Thursday, January 25, 2024

மாவோவின் நெடும்பயணம்- 3

 மாவோவின் நெடும்பயணம்- 3

"கோமின்டாங்"

1912 இல் மஞ்சு அரசகுலம் கவிழ்க்கப்பட்டு சீனா முதன் முறையாகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது, ஒரு பழமை வாய்ந்த நாட்டுக்கு அப்போது அவசியமாயிருந்த நவீன நிர்வாகத்தை வழங்குவதில் தலைமை ஏற்க மிகவும் ஆயத்தமாக இருந்ததாகத் தோன்றிய அரசியல் அமைப்பு "கோமின்டாங்"தான்.

"கோமின்டாங்" என்றால் நேரடிப் பொருளில் 'மக்கள் கட்சி' என்பதாகும். ஆனால் அது மேற்கத்திய மொழிகளில் "தேசியவாதக்கட்சி" என்று வழக்கமாக மொழி பெயர்க்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் சீனாவின் அரசியல் திசைவழியைத் தீர்மானிப்பதில் ஈடுபட்டிருந்த பல்வேறு தனிநபர் குழுக்கள், இராணுவக் குழுக்கள் போன்றவற்றிலிருந்து வேறுபட்டிருந்த கோமின்டாங் கட்சி முதலில் முன்னணிக் கட்சியாக ஆகியது.

சீனக் கிராமப்புறங்களில் இருந்த சீனப் பொதுவுடைமை அதிகாரத்தளங்களை அழித்து அவர்களை விரட்டுவது கிட்டத்தட்ட கோமின்டாங்குகளின் வெற்றியாக இருந்தது. அதுவே 1934இல் நெடும் பயணத்திற்கு இட்டுச் சென்றது.

கோமின்டாங்கின் தோற்றம் 1894-க்கு முந்திச் செல்கிறது. அப்போதுதான் ஒரு வெற்றிகரமான 27 வயது மருத்துவரான சன்-யாட்- சென் தனது மருத்துவத் தொழிலைத் தூக்கியெறிந்துவிட்டு முழுநேரப் புரட்சிகர அரசியலில் நுழைந்தார்.

ஒரு சில உறவினர்களுடனும் நண்பர்களுடனும் அவர் "சிங்சுங்கய் அல்லது சீனாவின் புத்துயிர்ப்பு சங்க"த்தை உருவாக்கினார். அது செயலூக்கமற்ற மஞ்சூக்களைத் சாக்கியெறிவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. 

சன், ஒரு அசாதாரணப் பண்பு நலன்களைக் கொண்ட 'கான்டனிய அறிவுஜீவி' ஆவார். அவர் கான்டனிலும் வியர்காங்ல் ஆங்கிலேய மருத்துவப் பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்.

மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக சீனா பலம்பெற வேண்டுமானால், மேற்கத்திய அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றத்தை சீனா எட்டவேண்டுமானால் எண்ணற்ற மாறுதல்களைத் தூண்டிவிட வேண்டியிருக்கும் என்று அவர் நன்கு அறிந்திருந்தார்.

அவருடைய குழுவுக்கு ஹாங்காங்கிலும் மலேயாவிலும் இன்னும் தென் கிழக்காசியாவின் பிற பகுதிகளிலுமிருந்த கடல்கடந்த சீன வணிகர்கள் நிதியளித்தார்கள்.

அவர்களும்கூட மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கும், பலவீனமான முதுகெலும்பற்ற மஞ்சு பேரரசுக்கும் உள்ள இடைவெளியைப் பற்றிக் கவலைப்பட்டார்கள்.

சன் புகழ்பெற்ற மூன்று கொள்கைகளைப் போதித்தார். 

சீனர்களின் குறுகிய பிராந்திய மற்றும் குழு விசுவாசத்தை அகற்றுவதற்கான தேசியவாதம், கிராமப்புறங்களில் நிலவும் சுயாட்சி நடைமுறையை தேசிய வாழ்க்கைக்குக் கொண்டுவரும் ஜனநாயகம், சாதாரண மனிதனின் பொருளாதாரத் தரத்தை முன்னேற்றுவதற்கான பொருளாதார வளர்ச்சி ஆகியவையே அவை.

தனிப்பட்ட முறையில் களங்கமற்ற சன், ஒரு எளிய ஏமாற்றமடைந்த மனிதராக இறந்தார். 

அவரது பங்களிப்புகள் தேசிய மறு கட்டமைப்புக்கான நிர்வாக அம்சங்களாக இருந்ததைவிட புரட்சிக்கே மிகவும் உகந்தவையாக இருந்தன. சீனக்குடியரசுப் புரட்சி பற்றிய நெருங்கிய அறிவு பெற்றிருந்த- அமெரிக்க வரலாற்றாசிரியர் ஒருவர், 'அவரது பலம் ஆக்கபூர்வமான அரசியல்வாதியுடையதல்ல, சிலை வழிபாட்டையும் மூடநம்பிக்கையையும் ஒழிப்பவருடையதாக இருந்தது' என்று எழுதினார்.' 

லட்சியவாதமும் உற்சாகமும் மிக்க சன், புரட்சியின் வெகுஜன ஈர்ப்பை மிகையாக மதிப்பிட்டார். மேலும் தனது அமைப்புக்கு ஒரு உண்மையான அதிகார அடித்தளத்தை நிறுவத் தவறினார்.

அவருடைய குழு பேரரசனுக்கு எதிரான ஒரு கலகத்தை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றத் திரும்பத் திரும்ப முயன்றது. ஆனால் வெற்றியடைய வில்லை. அதன் காரணமாக சன் தானே நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பாவிற்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்.

 'குத்துச்சண்டையர் கலகத்தின்' போது அவரைப் பின்பற்றியவர்கள் க்வாங்டங் மாகாணத்தில் அரசின் மீது ஒரு தாக்குதலைத் தொடுத்தனர். அது வெற்றிபெறவில்லை.

1905இல் அவரது குழு டோக்கியோவில் 'டுங்மெங்குய்' அல்லது 'கூட்டணி சங்கம்' என்ற பெயரில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது. அது ஜப்பானில் இராணுவ அறிவியல் பயின்றுவந்த பல சீனர்களைக் கவர்ந்தது (அவர்களில் ஒருவர் சியாங் கே-ஷேக்).

1911-12 இல் புரட்சி தொடங்கியபோது சன் அமெரிக்காவில் இருந்தார். இரண்டு மாதங்கள் வரை அவரால் சீனாவை வந்தடைய முடியவில்லை.

இப்பொழுது 'கோமின்டாங்' அல்லது 'புரட்சிகரக்கட்சி' என்று அழைக்கப்பட்ட அவரது குழு போரில் முன்னணியில் இருந்தது.

புதிய கலக அரசாங்கத்தின் தற்காலிகத் தலைவராக சன் இதர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சன்யாட்- சென்னுக்கும் அவரது நண்பர்களுக்கும் கடமைப்பட்டிராத, பேரரசு எதிர்ப்புப் போரணியில் கலந்து கொண்ட தனிநபர்களும் குழுக்களும் இருந்தனர். இவர்களில் ஒருவர் பேரரசு இராணுவத்தின் முன்னாள் படைத்தலைவர் யுவான் ஷிஹ்-காய் ஆவார். இவர் வடக்குப் பகுதியைச் சேர்ந்த உயர்குடியைச் சார்ந்தவர்; மஞ்சு அரச குடும்பத்தோடு மோதலில் ஈடுபட்டிருந்தவர்: வெளிப்படையாகவே வரம்புக்குட்பட்ட முடியாட்சி பற்றியும் பிற சீர்திருத்தங்கள் பற்றியும் பேசியவர். 

சன் தனது கட்சிக்கு 'கோமின்டாங்' என்று மறுபெயரிட்டார். ஏனெனில் புரட்சி அடையப்பட்டு விட்டது. தேசிய ஒற்றுமை இப்பொழுது உடனடி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாக இருந்தது. மேலும் மஞ்சு எதிர்ப்பு சக்திகளிடையே ஒரு ஐக்கிய முன்னணியை நிலைநாட்டும் பொருட்டு அவர் தம்மிச்சையாகவே தமது தலைமைப் பதவியை யுவானுக்கு ஒப்படைத்தார்.

ஆனால் யுவான் கூட்டணியின் மீது மேலாதிக்கம் செலுத்த முனைந்தார். மேலும் பல்வேறு சீர்திருத்தவாதிகளும் சீன விவகாரங்கள் நடத்தப்பட வேண்டிய முறைகள் பற்றி மிகவும் மாறுபட்ட கருத்துகளைத் தாம் வளர்த்துக் கொண்டு விட்டதை அறிந்தனர். பதட்டம் விரைவாக சீறியெழுந்தது. 

யுவான் தன்னைத்தானே பேரரசனாக அறிவித்துக் கொள்ள முடிவுசெய்தபோது, அவர் விரைவிலேயே வடக்கிலிருந்த பலம் வாய்ந்த போட்டியாளர்களால் வீழ்த்தப்பட்டார். 1917 வாக்கில் ஜப்பானின் கூட்டணியுடன் (நிதியளிக்கப்பட்டு) வடபகுதி யுத்தப் பிரபுக்களின் ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் பீஜிங் இருந்தது. அப்போது சன் யாட்-சென் தெற்கு மாகாணத்தின் தலைமைத் தளபதியாக அமர்ந்திருந்தார். சீனா பிரிக்கப்பட்டது. ஆனால் தேச முழுவதுமாக இருந்த அளவுக்கு சன் தெற்குப் பகுதியில் வெற்றிகரமாக இல்லை. அவரால் தெற்குப் பகுதிப் படைத்தலைவர்களை தனது உத்தரவுகளைப் பின்பற்றுவதற்கு இணங்க வைக்க முடியவில்லை.

மேலும் 1921இல் அவர்களில் ஒருவர் க்வாங்டாங் மாகாணத்தில் கைப்பற்றினார். வேறு எந்தப் பகுதியிலிருந்தும் பல்வேறு வடக்கு யுத்தப் பிரபுக்கள் மற்றும் அந்நிய சக்திகளிடமிருந்து சன் உதவி நாடவேண்டியிருந்தது.

இந்தக் கட்டத்தில் ஒரு, உண்மையான நட்புரீதியான அந்நிய உதவிக்கரம் சீனாவின் நன்றியறிதலைப் பெற முடிந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான அந்நிய நாடுகள், இன்னும்கூட சீன அறிவுஜீவிகளால் நம்பப்பட முடியாதவையாக இருந்தன.

 1917இல் சீனக்குடியரசு, ஜெர்மன் மீது போரை அறிவித்திருந்தபோதிலும் வெர்செய்ல்ஸ் கூட்டணி வெற்றியாளர்கள் ஷான்டுங் மாகாணத்தில் முன்னாள் போது, 'சோவியத் யூனியனின் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் நமது கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் கொண்டுள்ளனர், அனுபவ மற்ற பொதுவுடைமைக் கட்சி மாணவர்களுடனல்ல' என்று பொதுவுடைமை அகிலத் தூதுவர்களில் ஒருவரது சொற்களை, அநேகமாகத் திரும்பவும், சன் குறிப்பிட்டார்.

சன் தற்போது தனது கட்சியையும் அதன் இராணுவத்தையும் சோவியத் வழியில் மறு ஒழுங்கமைப்பு செய்யத் தொடங்கினார். அவரது இளம் அதிகாரிகளில் ஒருவரான சியாங் கே-ஷேக் இராணுவப் பயிற்சிக்காக மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்டார்.

பொரோடின் என்று அறியப்பட்ட மிகாயில் மார்க்கோவிட்ச் குருஜென்பெர்க், சன்னுக்கு அவரது தாயகத்தில் உதவ, ரசியர்களால் அனுப்பிவைக்கப்பட்டார்.

1924இல் கோமின்டாங்கின் முதலாவது பேராயம் அதிகாரபூர்வமான முறையில் மூன்று கோட்பாடுகளுக்கு மறுவிளக்கம் அளித்தது. நிலவுடைமையைச் சமப்படுத்துதல், தொழிற்துறையின் மீதான அரசுக் கட்டுப்பாடு, மற்றும் பல்வேறு சமூக சீர்திருத்தங்களை அது உள்ளடக்கியிருந்தது, பின்னர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் பொரோடின் மற்றும் பொதுவுடைமை அகிலத் தூதுவரான (கேலென் என்று அறியப்பட்ட) வாசிலி ப்ளூச்சர் இருவரும் கோமின்டாங் வேம்போவா இராணுவக்கழகத்தை உருவாக்கினர். அதில் சன்னின் இராணுவம் பயிற்சியளிக்கப்படவிருந்து.

சீனப்பொதுவுடைமையர்களுக்கும் கோமின்டாங்குக்கும் இடை யில் முதலாவது ஐக்கிய முன்னணி என்று தற்போது அறியப்பட்ட ஏற்பாட்டிற்கு சியாங் கே-ஷேக் தலைவராகவும் செள-என்-லாய் அதன் அரசியல் தலைமையின் துணைத்தலைவராகவும் இருந்தனர். இந்த நிகழ்வு இந்தக் காலகட்டத்தின் சின்னமாக இருந்தது.

நெடும் பயணத்தின்போதும் அதற்குப் பிறகும் மிகுந்த கசப்புணர்வுடன் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்ட, படைத்தலைவர்களில் பலர் இந்தப் நிறுவனத்தின் பட்டதாரிகளாக இருந்தனர்.

ஆனால் சன் 1925 இல் ஒரு ஏமாற்றமடைந்த மனிதராக இறந்துபோனார்; கோமின்டாங்கில் வாரிசுரிமைக்கான போராட்டம் தொடங்கியது. சன் இல்லாத நிலையில், அவரது இடதுசார்பு மற்றும் வலதுசார்பு ஆதரவாளர்கள் கட்சியில் தொடர்ந்து நீடிப்பதைக் கடினமாக உணர்ந்தனர். பொரோடினே இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் இருந்தார். 

ஒரு குழுவின் தொடக்கத்தில் சியாங் கே-ஷேக் இடம்பெற்றிருந்த ஒரு குழுவிற்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

No comments: