Thursday, November 28, 2019

காக்கப்பட வேண்டியதா காஞ்சி மடம்?
பக்தி  என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் ஒன்றும நட்டம் இல்லை. ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒழுக்கத்திற்கும் பக்திற்கும்தான் இப்பொழுது போராட்டம். மனித நேயத்திற்கும் மதவெறிக்கும் போராட்டம்.
காஞ்சி சங்கர மடத்தைக்  காப்பாற்றுங்கள் என கல்கி, போன்ற  பார்ப்பன ஏடுகள், பார்ப்பனீயத்தின் பதாகையை எப்பொழுதும் பறக்க விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்று கருதக் கூடிய ஏடுகள் இருக்கின்றன.
சங்கராச்சாரியார் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் இந்த மடத்தையவது காப்பாற்றுங்கள் என்று எழுதி அதற்காக அங்கலாக்கிறார்கள்.
காஞ்சி மடம் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கட்ட மடம் அல்ல. அது அவரால் நிறுவப்பட்ட மடம் அல்ல.  நான்கு திசைகளில் நிறுவப் மடங்கள் ‡ நான்கு. வேதங்கள் நான்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்டஆம் நாய மடங்கள். அவாள் மொழியிலே சொல்ல வேண்டுமானால், ஆம் நாயம் என்று சொன்னால் வேதம் என்று அதற்குப் பொருள்.
பாலக்காட்டில் மாட்டுக் கொட்டடி சந்தில்தான் தீட்டு இருக்காது என்பதற்காக காந்தியார், சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியாரை சந்திக்கின்றனர். காந்தியாருக்கு இந்தி தெரியும். பெரிய சங்கராச்சாரியாருக்கும் இந்தி தெரியும். ஆனால் இந்தியில் சங்கராச்சாரியார் பேசவில்லை.
சமஸ்கிருதத்தில்தான் நான் பேசுவேன் என்று சங்கராச்சாரி சொல்லுகின்றார். காந்தியாருக்கு சமஸ்கிருதம் தெரியாது. அவர் மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்துதான் அவர்களுடைய உரையாடல் நடைபெற்றது. இந்த சேதி எதிலேயிருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம். ஆயிரம் பக்கங்களுக்கு மேற்கொண்ட நூல் தமிழ்நாட்டடில் காந்தி என்ற நூலிலே இந்த சேதி அப்பட்டமாக இருக்கின்றது.
இப்பொழுது பார்ப்பனர்கள் என்ன நினைக்கின்றார்கள், ஜெயேந்திரர் தப்பு பண்ணிவிட்டார். இவரைக் காப்பாற்றுவது இனிமேல் கடினம். அதனால் இளைய சங்கராச்சாரியரை உயர்த்திக் காட்டலாம் என்று ஒரு நீக்க போக்கு தந்திரத்தோடு செயல்படுகிறார்கள்.
சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் கம்யூனல் ஜி.ஓ.வே. கூடாது என்று சொன்னார்.
கம்யூனல் ஜி.ஓ.வினால் நமது பிராமண பசங்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டாமா? அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று சங்கராச்சாரியார் கேட்கின்றார்.
அடுத்து அவர் சொன்ன ஒரு கொடுமையான சேதி, நாஸ்திகனுக்கு வைத்தியம் செய்யக் கூடாது என்பது வேதம். ஏன் நாஸ்திகர்களுக்கு வைத்தியம் செய்யக் கூடாது என்பதற்கு விளக்கம் சொல்லுகின்றார் அவர். இதனுடைய உள் அர்த்தம் என்ன? இது என்ன கருணையே இல்லாமல் இப்படி சொல்லப்பட்டிருக்கின்றதே என்று சொல்லலாம். ஆனால், இப்படி சொன்னதே அவருடைய கருணையால்தான். வியாதியினால் தான் கஷ்டம் தெரிகிறது. கஷ்டம் என்று வரும்பொழுது தான் எப்படியாவது இதிலிருந்து மீள வேண்டும் என்ற தவிப்பில் கடவுள் என்று நிஜமானால், வேத சாஸ்திரம் நிஜமானால் அது காப்பாற்றும் . அப்புறம் நான் சாஸ்திரப்படி பண்ணுகிறேன் என்று ஒரு நாஸ்திகன் நினைக்க முடிகிறது. வைத்தியன் சிகிச்சை பண்ணமாட்டான் என்று நினைத்துவிட்டால் அப்பொழுது நாஸ்திகன் பகவான் பக்கம் திரும்பத் தான் செய்வான் என்று சொல்லுகின்றார்.
அதே மாதிரி சமபந்தி கூடாது என்று சொல்லியிருக்கின்றார். ஆகவே இந்தத் தத்துவங்கள் எல்லாம் எதைச்சார்ந்தது என்றால் இந்து மதத்தைச் சார்ந்தது. வர்ணாசிரம தர்மத்தைச் சார்ந்தது.எனவே தத்துவங்கள் வளரக் கூடிய அமைப்பு வளர வேண்டும் என்று சொன்னால் அது பாதுகாக்கப்பட வேண்மென்றால், தெரிந்தோ தெரியாமலோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாருக்கு நாம் துணை போகிறோம் என்பதை அருள் கூர்ந்து எல்லோருமே சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
இந்த நாட்டிலே சங்கர மடம் இருந்தால், என்ன பணியை செய்யப் போகிறது? இராகுகாலம் போன்ற மூடநம்பிக்கைகளைத்தானே வளர்க்கப் போகிறது. ஏதோ மேலெழுந்த வாரியாக, யாரையோ தாக்குவதற்காக நாங்கள் பேசவில்லை. உண்மைகள் களப்பலியாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் இவைகளை நாங்கள் எடுத்துச் சொல்லுகின்றோம்.
மறைந்த பெரிய சங்கராச்சாரியாரே ரொம்ப லாவகமாக செய்தார். அதற்கு பெரிதம் துணையாக இருந்தவர் இன்றைக்கு இருப்பவர், அதைத் தொடர்ந்து கொண்டிருப்பவர். அவரை விட சில புதிய தொழில் நுணுக்கங்களை ரொம்ப அதிகமாகப் புகுத்தியவர் இந்த ஜெயேநதிர சங்கராச்சாரியாவார்.
காஞ்சி மடம் சங்கர மடம் என்று சொன்னால், சங்கராச்சாரியாராலே நிறுவப்பட்ட மடம் என்றால் நிச்சயமாக காஞ்சிமடம் சங்கரமடமாக ஆக முடியாது. வாரணாசியைச் சார்ந்த இராஜகோபால சர்மா காஞ்சி மடம் ஒரு கட்டுக் கதை என்றே ஆங்கிலத்தில் எழுதி தமிழிலே அதை மொழி பெயர்த்திருக்கின்றார்கள்.
சங்கராச்சாரியார் மடத்தைப் பற்றி நாத்திகர்களுக்கென்ன கவலை என்று கல்கி இதழிலே கேட்கின்றார்கள்.
நாத்திகர்களுக்கு மடத்தைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் உண்மையைப் பற்றி கவலை இருக்கின்றது. மக்கள் உண்மையை புரிந்த கொள்ள வேண்டும் என்ற கவலை எங்களுக்கில்லாத கவலை வேறு யாருக்கு இருக்க முடியும்?
வீஜுe நிeeவ 28.11.2004இதழில் வந்த சேதியைப் படிக்கின்றேன்,
நுrஷ்ஆஷ்ஐழியி ளீலிஐமிrலிஸerவிதீஎன்பது தலைப்பு. இதற்குள் உள்ள சேதியைப் படிக்கின்றேன்.ஸூபுdஷ் றீழிஐவழிrழி (788-820 பும் ழிஸ்ரீஸ்ரீrலிமு)  ஷ்வி ணுeயிஷ்eஸed மிலி ஜுழிஸe eவிமிழிணுயிஷ்விஜுed க்ஷூலிற்r Peeமிஜுழிவி (விeழிமிவி) - யழிdrஷ் ஷ்ஐ மிஜுe ஹிலிrமிஜு, Pற்rஷ் ஷ்ஐ மிஜுe சிழிவிமி, ம்ழழிrழிவழி ஷ்ஐ மிஜுe ழeவிமி ழிஐd றீrஷ்ஐஆerஷ் ஷ்ஐ மிஜுe றீலிற்rமிஜு ழிஐd ழிமிமிழிஷ்ஐed ஜுஷ்வி விழிதுழிdஜுஷ் ஷ்ஐ லுழிவிஜுதுஷ்r. சிழிஉஜு விeழிமி ஜுழிவி ழி விழிஐவழிrழிஉஜுழிrதீழி என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதி சங்கரர் காஷ்மீரில் தான் மறைந்தார். ஒவ்வெரு மடத்திற்கும் ஒவ்வொரு சங்கராச்சாரியார் இருக்கின்றார் . வடக்கே பத்ரிநாத் மடம், கிழக்கே பூரி மடம்,மேற்கே துவாரக மடம், தெற்கே சிருங்கேரி இருக்கின்றது.
வீஜுe றீrஷ்ஐஆerஷ் துற்மிமி விeமி ற்ஸ்ரீ மிஜுe ணுrழிஐஉஜு ஷ்ஐ லுற்துணுழிவலிஐழிது ஷ்ஐ 1821 க்ஷூலிr ழஜுஷ்உஜு மிஜுe னிழிrழிமிஜுழி rழிளூழி லிக்ஷூ வீழிஐளூலிre eமுமிeஐded ஸ்ரீழிமிrலிஐழிஆe.
1821 இலே சிருங்கேரி மடம் கும்பகோணத்திலே ஒரு கிளை மடத்தை நிறுவியத. அப்போது தஞ்சையை ஆண்ட மராத்திய அரசர் அதற்கு ஆதரவு காட்டினார்.
இப்பொழுதும் சிலருக்கு ஒரு மயக்கம் இருக்கின்றது. என்னவென்றால் இந்த சங்கராச்சாரியார் தான் மோசம். மறைந்த பெரிய சங்கராச்சாரியார் ரொம்ப நல்லவர். மனிதர்களுக்கு சாதகமாக இருந்தவர் என்று. அது உண்மையல்ல.
தத்தவம் சொள்கை என்று வருகின்றபொழுது, மனித நேயத்திற்கு முற்றிலும் முரணாக நடந்த கொண்டவர் பெரிய சங்கராச்சாரியார்தான். நான் சொன்னதிலே ஒரு வரி கூட யாரும் மறுத்துச் சொல்ல முடியாது. ஆதாரங்களோடு உங்களுக்கு சொல்லுகின்றேன்.
மறைந்த பெரிய சங்கராச்சாரியார்  சந்திரசேகரேந்திரருடைய தெய்வத்தின் குரல் என்ற நூல் ஏழு காகமாக வந்திருக்கின்றது.
நாட்டில் எது சட்டமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது மனு தர்மம் தான் சட்டமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்.
எந்த ஆட்சி வந்தாலும் மனதர்மப்படிதான்ஆட்சி நடக்க வேண்டும். ஏனென்றால், சங்கர மடம் என்று சொன்னால், இதை செய்வதற்காக இருக்கின்ற மடம் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. அவர்கள் தங்களுடைய பணியைச் செய்கிறார்கள் என்று சொன்னால் இதைத் தவிர வேறு இருக்க முடியாது. அரசியல் சட்டத்தில் அடிப்படை மாற்றம் கூடாது என்று இன்றைக்கும் எப்படி வாதம்செய்யப்படுகிறதோ அதே மாதிரி மனுதர்மத்தையும் விடக் கூடாது என்று அவர் சொல்லியிருக்கிறார்.
ஜெயேந்திரரின் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்குக் கனகாபிஷேகம் என்று சொல்லி வெளி நாட்டிலிருந்து தங்கம் வரவழைக்கப்பட்டது. இது பற்றி அன்று இந்த ஏடே எழுதியது. இலண்டனிலிருந்து வந்திருக்கிறது. 85 கிலோவுக்கு மேல் தங்கம்‡ பெட்டிகளில்.
சுங்கத்துறை அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறத என்று கூடத் திறந்து பார்க்கவில்லை. கேட்டால் மத்திய நிதி அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளதாம். அந்தத் தங்கத்தை காஞ்சிபுரத்துக்கு எடுத்துச் சென்ற போது அய்.ஜி.க்கள் பாதுகாப்புக்காகச் சென்றார்கள் என்றால் காஞ்சிமடத்துக்கு மேல் மட்டத்தில் எப்படியயல்லாம் ஆள் இருக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
85 கிலோவுக்கு மேல் தங்கம் என்றால் அதற்கு ஏதாவது எல்லை இருக்கிறதா? வெளியிலே ஆன்மீக வேடம் போட்டாலும் உண்மையிலேயே அடிப்படையில் அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர்.
நெருக்கடி காலத்தில் தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ் இயக்கம். அந்தத் தலைமறைவு இயக்கத்திற்குக் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி எந்தெந்த வகைகளில் எல்லாம் உதவி புரிந்தார் என்பதை, ஆர்.எஸ்.எஸின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலன் அய்யர்வாளின் நூலான நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் என்ற நூலிலிருந்தே எடுத்துக காட்டி, காவி உடைக்குள் பதுங்கி இருக்கும்ஆர்.எஸ்.எஸ் என்கிற படம் எடுக்கும் பாம்பைப் படம் பிடித்துக காட்டியுள்ளார்.
காஞ்சி மடம் என்பது ஓர் ஆர்.எஸ்.எஸ் நிறுவனம். அதனை ஊட்டி வளர்க்கும் ஒரு பீடம் தான் காஞ்சி மடம். இன்னும் புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை‡சேத்துப்பட்டில் கட்டப்பட்ட ஒரு கோடி ரூபா மதிப்புடைய ஆர்.எஸ்.எஸ் கட்டடத்தைத் திறந்த வைத்தவரே சாட்சாத் இந்த ஜெயேந்திரர்தான்.
நடந்து முடிந்த 13 வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் அலுவலகத்தை சென்னையில் திறந்து வைத்த திருமேனியும் இவரேதான். காஷாயத்துககுள் கவாத்து எடுக்கும் அந்த உணர்வுக்குப் பெயர் ஆர்.எஸ்.எஸ். எனவே தான் இந்த பீடத்தை காக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.
சங்கர மட பீடத்தைக் காக்க ஜெயேந்திரரைக் கூட காவு கொடுக்க அவர்கள் தயார். கல்கியும், துக்ளக்கும் அந்தப் பீடத்தைக் காக்க வேண்டும் என்று கண்ணீர் அபிஷேகங்களைச் செய்து கொண்டு இருக்கின்றன. அந்தப் பீடத்தின் உண்மை உள்ளம் என்ன?
மனுதர்மம் தான் அரசமைப்புச் சட்டம் ஆக வேண்டும். இது மகா பெரியவாள் என்று அவர்கள் வட்டாரத்தில் தூக்கி நிறுத்தப்படும் சந்திரசேகரேநதிர சரஸ்வதியின் அருள்வாக்கு இது. தீண்டாமை சேமகரமானது என்பது தான் அநத பீடத்தின் கொள்கை. விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு ஒபபானவர்கள. பெண்கள் பற்றிய அவர்களின் கொள்கை அது தான்!
காஞ்சி சங்கர மடம் என்பது ‡ மனித நேயம், மனித உரிமை, மனித சமத்துவம் இவைகளுக்கு நேர் எதிரானது ‡ வருண தர்மம் காப்பது தான் அவர்களின் வாழ்நாள் நோக்கம். இந்த பீடம் காக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் அது அழிக்கப்பட வேண்டும் என்பதுதானே நமது நோக்கமாக இருக்க முடியும்!
இது ஒரு நல்ல சந்தர்ப்பம். பழம் நழுவிப் பாலில் விழுந்திருக்கிறது. நழுவ விடலாமா என்பதை நல்ல உள்ளங்கள் சிந்திக்கட்டும்.
சங்கர மட பீடம் என்பது தமிழர்களுக்கு எதிரானது. மனித நேயத்துககுப் பகையானது. சமத்துவத்திற்கு மாறானது. பார்ப்பனர்களுக்காகவே மட்டும் உயிர் வாழ்வது என்கிற எண்ணம் மட்டும் கலையாது என்பது உறுதி. உறுதியிலும் உறுதி. (உண்மை, டிசம்பர் 1 ‡15, 2004) 

No comments: