Wednesday, October 11, 2023

குத்தூசி குருசாமி நினைவு நாள்

குத்தூசி குருசாமி நினைவு நாள் 11.10.2023

குத்தூசி குருசாமி

பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் 1906 ஏப்ரல் 23இல் பிறந்தார்.

 முதன்முதலாக பெரியாரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 23. பெரியாரின் குடியரசு இதழில் ‘குத்தூசி’ என்ற பெயரில் சமூக சீர்திருத்த, பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். 1929இல் தன்னைப் போன்றே பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட குஞ்சிதம் அம்மையாரை பெரியாரின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். 

தமிழ்நாட்டில் பெரியார் நடத்திவைத்த முதல் சீர்திருத்தத் திருமணம் குத்தூசி குருசாமி - குஞ்சிதம் அம்மையார் திருமணம்தான். 

அக்காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையேதான் அது நடைபெற்றது.

பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேர்விட்ட காலத்தில், அவருடன் அறிமுகமாகி, இறுதிவரையில் அவரோடு இணைந்து பயணித்தவர் குத்தூசி குருசாமி.

எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. பெரியாருடன் இதுபற்றி விவாதித்து, புதிய தமிழ் எழுத்து வடிவங்களைக் குடியரசில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். “இது தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தை மேலும் செழுமைப்படுத்து

வதுடன், தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார். கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான சிங்காரவேலர் 1923இல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்து, 

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தை நடத்தியபோது அதில் குருசாமியும் பங்கேற்றார். அப்போது அவர் பதின்பருவ இளைஞர். இடதுசாரி இயக்கத் தலைவர்களுடன் குருசாமி தனது கடைசிக் காலம் வரையில், நெருக்கமான உறவைப் பேணினார்.

1949இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில், பல தலைவர்களுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளித்தார். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரைச் சிறைக்குச் சென்று சந்தித்தார் குருசாமி. அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதங்களே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குச் சான்று.

1952இல் முதன்முதலாக நடந்த பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். அந்தத் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றிபெற்றபோதும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ராஜாஜி ஆட்சியமைத்தார். இதனைக் கண்டித்து ‘கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார்’ என்று விடுதலையில் எழுதினார் குருசாமி. 

இன்று அரசியல்வாதிகள் சரளமாகப் பயன்படுத்துகிற இந்தச் சொல், முதன்முதலாக அப்போதுதான் அச்சில் பயன்படுத்தப்பட்டது.

‘குடியரசு’, ‘விடுதலை’ ,‘அறிவுப் பாதை’ மற்றும் ‘புதுவை முரசு’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார் குருசாமி.

பாரதிதாசனுடனான நட்பின் காரணமாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பிரசுரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். 

குருசாமியின் மனைவி குஞ்சிதம் தான் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

குருசாமி, ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். 

ஐரோப்பிய அறிஞரான பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ்பெற்ற நூலான ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்பது அவரது முக்கியமான மொழிபெயர்ப்பு. 

தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்ட அண்ணா, 1949இல் பெரியார் - மணியம்மை திருமணத்தை முன்வைத்து தனி இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பிரிவைத் தடுக்க சமரச முயற்சிகளை மேற்கொண்டவர் குருசாமி.

குத்தூசி குருசாமி முன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவுக்குப் பிறகு 1978இல் எம்.ஜி.ஆர் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது

தன் வாழ்நாளில் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் பகுத்தறிவுக் கருத்தியல் சார்ந்து குருசாமி எந்தச் சமரசமும் செய்து

கொண்டதில்லை. சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாக இருந்த குருசாமி 1965 அக்டோபர் 11இல் காலமானார்.

இவரின் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் அவரின் நண்பரான குருவிக்கரம்பை வேலு வெளியிட்டிருக்கிறார். 

Rajamani A.R. அவர்களின் பதிவு

மெக்காலே : பழமைவாதக் கல்வியின் பகைவன்

மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன் - முனைவர் இரா. சுப்பிரமணி - சாளரம் வெளியீடு - முதல் பதிப்பு 2023 - பக்கங்கள் 160 - விலை ரூ 180/

*  சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற போலி பிம்பத்தை 1856ம் ஆண்டு உடைத்தெறிந்தவர் - கால்டுவெல் ! 

அவரது சிறப்பான ஆய்வு நூலான ' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' உலகின் கண்களைத் திறந்து வைத்தது ! 

*  சமஸ்கிருதத்தையும், குருகுலத்தையும், வர்ணாசிரத்தையும் நம்பி, உயர் ஜாதி பிள்ளைகளுக்கு மட்டுமே கல்வி என்ற நடைமுறைக்கு 1835ம் ஆண்டு சமாதி கட்டியவர் - மெக்காலே ! 

அவரது ' ஆங்கில வழிக் கல்வி திட்ட முறை ' இந்தியர்களின் கல்விக் கண்ணை திறந்து வைத்தது !

*  யார் இந்த மெக்காலே ?

மெக்காலே அறிமுகப் படுத்திய ஆங்கில வழிக் கல்வி முறை நல்லதை செய்ததா ? அது  குமாஸ்தாக்களை உருவாக்குகின்ற கல்வி முறையா ? இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை சிதைத்ததா ? அன்றைய இந்தியாவில் கல்வி நிலை என்ன ? ....போன்ற கேள்விகளுக்கு நிறைய நூல்களை ஆராய்ந்து விடை தந்துள்ளார் முனைவர் இரா. சுப்பிரமணி ! 

*  " மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்வி வரலாறு என்பது விருப்பு வெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதாக எடுத்துரைக்கவே இந்த நூல் வெளி வந்துள்ளது ! ..." என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர் ! 

*  முதலில் ' யார் இந்த மெக்காலே ? ' என்ற கேள்விக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் இதோ : 

*  தாமஸ் பாபிங்டன் மெக்காலே ( 1800 - 1859 ).

மெக்காலே இங்கிலாந்தில் பிறந்தவர். பள்ளியில் சிறந்த மாணவர். 1818ல் கல்லூரிப் படிப்பு. சட்டம் பயின்றார். 1826ல் வழக்கறிஞரானார். சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். 1830ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அடிமைத்தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை தீவிரமாக எதிர்த்தார். மனிதாபிமான மிக்கவர் !

*  கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற இந்தியாவுக்கு 1834ல் சென்று ,1838ல் இங்கிலாந்துக்கு திரும்பினார். உலகின் புகழ்பெற்ற நூலான ' இங்கிலாந்தின் வரலாறு ' நான்கு பாகங்களை எழுதி வெளியிட்டார். 1852ல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். 

1859ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மரணமடைந்தார் ! 

*  இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பில் ஆண்டு 1834 முதல் 1838 வரை இருந்தார். அப்போது அவருக்கு தரப்பட்ட முக்கியமான இரண்டு பணிகளை செய்து முடித்தார்.

1) இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கியது !

2) இந்திய மக்களுக்கு எந்த மொழியில் கல்வி பயிற்றுவிப்பது என்ற நீண்ட விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த - ஆங்கில வழிக் கல்வியை சட்ட பூர்வமாக அறிமுகப்படுத்தியது ! 

*  மெக்காலேயின் ஆங்கில வழிக் கல்விமுறையை பரிந்துரைத்த 13 பக்க கல்விக்

 குறிப்பு, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் 02.02.1835 அன்று சமர்பிக்கப்பட்டது . அதை ஆங்கிலேய அரசு 07.03.1835 அன்று ஏற்றுக் கொண்டது ! 

*  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கல்வி என்ற பெயரால் நடந்த வெட்கக் கேட்டை , மெக்காலே தனது 13 பக்க கல்விக் குறிப்பில் எழுதப்பட்டதிலிருந்து சில தகவல்கள் : 

*  " இங்கிலாந்திலுள்ள ஒரு இலாடக்காரன் கூட ஒப்புக் கொள்ள வெட்கும்படியான மருத்துவ முறைகளும் ; இங்கிலாந்திலுள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வான சாஸ்திரங்களும் ;  முப்பதடி உயரமுள்ள அரசர்கள் அறுபதாயிரம் வருஷம் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும் ; பாற் கடலும், நெய் கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்குக் காணப்படுகின்றன ! " ....

*  மெக்காலே மேலும் சொல்வதைக் கேளுங்கள் :

" இப்படி பலவிதமான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவி வந்த சமஸ்கிருதக் கல்வி முறை என்பது திட்ட மிட்டு, இந்தியாவை இருளில் வைக்க சிறப்பாகத் திட்டமிட்ட முறையாகும் ( The Sanskrit system of Education would be the best calculated to keep the country in darkness ) " ....மெக்காலேயை சங்கிகள் வெறுப்பதற்கு இது தானே காரணம் ! 

*  மெக்காலேயின் கல்வித் திட்ட நிலைப்பாட்டில் சில கூறுகள் : 

1)  ஆங்கில வழிக் கல்வியை பயிற்று மொழியாக கொள்ள வேண்டும்.

2)  ஆங்கில பள்ளிகளில் தாய் மொழியும் கற்பிக்கப் படவேண்டும்.

3)  இந்து, முஸ்லிம் சமூகப் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்க வேண்டும்.

4)  இந்து பண்டிகையின் போது இஸ்லாமிய பிள்ளைகளுக்கும், இஸ்லாமிய பண்டிகையின் போது இந்து பிள்ளைகளுக்கும் விடுப்பு அளிக்க வேண்டும்.

5)  ஆங்கிலேயர் பிள்ளைகளும் இந்தியர்களின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும்.

6)  நிற பேதம், சாதி பேதம், சமய பேதம் கல்வி கூடங்களில் இருக்கக் கூடாது.

7)  30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருக்க வேண்டும்.

8)  ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை தடுக்க வேண்டும்.

9) ‌ ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும்.

10) மாணவர்களை மையப்படுத்தியே பள்ளிகளும், கல்வியும், பாடங்களும், கற்பித்தலும் அமைய வேண்டும்.

*  பிராமணர்களின் குருகுல கல்விக்கும், சமஸ்கிருத கல்விக்கும் முடிவுரை கட்டினார் என்பதாலேயே மெக்காலேயை சனாதனிகளும், சாதி வெறியர்களும், சமத்துவத்தை எதிர்ப்பவர்களும், கடுமையாக தொடர்ந்து விமர்ச்சிக்கின்றார்கள் ! 

*  மெக்காலே என்ற அந்த ஆங்கிலேயனின் தீர்க்கமான அறிவின் வெளிச்சத்தின் காரணமாக இந்தியாவில் மத நீக்கல் கல்வி அமலானது ! 

ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்தால், இந்தியா ஓரு மத வழிப்பட்ட நாடாக மாறி, இன்றைய ஆப்கானிஸ்தான் போல மாறி இருக்கும் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ! 

*  இந்த சிறந்த ஆய்வு நூலை எழுதி நமக்கு வழங்கியுள்ள முனைவர் இரா. சுப்பிரமணி அவர்களை பகுத்தறிவு உலகம் பாராட்ட கடமைப்பட்டுள்ளது ! 

தொட்டாலே தீட்டு என்று தூரத்தில் நிறுத்தியது - வர்ணாசிரமம் ! 

பட்டாலே நூலை அணிந்த பார்ப்பனரை உயர்த்தியது - 

சனாதனம் ! 

மூக்காலே முணுமுணுக்கும் சமஸ்கிருதம் ஆதிக்கத்தின் மொழியானது - ஆரியர்களால்!

மெக்காலே முன்னெடுத்த ஆங்கிலம் அனைவரின் மொழியானது - ஆங்கிலேயர்களால் !

பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்,

சென்னை - 09.10.2023

********************************************

Tuesday, September 19, 2023

உடன்கட்டை ஏறுதல் 1798 இல் அய்ரோப்பியர் எழுதியது

உடன்கட்டை ஏறுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..!

இது 1798ல் எழுதப்பட்டது ..

அவர் பெயர்: Donald Campbell ..

--

பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்படவிருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் ..

இந்த வேதனை தரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம்  தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை ..

அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும் ..

வெள்ளை சேலை கட்டி இருந்தாள் ..

தலையிலும் கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தாள் ..

அவளைச் சுற்றி 20 பெண்கள் நின்று கொண்டு ஒரு வெள்ளைத் துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள் ..

அங்கிருந்து 20 அடி தள்ளி சில பிராமணர்கள் விறகுக் கட்டைகளால் எட்டடி நீளத்தில் நான்கடி அகலத்தில் சிதை தயாரித்துக் கொண்டிருந்தார்கள் ..

முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள் ..

உள்ளே சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள் ..

பக்கத்தில் மூங்கில் கழிகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த இறந்தவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் ..

இறந்தவரின் உடம்பைச் சுற்றி நான்கு பிராமணர்கள் முதல் முறை சூரியனுக்கு எதிர் திசையாகவும் அடுத்த மூன்று முறை சூரிய ஒளி வீசும் திசையிலுமாக சுற்றி வந்தார்கள் ..

இப்போது அவர்கள் தங்களுடைய நீண்ட தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொண்டும் உடனே மீண்டும் முடிந்து கொண்டும் ஏதோ மந்திரங்களை உச்சரித்தார்கள் ..

மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டிருந்தார்கள் ..

வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் கையில் இருந்த ஓலைச் சுவடியில் உள்ளதை வாசித்துக் கொண்டிருந்தார் .. 

அந்த சூழலின் அழுத்தமும் சோகமும் தாங்க முடியாமல் அருகில் இருந்தவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று கேட்டேன் ..

இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும் என்று சொல்லவே நான் கோட்டையை நோக்கித் திரும்பினேன் ..

500 கெஜ தூரம் நான் சென்றிருக்கும் பொழுது ஒருவர் என் பின்னாலேயே வந்து திரும்பி வருமாறு அழைத்தார் ..

சடங்கு உடனே நடத்தப்பட இருப்பதாகச் சொன்னார் ..

நான் சென்றபோது அந்தப் பெண்ணை மற்ற பெண்கள் அழைத்துச் சென்று ஆற்றில் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் .. 

அவள் நெற்றியில் செந்நிறத்தில் ஆறு பென்ஸ் காசு அளவுக்கு பொட்டு வைத்தார்கள் ..

பிறகு ஈரமண் போன்று எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றை பிசைந்து அவள்  நெற்றியில் தடவினார்கள் ..

பிறகு அந்தப் பெண் சிதைக்கு  அழைத்து வரப்பட்டு அவள் சிதையைச் சுற்றி மூன்று தடவை நடந்தாள் ..

சிதையில் அவள் கணவன் உடல் ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருந்தது .. 

இவள் யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே அதில் ஏறி தன் கணவன் உடல் அருகில் அமர்ந்தாள் ..

பிறகு தான் அணிந்திருந்த நகைகளின் திருகுகளை,  திருகி கழற்றி அந்த ஆபரணங்களை கையில் எடுத்து மீண்டும் அந்த திருகுகளை பொருத்தி பக்கத்தில் நின்ற இரு பெண்களிடமும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள் ..

தன் காதில் அணிந்திருந்த ஆபரணங்களையும் அவள் மிகுந்த நிதானத்துடன் திருகை கழற்றி எடுத்து, மீண்டும் திருகை பொருத்தி அந்த பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார் ..

பிரித்துக் கொடுக்கும் பொழுது ஏதோ சிறிய குழப்பம் ஏற்பட அவள் பொறுமையாக அதை சரியாகப் பிரித்துக் கொடுத்தாள் ..

பிறகு மெதுவாக அப்படியே மல்லாக்க சாய்ந்து படுத்தாள். ஒரு மஞ்சள் துணியால் தன் முகத்தை மூடிய பிறகு புரண்டு தன் கணவருக்கு நெருக்கமாக படுத்து தன் வலதுகையை தூக்கி அவர் மார்பின் மீது வைத்தாள் ..

அதன் பிறகு எந்த அசைவுமின்றி காத்திருந்தார் ..

பிராமணர்கள் இறந்தவரின் வாயில் சிறிது அரிசியையும் மீதி அரிசியை அவள் மீதும் தூவினார்கள் ..

பிறகு சிறிது நீரை இருவர் மீதும் தெளித்தார்கள் .. 

பிறகு ஒரு சிறிய கயிறு கொண்டு இருவரையும் சேர்த்துக் கட்டினார்கள் ..

 பிறகு,இருவர் உடலும் மற்றவர் கண்களில் மறையும் அளவுக்கு மரக்கட்டைகளை சுற்றி அடுக்கினார்கள் ..

குறுக்குவாக்கில் சிறிது கட்டைகளை அடுக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் இருந்து எண்ணெய்  போன்ற திரவத்தை அந்த பெண் இருந்த பகுதியில் ஊற்றினார்கள் .. 

பிறகு மீண்டும் கட்டையை அடுக்கினார்கள் .. 

இப்போது வெறும் விறகு குவியலாகவே எனக்குத் தெரிந்தது ..

இதே நேரத்தில் ஒரு பிராமணர் சிதைக்கு அருகே இருந்தவர் அந்தப் பெண்ணின் தலைப்பகுதி அருகே குனிந்து அவளை கூப்பிடுவது போல் சத்தம் கொடுத்தார் ..

ஏதோ அவளிடம் சொல்வது போல சொல்லி பின் எல்லோரையும் பார்த்து சிரித்தார் ..

பிறகு முழுவதுமாக வைக்கோலால் மூடினார்கள் சுற்றிலும் கயிறால் இறுக்கிக் கட்டினார்கள் ..

பிறகு ஒருவர் சிறிது வைக்கோலை எடுத்து அருகில் கனன்று எரிந்து கொண்டிருந்த சாண எருக்களில் பற்ற வைத்து அதை சிதையில் போட்டார் ..

பிறகு தீ நன்றாக பற்றுமாறு விசிறி விட்டார்கள் ..

அப்போது காற்றும் அதே திசையில் வீச தீ வேகமாக பற்றி கொண்டது ..

ஏதோ ஒரு கிறீச்சிடும் ஒலியை நான் கேட்டது மாதிரியும் மற்ற இரைச்சலிடமிருந்து அதை தனிமைப்படுத்தி கேட்காதது மாதிரியும் இருந்தது .. 

சில நிமிடங்களில் அந்த குவியல் சாம்பல் ஆனது ..

நான்  அந்த மொத்த நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் ..

என் பார்வை முழுவதும் அந்தப் பெண்ணின் மீது தான் இருந்தது ..

இந்த கொடூரமான சடங்கை நடத்தியவர்கள் அதை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்டிருந்த மாதிரியும், ஐரோப்பியன் ஒருவன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் கோட்டைக்கு திரும்பிய வழியில் என் சிந்தனையாக இருந்தது ..

Friday, September 8, 2023

பெரியார் சிலை - நீதியரசர் சந்துரு தீர்ப்பு

 நீதிபதி கே. சந்துரு வழங்கிய மற்றொரு பெருமைக்குரிய தீர்ப்பு: பெரியார் சிலைகள் அவசியமானவை


  

 




கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஒரு மூலையில் பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் மற்றும் அரசு அனுமதி ஆணையோடு நிறுவப் பட்டுள்ள பெரியார் சிலையை எதிர்த்து உள்ளூர் பா.ஜ.க.வினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரியார் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. ஆர்.எ°.எ°. அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவர் சிலை நிறுவப் போவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங் கினர். இதற்கிடையே பா.ஜ.க.வினர், நேரடியாக பெரியார் சிலையை எதிர்த்து வழக்காட முன் வராமல், பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் ஒருவர் மூலமாக வழக்குத் தொடர்ந்தனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு மனுவை தள்ளுபடி செய்துள்ள தோடு, பெரியார் சமுதாய மாற்றத்துக்கு பங்களிப்பை வழங்கிய மகத்தான தலைவர் என்று தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.


பெரியார் சிலையை பள்ளி வளாகத்தின் அருகே நிறுவுவதால் மாணவர்கள் நாத்திக சிந்தனைக்கு மாறிவிடுவார்கள் என்று மனுதாரர் கூறியிருந்ததுபற்றி நீதிபதி குறிப்பிடுகையில், ஒரு மகத்தான தலைவரின் சிலையை நிறுவிவிட்டாலே மாணவர்கள் எல்லோரும் தன்னிச்சையாகவே நாத்திகர்களாகி விடுவார்களா? என்று வியப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் பெரியாரின் சிலைகள் நிறுவப்பட வேண்டியதின் அவசியத்தையும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.


“பள்ளி மாணவர்கள் பெரியாரின் வாழ்க்கையை யும் இலட்சியத்தையும் கட்டாயம் அறிய வேண்டியது அவசியமாகும். இத்தகைய மாபெரும் தலைவர்களின் தத்துவங்களைப் புரிந்து கொண்டால் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமையாக கூறப் பட்டுள்ள பிரிவு 51ஏ(எச்) இல் வலியுறுத்தும், விஞ்ஞான மனப்பான்மையை மேம்படுத்துதல், மனித நேயம், எதையும் ஏன் எதற்கு என்று விசாரணைக்குட் படுத்துதல், சீர்திருத்தம் ஆகியவற்றை செம்மையாக பின்பற்றுவதற்கு உதவும்” – என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.


பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முறையான ஒப்புதலுக்குப் பிறகுதான் பெரியார் சிலை நிறுவப்பட் டுள்ளது. உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஆர்.எ°.எ°. நிறு வனரான கேசவ் பாலிராம் ஹெட் கேவர் சிலையை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். எனவே, இந்த “மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஒரு அரசியல் கட்சியால் தூண்டி விடப்பட்டுள்ளார். அந்த அரசியல் கட்சி வெளிப் படையாக இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்து எதிர்ப்பை சான்றாதாரமாக பதிவு செய்ய விரும்ப வில்லை. அதற்கு பதிலாக இத்தகைய மனுதாரர் களுக்கு அழுத்தம் தந்து, சட்டத்தின் முன் நிற்க முடியாத காரணங்களைக் கூறி, வழக்கு தொடரச் செய்திருக்கிறார்கள். இந்த மனுவை இந்த நீதிமன்றத்தால் ஏற்க முடியாது” என்று நீதிபதி மேலும் கூறியுள்ளார்.


“பெரியார் மக்களிடம் எடுத்துரைத்த கருத்துகள் பற்றி, மனுதாரர், மனுவில் கூறியிருப்பது அவரது அறியாமையையே வெளிப்படுத்துகிறது. தமிழ் சமூகத்தை சீர்திருத்தி மாற்றியமைப்பதில் பெரியாரின் பங்களிப்பது எத்தகையது என்பது குறித்த புரிதல் மனுதாரருக்கு இல்லை. பெரியாரை ஏதோ ‘நாத்திக பரப்புரையாளர்’ என்று மட்டுமே முத்திரை குத்திட முடியாது. சாதிய ஒடுக்குமுறை, சமூக சமத்துவம், பெண்கள் விடுதலை போன்றவற்றில் பெரியார் முன் வைத்த சிந்தனைகள், சமகால இந்தியத் தலைவர்களின் கருத்துகளையும் மிஞ்சி நிற்கக்கூடியவை. பூலே, அம்பேத்கரைப்போல, அயோத்திதாசர், பெரியார் போன்ற மாமனிதர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத ஆழமான உண்மைகளைக் கண்டறிந்தவர் கள், உண்மையான கவலை கொண்டவர்கள். தங்கள் சுயசிந்தனைகளால் தங்கள் உடைமைகளை துறந்து சமுதாயத்துக்காக ஒப்படைத்துக் கொண் டவர்கள் தாங்கள் வாழ்ந்த சமூகம் அறியாமைச் சூழலில் மூழ்கிப் போய் அநீதிகளுக்கும் அவலங் களுக்கும் உள்ளாகிக் கிடந்ததைக் கண்டு, ஆழ்ந்த கவலை கொண்டு சமூக மாற்றத்துக்கு உழைத்தவர்கள் இந்த துயரங்களும் அநீதிகளுமே அவர்களை மிகக் கடுமையாக சிந்திக்க வைத்தது. எதைச் செய்தாவது மாற்றியாக வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வரத் தூண்டியது. இதேபோல் உலகம் முழுதும் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி விடுதலை பெற்றார்கள் என்று சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும், செயல்படவும் முன் வந்தார்கள். ஒடுக்கப் பட்ட மக்களை போராடுவதற்கு அணி திரட்டி னார்கள். அதன் வழியாக அவர்களுக்கு இழைக்கப் படும் அவமானங்களையும் ஒடுக்குமுறைகளையும் அடையாளம் காண முடிந்தது. சாதிய சமூக அமைப் பின் அநீதிகளையும் அந்த அமைப்பு நீடிக்கும் வரை சந்திக்க வேண்டிய சவால்களையும் சமூகத்துக்கு உணர்த்தியவர்கள். இப்படி இந்து சமூக அமைப்பின் ஆணிவேர் வரைச் சென்று அசைத்துக் காட்டிய தலைவர்கள் அவர்கள். இதில் மக்களைக் கவர்ந்து இழுத்த பெரியாரின் பேச்சுகள், முதன்மையான பங் காற்றியது” என்று நீதிபதி சந்துரு குறிப்பிட்டுள்ளார்.


பெரியார் திரைப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான அமர்வு (இதில் நீதிபதி கே.சந்துருவும் உண்டு) அளித்த தீர்ப்பில், பெரியார் பற்றி சுட்டிக்காட்டிய பகுதிகளை நீதிபதி இத் தீர்ப்பில் எடுத்துக் காட்டியுள்ளார்.


“வாழ்நாள் முழுதும் பெரியார் ஈ.வெ.இராமசாமி தீண்டாமையை அகற்றவும், சாதி அமைப்பை ஒழித்துக் கட்டவும் பாடுபட்டார். சமூக நீதிப் போராளியாக நின்று, பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். பகுத்தறிவு, சுயமரியாதை கருத்துகளுக்கும் சமூக புரட்சிக்கும் நாடு முழுதும் இயக்கம் நடத்தினார். ஒரு பகுத்தறிவாளர் என்ற முறையில் மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்தெடுத்தார். மூடநம்பிக்கைகளை கைவிடுமாறு வற்புறுத்தினார். அது வீணானது; ஆபத்தானது என்றார். 1926 இல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்” என்று வ.கீதா, எ°.வி.ராஜதுரை எழுதிய நூலிலிருந்து பெரியார் திரைப்பட வழக்கில் நீதிமன்றம் சுட்டிக் காட்டியதை நீதிபதி சந்துரு பதிவு செய்துள்ளார்.


2010 இல் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத் தின் அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பையும் எடுத்துக் காட்டியுள்ளார். அனுமதி இல்லாமலே பொது இடத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப் பட்டது என்று தொடரப்பட்ட வழக்கில் அம்பேத் கரின் உயர்ந்த நிலையைக் கருதிப் பார்க்கும்போது, அந்த சிலையை இருக்குமிடத்திலிருந்து அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அத் தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருந்தது.


சமூகக் கண்ணோட்டத்தில் பல புரட்சிகர தீர்ப்புகளை வழங்கி வரலாறு படைத்து வருகிறார் நீதிபதி சந்துரு. இந்தத் தீர்ப்பும் அந்த வரிசையில் மற்றொரு மணி மகுடமாக திகழுகிறது.


(குறிப்பு: காவேரிப்பாக்கத்தில் திராவிடர் கழகம் நிறுவியுள்ள பெரியார் சிலையை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு இது. இதே நீதிபதி கே.சுந்துரு, ‘குடிஅரசு’ வழக்கில் அவர்களுக்கு எதிராக நியாயமான தீர்ப்பை வழங்கிய போது, “நீதிபதி உபதேசம் செய்கிறார்” என்று கடுமையாக தீர்ப்பை விமர்சித்தது, தி.க.வின் ‘விடுதலை’ ஏடு. அதே நீதிபதி தான் இப்போது பெரியாரைப் பற்றிய பெருமைகளோடு அக்கழகம் நிறுவிய பெரியார் சிலை வழக்கில் இத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.)

Monday, September 4, 2023

நைந்த அரசியல் குறித்த 5 ஆட்சேபனைகள் - சுப. உதயகுமாரன்

நைந்த அரசியல் குறித்த ஐந்து ஆட்சேபனைகள்

சுப. உதயகுமாரன்

நாகர்கோவில்,

ஏப்ரல் 16, 2021.

நாம் தமிழர் கட்சியோடான முரண்பாடுகள் இப்போது திடீரெனத் தோன்றியவையல்ல; அவை 2011-2014 காலக்கட்டத்தில் இடிந்தகரை போராட்டப் பந்தலிலேயே முகிழ்த்தவை. அரசியல் சார்பற்ற ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தில் நானும், தோழர்களும் இருந்ததால், “ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு” என்று மட்டுமே தமிழக அரசியல் களத்தைப் பகுத்துக்கொண்டு அணுவியல் பற்றி மட்டுமேப் பேசினோம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் பலமுறை போராட்டக் களத்துக்கு வந்தார், அருமையாகப் பேசினார், ஆதரவு தெரிவித்தார், கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினைக்கு எதிராக உண்மையாகப் போராடினார்.. இடிந்தகரையில் போராடிய மக்களும், போராட்டக் குழுவினரும் பெரிதும் மெச்சினோம்; நன்றி தெரிவித்தோம்.

திரு. சீமான் அவர்கள் முதன்முறையாக இடிந்தகரைக்கு வந்தபோது (2011?), மேடையில் அருகருகே அமர்ந்து கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சுவாக்கில் நான் “ஜூனியர் விகடன்” இதழில் வெளிவந்துகொண்டிருந்த “அணு ஆட்டம்” தொடரைக் குறிப்பிட்டேன். “அதை என் தம்பி ஒருவன்தான் எழுதுகிறான்” என்று அவர் சொன்னார். “நான்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று நான் தெரிவித்ததும், ஒருவித தர்மசங்கடமான நிசப்தம் எழுந்தது. இருவருமே அதைப் பற்றி மேலும் பேசாமல் கடந்து சென்றுவிட்டோம். அன்றாட வாழ்வில் அவ்வப்போது பயன்படுத்தப்படும் இதுபோன்ற “வெள்ளைப் பொய்களை” (White Lies – “யாதொன்றும் தீமை இலாத சொலல்”) பெரிதுபடுத்தத் தேவையில்லை.

அதன் பிறகு அப்பகுதி மக்களுக்கும், கடலுக்கும், கடல் வளத்துக்கும், பரந்துபட்டச் சூழலுக்கும் மாபெரும் கெடுதிகளைச் செய்யும் உள்ளூர் தாதுமணல் நிறுவனத்தோடான நெருக்கமான உறவு மற்றும் பரந்துபட்ட தாதுமணல் பிரச்சினை குறித்தெல்லாம் அவர் போராட்ட மேடையில் பேசாமல் தவிர்த்தது மக்களால் விவாதிக்கப்பட்டது. நண்பர் நான் பிறந்ததாகச் சொல்லப்படும் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர் என்பதால்தான், நான் அவரை அடிக்கடி ஊருக்கு அழைத்துவந்து, திட்டமிட்டு வளர்க்கிறேன் என்றும் ஒருசிலர் என்மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஒரு முறை போராட்டப் பந்தலில் வைத்து, நாம் தமிழர் கட்சியின் போக்குகளை விமரிசித்து திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் வெளியிட்டிருந்தப் புத்தகத்தைக் குறிப்பிட்ட நண்பர், “அதில் நீங்களும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்களே” என்று என்னிடம் கேட்டார். நான் “பச்சைத் தமிழ்த் தேசியம்” என்கிற சூழலியல் சார்ந்த தமிழ்த் தேசியக் கருத்தியலை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்” என்று தெரிவித்தேன்.

தமிழ்த் தேசியச் சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறாரே, திரைத்துறை பின்புலம் கொண்டிருந்தாலும், சில நடிகர்கள் போலல்லாமல் மக்களைச் சந்திக்கிறாரே, மக்களோடுக் களமாடுகிறாரே என்றெல்லாம் எண்ணிக்கொண்டு, நாளடைவில் முதிர்ச்சியும், பக்குவமும் பெற்றுவிடுவார் என்றே நான் எதிர்பார்த்தேன்.

ஆனால் நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகரில் நடத்திய (ஆண்டு நினைவில்லை!) ஒரு மாநாட்டில் கொலைகார மாபாதகன் ஹிட்லர் படத்தை வைத்திருந்ததையும், அந்த மாநாட்டு உரையில் நண்பர் அந்த கொலைகாரப் பாவியின் கருத்தை மேற்கோள் காட்டிப் பேசியதையும் என்னால் சீரணிக்கவே முடியவில்லை.

தனது மேடைப் பேச்சுக்களிலும், பேட்டிகளிலும், எழுத்துக்களிலும் மோசமான வார்த்தைகளை, வன்முறைச் சிந்தனைகளை, சர்ச்சைக்குரியக் கருத்துக்களை திரு. சீமான் அவர்கள் வெளியிடும்போதும், ஒரு தலைவர் போலல்லாது தரம் தாழ்ந்து பேசும்போதும், நாம் தமிழர் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரிடம் (பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை) “கொஞ்சம் இடித்துரையுங்கள்” என்று பலமுறை எடுத்துரைத்திருக்கிறேன்.

“தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்” என்பது போல, தங்களின் சமூக “ஏற்பாடுகளுக்கெதிரான” (anti-establishment) உணர்வுகளை, நிலைப்பாடுகளை அதே கோபத்தோடும், ஆத்திரத்தோடும் தலைவர் எடுத்துரைக்கிறாரே என்று உளமகிழ்ந்து ஆர்ப்பரிக்கிறார்கள் அந்தக் கட்சியின் இளம் தொண்டர்கள். கைத்தட்டி, விசிலடித்து, அப்படியேத் தொடருங்கள் என்று அவர்கள் தலைவரை ஊக்குவிக்கிறார்கள். உச்சிக் குளிர்ந்து உச்சாணிக்கொம்பில் இருக்கும் தலைவரும், தனது இளம் ‘பார்வையாளர்களை’ மேலும் மகிழ்விக்கும்பொருட்டு, இன்னும் அடித்து ஆடுகிறார் (playing to the gallery).

இது அவர்கள் கட்சியின் உள்விவகாரம் என்று விட்டுவிட முடியாது. காரணம், இந்நடவடிக்கைகள் பொதுவெளியில் நடக்கின்றன. இவை தமிழ்க் குடிமைச் சமூகத்தின் மீது பல்வேறு தாக்கங்களை எழுப்புகின்றன. ஐந்து முக்கியமான ஆட்சேபனைகளை மட்டும் நான் இங்கே விவாதிக்கிறேன்:

[1] தடம்புரளும் தமிழ்த் தேசியம்

[2] வளர்த்தெடுக்கப்படும் சர்வாதிகாரம்

[3] விதைக்கப்படும் வன்முறை

[4] பாஜக--ஆதரவு வேலைத்திட்டம்

[5] மாற்று எனும் பெயரில் ஏ-மாற்று

இந்த ஆட்சேபனைகளை விருப்பு வெறுப்பின்றி, வேறு ஏதும் உள்நோக்கங்கள் இல்லாமல், யாரிடமிருந்தும் எந்தவிதமானப் பிரதிபலனையும் எதிர்பாராமல், பொதுவெளியில் முன்வைக்கிறேன். ஓர் “இடிப்பாராக”த்தான் இவற்றை முன்வைக்கிறேனே தவிர, கெடுமதி கொண்ட “கெடுப்பாராக” அல்ல.

இந்த நல்லெண்ண விமரிசனங்களை நேர்மறையாக எதிர்கொண்டு, நிலைமையைச் சீரமைத்தால், அது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கலாம். மாறாக, என்னைத் தனிப்பட்ட முறையில் திட்டித்தீர்த்து, வன்மத்தைக் கொட்டினால், யாரும் எந்தவிதமான பயனும் பெறப் போவதில்லை.

[1] தடம்புரளும் தமிழ்த் தேசியம்

தமிழக அரசியல் ஒரு திருப்பு முனையில் நின்றுகொண்டிருக்கிறது. பெரிய திராவிடக் கட்சிகள் இரண்டும் திறமைமிக்கப் பேராளுமைகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றன. தற்போதையத் தலைவர்களின் ஆற்றலும், ஆளுமையும்கூட அடுத்தத் தலைமுறை தலைவர்களுக்கு இருக்குமா என்கிற பெருத்த சந்தேகம் நிலவுகிறது. இது தமிழர் அறம் சார்ந்த தமிழ்த் தேசிய அரசியலை வளர்த்தெடுக்க அருமையானத் தருணம். 

கடந்த ஐம்பதாண்டு காலமாக தமிழக அரசியலின் அடிப்படை அம்சங்களாக இருந்துவரும் தனிமனித வழிபாடு, வெற்றுப்பேச்சு, சினிமாத்தனம், லஞ்ச ஊழல், வாரிசு அரசியல் போன்றவற்றை விலக்கி, ஒரு சித்தாந்தத் தெளிவையும், சிறப்பான அணுகுமுறையையும், மக்கள் சேவகர்களின் நன்னடத்தையையும் அன்பார்ந்த, அறிவார்ந்த, அறமார்ந்தத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏராளமான இளைஞர்கள் அரசியல் நீரோட்டத்திலிருந்து விலகி நிற்பது ஆபத்தானது என்றுணர்ந்து, இனவிடுதலை அரசியலில் தைரியமாகக் குதிக்கும்போது, அந்தப் பேராற்றலை ‘நாம் தமிழர்’ வீணடிப்பது பெருங்குற்றமாகவேப் படுகிறது.

தமிழக அரசியலையும், தமிழீழ அரசியலையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கானக் கட்சியா, அல்லது ஈழத் தமிழர்களுக்கானக் கட்சியா என்கிற குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

தனிநாடு, தன்னாட்சி பற்றியெல்லாம் பேசமாட்டேன்; தமிழ் நாட்டின் முதல்வர் பதவியில் அமர்ந்ததும், ஒரே கையெழுத்தில் அனைத்துப் பிரச்சினைகளையும் அப்படியேத் தீர்த்துவிடுவேன் என்றெல்லாம் ஒருபுறம் சொன்னாலும், இன்னொருபுறம் “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு” இப்படி குறிப்பிடுகிறது:

“நாம் தமிழர் அரசுக்கு ...மிக உயரிய உயிரான கொள்கை தமிழ்த்தேசிய இன மக்களுக்கென இந்தப் பூமிப் பந்தில் ஒரு நாடு அடைவதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறோம். இதில் ...தனித் தமிழீழச் சோசியலிசக் குடியரசை அடைவதே இறுதி இலக்காக வைத்திருக்கும்” (செயற்பாட்டு வரைவு, பக்.246).

மேற்படி அறிக்கையில் “தமிழர் இன வரலாறு” பற்றிப் பேசும்போது, வரலாறு, எதிர்காலம் மற்றும் உயிர்த்தொடர்பு பற்றி ஹிட்லர் மேற்கோள் காட்டப்படுகிறார் (செயற்பாட்டு வரைவு, பக்.287). ஹிட்லரையொத்த ராஜபக்சேக்களால் ஓர் இனப்படுகொலையைச் சந்தித்துக்கிடக்கும் தமிழ்ச் சமூகத்தோடு ஹிட்லரை எப்படி தொடர்புபடுத்திப் பேச முடியும்? ஒருவேளை, ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் பின்னாளில் ஜெர்மனி நாட்டின் குடிமகனாகி, அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை ஏற்றெடுத்து, அதன்பிறகு ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு பலவந்தமாக இணைத்துக்கொண்டது போல, ஏதாவது வேலைத்திட்டம் வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்னுக்குப்பின் முரணாகவும், வாய்க்கு வந்தபடியும், மேடைக்கேற்றபடியும் முழங்கும் ஒரு ஹிட்லர் பக்தரின் தனிமனித அதிகாரவெறியைத் தமிழ்த் தேசியம் என்று கொண்டாடுவது சரியாகுமா? கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு வீறுகொண்டெழுந்த தமிழ்த் தேசிய அரசியல் இன்றைக்கு மலினமாகி, கேலிப்பொருளாகி, நகைப்புக்குரியதாக மாறியிருப்பதை கவனிக்கிறோமா?

[2] வளர்த்தெடுக்கப்படும் சர்வாதிகாரம்

“எதையும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து உணர்வுப்பூர்வமாகச் செயலாற்று!

எதையும் ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாகச் செயலாற்று!” என்று அறிவுரைக்கும் செயற்பாட்டு வரைவு (பக்.285), “தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை” ஒன்றே தங்களின் விருப்ப ஆட்சிமுறை என்று ஓங்கி உரைக்கிறது. 

நோயுற்றுப் பரிதவிக்கும் பச்சைக் குழந்தைக்கு வலிக்கும் ஊசியால் மருந்தேற்றுவது போல, படிக்கத் திணறும் குழந்தைக்கு பாடத்தை மனதில் பதியவைக்க ஆசிரியர் பலமுறை எழுதச்செய்வது போல, பனை மரத்தில் கத்தியை வைத்து மட்டையைக் கழிப்பது போல, இந்த “தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம்” வேலை செய்யுமாம். ஒரு சர்வாதிகாரிக்கு தன்னுடைய மக்கள் எந்த நிலையிலும் அறிவார்ந்தவர்களாக, தங்களின் உரிமைகளும், தேவைகளும், கடமைகளும் உணர்ந்தவர்களாகத் தோன்றவே மாட்டார்கள். பரிதவிக்கும் குழந்தைகளாக, வெறும் (பனை) மரங்களாகத்தான் தோற்றமளிப்பார்கள்.

கடந்த 2021 மார்ச் மாதம், தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, திரு. சீமான் இப்படிப் பேசினார்:

“குப்பையை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும். நீங்கள் மாடியிலிருந்து கொட்டினால் அங்கு சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு உங்கள் நீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை நிறுத்தப்படும். நீங்கள் குடியுரிமையை இழந்துவிட்டீர்கள் என்று கூறப்படும். இறங்கி வந்துதான் குப்பைகளைக் கொட்ட முடியும். இப்படி இல்லை என்றால் செதுக்க முடியாது. தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்.”

தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒன்றை நடத்துகிற ஒரு நல்ல தலைவர், கட்டுண்டுக்கிடக்கும் மக்களை சமூக-பொருளாதார-அரசியல் அவலத்திலிருந்து மீட்டெடுத்து, அதே கையோடு அவர்களை தன்னுடையத் தனிப்பட்ட அடிமைகளாக அடக்கிவைக்க மாட்டார். ஆண்டாண்டு காலமாய் அவல அரசியலால் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் மக்களை தனித்த அடையாளம், தகைமைசால் வாழ்க்கை, தலைநிமிர்ந்த நல்வாழ்வு எனும் இலக்கு நோக்கி அழைத்துச்செல்ல வேண்டுமேயன்றி, அதிகாரவெறி பிடித்த ஒருவரின் சர்வாதிகார ஆட்சியை நோக்கி அல்ல. எரியும் நெருப்பிலிருந்து மீண்டு, கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்குள் விழுவதால் தமிழர்களுக்கு என்ன பயன்?

சகலகலாவல்லவரான, அனைத்தும் அறிந்த, ஓர் அற்புதத் தலைவர் சினிமா ஹீரோ பாணியில் தன்னந்தனியனாய்க் களமாடி, ஒரே கையெழுத்தில் நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, நம்மையெல்லாம் சுபிட்சத்துக்கு இட்டுச்செல்வார்; நாம் செய்யவேண்டியதெல்லாம் வெறுமனே கைதட்டுவதும், விசிலடிப்பதும் மட்டும்தான் என்பது 21-ஆம் நூற்றாண்டில் ஏற்கத்தக்க அரசியல் அல்ல. உலகு தழுவிய பனிரெண்டு கோடித் தமிழர்களின் அரசியல், நல்வாழ்வு, வருங்காலம் அனைத்தையும் ஒரே ஒரு தனிநபரின் கைகளில் ஒப்படைக்கக் கூடாது, முடியாது.

ஐம்பது, அறுபது பேர் பயணம் செய்யும் ஒரு பேருந்துக்கு ஓர் ஓட்டுனர்தான் இருக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் பயணிகள் போக விரும்பும் ஊர்கள், பேருந்து செல்லவிருக்கும் பாதை, பேருந்து நிற்கப்போகும் நிறுத்தங்கள் என அனைத்து விடயங்களையும் அவர் ஒருவரே --ஓட்டுனர் மட்டுமே-- தீர்மானிப்பார் என்றால், பேருந்தில் இருப்பவர்கள் பயணிகள் அல்ல, பணயக்கைதிகள்! எட்டுக் கோடி தமிழகத் தமிழர்களைப் பணயக்கைதிகளாக நடத்துவதன் பெயர் அரசியல் அல்ல, அராஜகம்!

கம்போடியா நாட்டில் ‘கமேர் ரூஜ்’ (Khmer Rouge) எனும் “புரட்சிகரக்” குழு போல் பாட் (Pol Pot) என்பவர் தலைமையில் நடத்திய அக்கிரமங்களிலிருந்து படிக்க வேண்டியப் பாடங்கள் ஏராளம் உள்ளன. ஒரு தனிநபர் சர்வாதிகாரியாக உருப்பெறும்போது, சமூக யதார்த்தங்களை விட்டு விலகி, தான்தோன்றித்தனமாக, பெரும் செருக்குடன், சுகபோக வாழ்வில் ஈடுபட்டு, தன்னையே ஏமாற்றிக் கொள்வார். மக்களின் நிலையோ ‘சர்வாதிகார அரசனை நம்பி, சனநாயகப் புருசனை கைவிட்டக்’ கதையாகவேப் போய் முடியும். அரசியல் சமூகத்துக்கும், குடிமைச் சமூகத்துக்கும் இடையேயான உறவை அரசியல்படுத்தல், விழிப்புணர்வு, பங்கேற்பு சனநாயகம் மூலம் மாற்றியமைப்பதுதான் சாலச்சிறந்தது.

[3] விதைக்கப்படும் வன்முறை

“எமது தமிழ்மொழியைத் தவறாக உச்சரிப்பதும், பிறமொழி கலந்து பேசுவதும்தான் மிகப் பெரிய வன்முறையாக நாம் தமிழர் அரசு கருதுகிறது” என்று அறிவிக்கும் செயற்பாட்டு வரைவு (பக்.302), ‘பச்சை மட்டைச் சிகிச்சை,’ “தோலை உரிப்பது,” “தொலைத்து விடுவது” பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கட்சித் தலைவர் மேடைதோறும் விலாவாரியாகப் பேசுகிறார். கடந்த 2020 “மாவீரர் நாள்” உரையில்கூட பச்சை மட்டையும், அன்பான வன்முறை மிரட்டல்களும் பல முறை குறிப்பிடப்பட்டன.

செயற்பாட்டு வரைவு முன்வைக்கும் பயங்கரமூட்டும் சமூக வன்முறையைப் பாருங்கள்:

“...50,000 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு உடல் தகுதி, சீருடை ஏதும் இருக்காது. ...புதிய காவலர்களுக்குச் சர்வ தேசத் தரத்தில் உளவுப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஊழியர்கள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பார்கள். ...இந்த உளவாளிகள் பற்றிய தகவல் அனைத்தும் கமுக்கமாகவே வைக்கப்படும்” (பக்.135).

உடனிருக்கும் உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள், அண்டை அயலார்களில் யார் யார் உளவாளிகள், ஒற்றர்கள், காட்டிக்கொடுக்கிறவர்கள், காலை வாருகிறவர்கள் என்கிற நிரந்தர சந்தேகத்தோடு, அச்சத்தோடு, அவநம்பிக்கையோடு வாழும் மக்களை, பீதியிலிருக்கும் பரந்துபட்டச் சமூகத்தை, “கண்காணிப்பு அரசு” (Surveillance State) நடத்துகிற ஒரு சர்வாதிகாரி மிகவும் விரும்புவார். அம்மாதிரியான அமைப்பை அவரது கட்சித் தோழர்கள் அவரைவிட அதிகம் விரும்புவார்கள். ஆனால் அந்த அமைப்பு “பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, தேவைகளிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை” (Freedom of Speech, Freedom of Worship, Freedom from Want, Freedom from Fear)  என்று வாழ விரும்பும் சனநாயகச் சமூகக் குடிமக்களுக்கும், அவர்களின் மாண்புநிறை வாழ்க்கைக்கும் எப்போதும் எந்தவிதத்திலும் ஏற்றதாக இருக்காது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்றெடுக்காத, தேசியத் தலைவர் பிரபாகரன் “அது ஒரு துன்பியல் சம்பவம்” என்று மட்டுமே விவரித்த, இராஜீவ் காந்தியின் படுகொலையைப் பற்றி, நாம் தமிழர் கட்சித் தலைவர் “என் இனத்தின் எதிரியான ராஜீவ் காந்தியைத் தமிழர் தாய்நிலத்தில் கொன்றுபுதைத்தோம்” என்று 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். தவறேதும் செய்யாத பனிரெண்டு கோடித் தமிழர்கள் மீது ஒரு பொல்லாதக் கொலைப்பழியை எந்தவிதமானத் தேவையுமின்றி, உண்மையுமின்றி வலிந்து ஏற்றிய வன்முறையும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

தாங்கள் வீராதி வீரர்கள், கட்டற்ற வன்முறையால்தான் விடுதைலையை வென்றெடுத்தோம் என்று சில சனாதனத் திரிபுவாதிகள் இந்திய வரலாற்றை மாற்றியெழுத முற்படுவதுபோல, தமிழர்களாகிய நாம் வன்முறைவாதிகள், பழிவாங்குகிறவர்கள் என்கிற தவறான கருத்து தமிழர் நெஞ்சங்களிலும், பிறரின் மனங்களிலும் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

‘நாம் தமிழர்’ பேச்சிலும், மூச்சிலும் மண்டிக்கிடக்கும் வன்மமும், வன்முறையும் கட்சியின் கொள்கைகளாக, செயல்திட்டங்களாக வெளிவருவது, வன்முறையற்ற அறவழிப் பாதையிலேயேப் பயணிக்கும் தமிழக அரசியலுக்கு, (இடையில் சிங்களப் பேரினவாதத்தால் வலிந்துத் திணிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் தவிர்த்து) அறவழிப் போராட்டங்களை மையப்படுத்தியே நடத்தப்படுகிற ஈழ அரசியலுக்கு, ‘அன்பு’ எனும் தத்துவத்தை அவனிக்கு வழங்கி, அதன்படியே உலகெங்கும் ஒழுகிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நலனுக்கு எந்தவிதத்திலும் உகந்ததல்ல. நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் பலரும் இதே வன்முறை மொழியை, அணுகுமுறையை, விழுமியத்தை ஏற்றொழுகுவது ஒரு பேராபத்தாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

[4] பாஜக--ஆதரவு வேலைத்திட்டம்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற இயக்கங்களின், கட்சிகளின் குருக்கள், மூர்த்திகள், பொன்ராக்கள், ‘சீக்ரெட்’ சீக்கியர்கள், சின்னம்மாக்கள், திரைமறைவு சிங்களவர்கள் போன்ற இடைத்தரகர்கள் இடையீடு செய்வதும், வழிநடத்துவதும் ‘நாம் தமிழர்’ கட்சியின் வேலைத்திட்டங்களில் தெளிவாகப் பரிணமிக்கிறது.

எடுத்துக்காட்டாக, ‘செயற்பாட்டு வரைவு’ சொல்லும் ஒரு மாபெரும் அறிவியல் பேருண்மையைப் பாருங்கள்:

“அரக்கு என்பது நாட்டுமாட்டுச் சிறுநீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கிக் குளிரூட்டிப் பெறப்படும் அருமருந்தாகும். புற்றுநோய் உள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்ட பல நோய்களைக் குணமாக்கும். மேலும் இதிலிருந்து பற்பசை, சாம்பு (சீய்நெய்), சோப்பு (வழலை), நறுமணப் பொருட்கள் உருவாக்கப்படும். இவற்றில் தனிக்கவனம் செலுத்தி ஏற்றுமதி செய்யப்படும்” (பக்.55).

பங்கேற்பு சனநாயகத்தில், கருத்துப்பரிமாற்றத்தில், பொது விவாதத்தில், கூடி முடிவெடுத்தலில்  ஆழமான நம்பிக்கையும், அபாரமானப் பிடிப்பும் கொண்டவர்களைப் போல, ‘செயற்பாட்டு வரைவு’ இப்படி வாதிடுகிறது:

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படுகிற காலத்தில் இந்நிலத்தில் வாழ்ந்த 30 கோடிமக்களின் கருத்துகளையும், இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கருத்துகளையும், பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சட்டம் தயாரிக்கப்படவில்லை.”

“எனவே தற்போது இருக்கிற தேசிய இனங்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தற்கால அரசியல், சமூக, சூழல்களுக்கு உலக ஒழுங்கிற்கு ஏற்றார் போல மாற்றி அமைக்க வேண்டியது தேவையாய் இருக்கிறது” (பக்.306-7).

அதே போலவே, நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு, தற்போதைய நாடாளுமன்ற ஆட்சி முறையை மாற்றியமைத்து அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவருவோம் என்று நேரடியாகச் சொல்லாமல், “மக்களே தங்கள் நாட்டின் குடியரசுத் தலைவரைத் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் அரசியலமைப்பு மாற்றம் செய்ய நாம் தமிழர் அரசு பாடுபடும்” என்று அறிவிக்கிறது (பக்.305). மாட்டு மூத்திர வியாபாரம், அரசியலமைப்புச் சட்ட மாற்றம், குடியரசுத்தலைவர் ஆட்சி போன்றவற்றை வேறு யார், யார் விரும்புகிறார்கள், அமல்படுத்தத் துடிக்கிறார்கள் என்பதை நாமனைவரும் நன்கறிவோம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதனடிப்படையில் தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெறத் துடிக்கும் ஒரு கட்சியும், அதன் தலைவரும், அந்த ஆவணத்துக்கு, அரசியல் ஒப்பந்தத்துக்கு, உண்மையாக இருக்க வேண்டும். அல்லது அதனை வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும். மாறாக, அங்கே தலையையும், இங்கே வாலையும் காட்டிக்கொண்டு, தமிழ் இளைஞர்களை பகடைக் காய்களாக்கி, அவர்கள் மனங்களில் குழப்பம் விளைவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க அணுகுமுறையல்ல.

[5] மாற்று எனும் பெயரில் ஏ-மாற்று

மீட்பு அரசியலை முன்வைத்து, விடுதலை மொழியைப் பேசி, புதிய துவக்கம் ஒன்றைச் சுட்டிக்காட்டியவாறே, தொன்மையும், தொலையாச் சிறப்புக்களும் கொண்ட ஒரு மாபெரும் தேசிய இனத்தை அடிமைப்படுத்துவது எந்தவிதத்திலும் மாற்று அல்ல. அதன் பெயர் ஏமாற்று. புரட்சிகர அரசியல் பேசுவதாக சொல்லிக்கொண்டே, பிற்போக்குத்தனங்களை வளர்த்தெடுப்பது கூடாது.

பல்வேறு குறைபாடுகளும், குளறுபடிகளும், கோளாறுகளும் இருந்தாலும், 135 கோடி மக்கள் சனநாயகத்தை அடிப்படை அரசியல் கோட்பாடாக ஏற்றுக்கொண்டு, அது வழங்கும் உரிமைகளைப் போற்றி, அதற்கான கடமைகளை விரும்பி ஏற்று, ஒரு குடியரசாக நாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். உலகிலேயே மிகப் பெரிய சனநாயக நாடு என்று அறியப்படும் நமது நாட்டை பார்ப்பனீய பாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாப்பதற்காக நாமெல்லாம் போராடிக் கொண்டிருக்கும் போது, “சர்வாதிகாரமே சிறந்தது, அதுதான் வளர்ச்சிக்கு உகந்தது” என்று ஒரு கட்சித் தலைவர் பேசுகிறார் என்றால், அவர் யாருக்காக அரசியல் செய்கிறார் என்கிற கேள்வி எழுகிறது.

சர்வாதிகாரம்தான் தமிழ் நாட்டுக்கான, தமிழருக்கான மாற்று அரசியல் என்று குறுக்குசால் ஓட்டுவது, தமிழர்களை பிற தேசிய இனங்களிடமிருந்து அந்நியப்படுத்தி, தனிமைப்படுத்தி, பலவீனமாக்கும் சூழ்ச்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர் களான பார்ப்பனீய பாசிஸ்டுகள் தங்களைக் கேள்வி கேட்கிறவர்களை தேசத்துரோகி, அந்நியநாட்டுக் கைக்கூலி, நகர்ப்புற நக்சல், மாவோயிஸ்ட் என்றெல்லாம் அவதூறு பரப்புவதுபோல, தமிழ்த் தேசியத்தின் அகில உலக ஸ்டாக்கிஸ்டுகளாக தங்களை கருதிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர், தங்களை கேள்வி கேட்கிறவர்களை, விமரிசிக்கிறவர்களை திமுக ஆதரவாளர், திராவிடச் சொம்பு, இருநூறு ரூபாய் கைக்கூலி, இனத்துரோகி என்றெல்லாம் பட்டம் சூட்டி வசைபாடுகின்றனர்.

பொறுப்பற்றப் பேச்சு, பொல்லா வன்முறை, உண்மையற்றக் கதையாடல்கள் போன்ற  அம்சங்களோடு ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க இயலாது. இந்த மாதிரியான குழப்ப அரசியல் தமிழ் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைப்பதற்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது.

தமிழ் இளைஞர்கள் தரமானக் கல்வியின்றி, தன்னம்பிக்கையின்றி, தகுதியான வேலையின்றி, போதிய வருமானமின்றி, ஒளிமயமான எதிர்காலமின்றி கையறு நிலையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ஈழப் பயணக்கதையோ, இங்கிலாந்துப் பயணக்கதையோ அல்ல. மாறாக, தேசிய இன விடுதலைக் கோட்பாடுகளும், தெளிவானச் செயல்திட்டங்களும், அறிவார்ந்த வழிகாட்டலும்தான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,

அன்பிற்குண்டோ அடைக்குந்தாழ்,

யாதும் ஊரே, யாவரும் கேளிர்,

தீதும் நன்றும் பிறர்தர வாரா,

தாழக் கிடப்பாரை தற்காப்பதே தருமம்,

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,

என்பன போன்ற அருமையான மாந்தநேயக் கருத்துக்கள் மலர்ந்து, மணம்வீசும் தமிழ் மண்ணில், தவறான அரசியலை விதைக்க விடக்கூடாது.

தற்போது நடக்கும் கருத்துப்பரிமாற்றத்தை ஒரு வாய்ப்பாக மாற்றி, அடுத்த தலைமுறைக் கான அரசியல் விழுமியங்களை, அணுகு முறைகளை, செயல்பாடுகளை விரிவாக விவாதித்து, உரியவற்றை, உயரியவற்றைத் தேர்ந்தெடுத்தால், தமிழர்கள் நாம் வெல்வோம்.


சனநாயகமும், சகவாழ்வும், சமாதானமும் தமிழரிடம் வளரட்டும்!

சாதியமும், பாசிசமும், வன்முறையும் தமிழ் மண்ணிலிருந்து விலகட்டும்!

தகுதியான தமிழ்த் தேசியத்தால் தன்மானத் தமிழர் வாழ்வு ஓங்கட்டும்!

[] [] []


தரவுகள்:

[1] நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2016, சென்னை: நாம் தமிழர் கட்சி, 2016.

[2] ஆழி செந்தில்நாதன், தொகுப்பாசிரியர், எங்கேப் போகிறது நாம் தமிழர் கட்சி? சென்னை: ஆழி பதிப்பகம், 2012.

[3] பத்ரி சேஷாத்ரி, “அன்பான சர்வாதிகார அறிக்கை,” இந்து தமிழ் திசை, ஏப்ரல் 18, 2016.

[4] த. ராஜன், “சிந்திக்கணும் சீமான்,” இந்து தமிழ் திசை, அக்டோபர் 22, 2019.

[5] “சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்: சீமான் பேச்சு,” இந்து தமிழ் திசை, மார்ச் 22, 2021.

[6] Philip Short, Pol Pot: Anatomy of a Nightmare. New York: Henry Holt & Co., 2004.

Tuesday, August 29, 2023

அம்மை ஒரு நோய்

அம்மை என்பது ஒரு நோய் என்று அறியாமல், மாரியம்மன் என்னும் கடவுளின் கடுங்கோபம் என்று கருதிய காலம் ஒன்றுண்டு. அம்மை நோய் கண்டால் மாரியம்மன் கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்று வார்கள் - நோயாளியின் தலை மாட்டில் உட்கார்ந்து மாரியம் மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடுவார்கள்.

இந்த நிலையில் வெள்ளை யர்கள் ஆட்சியின்போது அம்மை நோய்க்குத் தடுப்பு நடவடிக்கைகள் என்றால், மூட நம்பிக்கையில் முட்டையிட்டுப் பொரித்த மூளை உள்ளவர்கள் ஏற்கமாட்டார்களே! என்ன செய்தனர்!

தடுப்பூசி நடவடிக்கையை அம்மன் பிரசாதம் என்றே கூறுவார்களாம்.

1937 ஆம் ஆண்டு காரைக் குடி ஊராட்சி உறுப்பினர் (கவுன்சிலர்) சார்பில் தெய்வத் தன்மை தெய்வீக முறை என்ற பெயரில் அம்மை நோய் போட்டுக் கொள்வதற்கான கையேடுகள் வெளியிடப்பட் டன. அதில் பெரியம்மை எனும் தொற்றுநோயை அழிக்க அம்மன் தந்த வரப்பிரசாதமே அம்மைப் பால் என்ற வகை யில் வரிகள் இடம்பெற்றிருந்தன.

இது மட்டுமா? நாடகங் களில்கூட அம்மைக்கான தடுப் பூசி அம்மன் பிரசாதமாகவே காட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் கிருஷ்ணசுவாமி என்ற சுகாதார துறை ஆய்வாளர் எழுதிய நாடகத்தின்மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தத் தகவல்களை சென்னை நாளை முன்னிட்டு தரமணி ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அறிவி யலுக்கும் மதத்துக்கும் தொடு புள்ளியாய் அம்மன் எனும் தலைப்பில் அமெரிக்க உதவிப் பேராசிரியை பெருந்தேவி குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அம்மை என்பதுதான் என்ன?

பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த எட்வின் ஜென்னர் இருபது ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். தனது ஆய்வை ப்யூஸ்டெரின் மருத்துவ முறை மூலம் தீர்வு உண்டு என்று உறுதியாக நம்பினார் ஜென்னர்.

இதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய ஜென்னர் 1796 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் தனது தோட்டக்காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கவுபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கவுபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குண மடைந்தான்.

சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தி னார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர். சிறுவனின் உயிரோடு விளை யாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்தத் தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்பட வில்லை. அம்மைக்கான தடுப் பூசி கிடைத்துவிட்டது என் பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வர லாற்றில் அழியா இடம் கிடைத் தது.  அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798 ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங் களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

எட்வர்டு ஜென்னருக்கு முன்னர் 1770-களிலேயே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அய்ந்து கண்டுபிடிப்பா ளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி 1774, ரெண்டெல், பிளெட் 1791) கவுபாக்சு நோயிலிருந்து தடுப் பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர். இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க் கெதிரான தடுப்பூசியினை தானும், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக்கத்துடன் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.

ஆக மூடத்தனம் என்ற நோயை ஒழித்ததால்தான் அறிவியல் அடிப்படையில் அம்மை நோய் ஒழிக்கப்பட்டது என்பதை அறிக.

- கவிஞர் கலி. பூங்குன்றன்


Monday, July 17, 2023

டாக்டர் டி.எம்.நாயர்

டாக்டர் டி.எம். நாயர்

ஏ.எஸ். வேணு

Dr. T. M. நாயர்!

தரவாத் மாதவன் நாயர்!

புகழ் பெற்ற தரவாத் குடும்பத்தில் 1868ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிறந்தார். தந்தையின் பெயர் சங்கரன் நாயர். அவர் மாவட்ட முன்சீபாக திரூரில் பணியாற்றினார். அவரு டைய மூத்த சகோதரர் பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் துணை கலெக்டராக பணிபுரிந்தார். அவருடைய உடன்பிறப்பு அம்மாளு அம்மாள் வடமொழியிலும், மலையாள மொழியிலும் புலமைமிக்கவர். அவர் மலையாள மொழியில் பல அரிய நூல் களை எழுதியுள்ளார். அறுபத்து மூன்று நாயன்மார்கள் சரித்தி ரத்தை மலையாளத்தில் கவிதை எழுதினார். அவருடைய தாயாரும் ஆற்றல் மிக்கவர். 

19ஆம் நூற்றாண்டில் இவ்வளவு சிறப்பு மிக்க குடும்பத் தில் Dr. T.M. நாயர் தோன்றியது இந்தியத் துணைக் கண்டத் திற்கே, குறிப்பாக நலிந்து கிடந்த திராவிடப் பெருங்குடி மக்களுக்கே ஒரு நல்லகாலம் பிறந்துவிட்டது என்ற உணர்வை பின்னர் வரலாறு உணர்த்தலாயிற்று. 

Dr. நாயர் ஒருவர்தான் முதன் முதலில் சமூகத்தின் நிலையை நன்கு ஆய்வு செய்து, எல்லா சமூகத்தினருக்கும், வகுப்பு உரிமை நீதி வழங்கிட வேண்டும் என்று போர் முழக்கம் செய்தார் என்பதை எவரும் தயக்கமின்றி ஒப்புக் கொள்வர். நாட்டை ஆண்ட வெள்ளையருக்கு சமூக நீதி குறித்தும், வகுப்பு உரிமை குறித்தும், மிகத் தெளிவாக எடுத்து கூறியவரும் அவரே. 

அவர் தன்னுடைய அறிவாற்றல், திறமை, முன் அறிவு இரக்க குணம் அத்தனையும் தன்னுடைய நாட்டு மக்களுக்காக பயன்படுத்தினார் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. 

அவரால், பின் தள்ளப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம்கள்' கிறித்துவர்கள் எல்லோருமே புதுவாழ்வு பெற்று படிப்படியாக முன்னேற்ற மடைய நேரிட்டது என்பதே வரலாற்று உண்மை . 

இருண்டு கிடந்த மக்களுக்கு ஒளியாய், கலங்கரை விளக்காய், வாழ்வு தரும் கதிரவனாய் உதித்தவர் Dr. நாயர்! 

நம் நாட்டு மக்களை நச்சரவு கூட்டத்தினர் சேட்டையெல்லாம் செய்து வாட்டிவதைக்கும் கொடுமையை தடுத்திட ஆண்டவன் யாரும் எடுக்காத அவதாரத்தை எடுத்தவர் Dr. நாயர்! 

இமயம் சென்று விற்கொடி பொறித்து கனக விசயன் தலையில் கல்லை ஏற்றி கொணர்ந்த சேரனின் பரம்பரையா இப்படி சீரழிந்து கிடக்கிறது என்பதை நன்கு உணர்ந்த அறிவு ஒளியாக தோன்றியவர் நம் Dr. நாயர். உரோமுக்கு உடையும், எகிப்திக்கு உணவும், சீனருடனும், யவனருடனும் நல்லுறவு கொண்டு விலை மதிக்க முடியாத பொருள்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த மக்கள் இன்று அடிமைகளாக உரிமையற்றவர்களாக, நாதியற்றவர்களாக திண்டாடுகின்றனர் என்பதை முதல் முதல் உணர்ந்த எல்லா வகுப்பினரும் நீதியை பெற்று நல்வாழ்வு பெற்றிட போராட்டத்தை துவக்கிய மேதை நம் Dr. நாயர் அவர்கள் தான்! தென்னக மக்களின் நிலையை ஆய்ந்து நீதிக்கட்சியை உருவாக்கிய சிற்பியாவார். 

மக்களுக்காக அவர் அவர் தொடுத்த போர் - நியாய மான போர் - உண்மையான போர் வெற்றிகரமாக முடியும் தருவாயில் அவரும் மறைந்தார். இன்று அந்த மக்கள் எல்லாதுறைகளிலும் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். 

அவர் 51வது வயதிலேயே மறைந்து விட்டார். ரத, கஜ, துரக பதாதிகள் கொண்டுபோரிட்டவர் அல்ல நமது Dr. நாயர். அவர் நடத்தியது, அறிவுப் போர், அறப்போர். 

அவருடைய போராட்டம் நம்மையெல்லாம் ஆண்டு கொண்டிருந்த வெள்ளையர் ஏகாதிபத்திய ஆதிக்கவாதி 'களிடம் இலண்டன் மாநகரில் நடக்கும்போது அவர் வெற்றி யைத் தேடித்தந்து விட்டு அங்கேயே மறைந்து விட்டார். போராட்டத்தைத் துவங்கி, அந்தப் போராட்டகளத்திலேயே உயிர் விட்டவர் நம் Dr. நாயர். 

அவர் மறைந்த செய்தி கேட்டு தென்னக மக்கள் துக்கக் கடலில் மூழ்கினர். அவருடைய உற்ற நண்பர்கள் குறிப்பாக மருத்துவர்கள் Dr. நாயர் தன் உடல் நிலை குறித்து நன்கு அறிந்திருந்தும், வெளியே காட்டிக் கொள்ளாது, நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டது அவர் உயிர் தியாகமே செய்து கொண்டார் என்று கதறி அழுதனர். 

இந்திய அரசியல் சீர்திருத்தங்களுக்கான ஆலோசனை களை கூற மாண்டேகு பிரபுவின் அறிக்கையின்படி, நிறுவப் பெற்ற ஒரு பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவின் முன் வகுப்பு வாரி பிரிதி நிதித்துவத்தை வலியுறுத்தவே Dr. நாயர் இலண்டன் சென்றார். 

நம் Dr. நாயருக்கு இருந்த அறிவு, ஆற்றல், சுறுசுறுப்பு, பிறர் மனம் புண்படாது நகைச் சுவையுடன் பேசிடும் ஆற்றல், அவருடைய உடல் நோயை வெளிக்காட்டாது மறைத்து வகுப்புரிமை நீதியில்லா வகுப்பினருக்கும் கிடைத் திட அவர் அவர் பட்டபாடு அவருடைய உ.டல் நிலை மேலும் மோசமாயிற்று. இருதய நோய், நீரிழிவு நோய் அவரை வாட்டி வதைத்தது. இத்தனைக்கு அவரே மருத்துவ துறை யில் நிபுணர். அந்தப் பிணிகளைப் பற்றி ஆராய்ந்து கட்டுரை கள் எழுதியவர் நம் Dr. நாயர்! 

உடல் நிலையை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்தி இங்கிருந்து செல்ல Dr. நாயர் மறுத்திருந்தால் யார் அவரை குறை சொல்ல முடியும்? அதனால் யாருக்கு என்ன நட்டம் அதனால் தன்னை நம்பிய மக்களுக்கு தானே நட்டம். சமூக நீதி கிடைத்திருக்குமா? வகுப்புவாரி உரிமைதான் மக்களுக்கு கிட்டியிருக்குமா? 

அனைத்து வசதிகளும் கொண்ட செல்வக் குடும்பத்திலே - பிறந்த Dr. நாயர் தன்னைப்பற்றி நினைக்கவே இல்லை. நாட்டு மக்கள் நலத்தையே இலட்சியமாகக் கொண்டு போர் களத்திற்குச் சென்றார். எல்லா சமூக மக்களும் வகுப்பு உரிமை நீதி கிடைக்க வழிகோலி விட்டு பிணியால் போன இடத்தி லேயே மடிந்தார். அவர் நினைத்திருந்தால் பல ஆண்டு காலம் நிம்மதியுடன், ஆடம்பர வாழ்வு வாழ்திருக்க முடியும். கோடிக் கணக்கில் பிறக்கிறார்கள். கோடிக்கணக்கில் மடிகிறார்கள். மக்கள் இதயங்களில் இடம் பெறுகிறவர்கள் எத்தனை பேர். அதிலும் கோடிக்கணக்கான மக்களுக்கும் வருங்காலத்தில் பிறக் கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் நல்லதைசெய்து உலக வரலாற்றில் தனி இடம் பெற்றவர் நம் Dr. நாயர். | 

அவர் இலண்டன் சென்றபோது, அவரின் அரசியல் எதிரி கள் கதிகலங்கினர். அரசுக்கு தவறான தகவல்களை இட்டுக் கட்டிப் புகார் செய்தனர். அரசும் அவர்களின் பக்கம் மயங்கி Dr. நாயர் எந்த பொதுக்கூட்டத்திலும் பேசக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்து இராணுவ அதிகாரியின் மூலம் Dr. நாய ருக்கு அதற்குரிய ஆணையை வழங்கியது. ஆம்! இது முற்றிலும் உண்மை . நல்ல ஜன நாய கத்தை பேணி காத்த வெள்ளையர் அரசு ஒரு இந்திய குடிமகனின் பேச்சு உரிமையைப் பறித்தது. பிரிட்டிஷாரின் தகாத, கூடாத சர்வாதிகார அடக்கு முறையை முதல் முதலில் * சந்தித்திவர்கள் நீதிக்கட்சியினர்தான்! 

அந்தத் தடை உத்தரவை பெற்றுக் கொண்ட Dr. நாயர் சிரித்துக் கொண்டே ' 'என்னுடைய துப்பாக்கி மருந்தை தாயகம் செல்லும் வரை பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் " என்று கூறினார். பம்பில் கவர்னராக விளங்கிய சைடனாம், பிரபு, பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் (House of Lords) நம் Dr. நாயரை மிகவும் புகழ்ந்துப் பேசினார்.) அதன் பயனாக வும், பலரின் தலையீட்டாலும் தடை உத்தரவு நீக்கப்பட்டது. அதன்பிறகு Dr. நாயர் உற்சாகத்துடன் தம்கடமையைத் தீவிர மாகச் செய்திட முனைந்தார். ஆனால் அவர் உடல் நலம் மிகவும் குன்றியதால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பாராளு மன்றக் குழு அவரை மருத்துவ மனையில் சந்தித்து வாக்கு மூலத்தை பதிவு செய்துக் கொண்டது. உயிர் பிரிவதற்கு முன் அவர் ஆற்றியு உரையும் அதுவே. 

அவர் 'கோல்டர்ஸ் கீரினில்' (Goldcrs Greens) தகனம் செய்யப்பட்டார். 

அவரது அஸ்தியை Dr. A.R. மேனன் தாயகம் கொண்டு வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம் போல் கூடி நின்று, கதறி அழுதனர். ஆதி திராவிடர்கள், தொழிலாளர் கள், ஏழைகள் கலசத்தை தொட்டு Dr. நாயருக்கு இறுதி அஞ்சலி செய்தனர். - Dr. நாயர் நீதிக்கட்சியின் (தென்னிந்திய நல உரிமை சங்கம் (S.I.L F.) சார்பாகவே, பாராளுமன்றக் குழு முன் வாக்குமூலத்தை கொடுத்தார். அவருடைய முக்கிய கொள்கை ''சட்டமன்றங்களிலும், அரசு பணிகளிலும் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். 

 மக்கள் எல்லோருடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்' ஒரு பகுதியினர் மற்ற ஒரு பகுதியினரை  நசுக்கக் கூடாது. 

“அரசு ஆதிதிராவிடர்களுக்கும், பின் தங்கிய மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சலுகைகளைத் தாராளமாக வழங்கிட  வேண்டும். 

 “சமூக நீதி சமவாய்ப்பு எல்லோருக்கும் அளிக்கப்பட வேண்டும். 

அவருடைய கோரிக்கைகளில் முக்கியமானவைகள் இன்றும் சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தின் உரிமை பிரகடனத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அவர் இலண்டனில் மறைந்த போது, காங்கிரஸ் சார்பாக இலண்டன் வந்திருந்தவர்கள் கூட சவ அடக்கத்தில் பங்கு கொள்ளவில்லை என்பதை நினைக்கும் போது, அவரின் எதிரிகளின் தரமும், அந்தக்கட்சியின் போக்கும் எல்லோ ருக்கும் எளிதில் புலப்படும். 

ஏதாவது ஒரு கல்விக்கூடத்தில் சேர்ந்து எப்படியாவது ஒரு பட்டம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலையில் மாணவராக அவர் விளங்க வில்லை , அவர் தன் அறிவை தானே வளர்த்துக் கொண்டவர் ஆவார். வாய்ப்புகள் கிடைக்கும் போது நேரத்தை வீணாக்காமல் அறிவை வளர்த்துக் கொண்டவர் Dr, நாயர். எதைப்பற்றியும் அவர் பெருமளவு தெரிந்துக் கொண்டவராக அவர் விளங்கினார். அரசியல், பொருளாதாரம், சட்டம், உலக நாடுகளின் வளர்ச்சி, மனித சமுதாய மேம்பாட்டுக்கான தடைகள் இப்படி அவர் அறிந்த விஷயங்கள் மிகப்பல. அவர் நிகழ்த்தி யுள்ள சொற்பொழிவு ஆய்வு புலப்படுத்தும் உண்மை இது. 

அவர் முதலில் பாலக்காடு அரசினர் உயர் நிலைப் பள்ளி யில் பயின்றார். அவர் படிப்பிலும் விளையாட்டுப் போட்டி களிலும் முதன்மையாக விளங்கினார். மூன்றாண்டுகள் படிக்க வேண்டிய மெட்ரிகுலேசன் படிப்பை இரண்டே ஆண்டு களில் படித்து தேர்வு பெற்றார். பிறகு சென்னையில் மாநில கல்லூரி யிலும், மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். அவர் படிக்கும் போதே மற்ற மாணவர்களிடம் தோழமை, அன்பு, பரோபகாரச் சிறப்புகளைக் கையாண்டு மாணவர் தலைவராகத் திகழ்ந்தார். 

1889ஆம் ஆண்டு எடின்பர்க் சென்று அங்கு 1894 இல் M. B. Ch. B. பட்டம் பெற்றார். அதன்பிறகு காது, தொண்டை, மூக்கு நோய்களுக்கான சிறப்பு படிப்பில் தீவிரம் காட்டி M.D. பட்டத்தை 1896இல் பெற்றார். இந்நோய்கள் குறித்து அவர் பாரீஸ் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 

M.B.Ch.B. பட்டம் பெற்றிட ஒரு விதியிருந்தது. இலக்கியம் நிறைந்த ஒரு மொழில் நல்ல பயிற்சி இருத்தல் வேண்டும் என்பதே அந்தவிதி. Dr. நாயரின் தாய் மொழி மலையாளம். அவர் சிறுவனாக இருந்தபோது வடமொழி சிறிது பயின்றார். ஆனால் கல்லூரியில் தேற வேண்டிய அறிவை அது அவருக்கு வழங்களது என்று தானே முடிவு செய்து கொண்டு தன் தங்கை யின் மூலம் அஞ்சல் வழியே பாடங்களை வரவழைத்து படித்து தேர்வு பெற்றார். 

கல்வித்துறையில் அவர் பெற்றிருந்த ஆர்வத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு. அவர் எங்கு சென்றாலும் தன் ஒய்வு நேரத்தை வீணாக்கியதில்லை. ஓய்வு நேரங்களில் ஆராய்ச்சி நிலையங்களுக்கும். நூல் நிலையங்களுக்கும் செல்வதை அவர் கடமையாக கருதினார். ஓயாது புதுப்புது நூல்களை படிப்பார். அவர் காலத்தில் வாழ்ந்த பல்வேறு நாடுகளின் அரசியல் வாதிகளுடன் பழக ஆர்வம் கொண்டார். மருத்தவ படிப்புடன் அரசியல் அமைப்பு வரலாறுகள், இலக்கி யங்கள் போன்றவை களை அவர் கசடற கற்றார் இங்கிலாத்தில் இருந்தபோது ஆங்கிலேயரின் அரசியலையும், சமூகவாழ்க்கையையும் நேரடி யாக பயின்று வந்தார். அவர் மாணவர்கள் சங்க அமைப்பாளரா கவும், செயலாள ராகவும் பணியாற்றினார். எடின்பரோ இந்தியர் சங்கத் திற்குத் தலைவராக இருந்தார். பல்கலைக் கழக மாணவன்' என்ற வெளியீட்டின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார். இலண்டன் வந்த போதும் இந்தியர் சங்கத்தின் செயலாள ராகவும், துணைத்தலைவராகவும் பணியாற்றினார். 

அவர் சென்ற நாடுகளில் அவரே அந்த நாடுகளின் பழைய வரலாற்றையும், புதியவளர்ச்சியையும், தானே விரும்பி பயின்றுதான் அறிவை வளமாக்கிக் கொண்டார். அக்கால கட்டத்தில் Dr நாயர் உலகைப்பற்றி அவர் தெரிந்துக்கொண்ட அளவுக்கு வேறுயாரும் தெரிந்து கொண்டதாக கூறுவதற் கில்லை. இவ்வளவும் 1919க்குள் நிகழலாயிற்று. காந்தியார் காங்கிரசில் கால் எடுத்து வைத்ததே 1921 ஆம் ஆண்டுதான். தந்தை பெரியார் 1919ஆம் ஆண்டுதான் காங்கிரசில் சேர்ந்தார். அவரை ராஜாஜி காங்கிரசில் சேர்த்தார். 

நீதிக்கட்சி டாக்டர் நாயரின் ஆற்றலினால் உருவாக்கப் பட்டது என்பதை நினைக்கும்போது ஒரு புறம் மகிழ்ச்சியும் அவரது திடீர் மறைவை நினைக்கிறபோது மறுபுறம் மன வேதனையும் உண்டாகிறது: அவர் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் மக்கள் நிலை எந்த அளவிற்கு உயர்ந்திருக் கும்? என எண்ணத்தோன்றுகிறது . 

கம்பீரமான தோற்றம் - உயர்ந்த வலிமையுடைய உருவம், அகன்ற நெற்றி, ஒளிவீசும் கண்கள், படர்ந்த முகத்தில் அடர்ந்த மீசை, தசை மிக்க நாடி, ஆங்கிலேயருக்கு ஈடாக தரம்மிக்க உடை, கள்ளம் கபட மில்லாத உள்ளம், பேச்சுகள் மூலமே எதிரி கள் மனதை கவரும் தனிச்சிறப்பு அத்தனையும் கொண்டவர் நம் Dr. நாயர். 

அவர் தன் தாய்மொழி மீது பற்றுக்கொண்டவர். தூய மலை யாளத்திலேயே பேசவும் எழுதவும் ஆற்றல் பெற்றவர். கள்ளிக் கோட்டையிலிருந்து வெளியிடப்பட்ட 'கேரள பத்திரி'காவிற்கு Dr. நாயர் எடின்பரோவிலிருந்து தன் தாய் 

தொடர்ந்து பல நல்ல கட்டுரைகளை எழுதினார். 

ஒரு சமயம் ' இந்துலேகா' என்ற தலைப்பில் வெளியான உயர்தர நாவலின் மதிப்புரைகளை எடின்பரோவில் படித்து  விட்ட நாயர் அந்த ஏட்டின் ஆசிரியருக்கு மடல் வரைந்தார். நாவலின் கதாநாயகி இந்துலேகா, கதா நாயகன் மாதவன் தன் பெயரும் மாதவன் என்று இருப்பதை வைத்து நகைச்சுவையாக ‘நான் தற்சமயம் வெகு தூரத்தில் இருப்பதால்' இந்து லேகாவை பார்க்க முடியவில்லை. ஆனால் இறுதியில் இந்துலேகா மாதவனை நாடிவருவாள் என்று எழுதினார். அதை படித்த ஆசிரியர் சிரித்துவிட்டு ஒரு புத்தகத்தை உடனே Dr. நாயருக்கு அனுப்பி வைத்தார். 

அறுவை சிகிச்சையில் இந்தியாவில் புகழ்ப் பெற்றவர் களில்) Dr.நாயர், ஒருவர். அவர் தொழில் நன்றாக நடந்தது. காலை 8 மணி முதல் 1 மணிவரை தொழிலை கவனித்துவந்தார். \ பின்னர் படிப்பது, எழுதுவது அவருடைய வழக்கம். அவர், வீட்டில் பெரியதொரு நூல் நிலையம் இருந்தது. அவர் ‘ஆண்டிசெப்டிக் (Antiseptic) என்ற மருத்துவ பத்திரிகையின், ஆசிரியராக வாழ் நாள் முழுவதும் நடத்தி வந்தார். தமிழக சட்டமன்றத்தின் தலைவராக விளங்கிய Dr. யு. கிருஷ்ணாரா வின் தந்தை Dr. யு. இராமாராவ் தான் அப்பத்திரிகையின் ஆசிரியர்! அவர் மறைந்த பிறகு தானே ஆசிரியராக இருந்து அந்த ஏட்டினை நடத்தி வந்தார். 

Dr. நாயரின் கட்டுரை ஒன்றை எதிர்த்து திருமதி அனி பெசன்ட் அம்மையார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் Dr. நாயர் வெற்றி பெற்றார். அந்த வழக்கில் பெசண்ட் அம்மையார் தோற்றது தேசியவாதிகளுக்கு பெரிய) ஏமாற்றமாகும். நீதிக் கட்சிக்கு மகத்தான வெற்றியாகும். 

Dr. நாயர் நீதிக்கட்சியால் எந்தப்பலனும் பெறவில்லை. அவரால்தான் நீதிக்கட்சி மகத்தான சாதனைகளைச் செய்ய முடிந்தது. அவர் சென்னை மாநகராட்சி மன்றத்தில் 1904ஆம் ஆண்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்ப்பனர் களும் படித்தவர்களும், வசித்து வந்த திருவல்லிக்கேணி வட்டத் தில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் நகராட்சியின் தொடர்ந்து கூட்டங்களில் கலந்துக் கொண்டு அதன் சீர்திருத்தத் திற்கு அரும்பாடு பட்டார். நகராட்சியின் 

நிலையை உணர்ந்து ஆக்கபூர்வமான யோசனைகளை கூறினார். அவருடைய பேச்சின் மூலம் நகரமக்கள் விழிப் படைந்து, எழுச்சிப் பெற்றனர். மாநகராட்சியின் குறைபாடு களை அவர் கண்டித்துப்பேசும்போது குற்றம்குறை காண முடி யாத அளவிற்கு மிக தெளிவாகவும் தயக்கமின்றி, துணிவோடும் அவர் பேசினார். நகரசபை விநியோகிக்கும் குடிநீர் பற்றிப் பேசும்போது, அதை மாலோனி மிக்சர் என்று அவையிலேயே குறிப்பிட்டார் Dr. நாயர். அப்போது மாநகராட்சியின் பெரிய நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்தவரின் பெயர் மாலோனி யாகும். அதற்கு மாலோனி பதில் கூறும் போது பெருமளவு நீர்வடி கட்டிதான் வழங்கப்படுகிறது என்றும், சிறு அளவு தண்ணீர் தான் வடி கட்டாது சேர்க்கப்படுகிறது என்றும், கூறினார். உடனே நாயர் எழுந்து, கிருமிகளைப்பற்றி சிறிதளவு தெரிந் தவர்கள், வடிகட்டிய நீருடன், வடிகட்டாத நீரை சேர்ப்பதனால் கிருமிகள் அதிகமாக வளர்ச்சி பெறும் என்றார். அவர் உள் ளாட்சி மன்றங்களின் துணைவராக காப்பாளனாக இப்படி விளங்கினார், எங்காவது உள்ளாட்சி அவைகள் கலைக்கப் பட்டால் அவர் அவை மீண்டும் செயல்பட பாடுபட்டார்கள். பாலக்காடு நகரசபை 1910ஆம் ஆண்டு கலைக்கப்பட்டபோது, Dr. நாயர் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி • இத் தீர்மானம் போலீஸ் அதிகாரி ஒருவரைத்தவிர மற்றவர் எல்லோ ராலும் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது' என்று கூறினார். பிறகு கலைக்கப்பட்ட பாலக்காடு நகரசபை மீண்டும் செயல் படலாயிற்று. 

Dr, நாயர் துவக்க காலத்தில் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்து தொண்டாற்றினார். அதன் தலைவர்கள். வில்லியம் வேடர்பான் சென்னைக்கு வந்தபோது Dr. நாயரின் இல்லத்தில் தங்கியிருந்தார். 1898ஆம் ஆண்டு சென்னையில் கூடிய காங் கிரஸ் மாநாட்டில் பங்குகொண்டு நாயர் உரையாற்றினார். அடுத்து இலட்சுமணபுரியில் நடைபெற்ற மாநாட்டிலும் சொற் பொழிவாற்றினார். 1907ல் சித்தூர் வடஆற்காடு மாவட்ட காங் கிரஸ் மாநாட்டின் தலைவராகவும் இருந்தார். பொதுவாகவே அவரது ஆங்கிலப்பேச்சும், உச் சரிப்பும், கவர்ச்சி கொண்டதாகும். அவர் மருத்துவத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த தால், தொடர்ந்து பயணம் செய்யவோ, வெளியூர்களில் சொற் பொழிவாற்றவோ சம்மதிக்கவில்லை. சென்னையில் மட்டுமே அவர் சொற்பொழிவுகள் அடிக்கடி நடைபெறும். பொது விஷயங் களை அவர் ஆராய்ந்து. மிகத் தெளிவாக பேசியவர் என்பதால், அவர் பேசிடும் கூட்டங்களுக்கு, பலர் வெளியூர்களிலிருந்து பயணம் மேற்கொண்டு வருவதும், Dr. நாயரை தனியே சந்தித்துப் பாராட்டுவதும், பேசி பல அரிய பொருள்களை தெரிந்து கொள்வ தும் உண்டு. 

வங்கத்திலே போலீசார் வன்முறையைக் கையாண்டு பொதுக்கூட்டத்தைக் கலைத்தனர். போலீசார் எந்தவித ஆயுதத் தையும் பயன்படுத்தவில்லை” என்று அரசு அறிக்கை வெளி யிட்டது. இந்த தீய போக்கினை கண்டிக்க, சென்னையில் ஒரு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. Dr. நாயர் அந்தக் கூட்டத்தில் பேசினார். ''அரசாங்கம் கூறுவது உண்மையானால் எனது நண்பர் சௌதி தலையில் படுகாயம் எப்படி உண்டா யிற்று? அது எவ்வாறு ஏற்பட்டது? நிச்சயமாக! வந்தே மாதரம்! என்று கூச்சல் இட்டதினால் காயம் ஏற்பட்டிருக்காது என்று உணர்ச்சித் ததும்ப பேசினார். உடன் கூட்டத்தில் வெடித்த சிரிப் பொலி அடங்க நெடுநேரம் பிடித்தது. அவருடைய நாவன்மை அலாதியானது. அந்த காலத்தில் மேடை பேச்சுகள் பெரும் பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றுவந்தது. கல்வித்தரம் மிகவும் உயர்ந்திருந்தது. இந்தியத் துணைக்கண்டத்திலேயே சென்னையில்தான் அதிகப்படியான தரம் நிரம்பியிருந்தது. ஆங்கிலத்தில் எழுவதும், பேசுவதும் மற்றபகுதிகளில் இருப்பவர் களுக்கு வியப்பாக விளங்கியது. அப்படிப்பட்ட புலமை படைத்த வர்களில் முன்னோடியாக விளங்கியவர் Dr. நாயர். 

நமது Dr. நாயர் 1915ஆம் ஆண்டு சென்னை பல்கலை கழகத்தின் செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் பல்கலை கழகத்தின் தரம் தாழாமல் பாதுகாத்தார். நல்ல பல ஆராய்ச்சிகள் நடத்த ஊக்கமளிக்கப்பட்டது. பல பேராசிரியர்கள் புதுப்புது நூல் களை எழுதினர். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அரசு அமைத்த தொழில் கமிஷனில் Dr. நாயர் உறுப்பினராக இருந்தார். தொழிலாளர்கள் நிலையை உயர்த்த அவர் பாடுபட்டார். தூய தொண்டினால் தொழிலாளரின் அன்பைப் பெற்றார். கமிஷனுடன் இந்தியா முழுவதும் சுற்றி, தொழிலாளர் குறைகளை நேரில் கேட்டு, மற்ற உறுப்பினர்களு டன் விவாதித்து, நல்ல பல யோசனைகளை நல்கி அறிக்கையை 1908 இல் அரசிடம் சமர்ப்பித்தார். கமிஷனின் கருத்து சில வற்றில் அவர் உடன்பாடு கொள்ளாததால், அறிக்கையிலேயே மறுப்புகளும் எழுதினார். அந்தக் கருத்துக்களை அரசு ஏற்றுக் கொண்டது. தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அதை விளக்கிக் கூறிடவும், பொது கருத்தை உருவாக்கிடவும் தன் சொந்தச் செலவில் பல இடங்களுக்குச் சென்றார். லண்டனுக்கு சென்றும் தொழிலாள ருக்கு சாதக மாகப் பேசினார். 

அவருக்கு சாதி முறையில் நம்பிக்கை இருக்கவில்லை. உயர்வு - தாழ்வு மனப்பான்மையை கண்டித்தார். தீண்டா மையை அவர்தான் முதன் முதலில் வெறுத்தவர். மனு தருமத்தை யும், வருண தருமத்தையும் ஒழிக்க அவர் அரிய கருத்துக்களைக் கூறினார். அவர்களை அந்த நிலைக்கு கொண்டு வந்த அறி யாமை, கல்லாமை, மூடபழக்க வழக்கங்கள் சமுதாய கட்டுப்பாடு கள் அகற்ற பாடுபட்டார். அவர் களின் உரிமையை நிலை நாட்ட எத்தகையப் போராட்டத் தையும்- நடத்த அவர் ஆயத்தமாக இருந்தார். 1917 இல் 4 சென்னை எழும்பூர் ஏரிக்கரையில் தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டம் நடத்த விரும்பினர். உயர் ஜாதி யினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது விளையாட்டு இடம், கூட்டம் அங்கு நடத்தக் கூடாது என்று பிடிவாதம் செய்தனர். ஆதிதிராவிடர்கள் Dr. நாயரைத் தேடி வந்து உதவியை நாடினர். உடனே அவர் விரைந்து சென்று கூட்டம் நடந்து முடியும்வரை அங்கேயே இருந்தார். அவர் கையில் ஒரு பெரிய தடி ஒன்று வைத்திருந்தது மேல்சாதியினருக்கு அவரின் முடிவையும் உறுதி யையும் தெளிவுபடுத்தியது. 

1912 ஆம் ஆண்டு அவர் சென்னை சட்டசபைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டார். அந்த சபையில் அவர் எல்லா கூட்டங்களிலும் பேசி பல நல்ல கருத்துக்களை வெளியிட்டார். குறிப்பாக மருத்துவம், சுகாதாரம், தொழிலாளர் பற்றிய சட்டங்கள் மீது நடைபெற்ற விவாதங்களில் அவர் பங்கு கொண்டிருப்பது குறிப் பிடத்தக்கது. அவரின் பலசீரிய கருத்துக்கள் படிப்படியாக அமுலாக்கப்பட்டிருப்பதை நாம் இன்று உணர முடிகிறது. சென்னை மருத்துவர் பதிவு சட்டம் அவருடைய, பெரும் முயற்சி யால்தான் நிறைவேற்றப்பட்டது. 

1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் மூண்டபோது 'பிரிட்டனை எதிர்த்த நாடுகள் ஜன நாயகத்தில் நம்பிக்கை யற்ற நாடுகள் ஆகும். அந்தப் போரில் பிரிட்டன் தோல்வியடைந்தால் அது அந்த நாட்டுக்கு மட்டுமல்ல. சன நாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவருக்கும் தோல்வியாகும். இந்த அரசி யல் உண்மையை உணர்ந்த நாயர் சன நாயகத்தைப் பாதுகாக்க எல்லோரும் பிரிட்டனை ஆதரித்து, தாராளமாக அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் உண்மையை உணர்ந்து நல்லாதரவு தந்தனர். இங்கு உள்ள சிற்றரசர்கள்,  செல்வந்தர்கள் பேராதரவு தந்தனர். சென்னை மருத்துவ கப்பல் ஒன்றினையும் அளித்தது. அந்த கப்பலின் பெயர் 'S.S. சென்னை ” 

நமது Dr. நாயர் அந்தக் கப்பலின் டாக்டர்களில் ஒருவராக பணியாற்றினார். அக்கால முறைப்படி இவர் ஒரு லெப்டினன்டாக இருந்தார். சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் அக்கப்பலில் பணிபுரிந்தனர். அவர்களின் அறிவு முதிர Dr. நாயர் மருத்துவப் பாடங்களை கப்பலிலேயே நடத்தினார். நம் Dr. நாயர் இறந்த பிறகு பிரிட்டிஷ் அரசு அவருக்கு 'கேய்சர் இந்த்' பதக்கத்தை வழங்கியது. 

என்றென்றும் சமூகத்தில் அரசு பதவிகள் தாங்கள் வகித்து வரும் இடத்தை, உரிமைபெற்ற இதர மக்கள் புகக் கூடாது என்ற நோக்கம் கொண்டவர்கள் Dr. நாயர் மீது வகுப்புவாதி என்று பழி சுமத்தி பேசினர். தனிப்பட்ட பிராமணர் எவர் மீதும் அவருக்கு எந்தவித வெறுப்பும் இருந்ததில்லை. அரசியலில் மிதவாத கொள் கையை பின் பற்றிய பல பிராமணர்கள் அவரை புகழ்ந்தும், பாராட்டியும், நல்லுறவு கொண்டு இருந்தனர். பிராமணர்கள் மற்றவர்மீது ஆதிக்கம் செலுத்துவதை அவர் கடுமையாக கண்டித்தார். சட்டமன்றங்களிலும், அரசு பணி யிலும் நாளுக்கு நாள் பார்ப்பனர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவர் சுட்டிக் காட்டியவர் Dr. நாயர். பிராமணரல்லா தாரின் பேராதரவு பெற்றே பார்ப்பனர்கள் பதவிகளை பிடிக் கின்றனர். அப்பதவிகளை அவர்கள் பெற கல்வி அறிவு பெற்றி ருப்பதால் அல்ல. 

சுய ஆட்சி என்பது வெறும் பெயரளவில் இல்லாது, மக்களிடத்தில் உண்மை அதிகாரம் இருக்க வேண்டும் என்பதே அவரின் கோட்பாடு. சாதி ஆதிக்கம் முதலில் ஒழிக்கப்பட வேண் டும் என்றார். மக்கள் அனைவரும் ஒன்றாக, 'நாம் எல்லோரும் சமம் என்று கூறிடும் கால கட்டத்திற்கு நல்ல பாதையை அமைத்து தந்தவர் Dr. நாயர். 

அத்தகைய சம நிலை உணர்வின் மூலமே உண்மையான ஜன நாயகத்திற்கும், சுய ஆட்சிக்கும் வழி பிறக்கும் என்றவர் Dr. நாயர். தென் இந்திய நல உரிமை சங்கத்திற்கு (நீதிக் கட்சி) அடிப்படை கொள்கையே சமூகம், அரசியல், பொருளா தாரம் ஆகியவற்றில் மக்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதாகும். 

ஒரு சமயம் வடக்கேயிருந்து ஒரு காங்கிரசு தலைவரை அழைத்து வந்து இங்கு நாயருக்கு எதிராகப் பேச வைத்தனர். அவர் அவருக்கே உள்ள நாராச நடையில் பேசி விட்டு போய் விட்டார். Dr. நாயர் உடல் நலம் சரி இல்லாததால் உடனே கூட்டம் நடத்தி பதில் கூறமுடியவில்லை . அநாகரீக ஏடு ஒன்று "நாயர் எங்கே?” என்று கேள்வி கேட்டது. அதே சமயம் பார்ப்பனர்கள் கோயில்களில் தேங்காய்களை சிதறடித்து ஆண்டவனிடம் என்னவோ வேண்டினராம்! 

இதைக் கண்ட Dr. நாயர் கூட்டத்தை ஏற்பாடு செய்து வடநாட்டு காங்கிரஸ் தலைவருக்கு சுடச்சுட பதில் கூறினார். வகுப்புரிமை நீதியை கண்டிப்பது, சைத்தான் பாவத்தை கண்டிப்பதற்கு ஒப்பாகும் என்று விளக்கமளித்தார். 

அவர் காங்கிரசை விட்டு வெளியேறியதற்கான காரணத் தையே பலர் புரிந்து கொள்ளவில்லை. 1916 இல் டில்லிக்கு நடந்த தேர்தலில் Dr. நாயர் தோல்வியடைந்தார். அவரை தூண்டியவர்கள், நம்பவைத்தவர்கள் இரகசியமாக திட்ட மிட்டது தெரியவந்தது. அன்று முதல் சாதி ஆதிக்கத்தை கடுமையாக கண்டித்து தீவிரமாக அரசியல் பணி புரிந்தார். என்னதான் முயன்று சனநாயகம் உண்மையாக வளரப் பாடு பட்டாலும், அது இந்த நாட்டில் சாதி ஆதிக்கத்தையே வளர்க் கும் என்று அவர் கருதியதில் என்ன தவறு. எல்லோருடைய பாதுகாப்புக்கும், நலத்திற்கும் உள்ள ஒரே வழி வகுப்புவாரி பிரதி நிதுத்தவேமே என்று அவர் கருதியதில் என்ன தப்பு. இதே உண்மையைதானே அவருக்குப் பின்னரும் நாம் கண்டு வருகி றோம். 

கல்வியறிவிலும், அரசியலிலும் பின் தங்கிய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட ஒரு அமைப்பு தேவை என அவர் கருதி நீதிக்கட்சியை (S.I.L.F.) தோற்றுவித்ததில் என்ன தவறு இருக்கிறது? 

காங்கிரசு மகாசபையும் ஹோம் ரூல் இயக்கமும் மக்கள் வகுப்பு உரிமை நீதி பெறுவதை எதிர்த்த காரணத்தால் Dr. நாயர் அந்த இரண்டும் சாதி-ஆதிக்கத்தை வளர்ப்பன என்று தோலை உரித்து அடையாளம் காட்டினார். பிற சமூகத்தினர் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் அவர்கள் பெற வேண்டிய நியாயமான பங்கை பறித்துக் கொண்டவர்கள் யார் என்பதை புள்ளி விவரங்களோடு மக்கள் முன் வைத்தார். அந்த உயரிய கருத்துக்களைச் சில ஏடுகள் அவரை கண்டித்து எழுதின. 

தென் இந்திய நல உரிமை சங்கம் (S.I.L.F.) துவக்கப் பட்டவுடன் மூன்று நாளேடுகள் துவங்கப்பட்டன. ஆங்கில நாளேட்டின் பெயர் “ஜஸ்டிஸ்”. ஜஸ்டிஸ் என்றால் ‘நீதி' என்று பொருள் . தமிழில் “ திராவிடன்' என்ற பெயரில் ஒரு நாளேடு. வெளியிட்டப்பட்டது. இங்குதான் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட வர்கள் உள்ளனர் என்பது தெளிவு. ஏன் அந்த பெயர் தேர்ந் தெடுக்க வேண்டும்? • திராவிடன்' என்பது ஒரு இனத்தின் அடிப்படையில் இடப்பட்ட பெயர்! தமிழ் நாளேட்டின் பெயர் 'தமிழன்' என்று வைத்திருந்தால் என்ன? தமிழன் என்றால் யார் தமிழன்? தமிழகத்தில் பிறந்து விட்டவன் தமிழன் ஆகிவிட முடி யுமா?போகட்டும்! யார் ஒருவன் தமிழ் பேசுகிறானோ அவனை யெல்லாம் தமிழன் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? தமிழ் மொழி தன் தாய்மொழியாக இல்லாதவர்கள் தமிழ் மொழியை பேசவில்லையா? ஒரு மொழியை அந்த மொழியை தாய்மொழி யாக கொள்ளாதவர் 

கள் அவர்கள் தமிழ் நாட்டில் வந்திருப்பதால், அவன் அந்த நாட்டில் மொழியை படித்து புழங்கினால் தானே வாழ முடியும். ஒரு மனிதன் எத்தனையோ மொழிகளை கற்கலாம். அதற்கான காரணங்களும் உண்டு. ஒருவன் தமிழ் நாட்டில் இருக்கிறான். தமிழ் பேசுகிறான் என்பதால் அவன் தமிழன் ஆகிவிடமுடியாது. ஒருவன் இங்கே பிரஞ்சு பேசுகிறான் என்பதாலேயே அவன் பிரான்சு நாட்டுகாரன் என்று கூற முடியாது. அதனால் தான் நீதிக்கட்சிக்கு ' திராவிடன்' என்று பெயர் வைத்தது. 

இது இனத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி களைப் பேசுவோர் எல்லாம் திராவிடர்களே. அந்த அடிப் படையில் - திராவிடமொழிகள் அல்லாத பிற மொழிகளை பேசு வோர் வேறு இனத்தவர்களே -- என்பதை அந்தக் காலத்தி லேயே, நீதிக்கட்சியின் தலைவர்கள் கண்டறிந்து தெளிவு கொண்டு தான் உறுதியாக முடிவு செய்தனர். 

நீதிக்கட்சியின் ஆங்கில நாளேடு 'ஜஸ்டிஸ்' அதனை துவக்குவதற்கு முன் நாட்டில் திராவிடர் அல்லாதார் ஆங்கில ஏடுகள் நடத்தி வந்தனர். அந்த ஏடுகள் நீதிக்கட்சியின் கொள்கைகளை எதிர்ப்பவர்களாக தங்களுக்கு பேரிழப்பு ஏற்படும், என்ற பீதியில் அநீதியாளர்களாக இருந்தனர். முறையாக நடு நிலை நின்று, எதையும் தாமாக எழுதக் கூடியவர்களாக இருந்திருந்தால் ‘ஜஸ்டிஸ்' நாளேடு துவங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றே கூற வேண்டும். 

காங்கிரஸ் மகாசபை உண்மையாகவே எல்லோருடைய நன்மைக்கும் பாடுபடவே துவக்கப்பட்டிருக்குமானால் ‘ஜஸ்டிஸ்' நாளேடு வெளிவருவதற்கு முன்னரே அதனை தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிடவோ, சதி 

செய்யவோ எந்த நியாயமுமில்லை. நீதிக்கட்சி தலைவர் கருணாகரமேனன் என்ற முதியவரை, ஆங்கில அறிவு பெற்ற வரை, பத்திரிகை துறையில் நல்ல அனுபவம் பெற்றவரை ஆசிரியராக நியமித்தனர். இதையறிந்த பார்ப்பனத் தலைவர்கள் சதி திட்டம் தீட்டி, அவரை எப்படி தடுப்பது என்று கண்டறிந்து செய்ய வேண்டியதை செய்து அவரை வசப்படுத்திக் கொண் டனர். 'ஜஸ்டிஸ்' நாள் ஏடு வெளி வரப்போகிறது என்றதும் நாட்டு மக்கள் குதூகலித்தனர். செல்வச்சீமான்கள் உதவி புரிய முன்வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில்தான் ஆசிரியர் பொறுப்பை ஏற்க இயலாதென திரு. கருணாகரமேனன் கூறி விட்டார். 

அதை அறிந்து நம் Dr. நாயர் தலையில் கைவைத்துக் கொண்டு கதறி அழவில்லை. கண்ணீர் சிந்தவில்லை. எப் போதுமே சிரித்த முகத்துடன் அமைதி குலையாமல், புன்னகை பூத்த முகத்துடன் கவலைபட ஒன்றுமில்லை எதிர்பார்த்ததுதான் என்று கூறி, எல்லோருக்கும் ஊக்க மளித்தார். தானே ஆசிரியர் பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு, தன் வீட்டில் இருந்துக் கொண்டு, தொலைபேசி மூலம் தலையங்கத்தை தினமும் தந்திட் டார். 

Dr. நாயர் தான் மாணவனாக இருந்த காலத்திலேயே பத்திரிகை அனுபவம் பெற்றவர். பல நாடுகள் சுற்றுப் பயணம் செய்து, ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டவர். நல்ல பேச் சாளர் எழுத்தாளர் உலகமறிந்த ஆங்கில அறிஞர் அவருடைய கடுமையான பணிகள் பல. அவற்றோடு 'ஜஸ்டிஸ்' ஏட்டின் பொறுப்பை அவரே ஏற்றது மிக மிக பொருத்தம் என்றே கூற வேண்டும். காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஆங்கில ஏடுகள், குறிப் பாக ' இந்து' ஏடு திக்கு முக்காடும் அளவிற்கு, ‘ஜஸ்டிஸ்' ஏடு ஓகோ என்று விரைவாகவும், வளமாகவும், வளர்ந்தது. Dr. நாயரின் மறைவுக்குப் பிறகு திரு. T.A.V. நாதன், Dr. A. இராம சாமி முதலியார் போன்ற ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் 'ஜஸ்டிஸ்' ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பெயரையே 'ஜஸ்டிஸ்' கட்சி – நீதிக் கட்சி என்று மக்கள் மாற்றி அழைக்கும் நிலையை உண்டாக் கினர். சுருக்கமாக கூற வேண்டுமானால் S.I.L.F. என்றுதான் கட்சியின் பெயரை அழைத்திருக்க வேண்டும். ஜஸ்டிஸ் கட்சி என்று தீர்மானம் போட்டு மாற்றப்படவில்லை. ஒரு பத்திரிகை யின் பெயரே கட்சிக்கு பெயராயிற்று. இந்தப் பெரிய சாதனை கருணாகரமேனனால் ஆக்கித் தந்திருக்க முடியுமா? – நீதிக்கட்சி யினரின் தகுதி திறமையை உணராத காங்கிரஸ் பார்ப்பனர்கள் பெற்ற பெரியதோல்வி இதுவேயாகும். தாம் தான் படித்தவர் தாம் மட்டும்தான் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள், தாம் தான் இரு பிறவி பெற்றவர்கள், தமக்கு தான் அறிவு உண்டு தம்மை தவிர மற்றவர்கள் எதை சொன்னாலும் ஏற்று கடமை யாற்ற கூடியவர்கள் தானே என்று அகம்பாவ, ஆணவ கண் ணோட்டம் கொண்டவர்கனையெல்லாம். நாள்தோறும், பின்னி யெடுத்து, தோலை உரித்து, நிர்வாணமாக்கியவர் Dr. நாயர். 

இந்தியாவில் முதன் முதல் கேலிச்சித்திரங்களுடன் (Cartoon)  வெளிவந்த ஏடு ' 'ஜஸ்டிஸ்'' உலகத்திலேயே ஆண்டு தோறும் தலையங்கங்களின் தொகுப்புகளை நூலாக வெளி யிட்டதும் ‘ஜஸ்டிஸ்' ஏடுதான். இருந்து என்ன? அந்த நீதிக் கட்சியின் ஸ்தாபகர்கள் எல்லாம் சாகாவரம் பெற்றவர்களா? அவர்கள் எல்லாம் ஒருவர்பின் ஒருவராக மறைந்து விட்டனர். 

நம் Dr. நாயர். நீதிக்கட்சி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பே 1919 இல் இறந்து விட்டார். நீதிக்கட்சி பதவிக்கு வந்த ஐந்தாவது ஆண்டே 1925 இல் தியாகராயர் மறைந்து விட்டார். அவர்களுக்குப் பிறகு 'ஜஸ்டிஸ்' ஏடு வளம் குன்றி சில ஆண்டுகளே நடத்த முடிந்தது ஆட்சி போனதும் வார ஏடாகி, வளங்குன்றி வாழ்விழந்து மறைந்து போய் விட்டது. இன்று இயக்கம் வளர்ந்திருக்கிறது. 

ஆங்கில நாளேடு? அல்லது ஏதாவது ஒரு வெளீயிடு என்று உண்டா? இல்லை. 

'ஜஸ்டிஸ்' மறைவிற்கு பிறகு Dr. A. கிருஷ்ணசாமி, Dr. A. இராமசாமி முதலியாரின் மகன் ‘லிபரேட்டர்' என்ற தலைப்பில் ஆங்கில நாளேட்டை துவக்கினார். அப்போது இயக்கத்தின் நிலையே வேறு. நீதிக்கட்சி ஆட்சியைவிட்டு பல ஆண்டுகளாகி விட்டன. அந்த நேரத்தில் பலர் பல இடங்களுக்கு சென்று விட்டனர். சொந்த இலாபம் தேடும் கூட்டம் எதிரிகளுக்கு பாதை பூஜை செய்யும் மார்க்கத்தை கையாண்டனர். 'லிபரேட் டர்' மறைந்தது. 'ஜஸ்டிஸ்' ‘லிபரேட்டர்' நாளேடுகளோடு கதை முடிந்துவிட்டது. அன்று இருந்த நீதிக்கட்சித் தலைவர்கள் பொருள் வசதி பெற்றவர்கள்! இன்றும் நிறைய பேர் இருந்தும் எவருக்கும் எண்ணம் இல்லை. ஏற்படவில்லை. சாதாரண வார ஏடுகள் கூட ஆங்கிலத்தில் ஏன், உண்மையை கூற வேண்டு மானால் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் வார ஏடுகள்கூட இன்று இல்லை. இயக்கம் மட்டும் வளர்ந்திருக்கிறது? 

Dr. நாயர் சென்னை வேப்பேரியில் 'லேடி நப்பியா வில்லா' என்ற வீட்டில் வாழ்ந்து வந்தார். மழை பெய்தால் அவர் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கிவிடும். Dr. நாயர் அதை பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. தன் குறையை அவர் முக்கியமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை . அவர் கவிதைகள் எழுதும் ஆற்றல் மிக்கவர் என்பதால் பல கவிதைகளைப் படைத்தார். உண்மை யான செய்திகளை கேலியாக எழுதும் ஆற்றல் மிக்க எழுத்தாளர் நம் Dr. நாயர். 

ஓய்வு காலத்தில் நீலகிரியில் உள்ள தேவ சோலையில் தங்கி, தேவை சோலை ஞானியின் சிந்தனைகள் " என்ற தலைப் பில் அரசியல் கருத்துக்களை வெளிட்டார். கட்டுரையின் போக்கும், நடையும் அதை எழுதுபவர் யார் என்று காட்டி விட்டது. 

அயர்லாந்து நாட்டுக்கென தனியாக பாராளுமன்றம் இருந்தது. 1800ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அந்த பாராளு மன்றத்தை ஒற்றுமை” சட்டத்தின் மூலம் பறித்துக் கொண்டது. அதனால் அந்த அயர்லாந்து மக்கள் ‘ஹோம்ரூல்' என்ற பெயரில் கிளர்ச்சி செய்ய தொடங்கினர். இந்தகிளர்ச்சி அய்ரிஷ் மக்கள் தனி நாடு, சுதந்திர நாடு என்ற கோரிக்கையை அடிப்படை யாகக் கொண்டு எழவில்லை. இந்த உண்மையை அறியாத இந்திய மக்களிடையே திருமதி அன்னி பெசண்ட் அம்மையார் “ஹோம் ரூல்” இயக்கத்தை இங்கு துவக்கினார்கள். இந்தியா வின் நிலைவேறு. இந்தி யாவில் இதற்குமுன் ஒரு பாராளு மன்றம் இருந்தது இல்லை. அயர்லாந்து கோரிக்கை வேறு. இந்தியாவின் கோரிக்கை வேறு. இந்தியா பாராளுமன்றம் வேண்டவில்லை. காங்கிரஸ் பூர்ண சுயராச்சியம் கேட்டது. வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றது. வெள்ளையர் மீது திராவகம் வீசப்பட்டது. தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டது. தபால் ஆபீசுகள் கொளுத்தப்பட்ன இவை யெல்லாம். அகிம்சாமூர்த்திகளின் வன்முறையற்ற / காந்தி வழியில் நடந்த அறப்போர்கள் என கூறப்பட்டன.  

அதுமட்டுமல்ல, இந்தியாவின் பூர்வீகம் என்ன? எப்போதா வது முழுச்சுதந்திரம் பெற்று இந்தியா இருந்ததாக கூறமுடியுமா? தங்களை தாங்களே ஆண்டு கொண்டதாக நமக்கு வரலாறு இல்லை. நம்மை நாமே ஆண்டு கொள்ள நமக்கு அனுபவம் தேவை. அதற்கான பயிற்சியும் நாம் பெற்றாக வேண்டும். 

'ஹோம்ரூல்' நமக்கு வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியும், அனுபவமும் கொண்டவர்கள் நம்மிடையே இருக்க வேண்டும். நாம் ஒரே இனமாக இல்லை. நம்மிடையே ஒற்றுமை இல்லை. நம்மிடையே ஏராளமான மாற்றங்கள், முரண்பாடுகள் உள்ளன. நாம் 'ஹோம்ரூல்'கேட்பதே சரியுமல்ல, முறையுமல்ல. நியாயமுமல்ல, அயர்லாந்தில் வாழும் மக்கள் கத்தோலிக்க வகுப்பினர். அவர்கள் பிராடஸ்டண்ட் வகுப்பினர் மீது ஆதிக்கம் செலுத்த பிரிட்டிஷ் அரசு இணங்காது. அயர்லாந்தில் கிளர்ச்சி நடக்கலாம். ஆனால் ‘ஹோம் ரூல்' அவர்களுக்கே கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையில் இந்தியர்கள் 'ஹோம்ரூல்' கேட்பது சுவறில்லாமல் சித்திரம் எழுதும் கதைதான். 

- "ஹோம்ரூல்” கல்வித்துறையில் முன்னேறிய நாட்டில் ஓட்டு உரிமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ள கூடிய மக்கள் சமூகத்தில்- அமூல் செய்யதுக் கொள்ள முடியும். இந்திய மக்களின் நிலை என்ன? நம் நாட்டில் பெருவாரியான மக்கள் நிலை என்ன? சிறுபான்மையாக உள்ள மக்கள், அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் கல்வி அறிவு பெற்றி ருப்பதால், ஆட்சிப் பொறுப்பு அந்த குறிப்பிட்ட சிறு சமூகத் திடமே ஒப்படைக்கப்படுமேயானால் எப்படி மக்களாட்சி என்று அதனை ஏற்றுக்கொள்ள முடியும்? அறியாமை நிறைந்த நாட்டுக்கு 'ஹோம் ரூல்” பயன் தரவே தராது. எனவே பூர்ண சுதந்திரம்-ஹோம் ரூல் எதுவும் அடையகூடிய நிலையில் மக்கள் இல்லை. மக்கள் ஆட்சி நடத்திட தேவையான பயிற்சியை மக்களுக்கு படிப்படியாக அளித்து எல்லா மக்களும் முழு பயிற்சி பெற்ற பிறகே, சுய ஆட்சியோ! 'ஹோம்ரூல்' பாராளுமன்ற சனநாயக அமைப்போ பெறுவதுதான் இத்திய மக்கள் பெற்றிட நினைப்பது பயன் உள்ளதாக இருக்கும். 

இப்படிப்பட்ட உயர்ந்த, சிறந்த அரசியல் கருத்துக்களை தெளிவாக எடுத்துக் கூறியவர் நம் நீதிக் கட்சித் தலைவர் Dr. நாயர் அவர்கள் தான்! 

அவர் மேடைகளில் நீண்ட நோம் தெளிவாகப்பேசி, அன்னிபெசண்ட் ஹோம்ரூல்' கிளர்ச்சியையும், காந்தி யாரின் ‘பூர்ணசுயராஜ்ய' கிளர்ச்சியையும் கண்டித்துப் பேசி னார். 100க்கு 3பேராக உள்ள ஒரு சமூகத்தின் வளர்ச்சியை 100க்கு 97 பேராக உள்ள மக்கள் பெற்றிடவில்லை என்பதை Dr. நாயரின் பேச்சுக்கள் தெளிவுபடுத்தின. அவருடைய  அறிவாற்றலை மறுத்துப் பேசக் கூடிய ஆற்றல் தேசிய வாதிகள் எவருக்கும் அந்த காலத்தில் இருக்கவில்லை. 

- ஆங்கிலயர் மீது தரக்குறைவான, தவறான, தகாத பழிகளை தான் படிக்காத மக்களிடையே பரப்பினர். உடனே நாடு விடுதலை பெற்றாக வேண்டும் என்று கோரினர். 

மக்களாட்சிக்கு மக்களை பக்குவப்படுத்த அவர்கள் முனையவில்லை. 100க்கு 3 பேராக உள்ளவர்கள் தான் மக்களா என்று கேட்டவர் Dr. நாயர். இந்திய சீர்திருத்த சட்டங்களை காங்கிரஸ் உறுதியாக திடமாக எதிர்த்து வந்தது. 1909 ஆம் ஆண்டிலும் 1919 ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முன்வரவில்லை. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தங்களை தாங்களே ஆண்டுக் கொள்ள இயலும் என்பதை உலகறிய செய்திருக்கலாம். இரட்டை (Dyarchy) ஆட்சியின் மூலம் அதை உறுதிப்படுத்தியிருக்க முடி யும். ஆனால் தேசியவாதிகள் அதை செய்திட தயக்கம் காட்டி னர். நீதிக்கட்சியினர் அப்படியல்ல, படிப்படியாக இந்தியர் களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, திறம்பட ஆண்டு, புகழ்பெற்றன. 

வெள்ளையன் என்றும் இந்தியனை அடிமையாக வைத்திருக்க நினைக்கவே இல்லை. வெள்ளையர் ஆட்சி பற்றி திருமதி பெசண்ட் அம்மையாருக்கே அது தெரியும். ஒரு கூட்டத்தில் பேசும்போது இத்தியா ஒரு தேசமல்ல, இந்தியா வில் பல தேசிய இனங்கள் உள்ளன. ஒவ்வொரு இனமும் ஒரு நாட்டை பெற்றிருப்பது முறையாகும். இந்து தேசம் என்றால் முஸ்லீம் தேசம் வேண்டும். பூகோள கட்டுப்பாட்டு விதி அது என்று 1905ஆம் ஆண்டே பெசண்ட் அம்மையார் கூறினார்கள். -1911ஆம் ஆண்டு நிகழ்த்திய பேச்சில் ஆங்கிலேயர் ஆட்சி நேர்மை மிக்கதாகும். இந்திய குடிமகன் முதலில் எழவும், நடக்க வும் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகுதான் ஆட்சி செலுத்தவும் அதிகாரத்தை செலுத்தவும் முடியும்” இது அன்னி பெசண்ட் அம்மையார் உள்ளத் தூய்மையோடு பேசிய பேச்சா கும். 

1911 ஆம் ஆண்டி அந்த அம்மையார், பேசிய பேச்சை மக்களுக்கு நினைவு படுத்தியவர் நம் Dr. நாயர். 

அரசியலில் சீர்திருத்தமோ மாற்றமோ கோருவதினால், ஏற்படக் கூடிய மாற்றத்தை திறமையுடன் நிர்வாகிக்கக்கூடிய தகுதிவேண்டும். நிர்வாகத்திறமையை விலை கொடுத்து வாங்க முடியாது. பயின்று அனுபவத்தின் மூலமே பெற்றிட முடியும். அதைப்பற்றிய நிலையை படிப்படியாகத்தான் அடைய முடியும். அவசரப்பட்டு இந்திய அரசியலில் சீர்திருத் தங்கள் செய்திடக் கூடாது. மக்களின் உண்மையான குறைபாடுகளை கண்டறிந்து அந்த குறைகளை போக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஸ்விட்சர்லாந்து நாட்டை ஆராய்ந்தால் உண்மைகள் புலனாகும். சீர்திருத் தங்கள் பேச்சோடு முடிவு பெறுவதல்ல. சீர்திருத்தங்கள் உடன் அமுல்படுத்த போதிய ஆட்களும், அதற்கு தேவையான பக்குவமும் பெற்றவர்கள் நிறைய ஆயத்த மாக இருக்க வேண்டும். தீவிரவாதம் வெற்றி பெறவேண்டு மானால் அதற்கு போதிய ஆட்கள் மக்களிடையே இருக்க வேண்டும் மிதவாதத்திற்கே மக்களை ஆயத்தமாக்க முடியாத நாட்டில் தீவிர சீர்திருத்தங்களைப் பற்றி பேசுவதில் பயன் இல்லை. 

வெள்ளையர் ஆட்சியில் மட்டுமே சுதந்திரம் பெருமளவு இருக்கிறது. செர்மனி. பிரான்சு, இதாலி நாடுகளின் நிலைமை களை கருத்தில் கொண்டு நினைத்துப்பாருங்கள் . இங்கிலாந்து நாட்டில் மட்டுமே இரத்தம் சிந்தாமல், அமைதியான முறையில் அதிகாரம் எல்லோருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரம் இங்கு ஒரு வகுப்பாரிடம் மட்டுமே ஒப்படைக்கப்படு மானால், அது மற்றவர்களை ஒடுக்கி அராஜகம் மேலோங்கவே செய்யும். அதிகாரங்களை பங்கிட்டு கொள்வது எளிதான காரியமல்ல. அதிலும் முக்கிய அதிகாரங்களை வழங்குவதற்கு எளிதில் யாரும் முடிவு கட்ட மாட்டார்கள். மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதோ, மாநில அரசு கீழ் மட்டத்தில் உள்ள மாவட்டங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதோ சிக்கலான பிரச்சினைகளை உருவாக்காது; நிகழாது. அதனால் எந்த அதிகாரமானாலும், அதை ஏற்று நடத்தக்கூடிய தகுதி மிக்கவர்கள் இருப்பதைக் கொண்டே செய்திட இயலும். சாதாரண உள்ளாட்சி மன்றங்களுக்குகூட வரிவிதிப்பு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், வருமானத் திற்கு ஏற்றபடியே நல்ல காரியங்கள் மக்களுக்கு செய்திட முடியும் , அமெரிக்க நாட்டில் மத்திய மாநில அரசுகள் 49 இருக் கின்றன. செர்மனியில் 30, கனடாவில் 9 ஆஸ்டிரேலியாவில் 7. தென் ஆப்ரிகாவில் 5.  

அப்போது இந்தியாவில் உள்ள நிலை என்ன? ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் உள்ளன. ஏற்கனவே உள்ள சட்ட மன்ற, உள்ளாட்சித் துறைகளை வளர்த்து மேலும் பலருக்கு நிர்வாகத் திறமை பெற்றிட முதலில் வழிகாண வேண்டும். அது தான் எல்லா வகுப்பினருக்கும் வாய்ப்பு தரக்கூடும். அப்போது தான் மக்கள் எல்லோரும், எந்த வகுப்பை சேர்ந்தவராயினும் அரசு ஆட்சியில் பக்குவம் பெற துணைபுரியும். ஏதோ ஒரு சிலர் - அதுவும் ஒரே வகுப்பை சார்ந்தவர் இருக்கிறார்கள் என்று உடனே சுய ஆட்சி வேண்டும் என்பது தோல்விகளுக்கும், தொல்லைகளுக்கும் மட்டுமே வழிகோலும். 

இந்திய அரசியல் சீர்திருத்தம் பற்றி Dr. நாயர் வெளிப் படுத்திய கருத்துக்கள் ஏராளம். அவைகளை எல்லாம் தொகுத்து வெளியிடுவதென்பது தேவையான - பயன் தரக் கூடிய - நல்ல காரியம் ஆகும். அதுவும் இன்றைய அரசியலுக்கு அப்பாற் பட்டு, பொது அமைப்புகள் நிதிவசதி பெற்று செய்திட்டால், Dr. நாயரின் கருத்துக்கள் என்றும், எங்கும் எல்லோருக்கும் பயன் படக்கூடிய இலக்கியமாகும். இலக்கிய சிறப்பு பெற்றவர் நம் Dr. நாயர். அப்படிப்பட்ட சிறப்புகள் ஆற்றல்கள் மிக்க நாயர் தோற்றுவித்த நீதிக்கட்சி இன்று இந்திய அரசியல் களத்தி லிருந்தே மறைந்துவிட்டது. ஆனால் Dr. நாயர் இந்திய அரசியல் வயலில் விதைத்த விதைகள், என்றும் வளர்ந்துக்கொண்டே இருக்கும். நீதிக்கட்சியின் கொள்கை, அது மேற்கொண்ட இலட்சியங்களுக்கு அழிவென்பதே கிடையாது, 

அவர் புதியதோர் உலகை படைக்கப் பிறந்தவர். 1916 இல் நீதிக்கட்சியை படைத்தார். 1920இல் அந்த கட்சி பதவி ஏற்றது. ஆனால் அவர் 1919 இல் மறைந்தார். நீதிக் கட்சியை அன்றும் பலர் பழித்தனர் - இன்றும் பழிக்கின்றனர் அவர் இறந்தபோது சேலத்தில் இரங்கல் கூட்டத்தில் ராஜாஜி பேசினார். 

“பிராமணரல்லாதர் இயக்க நோக்கங்கள் பலவற்றில் எனக்கு அனுதாபம் உண்டு'' என்று ராஜாஜி பேசினார். அதுவும் 1919 இல் நம் Dr. நாயர் மறைந்த பிறகு. 'சமூக அமைப்பில் பல அநீதிகள் இருந்தன. அவைகளை ஒழிக்க அரசியல் தலைவர்கள் முயலவில்லை குறைபட்டோரை அலட்சியம் செய்தனர், அரசி யல் பலமின்றி சமூக குறைகளை ஒழிக்கமுடியாது எனக் கண்ட Dr. T, M. நாயர் பிராமணரல்லாத இயக்கத்தைதோற்றுவித்தார். ஆகவே, இயக்கத்தினால், அனேக நன்மைகள் உண்டாகி இருப் பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இவ்வியக்கத்தினால் முன் னைய விஷயங்களை ஆராய்ந்து பார்க்காதவர்கள், இப்போது பார்க்கிறார்கள், முன் விளங்காமல் இருந்த விஷயங்கள் இப் போது தெளிவாக விளங்குகின்றன. எவரையும் வெறுக்குமாறு இந்த இயக்கம் கூறவில்லை.'' 

ராஜாஜி தந்தநற்சான்று இது. அதுவும் 1919ஆம் ஆண்டி லேயே. இன்று நீதிக்கட்சியின் வாரிசுகளாக எத்தனையோ கட்சிகள் உள்ளன. அரசியல் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றினுடே நாயர் தெரிகிறார். வாழ்க Dr, T.M. நாயர். 

நீதிக்கட்சி காலத்திலிருந்தே திராவிட இயக்கத்திற்கு அறிமுகமான, புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. A. S. வேணு. 

அறிஞர் அண்ணா அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியவர். தமிழிலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டு பல நல்ல படைப்புகளை இயக்கத்திற்கு அளித்தவர்.  

- Dr. நாவலர் 

திராவிட இயக்கத்தின் தலை சிறந்த ஆங்கில, தமிழ் இருமொழி புலமை பெற்ற எழுத்தாளர்களில் அருமை நண்பர் A.S. வேணு அவர்கள் ஒரு முன்னணி எழுத்தாளர் ஆவார். 

பலவெளிநாட்டு அறிஞர்கள் நீதிகட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் பற்றி டாக்டர் பட்டப் படிப்புக்கான ஆய்வுகளுக்கு அறிஞர் திரு. A.S. வேணு அவர்கள் ஏற்கனவே எழுதிய நூல்கள் - அதில் காணப்படும் குறிப்புகள் ஆகியவற்றை மேற் கோள்களாக பயன்படுத்துகின்றனர். அவருடைய சிறப்புக் கும் ஆற்றலுக்கும் இதுவே நல்ல சான்றாகும். 

- கி. வீரமணி 

தி. க. தலைவர். தந்தை பெரியார் அவர்களிடமும் பேரறிஞர் அண்ணா அவர்களிடமும் A.S. வேணு கொண்ட பற்றும் மதிப்பும் நிலையானது. 

அவரது பேச்சும், எழுத்தும் அந்த கொள்கைகளை பரப்புவ தாகவே அமைந்தவை. 

மாணவப் பருவம் முதலாகவே நீதிக்கட்சி குறிக்கோளில் பற்றுக்கொண்டு - திராவிட இயக்கத்தில் தன்னை முழு அளவில் ஒப்படைத்துக்கொண்டவர். 

- பேராசிரியர் அன்பழகன் 

ஜஸ்டிஸ் கட்சி பவளவிழா வெளியீடுகள் - 











A.S. வேணு எழுதிய நூல்கள் - 

1. இலெனினும் அண்ணாவும் : 15.00

 2. மணிவிழாக் கண்ட திராவிடர் இயக்கம் : 5.00

 3. டாக்டர். C. நடேசனார் : 5.00

 4. டாக்டர். T.M. நாயர்: 5.00

 5. சர். P. தியாகராயர் : 5.00

 6. சர். P.T, இராசன் : 5.00

 7. சிந்தனைச் சிற்பி M. சிங்காரவேலர் : 5.00 

8. அஞ்சாநெஞ்சன் அழகிரி -: 5.00 

9. டாக்டர். P. வரதராஜுலு நாயுடு : 5.00


 வியாபாரிகளுக்கு கழிவு 25% விவரங்களுக்கு :  

ஜஸ்டிஸ் பப்ளிகேஷன்ஸ் 'ஜஸ்டிஸ் இல்லம்” 2, நாகல் மேடு, வேகவதி நிதி சாலை, (பச்சையப்பன் பெண்கள் கல்லூரி அருகில்) சின்ன காஞ்சிபுரம் -3