Thursday, June 23, 2022

பிசிராந்தையார் - பாவேந்தர்

 புத்தகத்தின் பெயர் - பிசிராந்தையார்

ஆசிரியர்- பாவேந்தர் பாரதிதாசன்

- நிவேதா பாலபாஸ்கரன்

பாவேந்தரின் பிசிராந்தையார் நாடகம் நட்பின் மேன்மையை உணர்த்துகிறது. பாண்டிய நாட்டில் வாழும் பிசிராந்தையார் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனின் பெருமைகளை கேள்வியுற்று பார்க்காமலேயே நட்பு கொள்கிறார். அதேபோல் கோப்பெருஞ்சோழனும்🤴பிசிராந்தையாரின் புலமை பெருமைகளை கேள்வியுற்று நட்பு கொள்கிறார். சினிமாவில் நாம் பார்க்காமல் காதல் ❤கொள்வதை பார்த்துள்ளோம். ஆனால்,  சங்க காலத்தில் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் பார்க்காமலேயே  நட்பு கொண்டனர். 

கதையின் ஆரம்பத்தில் அமைந்த பிசிராந்தையார் மட்டும் மேற்படியார் உரையாடல் மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அரிசி வாங்க பணம் இல்லை என்று மேற்படியார் கூற தன்னிடம் உள்ள கல்லிழைத்த பதக்கத்தை கழற்றி கொடுக்கிறார். 

சில புலவர்கள் "ஐயா நகை தந்து நகையை பறித்தார் உங்களிடமிருந்து"

பிசிராந்தையார் "நகை இழந்தது பெரிதன்று. நகைப்பை பெற்றேன் அது பெரிது.பெறற்கரிது! ..... "

இவ்வுரையாடல் மூலம் பாண்டிய நாட்டின் செழிப்பையும், பிசிராந்தையாரின் தாராள குணம் தெரிந்து கொள்ள முடிகிறது. 

பாண்டிய நாட்டில் பச்சைகிளி மர்மமான முறையில் இறந்துள்ளாள் அதை செய்தவர் யார் , எதற்காக செய்தனர் என்று நாடகம் விறுவிறுப்பாக நகர்ந்து சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே விரிசலை ஏற்படுத்துகிறது. கோப்பெருஞ்சோழனின் 👑இரு மகன்கள் ஆட்சியை கைப்பற்ற தன் தந்தைக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றனர். இக்கொலையை வித்தாக வைத்து பாண்டியனுக்கும் சோழனுக்கும் பகையை உருவாக்க முடிவு செய்து திட்டத்தை செயல் படுத்துகிறார்கள் .  இதையறிந்த கோப்பெருஞ்சோழன் தன் மகன்களுக்கு எதிராக போர் புரிய முடிவு செய்கிறார். அப்போது எயிற்றியனார் தடுக்கிறார். 

தாங்கள் தன் மக்களைக் கொன்றால் உலகம்🌎 ஆட்சிகாக சோழ மன்னன் தன் மகன்களை கொன்றான் என்று இகழும் என கூறுகிறார். பின் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்க முடிவு செய்கிறார். வடக்கிருக்கும் இடத்தில் பிசிராந்தையாருக்காக ஒரு இடத்தை தேர்வு செய்கிறார். பிசிராந்தையார் வர வாய்பில்லை, பார்க்காமலேயே தனது சிநேகிதனுக்காக உயிர் விட யார் வருவார் என மக்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது பிசிராந்தையார் அங்கு வந்து சோழனை கண்ணீர் மல்க சந்தித்து வடக்கிருந்து தன் நணபனுடன் உயிர் பிரிகிறார். 

மக்கள் அனைவரும் கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையாரின் நட்பை போற்றுகின்றனர். 

இந்நாடகத்தில் நட்பு மட்டுமல்ல அரசியல், அறம், பாசம், சூழ்ச்சி, வளம், மக்களின் மனோபாவம் போன்றவற்றை பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இலக்கிய நயத்துடன் கொடுத்துள்ளார்.

No comments: