Sunday, April 24, 2022

அருணகிரி அவர்களின் பதிவு

திரு. அருணகிரி அவர்களின் 23.4.2919 முகனூல் பதிவு...

மலேசியா விநாயகம் கவி, 

தாயகம் வந்தார். 

சொந்த ஊர் சிதம்பரம். 

திராவிட இயக்கப் பதிப்பாளர்களுள் ஒருவர். 

தலைவர் வைகோ அவர்களின் மலேசியப் பயண நிகழ்வுகளைத் தொகுத்து இரண்டு புத்தகங்கள் வெளியிட்டு இருக்கின்றார். 

தலைவர் வைகோ அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது, சென்னை எழும்பூர் ஸ்பர்டாங் சாலையில் டி.எம். நாயர் ஆற்றிய ஆங்கில உரையைப் புகழ்ந்து உரைத்தார். 

அதேபோல, டி.எம். நாயர் விக்டோரியா அரங்கத்தில் 1917 மார்ச் 14 ஆம் நாள் ஆற்றிய மற்றொரு உரையை, Our Immediate Political Outlook என்ற தலைப்பில், தன் சொந்தச் செலவில் மறுபதிப்பாக அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றார். 

அதேபோல, உலக கம்யூனிச இயக்கத்தின் அறிக்கையை தந்தை பெரியார் அவர்கள் 1931 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் தமிழில் வெளியிட்டார்கள். 

அந்த சமதர்ம அறிக்கையையும் ஒரு சிறிய வெளியீடாகக் கொணர்ந்துள்ளார் விநாயகம் கவி. 

அவருக்கு நமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

No comments: