Saturday, December 14, 2019

இராசாசியின் அரசியல் நுழைவுப் பற்றி தந்தை பெரியார்



இராசாசியின் அரசியல் நுழைவுப் பற்றி தந்தை பெரியார்


அய்யங்கார்களுக்கு காங்கிரசிலும் செல்வாக்கில்லை என்பதோடு பிரம்மஞh சங்கத்திலும் செல்வாக்கில்லாமல் போய்விட்டதுஜஸ்டிஸ் கட்சியும் பலம்பெறும் போக்கில் இருந்ததையும் உணர்ந்த இராஜhஜிபார்ப்பனர் நலத்தையும் அய்யங்கார் நலத்தையும் கருதிபொது வாழ்வில் அரசியலில் இறங்க முன்வந்தார்அவரை எனக்கு 1910 ஆம் ஆண்டுவாக்கிலிருந்து தெரியும்அக்காலத்தில் அவரை மக்கள் ஒரு உண்மையான நல்ல மனிதர் என்றே கருதினார்கள்சர்.பி.தியாகராய செட்டியார் கூட ஒரு சமயத்தில் ‘இராஜகோபாலாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களிடம் ஜஸ்டிஸ் கட்சிக்கு வெறுப் பில்லை’ என்று சொல்லி இருக்கிறார்அவர் (இராஜாஜி) 1912 வாக்கில் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிடுவார்இதனாலும் அவரிடம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதுஅப்போது அவர் ஒரு பகுத்தறிவு வாதியாகவே நடந்துகொண்டார்.

அய்யங்கார் உணர்ச்சியும்ஜஸ்டிஸ் கட்சி எதிர்ப்பு உணர்ச்சியும் அவரை அரசியலில் இறங்க செய்தது என்றாலும்வரதராஜஷலு நாயுடுபெசண்ட் அம்மையையும் ஜஸ்டிஸ் கட்சியையும் எதிர்த்துப் பொதுக்கூட்டங்களில் ஆபாசமாகப் பேசி வந்ததால்சென்னை ‘சுதேச மித்திரன்’, ‘இந்து’ பத்திரிகை ஆதரவு கொடுத்து அவரை மிகத் தூக்கி விட்டனஅந்த சமயத்தில் மதுரையில் அவர்மீது அரசியல் வழக்கு ஏற்பட்டதுஅந்த வழக்குக்கு இராஜாஜி வலிய ஆஜராகி விவாதித்து அய்க்கோர்ட்டில் ஒரு சட்ட ஓட்டை காரணமாக விடுதலை கிடைத்ததுஅதனால் இராஜாஜிக்கும் வரதராஜஷலு நாயுடுவுக்கும் ஒரு நல்ல பிரபலம் ஏற்பட்டது

இந்த பிரபலத்தால் இவர்கள் இருவருக்கும் அரசியலில்ஒரு நல்ல இடம் கிடைத்ததுஅப்போது அரசியல் பத்திரிகைக்காரர்களிடமும் பார்ப்பனர்களிடமும் மாத்திரமே இருந்ததால் ஜஸ்டிஸ் கட்சியை முன்னிட்டு இவர்களுக்குப் பார்ப்பனரல்லாதார் நபர்கள் தேவைப்பட்டதுஇதற்கு ஒரு நபர் டாக்டர் வரதராஜஷலு கிடைத்தார்அந்த சமயம் நான் ஈரோட்டில் ‘பெரிய’ வியாபாரிமுனிசிபல் சேர்மென்ஜில்லாவில் ஒரு அளவுக்கு முக்கியமானவர்களின் ஒருவன்ஊரில் நாட்டாண்மைக்காரன் போல் இருந்து வந்தவன்எனக்கு இருவரும் வலை வீசினார்கள்நானும் அந்த வலையில் சிக்கிவிட்டேன்இவர்கள் முயற்சிக்கு என்னை ஒரு முக்கியமானவனாகக் கருதிக் கொண்டார்கள்இராஜாஜிக்கு வரதராஜலு நாயுடுவிடம் அந்தரங்கமான நம்பிக்கை இல்லைஅவரை சூதாகவே தூக்கிப் பேசுவார்கள்எனக்கு இராஜாஜி உண்மையான நம்பிக்கையாளராகவும்நண்பராகவும் ஆகவேண்டும் என்பதும் இராஜாஜியின் ஆசைஅதனால் நான் அவர் நடப்பில் முழுகிவிட்டேன்

நானும்நாயுடுவும் இராஜாஜிக்கு பக்கபலமாக இருந்ததால் இராஜாஜிக்கு தமிழ்நாட்டில் மாத்திரம் அல்லாமல்வெளியிலும் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டதால் இராஜாஜி மீது சென்னை பார்ப்பனர் சத்தியமூர்த்திரெங்கசாமி அய்யங்கார்கஸ்தூரிரங்க அய்யங்கார்சீனிவாசய்யங்கார் ஆகியவர்களுக்கு பொறாமை ஏற்பட்டு இராஜாஜி செல்வாக்கை ஒழிக்க முயற்சி செய்தார்கள்இராஜாஜிகாந்தியை ஆதரித்து அவரை தன் வயப்படுத்த முயன்று வேலைசெய்து வந்தார்சென்னை பார்ப்பனர்கள் திலகரைப் பிடித்து தன் வசப்படுத்தி இராஜாஜியை ஒழிக்க முயற்சித்தார்கள் அமிர்தசரஸ் காங்கிரசில் எங்கள் ஆதரவால் காந்தி வெற்றி பெற்றார்திலகர் தோல்வி அடைந்தார்ஒரு ஆண்டுக்குள் அந்த கவலையால் திலகர் செத்தார்

காந்திஎதிர்ப்பில்லாத ஏக தலைவர் ஆனார்அவரை சர்வாதிகாரி ஆக்கி விட்டோம்இதற்கு இராஜாஜிக்கு முக்கிய பங்கு உண்டுகாந்திக்கு இராஜாஜிதான் முக்கிய ஆதரவாளராக இருந்தார்அதன் பயனாக காந்தி சுத்த மூடநம்பிக்கைப் பிண்டமாக ஆக்கப்பட்டுவிட்டார்காந்தியை இராஜாஜி கெடுத்துவிட்டார் என்று கருதிஜவகர்லால் நேரு முதலியவர்களுக்கு இராஜாஜி மீது ஆத்திரம்/துவேஷம்என்னையும் வரதராஜஷலு நாயுடுவையும் இராஜாஜியிடமிருந்து பிரிக்கப் பார்த்தார்கள்சரோஜினி அம்மை என்னோடு தெலுங்கில் பேசி மயக்கப் பார்த்தார்வரதராஜஷலு நாயுடுவுக்கு இராஜாஜி மீது சிறிது வெறுப்பு இருந்ததால்அவர் கலைந்துவிட்டார்உடனே அவருக்கு காரியக் கமிட்டியில் ஒரு இடம் கொடுத்தார்கள்நான் மறுத்துவிட்டேன்இதனால் இராஜாஜிக்கு என் மீது வெகுபிரியம்வெகுநம்பிக்கைநான் தலைமைப் பதவியில் இருந்தபோது ஒரு சர்வாதிகாரியாகவே நடந்து கொள்ளுவேன்

டாக்டர் இராஜன்சந்தானம்வரதாச்சாரி ஆகியவர்கள் இராஜாஜியிடம் என்மீது புகார் கூறுவார்கள்அதற்கு இராஜாஜி ‘நாயக்கரைப் போல் ஒரு உண்மையான மனிதரைக் காணவே முடியாது’ என்று சொல்வதோடு, ‘நாயக்கரின் உயிரின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியாது’ (You don’t know the important of Mr. Naicker’s lifeஎன்று சொல்லுவார்கள்

பார்ப்பனர்களில் மிக விஷமத்தன பார்ப்பனீய பார்ப்பனர் .வே.சுஅய்யர்அவரை எனக்குப் பிடிக்காதுஇராஜாஜிக்கும் பிடிக்காதுசீனிவாசய்யங்கார் பேச்சைக் கேட்டுக் கொண்டு என் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்இராஜாஜி ஓட்டு சேகரம் செய்து அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார்அதுமுதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கட்சி ஏற்பட்டுவிட்டது

அப்படி எல்லாம் இருந்த இராஜாஜிஜஸ்டிஸ் கட்சி பலவீனப்பட்டுவிட்டதுகாங்கிரசுக்கு செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது என்ற நிலையைப் பார்த்தவுடன் என்னை அலட்சியமாக நினைக்க ஆரம்பித்தவுடன் நான் போனால் போகட்டும் என்று கருதி தந்திரமுறையிலேயே நட்புக் காட்டிவந்தார்இதைத் தெரிந்து கொண்டு நானும் தோழர் எஸ்ராமநாதனும் மாத்திரமே சற்று ஜாக்கிரதையாக இருந்தோம் என்றாலும் தமிழ்நாட்டில் என்னைத் தவிர தோழர் ராமநாதனைத் தவிரமற்றபடி வரதராஜஷலு நாயுடுதிருவிகல்யாணசுந்தர முதலியார் முதலிய எல்லா பார்ப்பனரல்லாதார்பார்ப்பனர்களின் இராஜாஜியின் கையாட்களாகவே ஆகிவிட்டார்கள்காரணம் ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்தால் இவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும் என்கின்ற தைரியம்தான்.

காங்கிரசால் இராஜாஜி அடைந்த பதவி சுகங்கள்

காங்கிரசினாலே இராஜாஜிக்கு என்ன குறைஎடுத்ததும் கவர்னர்கவர்னர் ஜெனரல்இரண்டு தடவை முதல் மந்திரிஒரு தடவை டெல்லி மந்திரி காங்கிரசில் (ஜாஜ் ஃபண்டில்மாதம் ரூ 250 பெற்று வாழ்க்கை நடத்தியவருக்கு சுமார் 10 லட்சம் செல்வம்,  இன்னும் மாதம் ரூ.1000 பென்ஷன்பார்லிமெண்ட் பதவியில் இருக்கிறார்மற்றும் சில சவுகரியம்இப்படிப்பட்ட நிலைகாங்கிரசு இல்லாவிட்டால் இவருக்குக் கிடைத்து இருக்குமா?

இராசாசியின் ஊழல்

1947 இல் இராஜாஜி இந்திய சர்காரில் கைத்தொழில் சப்ளை மந்திரியாக இருந்தாரல்லவாஅப்போது அவர் இலாக்காவில் நடந்த ஊழல்டில்லியிலும் வெளியிலும் சிரிப்பாய்ச் சிரிக்க வைத்துவிட்டது. 1947இல் இந்தியாவில் கடுமையான ஜவுளிமுடை இருந்ததல்லவாஇந்த முடையைத் தீர்க்க வெளியிலிருந்து ஜவுளி இறக்குமதி செய்வதென முடிவாகியதுஇராஜாஜி மந்திரியாக இருந்த இலாக்காதான் இந்தப் பொறுப்பை நிறைவேற்றி வைக்கவேண்டும்அப்போது ஜப்பானில் ஏராளமான துணிகளிலிருப்பதாகவும் அமெரிக்க டாலராகக் கொடுத்தால் அவர்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாகவும் செய்திவந்ததுவாஷிங்டனில் உள்ள இந்திய ஸ்தானிகர் இதைச் சப்ளை மந்திரிக்குத் தந்தி மூலம் தெரிவித்தார்திருஇராஜாஜி இந்தத் தந்தி வந்ததும்பம்பாயிலுள்ள ஜவுளிக் கமிஷனருக்குத் தந்தி கொடுத்து இத்துணிகளை வாங்கலாமா என்று கேட்டார். 7 ரக துணிகள் வாங்கலாமென்றும் சுமார் 10.5 கோடி கெஜத்துக்கு மேல் வாங்கலாமென்றும் கூறினார்.  

இப்பதிலைப் பெற்ற இராஜாஜி இலாகா என்ன செய்தது தெரியுமாவிலையைப்பற்றிப் பதில் வரவில்லையே என்று கவலைப்படாமல் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதருக்கு வாங்குங்கள் எனத் தந்தி கொடுத்துவிட்டதுஇந்தத் தந்தியைப் பெற்றதும் 28.3.1947 இல் காண்டிராக்டில் கையெழுத்திட்டு 8 கோடி கெஜம் துணி வாங்கி விட்டார்அதாவது 6 கோடி ரூபாய்க்குஇந்தக் காண்டிராக்ட் கையெழுத்தானதும் பம்பாயிலுள்ள கமிஷனர் இராஜாஜி இலாக்காவுக்கு ஒரு தந்தி கொடுத்தார்ஜப்பானியர் கூறுகிற விலை இந்தியாவின் விலையை விட ஒன்றுக்கு முக்கால் பங்கு அதிகமாக இருக்கிறது என்றும் விலையைக் குறைத்தால் ஒழிய வாங்குவதற்கில்லை எனவும் தந்தி கொடுத்தார்கைத்தொழில் சப்ளை மந்திரியின் ஆஃபீசர்களுக்கு விலையைப் பற்றிப் பதில் வரவில்லையென்பது தெரியும்அப்படியிருந்தும் அவர்கள் பதிலுக்காக எழுத வில்லைஎழுதாமலேயே பேரத்தை முடித்துவிட்டார்கள்.

 இந்த நிலையில் 55 இலட்சம் ரூபாய் அனாவசியமாக நஷ்டமாகி விட்டது

இந்த ஊழலை விசாரணை செய்த கமிட்டியார் பக்கம் பக்கமாக எழுதி யிருக்கிறார்கள்மேலும் டாலர் பஞ்சம் தலைவிரித்தாடுகிற சமயத்தில் இந்தியா 6 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டாலரை இப்படி வீணடித்ததுஇராஜாஜி இலாக்காவின் ஊழலால்தான் இந்த விரயம் என்பதை ஞாபகப்படுத்த வேண்டியதில்லை.

டில்லியிலுள்ள பார்லிமெண்ட் மெம்பர்கள் எல்லாம் இந்த ஊழலை அறிந்ததும் கொதிப்படைந்தார்கள்நேருஜிக்கே மனம் தாளாமல் நிரந்தர நிதிக்கமிட்டியிடம் விசாரிக்கவிட்டார்அக் கமிட்டி இராஜாஜியின் இலாக்காவினர் ஒரு நெஞ்சாரப் பொய்யைக் கூறித் தப்பிக்கப் பார்த்தனர்ஆனால் இதுவும் வெளிப்பட்டுவிட்டதுஇப்படியாக இந்த ஊழல் ஜகப்பிரசித்தம் அடையவே ராஜாஜி மீது மெம்பர்களுக்கு அதிருப்தியும் அவர் திறமையில் அவநம்பிக்கையும் ஏற்பட்டனஇந்தக் காரணத்தால் அவர் ராஷடிரபதியாக வருவதை அவர்கள் விரும்பவில்லை

(திராவிடர் கழக வெளியீடு: ‘ஆச்சாரியாரின் ஆட்சியின் கொடுமைகள்’ என்னும் நூலிலிருந்து)
இதழ்க் குறிப்புஏடு/ 9


No comments: