Saturday, December 14, 2019

துக்ளக் சோவும் தமிழ் இனத் துரோகமும்

இலங்கை இராணூவம் தமிழர்களைத் தாக்க முனைந்திருக்கிறது என்பது பொய்இலங்கையில் நடக்கிற மோதல்இலங்கை இராணூவத் திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சண்டையே தவிர தமிழர்கள் மீது இலங்கை 
இராணூம் நடத்துகிற தாக்குதல் அல்ல’ (துக்ளக் இதழ் 17.5.2000, தலையங்கம்).

விநாயகர் தமிழ்க்கடவுளா என்பது குறித்து கலைஞர் சில ஆண்டுகளுக்கு  முன்பு ஒரு கருத்தைத் தெரிவிக்கஉடனே சோகருணாநிதி வரலாற்றைத் திரித்துக் கூறுகிறார் என்று பக்கம் பக்கமாக துக்ளக் இல் எழுதினார்.  உடனே திராவிடர் கழகப் பொது செயலாளர் கிவீரமணி அவர்கள் தமிழறிஞர் தெ.பொமீனாட்சி சுந்தரனார் அவர்கள் எழுதிய விநாயகர் வரலாற்றை ஆதாரமாகக் காட்டிக் கட்டுரை எழுதினார்இதற்கு மறுப்பு ஒன்றை சோ தெரிவிக்கவில்லை.

அதேபோல் இராவணன் பிராமணன் என்று 1940 களில் வாதம் எழுந்தபோது 
அறிஞர் அண்ணாவும் பிற தமிழறிஞர்களும் மறுத்து ஆதாரங்களை எடுத்துக்காட்டினர்வைக்கம் போரட்டத்தில் பெரியா ரின் பங்கைவிட காந்தியடிகள் மற்றும்
இராஜகோபாலாச்சாரி பங்கு அதிகம் என்று நெல்லை bஜபமணியை விட்டு 
துக்ளக் இதழில் இரண்டு மூன்று இதழ்கள் கட்டுரை எழுதச் சொன்னார்

இதற்கும் கி.வீரமணி அவர்கள் மறுப்புக் கட்டுரை எழுதிய போது துக்ளக்கில் 
அவற்றை வெளி யிடவில்லைஇப்போது கடந்த ஆண்டு தமிழ் அர்ச்சனை
மொழிக் குறித்து சோ தனது இதழில் நடத்திய ஒரு விவாதத்தில் தொடர்பே 
இல்லாமல் விநாயகர் வாதாபியிலிருந்து கொண்டு வரப்பட்டது  கருணாநிதியால்எழுதப்பட்ட வரலாறு என்று பேசுகிறார்இந்த ஆண்டு துக்ளக் ஆண்டு விழாவில் இராவணன் பிராமணன் என்று மீண்டும் பொய்களைக் கூறுகிறார்இப்போது 
இலங்கை இராணூவம் நடத்தும் போர் விடுதலைப்புலிகளுக்கு எதிரானது
இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்று கூறுகிறார்.

1981 இல் இலட்சம் நூல்கள் கொண்ட யாழ்ப்பான நூல் நிலையம் கொளுத்தப்பட்டதே அது புலிகளுக்கு எதிரானதா? 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற முருகேசு பிள்ளை கோனேசுவரி என்ற நான்கு 
 குழந்தைக்குத் தாயான பெண் கற்பழித்துக் கொலைச் செய்யப்படுகிறார்இதை 
இலங்கையின் ‘சண்டே டைம்ஸ்’ ஒப்புக் கொண்டுள்ளதுஇது குறித்துஅந்த 
தமிழ்ப் பெண்ணின் பிறப்புறுப்பில் கையெறிகுண்டு வைத்து வெடிக்கச் செய்து
சாகடிக்கப் படுகிறார் என்று எழுதுகிறதுஇது புலிகளுக்கு எதிராரானதா?

புலிகளைப் பெற்றெடுக்கிறது என்ற காரணத்திற்காக கர்ப்பிணித் தாய்மார்களின் அடிவயிற்றைக் கிழித்து சிசுக்களை வெளியே எடுத்து உயரே போட்டு துப்பாக்கி முனைகளில் சூறையாடினார்கள்அப்பாவித் தமிழ்மக்கள் 400 பேர் செம்மணியில் படுகொலைச் செய்யப்பட்டு புதைக்கப்படுகிறார்கள்இவர்களை அப்பாவித் தமிழர்கள் என்று சோமரத்ன ரஜபக்சே என்ற சிங்கள சிப்பாய் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்
ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணையம் இந்தக் கொடுமைகளைக் 
கண்டறிய நடவடிக்கையெடுத்தது

1999 சூலையில் 21 வயது நிரம்பிய ஐடா கேமலதா என்ற தமிழ்ச்சகோதரி தூக்கிச் செல்லப்பட்டு சீரழிக்கப்படுகிறார்டாக்டர் இமானுவேல் பெரிஸ் என்ற டாக்டர் 
பிரேத பரிசோதனை நடத்திவிட்டு பிரமாண வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்
அதில் கேமலதா உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்தனஅந்த பெண்ணின் பிறப்புறுப்பில் துப்பாக்கி வைத்து சுட்டு கொல்லப்பட்டிருந்கிறார் என்று கூறியுள்ளார்இது தமிழர்களுக்கு எதிரான கொடுமையல்லவாதிருஞானசம்பந்தன்
என்ற பார்ப்பன அடியார் பாண்டி மன்னன் உதவியுடன் எட்டாயிரம் சமணர்களைக் (தமிழர்களைகழுவேற்றிக் கொலைச் செய்தான்.

மத்த யானையின் ஈருரி மூடிய அத்தனேயணி
ஆலவாயபணி பொய்த்தவன் தவ வேடத்தாரஞ்சமண்
சித்திரையழிக்கத் திருவுள்ளமே

என்று சமணர்களை அழிக்க அருள் புரிவாய் என ஞானசம்பந்தன் இறைவனிடம் வேண்டினான் என்றால் இது வன்முறையில்லையாசோ இதை எதிர்க்கிறாரா
இதன் தொடர்ச்சியாக தமிழ் அடியாரான திருநாவுக்கரசு (அப்பர்சமணராக 
இருந்த நிலையில் அவரை திருஞh சம்பந்தன் சிதம்பரம் கோவிலிலே கொலை செய்தான்உடனே பார்ப்பன அல்லாத நம் மக்கள் திருமண மேடையில் இருக்கும்போது திருஞானசம்பந்தன் மேடையோடு கொளுத்திக் கொன்றார்கள்.
 இது வன்முறையில்லையா

இந்தக் கொடுமைகளையெல்லாம் தமிழ்ச் சமுதாயத்தின் மீது நடந்த தாக்குதல் 
அல்லவாஇதையெல்லாம் தமிழர்கள் மீதுமதத்தின் மீது நடந்த சம்பவங்கள் 
அல்லதிருநாவுக்கரசு மீதும் திருஞானசம்பந்தன் மீதும் நடந்த சம்பவங்கள் என்று சோ கூறுவாரா?

துக்ளக் இதழ் 29.12.99 தலையங்கத்தில் விடுதலைப்புலிகளைப்பற்றி பல அவதூறுகளை எழுதிய சோதொடர்ந்து

தமிழ்ச் சிறுவர்கள் வன் முறை கலாச்சாரத்தை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் ஆழமாக வே%ன்றி விடாமல் இருக்க வேண்டுமென்றால் கல்விபொருளாதாரம்அமைதி எல்லாம் தமிழகத்தில் சீரழிந்துவிடாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த மாநிலமே ஒரு சுடுகாடு
என்ற நிலை தோன்றிவிடாமல் இருக்க வேண்டு மென்றால் இங்கே இப்போழுது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மீண்டும் செய்யப்படுகிறப் பிரச்சாரத்தில் 
மக்கள் மயங்கி விடக்கூடாதுஅதைச் செய்கிறவர்கள் தமிழக நலனுக்கு எதிராகச்செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டு அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்’ என்று எழுதி புலம்புகிறார்

ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான சோஅவர்கள் நடத்தும் சகா கூட்டத்தில் சிறுவர்
கள் முதல் பெரியவர் கள் வரை அனைவருக்கும் இந்து மதவெறியை தூண்டுவதோடு அல்லா மல் இசுலாமியர்கள் மீது வெறுப்பையும் ஊக்குவிக்கிறார்கள்இது சோவுக்கு வன்முறைக் கலாச்சாரமாகத் தெரியவில்லை.மேலும் இத் தலையங்
கத்தில்தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று எழுதாமல் 
தமிழக நலனுக்கு எதிரானச் செயல்படுகிறார்கள் என்று எழுதுவதிலேயே அவர் யார் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 (ஏடு/5)



No comments: