Saturday, December 14, 2019

தந்தை பெரியார் பற்றி மறைமலையடிகள் - பெரியார் நீடு வாழ்க!


தந்தை பெரியார் பற்றி மறைமலையடிகள் - பெரியார் நீடு வாழ்க!

சாதிசமயப் பூசல்களை யொழித்து, ‘எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி யிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன் மக்கட்குரிய உண்மைக் கொள்கையாயிருந்தும் முப்பத்தைந்தாண்டுகட்கு முன்சொற்பொழிவாலும் நூல்களாலும் யான் அதனை விளக்கிய காலையில்அதனை எதிர்த்தும் என்னைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களேஅஞ் ஞான்று எனக்குதவியாய் நிற்றற்கு எவருமில்லைபின்னர் பெரியார் திரு.வேஇராமசாமி அவர்கள்யான் விளக்கிய கொள்கைகளையே மேலுந்திட்பமாய் எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவுந்துவக்கிய காலந் தொட்டுஆரிய சேர்க்கையால் தமிழ் மொழிக்குந் தமிழர் கோட்பாட்டிற்குள்தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டைத் தமிழர் உணர்வராயினார்அவரிற் கற்றவரும் என் மேற் கொண்ட சீற்றந்தவர் வராயினர்ஆதலால் பெரியார் இராமசாமி அவர்களின் தமிழ்த் தொண்டைப் பெரிதும் பாராட்டி அவர்கள் நீடு இனிது வாழ்க வென்று திருவருளை வேண்டி வாழ்த்துகின்றேன். (5.12.1948)



No comments: