா சர்ச் ஒன்று குரும்பூரில் கட்டி உள்ளார் மோகன் சி லாசரஸ் .லட்சக்கணக்கில் இங்கு வருபவர்களை வைத்து வசூல் செய்வது வழக்கம்.வெளி நாட்டில் இருந்து வரும் மதம் மாற்ற வரும் பணம் கொண்டு வர துடிப்பாக செயல் படுவதில் ஒருவர் மோகன் சி லாசரஸ்.

குரும்பூர் ரயில்வே நிலையத்தின் வெளி இடம் முழுவதையும் Maintenance செய்வதாக குத்தகைக்கு காங்கிரஸ் காலத்தில் மத்திய அரசு மூலம் மோகன் சி லாசரஸ் வகையறாதான் உரிமை பெற்று உள்ளனர். 

இதற்குள் 45 வருட ஆனந்த வினாயகர் பழமையான கோவில் உள்ளது. சிறு வயது முதல் நான் உள்பட இக்கோவிலுக்கு போகாதவர்கள் இப்பகுதியில் இருக்க வாய்ப்பே இல்லை.

மோகன் சி லாசரஸ் சர்ச் க்கு வரும் வாகனங்களை நிறுத்த இந்த ரயில்வே இடங்கள் பயன் படுத்தப் படுகிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வானதி சீனிவாசனை மத்திய ரயில்வே போர்டில் அமர்த்தி இதற்கான காயை நகர்த்திக் கொடுத்தது ஆடிட்டர் குருமூர்த்திதான்.

இதற்கிடையில் பாஜக ஆட்சி வந்த பிறகும் ரயில்வே போர்டு குருமூர்த்தியின் கண் அசைவு செல்வாக்கில் மோகன் சி லாசரஸை அரவணைத்து தொடர்ந்தது.

அது கூட பிரச்சனை இல்லை.

ரயில் நிலைய இடத்தில் ஆனந்த விநாயகர் இருப்பதை கண் உறுத்தவே ரயில்வே நிர்வாகத்தை வைத்தே இதை உடைக்க வழக்கு தொடர வைத்தனர் லாசரஸ் - குருமூர்த்தி மெகா கூட்டணி.

எங்களுக்கு இதற்கும் சம்மந்தம் கிடையாது என்று இந்த வேத விற்பனையாளர்கள் இப்போதும் கூறுவார்கள்.

மோடி ஒழிக என்று குரும்பூர் ரயில்வே நிலைய பார்க்கிங் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஒருவர் பிரதமர் மோடி ஆட்சியில் பேச இயலும் என்றால் இவரிடம் செல்லம் கொஞ்ச வரும் கில்லாடி ஆடிட்டர் யார் என்று நீங்களே புரிந்தும் கொள்ளலாம்.

பிரதமருக்கே சவால் விடும் இவர்களுக்கு ஆனந்த விநாயகர்தான் முடிவு கட்டுவார் என்று எண்ணுகிறேன்.

கோர்ட் உத்தரவு படி பல நேரங்களில் இக்கோவிலுக்கு இடையூறு வந்தும் ஆனந்த விநாயகர் தன்னைக் காப்பாற்றி உள்ளார்.

நாளை ஆனந்த விநாயகர் கோவிலை உடைப்பதற்காக பல தரப்புகளை தூண்டி JCB வாகனம் வர உள்ளதாக தகவல்கள்.

ஒரு வேளை ஆனந்த விநாயகர் கோவிலுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் ஆடிட்டர் குருமூர்த்தியின் 2000க்கு மேற்பட்ட பினாமி டிரஸ்ட் வண்டவாளங்கள் பிரதமரின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று அவரின் இந்தப் பிழைப்புக்கு முற்றுப் புள்ளி வைப்பேன். அதே நேரத்தில் மோகன் லாசரஸின் களவாணித் தனங்கள் அனைத்தும் அலசப்பட்டு அவருக்கு ஆனந்த விநாயகரின் அருளால் முடிவுரை எழுதுவேன் என்று தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். 

இதை வெற்று வார்த்தைக்காக சொல்லவில்லை.

பணம் பறிக்கும் எண்ணத்தில் உள்ள மதவாத சிண்டிகேட் ஏமாற்று கூட்டணிகளை ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த மதங்களும் நிம்மதி பெற்று வாழவே இயலாது.

நீங்கள் எதிரி என எண்ணும் ஒருவரை விட அருகில் உள்ள துரோகியே நம்மை என்றும் அழிப்பார்கள். அதற்கு உதாரணம் இவர்கள்.

தமிழக அரசியல் சிண்டிகேட்,

மத சிண்டிகேட் இரண்டுமே ஒன்றுதான்.

முதலமைச்சர் எடப்பாடியார் அமைதி ஏற்படுத்த முயற்சிப்பார் என நம்புகிறேன்.

மீண்டும் சொல்கிறேன்.

குரும்பூர் ஆனந்த விநாயகருக்கு ஏதேனும் தீங்கு ஏற்படின் நீங்கள் இருவரும் எவ்வளவு பெரிய வில்லாளகண்டர்களாக இருந்தாலும் உங்கள் இருவரையும் மக்கள் முன்பாகவும்,பிரதமர் முன்பாகவும்  நிறுத்துவேன். செய்த மர்ம குற்றங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவேன்.

விடவே மாட்டேன்.

இது திருச்செந்தூர் முருகன் மேல் ஆணை.

ஓம் ஆனந்த விநாயகரே போற்றி.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை.

ஓம் முருகா

படங்கள் கமென்ட்டில் காண்க.

31.05.2018 எனது பதிவின் லிங்க்

https://m.facebook.com/story.php?story_fbid=1020636528094972&id=100004459025108

ஆனந்த விநாயகரை காக்க பகிருங்கள்.

பாலசுப்ரமணியம் ஆதித்தன், 25.6.2018

No comments: