Wednesday, January 24, 2024

தமிழ் புத்தாண்டு அறிவிப்பு செல்லும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை செப். 23, 2006

தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும் என உயாநீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த எஸ் . சிவசுப்பிரமணிய ஆதித்தன் என்பவர்,

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சித்திரை மாதம் 1-ம் தேதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். எனவே, சித்திரை 1-ந் தேதி கோவிலில் தமிழ் பத்தாண்டு சிறப்பு பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி கே.சந்துரு விசாரித்து நேற்று (செப்-22) தீர்ப்பு அளித்தார். 

சித்திரை 1-ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. கோவிலின் பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனுதாரர் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை சட்டப்படி அணுக வேண்டும் அவர்களை அணுகாமல் மனுதாரர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகமுடியாது.

பொதுவாக நாட்காட்டிகள் சம்பந்தமாக பல்வேறு விவாதங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகள் குறித்து பல்வேறு காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன...

முற்காலங்களில் தமிழ் நாட்காட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது அரசு மாற்றி உள்ளது ஒன்றும் புதிதல்ல. அரசியல் சட்டப்படி அதுபோன்று மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆலோசனை கேட்கலாம்.

அதேபோன்று சமஸ்கிருதத்தில் உள்ள தமிழ் ஆண்டுகளின் பெயர்களை மாற்றம் செய்யவும் ஆலோசனை கேட்கலாம். தமிழ் மொழி தான் ஆட்சி மொழி என்று கொண்டு

வர அரசுக்கு எப்படி அதிகாரம் உள்ளதோ, அதேபோன்று தமிழ் நாட்காட்டிகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே தை மாதம் 1-ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது சட்டவிரோதம் இல்லை . சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இந்து மத வழிபாடுகளில் ஒரு பகுதி என்று மனுதாரர் தெரிவித்து இருப்பது மதசாயம் பூசும் செயலாகும் என்று தனது தீர்ப்பில் கூறிய நீதிபதி மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

No comments: