Monday, September 6, 2021

தந்தை பெரியார் பற்றி வ.உ.சி.

 தந்தை பெரியார் பற்றி வ.உ.சி.

திரு. இராமசாமி நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய தில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவில் பார்லிமெண்டில் பேசப்படுகின்றது என்றால் நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?

திரு. நாயக்கரிடத்தில் உள்ள விசே­ குணம் என்னவென்றால், மனத்திற் படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை  எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்த பின், நானும் அவரும் விலகி விட்டோம். 

பிறகு, நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்துக்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விட பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்.

(கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் (பிள்ளை) அவர்கள் 1928 ஆம் ஆண்டில் கூறியது)

No comments: