Sunday, November 12, 2023

சிலம்பு பற்றி பெரியார்

 சிலம்பு பற்றிய பெரியாரின் பார்வை

“இந்த அம்மாளின் ( கண்ணகி ) கற்பைப் பற்றிச் சொல்வதாயி ருந்தால், தேவடியாள் வீட்டுக்குக் கணவன் போனதை அறிந்த போது, அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள். தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுக்க வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன். தாசி ஒழுக்கமற்றவள். கண்ணகி மடப்பெண்” என்று கடிந்து கொள்கிறார். சிலப்பதிகாரத்தின் சிறப்புகளைப் புகழ்ந்திட முனைவோரைப் பார்த்து “இந்தப் பிரச்சார பிரம் மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில் போய் இருந்தால் இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம் நகை எல்லாம் அனுப்பச் சம்மதிப்பார்களா?” 

கண்ணகி மதுரையை எரித்ததைப் பற்றிச் சொல்லும் போது, “இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும் தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி! மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும் அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூடநம்பிக்கைக் கற்ப னையானது என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூறமுடியுமா?”

“இராமன் பார்ப்பான் - ஆகவே சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள் தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவான் என்பது சிலப்பதிகாரம். பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மையின் மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் வணங்கத்தக்கவள், கற்புக்கரசி தெய்வமானவள். பாண்டியன் குற்றவாளி. இதுதானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் ?

No comments: