Sunday, April 26, 2026

தீபாவளி - 3 பெரியார்

 தீபாவளி-3

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை- அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்ணும் பெயருள்ள பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துதான் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. தீபாவளிப்பண்டிகை தினத்தை, ‘நரக சதுர்த்தசி’ என்றும் சொல்லுவதுண்டு. இதற்குக் காரணம்,. நரகாசுரன் என்பவன் வி·ணூவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும் ‘தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதையும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவி·ணூ என்ணும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப்போய் இராட்சசனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில், அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக் குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் ‘கசேரு’ என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் வி·ணூ இடத்தில் முறையிட்டார்களாம். வி·ணூ கிரு·ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாடவேண்டும் என்று வி·ணூவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக வி·ணூ அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம்!

தோழர்களே! ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள்! அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப்புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள்! ஏனெனில் பூமியை இராட்சசன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்? சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும்? கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும் நரகாசுரனையும் ‘வா’ என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ‘ஜீவஉரு’ எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத்தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது, நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது? அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியிணுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும்? பூமிதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும் அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா? இதை அன்னியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள்-பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப்பண்டிகை கொண்டாடினால்-ஆரியர்கள்,தமிழர்களைத் தாசி மக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்ணும் என்னென்னமோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்றுதானே அர்த்தமாகும்? அப்படித்தானே, அன்னிய மக்கள் நினைப்பார்கள்!

ஆகவே, பாமரமக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுக்குமாவது இவற்றிளை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழி காட்ட வேண்டாமா? இந்தி ஆரியமொழி என்றும், ஆரியப் புராணத்தைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால்-அதற்காகத் தமிழ் மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உணைமையானால் தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா? (குடிஅரசு - 31-10-1937)

No comments: