Friday, August 27, 2021

கொளத்தூர் மணி அவர்களின் விடை

 சேலம் தமிழ் சங்கம் சார்பில் பெரியார் அவர்களால் தேவநேயப் பாவாணருக்கு திராவிட மொழி நூல் ஞாயிறு என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 இந்த படத்தில் வலது பக்கம் அமர்ந்து இருப்பவர் பாரதிதாசன் போலவே இருக்கிறார். 

அவர் பாரதி தாசனா என்று அண்ணன் கொளத்தூர் மணி அவர்களிடம் கேட்டிருந்தேன். அதற்கு அண்ணன் வாட்ஸ் அப்பில் விடையை பதிவிட்டிருந்தார்.... 

நான் அதை படித்து முடிப்பதற்குள்ளாகவே கைப்பேசியில் அழைத்தும் பேசினார்.... 

அவர் அனுப்பிய குறுஞ்செய்தி விடை...

இல்லை. இரத்தினம் பிள்ளை எனும் சேலம் பிரமுகர். நீதிக் கட்சிக்காரர்.  இவர் சேலம் கல்லூரிக்கு ஒரு கட்டிடம் கட்டிக் கொடுத்தார். Rathinam Buildings எனும் பெயர்.

கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது தான் ஒரு சொத்து பொதுவாக்கப்பட்டால் அவரின் பெயர்  நிலைத்து நிற்கும் என்று பெரியார் பேசினார்.


 பாவாணர் அல்லாமல் நின்று கொண்டிருப்பவர் பேராசிரியர் தி வை சொக்கப்பா ஆவார். திருவாரூரில் அவர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய போது கலைஞரும் திருவாரூர் தங்கராசுவும் அவருடைய மாணவர்கள்.


 சேலம் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர்.  பேராசிரியர்.


 1971 இல் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும் ஆவார். 


ஊர்வலத்தில் பெரியாரோடு தேரில் அமர்ந்து வந்தவர். தனித்தமிழ் ஆர்வலர். அவர் உலகத் தமிழ்க் கழகத்தின்  ஏட்டுக்கு ஆசிரியராயும் இருந்தார்.

No comments: