Tuesday, August 31, 2021

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்க்கி கொலை வழக்கு

 பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர் - கோவிந்த் பன்சாரே - எம்.எம்.கல்புர்கி கொலை வழக்கில் புதிய திருப்பம


தடயவியல் ஆதாரங்களை  இங்கிலாந்துக்கு அனுப்பிட முடிவ

புதுடில்லி, ஆக.26 மத்தியப் புலனாய்வுக்குழு விசாரணை செய்துவருகின்ற பகுத்தறி வாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் தடயவியல் ஆதாரங்கள் ஆய்வுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட உள்ளன.

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையில் உள்ள தடயவியல் வல் லுநர்களின் முடிவுகளைப் பெறுவதற்காக தடயவியல் ஆதாரங்களை இந்த வாரத்தில் அனுப்பிவைப்பதென மத்திய புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளது.

மகாராட்டிர மாநிலத்தில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கருநாடக மாநிலத்தில் எம்.எம்.கல்புர்கி ஆகிய மூன்று பகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்பட்டதில், இந்துத்துவா வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த கொலையாளிகள் பயன் படுத்திய துப்பாக்கி ஒரே துப்பாக்கியா அல்லது வெவ்வேறா என்பதை கண்டறிய தடயவியல் ஆதாரங்கள் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை தடயவியல் வல்லுநர்களுக்கு மத்திய புலனாய்வுக்குழு அனுப்புகிறது.

பகுத்தறிவாளர்களைக் கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி யின் துப்பாக்கிக் குண்டின் 7.65 மி.மீ. காலி ஷெல்கள் மற்றும் காட்ரிஜ்கள் புலனாய்வுக்குழுவினரால் கைப்பற்றப் பட்டன.அவற்றைஸ்காட்லாந்துயார்டு காவல்துறையின் தடயவியல் புலனாய் வுக் குழுவினருக்கு அனுப்பி, பகுத்தறிவா ளர்கள் கொலைகளில் ஒரே ஆயுதமே பயன்படுத்தப்பட்டுள்ளதா என்கிற முடிவு குறித்து கருத்து கேட்கப்பட உள்ளது. 

மத்திய அரசின் தாமதம்

தடயங்கள்மீதான புலனாய்வு மேற் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களாகியும், மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிப்பதில் காலதாமதம் ஆகி விட்டது என்று மத்திய புலனாய்வுக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிந்த்பன்சாரேமற்றும்எம்.எம். கல்புர்கி கொலைகளில் இந்துத்துவா வலதுசாரி அமைப்பாகிய சனாதன்சன்ஸ் தாவின் தொடர்புகள் குறித்து மத்திய புலனாய்வுக்குழு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.

கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழுவினரால் கடந்த ஜூன் மாதத்தில் சனாதன்சன்ஸ்தா அமைப் பைச் சேர்ந்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டு புனே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.  மற்ற இரண்டு கொலை வழக்குகளான பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்குகளில் அவ்வமைப்பு மற்றும் கைது செய்யப்பட்டவர் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினரின் காவலில் வைத்து வி£ரணை செய்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்

ஸ்காட்லாந்து யார்டு தடயவியல் அறிக்கை மத்திய புலனாய்வுத்துறைக்கு கிடைக்க பெற்றதும், அவ்வறிக்கை மத்திய புலனாய்வுக்குழுவால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

2013 ஆம் ஆண்டு நடந்த நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு மகாராட்டிர காவல்துறையிடமிருந்து மத்திய புலனாய் வுக்குழுவின் விசாரணைக்கு 2014ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதேபோல், மற்ற இரண்டு வழக்குகளையும் மத்தியபுலனாய்வுக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தினால், மூன்று வழக்குகளிலும் உள்ள தொடர்பை கண்டறிந்து வெளிப் படுத்த வாய்ப்பாக இருக்கும் என்றும் மத்திய புலனாய்வுத்துறையின் சார்பில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

No comments: