Monday, March 28, 2022

சீமான் பற்றி விவேகானந்தன் பதிவு -1

 சீமானின் அரசியல் வாரிசு நீட் கல்யாணசுந்தரமும், சிவராஜ் தாத்தாவும்.

அனிதாவின் மரணத்தின் போது நீட்டை ஒழிக்காமல் விட மாட்டோம் என கர்ஜித்த கல்யாணசுந்தரம், நீட் தேர்வுக்கு கோச்சிங் செண்டர் காண்ட்ராக்ட் பிடித்து நடத்தி வருகிறார் என்பதை அம்பலப்படுத்தியிருந்தேன்.

அதற்கு பதில் சொல்லியிருக்கும் அவர் “நீட் திணிக்கப்படும் போது அதை எதிர்கொள்ள எம் பிள்ளைகளை தயார் செய்வது எம் கடமை” என்று ஆயிரத்தில் ஒரு வார்த்தையை உதிர்த்துள்ளார். பண்ற பிசினசுக்கு பேரு சேவையாம். இதையேதான் அந்த தாத்தாவும் சொன்னாரு.

”பேர பசங்களா! தாத்தா சொல்றத கேளுங்கடா”-ன்னு இன்றைய இளைஞர்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்காக சிவராஜ் தாத்தா தினந்தோறும் தொலைக்காட்சியில் வந்து தொண்ட வற்ற கத்திக் கொண்டிருக்கிறார் பாவம்.

ஒரு தமிழ்த்தேசியம் பேசுவதாக சொல்லிக் கொள்ளும் கட்சியின் மாநில பொறுப்பாளரின் வேலை என்னவாக இருக்க முடியும்? தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களையும் போராட வரச்சொல்லி, நீட் தேர்வை விரட்டுவதுதானே தமிழ்த்தேசியத்தின் வேலை. அதைவிட்டுவிட்டு, தம்பி, தங்கைகளே! நாம் தமிழர் ஆட்சி வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுகிறோம். அதுவரை என்னிடம் வந்து நீட் தேர்வுக்கு Fees கட்டி கோச்சிங் எடுங்கள் என்று சொல்வதா அவரின் வேலை. தமிழ்நாடு முழுதும் உள்ள எத்தனை மாணவர்களுக்கு நமது பேராசிரியர் சுயம்புவால் பயிற்சி கொடுக்க முடியும்.

தமிழ்நாடு முழுதும் பயிற்சி வகுப்பு நடத்த மாவட்டந்தோறும் CISTEM Academy-ன் கிளை திறக்கப்படுமோ. இதற்குப் பதிலாக எடப்படி பழனிச்சாமிக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகலாமே. அவரும் இதையேதான் சொல்கிறார். நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணோம். But மோடி ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டார். அதனால நீட் எழுதுங்க. நாங்க இலவச கோச்சிங் செண்டர் உருவாக்கித் தர்றோம்னு. 

இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் தான். எடப்பாடி இலவச பயிற்சி தரப்போறாராம். கல்யாணசுந்தரம் Full Time ல காசுக்கும், Free யா இருக்குற நேரத்துல 

Free யாவும் சொல்லித் தரப் போறாராம். கொண்ட கொள்கைக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது! 

இங்கு கவனிக்க வேண்டியது..இங்கு நான் நாம் தமிழர் கட்சியின் கடைக்கோடி தொண்டனைப் பற்றி பேசவில்லை. சீமானுக்கு அடுத்ததாக கட்சியில் கைகாட்டப்படும், மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளரை பற்றி பேசுகிறேன்.

இன்னொரு பக்கம் தேடிப்பார்த்தா இவங்க கொண்ட கொள்கையே இதுதான்னு நாம் தமிழர் ஆட்சி வரைவு ஆவணத்தை படிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. நாம் தமிழர் ஆட்சியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க மீண்டும் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள் (நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு - பக்க எண்91). கோச்சிங் செண்டர் பிசினசை பெருக்க எவ்வளவு யோசித்திருக்கிறார்கள். பிறகென்ன ம***த்துக்கு இந்த துரோகிகள் அனிதா படத்தை வைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்தவேண்டும். 

இது தெரியாம, அப்பாவி தம்பிகள் சிலர், அனிதா இறந்ததுக்கு முன்னாடி தான் கல்யாணசுந்தரம் நீட் கோச்சிங் செண்டர் நடத்தினார். இப்போ இல்லை என்று பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் கல்யாணசுந்தரம் நீட் கோச்சிங் செண்டரை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை இங்கு இணைத்துள்ளேன். (தம்பிகள் விருப்பப்பட்டு கேட்டால் Fees Detailsஐ கூட இணைக்க முடியும். NEET பயிற்சியறையில் பெருமிதத்தோடு இயற்பியல் ஆசிரியனாக என்று பதிவிட்டு அதனை delete செய்தது வேறு கதை)

இன்னொன்று அவரிடம் படிக்கும் மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதுறாங்களாம். அதில் நீட் தேர்வும் ஒன்றாம். அப்புறம் எதுக்கு Coaching Center விளம்பரத்துல கட்டம் போட்டு கொட்டை எழுத்துல NEET-னு போடனும்?

போராடுவது சாதாரண குடும்ப மாணவனின் வேலை இல்லையாம். உங்கள் முகத்தில் கரியைப் பூசித்தானே நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டத்தை நடத்தினார்கள். 

தான் நடத்துக்கும் Unethical Business-க்கு சேவை நிறம் பூச முயன்று கொண்டிருக்கிறார் சீமானின் அரசியல் வாரிசு. எல்லாவற்றிலும் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து, அதற்கு எளிய பிள்ளைகள் என்று சொல்லி முட்டுக் கொடுக்கும் கலையை சீமான் மட்டுமல்ல, அவரின் அரசியல் வளர்ப்புகளும் மிக நன்றாக கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்.

“துரோகத்திற்கு பதில் பாடை ஏறுவதே மேல்” என்று பதிவிட்டிருந்தார். சொன்ன வார்த்தையை எப்போது காப்பாற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு இன்னும் அவரிடமிருந்து பதில் வரவேயில்லை.

No comments: