Wednesday, January 24, 2024

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 4

 வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள்- 4

'சிகாகோவில் இருந்து வேலூர் வரை" என்ற தலைப்பில் இரண்டு மடல்கள் வரைகிறார் தலைவர் வைகோ.  அதில் மூன்று செய்திகள் உள்ளன.

1. வழக்கு மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்காரக் கூடாது என்று நீதியரசர் கூறிய போது, அதற்கு தலைவர் ஆற்றிய எதிர் வினை.

2. மின்விசிறி வேண்டாம் என்று மறுத்த தலைவர்.

3. நடுவண் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தன்னை சந்தித்துவிட்டு, தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்திக்கப் போவதாக சொன்ன போது அச்சந்திப்பை தவிர்க்குமாறு தலைவர் வைகோ வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டு அமைப்பும், தமிழ்நாடு

அறக்கட்டளையும் ஆண்டுதோறும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவை

'மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவாக நடத்திட முடிவு செய்து அதில் தலைவர் வைகோ அவர்கள் உறுதியாக பங்கேற்க வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று, அமெரிக்காவுக்குச் சென்றார்.

ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு தன்னை சிறைப் பிடிக்க முடிவு செய்து விட்டதை அறிந்து ஒரு மணி நேரத்திற்குள் ஓர் அறிக்கையினை வெளியிட்டார் தலைவர் வைகோ. அதில்,

"ஜூலை 14-ஆம் தேதி இரவில் சென்னை திரும்புவதாகத் திட்டமிட்ட

பயணத்தை மாற்றி அமைத்துக் கொண்டு, மூன்று நாள்களுக்கு முன்னதாகவே தமிழகம் வருகிறேன்" என்று குறிப்பிட்டார்.

அதிகாலை மூன்று மணியில் இருந்து நாலரை மணி வரை காவல்துறை அதிகாரிகள் தனியாக விவாதித்து இறுதியில் மதுரை மத்திய சிறைவாசலுக்கு முன்னால் வாகனங்கள் போய் நின்றன.

 'வேலூர்க்கு நீங்கள் கொண்டு செல்லப்படுகிறீர்கள்" என்றனர்.

புறப்பட்ட எங்கள் வேன்களை நோக்கி ஓடிவந்த செய்தியாளர்களிடம் "வேலூர்" எனக் குரல் கொடுக்கிறார் வைகோ.

தூங்காத மாமதுரையில் வைகறையிலேயே பரபரப்பு. நகரின் எல்லையில் தமிழ்நாடு சிறப்புக் காவலர் குடியிருப்பினை அடுத்துள்ள இடத்தில் வேன்களுக்கு டீசல் நிரப்ப ஓட்டுநர்கள் முற்பட்டபோது, திடீரென்று அதிகாரிகளின் அவசரமான தகவல், 'மதுரை மத்திய சிறைக்கே திரும்பட்டும்' என்று ஆணை.

"சிறிதுநேரம் இங்கு ஓய்வு எடுங்கள்,

பத்து மணிக்கு மேல் வேலூர் புறப்படலாம்" என்று காவல் அதிகாரிகள் தெரிவித்த போது, "நினைத்த வேளையில்

எல்லாம் 'ஓய்வு' எடுத்துவிட முடியாது. 'சிறைக்குள் செல்லும்போது சில சாங்கியங்கள்  இருக்கும். மதுரைச் சிறையிலேயே எனக்குக் காவல் என்றால் சரி. ஆனால் உடனே

மீண்டும் பயணம் என்றால், இப்போதே பயணம் செய்யலாம்"என்று தலைவர் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.

 'காவலர்கள்  களைப்பாக உள்ளனர்' என்று அவர்கள் தெரிவித்த போது, "உண்மைதான். அவர்களை ஒய்வுக்கு

அனுப்பிவிட்டு புதிதாக வேறு காவலர்களை அனுப்பலாமே? என்றார் வைகோ.

அரசும், காவல்துறையும் இப்படிப் பந்து ஆடுவது குறித்து வைகோ மனதில் உறுத்தல்.

 "முதலில் வேலூர் பயணம் என்றீர்கள். வேனும் புறப்பட்டது. மதுரை தாண்டியபின் திரும்பவும் இங்கேயே கொண்டு வந்தீர்கள். இந்தச் சிறையில் சிறிது நேரம். பின்னர்  வேலூர்ச் சிறை நோக்கி மீண்டும் பயணம் என்கிறீர்கள், நான் காவல்துறையை மதிப்பவன். தேவை இன்றிப் பிரச்சினை தரமாட்டேன். ஆனால் சுயமரியாதைக்குப் பங்கம் என்றால் வைகோவுக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்" என்று கொதித்தார் வைகோ.

வழக்கு மன்றத்தில் நேர் நிறுத்தம் செய்யப்படுகிறார் தலைவர் வைகோ. இங்கு பொடா வழக்கின் போது நடந்த ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார் வைகோ.

பொடா வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நவம்பர் 22இல் நடந்தது என்ன  என்பதை தலைவர் வைகோ கூறுகிறார்.

ஏழாம் முறையாக பொடா வழக்கு மன்றத்தில் 'நீங்கள் உட்காரலாம்' என்று நீதியரசர் கூறிய போது தலைவர் வைகோ அவர்கள், "மீண்டும் இது குறித்து எனது கருத்தினைத் தெரிவிக்க இந்த நீதிமன்றத்தின் அனுமதி கேட்கிறேன். எங்களை அய்ந்துமுறை உட்கார்ந்து இருக்க

அனுமதித்தது சிறப்புச் சலுகையா என்று நான் கூறவே இல்லை. நான் ஒன்றும் சிறப்புச் சலுகை எதையும் எதிர்பார்க்கவில்லை' என்றுதான் கூறினேன். நாங்கள் ஒன்றரை மணிநேரம் நின்று கொண்டு இருந்தோம். வாதப் பிரதிவாதங்கள் எல்லாம் முடிந்தபின்னரே நாங்கள் உட்காரலாம் எனக் கூறப்பட்டது என்றேன்.

"இனி வழக்கு நடவடிக்கைகளைத் தொடரலாமா?” என்று மாண்புமிகு நீதிபதி அவர்கள் என்னைப் பார்த்துக் கேட்டதற்கு, "அது பற்றி முடிவெடுக்க வேண்டியது நீங்கள்" எனப் பதில் அளித்தேன் என்று தெரிவிக்கிறார்.

No comments: