Friday, May 27, 2022

செ.அருள்செல்வன் எழுதியக் கட்டுரைக்கு மறுப்பு

திராவிட இயக்கத்தின் ஆங்கிலக் குரல் என்ற தலைப்பில் தமிழ் இந்துவில் கட்டுரை எழுதிய செ. அருள்செல்வன் அவர்களுக்குச் சில கேள்விகள்.

அண்ணாவின் அரசியல் குரு பி. பாலசுப்பிரமணியம் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளீர்களே அண்ணா எப்போது பி.பா. என்னுடைய அரசியல் குரு என்று எழுதினார் ஆதாரம் காட்ட முடியுமா?

பெரியார் நீதிக்கட்சித் தலைவராக வந்த உடனே பி,பா.அச்சகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டதாக எழுதி உள்ளீர்கள்.

பெரியார் நீதிக்கட்சித் தலைவராக தோர்ந்தெடுக்கப்பட்டது. 1938இல் திசம்பர் மாதம் 29,30,31 நாள்களில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில். 

பி,பா, 1940 முதல் சண்டே அப்சர்வர் இதழில் பெரியாரைத் தாக்கி எழுதி வந்துள்ளரே எப்படி.?.

ராசாசி அவருக்கு சீனத்தூதுவர் பதவி அளித்ததை இவர் பெருந்தன்மையாக மறுத்துவிட்டார் என்று கூறியுள்ளீர்களே அது உண்மையா?

15.7.1950 முதல் இரசாசி நேரு அமைச்சரைவையில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தாரே தேரியுமா?

வல்லபாய் பட்டேல் இறந்த பிறகுதான் உள்துறை அமைச்சர் பதவி வழக்கப்பட்டது தெரியுமா?

உள்துறை அமைச்சர் எப்படி வெளிநாட்டுத் தூதுவரை நிமிக்க முடியும்?

எல்லாவற்றுக்கும் மேலாக சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் தமிழர் கழகம் என்று பெயர் வைக்கக் கோரினார் என்று எழுதியுள்ளீர்களே அது பொய்யல்லவா?

பி.பா திராவிடர் கழகம் என்ற பெயர் வேண்டாம் பழைய நீதிக்கட்சி என்ற பெயரே வேண்டும் என்று தான் வாதாடியுள்ளார்.

பெரியார் தலைமையை வீழ்த்த வேண்டும் என்று  போரடி தோற்றுப் போன ஒருவருக்கு 1957 தேர்தலில் பெரியார் ஆதரிக்கவில்லை என்று எழுதுவது என்ன நியாயம்?.

குறிப்பு : அருள் செல்வன் அண்ணல் தங்கோவின் பெயரன் எனக்கு நண்பர் தான். பெ.ம.அவர்களோடு இயங்குகிறார்.

வாலாசா வல்லவன் பதிவு

No comments: